Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 1

உன் ரகசிய ரசிகை நான் 1

by Layas Tamil Novel
1.1K views

EPISODE 1

சிட்டியிலேயே மிக பிரம்மாண்டமான திருமண மண்டபம். நாட்டின் முக்கிய புள்ளிகள் அநேகம் பேர் வந்திருந்தனர். மிக பெரிய ராஜ வம்சத்தைச் சேர்ந்த திரு. வெங்கடேசன், திருமதி. விசாலாட்சி அவர்களின் மூத்த வாரிசான ஆதிக்குத் திருமணம்.

என்ன ஃபிரெண்ட்ஸ், பார்க்குறீங்க? இவர் தான் நம்ம ஹீரோ ஆதி. இவருக்கும் பிரபல தொழிலதிபரின் ஒரே வாரிசான சங்கவிக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இன்னும் சிறிது நேரத்தில் நடைபெற உள்ளது.

நம்ம ஹீரோ ஆதிக்கு பத்து வருடங்களுக்கு முன் காலேஜ் படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு விபத்து நடந்தது. அப்போது அவருக்கு ரத்தம் அதிகம் போனதால், வேறு ஒருவரின் ரத்தம் அவருக்கு ஏற்றப்பட்டது. அந்த ரத்தம் அவருக்கு சேராததனாலோ என்னவோ, அவரின் உடல் முழுக்க சிறு சிறு சிவப்பு கொப்புளங்கள் போல சில வருடங்களுக்கு முன் அந்த ஆபரேஷனால் ஏற்பட்டன.

அதை சரி செய்ய நிறைய மருந்துகளும், சிகிச்சைகளும் எடுத்துக்கொண்டாலும், சரி ஆவது போல வந்தாலும் திரும்பவும் அவரின் உடல் முழுவதும் சிவப்பு கொப்புளங்கள் வர ஆரம்பித்துவிடும்.

அந்த சமயங்களில் ஆதி வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் அவரை கேலியும் கிண்டலும் செய்பவர்கள் தான் அதிகம். இதைக் கூட அவர் பொறுத்துக்கொண்டார்.

ஆனால், எங்கே அவரின் நோய் தங்களையும் தொற்றி விடுமோ என்று எண்ணி அவரிடம் அருகில் வரக்கூட தயங்கி, அவரை ஒதுக்கியே வைத்திருந்தனர்.

அன்றிலிருந்து தன்னை வெளி உலகத்திற்கு அதிகம் காட்டிக் கொள்வதில்லை. தன் அலுவலகத்தில் உள்ள பதினைந்தாவது மேல் தளத்தில் இருந்துகொண்டே தனது அலுவலக வேலைகளை தனது தம்பி கதிர் மூலம் அனைத்தையும் செய்து முடித்துவிடுவார்.

தனது அலுவலகத்திலும் தங்களுக்கு சொந்தமான மற்ற அலுவலக வேலைகளையும் சிசிடிவி மூலம் கண்காணித்துக்கொண்டும், மீட்டிங் என்று வரும்போது வீடியோ கால் மூலம் சிறப்பாக அலுவலகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.

தன் நோயின் நிலை குணமாக மேலை நாட்டில் இதற்கான மருந்து இருப்பதாகவும், அங்கு ஆதி சிகிச்சை எடுப்பதற்கும் எல்லா ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.

ஆனால், ஆதி தன்னை ஒதுக்கியவர்கள் முன், தான் இருக்கும் இந்த நிலையிலேயே தன்னை விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒருவளைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற பிடிவாதத்தோடு இருந்தான். அதன் பிறகே தனக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதாக கூறி, அவன் பெற்றோர் எவ்வளவு எடுத்து சொல்லியும் மறுத்துவிட்டான்.

அவன் இவ்வளவு நாள் பொறுத்து இருந்ததற்கு பலனாகத்தான் சங்கவியை திருமணம் செய்ய போகிறான். அவனுடைய அலுவலகத்தில் தொழில் பற்றி தெரிந்துகொள்ள தன் ஒரே வாரிசான சங்கவியை, ஆதியின் கம்பெனியில் சேர்த்திருந்தனர் சங்கவியின் பெற்றோர்.

