- Joined
- Oct 6, 2024
- Messages
- 410
ஜெய்யை தான் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்த தன்னை வேறு ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தது எப்படி செல்லும் என்று அவனை தன் கேள்வியாள் மடக்கினாள்.
அவள் பேசியதை கேட்டு ஜெய் அமைதியாக நின்று இருந்தவன் ஒரு நிமிஷம் என்றவன் மாடி ஏறி தன் அறைக்கு சென்றவன் திரும்பி வருகையில் கையில் ரியா ஜெய்யை திருமணம் செய்துகொண்டதாக அவனிடம் கொடுத்த திறமான பதிதிவு பத்திரத்தை எடுத்து வந்து இருந்தான் .
அதை ரியாவின் முன் போட்டவன் "இதில் இருக்கிறது என்னோட கையெழுத்து தான் . நான் தான் இந்த கையெழுத்தையும் போட்டு கொடுத்தேன்னு எனக்கு எப்போ பழைய நினைவுகள் திரும்ப வந்துச்சோ அப்போவே தெரிஞ்சுகிட்டேன் "என்றவன் .
"என்கிட்டே உன்னோட அப்பா ஆபீஸ் டாக்குமென்டில் கையெழுத்து வாங்க வந்த நீ அதுக்குள்ள இந்த ரெஜிஸ்டர் மேரேஜ் பத்திரத்தையும் வச்சு கையெழுத்து வாங்கினது எனக்கு அப்போ தெரியாது " என்றவன் .
ரியாவின் முன்பு இன்னோரு பேப்பரை நீட்ட ... அவனை புரியாமல் பார்த்தாள் ரியா. "என்ன டியர் அவர் ஏதோ கொடுக்குறாரு நீ வாங்காம அமைதியா அவரை பார்த்தா என்ன அர்த்தம் " என்று கமல் ஜெய் கையில் இருந்த பேப்பரை வாங்க கையை நீட்ட... அவன் கையை அவசரமாக தட்டி விட்ட ரியா ஜெய் நீட்டிய பேப்பரை வாங்கி திறந்து பார்த்தாள்.
அது ஒரு விவாகரத்து பத்திரம் அந்த பத்திரத்தை அவசர அவசரமாக முழுவதும் படித்தவள் அதிர்ச்சியோடு நிமிர்ந்து ஜெய்யை பார்த்தாள்.
"என்ன ரியா ஷாக் ஆஹ் இருக்கா... இந்த டிவ்ர்ஸ் பேப்பரில் இருக்குறது உன்னோட கையெழுத்து தானே " என்றான்.
அவளும் சற்று அதிர்ச்சியாக தலையை ஆட்டியவள் "இது ... இது ... இந்த பத்திரத்தில் இருக்க கையெழுத்து என்..என்னோடது தான் . ஆனா... இதை... இதை... நான் போடல..." என்றாள் குழப்பமாக.
"என்ன சகலை என் பொண்டாட்டிகிட்டே டிவேர்ஸ் வாங்கிட்டீங்களா... என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லல நீங்க " என்றான் கமல் .
அவனை ஒரு பார்வை பார்த்த ரியா "வெட்கம் கெட்டவன் எப்படி கேள்வி கேக்குறான் " என்று நினைத்துக்கொண்டாள்.
"ஆமா கமல் என்னை கல்யாணம் செய்த்துக்கணும் இந்த வீட்டை அவ பேரில் மாத்தணும் . என்னோட பிஸினெஸில் ரியாவையும் பார்ட்னரா சேர்த்துக்கணும்னு நிறைய கண்டிஷன்ஸ் போட்டா ரியா. அப்போதான் எனக்கு இந்த யோசனை தோணிச்சு . எப்படி ரியா எனக்கே தெரியாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண பத்திரத்துல கையெழுத்து வாங்கினாளோ.. அதே போல அவளுக்கே தெரியாம டிவேர்க் பேப்பரில் கையெழுத்து வாங்கிட்டேன் . நானும் ரியாவும் மியூட்டுவளா பிரியுறதா சொல்லி கோர்ட்டில் அப்ப்லயும் பண்ணிட்டேன். எப்படியும் எங்க ரெண்டு பேருக்கும் டிவேர்ஸ் கிடைக்க ஒரு 6 மாசம் ஆகிடும் " என்றான் ஜெய் .
