- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
சித்துவும், ரோஜாவும் அவர்களுக்காக ஹேரி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்து கொள்ள தயாராகிக்கொண்டு இருந்தனர்.
சித்து தயாராகி காத்திருக்க... ரோஜா அவளுக்காக இன்று ஷாப்பிங் செய்திருந்தவற்றில் இருந்து ஒரு உடையை தேர்ந்தெடுத்து அணிந்து வந்தாள்.
சிவப்பு நிற peplum midi அணிந்து வெளியே வந்தாள் .
ரோஜாவை அந்த ஆடையில் பார்த்த சித்து அவள் அழகில் சொக்கி தான் போனான்.
சோபாவில் போனை நோண்டிக்கொண்டு இருந்தவன் ரோஜா வந்ததும் அவனையும் அறியாமல் எழுந்து ரோஜா அருகில் சென்றவன் .
"வாவ்! கியூட்டி நீ இந்த ட்ரேஸ்ல ரொம்ப அழகா இருக்க.. " என்றான்.
"போங்க சின்னையா , எனக்கு வெட்கமா இருக்கு " என்று அவன் தோளில் இடித்தவள் வெட்கத்தில் தரையில் கால் கட்டை விரலால் கோலம்போட..
அவள் வெட்கத்தை ரசித்தவன் "இங்க பாரு கியூட்டி நீ போட்டிருக்க ட்ரெஸ்ஸுக்கும், என்னை சின்னையான்னு கூப்பிட்றதுக்கும் செட்டே ஆகல. இனிமேல் நீ என்னை சின்னையான்னு கூப்பிடாத எனக்கு அது பிடிக்கல" என்றான்.
"ஏன் சின்னையா இவ்ளோ நாளா நான் உங்களை அப்படித்தானே கூப்பிட்டிருக்கேன்" என்று அவனை பார்க்க..
"அது முன்ன... நீயும் நானும் கல்யாணம் செய்துகிறதுக்கு முன்ன நீ என்னை அப்படி கூப்பிட்டது சரி. ஆனா இப்போதான் நமக்கு கல்யாணம் ஆகிருச்சே." என்றான்.
"நம்ம கல்யாணத்துக்குப் பிறகும் நான் உங்கள அப்படித்தானே கூப்பிடறேன்" என்றாள்.
"அது எல்லாம் என்னவோ இருக்கட்டும் இனி நீ என்னை சின்னையான்னு கூப்பிட கூடாது கியூட்டி . என்னை வேற ஏதாவது நேம் வெச்சு கூப்பிடு " என்றான் கராறாக .
"இப்படி திடீர்னு சொன்னா நான் என்ன செய்றது சின்னையா" என்றவள்.
"கொஞ்சம் டைம் குடுங்க நான் யோசிக்கணும்" என்றாள் .
"சரி உனக்கு இங்க இருந்து வெளியே பார்ட்டி நடக்குற இடத்துக்கு போற வரை டைம் . அங்க போனதும் என்னை வேற நேம் சொல்லி கூப்பிடு இல்ல என் பேரையே சொல்லி கூப்பிட்டாலும் ஓகேதான் எனக்கு" என்றான்.
"என்னது பார்ட்டிக்கு போற வரை தானா டைம் கொடுப்பிங்க! அது எப்படி சின்னையா " என்று அவள் சிணுங்க ..
"ஹேய்! இப்போ எதுக்கு இப்படி சிணுங்குற.." என்று அவளை ஆழமாக பார்த்த்து ரசித்தவன்.
"இவ பேசுறது , பண்றது எல்லாம் என்னை என்னென்னவோ செய்யுதே.." என்று நினைத்தவன் தனக்கு வந்த எண்ணங்களை தலையில் கொட்டி அமைதிப்படுத்தியவன் தலையை அழுந்த கோதி ரோஜாவை பார்த்தான்.
அவளோ சித்துவை என்ன பெயர் சொல்லி அழைப்பது என்ற தீவிர யோசனையில் இருந்தாள். அதை கண்டு சிரித்தவன் "போலாமா கியூட்டி.." என்றான்.
உடனே "சின்னையா நான் உங்களை வேற பேர் சொல்லி கூப்பிடணும்னா நீங்களும் என்னை இனிமேல் கியூட்டின்னு கூப்பிடக்கூடாது. அப்போதான் நானும் உங்களை சின்னையான்னு கூப்பிட மாட்டேன்" என்றாள்.
