Home Uncategorizedஅவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! FLING 38

அவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! FLING 38

by Layas Tamil Novel
14 views

FLING 38

அகலிகா தன் வீட்டிற்கு வந்து சேர்ந்த சில நிமிடங்களிலேயே முகேஷ் அலுவலகத்தில் இருந்து அங்கே வந்தான். அவனது கையில் ஒரு அழகான மலர்க்கொத்து இருந்தது.

உள்ளே வந்ததும் ஹாலில் சோர்ந்த முகத்தோடு தலையில் கைவைத்து அமர்ந்து இருந்த அகலிகாவின் வாடிய முகத்தைப் பார்த்ததும் பதறி விட்டான்.

“அஹி… என்னாச்சு? முகம் ஏன் இப்படி இருக்கு? தீரன் ஆபிஸ்க்குப் போனப்போ ஏதாவது பிரச்சனையா? அவன் ஏதாவது சொன்னானா? பிளேஸ் எல்லாம் சரியா தானே இருந்துச்சு ” என்று படபடவெனக் கேட்டான்.

அகலிகா ஒரு போலிப் புன்னகையை வரவழைத்துக் கொண்டாள். “ஒன்னும் இல்ல முகேஷ். கொஞ்சம் வேலைப் பளு… வேற ஒன்னும் இல்ல. சொல்லுங்க, ஏன் திடீர்னு வந்தீங்க?”

“அஹி… இன்னைக்கு நைட் ஒரு டின்னர் பார்ட்டி. ரியா தான் அரேஞ்ச் பண்ணியிருக்கா. நம்ம நாலு பேரும் சேர்ந்து ஒரு ஹோட்டல்ல டின்னர் சாப்பிடலாம்னு அவ ரொம்ப ஆசையா இருக்கா. நீ வர்றேல்ல?”

அகலிகா தயங்கினாள். “முகேஷ்… எனக்கு இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்கு.  ப்ளீஸ்… நீங்களே போயிட்டு வாங்க.”

முகேஷ் அவளது கைகளைப் பற்றிக்கொண்டான். “அஹி… ப்ளீஸ். நீ ஏன் வரலன்னு சொல்றேன்னு எனக்கு புரியுது. அதைப் பத்தி நாம பொறுமையா உட்கார்ந்து பேசலாம். ஆனா இப்போ வேணாம். ரியா பாவம் அஹி… அவ ஒரு சின்னப் பொண்ணு. நம்ம கல்யாணத்துல அவதான் ரொம்ப ஆர்வமா இருக்கா. அவ ஆசையா ஏற்பாடு செஞ்ச பார்ட்டியை நாம தவிர்க்கிறது சரியில்ல. நமக்குள் இருக்கிற பிரச்சனையை அங்க காட்டிக்க வேண்டாம். எனக்காக வர்றேல்ல?”

முகேஷின் அந்தத் தூய்மையான அன்பிற்கு முன்னால் அகலிகாவால் மறுப்புச் சொல்ல முடியவில்லை. “சரி முகேஷ்… நான் வர்றேன். ஆனா அவங்க முன்னாடி எப்படி நான் இயல்பா இருக்கப்போறேன்னு தெரியல.”

“டோன்ட் வொர்ரி. நான் இருக்கேன்ல… நாம ஜஸ்ட் என்ஜாய் பண்ணப் போறோம்,” என்றான் முகேஷ்.

இரவு எட்டு மணி. சென்னையின் அந்தப் பிரம்மாண்டமான நட்சத்திர ஓட்டலின் ரூஃப்-டாப் ரெஸ்டாரண்ட் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரியா மிக உற்சாகமாகத் தெரிந்தாள். நீல நிற உடையில் தேவதை போல இருந்தாள். தீரன்… அவன் வழக்கம்போல ஒரு கருப்பு நிற கோட்-சூட்டில், மிரட்டலான தோற்றத்தில் அமர்ந்திருந்தான்.

