- Joined
- Oct 6, 2024
- Messages
- 410
"இங்கே பாரு டா... சும்மா இப்படி எதுவும் சொல்லாம என்னை ரொம்ப டென்ஷன் பங்கிட்டு இருக்க... கோர்ட்டில் இருந்து கிளம்புற அப்போ உனக்கு எப்படி பளையிற் நினைப்பு வந்துச்சுன்னு கேட்டேன் . ஜூஸ் குடிச்சிட்டு சொல்றேன்னு சொன்ன... சரின்னு உன்கூட ஜூஸ் குடிச்சிட்டு கேட்டா... வீட்டுக்கு போற வழியில் இருக்க கோவிலுக்கு பொய் அங்கே வெச்சு சொல்றேன்னு சொன்னே.... சரி சாமி கும்பிட்டுட்டு அதுக்கு பிறகு சொல்லுவேன்னு பார்த்தா ... வீட்டுக்கு வந்ததும் சொல்றேன்னு சொல்லிட்டே... நானும் நீ இப்போ சொல்லுவே... அப்போ சொல்லுவேன்னு பார்த்தா என்னை ரொம்ப கடுப்பேத்துற டா நீ... நம்ம ரெண்டு பெரும் வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட.. 2 மணி நேரம் ஆச்சு . ஆனா இன்னமும் ஏதும் சொல்லல நீ... " என்று ஜெய்யிடம் கோபமாக பொருமினாள் .
அவள் கோபம் கண்டு சிரித்தவன் "பொறுத்ததே பொறுத்த இன்னும் ஒரு 10 நிமிஷம் மீனு . நீ கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் கிடைச்சுடும் " என்றான் ஜெய் .
"இன்னும் நான் வெயிட் பண்ணனுமா... " என்று கோபம் கொண்டவள் "எனக்கு எதுவும் தெரிய வேணாம் " என்று எழுந்து மீனு தன் அறைக்கு செல்ல போக...
"இல்ல மீனு நீங்க அவசியம் எல்லாம் தெரிஞ்சுக்கணும் " என்று கூறிக்கொண்டு ஒரு ஆள் மீனுவின் வீட்டிற்குள் நுழைய...
மாடியில் இருக்கும் தன் அறைக்கு செல்ல மாடிப்படிகளில் ஏறிக்கொண்டு இருந்த மீனு திரும்பி வாசலை பார்த்தாள். உள்ளே நல்ல வாட்ட சாட்டமான ஜெய் வயதை ஒத்த ஆள் . சிவந்த தோளோடும் முகத்தில் ஒரு இறுகிய புன்னகையோடும் நுழைந்தான் . அவனை பார்த்ததும் மீனு அதிர்ந்து போனாள்.
வேகமாக படியை விட்டு இறங்கி ஜெய்யிடம் சென்றாள்.
"ஏய் மீனு பத்து டி.. எதுக்கு இவ்ளோ அவசரமா இறங்கி வர... " என்று அவளை அக்கறையாக பிடித்து தன் பக்கம் நிறுத்தினான் ஜெய் .
"அதெல்லாம் பரவால்ல... நான் பார்த்து தான் இறங்கி வந்தேன் " என்ற மீனு .
"ஜெய்... இவரு... இந்த ஆளு.... " என்று மீனு தயங்க,,,
"அவரே தான் " என்று கண் மூடி திறந்தவன் .
"உன்னை ரியா கடத்தினத்துக்கு முந்தின நாள் இரவு நான் உன்கூட வீடியோ கால் பேசினேனே உனக்கு நியாபகம் இருக்கா ?" என்று மீனுவை பார்த்தான்.
"அதை எப்படி ஜெய் நான் மறப்பேன். ரியா என்னை கடத்தி வெச்ச இந்த ரெண்டு மாசத்தில் உன்கூட நான் பேசின கடைந்து... உன்னை பார்த்த கடைசி கால் இது ஜெய். என்னால் எப்படி மறக்க முடியும். இந்த நினைவுகளை வெச்சு தான் என்னோட கஷ்டமான அந்த ரெண்டு மாசத்தையும் கடந்து வந்தேன் " என்ற மீனு .
"இவரு நீ லண்டனில் உன்னோட பிரென்ட் கூட பிசினஸ் டீல் பேச ஒரு பாருக்கு நீ போன அப்போ கூட உன் பின்னாடி ஒருத்தர் நிக்குறாரு அவரை எங்கயோ நான் பார்த்து இருக்கேன்னு சொன்னேனே... நியாபகம் இருக்கா ?" என்று கேள்வி கேட்கவும் .
" அதெப்படி என்னால மறக்க முடியும் ஜெய் . உன்கூட பேசிட்டு இருந்த அப்போ உனக்கு பின்னாடி ஒருத்தரை பார்தேன்ன்னு சொன்னேன் . நியாபகம் இருக்கா.. அந்த ஆள் ... அவரை பத்தி தான் நான் உன்கிட்டே சொல்லணும்னு நினைச்சேன் . அந்த ஆள் இதோ இவர் தான் " என்று சற்று தட்டுமாற்றத்துடன் .
"நீ சொல்லிட்டு போனை வெச்சிட்டே... எனக்கு என் பின்னாடி இருந்தது யாருனு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணினேன் . ஆனா யாருனு தெரியலை. அப்பறோம் என்னோட பிரெண்டை வெச்சு அந்த ஹோட்டலொட சிசிடிவி பூட்டேஜ் எடுத்து நீ என்கூட கடைசியா பேசின டைமை மேட்ச் பண்ணி என்பின்னாடி இருந்த இவனை கண்டுபிடிச்சேன் " என்றான்.
"அப்போ ஜெய் நீ இவன்கிட்டே பேசுனியா? இவன் ... இவன் தான் என்னை பிடிச்சு உன்னோட ரூமுக்குள்ள தள்ளிவிட்டது. நான் போதையில் இருந்ததுல சரியா கவனிக்கலைனு நினைச்சேன் . ஆனா இத்தனை வருஷம் கழிச்சு உன் பின்னாடி பாரில் வெச்சு இவனை பார்த்த அப்போதான் எனக்கு இவனை இன்னும் நியாபகம் இருக்குனு தெரிஞ்சுது அப்போவே உனக்கு கால் பண்ண நினைச்சேன் பட் உனக்கு லைன் போகல " என்றாள் மீனு.
இவர்கள் இருவரும் தன்னை பற்றி பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து அவர்களிடம் வந்த அந்த ஆள் மீனுவிடம் வந்து அவளை பார்த்து "என்னை மன்னிச்சிருங்க .. ஜெய் மேல எனக்கு இருக்க பிசினஸ் பகையை காரணமா வெச்சு ஜெய்யை பழிவாங்க அவன் குடிச்ச ட்ரின்க்ஸ்குள்ள போதை மருந்து கலந்து அந்த ஹோட்டலில் அவன்கூட ஒரு பொண்ணை நைட் தங்க வெச்சு அவ மூலமா ஜெய்யோட பேரை எங்க பிசினஸ் சர்கிளில் கெடுக்க நினைச்சேன். ஆனா நான் ஏற்பாடு பண்ணின பொண்ணு கடைசி நேரத்துல வராம போய்டுச்சு . நான் என்ன செய்யலாம்னு யோசனையில் ஜெய் ரூமுக்கு கிளம்பும்போது அவனுக்கு தெரியாம ஜெய் பின்னாடியே வந்தேன். ஜெய் ரூமுக்குள்ள போய் லாக் பண்ணும்போது சரியா அவனுக்கு தெரியாம அந்த ரூமை லாக் பண்ண முடியாத மாதிரி நான் செய்துட்டேன் . அந்த சமயம் தான் எதிர் அறையில் இருந்து நீங்க வெளியே வந்திங்க... உங்களை பார்த்ததும் உடனே உங்களை பிடிச்சு ஜெய் இருந்த ரூமுக்குள்ள தள்ளிவிட்டு லாக் பண்ணிட்டேன் " என்றான்.
அவன் சொன்னதை எல்லாம் கேட்டு அவன் மேல் மீனுவிற்கு கோபம் தான் வந்தது . "உங்க பகையை தீர்த்துக்க சம்மந்தமே இல்லாம என்னை பலிகிடா ஆகிட்டீங்க.. நல்ல வேலை நான் இவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டதுனால பரவாயில்லை . அப்படி நடக்காம இருந்திருந்தா என்னோட வாழ்க்கை என்ன ஆகி இருக்கும்னுன் நீங்க யோசிச்சு பார்த்தீங்களா ?" என்று அவனை பார்த்தாள்.
"தப்பு தான் மிச்செஸ் ஜெய் . என்னோட கோபமும் பழிவாங்குற எண்ணமும் வீனா உங்க வாழ்க்கையை நான் பணயம் வெச்சது தப்பு தான் என்னை மன்னிச்சிருங்க" என்றான்.
தன்னிடம் மன்னிப்பு கேட்டவனை இனி என்ன சொல்வது என்பது போல அவனை பார்க்க... மீனுவிடம் வந்தவன் அவள் தோளில் கை போட்டு தன்னோடு அணைத்துக்கொண்டவன் . நீ செய்த கெட்டதுலயும் ஒரு நல்லது நானும் மீனுவும் கல்யாணம் பண்ணிகிட்டது தான் " என்றான்.
மீனுவும் ஜெய் சொன்னதிற்கு ஆமோதிப்பது போல தலையாட்டினாள் .
"சரி தான் என்பது போல அந்த நபரும் தலை ஆட்டியவன் " நான் வந்த வேலை முடிஞ்சது அப்போ கிளம்பட்டுமா " என்றான் .
ஓகே என்ற ஜெய் "இனிமேல் எதுவா இருந்தாலும் என்கூட நேருக்கு நேர் மோதி ஜெயிக்க கத்துக்கோ... இந்த மாதிரி வேலையில் இறங்காதே" என்றான் .
அவனும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்ப " ஒரு நிமிஷம் " என்று வெளியே செல்ல இருங்தவனை நிப்பாட்டினாள்.
"சொல்லுங்க மிச்செஸ் ஜெய் இன்னும் என்கிட்டே ஏதும் கேட்டு தெரிஞ்சுக்கணுமா? " என்றான்.
"ஆமா... உங்க பேர் என்னனு தெரிஞ்சுக்கலாமா? என்னோட வாழ்க்கை போக்கையே மாத்தின உங்க பேரை தெரிஞ்சுக்காம இருந்தா நல்லா இருக்காது " என்று சிரித்தாள்.
அவளை பார்த்து சிரித்தவன் "கண்டிப்பா தெரிஞ்சுக்கலாம் என் பேர் தீபக் " என்றவன் .
"நான் செய்த காரியத்தை வெச்சு நீங்க என்னை கெட்டவன்னு முடிவு பண்ணிடாதீங்க.. நான் அவ்ளோ மோசமானவன் இல்லை . நானும் உங்க ரெண்டு பேரை போல கல்யாணம் செய்துட்டு ஒரு அழகான வாழ்க்கை வாழணும்னு ஆசை படுறேன் . உங்க பிரெண்ட்ஸ் யாராவது இருந்த எனக்கு இன்ட்ரடியூஸ் செய்து வையுங்க... " என்றான் .
"ஓகே பிரதர் கண்டிப்பா " என்றாள் மீனு.
தன்னை பிரதர் என்று அழைத்ததும் தீபக்கிற்கு சந்தோசமானது . பின் அங்கிருந்து கிளம்பினான்.
தீபக் சென்றதும் மீனு ஜெய்யை பார்த்து "என்னோட முதல் சந்தேகத்தை நீ தீர்த்து வெச்சிட்டே ..." என்றாள்.
"அடுத்த பெரிய சந்தேகத்தை நான் தீர்த்து வைக்குறேன் வா... " என்று அவளை அழைத்துக்கொண்டு அவர்கள் அறைக்கு சென்றான்..
உள்ளே சென்றதும் அவளை மெத்தையில் அமரவைத்தவன் மீனுவின் காலிற்கு கீழ் அமர்ந்து அவள் காலை எடுத்து தன் மடியில் வைத்தவன் மெல்ல அவள் காலை பிடித்துவிட்டுக்கொண்டே மீனுவை பார்த்தான்.
காலையில் இருந்து இங்கும் அங்கும் அழைத்து திரிந்ததில் மீனுவிற்கு சற்று அலுப்பாக தான் இருந்தது. தீபக்கை பார்த்ததும் களைப்பை மறந்து இருந்தாள் . இப்பொது ஜெய் அவள் பாதத்தை பிடித்து விட்டதில் சற்று இதமாக இருக்க.. ஜெய் தலையை வருடிவிட்டு துவங்கினாள் மீனு .
"நான் உன்கிட்டே வீடியோ கால் பேசிட்டுட்டு தீபக்கை தேடி கண்டு பிடிச்சதும் முதல்ல தீபக் என்கிட்டே பேச தயங்குனான். நான் அவனை போர்ஸ் பண்ணி கேட்டேன் நீ யாரு உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் இருக்குன்னு. அப்போ அவன் புரியாம என்னை பார்த்ுதான் " என்று ஜெய் அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.
"என்ன ஜெய் என்கிட்டே யாரோ மாதிரி பேசுற... என்னை உனக்கு அடையாளம் தெரியலையா ? இல்ல அடையாளம் தெரியாத மாதிரி நடிக்குறியா? "என்றான்.
"என்ன சொல்றிங்க!! நான் எதுக்காக உங்க கிட்டே நடிக்கணும். முதல்ல நீங்க யாரு ? எனக்கு உங்களை பற்றி எந்த விபரமும் தெரியலை" என்றான் ஜெய் .
அப்போது ஜெய்யின் பாதுகாவலன் ஒருவன் வந்து "சார் இவர் பெரு தீபக் . சென்னையில் இவரோட DK கன்ஸ்டருக்ஷன்ஸ் ரொம்ப பிரபலம் . உங்களுக்கு மிக முக்கிய போட்டி கம்பனியுடையிற் உரிமையாளர் இவர் " என்று தீபக்கை அறிமுகம் செய்து வைத்தான் .
ஏற்கனவே நீண்ட நாள் கழித்து பாருக்கு வந்து ஜெய் குடித்ததில் சற்று நிதானம் இல்லாமல் இருப்பது போல அவனுக்கு தோன்ற... இபோது தீபக் பற்றி வேறு கேட்டதும் அவனை அடையாளம் தெரிந்து கொள்வதற்காக தன் பழைய நினைவுகளை திரும்ப கொண்டுவர ஜெய் முயற்சித்ததில் தலை வலிக்க ஆரம்பித்தது, அதை கவனித்த அவன் பாதுகாவலர்கள் "சார் நீங்க ரொம்ப டையார்டா இருக்கீங்க... தவிர ரொம்ப நாள் கழிச்சு ட்ரின்க்ஸ் சாப்பிட்டதும் சேர்ந்த்து உங்களை மேலும் டையார்ட் ஆக்கிடும் . நாம இப்போ கிளம்புறது சரியா இருக்கும் " என்றார்.
"இல்லை நான் இங்கே இருக்கனும் எனக்கு இவர்கிட்டே கொஞ்சம் பேச வேண்டி இருக்கு " என்று ஜெய் தீபக்கை பார்த்து கூற...
அவர்கள் பேசியதை கவனித்த தீபக் "ஜெய் உனக்கு உடம்புக்கு எதுவும் ப்ரோப்ளேமா ? எதனால என்ன ஆச்சு உனக்கு " என்று அக்கறையாக கேட்க...
அவனை ஆச்சர்யமாக பார்த்த ஜெய் " எனக்கு ஒரு அச்சிடேன்ட் நடந்துச்சு அதுல என்னோட பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போய்டுச்சு " என்று தீபக்கின் உண்மையான அக்கறையை நம்பி தன்னை பற்றிய உண்மையை சொன்னான் .
"ஓ மை காட் !! என்ன சொல்றே ஜெய் . எப்போ என்ன நடந்துச்சு ... எனக்கு ஏன் இந்த விஷயம் தெரியாம போய்டுச்சு " என்றான் ஜெய் சொன்னதை நம்பமுடியாமல் .
"அது எல்லாம் நான் அப்பறோம் சொல்றேன் . எனக்கு முதல்ல சில விஷயம் தெளிவு படுத்திக்கணும் "என்றவன் த்ன் மொபைலை எடுத்து அதில் ஸ்கிரீன் பிச்சராக வைத்து இருந்த மீனு போட்டோவை காண்பித்து "உனக்கு மீனுவை தெரியுமா? " என்றான்.
ஜெய் காட்டிய போட்டோவில் ஜெய் மீனு இருவரும் திருமண கோலத்தில் இருந்தனர். அதை பார்த்ததும் இவ்வளவு நேரம் தயக்கத்தோடு ஜெய்யை எதிர்கொள்ள தடுமாறி இருந்த தீபக் சந்தோஷமானான்.
ஜெய் கையில் இருந்த மொபைலை வாங்கி "இந்த பொண்ணு... இந்த பொண்ணை நீயே கல்யாணம் செய்துகிட்டியா ஜெய் !! என்னால இதை நம்பவே முடியலை . நீங்க ரெண்டு பேரும் எப்படி கல்யாணம் செய்துக்கிட்டிங்க... இந்த பொண்ணை நான் தான் அன்னிக்கு ஹோட்டல்ல உன்னோட ரூமுக்குள்ள பிடிச்சு தள்ளி விட்டு லாக் பண்ணிட்டேன் . உன்னை பழிவாங்குறதா நினைச்சு தேவை இல்லாம ஒரு பெனோட வாழ்க்கையை நான் இதுக்குள்ள கொண்டு வந்துட்டேன் . அதுக்கு அப்பறோம் நான் உங்க ரெண்டு போரையும் சேர்த்தது வெச்சு போட்டோஸ் எடுத்து உன் பேரை கெடுக்க பிளான் பண்ணி இருந்தேன் " என்று தீபக் சொல்ல...
அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக பார்த்த ஜெய் "என்ன சொல்றிங்க மிஸ்டர் தீபக் . நானும் மீனுவும் ஒண்ணா இருந்தது உங்களால தானா? " என்று கேட்டான் .
"ஆமா ஜெய் அந்த அசிங்கமான காரியத்தை நான் தான் செய்தேன் . இப்படி ஒரு காரியத்தை செய்துட்டோமேன்னு அன்னிக்கு ராத்திரி முழுக்க... நான் ரொம்ப கில்டியா பீல் பண்ணினேன் . நீ இருந்த ரூமுக்கு கூட நான் வந்தேன். ஆனா நீ கதவை திறக்கவே இல்லை. என்னை மன்னிச்சிரு ஜெய் நான் இப்படி ஒரு காரியத்தை செய்து உன் பேரை கெடுக்க நினைச்சது எவ்ளோ பெரிய முட்டாள் தனம்னு நான் புரிஞ்சுக்கிட்டேன் " என்றான்.
அவன் சட்டையை பிடித்து உலுக்கிய ஜெய் " நீ முட்டாள்னு நல்லாவே நிரூபிச்சுட்டே.. எவ்ளோ தைரியம் இருந்தா உனக்கு இந்த மாதிரி ஒரு எண்ணம் வந்திருக்கும் " என்றான் .
அவள் கோபம் கண்டு சிரித்தவன் "பொறுத்ததே பொறுத்த இன்னும் ஒரு 10 நிமிஷம் மீனு . நீ கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் கிடைச்சுடும் " என்றான் ஜெய் .
"இன்னும் நான் வெயிட் பண்ணனுமா... " என்று கோபம் கொண்டவள் "எனக்கு எதுவும் தெரிய வேணாம் " என்று எழுந்து மீனு தன் அறைக்கு செல்ல போக...
"இல்ல மீனு நீங்க அவசியம் எல்லாம் தெரிஞ்சுக்கணும் " என்று கூறிக்கொண்டு ஒரு ஆள் மீனுவின் வீட்டிற்குள் நுழைய...
மாடியில் இருக்கும் தன் அறைக்கு செல்ல மாடிப்படிகளில் ஏறிக்கொண்டு இருந்த மீனு திரும்பி வாசலை பார்த்தாள். உள்ளே நல்ல வாட்ட சாட்டமான ஜெய் வயதை ஒத்த ஆள் . சிவந்த தோளோடும் முகத்தில் ஒரு இறுகிய புன்னகையோடும் நுழைந்தான் . அவனை பார்த்ததும் மீனு அதிர்ந்து போனாள்.
வேகமாக படியை விட்டு இறங்கி ஜெய்யிடம் சென்றாள்.
"ஏய் மீனு பத்து டி.. எதுக்கு இவ்ளோ அவசரமா இறங்கி வர... " என்று அவளை அக்கறையாக பிடித்து தன் பக்கம் நிறுத்தினான் ஜெய் .
"அதெல்லாம் பரவால்ல... நான் பார்த்து தான் இறங்கி வந்தேன் " என்ற மீனு .
"ஜெய்... இவரு... இந்த ஆளு.... " என்று மீனு தயங்க,,,
"அவரே தான் " என்று கண் மூடி திறந்தவன் .
"உன்னை ரியா கடத்தினத்துக்கு முந்தின நாள் இரவு நான் உன்கூட வீடியோ கால் பேசினேனே உனக்கு நியாபகம் இருக்கா ?" என்று மீனுவை பார்த்தான்.
"அதை எப்படி ஜெய் நான் மறப்பேன். ரியா என்னை கடத்தி வெச்ச இந்த ரெண்டு மாசத்தில் உன்கூட நான் பேசின கடைந்து... உன்னை பார்த்த கடைசி கால் இது ஜெய். என்னால் எப்படி மறக்க முடியும். இந்த நினைவுகளை வெச்சு தான் என்னோட கஷ்டமான அந்த ரெண்டு மாசத்தையும் கடந்து வந்தேன் " என்ற மீனு .
"இவரு நீ லண்டனில் உன்னோட பிரென்ட் கூட பிசினஸ் டீல் பேச ஒரு பாருக்கு நீ போன அப்போ கூட உன் பின்னாடி ஒருத்தர் நிக்குறாரு அவரை எங்கயோ நான் பார்த்து இருக்கேன்னு சொன்னேனே... நியாபகம் இருக்கா ?" என்று கேள்வி கேட்கவும் .
" அதெப்படி என்னால மறக்க முடியும் ஜெய் . உன்கூட பேசிட்டு இருந்த அப்போ உனக்கு பின்னாடி ஒருத்தரை பார்தேன்ன்னு சொன்னேன் . நியாபகம் இருக்கா.. அந்த ஆள் ... அவரை பத்தி தான் நான் உன்கிட்டே சொல்லணும்னு நினைச்சேன் . அந்த ஆள் இதோ இவர் தான் " என்று சற்று தட்டுமாற்றத்துடன் .
"நீ சொல்லிட்டு போனை வெச்சிட்டே... எனக்கு என் பின்னாடி இருந்தது யாருனு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணினேன் . ஆனா யாருனு தெரியலை. அப்பறோம் என்னோட பிரெண்டை வெச்சு அந்த ஹோட்டலொட சிசிடிவி பூட்டேஜ் எடுத்து நீ என்கூட கடைசியா பேசின டைமை மேட்ச் பண்ணி என்பின்னாடி இருந்த இவனை கண்டுபிடிச்சேன் " என்றான்.
"அப்போ ஜெய் நீ இவன்கிட்டே பேசுனியா? இவன் ... இவன் தான் என்னை பிடிச்சு உன்னோட ரூமுக்குள்ள தள்ளிவிட்டது. நான் போதையில் இருந்ததுல சரியா கவனிக்கலைனு நினைச்சேன் . ஆனா இத்தனை வருஷம் கழிச்சு உன் பின்னாடி பாரில் வெச்சு இவனை பார்த்த அப்போதான் எனக்கு இவனை இன்னும் நியாபகம் இருக்குனு தெரிஞ்சுது அப்போவே உனக்கு கால் பண்ண நினைச்சேன் பட் உனக்கு லைன் போகல " என்றாள் மீனு.
இவர்கள் இருவரும் தன்னை பற்றி பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து அவர்களிடம் வந்த அந்த ஆள் மீனுவிடம் வந்து அவளை பார்த்து "என்னை மன்னிச்சிருங்க .. ஜெய் மேல எனக்கு இருக்க பிசினஸ் பகையை காரணமா வெச்சு ஜெய்யை பழிவாங்க அவன் குடிச்ச ட்ரின்க்ஸ்குள்ள போதை மருந்து கலந்து அந்த ஹோட்டலில் அவன்கூட ஒரு பொண்ணை நைட் தங்க வெச்சு அவ மூலமா ஜெய்யோட பேரை எங்க பிசினஸ் சர்கிளில் கெடுக்க நினைச்சேன். ஆனா நான் ஏற்பாடு பண்ணின பொண்ணு கடைசி நேரத்துல வராம போய்டுச்சு . நான் என்ன செய்யலாம்னு யோசனையில் ஜெய் ரூமுக்கு கிளம்பும்போது அவனுக்கு தெரியாம ஜெய் பின்னாடியே வந்தேன். ஜெய் ரூமுக்குள்ள போய் லாக் பண்ணும்போது சரியா அவனுக்கு தெரியாம அந்த ரூமை லாக் பண்ண முடியாத மாதிரி நான் செய்துட்டேன் . அந்த சமயம் தான் எதிர் அறையில் இருந்து நீங்க வெளியே வந்திங்க... உங்களை பார்த்ததும் உடனே உங்களை பிடிச்சு ஜெய் இருந்த ரூமுக்குள்ள தள்ளிவிட்டு லாக் பண்ணிட்டேன் " என்றான்.
அவன் சொன்னதை எல்லாம் கேட்டு அவன் மேல் மீனுவிற்கு கோபம் தான் வந்தது . "உங்க பகையை தீர்த்துக்க சம்மந்தமே இல்லாம என்னை பலிகிடா ஆகிட்டீங்க.. நல்ல வேலை நான் இவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டதுனால பரவாயில்லை . அப்படி நடக்காம இருந்திருந்தா என்னோட வாழ்க்கை என்ன ஆகி இருக்கும்னுன் நீங்க யோசிச்சு பார்த்தீங்களா ?" என்று அவனை பார்த்தாள்.
"தப்பு தான் மிச்செஸ் ஜெய் . என்னோட கோபமும் பழிவாங்குற எண்ணமும் வீனா உங்க வாழ்க்கையை நான் பணயம் வெச்சது தப்பு தான் என்னை மன்னிச்சிருங்க" என்றான்.
தன்னிடம் மன்னிப்பு கேட்டவனை இனி என்ன சொல்வது என்பது போல அவனை பார்க்க... மீனுவிடம் வந்தவன் அவள் தோளில் கை போட்டு தன்னோடு அணைத்துக்கொண்டவன் . நீ செய்த கெட்டதுலயும் ஒரு நல்லது நானும் மீனுவும் கல்யாணம் பண்ணிகிட்டது தான் " என்றான்.
மீனுவும் ஜெய் சொன்னதிற்கு ஆமோதிப்பது போல தலையாட்டினாள் .
"சரி தான் என்பது போல அந்த நபரும் தலை ஆட்டியவன் " நான் வந்த வேலை முடிஞ்சது அப்போ கிளம்பட்டுமா " என்றான் .
ஓகே என்ற ஜெய் "இனிமேல் எதுவா இருந்தாலும் என்கூட நேருக்கு நேர் மோதி ஜெயிக்க கத்துக்கோ... இந்த மாதிரி வேலையில் இறங்காதே" என்றான் .
அவனும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்ப " ஒரு நிமிஷம் " என்று வெளியே செல்ல இருங்தவனை நிப்பாட்டினாள்.
"சொல்லுங்க மிச்செஸ் ஜெய் இன்னும் என்கிட்டே ஏதும் கேட்டு தெரிஞ்சுக்கணுமா? " என்றான்.
"ஆமா... உங்க பேர் என்னனு தெரிஞ்சுக்கலாமா? என்னோட வாழ்க்கை போக்கையே மாத்தின உங்க பேரை தெரிஞ்சுக்காம இருந்தா நல்லா இருக்காது " என்று சிரித்தாள்.
அவளை பார்த்து சிரித்தவன் "கண்டிப்பா தெரிஞ்சுக்கலாம் என் பேர் தீபக் " என்றவன் .
"நான் செய்த காரியத்தை வெச்சு நீங்க என்னை கெட்டவன்னு முடிவு பண்ணிடாதீங்க.. நான் அவ்ளோ மோசமானவன் இல்லை . நானும் உங்க ரெண்டு பேரை போல கல்யாணம் செய்துட்டு ஒரு அழகான வாழ்க்கை வாழணும்னு ஆசை படுறேன் . உங்க பிரெண்ட்ஸ் யாராவது இருந்த எனக்கு இன்ட்ரடியூஸ் செய்து வையுங்க... " என்றான் .
"ஓகே பிரதர் கண்டிப்பா " என்றாள் மீனு.
தன்னை பிரதர் என்று அழைத்ததும் தீபக்கிற்கு சந்தோசமானது . பின் அங்கிருந்து கிளம்பினான்.
தீபக் சென்றதும் மீனு ஜெய்யை பார்த்து "என்னோட முதல் சந்தேகத்தை நீ தீர்த்து வெச்சிட்டே ..." என்றாள்.
"அடுத்த பெரிய சந்தேகத்தை நான் தீர்த்து வைக்குறேன் வா... " என்று அவளை அழைத்துக்கொண்டு அவர்கள் அறைக்கு சென்றான்..
உள்ளே சென்றதும் அவளை மெத்தையில் அமரவைத்தவன் மீனுவின் காலிற்கு கீழ் அமர்ந்து அவள் காலை எடுத்து தன் மடியில் வைத்தவன் மெல்ல அவள் காலை பிடித்துவிட்டுக்கொண்டே மீனுவை பார்த்தான்.
காலையில் இருந்து இங்கும் அங்கும் அழைத்து திரிந்ததில் மீனுவிற்கு சற்று அலுப்பாக தான் இருந்தது. தீபக்கை பார்த்ததும் களைப்பை மறந்து இருந்தாள் . இப்பொது ஜெய் அவள் பாதத்தை பிடித்து விட்டதில் சற்று இதமாக இருக்க.. ஜெய் தலையை வருடிவிட்டு துவங்கினாள் மீனு .
"நான் உன்கிட்டே வீடியோ கால் பேசிட்டுட்டு தீபக்கை தேடி கண்டு பிடிச்சதும் முதல்ல தீபக் என்கிட்டே பேச தயங்குனான். நான் அவனை போர்ஸ் பண்ணி கேட்டேன் நீ யாரு உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் இருக்குன்னு. அப்போ அவன் புரியாம என்னை பார்த்ுதான் " என்று ஜெய் அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.
"என்ன ஜெய் என்கிட்டே யாரோ மாதிரி பேசுற... என்னை உனக்கு அடையாளம் தெரியலையா ? இல்ல அடையாளம் தெரியாத மாதிரி நடிக்குறியா? "என்றான்.
"என்ன சொல்றிங்க!! நான் எதுக்காக உங்க கிட்டே நடிக்கணும். முதல்ல நீங்க யாரு ? எனக்கு உங்களை பற்றி எந்த விபரமும் தெரியலை" என்றான் ஜெய் .
அப்போது ஜெய்யின் பாதுகாவலன் ஒருவன் வந்து "சார் இவர் பெரு தீபக் . சென்னையில் இவரோட DK கன்ஸ்டருக்ஷன்ஸ் ரொம்ப பிரபலம் . உங்களுக்கு மிக முக்கிய போட்டி கம்பனியுடையிற் உரிமையாளர் இவர் " என்று தீபக்கை அறிமுகம் செய்து வைத்தான் .
ஏற்கனவே நீண்ட நாள் கழித்து பாருக்கு வந்து ஜெய் குடித்ததில் சற்று நிதானம் இல்லாமல் இருப்பது போல அவனுக்கு தோன்ற... இபோது தீபக் பற்றி வேறு கேட்டதும் அவனை அடையாளம் தெரிந்து கொள்வதற்காக தன் பழைய நினைவுகளை திரும்ப கொண்டுவர ஜெய் முயற்சித்ததில் தலை வலிக்க ஆரம்பித்தது, அதை கவனித்த அவன் பாதுகாவலர்கள் "சார் நீங்க ரொம்ப டையார்டா இருக்கீங்க... தவிர ரொம்ப நாள் கழிச்சு ட்ரின்க்ஸ் சாப்பிட்டதும் சேர்ந்த்து உங்களை மேலும் டையார்ட் ஆக்கிடும் . நாம இப்போ கிளம்புறது சரியா இருக்கும் " என்றார்.
"இல்லை நான் இங்கே இருக்கனும் எனக்கு இவர்கிட்டே கொஞ்சம் பேச வேண்டி இருக்கு " என்று ஜெய் தீபக்கை பார்த்து கூற...
அவர்கள் பேசியதை கவனித்த தீபக் "ஜெய் உனக்கு உடம்புக்கு எதுவும் ப்ரோப்ளேமா ? எதனால என்ன ஆச்சு உனக்கு " என்று அக்கறையாக கேட்க...
அவனை ஆச்சர்யமாக பார்த்த ஜெய் " எனக்கு ஒரு அச்சிடேன்ட் நடந்துச்சு அதுல என்னோட பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போய்டுச்சு " என்று தீபக்கின் உண்மையான அக்கறையை நம்பி தன்னை பற்றிய உண்மையை சொன்னான் .
"ஓ மை காட் !! என்ன சொல்றே ஜெய் . எப்போ என்ன நடந்துச்சு ... எனக்கு ஏன் இந்த விஷயம் தெரியாம போய்டுச்சு " என்றான் ஜெய் சொன்னதை நம்பமுடியாமல் .
"அது எல்லாம் நான் அப்பறோம் சொல்றேன் . எனக்கு முதல்ல சில விஷயம் தெளிவு படுத்திக்கணும் "என்றவன் த்ன் மொபைலை எடுத்து அதில் ஸ்கிரீன் பிச்சராக வைத்து இருந்த மீனு போட்டோவை காண்பித்து "உனக்கு மீனுவை தெரியுமா? " என்றான்.
ஜெய் காட்டிய போட்டோவில் ஜெய் மீனு இருவரும் திருமண கோலத்தில் இருந்தனர். அதை பார்த்ததும் இவ்வளவு நேரம் தயக்கத்தோடு ஜெய்யை எதிர்கொள்ள தடுமாறி இருந்த தீபக் சந்தோஷமானான்.
ஜெய் கையில் இருந்த மொபைலை வாங்கி "இந்த பொண்ணு... இந்த பொண்ணை நீயே கல்யாணம் செய்துகிட்டியா ஜெய் !! என்னால இதை நம்பவே முடியலை . நீங்க ரெண்டு பேரும் எப்படி கல்யாணம் செய்துக்கிட்டிங்க... இந்த பொண்ணை நான் தான் அன்னிக்கு ஹோட்டல்ல உன்னோட ரூமுக்குள்ள பிடிச்சு தள்ளி விட்டு லாக் பண்ணிட்டேன் . உன்னை பழிவாங்குறதா நினைச்சு தேவை இல்லாம ஒரு பெனோட வாழ்க்கையை நான் இதுக்குள்ள கொண்டு வந்துட்டேன் . அதுக்கு அப்பறோம் நான் உங்க ரெண்டு போரையும் சேர்த்தது வெச்சு போட்டோஸ் எடுத்து உன் பேரை கெடுக்க பிளான் பண்ணி இருந்தேன் " என்று தீபக் சொல்ல...
அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக பார்த்த ஜெய் "என்ன சொல்றிங்க மிஸ்டர் தீபக் . நானும் மீனுவும் ஒண்ணா இருந்தது உங்களால தானா? " என்று கேட்டான் .
"ஆமா ஜெய் அந்த அசிங்கமான காரியத்தை நான் தான் செய்தேன் . இப்படி ஒரு காரியத்தை செய்துட்டோமேன்னு அன்னிக்கு ராத்திரி முழுக்க... நான் ரொம்ப கில்டியா பீல் பண்ணினேன் . நீ இருந்த ரூமுக்கு கூட நான் வந்தேன். ஆனா நீ கதவை திறக்கவே இல்லை. என்னை மன்னிச்சிரு ஜெய் நான் இப்படி ஒரு காரியத்தை செய்து உன் பேரை கெடுக்க நினைச்சது எவ்ளோ பெரிய முட்டாள் தனம்னு நான் புரிஞ்சுக்கிட்டேன் " என்றான்.
அவன் சட்டையை பிடித்து உலுக்கிய ஜெய் " நீ முட்டாள்னு நல்லாவே நிரூபிச்சுட்டே.. எவ்ளோ தைரியம் இருந்தா உனக்கு இந்த மாதிரி ஒரு எண்ணம் வந்திருக்கும் " என்றான் .
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 57
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 57
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.