"ஏன் அந்த பேருக்கு என்ன குரைச்சல் நல்லா தானே இருக்கு"என்றான்.
"நல்லா தான் இருக்கு.. ஆனா நீங்க உங்க பேன்ஸ் எல்லாரையும் அதுவும் குறிப்ப பொண்ணுங்களை கியூட்டினு தானே கூபிடறிங்க . அப்போ அவங்களும் நானும் ஒண்ணா?" என்றாள் சித்துவை பார்த்து.
ரோஜா சொன்னதும் தான் அதை உணர்ந்தவன் "நீ சொல்றது சரி தான் அவங்களும் நீயும் ஒன்னு இல்ல.. " என்றவன் .
"சரி உனக்கும் எனக்கும் பார்ட்டிக்கு போற வரைக்கும் டைம் . அங்க போனதும் நீயும் நானும் தனி தனியா வேற யார்கூடவாவது பேச போய்டணும்"என்றான்.
"ஏன் தனியா போகணும் சின்னையா" என்றாள் புரியாமல்.
"அப்போதானே உன்னை என்கிட்டேயும், இல்ல என்னை உன்கிட்டேயும் யாராவது கேட்டா தூரத்தில் இருந்து பேர் சொல்லி கூப்பிட முடியும். அப்போ என்ன பேர் வெச்சு நம்ம கூப்பிடறோம்னு தெரிஞ்சுக்கலாமே.. " என்றான் சிரித்துக்கொண்டே.
அவன் சிரிப்பை ரசித்தவள் "எப்படி எல்லாம் யோசிக்குறீங்க நீங்க..." என்றபடி அவனோடு பார்ட்டி ஹாலுக்கு நடந்தாள் .
இங்கே ராகுலும், ரித்திகாவும் சித்துவையும், ரோஜாவையும் எப்படி நடக்கப்போகும் பார்ட்டியில் வைத்து அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்துவது என்று பிளான் போட்டார்கள்.
"ரித்து, அந்த வேலைக்காரி என்னையும், உன்னையும் அதனை பேர் முன்னாடி கை நீட்டி அடிச்சதை என்னால தங்கிக்கவே முடியல.. " என்றான் ஆத்திரம் அடங்காதவனாய்.
"ஆமா ராகுல், சித்து என்னை எவ்ளோ கேவலமா பேசினான். அவனை விட இந்த ரோஜா செய்தது தான் என்னால தங்கிக்கவே முடியல " என்றாள்.
"எனக்கும் தான் ரித்து அவளை ஏதாவது நான் செய்தே ஆகணும் . அவளை பார்ட்டிக்கு வர மொத்த ஆளுங்க முன்னாடி அவ மறக்கவே முடியாத அளவுக்கு அவமான படுத்தனும். அப்படி அந்த ரோஜா அவமானப்படுறதை பார்த்து சித்து தலை குனியனும்" என்றான்.
"செய்லாம் ராகுல் அதுக்கு நான் ஏற்கனவே ஏற்பாடு பண்ணிட்டேன்" என்றாள்.
"அப்படியா! என்ன செய்திருக்க ரித்து" என்றான் ராகுல் ஆர்வமாக.
அவன் ஆர்வத்தை பார்த்து சிரித்தவள் பார்ட்டியில் வைத்து சித்துவையும், ரோஜாவையும் என்ன செய்யப்போகிறாள் என்று சொன்னதும் அதை கேட்டு ராகுல் மிகவும் சந்தோசப்பட்டவன்.
"அப்போ இன்னிக்கு பார்ட்டி கலை கட்டப் போகுது சீக்கிரம் வா போகலாம்" என்று அவளை அழைத்து சென்றான்.
இங்கே பார்ட்டிக்கு வந்திருந்தவர்களை சித்துவிற்கும், ரோஜாவிற்கும் அறிமுகம் செய்துவைத்தார் ஹேரி.
வந்திருந்தவர்களிடம் இருவரும் அறிமுகம் செய்துகொண்ட பிறகு ஏற்கனவே பேசி வைத்தது போல இருவரும் ஆளுக்கு ஒருபக்கம் பிரிந்து சென்று பேசிக்கொண்டு இருந்தனர்.