முகேஷும் அகலிகாவும் அங்கே நுழைந்தனர். அகலிகா ஒரு கறுப்பு நிறப் புடவையில், தன் சோகத்தை மேக்கப்பால் மறைத்துக் கொண்டு வந்தாள்.

“ஹே அஹி! வாங்க… வாங்க! லுக் அட் யூ… சோ பியூட்டிபுல்!” என்று ரியா ஓடிவந்து அகலிகாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

அகலிகாவின் கண்கள் தற்செயலாகத் தீரனைப் பார்த்தன. அவன் ஒரு மதுக்கோப்பையைச் சுழற்றியபடி, அவளை ஒரு கேவலமான பார்வை பார்த்தான். அந்தப் பார்வையில், “நீ என்னதான் அலங்காரம் பண்ணினாலும், உன் உண்மை முகம் எனக்குத் தெரியும்” என்ற ஏளனம் இருந்தது.

“தேங்க்ஸ் ரியா, நீயும் இந்த ட்ரெஸ்ல ரொம்ப அழகா இருக்க”என்றவள்

டேபிளில் நால்வரும் அமர்ந்தனர். ரியா எதையாவது பேசிச் சிரித்துக் கொண்டிருந்தாள். முகேஷ் அவளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால், தீரனும் அகலிகாவும் மௌனமாக இருந்தனர்.

திடீரென்று தீரன் பேசத் தொடங்கினான். “முகேஷ்… அகலிகா லண்டன்ல இருந்தப்போ அங்க இருக்குற ‘வைன் ‘அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அங்க நாம ஒருநாள் நைட் அந்த ரகசியமான பார்ட்டிக்குப் போனோம்ல அஹி? ஞாபகம் இருக்கா?”

அகலிகா அப்படியே உறைந்து போனாள்.

முகேஷ் ஆச்சரியமாகப் பார்த்தான். “அப்படியா? அஹி என்கிட்ட சொல்லவே இல்லையே?”

தீரன் கசப்பாகச் சிரித்தான். “அதை ஏன் அவ சொல்லப் போறா? அது ஒரு ரொம்ப பெர்சனலான  ட்ரிப். அகலிகாவுக்கு அந்த நைட் நடந்த எதுவுமே மறக்காதுன்னு நினைக்கிறேன். இல்லையா அகலிகா?” என்று அவளது கண்களை நேராகப் பார்த்துக் கேட்டான்.

அகலிகா தன் கையில் இருந்த ஸ்பூனை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். அவளது உடல் நடுங்கியது. “தீரன்… பழசையெல்லாம் ஏன் இப்போ பேசிட்டு இருக்கீங்க? சாப்பிடுங்க,” என்றாள் பல்லைக் கடித்தபடி.

“ஏன் அஹி? முகேஷ் கிட்ட நாம எதையும் மறைக்கக் கூடாதுல்ல? நாம லண்டன்ல எவ்வளவு நெருக்கமா வேலை பார்த்தோம்… எவ்வளவு ராத்திரி வரைக்கும் ஒண்ணா இருந்தோம்னு முகேஷுக்குத் தெரிய வேண்டாமா?”

முகேஷ் சிரித்துக்கொண்டே, “தீரன்… பிசினஸ் விஷயத்துல நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். அதனாலதான் அஹிக்கு நான் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்,” என்று ஒரு மோதிரப் பெட்டியை எடுத்தான்.

“அஹி… இது நமக்காக நான் ஸ்பெஷலா டிசைன் பண்ணின மோதிரம்,” என்று முகேஷ் அவளது விரலில் அணிவிக்கப் போனான்.

சரியாக அந்த நேரத்தில் தீரன் தன் மொபைலை எடுத்து மேஜை மீது வைத்தான். “வாட் ஏ கோ-இன்சிடன்ஸ் முகேஷ்! நானும் அகலிகாவுக்கு ஒரு கிஃப்ட் வச்சிருக்கேன். அகலிகா… லண்டன்ல நீ ஒரு பொருளை விட்டுட்டு வந்தியே… ஞாபகம் இருக்கா?”

தீரன் தன் மொபைலில் திறந்து  ஒரு போட்டோவைக் அகலிகாவிடம்  காட்டினான். அது லண்டனில் அகலிகா தீரனின் சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்த ஒரு மங்கலான புகைப்படம். ஆனால், பார்த்தவுடன் அது அகலிகா என்று கண்டுபிடித்து விடலாம்.

ரியா அதைப் பார்க்கப் போனாள். “என்னது தீரன் அது? காட்டுங்க!”

அகலிகாவிற்குத் இதயம் நின்றுவிடும் போல இருந்தது. ‘இவன் என்ன பண்ணப் பார்க்கிறான்? எல்லார் முன்னாடியும் என்னை அசிங்கப்படுத்தப் போறானா?’

தீரன் அந்த மொபைலைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டான். “இல்ல ரியா… இது ஒரு பர்சனல் ஃபைல். அஹி… இந்த போட்டோவை நான் டெலீட் பண்ணிடவா? இல்ல முகேஷ்கிட்ட காட்டிட்டு அப்புறம் டெலீட் பண்ணவா?”

அகலிகாவுக்குத் தொண்டை வறண்டது. அவளால் ஒரு வார்த்தை பேச முடியவில்லை. முகேஷ் குழப்பத்துடன் தீரனைப் பார்த்தான். “தீரன்… என்ன போட்டோ அது? எதா இருந்தாலும் காட்டுடா.”

தீரன் அகலிகாவைப் பார்த்து ஒரு குரூரமான புன்னகை செய்தான். “முகேஷ்… இது அகலிகாவோட ஒரு பழைய மெமரி. இதை அவளே உன்கிட்ட காட்டுவான்னு நினைக்கிறேன். இல்லையா அஹி?”

அகலிகா கண்கலங்க முகேஷைப் பார்த்தாள். தீரன் அவளை ஒரு கருவியைப் போலப் பயன்படுத்திக் கொண்டிருந்தான். அவளது மானம் தீரனின் விரல் நுனியில் இருந்தது.

“தீரன்! ப்ளீஸ்…” – அகலிகா கெஞ்சும் குரலில் முணுமுணுத்தாள்.

தீரன் மதுக்கோப்பையை ஒரே மூச்சில் குடித்துவிட்டு எழுந்து நின்றான். “முகேஷ்… நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன். அஹி… அந்த போட்டோவை நான் என் போன்ல வச்சுக்கலாமா? இல்ல, மெயிலுக்கு அனுப்பிட்டு டெலீட் பண்ணவா? ஏன்னா… அதுல நீ ரொம்ப அழகா, ‘இயல்பா’ இருந்தே!”

அகலிகா தீரன் வாயில் இருந்து ஒவ்வொரு வார்த்தையும்  வெளியே வந்து விழும்போது நடுங்கிப்போனாள் , அந்த போட்டோவை இருவரிடமும் காட்டிவிடுவானா? தீரன் மனதில் என்ன இருக்கிறியாது என்று அகலிகாவால் கணிக்க முடியவில்லை.

தீரன் அங்கிருந்து நகர்ந்தான். ரியாவுக்கு ஏதோ தப்பாகப் பட்டது. முகேஷ் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தான். அகலிகா அப்படியே தலைகுனிந்து அமர்ந்து, தன் புடவைத் தலைப்பை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் புரிந்தது, தீரன் அவளை அவ்வளவு எளிதில் விட்டுவிடப் போவதில்லை.

இந்த இரவு… அவளது வாழ்க்கையின் மிகக் கொடுமையான இரவாக மாறப்போகிறது என்று பயந்தாள்.

முகேஷ் அகலிகாவை பார்த்தான் ஏதோ சரி இல்லை என்று அவனுக்கு தோன்றியது.

“ரியா! ஏன் தீரன் ஒரு மாதிரி பிஹேவ் பண்ணிட்டு இருக்கான், என்ன ஆச்சு அவனுக்கு ” என்றான்.

