logo

sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
161
கையில் இருந்த உத்தமனை அப்படியே தரையில் விட்டான் ரத்தன்

"அம்மாஆ!" என்று அலறலோடு உத்தமன் கீழே கிடக்க...

அந்த சத்தத்தில் தூக்கம் களைந்து எழுந்த சாத்விகா அங்கே நின்று இருந்த ரத்தனை பார்த்து அதிர்ந்தாள்.

"டேய் நீ என்ன டா இங்க பண்ணிட்டு இருக்க?" என்றான் அவனை முறைத்து.

"நீ தான் டா எனக்கு போன் பண்ணி , நான் சென்னை போறேன். வாரத்துக்கு எப்படியும் 2,3 நாள் ஆகும். நான் வர வரைக்கும் சைட்ல வேலை எல்லாம் சரியா நடக்குதுன்னு பாத்துக்க சொன்ன. அப்படியே தங்கச்சியும், அம்மாவும் வீட்ல தனியா இருப்பாங்க, நீ போய் நைட் மட்டும் வீட்ல ஸ்டே பண்ணிக்கன்னு சொன்ன.." என்றான் இடுப்பை தேய்த்துக்கொண்டே எழுந்து.

இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதை அரைதூக்கத்தில் பார்த்துக்கொண்டு இருந்த சாத்விகா "ரெண்டு பேரும் சண்டை போன்றதா இருந்தா வெளிய போய் சண்டை போடுங்க . ராத்திரியில் தூக்கத்தை கெடுத்துட்டு" என்று இருவரையும் முறைத்தவள் மீண்டும் போர்வையை போர்த்திக்கொண்டு திரும்பி படுத்துக்கொண்டாள்.

"அடிப்பாவி, இங்க ஒருத்தன் கீழ விழுந்து அடிபட்டு கிடக்குறேன். என்ன எதுன்னு கேக்குறாளா பாரு. இந்த நேரம் ஏதாவது திருடன் வந்திருந்தா அப்பவும் தூக்கம் வருதுன்னு இழுத்து போர்த்தி படுத்திருப்பா போல.. இவளுக்கு காவல் வேற.." என்று நினைத்த உத்தமன் திரும்பி ரத்தனை முறைத்து .

"உன் பொண்டாட்டியை பாக்காம இருக்க முடியாலையின்னு தானே போன கையோட கிளம்பி வந்திருக்க... பாரு உன் பொண்டாட்டி உன்மேல வெச்சிருக்க பாசத்தை. நீ இப்படி திடுதிப்புன்னு வந்து நிக்குறதை பார்த்து ஷாக் ஆவா.. சர்ப்ரைஸா இருக்கும்னு நினைச்சு தான் இந்த நேரத்துல வந்த.. அதுக்கு ரியாக்ஷ்ன் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுதா..." என்றவன் .

"வந்துட்டான் சென்னையில் இருந்து என் தூக்கத்தை கெடுக்குறதுக்குன்னே... கனவுல அந்த பக்கத்து வீட்டு ஆன்டி வந்து அப்போ தான் என் பக்கத்துல உக்காந்துச்சு. அது ஏதோ பேச வந்துச்சு அதுக்குள்ள இவன் வந்து என்னை தூக்கிட்டு உள்ள வந்துட்டான் " என்று நினைத்தவன்.

"ஆமா.. இவன் எதுக்கு என்னை ஹால்ல இருந்து பெட் ரூம் தூக்கிட்டு வந்தான்" என்று கேட்டுக்கொண்டே திரும்பி ரத்தனை பார்க்க..

"டேய் இன்னும் ஏன் டா இங்கையே நிக்குற.. போ.. போய் தூங்கு . எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு" என்று உத்தமனை வெளியே தள்ள..

அவன் எதற்காக இவ்வளவு அவசரப்படுகிறான் என்று புரிந்து கொண்ட உத்தமன் நல்ல வேலை நான் தப்பிச்சேன். கொஞ்சம் விட்டிருந்தா தங்கச்சின்னு நினைச்சு என்னை ஏதாவது செய்திருப்பான் என்று நினைத்துக்கொண்டே அவர்கள் பெட் ரூமை விட்டு வெளியே வந்தவன் திரும்பி ரத்தனை மேலிருந்து கீழாக பார்த்தான்.

"என்ன டா?" என்றான் கடுப்பாக.

"நீ தங்கச்சியை டையார்ட் ஆக்க தான் சென்னையில் இருந்து இவ்ளோ அவசரமா வாதிருக்கேன்னு எனக்கு தெரியும்" என்றான்.

"அதான் தெரிஞ்சிருச்சுல்ல கிளம்பு" என்று பெட் ரூம் கதவை அடைக்க..

இங்கே கதவை சாத்திவிட்டு உள்ளே வந்த ரத்தன் கட்டிலில் அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்த சாத்விகாவை பார்த்தான்.

அந்த பெட் லேம்ப் வெளிச்சத்தில் தெரிந்த அவள் முதுகும், இடையும் அவனை அருகே வர சொல்லி தூண்டியது.

சட்டையை வேகமாக கழட்டிவிட்டு பேண்டையும் கழட்டியவன் வெறும் பாக்சரோடு சென்று கட்டிலில் படுத்தவன் குளிருக்கு இதமாக போர்வையை அவளுக்கும் சரியாக போர்த்திவிட்டு தானும் போர்த்தியவன் அந்த குளிரை தணிக்க அவளை அணைத்துக்கொண்டு படுத்தான்.

ரத்தன் அணைத்த அடுத்த நொடி தன் மேல் இருந்தவனின் கையை வேகமாக தட்டி விட்டவள் திரும்பி அவனை பார்த்து "தள்ளி போய் படுத்திரு டா... நானே செம்ம காண்டுல இருக்கேன்" என்றாள் கோபமாக.

"ஏய் பம்பர குட்டி , என்ன டி இது உன்னை பார்க்கணும்னு ஆசை ஆசையா போன கையோட கிளம்பி இந்த அர்த்தராத்திரியில் வந்திருக்கேன். என்னை இப்படி தள்ளி போய் படுக்க சொல்றியே" என்றவன் .

"வா டி.. " என்று அவள் இடையில் கை கொடுத்து தன் பக்கம் இழுத்து அணைத்தான்.

"ம்ம்.. ஹும் .. விடு.. விடு டா என்ன.. நீ எதுக்கு இப்படி ராத்திரியோட ராத்திரியா கிளம்பி வந்தேன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? நான் உனக்கு சர்ப்ரைஸ் வெச்சிருந்தேன்னு சொன்னேனே.. அதை என்னனு தெரிஞ்சுக்கற ஆர்வத்துல தான் நீ இப்படி அவசரமா கிளம்பி வந்திருக்க... என்னை பார்க்க ஒன்னும் இல்ல.." என்று அவன் கைவளைவில் இருந்து தன்னை பிரிக்க முயற்சித்த படி பேசினாள்.

"அதுவும் தான் டி காரணம். ஆனா உண்மையிலேயே நான் உன்னை பார்க்க தான் இவ்வ்ளவு ராத்திரியில் கிளம்பி வந்திருக்கேன்" என்று குலைந்தவன்.

"இந்த குளிருல உன்னை தேடி வந்திருக்கேன் . எனக்கு சூடேத்துறதை விட்டுட்டு இப்படி முரண்டு பிடிக்காத டி பம்பரக்குட்டி..." என்று அவளை இழுத்து அணைத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

"குளிருதுன்னுட்டு அப்பறோம் ஏன் டா வெறும் ஜட்டியோட வந்து என் பக்கத்துல படுத்திருக்க.. போய் ட்ரெஸ்ஸை போட்டுட்டு வா.. குளிராது . என்னை விடு எனக்கு தூக்கம் வருது " என்றவள் தன் உடலில் மேய்ந்து கொண்டு இருந்த அவன் கையை விலக்கிவிட்டு அவன் மீது இருந்த போர்வையை மொத்தமாக இழுத்து போர்த்தி படுத்துக்கொண்டாள் .

போர்வை விலகியதும் குளிரெடுக்க.. "ஷ்...அப்ப்பா .. என்ன இப்படி குளிருது" என்று அவள் போர்த்தி இருந்த போர்வைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு சாத்விகாவை இருக்க அணைத்தவன் "ஏய் பம்பரக்குட்டி சாரி டி.. நான் உன்கிட்டே சொல்லாம கொள்ளாம கிளம்பி போனது தப்பு தான் . அந்த குணா திடீர்னு வந்து கபிலன் அங்க ஒரு பொண்ணுகூட பார்க்கு பீச்சுன்னு சுத்திகிட்டு இருக்கான். ஆபிசுக்கே சரியா வரத்து இல்ல.. நீ கிளம்பி உடனே சென்னை வா.. இல்லேன்னா கபிலை கையும் களவுமா என் அம்மா, அப்பாகிட்டே மாட்டிவிட்டுடுவேன்னு வந்து நிக்குறான். அவன் அப்படி சொன்னதும் நான் என்ன செய்றது , என் அம்மாவை பத்தி உனக்கே நல்லா தெரியும். அவங்க காதுக்கு விஷயம் போயாச்சுன்னா அப்பறோம் கபிலன் பாவோம் தானே அதான் உன்கிட்டே கூட சொல்ல முடியல கிளம்பி சென்னைக்கு போய்ட்டேன்" என்றான்.

ரத்தன் சொன்னதை எல்லாம் கேட்ட சாத்விகா "கபிலனை பார்த்திங்களா? என்ன சொன்னாரு அவர்? அவரை யாரை லவ் பண்றாருன்னு உங்களுக்கு தெரியுமா?" என்று எதுவும் தெரியாதவள் போல பேசினாள்.

"அட அவசரப்பட்டு கபிலன் காதல் விவகாரத்தை சொல்லிட்டோமே.. " என்று யோசித்தவன்.

"அது.. நான் அவனை கண்டிச்சிட்டு தான் வந்தேன். அவன் யாரை காதலிக்குறான். என்ன பண்ணிட்டு இருக்கான்னு எல்லாம் கேட்கல.." என்றான்.

"என்கிட்டையே மறைக்குறியா டா நீ... என் தங்கச்சியை கபிலனை காதலிச்சு கைக்குள்ள போட்டுக்க சொன்னதே நான் தான். அவளும் நான் போட்ட பிளான் படி அடுத்த கட்டத்துக்கு போய்ட்டா.. ஆனா என்ன அந்த கபிலனை காதலிச்சா மட்டும் பிளான் வேலை செய்யாதே.. அவனை கல்யாணம் செய்துகிட்டா தானே எல்லாம் சரியா நடக்கும்" என்று யோசித்தவர் படுத்திருந்தாள்.

"என்ன பம்பரக்குட்டி யோசனையில் இருக்க.. " என்றான்.

"ம்ம்.. அது ஒண்ணுமில்ல.. ஆமா நீங்க கபிலனை ஆபிஸ்ல மீட் பண்ணிங்களா? இல்ல வீட்லையா? " என்றாள்.

"ஏன் ஆஃபீசில தான் " என்றவன் அவள் இடையை வருடிக்கொண்டு இருந்தான்.

"இல்ல பூமிகாவை பார்த்திங்களா? அவ எப்படி இருக்கா? நான் அவளை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அதான் கேட்டேன்" என்றாள்.

"ம்ம்ம்.. பார்த்தேனே.. அவங்க ரெண்டு பேரையும் பார்த்து பேசிட்டு தானே கிளம்பினேன்" என்றான் .

"யாரு ரெண்டு பேரையும்?" என்றாள் உள்ளுக்குள் தன்னையும் அறியாமல் உலரும் தன் கணவனை ரசித்து சிரித்தபடி.

"அஹ்.. அது கபிலனை பார்த்துட்டு அப்படியே பூமிகாவையும் பார்த்தேன்.அதான் ரெண்டு பேரையும் பார்த்து பேசிட்டு வந்தேன்னு சொன்னேன்" என்றான்.

"சரி" என்று தலையை ஆட்டியவள் "நான் தூங்குறேன்" என்றாள் மீண்டும்.

"ஏய் என்ன டி நான் உனக்காக தான் வந்திருக்கேன்னு சொல்றேன் நீ தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு இருக்க... இங்க வா..." என்று அவளை தன் பக்கம் இழுத்து சாத்விகாவின் இடையை இருக்கி அணைத்தவன் அவள் இதழில் முத்தம் வைக்க துவங்கினான்.

இதற்கு மேல் ரத்தனிடம் வீம்பு பிடிக்க முடியாது . அவன் பொறுமையை சோதித்தது போதும் என்று அவன் முத்தத்திற்கு இசையை துவங்கினாள்.

இதழ் அவள் இதழில் பொருந்தி இருக்க.. அவன் கைகள் அவள் ஆடையை களைவதில் மும்முரமாக இருந்தது.

அவனை தன்னிடம் இருந்து விலக்கியவள் .

"டேய் புருஷ்! " என்றாள்.

"என்ன டி புதுசா புருஷ்னு சொல்ற.."

"ஏன் எனக்கு பிடிச்சிருக்கு கூபிட்றேன்"

"சரி உன்னிஷ்டம் கூப்டுக்கோ.. இப்போ வா..."

"ஒரு நிமிஷம் இரு டா..."

"என்ன டி..."

"ம்ம்ம்.. உனக்கு என்னை பிடிக்குமா?"

"பிடிக்காம தான் இவ்ளோதூரம் உன்னை தேடிட்டு வந்தேனா?"

"ம்ச்.. ஒழுங்கா பதில் சொல்லு" என்று கட்டிலில் இருந்து இறங்கி நின்றாள்.

"ஏன் டி இறங்கிட்ட.. வேணாமா?" என்றான் ஏக்கமாக.

"வேணும் "

"அப்போ வா..."

"ம்ம் .. வரேன் . நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..." என்று சொல்லிக்கொண்டே தன் சேலையில் குத்தி இருந்த பின்னை கழட்டினாள்.

அதில் அவள் மேல் சேலை சரிந்து தரையில் விழுந்தது.

அதை பார்த்து ரத்தனின் கண்கள் அவள் அழகை மறைத்து இருந்த ஆடையை வெறுத்தவன். கட்டிலில் இருந்து எழுந்து அவளிடம் செல்லப்போக..

"ம்ம்..ம்ம்.. அங்கையே நில்லுங்க... நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க.. நானே இன்னிக்கு உங்களுக்கு தேவையானதை கொடுக்கிறேன் " என்றாள்.

"நிஜமா சொல்றியா டி என் அச்சுவெல்லமே... " என்று அவளை கொஞ்ச போக..

"அங்கையே நில்லுங்கனு சொன்னேன்ல..." என்று அவனை அதட்டினாள்.

"சரி சரி வரல.. இப்போ உனக்கு என்ன தெரியணும்" என்றான்.

"என்னை எவ்ளோ புடிக்கும் டா என் தங்கம் " என்று கொஞ்சினாள்.

அவள் மனதில் ரத்தனை முழுவதுமாக தன் கைவளைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு முடிவோடு அவனை முழுவதுமாக மனதாலும், தன் உடலாலும் ஆக்கிரமிக்க எண்ணி அவனை நெருங்க ஆரம்பித்துவிட்டாள்.

"உன்னை மட்டும் தான் புடிக்கும் டி.. பம்பரக்குட்டி "

"அப்படியா?" என்று கேட்டுக்கொண்டே முழு சேலையையும் அவிழ்த்துவிட்டு அவன் முன் பாவாடை ரவிக்கையுடன் நின்று ரத்தனை மேலும் சூடேற்றினாள்.

அவளை இப்படி பார்த்தும் அருகில் செல்ல முடியாமல் பெருமூச்சுவிட்டவன் "நிஜமா டி.." என்றான்.

"அப்போ என்னை எவ்ளோ புடிக்கும்னு காட்டு பாக்கலாம் " என்றவள் ஜேக்கெட் ஹூக்கை கழட்ட கையை வைத்தவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

" காட்டுறதா? நீ முதல்ல காட்டு டி.. இப்படி பாதி பாதியா கழட்டி என்னை மூடேத்தாத வா டி இங்க " என்று மெத்தையை தட்டி அவளை அழைத்தான்.

"என்னை எப்படி புடிக்கும்னு எனக்கு புரிய வை மாமா... அப்போதான் நான் அங்க வருவேன்" என்று அவள் ஜக்கெட்டின் முதல் இரண்டு ஹூக்குகளை அவிழ்க்க..

"இங்க பாரு டி என் அருமை பொண்டாட்டி நீ இப்படி என்முன்னாடி நிக்குறதுனால நான் சொல்லல நிஜமாவே நான் உன்னை ரொம்ப அதிகமா நேசிக்குறேன். அதை உனக்கு புரிய வைக்கணுமா? " என்று அவர்கள் அறையை சுற்றிலும் பார்த்தவன் அங்கே கொடைக்கானல் குளிரை சமாளிக்க அந்த அறையை சூடேற்றி எரிந்து கனல் விட்டிருந்த தீக்கங்குளை பார்த்தவன் யோசிக்காமல் எழுந்து சென்று அந்த கங்குளை தன் கைகளில் எடுத்தவன்.

"எப்படி இந்த விறகு எரிந்து சாம்பல் ஆகிறதோ அது போல நான் செத்து என் உடம்பு சாம்பலானாலும் உன் மேல நான் வெச்சிருக்க காதல் எப்பவும் குறையாது" என்று தீக்கங்குகள் அவன் கைகளை சுட்டிருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சாத்விகா கேட்ட கேள்விக்கு பதிலளித்தான்.

"என்ன பண்ணி வெச்சிருக்க டா நீ.. முதல்ல அதை கீழ போடு" என்று அப்படியே ஓடிவந்தவள் ரத்தன் கையில் இருந்த கங்குளை தட்டிவிட்டு அவன் கையை பார்த்தாள்.

ரத்தனின் கைகள் இரண்டிலும் தீக்கனல் பாட்டு உள்ளங்கை இரண்டும் பொசுங்கி இருந்தது.

"என்ன ரத்தன் இது இப்படியா பண்ணுவீங்க. நான் என்ன கேட்டேன் நீங்க என்ன பண்ணி வெச்சிருக்கீங்க.. " என்று பதறியவள் கண்களில் கண்ணீர் அவளையும் அறியாமல் வெளிவந்தது.

"இங்கையே இருங்க நான் போய் மருந்து ஏதாவது எடுத்துட்டு வரேன்" என்று அழுதபடி அங்கிருந்து செல்ல போக..

அவளை போகவிடாமல் இழுத்து அவள் இதழில் முத்தமிட துவங்கினான்.

 

Author: sinamikawrites
Article Title: ரத்தன் 30
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top