ஹேரியும் , ராபெர்ட்டும் தங்கள் தொழில் முறை சார்ந்த நட்பு வட்டத்தை சித்துவிற்கு அறிமுகம் செய்து வைத்தனர். அவர்களோடு பிசினஸ் விஷயமாகவும், தான் நடிக்க போகும் படத்தை பற்றியும் பேசிக்கொண்டு இருந்தான் சித்து.
இங்கே க்ளாராவுடன் சேர்ந்து ஜூஸ் குடித்துக்கொண்டு இருந்தாள் ரோஜா. அவரோடு பேசினாலும் சின்னையாவிற்கு பதிலாக என்ன சொல்லி அழைக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தது அவள் மனது.
"இந்த சின்னையாவோட ஒரே ரோதனையா இருக்கு . இப்படி திடீர்னு சொன்னா நான் என்னனு அவரை கூப்பிடறது. பேசாம சித்துன்னு பேரை சொல்லியே கூப்பிடலாமா?" என்று யோசிக்க..
"புருஷன் பேரை சொல்லுவாங்களா?" என்று தோன்றியது.
அவள் யோசித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிளாரா "என்ன ஆச்சு ரோஜா என்ன யோசனை?" என்றார்.
"கிளாரா நான் உங்ககிட்டே ஒன்னு கேட்டா தப்ப நினைச்சுக்க மாட்டீங்களே" என்றாள் .
"என்ன ரோஜா கேளு" என்றார்.
"உங்க ஹஸ்பண்ட்டை நீங்க என்ன சொல்லி கூப்பிடுவீங்க" என்றாள்.
"ராபெர்ட்டுன்னு சொல்லி தான் கூப்பிடுவேன். ஏன்?" என்றார்.
"உங்க வீட்டுக்காரரை பேர் சொல்லி கூப்பிடறீங்களே அது தப்பில்லையா?" என்றாள்.
அதில் சிரித்தவர் "இதில் என்ன இருக்கு. எனக்கு எப்படி தோணினாலும் நான் அப்படி கூப்பிடுவேன்" என்றார்.
"அப்போ எனக்கு எப்படி தோணுதோ அப்படி நான் சின்னையாவை கூப்பிடலாம்" என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது அங்கே ஹேரியின் மனைவி லிண்டா வந்தார்.
அவரை ரோஜாவிற்கு அறிமுகம் செய்துவைத்த கிளாரா "லிண்டா எப்படி இருக்க?" என்று அவரை நலம் விசாரித்தார்.
"ம்ம்... இருக்கேன்" என்று அவரிடம் முகம் கொடுத்து சரியாக பேசவில்லை லிண்டா.
அவர் குணம் அப்படி தான் என்று க்ளாராவிற்கு தெரியும் ஆனால் ரோஜாவிற்கு இது புதிதாக இருக்க அவள் எதுவும் புரியாமல் அவரை பார்த்தாள்.
"நீ தான் சித்துவோட மனைவியா?" என்றார் லிண்டா ரோஜாவை பார்த்து.
"அஹ் .. ஆமா " என்று தலையை வேகமாக ஆட்டினாள்.
"ஒரு பெரிய ஸ்டேட்டஸ் உள்ள இடத்துக்கு வந்து இப்படி எல்லார் மாதிரியும் ட்ரின்க் பண்ணாம , ஜூஸ் குடிச்சிட்டு இருக்க.. ஏன் இதெல்லாம் உனக்கு பிடிக்காதா?" என்றாள் லிண்டா .
"எனக்கு அதெல்லாம் குடிச்சு பழக்கம் இல்ல... " என்றாள் ரோஜா.
"அது நீ முன்ன எப்படி வேணா இருந்திருக்கலாம். ஆனா நீ இப்போ சித்துவோட மனைவி அவன் இதே போல நிறைய பார்ட்டிகளுக்கு தொழில் ரீதியா போக வேண்டி இருக்கும். அவன் மனைவியா நீயும் இதை எல்லாம் அட்டென்ட் செய்யணுமே. அப்போ அங்கையும் போய் நீ இப்படி சீப்பா ஜூஸை குடிச்சிட்டு இருக்க போறியா?" என்றார் நக்கலாக .
"லிண்டா அவளுக்கு அதில் எல்லாம் பழக்கம் இல்ல" என்று ரோஜாவிற்கு பரிந்து பேசினார் கிளாரா.
"பழக்கம் இல்லையா?" என்று நக்கலாக சிரித்த லிண்டா.
"இவளை போய் எப்படி சித்து கல்யாணம் செய்துகிட்டான். ஒரு ஸ்டேட்டஸ் தெரியாதவ இவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?" ரோஜாவை ஏளனமாக பார்த்தார்.
லிண்டாவின் இந்த ஏளன பார்வையும், நக்கல் பேச்சும் ரோஜாவை ஆத்திரம் அடைய செய்தது.
அடுத்த நொடி லிண்டாவின் கையில் இருந்த மதுவை வாங்கி மொத்தமாக குடித்திருந்தாள் ரோஜா .
அதை பார்த்து கிளாரா அதிர்ச்சியாக லிண்டாவோ தான் நினைத்தது நடக்கிறது என்று சந்தோசம் கொண்டார்.
"ம்ம்.. குட். பரவால்லையே " என்றவர்.
"சரி என்னோட ரெண்டு பேரும் வாங்க " என்று இருவரையும் தன்னோடு அழைத்து சென்ற லிண்டா.
இவர்களுக்கு மட்டும் தனியாக மது கொண்டு வர சொல்லி அதை ரோஜாவிற்கு ஊற்றி கொடுத்து அவளை மேலும் மதுவை குடிக்க சொன்னார்.
ரோஜா மறுப்பு ஏதும் சொல்லாமல் லிண்டா கொடுக்க கொடுக்க குடித்தாள்.
"ரோஜா போதும் நீ அளவுக்கு அதிகமா குடிச்சிருக்க. இதுக்கு மேல குடிச்சா உன்னால உன்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது" என்று அவளை மேலும் குடிக்க விடாமல் தடுத்தார்.
"ஏன் கிளாரா அவளை தடுக்கிற.. அவ இதை எல்லாம் ஹேண்டில் பண்ணி பழகணும். அப்போ தானே சித்துவுக்கு ஏத்த மாதிரி இந்த சொசைட்டியை பழகணும்" என்று ரோஜாவை மேலும் குடிக்க ஏற்றிவிட்டார்.
சித்துவுக்கு தன்னால் எந்த ஒரு அவமானமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று தனக்கு பழக்கமில்லாத ஒன்றை அளவு கடந்து எடுத்துக்கொண்டு இருந்தாள்.
இங்கு நடப்பதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த ரித்திகாவும், ராகுலும் திருப்தி ஆனார்கள்.
"ரித்து எப்படி நீ லிண்டாவை வெச்சு பிளான் பண்ணின.. லிண்டா எப்படி நீ சொன்னதும் இதை செய்ய சம்மதிச்சாங்க" என்றான் ராகுல்.
"உனக்கே தெரியும் லிண்டாவுக்கு அவளை விட யாரும் அழகா இருந்தா பிடிக்காது. எல்லாரும் அவளை பெருமையா பேசணும். அவ சொல்றதை மட்டுமே கேட்கணும்னு நினைக்க கூடியவன்னு, நானும் அதையே வெச்சு ரோஜாவை பத்தி தப்பு தப்பா பேசி லின்டாவோட ஈகோவை தூண்டிவிட்டேன் . அது இப்போ நமக்கு சாதகமா வேலை செய்யுது " என்றவள் ரோஜாவை பார்த்து .
"அங்க பாரு அவ குடிக்கிற ட்ரிங்க்ஸ் எவ்ளோ வீரியமானது. வழக்கமா குடிக்குறவங்களாலேயே 2,3 கிளாஸ் குடிச்சதும் போதை தலைக்கு ஏறிரும். ஆனா ரோஜா இன்னேரம் ஒரு 7,8 கிளாஸ் குடிச்சிருப்பான்னு நினைக்குறேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ..
"டேய் சித்! எங்க டா இருக்க.. " என்று தள்ளாடியபடி ரோஜா சித்துவை தேடி நடந்து வந்தாள்.
"பாத்தியா ராகுல் நாம நினைச்சது நடக்கும் போல.." என்று ரித்து சொல்ல.
ரோஜாவும் அவர்கள் எதிர்பார்த்தது போல குடித்துவிட்டு போதையில் செய்வது அனைவரின் கவனத்தையும் அவள் பக்கம் திருப்பி இருந்தது .
ரோஜாவின் அழைப்பை கேட்ட சித்து அவளை பார்க்க.. அவள் தள்ளாடியபடி நடந்து வருவதை கண்டதும் அதிர்ந்தான்.
TELEGRAM
FACEBOOK
WHATSAPP
PRATILIPI
சித்து தயாராகி காத்திருக்க... ரோஜா அவளுக்காக இன்று ஷாப்பிங் செய்திருந்தவற்றில் இருந்து ஒரு உடையை தேர்ந்தெடுத்து அணிந்து வந்தாள்.
சிவப்பு நிற peplum midi அணிந்து வெளியே வந்தாள் .
ரோஜாவை அந்த ஆடையில் பார்த்த சித்து அவள் அழகில் சொக்கி தான் போனான்.
சோபாவில் போனை நோண்டிக்கொண்டு இருந்தவன் ரோஜா வந்ததும் அவனையும் அறியாமல் எழுந்து ரோஜா அருகில் சென்றவன் .
"வாவ்! கியூட்டி நீ இந்த ட்ரேஸ்ல ரொம்ப அழகா இருக்க.. " என்றான்.
"போங்க சின்னையா , எனக்கு வெட்கமா இருக்கு " என்று அவன் தோளில் இடித்தவள் வெட்கத்தில் தரையில் கால் கட்டை விரலால் கோலம்போட..
அவள் வெட்கத்தை ரசித்தவன் "இங்க பாரு கியூட்டி நீ போட்டிருக்க ட்ரெஸ்ஸுக்கும், என்னை சின்னையான்னு கூப்பிட்றதுக்கும் செட்டே ஆகல. இனிமேல் நீ என்னை சின்னையான்னு கூப்பிடாத எனக்கு அது பிடிக்கல" என்றான்.
"ஏன் சின்னையா இவ்ளோ நாளா நான் உங்களை அப்படித்தானே கூப்பிட்டிருக்கேன்" என்று அவனை பார்க்க..
"அது முன்ன... நீயும் நானும் கல்யாணம் செய்துகிறதுக்கு முன்ன நீ என்னை அப்படி கூப்பிட்டது சரி. ஆனா இப்போதான் நமக்கு கல்யாணம் ஆகிருச்சே." என்றான்.
"நம்ம கல்யாணத்துக்குப் பிறகும் நான் உங்கள அப்படித்தானே கூப்பிடறேன்" என்றாள்.
"அது எல்லாம் என்னவோ இருக்கட்டும் இனி நீ என்னை சின்னையான்னு கூப்பிட கூடாது கியூட்டி . என்னை வேற ஏதாவது நேம் வெச்சு கூப்பிடு " என்றான் கராறாக .
"இப்படி திடீர்னு சொன்னா நான் என்ன செய்றது சின்னையா" என்றவள்.
"கொஞ்சம் டைம் குடுங்க நான் யோசிக்கணும்" என்றாள் .
"சரி உனக்கு இங்க இருந்து வெளியே பார்ட்டி நடக்குற இடத்துக்கு போற வரை டைம் . அங்க போனதும் என்னை வேற நேம் சொல்லி கூப்பிடு இல்ல என் பேரையே சொல்லி கூப்பிட்டாலும் ஓகேதான் எனக்கு" என்றான்.
"என்னது பார்ட்டிக்கு போற வரை தானா டைம் கொடுப்பிங்க! அது எப்படி சின்னையா " என்று அவள் சிணுங்க ..
"ஹேய்! இப்போ எதுக்கு இப்படி சிணுங்குற.." என்று அவளை ஆழமாக பார்த்த்து ரசித்தவன்.
"இவ பேசுறது , பண்றது எல்லாம் என்னை என்னென்னவோ செய்யுதே.." என்று நினைத்தவன் தனக்கு வந்த எண்ணங்களை தலையில் கொட்டி அமைதிப்படுத்தியவன் தலையை அழுந்த கோதி ரோஜாவை பார்த்தான்.
அவளோ சித்துவை என்ன பெயர் சொல்லி அழைப்பது என்ற தீவிர யோசனையில் இருந்தாள். அதை கண்டு சிரித்தவன் "போலாமா கியூட்டி.." என்றான்.
உடனே "சின்னையா நான் உங்களை வேற பேர் சொல்லி கூப்பிடணும்னா நீங்களும் என்னை இனிமேல் கியூட்டின்னு கூப்பிடக்கூடாது. அப்போதான் நானும் உங்களை சின்னையான்னு கூப்பிட மாட்டேன்" என்றாள்.
"ஏன் அந்த பேருக்கு என்ன குரைச்சல் நல்லா தானே இருக்கு"என்றான்.
"நல்லா தான் இருக்கு.. ஆனா நீங்க உங்க பேன்ஸ் எல்லாரையும் அதுவும் குறிப்ப பொண்ணுங்களை கியூட்டினு தானே கூபிடறிங்க . அப்போ அவங்களும் நானும் ஒண்ணா?" என்றாள் சித்துவை பார்த்து.
ரோஜா சொன்னதும் தான் அதை உணர்ந்தவன் "நீ சொல்றது சரி தான் அவங்களும் நீயும் ஒன்னு இல்ல.. " என்றவன் .
"சரி உனக்கும் எனக்கும் பார்ட்டிக்கு போற வரைக்கும் டைம் . அங்க போனதும் நீயும் நானும் தனி தனியா வேற யார்கூடவாவது பேச போய்டணும்"என்றான்.
"ஏன் தனியா போகணும் சின்னையா" என்றாள் புரியாமல்.
"அப்போதானே உன்னை என்கிட்டேயும், இல்ல என்னை உன்கிட்டேயும் யாராவது கேட்டா தூரத்தில் இருந்து பேர் சொல்லி கூப்பிட முடியும். அப்போ என்ன பேர் வெச்சு நம்ம கூப்பிடறோம்னு தெரிஞ்சுக்கலாமே.. " என்றான் சிரித்துக்கொண்டே.
அவன் சிரிப்பை ரசித்தவள் "எப்படி எல்லாம் யோசிக்குறீங்க நீங்க..." என்றபடி அவனோடு பார்ட்டி ஹாலுக்கு நடந்தாள் .
இங்கே ராகுலும், ரித்திகாவும் சித்துவையும், ரோஜாவையும் எப்படி நடக்கப்போகும் பார்ட்டியில் வைத்து அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்துவது என்று பிளான் போட்டார்கள்.
"ரித்து, அந்த வேலைக்காரி என்னையும், உன்னையும் அதனை பேர் முன்னாடி கை நீட்டி அடிச்சதை என்னால தங்கிக்கவே முடியல.. " என்றான் ஆத்திரம் அடங்காதவனாய்.
"ஆமா ராகுல், சித்து என்னை எவ்ளோ கேவலமா பேசினான். அவனை விட இந்த ரோஜா செய்தது தான் என்னால தங்கிக்கவே முடியல " என்றாள்.
"எனக்கும் தான் ரித்து அவளை ஏதாவது நான் செய்தே ஆகணும் . அவளை பார்ட்டிக்கு வர மொத்த ஆளுங்க முன்னாடி அவ மறக்கவே முடியாத அளவுக்கு அவமான படுத்தனும். அப்படி அந்த ரோஜா அவமானப்படுறதை பார்த்து சித்து தலை குனியனும்" என்றான்.
"செய்லாம் ராகுல் அதுக்கு நான் ஏற்கனவே ஏற்பாடு பண்ணிட்டேன்" என்றாள்.
"அப்படியா! என்ன செய்திருக்க ரித்து" என்றான் ராகுல் ஆர்வமாக.
அவன் ஆர்வத்தை பார்த்து சிரித்தவள் பார்ட்டியில் வைத்து சித்துவையும், ரோஜாவையும் என்ன செய்யப்போகிறாள் என்று சொன்னதும் அதை கேட்டு ராகுல் மிகவும் சந்தோசப்பட்டவன்.
"அப்போ இன்னிக்கு பார்ட்டி கலை கட்டப் போகுது சீக்கிரம் வா போகலாம்" என்று அவளை அழைத்து சென்றான்.
இங்கே பார்ட்டிக்கு வந்திருந்தவர்களை சித்துவிற்கும், ரோஜாவிற்கும் அறிமுகம் செய்துவைத்தார் ஹேரி.
வந்திருந்தவர்களிடம் இருவரும் அறிமுகம் செய்துகொண்ட பிறகு ஏற்கனவே பேசி வைத்தது போல இருவரும் ஆளுக்கு ஒருபக்கம் பிரிந்து சென்று பேசிக்கொண்டு இருந்தனர்.
ஹேரியும் , ராபெர்ட்டும் தங்கள் தொழில் முறை சார்ந்த நட்பு வட்டத்தை சித்துவிற்கு அறிமுகம் செய்து வைத்தனர். அவர்களோடு பிசினஸ் விஷயமாகவும், தான் நடிக்க போகும் படத்தை பற்றியும் பேசிக்கொண்டு இருந்தான் சித்து.