“தெரியல முகேஷ்,இங்க வர வரைக்கும் கூட நல்லா தான் இருந்தான். எனக்கே தீரன் பேசுறது சரி இல்லாதது போல தோணுது” என்றவள் “என்ன போட்டோ அது அஹி! உன்னோட பர்சனல்ன்னு சொல்றான் தீரன் அப்பறோம் எப்படி அவன்கிட்டே உன் போட்டோ இருக்கு” என்றாள்.

அந்த கேள்வியை அகலிகா சற்றும் எதிர்பார்க்கவில்லை, ரியாவின் கேள்விக்கும், முகேஷின் பார்வைக்கும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் முகம் வியர்வைத்துளியால்  நனைந்தது

“ரியா! அந்த போட்டோ.. அது நான்… தீரன்” என்று வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு அவள் பேச..

“ஏன் அஹி! ரியா கேள்விக்கு பதில் சொல்ல இவ்ளோ தயங்குற” என்று வெளியிலே சென்றிருந்த தீரன் திரும்பி உள்ளே நுழைந்தான்.

அவனைப் பார்த்ததும் இன்னும் பதட்டம் அதிகம் ஆனது அகலிகாவுக்கு , இல்லை வேண்டாம் என்று அவள் தலையை இடவலமாக ஆட்ட..

“என்ன வேணாம், அதெல்லாம் ஒன்னும் இல்ல அந்த போட்டோவை பார்த்தா ரியா, முகேஷ் ரெண்டு பேருக்குமே என்னனு புரிஞ்சிரும் ” என்றவன் மொபைலை தீரனிடம் நீட்டி “நீயே பாரு முகேஷ் அஹி எப்படி இருக்கான்னு”

ரியாவுக்கும் அந்த போட்டோவை பார்க்கும் ஆர்வத்தில் எழுந்து முகேஷின் பின்னால் சென்று நின்றாள் அவன் கையில் தீரனின் போன் திரையில் தெரிந்த அகலிகாவின் போட்டோவைப் பார்த்ததும் வாயடைத்துப் போனாள் . அந்த போட்டோவை பார்த்து முகேஷும் அதே நிலையில் தான் இருந்தான்.

அகலிகாவின் இதயம் நின்று விடுவது போல இருந்தது அவர்களின் பார்வை. அதே பயத்தோடு திரும்பி தீரனைப் பார்த்தாள். அவனோ மிகவும் சாதாரணமாக அகலிகாவை கடந்து வந்து அவள் அருகில் இருந்த சேரில் அமர்ந்தவன் .

“என்ன ரெண்டு பேரும் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க. உங்களுக்கு தெரியாத விஷயம், நீங்க பாக்காத விஷயம் எனக்கு மட்டும் தான் தெரியும். குறிப்பா முகேஷ் நீ பார்க்காத மொத்தத்தையும் முழுசா நான் பார்த்திருக்கேன்” என்று சிரித்தான்.

அவ்னின் இந்த இரட்டை அர்த்த பேச்சு ரியா, முகேஷ் இருவரையும் குழப்பியது, தீரன் என்ன சொல்கிறான், எதை பற்றி பேசிடுகிறான் என்று குழம்பினார்கள்.

அதே குழப்பமான முகத்தோடு தீரன் அருகில் இதயம் நின்றுவிடுமோ என்ற ரீதியில் அமர்ந்து இருந்த அகலிகாவை பார்த்தனர்.

அந்த பார்வையில் அவள் நிலைகுலைந்து போனாள் . இன்றோடு இத்தோடு அவள் பற்றிய பார்வை அவர்களிடம் இருந்து மாறுபடும் என்று உணர்ந்தாள் .

“சொல்லு அஹி! ஏன் எதுவும் பேசமாட்டேங்குற? “என்றான் முகேஷ்.

“அஹி! இந்த போட்டோல நீ போட்டிருக்க டிரஸ்” என்ற ரியா மீண்டும் மொபைலை பார்த்துவிட்டு அகலிகாவை பார்க்க…

அவள் தீரனைப் பார்த்தாள். அந்த பார்வையில் “என்னை ஏண்டா இப்படி எல்லாம் கொடுமை பண்ற?” என்று கேட்பது போல இருந்தது,

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured