- Joined
- Oct 6, 2024
- Messages
- 410
ஜெய் தீபக்கின் சட்டையை பிடித்து சண்டையிடுவதை பார்த்த ஜெய்யுடன் வந்த அவனது பிசினஸ் நண்பன். இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என்று மட்டும் தெரிந்தது. இருவரும் பேசிக்கொண்டதுஹ் அவருக்கு புரியவில்லை . பின் அவர்கள் இருவரையும் விலக்கிவிட்டு "ஜெய் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க முதல்ல இவர் சொல்றதை முழுசா கேட்டுட்டு அதுக்கு பிறகு முடிவு பண்ணுங்க.. " என்றவர் இருவரையும் அழைத்து தனியாக அவர்களை பேச சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்,
அவர் கிளம்பியதும் ஜெய் சற்று கோபம் தணிந்தவனாக "தயவு செய்து என்ன நடந்துச்சுன்னு எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா? என்னால பழைய நினைவுகளை மீது கொண்டு வரவே முடியலை . என் மீனு என்கூட இருந்த தருணங்களை பொக்கிஷம் மாதிரி நினைச்சுஹ் சந்தோசபடுறா ஆனா என்னால எதையுமே நியாபகத்துக்கு கொண்டு வர முடியலை " என்றான் ஜெய் தலையை பிடித்துக்கொண்டு .
"ஜெய் ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதே... நான் இங்கே தான் இருக்க போறேன் .நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு அதுக்கு பிறகு மத்ததை பார்த்துக்கலாம் " என்றான் தீபக் .
"நோ மிஸ்டர் தீபக் , நான் எல்லாத்தையும் தெரிஞ்சுக்க விரும்புறேன். எனக்கு என்னவோ உங்க கூட பேசினா என்னோட பழைய நினைவுகள் திரும்பும்னு தோணுது . சோ ப்ளீஸ்.. தயவு செய்து சொல்லுங்க.." என்றான் .
இனி என்ன சொன்னாலும் தன்னிடம் நடந்த அனைத்தையும் ஜெய் தெரிந்துகொள்ளாமல் விடப்போவதில்லை என்று தீபக்கிற்கு புரியவே " ஜெய் நீ இவ்ளோ கேட்டதுக்கு அப்புறமும் நான் நடந்தது எல்லாம் சொல்லாம இருந்தா சரி வராது "என்றவன் .
" இந்த இடம் உனக்கு நியாபகம் இருக்கா? " என்று அவர்கள் இருந்த பாரை சுட்டி காட்டி கேட்டான்.
அவன் சொன்ன பிறகு அந்த இடத்தை ஒரு முறை சுற்றிலும் பார்த்த ஜெய் "இங்கே வரும்போது இந்த இடத்தை இதுக்கு முன்னே பார்த்தது போல தான் இருந்திச்சு ஆனா எனக்கு ஏதும் நியாபகம் வரல..." என்றான்.
"ரெண்டு வருசத்துக்கு முன்ன நீ இதே ரெஸ்டாரன்டுக்கு ஒரு கிளையண்ட்டை மீட் பண்ண வந்திருந்த ... அந்த பிசினஸை எனக்கு சாதகமா எப்படி மத்திராதுன்னு தெரிஞ்சுக்குறதுக்காக நானும் இங்கே உனக்கு தெரியாம வந்திருந்தேன், உன்னோட பிசினஸ் உனக்கு சாதகமா முடிஞ்சிருச்சு .என்னால அதை பொருத்துக்கவே முடியலை . எப்படியாவது இந்த பிசினஸ் டீலிங்கை நான் உன்கிட்டே இருந்து பார்க்கணும்னு நினைச்சேன். அப்போதான் அந்த கேவலமான ஐடியா எனக்கு தோணிச்சு உடனே இந்த ஹோட்டலில் டான்சரா இருந்த பொண்ணுகிட்டே பேசி கன்வின்ஸ் பண்ணி அவளை உன்கூட ஒன் நைட் ஸ்டே பண்ண சம்மதிக்க வெச்சேன் , அதுக்காக அந்த பொண்ணுக்கு லட்சக்கணக்குல பணமும் கடுத்தேன் . அந்த பொண்ணு ஒரு நைட் முழுக்க உன்கூட இருந்து நெருக்கமா போட்டோஸ் எடுத்து எனக்கு கொடுக்குறதா நானும் அந்த பொன்னும் டீல் பேசி இருந்தோம். நீ குடுக்குற ட்ரின்க்ஸ்ல அந்த பொண்ணு உனக்கு தெரியமா போதை மருந்தும் கலந்துட்டா... " என்று நிப்பாட்டியவன் ஜெய்யை பார்த்தான்.
"ம்ம்ம்... சொல்லு ஏன் நிப்பாட்டிடே .. " என்றான் ஜெய் சற்று கோபமாக .
"சாரி ஜெய் நான் செய்த காரியத்துக்காக மறுபடியும் உன்கிட்டே மன்னிப்ைபு கேட்டுகிறேன் . இதுக்கு நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்க தயாரா இருக்கேன் " என்றான் தீபக் .
"நீ முதல்ல நடந்ததை ஒன்னு விடாம மறைக்காம முழுசா சொல்லு , அதுக்கு பிறகு உன்னை மன்னிக்கனுமா ? வேணாமான்னு நான் முடிவு பண்ணிக்குறேன் " என்று சற்று கோபமாக .
அவன் குரலில் இருந்த கோபம் புரிந்தாலும் அது நியாயம் தான் என்று புரிந்தது தீபக்கிற்கு அதன் பிறகு முழுவதையும் சொல்ல துவங்கினான் .
"போதை மருந்து கலந்த ட்ரிங்க்ஸ்சை குடிச்சதும் உன்னால இங்கே இருக்க முடியலை . உடனே எழுந்து இங்கே இருந்து போலாம்னு நீ கிளம்பினே... நீ இங்கே இருந்து போய்ட்டா உன் ரூமுக்கு அந்த டான்சர் பொண்ணை வரவழைக்க முடியாது அதனால உன்னை எப்படியாவது இங்கயே தங்க வைக்க முடிவு செய்தேன் . உன்னோட கார்ட்ஸ் கிட்டே என்னோட ஆட்களை விட்டு பிரச்சனை பண்ண வெச்சேன். இங்கே இருந்து வெளியே நீ போகாத மாதிரி செய்தேன் . வேற வழி இல்லாம நீ இந்த ஹோட்டல்லயே தங்க முடிவெடுத்து ஒரு ரூமை புக் பண்ணிட்டு ரூமுக்கு போனே..." என்றவன் பெருமூச்சொன்றை விட்டவன்.
"நீ ரூமுக்கு போனதும் அந்த டான்சரை கூப்பிட்டு உன்னோட ரூமுக்கு போக சொன்னேன் . ஆனா அந்த பொண்ணு திடீர்னு தன்னல இந்த காரியத்தை செய்யமுடியாதுன்னு கையை விரிச்சிட்டா. எனக்கு பயங்கர கோபம் என்ன செய்றதுன்னு தெரியலை . முதல்ல நீ என்ன செய்றேன்னு பாக்கலாம்னு உன்பின்னாடி வந்தேன் " என்றவன் தான் அமர்ந்து இருந்த சேரில் இருந்து எழுந்தவன் "என்கூட வா " என்று ஜெய்யையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றான்.
ஜெய் எங்கே என்று புரியாமல் தீபக்கின் பின்னால் சென்றான் . தீபக்குடன் சென்று கொண்டு இருந்த ஜெய்யிற்கு அந்த பாரை தாண்டி அதனோடு ஒட்டி இருந்த ஹோட்டலுக்கு சென்றான். அங்கே சென்றதுமே ஜெய்யிற்கு அந்த இடத்தை இதற்கு முன்பு பார்த்தது போல தோன்ற ஆரம்பிக்க ... அந்த யோசனையில் அவன் தலை மேலும் வலிக்க ஆரம்பித்தது.