தான் கட்டி வைத்திருந்த கனவு கோட்டை சுக்கல் சுக்களாக உடைந்ததை ரியாவின் கோபம் எல்லையை மீறியது . ஹாலில் இருந்த கண்ணாடி மேஜையை காலால் உதைத்தவள் வேகமாக ஜெய் வீட்டை விட்டு வெளியேறினாள் .
அவள் பின்னால் சாந்தா , பரமன் இருவரும் செல்ல... ஜெய்யிடம் வந்த கமல் "சரி சகல நான் கிளம்புறேன் . இனி இந்த புயலை என் வீட்டுக்கு நான் திசை திருப்பனும் . மத்ததை அப்பறோம் பேசிக்கலாம் " என்றான்.
" ஆல் தி பெஸ்ட் கமல் . என்கிட்ட வந்த புயலை உன்பக்கம் திருப்பி விட்டிருக்கேன். இதை விட்டா எனக்கு என்ன பண்றதுனு தெரியலை " என்றான் ஜெய் .
"நோ ப்ரோப்லேம் சகல நான் பார்த்துகிறேன் "என்றவன் ரியாவின் பின்னால் ஓடினான் .
ஜெய் வீட்டை விட்டு வெளியே வந்த ரியா அவள் காரில் ஏறப்போக... அதற்குள்ளாக அங்கு வந்த கமல் " நீ இருக்க டென்ஷனுக்கு காரை ஓட்ட வேண்டாம் நான் டிரைவ் பண்றேன் " என்று டிரைவர் சீட்டிற்கு வந்தவன் . ரியாவின் பின்னால் வந்த பரமனையும், சாந்தாவையும் பார்த்தவன் "என்ன ரெண்டு பெரும் அப்படியே நிக்குறீங்க காரில் ஏறுங்க அத்தை , மாமா " என்றான் உரிமையோடு .
"சரிங்க மாப்பிள்ளை" என்று பரமன் காரில் ஏறப்போக... தயங்கி நின்ற சாந்தா "ஏங்க... என்ன இது.. " என்றார்.
"சாந்தா எதுக்காக தயங்குற ... இவரு நம்ம பொண்ணை கல்யாணம் செய்த்திருக்காரு . இனி நம்ம பொண்ணோட வாழ்க்கை மத்தவங்களை மாதிரி நல்ல படியா அமையணும்னா . முதல்ல நீ நம்ம மாப்பிள்ளையை நம்ம குடும்பத்துல ஒருதரா ஏத்துக்கணும் .நீ வந்து தான் உன் பொண்ணு கிட்டே எடுத்து சொல்லி அவளை வழிக்கு கொண்டு வரணும் புரிஞ்சுதா " என்று அவரிடம் சற்று அதட்டும் தொனியில் உண்மையை எடுத்துரைக்க...
தன் கணவனின் கண்டிப்பில் இருந்த கரையை புரிந்து கொண்ட சாந்தா "சரிங்க ... " என்றவர் காரில் ஏறப் போக.. "அம்மா என்ன பண்ணிட்டு இருக்க... அப்பா தான் ஏதேதோ சொல்லுறாருன்னா நீங்களும் அவர் சொன்னதுக்கு சரின்னு காரில் ஏற போறீங்க..." என்றவள்.
"டேய் நீ யாரு டா என்னோட காரை ஓட்டிட்டு வரேன்னு சொல்றதுக்கு . என் கழுத்துல தாலி கட்டிட்டா இப்படி ஓவரா அட்வான்டேஜ் எடுத்துகுவியா என்ன "என்று அவனை அதட்டியவள் அவன் இருந்த பக்கம் வந்து கமலை தாண்டி டிரைவர் சீட்டின் கதவை திறந்துகொண்டு ஏறி அமர்ந்தவள் "அம்மா வண்டில ஏறுங்க... "என்றாள்.
தன் மகளை கொஞ்சம் கொஞ்சமாக தான் தங்கள் வலிக்கு கோட்னு வர முடியும் என்பதை புரிந்து கொண்ட பரமனும், சாந்தாவும் காரில் என்ற முடிவு செய்தவர்கள் கமலை பார்க்க... அவனோ நேராக வந்து ரியா அமர்ந்து இருந்த டிரைவர் சீட்டிற்கு அருகில் இருக்கும் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டவன் "இனி நீ எங்கே இருக்கியோ அங்கே தான் நானும் இருப்பேன் " என்று அவளை பார்த்து சிரித்தான்.
உடனே காரில் கொண்ட பரமனும் , சாந்தாவும் "என்ன டி பாத்துட்டு இருக்க.. அதன் வீட்டுக்கு போகலாம்னு முடிவு பண்ணிட்டே இல்ல கிளம்பு உன் விருப்படியே வீட்டுக்கு போகலாம் " என்றார் சாந்தா
"அம்மா நம்ம வீட்டுக்கு நாம மூணு பெரும் போறோம். ஆனா இவன் எதுக்கு நம்ம வீட்டுக்கு வரணும் . இவனை முதல வண்டியை விட்டு இறங்க சொல்லுங்க.." என்றாள் .
"ஏய் என்ன டி விளையாடுறியா அவர் நம்ம வீடு மாப்பிள்ளை . உன்னோட புருசன் அவரை எப்படி போக சொல்ல முடியும் . எங்களால அது முடியாது . அவர் நம்ம கூட தான் வருவாரு " என்று சாந்தா கமலுக்கு ஆதரவாக பேச...
"ஓஹோ... நீயும் இப்போ இவங்க பக்கம் சஞ்சுட்டேல்ல... உங்களை எல்லாம் " என்று கோபமாக தன் அருகில் அமர்ந்து ரியாவின் கோபத்தை ரசித்துக்கொண்டு இருந்தவனை பார்த்து முறைத்தவள் காரை எடுத்துக்கொண்டு அவள் வீட்டிற்கு கிளம்பினாள்
ரியாவின் பிரச்சனை நல்ல படியாக முடிய வேண்டும் . கமலை அவள் கணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜெய் கடவுளிடம் வேண்டிக்கொண்டவன் மீனுவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு கிளம்பினான் .
தான் இல்லாத இந்த இடைப்பட்ட நாட்களில் ஜெய் தன்னை நினைத்து எவ்வளவு கவலை பட்டான் என்று மிருதுளாவிடமும் . தன் குடுப்பத்து ஆட்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட மீனு ஜெய்யிற்கு பழைய நினைவுகள் திரும்ப வந்தது தெரிய வரவும் . ஒரு புறம் சந்தோசமாக இருந்தாலும் மறுபக்கம் தன்னை ஜெய் நினைவில் வைத்து இருந்தானா ? அவனுக்கு தன்னை எப்படி மீண்டும் நியாபகம் வந்தது . அவன் தன்னை எப்படி அடையாளம் தெரிந்துகொண்டான் என்று கேட்டாள் .
அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் . ஏன் என்றால் யாருக்கும் மீனு கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாது. ஜெய்யிற்கு பழைய நினைவுகள் வந்த விஷயம் தெரியும் தான் ஆனால் அவனுக்கு எங்கு எப்போது நினைவு வந்தது என்று யாருக்கும் தெரியாது .
மீனு அனைவரின் அமைதியை பார்த்ததுமே புரிந்து கொண்டாள் யாருக்கும் அவள் கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை என்று .
அவள் அதன் பிறகு யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை அமைதியாக படுத்து இருந்தவள் மருந்தின் வீரியத்தில் நன்கு உறங்கி விட்டிருந்தாள். ஜனனியும், மிருதுளாவும் மட்டும் மீனுவுடன் மருத்துவமனையில் இருந்து கொள்ள... சூர்யா கிளம்பி இருந்தான். சந்தோஷும் பூஜாவை வீட்டில் இறக்கிவிட்டு விட்டு கிளம்புவதாக சொல்லி அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
அவள் பேசியதை கேட்டு ஜெய் அமைதியாக நின்று இருந்தவன் ஒரு நிமிஷம் என்றவன் மாடி ஏறி தன் அறைக்கு சென்றவன் திரும்பி வருகையில் கையில் ரியா ஜெய்யை திருமணம் செய்துகொண்டதாக அவனிடம் கொடுத்த திறமான பதிதிவு பத்திரத்தை எடுத்து வந்து இருந்தான் .
அதை ரியாவின் முன் போட்டவன் "இதில் இருக்கிறது என்னோட கையெழுத்து தான் . நான் தான் இந்த கையெழுத்தையும் போட்டு கொடுத்தேன்னு எனக்கு எப்போ பழைய நினைவுகள் திரும்ப வந்துச்சோ அப்போவே தெரிஞ்சுகிட்டேன் "என்றவன் .
"என்கிட்டே உன்னோட அப்பா ஆபீஸ் டாக்குமென்டில் கையெழுத்து வாங்க வந்த நீ அதுக்குள்ள இந்த ரெஜிஸ்டர் மேரேஜ் பத்திரத்தையும் வச்சு கையெழுத்து வாங்கினது எனக்கு அப்போ தெரியாது " என்றவன் .
ரியாவின் முன்பு இன்னோரு பேப்பரை நீட்ட ... அவனை புரியாமல் பார்த்தாள் ரியா. "என்ன டியர் அவர் ஏதோ கொடுக்குறாரு நீ வாங்காம அமைதியா அவரை பார்த்தா என்ன அர்த்தம் " என்று கமல் ஜெய் கையில் இருந்த பேப்பரை வாங்க கையை நீட்ட... அவன் கையை அவசரமாக தட்டி விட்ட ரியா ஜெய் நீட்டிய பேப்பரை வாங்கி திறந்து பார்த்தாள்.
அது ஒரு விவாகரத்து பத்திரம் அந்த பத்திரத்தை அவசர அவசரமாக முழுவதும் படித்தவள் அதிர்ச்சியோடு நிமிர்ந்து ஜெய்யை பார்த்தாள்.
"என்ன ரியா ஷாக் ஆஹ் இருக்கா... இந்த டிவ்ர்ஸ் பேப்பரில் இருக்குறது உன்னோட கையெழுத்து தானே " என்றான்.
அவளும் சற்று அதிர்ச்சியாக தலையை ஆட்டியவள் "இது ... இது ... இந்த பத்திரத்தில் இருக்க கையெழுத்து என்..என்னோடது தான் . ஆனா... இதை... இதை... நான் போடல..." என்றாள் குழப்பமாக.
"என்ன சகலை என் பொண்டாட்டிகிட்டே டிவேர்ஸ் வாங்கிட்டீங்களா... என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லல நீங்க " என்றான் கமல் .
அவனை ஒரு பார்வை பார்த்த ரியா "வெட்கம் கெட்டவன் எப்படி கேள்வி கேக்குறான் " என்று நினைத்துக்கொண்டாள்.
"ஆமா கமல் என்னை கல்யாணம் செய்த்துக்கணும் இந்த வீட்டை அவ பேரில் மாத்தணும் . என்னோட பிஸினெஸில் ரியாவையும் பார்ட்னரா சேர்த்துக்கணும்னு நிறைய கண்டிஷன்ஸ் போட்டா ரியா. அப்போதான் எனக்கு இந்த யோசனை தோணிச்சு . எப்படி ரியா எனக்கே தெரியாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண பத்திரத்துல கையெழுத்து வாங்கினாளோ.. அதே போல அவளுக்கே தெரியாம டிவேர்க் பேப்பரில் கையெழுத்து வாங்கிட்டேன் . நானும் ரியாவும் மியூட்டுவளா பிரியுறதா சொல்லி கோர்ட்டில் அப்ப்லயும் பண்ணிட்டேன். எப்படியும் எங்க ரெண்டு பேருக்கும் டிவேர்ஸ் கிடைக்க ஒரு 6 மாசம் ஆகிடும் " என்றான் ஜெய் .
தான் கட்டி வைத்திருந்த கனவு கோட்டை சுக்கல் சுக்களாக உடைந்ததை ரியாவின் கோபம் எல்லையை மீறியது . ஹாலில் இருந்த கண்ணாடி மேஜையை காலால் உதைத்தவள் வேகமாக ஜெய் வீட்டை விட்டு வெளியேறினாள் .
அவள் பின்னால் சாந்தா , பரமன் இருவரும் செல்ல... ஜெய்யிடம் வந்த கமல் "சரி சகல நான் கிளம்புறேன் . இனி இந்த புயலை என் வீட்டுக்கு நான் திசை திருப்பனும் . மத்ததை அப்பறோம் பேசிக்கலாம் " என்றான்.
" ஆல் தி பெஸ்ட் கமல் . என்கிட்ட வந்த புயலை உன்பக்கம் திருப்பி விட்டிருக்கேன். இதை விட்டா எனக்கு என்ன பண்றதுனு தெரியலை " என்றான் ஜெய் .
"நோ ப்ரோப்லேம் சகல நான் பார்த்துகிறேன் "என்றவன் ரியாவின் பின்னால் ஓடினான் .
ஜெய் வீட்டை விட்டு வெளியே வந்த ரியா அவள் காரில் ஏறப்போக... அதற்குள்ளாக அங்கு வந்த கமல் " நீ இருக்க டென்ஷனுக்கு காரை ஓட்ட வேண்டாம் நான் டிரைவ் பண்றேன் " என்று டிரைவர் சீட்டிற்கு வந்தவன் . ரியாவின் பின்னால் வந்த பரமனையும், சாந்தாவையும் பார்த்தவன் "என்ன ரெண்டு பெரும் அப்படியே நிக்குறீங்க காரில் ஏறுங்க அத்தை , மாமா " என்றான் உரிமையோடு .
"சரிங்க மாப்பிள்ளை" என்று பரமன் காரில் ஏறப்போக... தயங்கி நின்ற சாந்தா "ஏங்க... என்ன இது.. " என்றார்.
"சாந்தா எதுக்காக தயங்குற ... இவரு நம்ம பொண்ணை கல்யாணம் செய்த்திருக்காரு . இனி நம்ம பொண்ணோட வாழ்க்கை மத்தவங்களை மாதிரி நல்ல படியா அமையணும்னா . முதல்ல நீ நம்ம மாப்பிள்ளையை நம்ம குடும்பத்துல ஒருதரா ஏத்துக்கணும் .நீ வந்து தான் உன் பொண்ணு கிட்டே எடுத்து சொல்லி அவளை வழிக்கு கொண்டு வரணும் புரிஞ்சுதா " என்று அவரிடம் சற்று அதட்டும் தொனியில் உண்மையை எடுத்துரைக்க...
தன் கணவனின் கண்டிப்பில் இருந்த கரையை புரிந்து கொண்ட சாந்தா "சரிங்க ... " என்றவர் காரில் ஏறப் போக.. "அம்மா என்ன பண்ணிட்டு இருக்க... அப்பா தான் ஏதேதோ சொல்லுறாருன்னா நீங்களும் அவர் சொன்னதுக்கு சரின்னு காரில் ஏற போறீங்க..." என்றவள்.
"டேய் நீ யாரு டா என்னோட காரை ஓட்டிட்டு வரேன்னு சொல்றதுக்கு . என் கழுத்துல தாலி கட்டிட்டா இப்படி ஓவரா அட்வான்டேஜ் எடுத்துகுவியா என்ன "என்று அவனை அதட்டியவள் அவன் இருந்த பக்கம் வந்து கமலை தாண்டி டிரைவர் சீட்டின் கதவை திறந்துகொண்டு ஏறி அமர்ந்தவள் "அம்மா வண்டில ஏறுங்க... "என்றாள்.
தன் மகளை கொஞ்சம் கொஞ்சமாக தான் தங்கள் வலிக்கு கோட்னு வர முடியும் என்பதை புரிந்து கொண்ட பரமனும், சாந்தாவும் காரில் என்ற முடிவு செய்தவர்கள் கமலை பார்க்க... அவனோ நேராக வந்து ரியா அமர்ந்து இருந்த டிரைவர் சீட்டிற்கு அருகில் இருக்கும் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டவன் "இனி நீ எங்கே இருக்கியோ அங்கே தான் நானும் இருப்பேன் " என்று அவளை பார்த்து சிரித்தான்.
உடனே காரில் கொண்ட பரமனும் , சாந்தாவும் "என்ன டி பாத்துட்டு இருக்க.. அதன் வீட்டுக்கு போகலாம்னு முடிவு பண்ணிட்டே இல்ல கிளம்பு உன் விருப்படியே வீட்டுக்கு போகலாம் " என்றார் சாந்தா
"அம்மா நம்ம வீட்டுக்கு நாம மூணு பெரும் போறோம். ஆனா இவன் எதுக்கு நம்ம வீட்டுக்கு வரணும் . இவனை முதல வண்டியை விட்டு இறங்க சொல்லுங்க.." என்றாள் .
"ஏய் என்ன டி விளையாடுறியா அவர் நம்ம வீடு மாப்பிள்ளை . உன்னோட புருசன் அவரை எப்படி போக சொல்ல முடியும் . எங்களால அது முடியாது . அவர் நம்ம கூட தான் வருவாரு " என்று சாந்தா கமலுக்கு ஆதரவாக பேச...
"ஓஹோ... நீயும் இப்போ இவங்க பக்கம் சஞ்சுட்டேல்ல... உங்களை எல்லாம் " என்று கோபமாக தன் அருகில் அமர்ந்து ரியாவின் கோபத்தை ரசித்துக்கொண்டு இருந்தவனை பார்த்து முறைத்தவள் காரை எடுத்துக்கொண்டு அவள் வீட்டிற்கு கிளம்பினாள்
ரியாவின் பிரச்சனை நல்ல படியாக முடிய வேண்டும் . கமலை அவள் கணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜெய் கடவுளிடம் வேண்டிக்கொண்டவன் மீனுவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு கிளம்பினான் .
தான் இல்லாத இந்த இடைப்பட்ட நாட்களில் ஜெய் தன்னை நினைத்து எவ்வளவு கவலை பட்டான் என்று மிருதுளாவிடமும் . தன் குடுப்பத்து ஆட்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட மீனு ஜெய்யிற்கு பழைய நினைவுகள் திரும்ப வந்தது தெரிய வரவும் . ஒரு புறம் சந்தோசமாக இருந்தாலும் மறுபக்கம் தன்னை ஜெய் நினைவில் வைத்து இருந்தானா ? அவனுக்கு தன்னை எப்படி மீண்டும் நியாபகம் வந்தது . அவன் தன்னை எப்படி அடையாளம் தெரிந்துகொண்டான் என்று கேட்டாள் .
அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் . ஏன் என்றால் யாருக்கும் மீனு கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாது. ஜெய்யிற்கு பழைய நினைவுகள் வந்த விஷயம் தெரியும் தான் ஆனால் அவனுக்கு எங்கு எப்போது நினைவு வந்தது என்று யாருக்கும் தெரியாது .
மீனு அனைவரின் அமைதியை பார்த்ததுமே புரிந்து கொண்டாள் யாருக்கும் அவள் கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை என்று .
அவள் அதன் பிறகு யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை அமைதியாக படுத்து இருந்தவள் மருந்தின் வீரியத்தில் நன்கு உறங்கி விட்டிருந்தாள். ஜனனியும், மிருதுளாவும் மட்டும் மீனுவுடன் மருத்துவமனையில் இருந்து கொள்ள... சூர்யா கிளம்பி இருந்தான். சந்தோஷும் பூஜாவை வீட்டில் இறக்கிவிட்டு விட்டு கிளம்புவதாக சொல்லி அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 54
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 54
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.