logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
410
"ஏய் ... இங்கே வா இந்த வீட்டில் நீ என்ன வேலை பாக்குற ? உன் பேர் என்ன?" என்று மீனுவின் வீடு வேலையாளிடம் அதிகாரத்தோரணையில் பேசிக்கொண்டும் இருந்தாள் ரியா.

"என் பெரு முத்து . நான் இங்கே தோட்டவேலை பேக்குறேன் . அப்படியே அம்மா கடைக்கு எதுவும் போய்ட்டு வர சொன்ன அப்போ அப்போ கடைக்கு போயிடு வருவேன் " என்றான் பவ்வியமாக .

"ஏய் நீ இங்கே வா .. நீ தானே இந்த காபி போட்டு கொண்டு வந்தே " என்றாள் சமையல்க்கார பெண்ணிடம் .

"ஆமாம் "என்று அந்த பெண் தலையை ஆட்ட...

" உன் பெரு என்ன ?" என்றாள்

"பார்வதி"

"ஓஹோ... உன்னை எல்லாம் யாரு வேளைக்கு எடுத்து ஒரு காபி கூட உருப்படியா போட தெரியலை. முதல்ல உங்களை எல்லாம் வேலையை விட்டு துரத்திட்டு வேற நல்ல ப்ரொபஷனான ஆளுங்களை வேளைக்கு வைக்கணும் "

"எங்க அம்மா வீட்டுல வந்து உக்காந்துட்டு எங்களை எல்லாம் அதிகாரம் பண்ணுற அளவுக்கு உங்களுக்கு இந்த வீட்டில யாரும்மா உரிமை கொடுத்தது . நான் இந்த வீட்டுக்கு வேளைக்கு வந்து பல மாசம் ஆச்சு . இதுவரை பாப்பா என் சாமியாளை ஒரூவாடி கூட குத்தம் சொன்னதில்லை . நீ எங்க ஐயா கையாள தாலி கட்டிக்கிட்டா நாங்க உன் பேச்சை எல்லாம் கேட்டுகிட்டு இருக்கனுமா... நீ என்ன எங்களை வேலையை விட்டு துரத்துறது . நாங்களே போறோம் . நீ இருக்கருங் வீட்டுல எல்லாம் மனுஷன் வேலையில் பார்ப்பானா... ச்சி... த்தூ..." என்று தன்னை தன் வேலையை தரக்குறைவாக பேசிய ரியாவிற்கு பயமில்லாமல் பதிலடி கொடுத்து விட்டு பார்வதி அந்த வீட்டை விட்டு வெளியே செல்லப்போக...

"ஏய்!! உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் பொண்ணையே கேவலமா பேசிட்டு போவ.. வேளைக்கு இருக்கும் நாய் நீ... உனக்கு அவ்ளோ திமிரா..." என்று சாந்தா பார்வதியை அடிப்பதற்காக கையை ஓங்கிக்கொண்டு சென்றார்.

அப்போது அவர் கையை பிடித்து தடுத்த ஜெய் " என் வீட்டு வேலையாட்களை இங்கே வந்து அதிகாரம் பண்ண உங்களுக்கு யாரு உரிமை கொடுத்தது . முதல்ல நீங்க ரெண்டு பெரும் எதுக்கு என் வீட்டுக்கு வந்திருக்கீங்க... ரெண்டு பேரும் முதல்ல இந்த வீட்டை விட்டு வெளியே போங்க " என்று கர்ஜித்தான் .

ஜெய் பேசியதை பார்த்து எரிச்சல் அடைந்த ரியா " என்ன ஜெய் என்கிட்டே எழுதிக்கொடுத்த டீல் எல்லாம் மறந்து போயிருச்சா... ஊரறிய நீ என் கழுத்துல தாலி கட்டி என்னை உன் மனைவியா எல்லாருக்கும் அறிமுகம் செய்திருக்க அந்த உரிமையில் தான் நானும் என் அம்மாவும் இங்கே வந்திருக்கோம். என்கிட்டே டாக்குமென்டில் சைன் பண்ணினது எல்லாம் மறந்துட்டியா? " என்று பதிலுக்கு சளைக்காமல் கேள்விகள் கேட்டாள் ரியா.

"நான் இதையும் மறக்கல ரியா .... நீ மீனுவை கடத்தி வெச்சதை மறக்கல ... அவளை பிணைய கைதியா பிடிச்சது வெச்சிட்டு என்னை பிளாக் மெயில் பண்ணி உன்னை கல்யாணம் செய்துக்க வற்புறுத்தினதும் மறக்கல ... நீ பண்ணின காரியத்துக்கு உன்னை நிக்க வெச்சு பேசிட்டு இருக்க கூடாது .உன்னை... உன்னை... " என்று ஆத்திரத்துடன் அவளை அடிப்பதற்காக கை ஓங்கிக்கொண்டு ஜெய் நெருங்க...