அதற்கு மேலும் நடக்க முடியாமல் ஜெய் தலையை பிடித்துக்கொண்டு தடுமாறினான். இதை பார்த்த தீபக் ஜெய்யிடம் வந்தவன் " ஜெய் என்ன ஆச்சு ? " என்றான் பதற்றமாக .
அவன் பின்னால் வந்த அவனுடைய பாதுகாவலர் "சார் நீங்க ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க.. உங்க உடம்பு கண்டிஷன் மோசம் ஆகுறதை பாக்குறீங்க தானே . எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம் . ப்ளீஸ்... இப்போ நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் இங்கே இருந்து நாம கிளம்பலாம் சார் " என்று .
தடுமாறிய ஜெய்யின் கையை பிடித்து அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றார். அவர் கையை தட்டி விட்டவன் "நோ!!! எனக்கு இன்னிக்கு என்ன ஆனாலும் சரி நான் எனக்கு நடந்த எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்காம இங்கே இருந்து வராதா இல்லை " என்று அவர்களோடு செல்ல மறைத்துவிட்டான் .
அவன் பேச்சை மீற அவர்களும் முடியாமல் போகவே அமைதியாக இருப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை .
"தீபக் போகலாம் .." என்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவனுடன் கிளம்பினான் ஜெய் .
தீபக் ஜெய்யை அழைத்துக்கொண்டு செல்ல... செல்லும் வழி எல்லாம் பார்க்கும் பொருள் எல்லாம் ஜெய்யிற்கு பழைய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக்கொண்டு வர ஆரம்பித்து இருந்தது. தலைவலி ஒருபக்கம் ஜெய்யை வதைத்தாலும் மற்றொரு பக்கம் தன பழைய நினைவுகள் வருவதை எண்ணி சற்று நிம்மதி அடைத்தான். அப்போது நடந்து கொண்டு இருந்த தீபக் தன் நடையை நிறுத்தியவன் ஒரு அறையை காட்டி "இந்த ரூம் உனக்கு நியாபகம் இருக்கா?" என்றான் .
புருவம் சுருங்க அந்த அறையை பார்த்தான் அந்த அரையின் கதவில் 1027 என்று எழுதி இருந்தது. அது ஜெய் இந்த ஹோட்டலில் இருந்த பொது தங்கி இருந்த அறை அதை பார்த்ததும் "இந்த ரூம் ... இது ... இங்கே தான் நான் தங்கி இருந்தேன்னு நினைக்கிறன் " என்று தீபக்கை பார்த்தான்.
"சரியா சொன்னே ஜெய் . இது நீ தங்கி இருந்த ரூம் தான். " என்றவன் ஜெய் தங்கி இருந்த ரூமிற்கு எதிரில் இருந்த அறையை காட்டி இந்த ரூமில் இருந்து தான் உன்னோட மிச்செஸ் வெளியே எதுக்காகவோ வந்தாங்க . நீ தனியா இருந்த ரூமுக்குள்ள நான் வேணும்னே அவளை உள்ளே தள்ளிவிட்டு கதவை லாக் பண்ணிட்டேன். அதுக்கு பிறகு நடந்து எல்லாம் இப்போ உனக்கு நியாபகம் வந்திருச்சா? இல்லையான்னு எனக்கு தெரியலை " என்றான்.
ஜெய் அவன் தங்கி இருந்த அந்த அறையை திறந்து பார்த்தான். எதுவும் நினைவில் வருவது போல அவனுக்கு தோன்றவில்லை. உள்ளே சென்றவன் அங்கே இருந்த பொருட்களையும் அந்த அறையையும் சுற்றி பார்த்தான் . அந்த காலை ஒட்டி இருந்த மற்றொரு அறையை பார்த்தவன் தானாக அங்கே சென்று அந்த அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றான்.