இங்கே க்ளாராவுடன் சேர்ந்து ஜூஸ் குடித்துக்கொண்டு இருந்தாள் ரோஜா. அவரோடு பேசினாலும் சின்னையாவிற்கு பதிலாக என்ன சொல்லி அழைக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தது அவள் மனது.
"இந்த சின்னையாவோட ஒரே ரோதனையா இருக்கு . இப்படி திடீர்னு சொன்னா நான் என்னனு அவரை கூப்பிடறது. பேசாம சித்துன்னு பேரை சொல்லியே கூப்பிடலாமா?" என்று யோசிக்க..
"புருஷன் பேரை சொல்லுவாங்களா?" என்று தோன்றியது.
அவள் யோசித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிளாரா "என்ன ஆச்சு ரோஜா என்ன யோசனை?" என்றார்.
"கிளாரா நான் உங்ககிட்டே ஒன்னு கேட்டா தப்ப நினைச்சுக்க மாட்டீங்களே" என்றாள் .
"என்ன ரோஜா கேளு" என்றார்.
"உங்க ஹஸ்பண்ட்டை நீங்க என்ன சொல்லி கூப்பிடுவீங்க" என்றாள்.
"ராபெர்ட்டுன்னு சொல்லி தான் கூப்பிடுவேன். ஏன்?" என்றார்.
"உங்க வீட்டுக்காரரை பேர் சொல்லி கூப்பிடறீங்களே அது தப்பில்லையா?" என்றாள்.
அதில் சிரித்தவர் "இதில் என்ன இருக்கு. எனக்கு எப்படி தோணினாலும் நான் அப்படி கூப்பிடுவேன்" என்றார்.
"அப்போ எனக்கு எப்படி தோணுதோ அப்படி நான் சின்னையாவை கூப்பிடலாம்" என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது அங்கே ஹேரியின் மனைவி லிண்டா வந்தார்.
அவரை ரோஜாவிற்கு அறிமுகம் செய்துவைத்த கிளாரா "லிண்டா எப்படி இருக்க?" என்று அவரை நலம் விசாரித்தார்.
"ம்ம்... இருக்கேன்" என்று அவரிடம் முகம் கொடுத்து சரியாக பேசவில்லை லிண்டா.
அவர் குணம் அப்படி தான் என்று க்ளாராவிற்கு தெரியும் ஆனால் ரோஜாவிற்கு இது புதிதாக இருக்க அவள் எதுவும் புரியாமல் அவரை பார்த்தாள்.
"நீ தான் சித்துவோட மனைவியா?" என்றார் லிண்டா ரோஜாவை பார்த்து.
"அஹ் .. ஆமா " என்று தலையை வேகமாக ஆட்டினாள்.
"ஒரு பெரிய ஸ்டேட்டஸ் உள்ள இடத்துக்கு வந்து இப்படி எல்லார் மாதிரியும் ட்ரின்க் பண்ணாம , ஜூஸ் குடிச்சிட்டு இருக்க.. ஏன் இதெல்லாம் உனக்கு பிடிக்காதா?" என்றாள் லிண்டா .
"எனக்கு அதெல்லாம் குடிச்சு பழக்கம் இல்ல... " என்றாள் ரோஜா.
"அது நீ முன்ன எப்படி வேணா இருந்திருக்கலாம். ஆனா நீ இப்போ சித்துவோட மனைவி அவன் இதே போல நிறைய பார்ட்டிகளுக்கு தொழில் ரீதியா போக வேண்டி இருக்கும். அவன் மனைவியா நீயும் இதை எல்லாம் அட்டென்ட் செய்யணுமே. அப்போ அங்கையும் போய் நீ இப்படி சீப்பா ஜூஸை குடிச்சிட்டு இருக்க போறியா?" என்றார் நக்கலாக .
"லிண்டா அவளுக்கு அதில் எல்லாம் பழக்கம் இல்ல" என்று ரோஜாவிற்கு பரிந்து பேசினார் கிளாரா.
"பழக்கம் இல்லையா?" என்று நக்கலாக சிரித்த லிண்டா.
"இவளை போய் எப்படி சித்து கல்யாணம் செய்துகிட்டான். ஒரு ஸ்டேட்டஸ் தெரியாதவ இவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?" ரோஜாவை ஏளனமாக பார்த்தார்.
லிண்டாவின் இந்த ஏளன பார்வையும், நக்கல் பேச்சும் ரோஜாவை ஆத்திரம் அடைய செய்தது.
அடுத்த நொடி லிண்டாவின் கையில் இருந்த மதுவை வாங்கி மொத்தமாக குடித்திருந்தாள் ரோஜா .
அதை பார்த்து கிளாரா அதிர்ச்சியாக லிண்டாவோ தான் நினைத்தது நடக்கிறது என்று சந்தோசம் கொண்டார்.
"ம்ம்.. குட். பரவால்லையே " என்றவர்.
"சரி என்னோட ரெண்டு பேரும் வாங்க " என்று இருவரையும் தன்னோடு அழைத்து சென்ற லிண்டா.
இவர்களுக்கு மட்டும் தனியாக மது கொண்டு வர சொல்லி அதை ரோஜாவிற்கு ஊற்றி கொடுத்து அவளை மேலும் மதுவை குடிக்க சொன்னார்.
ரோஜா மறுப்பு ஏதும் சொல்லாமல் லிண்டா கொடுக்க கொடுக்க குடித்தாள்.
"ரோஜா போதும் நீ அளவுக்கு அதிகமா குடிச்சிருக்க. இதுக்கு மேல குடிச்சா உன்னால உன்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது" என்று அவளை மேலும் குடிக்க விடாமல் தடுத்தார்.
"ஏன் கிளாரா அவளை தடுக்கிற.. அவ இதை எல்லாம் ஹேண்டில் பண்ணி பழகணும். அப்போ தானே சித்துவுக்கு ஏத்த மாதிரி இந்த சொசைட்டியை பழகணும்" என்று ரோஜாவை மேலும் குடிக்க ஏற்றிவிட்டார்.
சித்துவுக்கு தன்னால் எந்த ஒரு அவமானமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று தனக்கு பழக்கமில்லாத ஒன்றை அளவு கடந்து எடுத்துக்கொண்டு இருந்தாள்.
இங்கு நடப்பதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த ரித்திகாவும், ராகுலும் திருப்தி ஆனார்கள்.
"ரித்து எப்படி நீ லிண்டாவை வெச்சு பிளான் பண்ணின.. லிண்டா எப்படி நீ சொன்னதும் இதை செய்ய சம்மதிச்சாங்க" என்றான் ராகுல்.
"உனக்கே தெரியும் லிண்டாவுக்கு அவளை விட யாரும் அழகா இருந்தா பிடிக்காது. எல்லாரும் அவளை பெருமையா பேசணும். அவ சொல்றதை மட்டுமே கேட்கணும்னு நினைக்க கூடியவன்னு, நானும் அதையே வெச்சு ரோஜாவை பத்தி தப்பு தப்பா பேசி லின்டாவோட ஈகோவை தூண்டிவிட்டேன் . அது இப்போ நமக்கு சாதகமா வேலை செய்யுது " என்றவள் ரோஜாவை பார்த்து .
"அங்க பாரு அவ குடிக்கிற ட்ரிங்க்ஸ் எவ்ளோ வீரியமானது. வழக்கமா குடிக்குறவங்களாலேயே 2,3 கிளாஸ் குடிச்சதும் போதை தலைக்கு ஏறிரும். ஆனா ரோஜா இன்னேரம் ஒரு 7,8 கிளாஸ் குடிச்சிருப்பான்னு நினைக்குறேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ..
"டேய் சித்! எங்க டா இருக்க.. " என்று தள்ளாடியபடி ரோஜா சித்துவை தேடி நடந்து வந்தாள்.
"பாத்தியா ராகுல் நாம நினைச்சது நடக்கும் போல.." என்று ரித்து சொல்ல.
ரோஜாவும் அவர்கள் எதிர்பார்த்தது போல குடித்துவிட்டு போதையில் செய்வது அனைவரின் கவனத்தையும் அவள் பக்கம் திருப்பி இருந்தது .
ரோஜாவின் அழைப்பை கேட்ட சித்து அவளை பார்க்க.. அவள் தள்ளாடியபடி நடந்து வருவதை கண்டதும் அதிர்ந்தான்.
TELEGRAM
PRATILIPI
Author: layastamilnovel
Article Title: யாரடி நீ 23
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: யாரடி நீ 23
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.