"நிறுத்துங்க... " என்று கம்பீரமாக ஒரு குரல் ஜெய்யின் பின்னாள் ஒலித்தது .

அந்த குரலை கேட்டு ரியாவை அடிக்க ஓங்கிய கையை மடக்கி தன் கோபத்தை கட்டுப்படுத்திய ஜெய் திருப்பி வாசலை பார்த்தான். அப்போது ஜெய் அணிந்து இருந்த பட்டு வேஷ்டி பட்டு சட்டை அணிந்து அவனை போலவே உடை உடுத்தியபடி புது மாப்பிள்ளை போல நல்ல எடுப்பான நிறத்துடன் ஹேண்ட்ஸம்மான ஒரு 28 வயது நிரம்பிய இளைஞன் ஜெய் வீட்டிற்குள் மிடுக்காக நுழைந்தான்.

"யார் இவன் ?" என்பது போல ரியாவும்,சாந்தாவும் பார்த்துக்கொண்டு நின்று இருக்க...

ஜெய்யிடம் வந்த அந்த இளைஞன் "என்ன பாஸ்... இதெல்லாம் " என்பது போல பார்த்தவன் .

ரியாவின் எதிரில் வந்து நின்ற அந்த இளைஞன் "என்ன பொண்டாட்டி சௌக்கியமா ?" என்று அவள் கன்னத்தை கிள்ளி அவளை பார்த்து கண்ணடித்தான் .

அவன் தன்னை பொண்டாட்டி என்று அழைத்ததும் ரியா அதிர்ந்தவள் "டேய் யாரு டா நீ !!! நான் யாருன்னு தெரியுமா ? நான் ஜெய்யோட மனைவி டா... நீ என்னவோ என்னை தொட்டு தாலி கட்டினவன் மாதிரி பொண்டாட்டின்னு உரிமையா கூப்பிட்டு வந்து என் கன்னத்தை கிள்ளுவ.. உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கும் " என்று அவள் எதிரே குறும்புக்காரனாக சிரித்தமுகமாக நின்று இருந்த அந்த இளைஞனை அடிக்க கையை ஓங்கினாள்.

அடிக்க ஓங்கிய அவள் கையை பிடித்து தடுத்த அந்த இளைஞன் ரியாவை வளைத்து பிடித்து அவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தவன் "உனக்கு கோபம் வரும்னு சொன்னாங்க டியர்.. ஆனா உன்னை தொட்டு தாலி கட்டின உன் புருஷன் என்னையே கையை ஓங்கிட்டு அடிக்க வர அளவுக்கு நீ கோபக்காரியா இருக்க.. என்னால இதை நம்பவே முடியலையே" என்றவன் குனிந்து ரியாவின் கன்னத்தில் முத்தம் வைக்க வர...

அதை கண்டதும் அதிர்ந்த ரியா அவசரமாக அவனை விட்டு பிரிந்து வந்து அவள் அம்மாவின் அருகில் நின்றவள் "ஏ... ஏய்.. யார் நீ... ? நீ என் கழுத்தில் தாலி காட்டுனியா? நீ என்ன லூசா " என்று நக்கலாக சிரித்தவள் .

"ஒரு கல்யாண மண்டபம் முழுக்க ஆட்கள் நிறைஞ்சு இருக்க இடத்துல சில முக்கியமான மீடியாக்கள் முன்னாடி ... அத்தனை பேர் முன்னாடியும் அக்னி சாட்சியா இதோ.. இங்கே நிக்குறானே ஜெய் ... இவன் என் கழுத்தில் தாலி கட்டினான். நான் இவனை மிரட்டி என் கழுத்தில் தாலி கட்ட வெச்சேன் . அது தெரியுமா உனக்கு . இதெல்லாம் எதுவும் தெரியாம வந்து என் கழுத்தில் நீ தாலி காட்டுனேனு சொல்றே... bullshit " என்று அந்த இளைஞனை பார்த்து ரியா கத்தினாள்.

"அப்படியா!!!" என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல அவர் ஸ்டைலில் கேட்டவன் அவர் பாணியிலேயே " கண்ணா!! நீ சொன்ன அதே கல்யாண மண்டபத்துல... நீ சொன்ன ஆளுங்க முன்னாடி... நீ சொன்னே அதே மீடியா முன்னாடி ... அந்த மண்டபத்துல நடக்குற கல்யாணத்துக்காக வந்திருந்த அதே ஐயர் மந்திரம் சொல்லி தாலியை எடுத்து ஜெய் கையில் கொடுக்க.... " என்று ரியாவை சுற்றி வந்தவன் அவள் முன்பு வந்து சுழன்று நின்றவன் ஸ்டைலாக தன் தலை முடியை ஒதுக்கி விட்டவன் .

"ஐயர் ஜெய் கையில் கொடுத்த அந்த தாலியை அங்கே இருந்த யாருக்கும் தெரியாம ... மேடையில் மாப்பிள்ளை தோழன் போல ஜெய் கூட வந்து உன் பின்னாடி உன்னை சைட் அடிச்சுட்டே ஒளிஞ்சு உக்கார்ந்து இருந்த நான்!!" என்று ரியாவை பார்த்தான்.

ரியா அவன் சொல்வதை புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

"என்ன டியர் புரியலையா? இப்போ விவரமா சொல்றேன் கேட்டுக்கோ... " என்று மீண்டும் அவள் கன்னம் கிள்ளியவன் .

ஜெய் அருகில் சென்று அவன் தோளில் கை போட்டு நின்றவன் ரியாவை பார்த்து "ஜெய் கையில் இருந்த தாலியை இந்த கமல் கிட்டே கொடுக்க... இந்த கமலும் அங்கே இருந்த யார்க்கும் தெரியாம .. சாரி சாரி... உன் அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சு... ஜெய் கொடுத்த தாலியை வாங்கி அங்கே இருக்க யாருக்கும் தெரியாம ... ஏன் உனக்கு கூட தெரியாம ... என் கையில் இருந்த தாலியை வாங்கி உன் கழுத்துல முழுசா மூணு முடிச்சு தாலி காட்டி உன்னை என்னோட பொண்டாட்டியா ஆகிகிட்டேன்" என்று சிரித்தான்.

அவன் சொன்னது கேட்டு முதலில் குழம்பினாலும் கடைசியாக அவன் சொல்லி முடித்ததும் அனைத்தையும் கோர்வையாக யோசித்து பார்த்த சாந்தாவிற்கு கமல் கூறியது நன்றாகவே புரிந்து போனது .

"ஐயோ !! ரியா நீ மோசம் போய்ட்டியே டி... இதோ இந்த ஊர் பேர் தெரியாதவனை வெச்சு உன் கழுத்துல தாலி கட்ட வெச்சிருக்கான் டி இந்த ஜெய். ஐயோ ... ஐயோ... என் பொண்ணை நம்பவெச்சு கழுத்தறுத்துட்டானே... இந்த படுபாவி ... " என்று ஜெய்யை சாடினார் சாந்தா .

"மம்மி என்ன ஒளறிங்க ... இவன் யாரு என்னன்னே தெரியாது . இவன் சொன்னதை கேட்டு நீங்க அப்படியே நம்பிருவீங்களா ? நானும் ஜெய்யும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்கோம் . அப்படி இருக்க அப்போ என் கழுத்துல இவனால் எப்படி மம்மி தாலி கட்ட முடியும். இவன் ஏதோ உளறுறான் . " என்று ரியா இந்த சூழ்நிலையில் கூட பதட்டமில்லாமல் அவள் அம்மாவிற்கு ஆறுதல் கூறினாள் .

அதை பார்த்து புருவம் உயர்த்திய கமல் "என்ன சகலை நீங்களும் என் பொண்டாட்டியும் ரெஜிஸ்டர் மேரேஜ் பணிகிட்டீங்களா!! இது தெரியாம தான் நான் ரியா கழுத்துல தாலி கட்டிட்டேனா!! நான் வேற என் பொண்டாட்டி கழுத்துல தாலி கட்டினதை மட்டும் தனியா போட்டோவும் , விடியோவும் யாருக்கும் தெரியாம எடுத்து வச்சிட்டேனே... இப்போ அது எல்லாம் செல்லாதா ... நீங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணினது தான் செல்லுமா !" என்று ஒன்றும் தெரியாத அப்பாவி போல கேட்டான்.

அவன் போட்டோ , வீடியோ என்று சொன்னதும் ரியாவிற்கு பதட்டம் ஆனது வேகமாக கமலிடம் வந்தவள் "டேய் நானும் வந்ததுலயிருந்து பாத்துட்டே இருக்கேன் . சும்மா சும்மா என்னை உன் பொண்டாட்டின்னு சொல்றே... என் கழுத்துல நீ தான் தாலி காட்டுனேனு சொல்ற... சரி டா... நீ சொன்னது உண்மையின்னே வெச்சுப்போம் அதை நான் எப்படி டா நம்புறது. யாருன்னே தெரியாத நீ வந்து என் கழுத்துல தாலி கட்டிட்டேனு சொல்லுவ அதை நா நம்பணுமா?" என்றாள் ரியா .

"செல்லம்!! இப்போ என்ன உனக்கு நமக்கு கல்யாணம் ஆன போட்டோ , வீடியோ பாக்கணும் அவ்ளோதானே... இதை முன்னாடியே கேட்டிருந்தா நான் அப்போவே உன்கிட்டே காட்டிருப்பேனே ..." என்றவன் தன் சட்டை பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து அதில் இருந்த வீடியோவை ஓட விட்டு காட்டினான்.

அதை அவன் கையில் இருந்து பிடுங்கிய ரியா கமல் கொடுத்த விடியோவை உறைந்து போய் பார்த்தாள்
 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 52
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top