முதலில் சங்கவியும் ஆதியைப் பார்த்து அருவருப்படைந்தால்தான். ஆனால் பின்னாலில் அவன் அலுவலகத்தில் தான் அவளுடைய வேலை என்று முடிவாக வேறு வழியில்லாமல் அவனுடன் பேசி பழக வேண்டி இருந்தது.

சிறிது நாளில் இருவரும் நண்பர்கள் என்ற முறையில் பழக ஆரம்பிக்க, சிறிது நாளில் சங்கவியை ஆதிக்குப் பிடித்துப்போக, தன் காதலை சொல்லாமலேயே அவளுடன் பழகி வந்தான்.

சங்கவியும் மற்றவர்களைப் போல் அல்லாமல் அவனிடம் நன்றாகப் பழகவே, அவளும் தன்னை விரும்புவதால்தான் தன்னுடன் நன்கு பழகுகிறாள் என்று எண்ணிவிட்டான். ஆதி தன்னை விரும்புவது சங்கவிக்கும் தெரியும். ஆனால் அவளோ தன் வேலை முடியும் வரை எதையும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டுப் போய்விடலாம் என்று அவனுக்குத் தகுந்தாற்போல் அவளும் நடந்துகொண்டாள்.

ஆதியின் அப்பாவும், சங்கவியின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், ஆதியின் அப்பா இவனிடம் சங்கவியை திருமணம் செய்ய சம்மதமா என்று கேட்க, ஆதிக்கும் மிகுந்த சந்தோசத்தில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டான்.

இதை அவன் பெற்றோரும் எதிர்பார்க்கவில்லை. ஆதலால், ஆதியின் மனம் மாறுவதற்குள் திருமணத்தை முடித்து வைக்க வேண்டும் என்று திருமண ஏற்பாட்டை சீக்கிரமாக நடத்திக்கொண்டிருந்தனர்.

சங்கவி வீட்டில் அவள் அப்பாவின் பேச்சுக்கு எதிர் பேச்சு கிடையாது. ஆகையால் அவள் இந்தத் திருமணத்தை வேண்டாம் என்று சொல்லியும், அவளை மிரட்டி இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தார்.

வேறு வழி இல்லாமல் இந்தத் திருமணத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தாள் சங்கவி. எப்படியாவது இந்தத் திருமணத்தை நிறுத்த வேண்டும் அல்லது ஆதியின் தம்பி கதிரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாள்.

ஆமாம் ஃபிரெண்ட்ஸ், சங்கவி ஆதியின் கம்பெனியில் ட்ரைனியாக வேலை செய்ய சம்மதித்ததே கதிர்-க்காகத்தான். ஆனால் அவனுக்கு சங்கவியைக் கண்டால் சுத்தமாகவே ஆகாது.

அவளின் திமிர் பேச்சும், மற்றவரை நடத்தும் விதமும், தேவை என்று வந்துவிட்டால் தன்னை சுற்றி இருப்பவர்களை தனக்கு ஏற்றவாறு ஆட்டிப்படைப்பவள். இவள் தன் அண்ணன் ஆதியை திருமணம் செய்ய போகிறாள் என்று கேள்விப்பட்டதும், இந்தத் திருமணத்தை நிறுத்த கதிர் முயற்சிக்க, அப்போதுதான் தன் அண்ணன் இந்தத் திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறான், அதுவும் சங்கவியை விரும்புகிறான் என்று தெரிந்ததும் அமைதியாகிவிட்டான். இத்தனை நாள் திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன் இப்போது திருமணம் செய்ய சம்மதம் சொல்லிவிட்டான், அதுவும் சங்கவியை திருமணம் செய்கிறேன் என்று தெரிந்தும் தன் அண்ணா மீது கொண்ட பாசத்தால் அமைதியாகிவிட்டான் கதிர்.