அந்த அறையை திறந்ததும் அங்கே நடுநாயகமாக போடப்பட்டு இருந்த கட்டிலை பார்த்ததும் மீனுவும் , ஜெய்யும் ஆடையில்லாமல் கட்டிலில் படுத்து உருண்டது அவன் மனக்கண்ணில் தோன்ற ஆரம்பித்தது . அப்படி நினைவுகள் வர ஜெய்யிற்கு தலைவலி அதிகமாக தலையை பிடித்துக்கொண்டு தடுமாறிய படியே நடந்தவன் கட்டிலில் அமர்ந்தான்.
ஜெய் தடுமாறுவதை பார்த்து பதறிய அவனுடைய பாதுகாவலரும், தீபக்கும் ஜெய்யிடம் செல்ல... கையை நீட்டி அவரக்ளி தன்னிடம் வரவேண்டாம் என்று தடுத்தவன் . "நான் கொஞ்சம் தனியா இருக்கணும் " என்றான்.
அதை புரிந்த கொண்டவர்கள் ஜெய்யை அங்கேயே விட்டுவிட்டு அவன் இருந்த அறைக்கதவை வெளியில் இருந்து சாற்றியவர்கள் ஹாலில் ஜெய்யிற்காக காத்திருக்க துவங்கினர்.
இங்கே ஜெய் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவன் அந்த கட்டிலில் நிதானமாக சாய்த்தான் . அதன் மென்மையும் , அங்கே நிலவிய அமைதியும் ஜெய்யை அவனையும் அறியாமல் உறக்கத்திற்கு அழைத்து சென்றது. அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தவன் உறக்கத்தில் மீனுவுடன் அன்று இரவு இருந்த நினைவுகள் அவன் கனவு காண்பது போல மனக்கண் முன் தோன்ற ஆரம்பித்தது. அவளுடன் முதல் கூடல் முடிந்து கட்டிலில் சாய்ந்த வேளையில் உன்னுடைய பலம் இவ்வளவு தானா? நீ இவ்வளவு தானா? என்று கேட்டவளை சோர்வடையவைக்க தன் பலத்தை காட்டியது நினைவில் ஓட... தூக்கத்திலேயே தனையும் அறியாமல் சிரித்தான் .
நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காமல் போகவே ஜெய் இருந்த அறைக்கதவை திறந்து பார்க்கலாமா ? வேண்டாமா? என்று யோசனையில் தீபக்கும், ஜெய்யின் பாதுகாவலரும் இருக்க...
அப்போது ஜெய் அவன் இருந்த அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.
தான் அணிந்து இருந்த கோர்ட்டை சரிசெய்துகொண்டு வந்தவன் அங்கே தீபக் நின்று இருப்பதை பார்த்ததும் . அவனிடம் வந்தவன் "என்ன தீபக் நீ செய்த வேலையால என்னோட பிசினஸ் மொத்தமும் சரியும்னு நினைச்சே இல்ல... பட் நீ நினைச்சது ஒன்னு நடந்தது ஒண்ணா முடிஞ்சிருச்சு போல... " என்று பழைய ஜெய்யாக தீபக்கிடம் பேச...
ஜெய்யிடம் இருந்த தெளிவும் அவன் மிடுக்கான ஆளுமை நிறைந்த பேச்சையும் பார்த்த தீபக் சந்தோசம் ஆனவன் ஜெய்யை கட்டிக்கொண்டு " ஜெய் உனக்கு எல்லாமே நியாபகம் வந்திருச்சா!! நீ .. நீ... " என்று தீபக் மேலும் பேசமுடியாமல் தடுமாறினான் .
தன்னிடம் இருந்து தீபக்கை பிரித்து நிற்க வைத்த ஜெய் "எனக்கு பழசும் நியாபகம் வந்திருச்சு ... நீ என்கிட்டே மன்னிப்பு கேட்டு உன்னோட தவறை உணர்ந்து பேசியதும் நியாபக்த்துல இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் தீபக் உன்னால தான் நான் என்னோட பழைய நினைவுகளை எல்லாம் திரும்ப கொண்டு வர முடிஞ்சது. என் மீனுவோட நான் இருந்த அழகான தருணங்களை என்னால உணர முடிஞ்சது " என்று சொல்லி தீபக்கை கட்டிக்கொண்டவன் "சரி தீபக் நான் உடனே என்னோட மீனுவை பார்க்கணும் . நான் உடனடியா இந்தியா கிளம்பனும் . உன்னை நான் மறுபடியும் மீட் பண்றேன் " என்றவன் தன் பாதுகாவலர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
அவர் கிளம்பியதும் ஜெய் சற்று கோபம் தணிந்தவனாக "தயவு செய்து என்ன நடந்துச்சுன்னு எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா? என்னால பழைய நினைவுகளை மீது கொண்டு வரவே முடியலை . என் மீனு என்கூட இருந்த தருணங்களை பொக்கிஷம் மாதிரி நினைச்சுஹ் சந்தோசபடுறா ஆனா என்னால எதையுமே நியாபகத்துக்கு கொண்டு வர முடியலை " என்றான் ஜெய் தலையை பிடித்துக்கொண்டு .
"ஜெய் ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதே... நான் இங்கே தான் இருக்க போறேன் .நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு அதுக்கு பிறகு மத்ததை பார்த்துக்கலாம் " என்றான் தீபக் .
"நோ மிஸ்டர் தீபக் , நான் எல்லாத்தையும் தெரிஞ்சுக்க விரும்புறேன். எனக்கு என்னவோ உங்க கூட பேசினா என்னோட பழைய நினைவுகள் திரும்பும்னு தோணுது . சோ ப்ளீஸ்.. தயவு செய்து சொல்லுங்க.." என்றான் .
இனி என்ன சொன்னாலும் தன்னிடம் நடந்த அனைத்தையும் ஜெய் தெரிந்துகொள்ளாமல் விடப்போவதில்லை என்று தீபக்கிற்கு புரியவே " ஜெய் நீ இவ்ளோ கேட்டதுக்கு அப்புறமும் நான் நடந்தது எல்லாம் சொல்லாம இருந்தா சரி வராது "என்றவன் .
" இந்த இடம் உனக்கு நியாபகம் இருக்கா? " என்று அவர்கள் இருந்த பாரை சுட்டி காட்டி கேட்டான்.
அவன் சொன்ன பிறகு அந்த இடத்தை ஒரு முறை சுற்றிலும் பார்த்த ஜெய் "இங்கே வரும்போது இந்த இடத்தை இதுக்கு முன்னே பார்த்தது போல தான் இருந்திச்சு ஆனா எனக்கு ஏதும் நியாபகம் வரல..." என்றான்.
"ரெண்டு வருசத்துக்கு முன்ன நீ இதே ரெஸ்டாரன்டுக்கு ஒரு கிளையண்ட்டை மீட் பண்ண வந்திருந்த ... அந்த பிசினஸை எனக்கு சாதகமா எப்படி மத்திராதுன்னு தெரிஞ்சுக்குறதுக்காக நானும் இங்கே உனக்கு தெரியாம வந்திருந்தேன், உன்னோட பிசினஸ் உனக்கு சாதகமா முடிஞ்சிருச்சு .என்னால அதை பொருத்துக்கவே முடியலை . எப்படியாவது இந்த பிசினஸ் டீலிங்கை நான் உன்கிட்டே இருந்து பார்க்கணும்னு நினைச்சேன். அப்போதான் அந்த கேவலமான ஐடியா எனக்கு தோணிச்சு உடனே இந்த ஹோட்டலில் டான்சரா இருந்த பொண்ணுகிட்டே பேசி கன்வின்ஸ் பண்ணி அவளை உன்கூட ஒன் நைட் ஸ்டே பண்ண சம்மதிக்க வெச்சேன் , அதுக்காக அந்த பொண்ணுக்கு லட்சக்கணக்குல பணமும் கடுத்தேன் . அந்த பொண்ணு ஒரு நைட் முழுக்க உன்கூட இருந்து நெருக்கமா போட்டோஸ் எடுத்து எனக்கு கொடுக்குறதா நானும் அந்த பொன்னும் டீல் பேசி இருந்தோம். நீ குடுக்குற ட்ரின்க்ஸ்ல அந்த பொண்ணு உனக்கு தெரியமா போதை மருந்தும் கலந்துட்டா... " என்று நிப்பாட்டியவன் ஜெய்யை பார்த்தான்.
"ம்ம்ம்... சொல்லு ஏன் நிப்பாட்டிடே .. " என்றான் ஜெய் சற்று கோபமாக .
"சாரி ஜெய் நான் செய்த காரியத்துக்காக மறுபடியும் உன்கிட்டே மன்னிப்ைபு கேட்டுகிறேன் . இதுக்கு நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்க தயாரா இருக்கேன் " என்றான் தீபக் .
"நீ முதல்ல நடந்ததை ஒன்னு விடாம மறைக்காம முழுசா சொல்லு , அதுக்கு பிறகு உன்னை மன்னிக்கனுமா ? வேணாமான்னு நான் முடிவு பண்ணிக்குறேன் " என்று சற்று கோபமாக .
அவன் குரலில் இருந்த கோபம் புரிந்தாலும் அது நியாயம் தான் என்று புரிந்தது தீபக்கிற்கு அதன் பிறகு முழுவதையும் சொல்ல துவங்கினான் .
"போதை மருந்து கலந்த ட்ரிங்க்ஸ்சை குடிச்சதும் உன்னால இங்கே இருக்க முடியலை . உடனே எழுந்து இங்கே இருந்து போலாம்னு நீ கிளம்பினே... நீ இங்கே இருந்து போய்ட்டா உன் ரூமுக்கு அந்த டான்சர் பொண்ணை வரவழைக்க முடியாது அதனால உன்னை எப்படியாவது இங்கயே தங்க வைக்க முடிவு செய்தேன் . உன்னோட கார்ட்ஸ் கிட்டே என்னோட ஆட்களை விட்டு பிரச்சனை பண்ண வெச்சேன். இங்கே இருந்து வெளியே நீ போகாத மாதிரி செய்தேன் . வேற வழி இல்லாம நீ இந்த ஹோட்டல்லயே தங்க முடிவெடுத்து ஒரு ரூமை புக் பண்ணிட்டு ரூமுக்கு போனே..." என்றவன் பெருமூச்சொன்றை விட்டவன்.
"நீ ரூமுக்கு போனதும் அந்த டான்சரை கூப்பிட்டு உன்னோட ரூமுக்கு போக சொன்னேன் . ஆனா அந்த பொண்ணு திடீர்னு தன்னல இந்த காரியத்தை செய்யமுடியாதுன்னு கையை விரிச்சிட்டா. எனக்கு பயங்கர கோபம் என்ன செய்றதுன்னு தெரியலை . முதல்ல நீ என்ன செய்றேன்னு பாக்கலாம்னு உன்பின்னாடி வந்தேன் " என்றவன் தான் அமர்ந்து இருந்த சேரில் இருந்து எழுந்தவன் "என்கூட வா " என்று ஜெய்யையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றான்.
ஜெய் எங்கே என்று புரியாமல் தீபக்கின் பின்னால் சென்றான் . தீபக்குடன் சென்று கொண்டு இருந்த ஜெய்யிற்கு அந்த பாரை தாண்டி அதனோடு ஒட்டி இருந்த ஹோட்டலுக்கு சென்றான். அங்கே சென்றதுமே ஜெய்யிற்கு அந்த இடத்தை இதற்கு முன்பு பார்த்தது போல தோன்ற ஆரம்பிக்க ... அந்த யோசனையில் அவன் தலை மேலும் வலிக்க ஆரம்பித்தது.
அதற்கு மேலும் நடக்க முடியாமல் ஜெய் தலையை பிடித்துக்கொண்டு தடுமாறினான். இதை பார்த்த தீபக் ஜெய்யிடம் வந்தவன் " ஜெய் என்ன ஆச்சு ? " என்றான் பதற்றமாக .
அவன் பின்னால் வந்த அவனுடைய பாதுகாவலர் "சார் நீங்க ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க.. உங்க உடம்பு கண்டிஷன் மோசம் ஆகுறதை பாக்குறீங்க தானே . எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம் . ப்ளீஸ்... இப்போ நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் இங்கே இருந்து நாம கிளம்பலாம் சார் " என்று .
தடுமாறிய ஜெய்யின் கையை பிடித்து அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றார். அவர் கையை தட்டி விட்டவன் "நோ!!! எனக்கு இன்னிக்கு என்ன ஆனாலும் சரி நான் எனக்கு நடந்த எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்காம இங்கே இருந்து வராதா இல்லை " என்று அவர்களோடு செல்ல மறைத்துவிட்டான் .
அவன் பேச்சை மீற அவர்களும் முடியாமல் போகவே அமைதியாக இருப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை .
"தீபக் போகலாம் .." என்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவனுடன் கிளம்பினான் ஜெய் .
தீபக் ஜெய்யை அழைத்துக்கொண்டு செல்ல... செல்லும் வழி எல்லாம் பார்க்கும் பொருள் எல்லாம் ஜெய்யிற்கு பழைய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக்கொண்டு வர ஆரம்பித்து இருந்தது. தலைவலி ஒருபக்கம் ஜெய்யை வதைத்தாலும் மற்றொரு பக்கம் தன பழைய நினைவுகள் வருவதை எண்ணி சற்று நிம்மதி அடைத்தான். அப்போது நடந்து கொண்டு இருந்த தீபக் தன் நடையை நிறுத்தியவன் ஒரு அறையை காட்டி "இந்த ரூம் உனக்கு நியாபகம் இருக்கா?" என்றான் .
புருவம் சுருங்க அந்த அறையை பார்த்தான் அந்த அரையின் கதவில் 1027 என்று எழுதி இருந்தது. அது ஜெய் இந்த ஹோட்டலில் இருந்த பொது தங்கி இருந்த அறை அதை பார்த்ததும் "இந்த ரூம் ... இது ... இங்கே தான் நான் தங்கி இருந்தேன்னு நினைக்கிறன் " என்று தீபக்கை பார்த்தான்.
"சரியா சொன்னே ஜெய் . இது நீ தங்கி இருந்த ரூம் தான். " என்றவன் ஜெய் தங்கி இருந்த ரூமிற்கு எதிரில் இருந்த அறையை காட்டி இந்த ரூமில் இருந்து தான் உன்னோட மிச்செஸ் வெளியே எதுக்காகவோ வந்தாங்க . நீ தனியா இருந்த ரூமுக்குள்ள நான் வேணும்னே அவளை உள்ளே தள்ளிவிட்டு கதவை லாக் பண்ணிட்டேன். அதுக்கு பிறகு நடந்து எல்லாம் இப்போ உனக்கு நியாபகம் வந்திருச்சா? இல்லையான்னு எனக்கு தெரியலை " என்றான்.
ஜெய் அவன் தங்கி இருந்த அந்த அறையை திறந்து பார்த்தான். எதுவும் நினைவில் வருவது போல அவனுக்கு தோன்றவில்லை. உள்ளே சென்றவன் அங்கே இருந்த பொருட்களையும் அந்த அறையையும் சுற்றி பார்த்தான் . அந்த காலை ஒட்டி இருந்த மற்றொரு அறையை பார்த்தவன் தானாக அங்கே சென்று அந்த அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றான்.
அந்த அறையை திறந்ததும் அங்கே நடுநாயகமாக போடப்பட்டு இருந்த கட்டிலை பார்த்ததும் மீனுவும் , ஜெய்யும் ஆடையில்லாமல் கட்டிலில் படுத்து உருண்டது அவன் மனக்கண்ணில் தோன்ற ஆரம்பித்தது . அப்படி நினைவுகள் வர ஜெய்யிற்கு தலைவலி அதிகமாக தலையை பிடித்துக்கொண்டு தடுமாறிய படியே நடந்தவன் கட்டிலில் அமர்ந்தான்.
ஜெய் தடுமாறுவதை பார்த்து பதறிய அவனுடைய பாதுகாவலரும், தீபக்கும் ஜெய்யிடம் செல்ல... கையை நீட்டி அவரக்ளி தன்னிடம் வரவேண்டாம் என்று தடுத்தவன் . "நான் கொஞ்சம் தனியா இருக்கணும் " என்றான்.
அதை புரிந்த கொண்டவர்கள் ஜெய்யை அங்கேயே விட்டுவிட்டு அவன் இருந்த அறைக்கதவை வெளியில் இருந்து சாற்றியவர்கள் ஹாலில் ஜெய்யிற்காக காத்திருக்க துவங்கினர்.
இங்கே ஜெய் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவன் அந்த கட்டிலில் நிதானமாக சாய்த்தான் . அதன் மென்மையும் , அங்கே நிலவிய அமைதியும் ஜெய்யை அவனையும் அறியாமல் உறக்கத்திற்கு அழைத்து சென்றது. அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தவன் உறக்கத்தில் மீனுவுடன் அன்று இரவு இருந்த நினைவுகள் அவன் கனவு காண்பது போல மனக்கண் முன் தோன்ற ஆரம்பித்தது. அவளுடன் முதல் கூடல் முடிந்து கட்டிலில் சாய்ந்த வேளையில் உன்னுடைய பலம் இவ்வளவு தானா? நீ இவ்வளவு தானா? என்று கேட்டவளை சோர்வடையவைக்க தன் பலத்தை காட்டியது நினைவில் ஓட... தூக்கத்திலேயே தனையும் அறியாமல் சிரித்தான் .
நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காமல் போகவே ஜெய் இருந்த அறைக்கதவை திறந்து பார்க்கலாமா ? வேண்டாமா? என்று யோசனையில் தீபக்கும், ஜெய்யின் பாதுகாவலரும் இருக்க...
அப்போது ஜெய் அவன் இருந்த அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.
தான் அணிந்து இருந்த கோர்ட்டை சரிசெய்துகொண்டு வந்தவன் அங்கே தீபக் நின்று இருப்பதை பார்த்ததும் . அவனிடம் வந்தவன் "என்ன தீபக் நீ செய்த வேலையால என்னோட பிசினஸ் மொத்தமும் சரியும்னு நினைச்சே இல்ல... பட் நீ நினைச்சது ஒன்னு நடந்தது ஒண்ணா முடிஞ்சிருச்சு போல... " என்று பழைய ஜெய்யாக தீபக்கிடம் பேச...
ஜெய்யிடம் இருந்த தெளிவும் அவன் மிடுக்கான ஆளுமை நிறைந்த பேச்சையும் பார்த்த தீபக் சந்தோசம் ஆனவன் ஜெய்யை கட்டிக்கொண்டு " ஜெய் உனக்கு எல்லாமே நியாபகம் வந்திருச்சா!! நீ .. நீ... " என்று தீபக் மேலும் பேசமுடியாமல் தடுமாறினான் .
தன்னிடம் இருந்து தீபக்கை பிரித்து நிற்க வைத்த ஜெய் "எனக்கு பழசும் நியாபகம் வந்திருச்சு ... நீ என்கிட்டே மன்னிப்பு கேட்டு உன்னோட தவறை உணர்ந்து பேசியதும் நியாபக்த்துல இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் தீபக் உன்னால தான் நான் என்னோட பழைய நினைவுகளை எல்லாம் திரும்ப கொண்டு வர முடிஞ்சது. என் மீனுவோட நான் இருந்த அழகான தருணங்களை என்னால உணர முடிஞ்சது " என்று சொல்லி தீபக்கை கட்டிக்கொண்டவன் "சரி தீபக் நான் உடனே என்னோட மீனுவை பார்க்கணும் . நான் உடனடியா இந்தியா கிளம்பனும் . உன்னை நான் மறுபடியும் மீட் பண்றேன் " என்றவன் தன் பாதுகாவலர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 58
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 58
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.