logo

sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
160
"டேய் என்ன டா நினைச்சிட்டு இருக்க... கால் பண்ணினா உன்னால போனை அட்டென்ட் பண்ண முடியாதா .. அப்படி என்ன டா தலை போற விஷயம். உன் பொண்டாட்டி திரும்ப திரும்ப போன் பண்ணுறாளே.. என்ன ஏதுன்னு கேக்காம அவன்கூட ஏன் டா கிளம்பி போன..." என்று கத்த ஆரம்பித்து இருந்தாள் சாத்விகா.

"ஏய் பம்பரக்குட்டி சொன்னா கேளு டி... நான் தான் சொன்னேனே.. ஒரு முக்கியமான விஷயமா கிளம்பி சென்னை வந்துட்டேன்னு சொன்னேனே ... நீ இப்படி கோபப்பட்டா என்ன டி பண்றது நான்"என்று சாத்விகாவை சமாதானம் செய்ய முயன்றான் ரத்தன் .

"என்ன அவசரமனா விஷயமா இருந்தாலும் நீ என்னை வந்து நேர்ல பாத்து சொல்லிட்டு போயிருக்கலாம்ல... உனக்காக நான் ஒரு சர்ப்ரைஸ் தரlaம்னு நினைச்சிருந்தேன் தெறியுமா " என்றாள் அவள் ஏமாற்றத்தை தன் குரலில் வெளிப்படுத்தி.

"சர்ப்ரைஸா! என்ன பம்பரக்குட்டி.. என்ன சர்பிரைஸ் வெச்சிருக்க எனக்கு சொல்லு.." என்றான் ஆர்வமாக.

"ம்ம்.. சொல்ல முடியாது.. நீ முதல்ல நேர்ல வா அப்பறோம் என்ன சர்ப்ரைஸ்ன்னு நான் உனக்கு சொல்றேன் " என்று போனை கட் செய்திருந்தாள் .

சாத்விகா காலை கட் செய்ததும் சிரித்தபடி தனக்கு எதிரே இருந்த கபிலன் பார்த்தான்.

அவன் ரத்தனை வித்தியாசமாக பார்த்துக்கொண்டு நின்று இருந்தான்.

"என்ன டா ?" என்று ரத்தன் அதிகாரமாக கேட்க.

"இல்ல.. இது என் அண்ணன் தானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு " என்றான் கபிலன்.

"ஏன்? என்ன சந்தேகம் " என்று அவனை கேள்விகேட்டபடி கையில் இருந்த போனை மேஜையில் வைத்தவன் உடலை முறுக்கியபடி சாத்விகாவின் நினைவுகளில் மூழ்கியவனாக கேட்டான்.

ரத்தன் கேள்வி கேட்டுவிட்டு எங்கோ வெறித்தபடி அமர்ந்து இருக்க...

"ம்ம்.. உனக்கு சிரிக்க தெரியும்னு நான் இப்போத்தானே தெரிஞ்சிருக்கேன்" என்றவன் ரத்தனின் முகத்தை பார்க்க...

அவனோ துருவன் பேசியது காதில் வாங்காமல் "என் பொண்டாட்டி என்னவோ சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்னாளே.. என்னவா இருக்கும்? இந்த குணா கூப்பிடானு அவசரமா அவகிட்டே சொல்லாம கிளம்பி இங்க வந்துட்டேன். என்ன விஷயமா இருக்கும்" என்று யோசித்துக்கொண்டு இருந்தான்.

அப்போது "மே ஐ கம் இன் சார்" என்று பரிட்சயமான ஒரு குரல் ரத்தன் காதுகளில் விழ..

"எஸ்..." என்று சொல்லிவிட்டு வாசலை பார்க்க.

அவன் கேபின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் பூமிகா.

அவளை பார்த்ததும் "வா பூமிகா , எப்படி இருக்க? உனக்கு இங்க வேலை எல்லாம் பழகிருச்சா? எந்த பிரச்னையும் இல்லையே?" என்றான் அக்கறையாக.

"வேலை எல்லாம் பழகிகிட்டேன் மாமா. எல்லாமே இவரு எனக்கு சொல்லி கொடுத்தார் " என்று கபிலனை அவர் இவர் என்று மரியாதையாக பேசினாள்.

"என்ன நம்ம இவளை வேளைக்கு சேர்த்தின அப்போ இவனை இவ்ளோ மரியாதையா கூப்பிட்றா" என்று யோசித்தவனுக்கு ஏதோ புலப்படுவது போல இருக்க.

"டேய் கபிலா! நீங்க ரெண்டு பேரும் தான் லவ் பண்றிங்களா?" என்றான் .

"அண்ணா! எப்படி நான் சொல்லாமலேயே கண்டு பிடிச்சீங்க?" என்றான் கபிலன் ஆச்சார்யமாக.

"அதான் உங்க ரெண்டு பேர் முகத்துலையும் எழுதி ஒட்டிருக்கே" என்றவன்.

இருவரையும் பார்க்க..

கபிலனும், பூமிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களெலேயே காதல் மொழி பேசிக்கொண்டு இருந்தனர்.

"அது சரி ரெண்டு பேரும் ரொம்ப தீவிரமா காதலிக்க ஆரம்பிச்சிருக்கீங்க போல.. நல்ல விஷயம் தான் " என்று எழுந்து வந்தவன் இருவருக்கும் இடையில் வந்து நின்று இருவரையும் பார்த்தான்.

அப்போது பூமிகா "மாமா, அக்காகிட்ட நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ற விஷயத்தை சொல்ல வேண்டாம். தெரிஞ்சா அவ என்னை வேலைக்கே போக வேணாம்னு சொல்லிருவா. என்னை திட்டுவா" என்றாள்.

"ஓஹோ! உங்க அக்காவுக்கு தெரிய வேணாம். அப்போ எனக்கு தெரிஞ்ச பரவல்லையா? நான் எதுவும் சொல்ல மாட்டேனா?" என்றான் நக்கலாக.

"அய்யோ! அப்படி எல்லா இல்ல மாமா. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு தெரிஞ்சதும் நீங்க எங்களை எதுவும் சொல்லாம இருந்ததுளையே எங்க காதலுக்கு நீங்க பச்சை கொடி காட்டிட்டீங்கன்னு தெரிஞ்சிருச்சு. என் அக்காவும் உங்களை மாதிரி இருந்தா பரவால்ல.. அவ ஏதாவது சொல்லுவா. அதான்..." என்று இழுத்தாள்.

"சரி சரி நான் இப்போதைக்கு எதுவும் சொல்லல.. நீங்க ரெண்டு பேரும் குணா கண்ணுல மாட்டின மாதிரி நம்ம வீட்டு ஆளுங்க கண்ணுல எதுவும் எக்கு தப்பா மாட்டிக்காதீங்க "என்றவன் தன் வாட்சில் மணியை பார்த்தான்.6 ன்று என்று காட்டியது.

"நான் சொன்னதை நியாபகத்துல வெச்சுக்கோங்க. நானும், சாத்விகாவும் இன்னும் 1மாசத்துல சென்னை கிளம்பி வந்திருவோம். நாங்க வந்த பிறகு நானே நம்ம வீட்டு ஆளுங்ககிட்டே பேசி உங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரத்துல கல்யாணம் செய்து வெக்குறேன்" என்றான் ரத்தன்.

"அண்ணா எல்லாம் ஓகே தான் . ஆனா இந்த குணாவுக்கு தான் எல்லா விஷயமும் தெரியுமே. அவன் நம்ம வீட்டு ஆளுங்ககிட்டே வத்தி வெச்சுட்டா என்ன செய்றது" என்றான் கபிலன்.

"அவனை பத்தி நீ ஒர்ரி பண்ணிக்காத . அவனை எப்படி உன் விசயத்துல தலையிடாம ஆப் பண்ணி வெக்குறேன்" என்றவன்.

"சரி நான் கிளம்பறேன். இப்போ போனா தான் நைட்க்குள்ள கொடைக்கானல் போக முடியும்" என்றான்.

"அண்ணா, என்ன இது காலையில் தான் வந்திங்க. இப்போவே கிளம்பறேன்னு சொல்றிங்க. வீட்டுக்கு வரலையா? அம்மா, அப்பா, பாட்டியை பார்க்கல.." என்றான் கபிலன்.

"இல்ல டா நான் ஒரு முக்கியமான வேலையை சரியா கவனிக்காம இந்த குணா கூப்பிட்டானு அப்படியே விட்டுட்டு வந்துட்டேன். அதை முதல்ல என்னனு பார்க்கணும். நான் இந்த சாட்டர்டே , சண்டே பிரீயா தான் இருப்பேன். நானும் , உன் அண்ணியும் அப்போ வந்து எல்லாரையும் பார்த்துட்டு வந்துடறேன்" என்றவன் போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

ரத்தன் கிளம்பும் வரை ஒழுங்கு பிள்ளை போல நின்று இருந்த கபிலன் அடுத்த நொடி பூமிகாவை கட்டி அணைத்து இருந்தான்.

இந்த திடீர் அணைப்பில் திக்குமுக்கடி போனவள் "ஐயோ! என்னங்க இது .. விடுங்க... யாராவது வந்திற போறாங்க" என்று நெளிந்தாள் அவனை இறுக்கமான அணைப்பில்.

"யாரும் வர மாட்டாங்க . எல்லாம் ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போற நேரம் ஆச்சு" என்று மேலும் இறுக்கி அணைத்தவன்.

அதில் வெட்கம் வந்தவளாக முகத்தை தாழ்த்திக்கொள்ள.. பூமிகாவின் முகத்தை தன் விரல் கொண்டு நிமிர்த்தியவன் "என்ன வெட்கமா?" என்றான் சிரித்துக்கொண்டே.

படபடக்கும் விழிகளில் அவன் முகத்தை ஏறிட்டவள் தான் என்ன காரியத்திற்காக இங்கே வந்திருக்கிறோம் என்பதை மறந்து அவளையும் அறியாமல் கபிலனின் இந்த அழகிய முகத்தை ரசித்தாள்.

அவள் அப்படி பார்க்கவும் கபிலன் அவள் மூக்கோடு தன் மூக்கை உரசியவன் "என்ன அப்படி பாக்குற.."என்றான்.

அவன் கேள்வியில் நினைவு வந்தவளாக "ம்ஹும்.. இல்ல.. என்ன விடுங்க . நான் வீட்டுக்கு போறேன்" என்றாள்.

"என்ன டி அவசரம் . நமக்கு இப்படி தனியா நேரம் கிடைக்குறதே பெருசு . இப்படி அவசரமா நீ வீட்டுக்கு போய் என்ன பண்ண போறே... கொஞ்ச நேரம் இரு பேசிட்டு இருக்கலாம். அப்பறோம் நானே உன்னை வீட்ல ட்ரோப் பண்றேன்" என்றான்.

"பேசிகிட்டு இருக்கலாம்னு சொல்றிங்க. அப்பறோம் இப்படி கட்டிபிடிச்சிட்டு இருந்தா என்ன செய்றது" என்றாள் .

"ஏன் கட்டிபிடிச்சிட்டே பேசிட்டு இருந்தா என்ன.. இப்படியே பேசலாமே ... " என்று பூமிகாவை அணைத்தபடி அப்டியே நடந்து சென்று சோபாவில் அமர்ந்தவன் அவளை தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.

அதில் நெளிந்தவள் "என்ன விடுங்களேன் கபிலன்... நான் இங்க பக்கத்துல உக்காருறேனே... இப்படியே என்னை பிடிச்சு வெச்சிருந்தா எப்படி பேச முடியும். நீங்க இப்படி என்னை விடாம கட்டிக்கிட்டு இருந்தா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.. " என்றாள்

"ஆனா எனக்கு நல்லா இருக்கே.. உன்னை இப்படி கட்டிபிடிச்சுட்டே இருக்கனும் போல இருக்கு எனக்கு " என்றவன்.

"இப்போ என்ன என்னை பார்த்துட்டே பேசணும் உனக்கு அவ்ளோ தானே.. " என்று அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து இருந்தவளை தன்னை பார்க்குமாறு திருப்பி தன் மடியிலேயே அமர வைத்தவன்.

"இப்போ ஓகேவா?" என்றான்.

"ம்ஹும் இல்ல.. என்னை இறக்கி விடுங்க ப்ளீஸ்..." என்று அவள் குழைய ..

"போ.. எவ்ளோ ஆசையா என் மடியில் உன்னை உக்கார வெக்குறேன் . நீ என்னடான்னா ... " என்று கோபம் கொண்டவன் பூமிகாவை தன் மடியில் இருந்து இறக்கி சோபாவில் அமரவைத்துவிட்டு முகத்தை தூக்கிவைத்தபடி திரும்பி அமர்ந்துவிட..

அதை பார்த்தவள் "அப்பாடா.. இவனை சமாளிக்குறதே என் வேலையா போயிருச்சு. கல்யாணம் ஆகுறதுக்கு முன்னையே என்னை விடமாட்டேங்குறான். இவனுக்கு மட்டும் கழுத்தை நீட்டிட்டோம் அப்பறோம் அட்டை மாதிரி என்மேல ஓடிக்கிட்டே திரியுவான். அக்கா நினைச்ச மாதிரி சீக்கிரம் நம்ம வந்த வேலை முடிஞ்சுதுன்னா... இவன்கிட்டே இருந்து நான் தப்பிச்சேன்" என்று நினைத்தவள்.

"இப்போ வேற இவன் மூஞ்சியை தூக்கி வெச்சிருக்கான். இனி இதை சமாளிக்கும் " என்று நினைத்தவள் .

"கபிலன்.. கபிலன்.. " என்று அவன் தோளை தட்டி அழைத்தாள்.

அவள் கையை தட்டி விட்டவன் எதுவும் பேசாமல் திரும்பி அமர்ந்து இருக்க..

"கபிலன் என்னை பாருங்க.. ப்ளீஸ்.. எனக்கு கூச்சமா இருக்குன்னு தானே சோபாவுல உக்காருறேன்னு சொன்னேன். அதுக்கு போய் நீங்க கோவிச்சுக்கலாமா .." என்றாள்.

"நான் ஏன் கோபிக்கணும் அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உனக்கு வேற வீட்டுக்கு போகனும் நேரம் ஆச்சு நீ கிளம்பு நான் உன்னை உன் வீட்ல ட்ரோப் பண்ணிட்டு கிளம்பறேன்" என்றவன் சோபாவில் இருந்து எழுந்திருக்க...

"என்ன கபிலா நீ இப்படி பிடிவாதம் பிடிக்குற.. நான் பாவம் இல்ல.. நீ என்னை பார்த்து பேசு இப்படி முகத்த்தை தூக்கி வைக்காத... " என்று அவன் சட்டையை பிடித்து பூமிகா இழுக்க...

அவன் எழுந்த வேகத்தில் இவள் இழுக்கவும் கால் இடறி திரும்பி அவள் மேலேயே பொத்தென விழ ...

அவனை பிடிக்க முடியாமல் அப்படியே சோபாவில் சரிந்தாள் பூமிகா.

இருவரின் முகமும் நெருக்கமாக இருக்க...

இருவரின் மூச்சுக்காற்றும் அந்த நெருக்கத்தில் சூடாக வெளியேறியது .

அவள் முகத்தை ஒரு நிமிடம் ரசித்தவன் அடுத்த நொடியே.. "சாரி தெரியாம வந்து உன் மேல விழுந்துட்டேன். உனக்கு தான் இதெல்லாம் பிடிக்காதே " என்று அவள் மேல் இருந்து கபிலன் ஈழ முயற்சிக்க..

அவன் சட்டையை பிடித்த்து தன் பக்கம் இழுத்தவள் கபிலனின் முகத்தை பிடித்து அருகில் இழுத்து அவன் இதழில் முத்தம் வைத்தாள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத கபிலன் அவள் கொடுத்ததை இவன் தொடர்ந்தான்.

...

இங்கே நள்ளிரவு போல கொடைக்கானல் வந்திருந்த ரத்தன் சத்தமின்றி வீட்டு கதவை திறந்து கொண்டு பூனை போல உள்ளே நுழைந்தான்.

உள்ளே வந்ததுமே ஹாலில் போடப்பட்டு இருந்த இரண்டு சோபாவையும் பார்த்தான். அதில் ஒரு சோபாவில் சாத்விகாவின் அம்மா படுத்து உறங்கி இருக்க.. அவர் எதிரே இருந்த சோபாவில் சாத்விகா இழுத்து போர்த்தி படுத்திருந்தாள் .

"நான் இல்லாததுனால ரெண்டு பேரும் வெளிய படுத்து தூங்குறாங்க போல... " என்று நினைத்தவன்.

சாத்விகாவின் அம்மாவின் அருகில் வந்து அவருக்கு நன்றாக போர்த்தி விட்டவன்

"ஏய் பம்பர குட்டி எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்றேன்னு நீ சொன்னே இல்ல.. ஆனா இப்போ நான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க போறேன் " என்று கைகளை பரபரக்க தேய்த்துவிட்டவன் .

அந்த பெட் லாம்ப் வெளிச்சத்தில் சாத்விகா முழுவதும் போர்த்தி படுத்த்திருக்க... அவளை அப்படியே தூக்கினான். " என் செல்லக்குட்டி இப்படி வெயிட்டா இருக்கா..." என்று யோசித்தவன்.

"ம்ம்ம் இருக்கட்டும் அப்போதான் நல்லா மெத்து மெத்துன்னு இருப்பா..." என்று தூக்கிக்கொண்டு நேராக பெட் ரூம் கதவை திறந்து கொண்டு வந்தவன் அங்கே கட்டிலில் படுத்திருந்த சாத்விகாவை பார்த்து அதிர்ந்தான்.

"என் பம்பர குட்டி இங்க தூங்குறா .. அப்போ என் கையில ... " என்று திரும்பி தான் தூக்கி இருந்தவரை பார்க்க...

அப்போது பெட்ஷீட்டை விலக்கி தன் முகத்தை காட்டி ஈஈ... என்று பல்லைக் காட்டிக்கொண்டு இருந்தவரை பார்த்து அதிர்ந்து அப்படியே தரையில் போட்டுவிட்டான் ரத்தன் .


WHATSAPP CHANNEL

TELEGRAM LINK
 

Author: sinamikawrites
Article Title: ரத்தன் 29
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top