மணமகன் அறையில் ஆதி தன் திருமணத்திற்கு ஆர்வமாகத் தயாராகிக்கொண்டிருந்தான். அவனை கிண்டல் செய்து கொண்டு, அவனின் மிக நெருங்கிய நண்பன் விக்கி ஆதியை தயார் செய்துகொண்டிருக்க, அப்போது அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்க, யார் என்று நினைத்தவன், உள்ளே வாங்க என்று கதவைப் பார்க்க, கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவரைப் பார்த்து ஆதியின் முகம் பிரகாசமாக மலர்ந்தது.

உள்ளே சிரித்த முகத்தோடு, பன்னீர் ரோஜா நிறத்தில் சிவப்பு நிற பட்டுச் சேலை, அதற்கு ஏற்றார் போல் பச்சை நிற ப்ளவுசில், ஒரு மெல்லிய சிறிய செயின் மட்டும் அணிந்து, அழகாக தலை பின்னலிட்டு, அதில் ஒற்றை ரோஜா ஒன்றை வைத்து, அழகுப் பதுமையாய் உள்ளே தன் குடும்பத்துடன் வந்தாள், நம் கதையின் நாயகி துர்கா. அவள்தான் நம் ஹீரோவின் காலேஜ் தோழியும், அவரது ஆபிஸில் பர்சனல் அசிஸ்டன்ட்டுமான நம்முடைய நாயகி துர்கா. 🌷

“ஹே துர்கா, உள்ளே வா….” என்று எழுந்து சென்று அவளின் கை பிடித்து அழைத்து வந்தவன், அவளுடன் வந்த அவளுடைய அம்மா, அப்பாவையும், அவள் தங்கை கீர்த்தியையும் உள்ளே அழைத்து அமர செய்தான்.

ஆதி உள்ளே அழைத்து வந்து அவர்களை அருகில் இருந்த சோபாவில் அமரவைத்தான். என்னதான் அவன் மிகவும் எளிமையாகவும், நெருக்கமாகவும் அவர்களுடன் பழகினாலும், அவன் தங்களிடம் இவ்வளவு அன்புள்ளமாக இருப்பது அவர்களுக்கு சிறிது சங்கோஜமாகத்தான் இருந்தது. தயக்கத்தினுடைய அங்கு அமர்ந்திருந்தனர்.

ஆதியிடம் வந்த துர்கா, “என்ன ஆதி, ரெடி ஆயாச்சா? உன்னுடைய நீண்ட நாள் ஆசை, அதுவும் நீ நினைச்ச பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கப் போற, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றாள் துர்கா.

அவள் கூறியதைக் கேட்டுச் சிரித்த ஆதி, “ஆமாம்” என்பது போல சிரித்துக்கொண்டே தலையை ஆட்டியவன், “ஏய் துர்கா, எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் பண்றியா?” என்றான். “என்ன? என்னடா இப்படிக் கேட்கிற? என்னன்னு சொல்லு. நீ எதுவும் கேட்டு நான் இதுவரைக்கும் செய்யாம இருந்திருக்கேனா என்ன? வேணும்னு சொல்லு நான் செய்கிறேன், இப்பவே” என்றாள் துர்கா.

“அது.. அது வந்து…. நான் ஒரு கிப்ட் தரேன். அதைக் கொண்டு போய் நீ நான் கொடுத்ததாகச் சொல்லி சங்கவிகிட்ட கொடுத்துட்டு வர்றியா?” என்றான். “என்ன ஆதி, கல்யாணத்துக்கு முன்னயே என்னைத் தூது அனுப்புறியா?” என்று அவனை கிண்டல் செய்தவள், “சரி கொடு, நான் கொண்டுபோய்க் கொடுத்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு, அவளுடைய அம்மா, அப்பா, தங்கை மூவரையும் பார்த்து, “அப்பா நீங்க வெளியே இருங்க, நான் கொண்டுபோய்க் கொடுத்துட்டு வந்து உங்களை அங்க வந்து பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு, ஆதியிடம் கிபிட்டை வாங்கிக்கொண்டு சந்தோசமாக சங்கவி அறைக்குச் சென்றாள்.

சங்கவி அறைக்கு வந்த துர்கா, ஒரு வித தயக்கத்தோடு அவள் அறையின் கதவை தட்டினாள். அறைக்கதவை தட்டி சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்து கதவைத் திறந்து, “யார்?” என்பது போல் அவளைப் பார்க்க, “சங்கவி மேடம் பார்க்கணும்” என்றாள் துர்கா.

அவள் கையில் ஒரு கிப்ட் உடன் நின்றிருப்பதைப் பார்த்து, அந்தப் பெண் திரும்பி சங்கவியைப் பார்த்து, “உன்னைப் பார்க்க ஒரு பெண் வந்திருக்கிறாள்” என்று கூற, “யார்?” என்று எட்டிப் பார்த்த சங்கவி, அங்கே துர்கா கையில் ஒரு கிப்ட் உடன் நின்று இருப்பதைப் பார்த்ததும், “இவளா…..” என்று இளக்காரமாக கூறியவள், “வரச் சொல்லு” என்றாள்.

உள்ளே வந்த துர்கா, “ஹலோ மேடம், ஆதி சார் இந்த கிப்ட் உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாரு” என்று கூறி, ஆதி கொடுத்த கிப்ட்டை சங்கவி முன் நீட்டினாள்.

அதை ஒரு அலட்சியப் பார்வை பார்த்துவிட்டு, அவளிடம் இருந்து வாங்கி பக்கத்திலிருந்த ஒரு டேபிள் மீது வீசினால். இதைப் பார்த்த துர்காவுக்கு ஏதோ போல ஆகிவிட்டது. “ஆதிக்கு எவ்வளவு ஆசையாக இந்தக் கிப்ட் சங்கவிகிட்ட கொடுக்கச் சொன்னார். ஆனா, இந்தப் பொண்ணு என்னடான்னா அவன் கொடுக்கிறதை கொஞ்சம் கூட மதிக்காம இப்படி குப்பையைப் போல தூக்கிப் போடுறாளே” என்று மனதிற்குள் கஷ்டப்பட்டாள் துர்கா.

துர்காவிடம் இருந்து கிப்ட்டை வாங்கி வைத்துவிட்டுத் திரும்பிய சங்கவி, “நீ இன்னும் போகலையா இங்க இருந்து? அதான் அவன் கொடுக்கச் சொன்னதைக் கொடுத்துட்டு இல்ல, வந்த வேலை முடிஞ்சிடுச்சா? முதல்ல இங்கிருந்து கிளம்பு. உன்னைப் பார்த்தாலே எனக்குக் கடுப்பாக வருது” என்றாள் சங்கவி.

“சாரி மேடம், நீங்க எதுவும் சொல்வீங்களோ அப்படிங்கறதுக்காகத்தான் நின்னுட்டு இருந்தேன். ஆதி சார் கிட்ட நான் போய் ஏதாவது சொல்லனுமா?” என்று கேட்க, “அவன் கிட்ட போயி நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். நான் அவனிடம் எங்கே, எப்போ, எதைச் சொல்லவேண்டுமோ, அதை சொல்லிக்கிறேன். நீ வந்த வேலை முடிஞ்சதா, கிளம்பு” என்றாள் சங்கவி எரிச்சலோடு.

துர்கா எதுவும் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியே வந்தவள், மனதிற்குள் ஏதோ நெருடலாகத் தோன்ற, “ஆதி எப்படி லவ் பண்ணி கல்யாணம் பண்றான்? இவ என்னடான்னா ஆதி பேரைச் சொன்னாலே எரிஞ்சு விழறா. அப்புறம் எப்படி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பா?” என்று யோசித்தாள். “அவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ சின்னதா சண்டை ஏதோ இருந்திருக்கலாம். நான் தான் அதை பெரிசா எடுத்துட்டு அதை இதை யோசிக்கிறேன்” என்று நினைத்துக்கொண்டு நேராக ஆதியின் அறைக்குச் சென்றாள். இவள் வரவுக்காக ஆவலோடு வாசலிலேயே காத்திருந்த ஆதி, வேகமாக துர்கா உள்ளே வந்ததும் அவள் அருகில் வந்தவன், “கிப்ட்டா சங்கவிகிட்ட குடுத்தியா? அவ பிரிச்சுப் பார்த்தா? இல்ல ஏதாவது சொன்னாளா?” என்று கேள்வியைக் கேட்க, “ஹே… ஆதி… பொறு, பொறு” என்ற துர்கா, “நான் கொண்டு போய் கிப்ட் கொடுத்தேன். அவங்க அதை ஆசையா வாங்கிட்டாங்க. ஆனா, சுத்தி நிறைய பேர் இருந்ததால, நான் அப்புறம் யாரும் இல்லாதப்போ தனியா அதைப் பிரிச்சுப் பார்த்துட்டு ஆதி கிட்டயே சொல்லிக்கிறேன், நீ போ என்று சொல்லி என்னைப் அனுப்பி வச்சிட்டாங்க” என்று கூறினாள் துர்கா.

“அப்படியா? அப்போ சங்கவி இன்னும் கிஃப்ட் பார்க்கவே இல்லையா?” என்றான் சோகமாக ஆதி. “சரி பரவாயில்லை விடு” என்று கூறியவன் சோகமாக சேரில் அமர்ந்திருக்க, அப்போது உள்ளே வந்த ஆதியின் அம்மா, “டேய் ஆதி, சீக்கிரம் ரெடி ஆகுடா… ஐயர் இன்னும் கொஞ்ச நேரத்துல கூப்பிடுவாரு, மணமேடைக்கு நீ வரணும் இல்லையா?” என்று கூறியவர், அருகில் துர்கா நின்றிருப்பதைப் பார்த்தவர், “துர்கா…. நீ எப்போ வந்த? நான் உன்னைப் பார்க்கவே இல்லையே இவ்வளவு நேரம்” என்று கூறியவர்.

“ஆமா, இது என்ன? நம்ம வீட்டுக்கு கல்யாணத்துக்கு வந்துட்டு, கழுத்துல எப்படி ஒரு சின்ன செயின் மட்டும் போட்டுட்டு இருந்தா நல்லாவா இருக்கு?” என்று கூறியவர், தன் கழுத்தில் போட்டிருந்த ஒரு பெரிய ஆரத்தைக் கழட்டி துர்கா கழுத்தில் போட்டுவிட்டார்.

அவர் தன் கழுத்தில் இவ்வளவு பெரிய ஆரத்தைப் போட்டுவிட்டதும், பதறிய துர்கா, “ஐயோ அம்மா, எனக்கு இதெல்லாம் வேண்டாமா? இதைப் போட்டுக்கோங்க” என்று ஆரத்தைக் கலட்டப் போக, அவளைக் கடிந்துகொண்ட விசாலாட்சி, “அம்மா சொன்னா கேக்க மாட்டியா? நீ பேசாம நான் கொடுக்கிறதைப் போடு” என்று கூறியவர், தன் கையில் இருந்த இரண்டு வைர வளையல்களையும் கழட்டி துர்காவின் கையில் போட்டுவிட்டார். “பாரு, எவ்வளவு ஒல்லியா இருக்க நீ? இந்த வளையல் உன்னோட இடுப்புக்கு ஒட்டித்தனமாக போட்டுவிடலாம் போல இருக்கே. இவ்வளவு பெரிய ஒல்லியா இருந்தா என்ன செய்யறது?” என்று கிண்டல் செய்தார்.

“போங்க அம்மா… உங்களுக்கு எப்பவுமே என்னைப் பார்த்தா கிண்டல் செய்யறதேதான் வேலையா போச்சு. போங்க, ஐயர் உங்களை கூப்பிடுகிறார் பாருங்கள். போய் கல்யாணம் வேலையை முன்னாடி நின்னு பாருங்க. நான் ஆதியைக் கூட்டிட்டு வரேன். இல்ல வேற ஏதாவது வேலை இருந்தா எனக்குச் சொல்லுங்க, நான் செய்கிறேன்” என்றாள் துர்கா.

“ஆமாம்டா, ஒரு சின்ன வேலை இருக்கு. அம்மா கூட வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்றியா?” என்று கேட்க, “என்னம்மா இப்படி கேட்டுட்டீங்க? வாங்க, என்ன வேலைன்னு சொல்லுங்க நான் செய்றேன்” என்று கூற, அவளை அழைத்துக்கொண்டு, ஆதிக்கு சீக்கிரம் வரச் சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு இருவரும் வெளியே சென்றனர்.

துர்காவை அழைத்துக்கொண்டு மணமேடைக்கு வந்த விசாலாட்சி, ஐயரிடம், “ஐயரே, இந்தப் பொண்ணு எங்க வீட்டுப் பொண்ணுதான். நீங்க இந்தப் பூஜை விஷயமாக எது சொன்னாலும் இவள்கிட்ட சொல்லுங்க. எல்லாத்தையும் பொறுமையா இருந்து செஞ்சு கொடுப்பாள் உங்களுக்கு” என்று கூறி அவளைக் கை காட்டிவிட்டு, “துர்கா, நீ இங்க கொஞ்சம் பார்த்துக்க, நான் போய் வந்தவங்க எல்லாத்தையும் பார்த்துட்டு வந்துடறேன்” என்று கூறி மணமேடையை விட்டு இறங்கிச் சென்றார்.

ஐயர் துர்காவிடம் தீப்பெட்டி கொடுத்து, “இந்தம்மா, பார்க்கிறதுக்கு நல்லா லட்சுமி கடாட்சமா இருக்க. போய் அந்த ரெண்டு விளக்கையும் மனசார வேண்டிட்டு, இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு நினைச்சு விளக்கேத்திட்டு வாம்மா” என்று கூறி அவளிடம் தீப்பெட்டியை கொடுத்தார்.

அவரிடம் தீப்பெட்டியை வாங்கிக்கொண்டு, விளக்கு நின்ற இடத்தில் சென்று, அருகில் இருந்த பிள்ளையார் மஞ்சளைப் பிடித்து வைத்திருந்த பிள்ளையாரைப் பார்த்து மனமார வேண்டி, “என்னோட ஆதிக்கு இந்த கல்யாணம் நல்லபடியா நடந்து, அவன் சந்தோஷமா இருக்கணும் கடவுளே. அவன் சந்தோஷமா இருக்கணும்னா இந்த கல்யாணம் நடக்கணும். அதுக்கு நீங்கதான் அருள் புரியணும் விநாயகா” என்று மனமாற வேண்டிக்கொண்டவள் விளக்கினை ஏற்றினாள்.

இதே போல மற்ற திருமண வேலைகளை ஐயர் கூட பூஜை வேலைகளையும் துர்கா இழுத்துப்போட்டுக்கொண்டு மேடையின் கீழும் மேலும் அங்கும் இங்கும் ஓடித் திரிந்து அலைந்து திரிந்து வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள்.

திருமணத்துக்கு வந்திருந்த விசாலாட்சியின் உறவினர்களும், நண்பர்களும், அவருடைய தோழிகளும் துர்காவைப் பார்த்து, “யாரு விசாலாட்சி அந்தப் பொண்ணு? நல்லா சிட்டு மாதிரி இங்கேயும் அங்கேயும் ஓடி ஓடி வேலை பார்த்துட்டு இருக்கா. உனக்கு இந்த மாதிரிப் பொண்ணு தானே பிடிக்கும்? நீ எப்படி அந்த சங்கவியை நம்ம ஆதிக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க சம்மதித்த?” என்று கேட்டனர்.

அவ்வளவு நேரம் சிரித்து பேசிக்கொண்டிருந்த விசாலாட்சி, அவர்கள் இப்படிக் கேட்டதும் சோகமானவர் ஆனார். “என்ன பண்றது ஹேமா? என்னோட பையனுக்கு அந்த சங்கவி தான் பிடிச்சிருக்கு. அந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஏற்றவளே கிடையாது. அவளைப் பார்த்தாலே எனக்கும் என் குடும்பத்தில் இருக்கிற யாருக்குமே பிடிக்கல. ஆனால் நம்ம ஆதிக்கு பிடிச்சிருக்கு. அவன் சந்தோஷம் தானே எங்கள் சந்தோஷமும்.

அவன் இந்த கல்யாணம் நாங்க பண்ணிக்கணும்னு சொன்னதுமே சரின்னு சொல்லிட்டான். எங்களுக்கு அதுதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவசரத்துல என் வீட்டுக்காரர் அவரோட நண்பர்கிட்ட வாக்கு கொடுத்துட்டாரு, அவர் பொண்ணை என் பையனுக்குக் கட்டிக்கொடுக்கிறேன்னு சொல்லிட்டு. சரி, ஆதி இப்படியும் கல்யாணத்துக்கு மாட்டானான்னு நானும் பொறுமையா இருந்துட்டேன். ஆனா கடைசில ஆதி கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதுக்கு அப்புறம், அவனோட ஆசைக்கு நான் என்றைக்கு குறுக்கே நின்றிருக்கேன்?

அவன் சந்தோஷம்தான் எங்கள் எல்லாரோட சந்தோஷமும். அவனுக்கு அந்தப் பொண்ணுதான் புடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணனும்னு சொன்னா நாங்க கட்டிவெச்சுருவோம்.

ஆனா என்ன, இவன் துர்கா கூட அவ்வளவு நெருக்கமாப் பழகிப் பேசுவதைப் பார்க்கிறப்ப, இவங்க ரெண்டு பேரும்தான் கல்யாணம் பண்ணிக்குவாங்கன்னு நாங்க நினைச்சிருந்தோம். ஆனா அவனுக்கு அந்த மாதிரி எண்ணமே இல்லை போல. துர்காவுக்கும் அந்த மாதிரி எண்ணம் ஒண்ணுமே இல்ல போல. அப்படி இருக்கிறப்ப நான் எப்படி இவங்க ரெண்டு பேரையும் ஒன்று சேர்த்து வைக்க முடியும்?” என்று கூறினார் விசாலாட்சி.

“சரி விடுங்க. அந்த ஆண்டவனுக்குத் தெரியும் யார் யாருக்கு எங்கே முடிச்சுப் போட்டு இருக்காருன்னு. அதுதானே நடக்கும்? நம்ம நினைச்சது எல்லாம் நடந்துருச்சுன்னா, இப்போ எதுக்கு அந்த கடவுள்னு ஒருத்தர் இருக்காரு? அவருக்குத் தெரியும் யாருக்கு எங்கே நிச்சயம் இருக்கு, அங்க மட்டும்தான் அது நடக்கும்”னு சொல்லிட்டு, “சரி வாங்க, நீங்க வந்து முன்னாடி உட்காருங்க, நான் போய் வந்த உங்களை எல்லாம் பார்த்துட்டு வரேன்” என்று கூறி அங்கிருந்து சென்றார்.

சிறிது நேரத்தில், “மணமகன் அழைச்சுட்டு வாங்கோ…” என்று ஐயர் கூற, மேடைக்கு அவனது நண்பன் விக்கி, ஆதியை அழைத்து வந்து அமர வைத்தான். ஆதி வந்ததும் ஐயர் திருமண சடங்குகளை ஆரம்பித்தார். ஒவ்வொரு சடங்குகளாக முடித்து மணப்பெண்ணையும் அழைத்து வரச் சொல்ல, அப்போது அங்கே வந்த சங்கவியைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured