Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 35

உன் ரகசிய ரசிகை நான் 35

by Layas Tamil Novel
633 views

EPISODE 35

கீர்த்திகா யாரையோ பார்த்து “வாவ்!” என்று சொல்லவும், “எதுக்கு இப்போ இப்படி கத்துற?” என்று ரித்து கீர்த்தியை கேட்க, “அக்கா, அங்க ஒரு ஆள் ஸ்மார்ட்ஹ்… ஹேண்ட்ஸமா… இருக்கானே! யாரு அக்கா அது?” என்று கேட்டாள்.

அவள் சொன்ன இடத்தை திரும்பிப் பார்க்கப் போக, அதற்குள் கீர்த்திகாவையே ஃபாலோ செய்து கொண்டு வந்த கதிர், கீர்த்திகா தன்னைக் காதலித்துவிட்டு இப்படி அப்பட்டமாக யாரையோ சைட் அடிக்கிறாள் என்றதும் கோபத்துடன் அவர்கள் முன் வந்து நின்றான்.

‘இவன் யாருடா வந்து இடையில் நின்று தாங்கள் சைட் அடிப்பதைத் டிஸ்டர்ப் செய்வது?’ என்று கீர்த்திகாவும், ரித்துவும் அவனை நிமிர்ந்து பார்க்க.

கோபமான முகத்துடன் நின்றிருந்த கதிரைப் பார்த்த கீர்த்தி, ‘ஐயோ… இவனா… இவன் எப்போ வந்தான்? நான் வேற ஆர்வத்துல சைட் அடிச்சுட்டு சத்தமா வேற சொல்லிட்டேனே! இனி இவன் என்னவெல்லாம் சொல்லி என்னை திட்டப் போறானோ?’ என்று நினைத்தவள், அவனைப் பார்த்து அசடு வழியச் சிரிக்க.

“என்ன டி…. நான் ஒருத்தன் குத்து கல்லாட்டம் இருக்குறப்போ, என்னைப் பார்த்து சைட் அடிக்காம வேற எவனையோ சைட் அடிச்சுட்டு இருக்க. என்னைப் விட அவன் என்ன அவ்ளோ அழகாவா இருக்கான்?” என்று கூற, “ஐயோ… டேய் கதிர்! எதுக்கு டா… இப்படி கத்துற? நீ சொல்றதை யாராவது கேட்டா அவ்ளோ தான் டா. நாம மாட்டிக்குவோம்,” என்று கீர்த்திகா பதற.

அதுவரை இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ரித்திகா, “ஹேய்… ஹேய்… இங்க என்ன பா… நடக்குது? நான் ஒருத்தி இங்கே இருக்குறது உங்க கண்ணுக்குத் தெரியலையா? ஏய்… கீர்த்து, யாரு இது? இவங்க வந்துட்டு என்ன உன்கிட்ட லவ்வு, அது இதுன்னு சொல்றாங்க?” என்று ரித்து கேட்க.

‘ஐயோ போச்சு… இவங்களுக்கு வேற தெரிஞ்சிருச்சே. இனி அவ்ளோதான்,’ என்று நினைத்தவள், “அக்கா, ப்ளீஸ்! தயவு செஞ்சு என் அக்கா கிட்டயோ, இல்லை வேற யார்கிட்டயும் சொல்லிராதீங்க. இவன் ஆதி மாமாவோட தம்பி கதிர். நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம் அக்கா,” என்றால்.

கீர்த்தி கூறியதைக் கேட்டு ஆச்சர்யமான ரித்து, “என்ன சொல்ற? இப்பவே நீ லவ் பண்றியா?” என்றால். “ஆமா அக்கா,” என்று குழைவாகச் சொல்ல, “சரி சரி, உனக்கும் ஜோடி வந்திருச்சா? சரி போ…” என்றவள் வேறு புறம் திரும்பிக் கொள்ள.

கீர்த்திகா திரும்பி கதிரைப் பார்க்க, அவன் கீர்த்திகாவை முறைத்துக் கொண்டு இருக்க, “டேய் கதிர்! நான் சும்மா கிண்டலுக்கு தாண்டா அந்த அக்கா கிட்ட பேசிட்டு இருந்தேன். ஒரு பையனை சும்மா சைட்தான் அடிச்சேன். அதுக்காக நான் உன்ன லவ் பண்ணலைன்னு அர்த்தமாயிடுமா?” என்று கீர்த்திகா கூற.

“அது எப்படி டி…. என்ன மனசுல நினைச்சுட்டு வேற ஒருத்தனை ரசிக்க முடியுது உன்னால? அப்போ என்ன நீ லவ் பண்ணலை அப்படித்தானே? என்ன முழுசா லவ் பண்ணி இருந்தா, உன் முன்னாடி எவ்ளோ அழகான ஆண்கள் வந்து நின்னாலும் அவங்க எல்லாம் உனக்கு ஒரு பொருட்டாவே தெரிய மாட்டாங்க. நான் மட்டும் தான் உனக்குப் பெருசா தெரிவேனே. ஆனா நீ இப்படி என் முன்னாடியே அப்பட்டமா சைட் அடிக்கிறியே கீர்த்திகா, இதெல்லாம் உனக்கே நியாயமா?” என்றான் கோபம் பொங்க.

கதிர் தன்மீது பயங்கர கோபத்தில் இருப்பதை உணர்ந்து கொண்ட கீர்த்திகா, “கதிர்! ப்ளீஸ் கதிர். நான் சொல்றத கொஞ்சம் கேளு. நீ நினைக்கிற மாதிரி நான் அந்த மாதிரி எண்ணத்தில் எல்லாம் பார்க்கலை டா…. சும்மா ஜஸ்ட் திரும்பிப் பார்க்குறப்போ ஒரு பையன் அழகா நின்னுட்டு இருந்தான். அதை நான் தான் எதார்த்தமா ‘அழகா இருக்கான்’னு ரித்துக்கிட்ட சொல்லிட்டு இருந்தேன். நீ ஏன் இப்படி எல்லாம் நினைக்கிற? அந்த மாதிரி எண்ணத்தில் சத்தியமா நான் பார்க்கலை. அந்தப் பையன் நல்லா இருக்கான்னு சொல்லித்தான் பார்த்தேன். வேற மாதிரி எண்ணமெல்லாம் என் மனசுல இல்லை,” என்று கூறினாள் கீர்த்திகா.

“அப்போ உண்மையா நீ வேற மாதிரி எண்ணத்துல பார்க்கலை அப்படித்தானே?” என்று கதிர் கேட்க. “என் மேல சத்தியமா நான் அந்தப் பையனை அப்படி எல்லாம் நினைச்சுப் பார்க்கலை டா. ‘வாவ்’ என்று சொல்லி அழகா இருக்கான்னு மட்டும் தான் பார்த்தேன். உன்னை நினைச்சு, மனசுல அந்த மாதிரி எண்ணத்தோடு நான் வேற யாரையுமே நினைக்க மாட்டேன் கதிர். என்னை நம்புடா! ப்ளீஸ்….” என்று அவள் கெஞ்ச, அவள் கெஞ்சுவதைப் பார்த்து மனம் இறங்கிய கதிரின் கோபம் கொஞ்சம் தணிந்தது.

இருந்தும் இவளிடம் சிறிது நேரம் கோபமாக இருப்பது போலவே நடிக்கவேண்டும் என்று நினைத்த கதிர், “நீ என்ன சொன்னாலும் நான் சமாதானமே ஆகமாட்டேன்,” என்று கூறிவிட்டு கோபமாக அந்த இடத்தை விட்டு வேகமாக அவன் நகர, ‘ஐயோ! இவன் ஏன் இப்படி டென்ஷன் ஆயிட்டு இருக்கான்? நான் அப்படி எல்லாம் நினைக்கலைன்னு எவ்வளவு தூரம் சொல்றேன். இப்பவும் கோபத்தைக் குறைக்க மாட்டேன்னா நான் என்ன பண்ணுவேன் கடவுளே. எப்படியாவது இவனை சமாதானப்படுத்த எனக்கு ஹெல்ப் பண்ணு,’ என்று கூறிக்கொண்டு அவன் பின்னால் எழுந்து ஓடினாள்.

கீர்த்திகா கதிரின் பின்னால் ஓட, அவள் பின்னால் வருவதை உணர்ந்து கொண்ட கதிர் சிறிது தூரம் நடந்தவன், யாருமில்லாத ஒரு இடத்திற்குச் சென்று அங்கே நிற்க, கீர்த்திகாவும் அங்கு அவன் பின்னலேயே வந்துவிட்டாள்.

தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்தவன், தன் பின்னால் வந்து கொண்டிருந்த கீர்த்திகாவைத் திரும்பிச் சட்டென்று அவள் கையைப் பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து இழுத்து நிறுத்தி அணைத்துக் கொண்டான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத கீர்த்திகா அவன்மேல் மோதி நின்று கொள்ள, அவனை நிமிர்ந்து பார்க்க, கதிர் சிரித்துக் கொண்டு அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“டேய் கதிர்…. என்னடா பண்ற? என்ன விடுடா! இங்கே சுத்தி எத்தனை பேர் இருப்பாங்க? யாராவது நம்மளப் பார்த்துடப் போறாங்க. என்னை விடுடா….. ப்ளீஸ்,” என்று அவனிடமிருந்து விடுபட அவன் மார்பில் கையை வைத்து அழுத்தித் தன்னை அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ளப் பின்னால் நகர, அவளை மேலும் இறுக்கித் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட கதிர்,

“நீயா வந்து என்கிட்ட நல்லா வசமா மாட்டிக்கிட்டியா?” என்று கதிர் கூற, அவனை அதிர்ச்சியில் பார்த்த கீர்த்திகா அவனை முறைத்தவள்,

“பாவமே, கோவமா போறேன்னு உன்னைச் சமாதானப்படுத்த உன் பின்னாடி வந்தா, கடைசியில் நீ என்னை ஏமாற்றி இங்கே யாருமில்லாத இடத்துக்கு என்னைக் கூட்டிட்டு வந்திருக்க,” என்றால் அதே கோபத்தோடு.

“பின்னே! நான் எனக்குக் கிடைக்கிற சான்ஸை நான் மிஸ் பண்ணுவேனா? அதுவும் என் கீர்த்திக் குட்டியை நான் மிஸ் பண்ணுவேனா? காலையில் நீ எனக்கு முத்தம் கொடுக்கச் சொன்னப்போ எங்க கொடுத்துட்டுப் போன? என்னோட கன்னத்துல தானே? இப்ப நீ நல்லா வசமா வந்து மாட்டிக்கிட்டியா. நான் கேட்ட இடத்துல எனக்கு முத்தம் நீ கொடுத்தா தான் நான் உன்னை விடுவேன். இல்லன்னா யாரு வந்தாலும் நான் உன்னை விட்டுப் இப்படியே கட்டிப்பிடிச்சுட்டுத்தான் இங்கேயே நிற்கப் போறேன்,” என்று கூறினான் கதிர்.

“டேய் கதிர்! என்னடா விளையாட்டு இது? ப்ளீஸ்டா! யாராவது வந்திடப் போறாங்க. மாட்டிக்கிட்டோம்னா அவ்வளவுதான். ப்ளீஸ்,” என்று கீர்த்திகா கெஞ்ச.

“நீ எனக்கு முத்தம் கொடுத்தால் தான் நான் உன்னை விடுவேன். இல்லைன்னா விடமாட்டேன்,” என்று கதிர் பிடிவாதமாக நிற்க, அவன் பிடிவாதம் அறிந்த கீர்த்திகா, இனி இவனிடம் போராடி பிரயோஜனம் இல்லை என்றவள் அமைதியாக நிற்க.

அமைதியாக நின்ற கீர்த்தியைப் பார்த்து, “என்னடி எதுவுமே சொல்லாமல் அமைதியா இருகுற? ஒன்னு முத்தம் கொடுக்கிறேன்னு சொல்லு, இல்லன்னா இல்லைன்னு சொல்லு. இப்படி எதுவும் சொல்லாமல் இப்படி அமைதியா நின்னா என்ன அர்த்தம்?” என்று கதிர் கேட்க.

“டேய் கதிர், எனக்கு வெட்கமாக இருக்குதுடா. நான் எப்படி உனக்கு முத்தம் கொடுக்கிறது?” என்று கேட்க, “உனக்கு வெட்கமா இருக்கா? நான் வேணா கண்ணை மூடிக்கிட்டா…. நீ எனக்கு முத்தம் கொடுக்குறியா?” என்று கூற.

அவள், “சரி நீ கண்ணை மூடிக்கோ. ஆனா எனக்கு கட்டிப் பிடிச்சு நிக்கிறது எனக்கு ரொம்ப கூச்சமாக இருக்குது,” என்று அவள் நெளிந்து கொண்டு கூற, “எதுக்கு நான் கண்ணை மூடினதுக்கப்புறம் இங்கிருந்து எஸ்கேப் ஆகுறதுக்கு? முடியவே முடியாது. நீ முத்தம் கொடுக்காமல் என்ன ஆனாலும் நான் உன்னை இங்கிருந்து விடப்போவதில்லை,” என்று கூற.

இவனிடம் தப்பிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று முடிவு செய்து கீர்த்திகா, “சரி நீ கண்ணை மூடு. நான் முத்தம் கொடுக்கிறேன்,” என்று கூற, கதிர் அவளைப் பார்த்து சிரித்தவன், “அப்படி வா…. வழிக்கு,” என்று தன் கண்களை மெதுவாக மூட, கீர்த்திகா முதலில் அவன் முகத்தைப் பார்த்தவள் கூச்சப்பட்டு கொண்டே நிற்க, “ஏன் இப்ப நீ முத்தம் கொடுக்கப் போறியா இல்லை நான் கண்ணைத் திறக்கவா?” என்று கதிர் கேட்க.

“டேய்… டேய்… இருடா ஒரு நிமிஷம்,” என்று அவன் வாயைப் பொத்தியவள், “நீ அமைதியா இருந்தால் தான் நான் முத்தம் கொடுப்பேன்,” என்று கூற, “ம்ம்ம்… ம்ம்…” என்று தலையை ஆட்டினான்.

அவன் முகத்தருகில் தான் முகத்தைக் கொண்டு வந்து அவன் வாயில் இருந்த தன் கையை எடுத்துவிட்டு அவனுக்கு முத்தமிட அவன் உதட்டருகில் வர, அவள் மூச்சுக் காற்று அவன் முகத்தருகே மிக நெருக்கமாக உணர, அவள் உஷ்ண மூச்சுக் காற்று கதிரின் உதட்டில் பட்டதும், சட்டென்று கண்களைத் திறந்தவன் அவள் முகத்தைப் பிடித்து அவள் இதழைத் தன் இதழ்களால் சிறை செய்தான்.

தயங்கியவாறு அவன் அருகில் முத்தம் கொடுக்க வந்தவளைச் சட்டென்று அவன் கொடுத்த முத்தத்தை எதிர்பாராதவள், அவனையே அதிர்ச்சியாகப் பார்க்க, அவனோ ஒற்றை முத்தத்திலேயே அவளிடம் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான். அவன் முத்தம் கீர்த்தியை ஏதோ செய்ய, மெல்ல மெல்லத் தன்னை அவள் முத்தத்தில் தொலைத்துக் கொண்டிருந்தாள்.

இவர்கள் இருவரும் தங்களை மறந்து முத்தத்தைப் பரிமாறிக் கொண்டிருக்க, காலையிலிருந்து இவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு நபர் இவர்கள் இருவரும் அறியாமல் இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதைப் புகைப்படமாக எடுத்துக் கொண்டிருந்தான்.

****

விஷால், பூமிகா வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், சில இளைஞர்களுடன் நம் ஜோடிகளும் அங்கே இருக்க அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பெரியவர்கள் அனைவரும் நேரமே ரூமிற்குச் சென்றுவிட, அனைவரும் பேச்சிலர் பார்ட்டி கொண்டாட ஆரம்பித்தனர்.

ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக அந்த இடமே அதிர்ந்து கொண்டு இருந்தது. விஷால், பூமிகா ஒரு புறம் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்க….

கதிர், தூரத்தில் அவனையே ரசித்துக் கொண்டிருக்கும் தன் கீர்த்தியைப் பார்த்துக் கொண்டே ட்ரிங்க்ஸ் பண்ணிக்கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

விக்கியும் அவனுடன் இருக்க, “டேய்.. கதிர்! இங்கே நான் ஒருத்தன் இருக்கேன் என்பதையே மறந்துட்டியா டா நீ? உன்னோட ஆளையே பார்த்துட்டு இருக்க. பக்கத்துல இருக்க எனக்கும் கொஞ்சம் கம்பெனி குடுடா…” என்றவன், கதிர் அமர்ந்திருந்த சேரை தன்னைப் பார்க்குமாறு திருப்பி அவனைத் தன் புறம் அமர வைத்தான்.

“விக்கி… மச்சான்… கொஞ்சமாவது அறிவு இருக்கா டா… உனக்கு? என் ஆளே இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா என் ரொமான்ஸ் மூடிற்கு ஏற்றது போலவே வந்துட்டு இருக்கா…. நீ என்ன டா.. ன்னா.. அதை கெடுத்திருவ போலவே இருக்கே,” என்று திரும்பப் போக,

“டேய்! இப்படி என்கூடப் பார்ட்டி பண்ணாமல் கீர்த்திகா கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தா, நான் அம்மா கிட்ட போய் நீங்க காலையில் சொன்னது சரி தான் மா… ஒரே வீட்டில் பொண்ணு எடுக்காதீங்கனு சொல்லிருவேன்,” என்று கூறி எழுந்து செல்லப் போக, அவன் கையைப் பிடித்து அமர வைத்த கதிர், “ஹேய்.. ஹேய்… சாரி டா மச்சான். ப்ளீஸ் … ஒரே ஒரு நிமிஷம்,” என்றவன் திரும்பி கீர்த்தி இருந்த இடத்தில் திரும்பிப் பார்த்தவன், “நான் அப்புறமா உனக்குப் மெசேஜ் பண்றேன்,” என்று சொல்ல, அவள் ‘ஏன்?’ என்று சைகையிலேயே, யாரும் தன்னைப் பார்த்து விடக் கூடாது என்று கவனமாகத் தன்னைச் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டபடியே கதிரிடம் கேட்டாள். அதற்கு கதிர் தன் அருகில் காட்ட, அங்கே விக்கி நின்று இருவரையும் மாறி மாறி முறைத்துக் கொண்டு இருக்க.

அவனைக் கண்டதும் கீர்த்தி “ஐயோ… அண்ணா….” என்று ஷாக் ஆனவள். விக்கி தன்னை முறைப்பதைப் பார்த்தவள் தன் காதைப் பிடித்துக்கொண்டு அவனிடம் “சாரி” என்று சைகையிலேயே அவனிடம் மன்னிப்புக் கேட்க, “சரி” என்று சொன்னவன் திரும்பி கதிருடன் பார்ட்டி பண்ண ஆரம்பித்தான்.

“ஏன்டா… கதிர்.. கல்யாணம் ஆகாம நீயே இந்த ரொமான்ஸ் பண்ற. ஆனா உங்க அண்ணன் என்ன டா… இப்படி அம்பி மாதிரி உக்காதிருக்கான். அங்க பாரு,” என்று ஆதி இருந்த இடத்தைக் கை காட்ட.

அவன் காட்டிய திசையை திரும்பிப் பார்த்த கதிர், அங்கே ஆதி கையில் மது கிளாஸுடனும், அவன் அருகில் துர்கா அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டு இருப்பதையும் பார்த்த கதிர், “இவனுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. நான் அவனிடம் அவ்வளவு சொல்லிவிட்டுத் தான் வந்தேன் துர்காவிடம் நன்றாக நடந்து கொள்ளச் சொல்லி. ஆனால் இப்போ பாரு, இவ்வளவு நேரம் ஆகியும் துர்காவிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருக்கிறான்,” என்று அலுத்துக் கொண்டான்.

கதிர், “சரி பொறு, நாம ஏதாவது ஐடியா பண்ணலாம்,” என்றவன், பார்ட்டி நடத்திக் கொண்டிருக்கும் நபரிடம் சென்று காதில் ஏதோ கூற, அவரும் கதிர் சொன்னதைக் கேட்டதும் “சரி” என்பது போலவே தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.

பின் விக்கியிடம் வந்து கதிர் அமர, “என்னடா சொல்லிட்டு வந்த?” என்று கேட்க, “வெயிட் அண்ட் வாட்ச் மச்சான். அவசர படாத,” என்றான் கதிர்.

பார்ட்டி நடத்துபவர் ஓடிக் கொண்டிருக்கும் பாட்டை நிறுத்திவிட, அதுவரை அவர் பாடலுக்கு என்ஜாய் பண்ணிக் கொண்டிருந்தவர்கள், “ஏன் பாட்டை நிறுத்தினீர்கள்? அதற்குள் பார்ட்டி முடிந்து விட்டதா…” என்று கேட்க.

“நோ கைஸ்…. பார்ட்டி இனிமேல்தான் சூடு பிடிக்க ஆரம்பிக்கப் போகிறது. இப்போ நாம ஒரு கேம் விளையாடப் போறோம். இதை சிங்கிள்ஸ், ஜோடி என்று யார் வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால், அவர்களுடன் இன்னொரு நபர் இருக்க வேண்டும். இரண்டு பேர் சேர்ந்து விளையாட வேண்டிய கேம் இது,” என்றார்.

உடனே அங்கிருந்த அனைவரும் “ஹேய்…..” என்று கூச்சலிட்டு ஸ்டார்ட் செய்யலாம் என்று கூற, “யார் யாரெல்லாம் விளையாடப் போகிறார்கள் என்று முடிவு செய்து விட்டு அங்கே போடப்பட்டிருக்கும் சேரில் அமரவும்,” என்று கூற.

சிலர் தங்கள் ஜோடியைத் தேர்வு செய்ய, ஆதி, துர்கா அமைதியாக அங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க, அவர்களிடம் வந்த விக்கியும், கதிரும், “டேய்! நீயும் துர்காவும் இதுல கலந்துக்கோங்க,” என்றனர்.

“டேய் என்ன விளையாடுறியா? என்னால முடியாது. நான் எல்லாம் இதற்கு வரலை,” என்றான் ஆதி. துர்காவும் “முடியாது” என்று கூற.

அப்போது அங்கு வந்த சங்கவி, “ஆதி” என்று அழைத்தாள். அவளைத் திரும்பி, “என்ன…” என்று கடுப்போடு ஆதி கேட்க, “என்கூட இந்த கேமில் ஜாயின் பண்ண நீ வரியா?” என்று கேட்க.

அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவன், அவள் மேக்கப்பும் அவள் அணிந்திருக்கும் கவர்ச்சியான ஆடையையும் பார்த்தவன், முகத்தைச் சுளித்துக்கொண்டு, “நான் எதற்கு உன்கூட அந்தக் கேமை விளையாடணும்?” என்று கேட்டான்.

அவன் ஏற்கனவே மது கொஞ்சம் அதிகமாக அருந்தி இருந்ததால் லேசாகக் குழறியபடியே பேசினான். “ஏன் ஆதி, இது கப்பிள்ஸ் விளையாடுற கேம் என்று தானே சொன்னார்கள்? எனக்குப் பேர் யாருமில்லை. அதனால் தான் உன்னை அழைத்தேன்,” என்றாள்.

இதை அவள் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த விக்கி, “ஹலோ சங்கவி! அவனுக்கு ஜோடி இல்லை என்றால் நீ அவனை கூப்பிடுவது சரி என்று சொல்லலாம். ஆனால் அவன் மனைவி இவான் கூட இருக்கும்போது நீ எப்படி ஆதியை அழைக்கலாம்?” என்று கேட்டான்.

அவனை முறைத்த சங்கவி, “ஹேய்… நீ யாரு மணி இதெல்லாம் கேட்க? ஆதியே எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறான் என்றால், அவனுக்கு இந்த வேலைக்காரியிடம் விளையாடப் பிடிக்கவில்லை போலவே இருக்கிறது. அவன் தகுதிக்கு துர்கா எல்லாம் ஆதியின் காலை தூசிக்குச் சமம்,” என்று கூற.

அவ்வளவு நேரம் அவள் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆதி, சங்கவி துர்காவை ‘வேலைக்காரி’, ‘தகுதி இல்லாதவள்’ என்று கூறியதைக் கேட்டதும் கோபம் வர, அவன் துர்காவைப் பார்க்க, அவள் முகம் சங்கவியின் பேச்சில் சுருங்கி வாடிய மலரைப் போல ஆகிவிட்டது.

இதைக் கவனித்த ஆதி, “நான் துர்காவுடன் விளையாடுகிறேன். எனக்கு ஜோடி இருக்கிறது. நீ போ… முதலில் இங்கிருந்து. உன்னைப் பார்க்கவே எனக்கு எரிச்சலாக இருக்கிறது,” என்று கூறினான்.

சங்கவி மறுபடியும் ஏதோ கூற வர, இடைமறித்த விக்கி, “இப்போ என்ன உனக்கு ஒரு ஜோடி வேணும் அப்படித் தானே?” என்றவன் சிறிது யோசித்தவன், “சரி வா… நானே உன்னுடன் ஜோடியாக இருக்கிறேன்,” என்று கூற.

“ஏய் இடியட்! உன்னை யார் எனக்கு எல்லாம் ஜோடியாக இருக்க சொன்னது? அம்மா அப்பா யார் என்று தெரியாத அனாதை உடன் எல்லாம் என்னால் விளையாட முடியாது,” என்றால்.

இதைக் கேட்டதும் கதிரும், ஆதியும், துர்காவும் கூடக் கோபம் வந்து “ஏய்….” என்று கத்த, சங்கவி இதைப் பார்த்து மிரள, அவள் அருகில் வந்த கீர்த்திகா, “எங்க அண்ணனைப் பார்த்து நீ எப்படி அப்படி ஒரு வார்த்தை சொல்லலாம்? இனிமேல் இப்படி அவரை எதுவும் இந்த மாதிரி பேசினால் உன் கழுத்தை அறுத்து விடுவேன்,” என்றால்.

அனைவரையும் பார்த்துப் பயந்த சங்கவி மிரண்டு போய் அங்கேயே நிற்க, மற்றவர்களைச் சமாதானம் செய்த விக்கி, சங்கவியிடம் வந்தவன், “நீ சொன்னதில் எந்தத் தப்பும் இல்லை தான். நான் அனாதை தான்.. அதற்காக எனக்கு என்று யாருமில்லை என்று மட்டும் நினைக்காதே. இவ்வளவு பேர் எனக்காக வருகிறார்கள் பார்த்தாயா?” என்றான்.

“சரி, இப்போ என்கூட நீ வரியா… இல்லையா… இங்க ஜோடி என்றால் திருமணமானவர்கள், லவர்ஸ் தான் என்று இல்லை. நண்பர்கள், சகோதரா, சகோதரிகள் என்று யார் வேண்டுமானாலும் ஜோடியாக விளையாடலாம். நீ என்னை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்,” என்றான் விக்கி.

“சரி, வந்து தொலை! உன்னோடவே விளையாடுறேன்,” என்றவள் அவனுடன் செல்ல, கதிர் விக்கியைப் பார்த்து இடிக்க, விக்கி “சரி… சரி… நோண்டாதே டா….” என்றவன்.

பின்னால் திரும்பி, “ஆதி, நீ துர்காவின் கையைப் பிடித்துட்டு வா…” அந்தக் கதிர் உனக்கு ஜோடி என்று யோசிப்பது போலவே பாவனை செய்தவன், பின், “கீர்த்துமா, நீ தனியா தானே இருக்க? கதிரும் தனியா தான் இருக்கான். நீ அவன் கூட ஜோடி ஆகிக்கோ,” என்று கூற.

“அண்ணா…. நான் எப்படி….?” என்று கீர்த்தி கூற. அவள் அருகில் இருந்த துர்கா, “ஆமா கீர்த்தி, நீயும் வாடி,” என்று அவளை வற்புறுத்த, “சரி” என்று சொன்னவள் கதிரைப் பார்க்க, அப்போது கீர்த்தியைப் பார்த்ததும், “ஏய் நம்ம கதிர் தானே? போடி…” என்று கீர்த்தியைத் தள்ளி விட, அவள் சென்று அவன் அருகில் நின்றிருக்க, “எப்படி டி! உன்னையே எனக்கு ஜோடி சேர்த்துட்டேன் பார்,” என்று தன் காலரை தூக்கி விட்டான்.

“சரி சரி போடா போடா….வரேன்,” என்ற துர்கா அவள் பின்னால் செல்ல, அனைத்து ஜோடிகளும் வந்து நடுநாயகமாக நின்றனர்.

அனைவரும் வந்திருப்பதைப் பார்த்த அந்த டி.ஜே, “சரி, இந்த கேம் ஓட மெயின் தீம் என்னன்னா…” என்றவன், இந்தக் கேம் எப்படி விளையாடணும் என்று சொல்ல ஆரம்பித்தான்.

“இரண்டு உண்மைகள் மற்றும் ஒரு பொய்” என்பது ஒரு உன்னதமான ஐஸ்பிரேக்கர் கேம் ஆகும். இதில் கலந்து கொள்ளும் நபர் தங்களைப் பற்றி ஒரு பொய்யுடன் இரண்டு உண்மைகளைச் சொல்ல வேண்டும். ஆனால், கலந்து கொள்ளும் நபர் சொல்லிய மூன்று செய்திகளில் எது பொய் என்பதை அவருடைய ஜோடி சொல்ல வேண்டும்,” என்றான். இது தான் கேம் ரூல் என்று கூறியவன், “ஓகே, ஸ்டார்ட் பண்ணலாமா?” என்றான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured