Home Uncategorizedஅஸ்க்..லஸ்கா..காதல் 39

அஸ்க்..லஸ்கா..காதல் 39

by Layas Tamil Novel
258 views

EPISODE-39

ராஜு, யாழினி இருவரும் ஒரே கட்டிலில் இருந்த ஃபோட்டோவை யாரோ தெரியாத நபர் அவர்கள் இருவருக்கும் அனுப்பி வைத்து இருக்க, யாழினி ராஜுவுக்கு கால் செய்து அவன் செய்த வேலையாகத்தான் இருக்கும் என்று அவனை கடுமையாக திட்டினாள்.

“எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று ராஜு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் யாழினி அவன் சொன்னதை கேட்பதாக இல்லை.

பொறுத்துப் பார்த்த ராஜுவுக்கு யாழினி மேல் கோபம் வர…

“தனக்கும் இப்போது நடந்த விஷயத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை.

நீ எப்போதும் போலவே என் மீது பழியைப் போடாதே. இப்போது நடந்த இந்த விஷயத்திற்கும் எனக்கும் சத்தியமாக எந்த சம்பந்தமும் இல்லை” என்று ராஜு யாழினியிடம் தன்னிலை விளக்கம் கொடுக்க…

ஆனால் அவளோ அவன் சொல்லும் விளக்கத்தை எல்லாம் கேட்கும் நிலையில் இப்போது இல்லை.

எங்கே தனக்கு அனுப்பிய புகைப்படத்தை தன் அப்பாவிற்கும் அல்லது தன்னைச் சேர்ந்தவர்கள் யாருக்கேனும் அனுப்பி வைத்துவிட்டால். தன்னுடைய நிலை என்ன ஆகும் என்று யோசித்த யாழினி நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க…

இவளிடம் இப்போது பேசிக் கொண்டிருப்பது சரியில்லை என்று நினைத்த ராஜு ஃபோனை கட் செய்தவுடன் உடனே முதலில் தமிழுக்குத்தான் அழைத்தான்.

தமிழ் ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்க, “எப்படியும் வினித் அவனுடன் இருப்பான்” என்று நினைத்தே வினித்திற்கு அழைக்க…

அப்போதுதான் தமிழின் வீட்டிற்கு இலக்கியாவை அழைத்துக் கொண்டு வந்த வினித் இலக்கியாவை உள்ளே அனுப்பிவிட்டேன். ராஜுவின் கால் வந்ததும் அட்டென்ட் செய்து அவனிடம் பேசிக் கொண்டு இருக்க…

ராஜு அவசரமாக வினித்தை உடனே கிளம்பி காரணம் எதுவும் கூறாமல் தான் இருக்கும் இடத்திற்கு வரச் சொல்ல…

தமிழின் வீட்டு வாசல் வரை வந்த வினித், ராஜு அவசரமாக அழைக்கவும், “சரி தமிழைப் பார்த்துக் கொள்ளத்தான் இலக்கியா வந்துவிட்டாளே. நாம் சென்று ராஜுவுக்கு என்ன பிரச்சனை என்று பார்க்கலாம்” என்று இருக்கிறான். பார்க்க கிளம்பி விட்டான்.

ராஜு அனுப்பிய லொகேஷனுக்கு வந்த வினித். ராஜுவுக்கு கால் செய்து அவன் யார் எங்கே இருக்கிறான் என்று கேட்டபடி அவன் ஸ்டுடியோவுக்குள் நுழைய…

“நான் இருக்கும் இடத்தை” சொல்லிவிட்டு ஃபோனை ராஜு கட் செய்ய அதற்குள் ராஜு இருக்கும் இடத்திற்கு வினித் வந்துவிட்டான்.

ராஜுவின் கேபினுக்குள் வினித் நுழைய… அங்கே அவன் கேபினுக்குள் ஒரு ஆள் கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு எதையோ தட்டிக் கொண்டு இருந்தான்.

அவர்கள் இருவரையும் புரியாமல் பார்த்தபடி வினித் ராஜு அருகில் வந்தவன், “டேய், இங்கு என்னடா நடக்குது? ஏன் என்னை அவசரமாக வரச் சொன்னாய்? ஆமாம், யாரு இவர்?” என்று கேட்க…

ராஜு தயங்கிக் கொண்டே தன் மொபைலுக்கு வந்த ஃபோட்டோவை பற்றி வினித்திடம் விளக்கிக் கூற…

“அடப்பாவி! எவ்வளவு பெரிய காரியத்தைச் செஞ்சிட்டு ரொம்பச் சாதாரணமாக இருக்கிறாய்” என்ற வினித்.

“சரி, இப்போ அந்த ஃபோட்டோவை அனுப்பினவன் யாருன்னு உனக்கு தெரிஞ்சிடுச்சா?” என்றான் வினித்.

“அதுக்காகத்தான் இவரை வரச் சொல்லி இருக்கேன். இதுதான் அந்த ஃபோட்டோ அனுப்பியவனின் நம்பர், அதை ட்ராக் பண்ணச் சொல்லி இருக்கேன்” என்றான் ராஜு.

“இப்போ என்னடா பண்ணப் போற? இந்த ஃபோட்டோ வெளியில எதுவும் லீக் ஆயிடுச்சுன்னா என்ன ஆகும்?” என்று வினித் கேட்க…

“அதுக்காகத்தான் நான் இவ்வளவு அவசரப்படுகிறேன்” என்று ராஜு. “எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. ஆனா யாழினிதான் பாவம். அவள் ஏற்கனவே என்னால் ரொம்பக் கஷ்டத்தை அனுபவிச்சிட்டு இருக்கா.

ஏற்கனவே நான் செய்யாத தப்புக்கு அவள் என் மேல் கோபத்துல இருக்கா. இப்போ இந்த ஃபோட்டோவையும் பார்த்துட்டு இதுக்கும் நான் தான் காரணம் என்று நினைத்துக்கொண்டு என் மேல் இன்னும் அவளுக்குக் கோபம் அதிகமாயிடுச்சு.

இவளை எப்படிச் சமாதானம் செய்யறதுன்னு எனக்குத் தெரியல. இந்த ஃபோட்டோவை அனுப்புனது யாருன்னு கண்டுபிடிச்சு அவங்களை கூட்டிட்டுப் போய் அவள் முன்னாடி நிறுத்தினால்தான் என்ன பத்தி கொஞ்சமாவது அவளுக்கு நல்ல அபிப்பிராயம் வரும்” என்று கூற…

“எனக்கு உன் மேல் டவுட்டாதான் இருக்கு டா. உன்னை அந்தப் பொண்ணு லவ் பண்ணலன்னு சொன்ன பிறகும் நீ அவளை விடாமல் துரத்திக்கிட்டே இத்தனை நாளா இருந்திருக்க. எங்களுக்கு இது கூடத் தெரியாமப் போயிடுச்சு பாத்தியா?” என்றவன், “எங்களுக்குத் தெரியாமல் இன்னும் என்னெல்லாம் பண்ணி வச்சிருக்கியோ தெரியல” என்று ராஜுவைப் பார்த்துக் கூற…

அவனை முறைத்த ராஜு, “உன்னை எனக்கு சப்போர்ட்டா இருக்கச் சொல்லிதான் கூப்பிட்டேன். என்னைக் காலை வாரி விடுறதா இருந்தா முதல்ல நீ இங்கிருந்து கிளம்பு” என்று அவனை விரட்ட…

“சரி சரி, கோவிச்சுக்காதடா. நான் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன்” என்று வினித் ராஜுவைச் சமாதானம் செய்ய…

“இது விளையாடுற நேரமா வினித்? கொஞ்சம் எனக்கு ஹெல்ப் பண்ணு” என்றான் ராஜு.

“எனக்கு சரிடா, நான் என்ன செய்யணும்னு சொல்லு” என்றான் வினித்.

“எப்படியும் இந்த நம்பர் யாருன்னு ட்ரேஸ் அவுட் பண்ணி கண்டுபிடிச்சுக் கொடுத்துடுவார். ஆனா அவர் கண்டுபிடிக்கிறதுக்குள்ள இந்த ஃபோட்டோ வேற யாருக்கும் போயிடாம அதுக்கு என்ன பண்றது?” என்றான் ராஜு.

“நம்பர் இருக்கிற லொகேஷன் நம்மளுக்குத் தெரிஞ்சதுன்னா, முதல்ல அந்த நம்பரை பிளாக் பண்ணி, அதுல இருந்து எந்த ஒரு செய்தியும் சோசியல் மீடியாவுக்கு, வேற யாருக்கோ வெளியே போகாம பாத்துக்க முடியும். அதுக்கு முதல்ல இந்த நம்பரை நம்ம லொகேட் பண்ணனும்” என்றான் வினித்.

இருவரும் ராஜுவுக்கு வந்த நம்பரை கண்டுபிடிக்க வந்திருக்கும் நபரிடம் வந்து, “அந்த நம்பரை ட்ரேஸ் அப் பண்ண முடிந்ததா?” என்று கேட்க…

“இல்ல சார், அந்த நம்பரை எங்களால ட்ரேஸ் பண்ண முடியல. அது ரொம்பக் கஷ்டமா இருக்கு. நிமிஷத்துக்கு நிமிஷம் அந்த நம்பர் லொகேஷன் மாத்தி மாத்திக் காட்டிக்கிட்டு இருக்கு. ஒரே ஆள் வேற வேற இடத்துல இருக்கிற மாதிரி காட்டுது. இப்படி இருந்தா நம்மளால இந்த நம்பரையும் அவங்க இருக்கிற அட்ரஸையும் ட்ரேஸ் பண்றது ரொம்பக் கஷ்டம்” என்றான்.

“என்னடா செய்யறது” என்று ராஜு கைகளைப் பிசைந்து கொண்டு நிற்க…

அப்போது சரியாக யாழினியின் நம்பரில் இருந்து ராஜுவுக்கு கால் வந்தது.

அதைப் பார்த்ததும் ராஜுவின் முகம் எல்லாம் வேர்த்து விட்டது.

ராஜுவின் முகம் பேய் அறைந்தது போல இருப்பதைப் பார்த்த வiniத், “டேய் என்ன ஆச்சு? ஏன் உன் முகம் இப்படி இருக்கு? ஏன் இப்படி வேர்த்து கொட்டுது உனக்கு?” என்று கேட்க…

தன் மொபைலை வினித்திடம் காட்டி, “யாழினியோட அப்பா தான் கால் பண்றாரு” என்று சொல்ல…

“போச்சு, ஒருவேளை அவன் யாழினியோட அப்பாவுக்கும் ஃபோட்டோவை அனுப்பிட்டானோ?” என்று வினித் கேட்க…

“தெரியல டா” என்று ராஜு பதட்டத்தோடு நிற்க…

இவ்வளவு நேரம் அடித்துக் கொண்டிருந்த ஃபோன் கட் ஆகிவிட்டது.

திரும்ப யாழினியின் அப்பாவுக்கு நான் கால் செய்யலாமா வேண்டாமா என்று யோசித்தபடி ராஜு இருக்க…

அவரே அவன் மொபைலுக்கு அழைத்திருந்தார்.

இந்த முறை வினித் அவன் கையில் இருந்த ஃபோனை பிடுங்கி… “ஃபோனை எடுக்காம விட்டுட்டா எதுவும் சரியாயிடப் போயிடறது இல்லை ராஜு.

முதல்ல அவர்கிட்ட பேசு. அப்போதான் என்ன நடக்குது, என்ன செய்யணும்னு உனக்குப் புரியும்” என்றவன் ராஜுவின் ஃபோனை அட்டென்ட் செய்து அவன் கையில் திணித்தவன் ஸ்பீக்கரில் போட…

கால் அட்டென்ட் ஆனதும் யாழினியின் அப்பா பேச ஆரம்பிக்க… அவர் சொன்னதைக் கேட்டதும் ராஜுவின் கையில் இருந்த ஃபோன் நழுவி தரையில் விழுந்து சுக்கு நூறாக உடைந்து சிதறியது.


இங்கு தமிழின் உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதும் யாரும் கேட்காமல் வினித்தை நச்சரித்து அவனைக் கொண்டு வந்து தமிழிடம் விடச் சொல்ல…

வினித்தோ இலக்கியாவை இறக்கி விட்டதும் எங்கோ சென்றுவிட…

நள்ளிரவில் தமிழைப் பார்க்க வந்ததினால். தமிழின் வீட்டு வேலையாட்கள் ஒன்று இரண்டு பேர் மட்டுமே அங்கே இருந்தனர்.

நேராக தமிழின் அறைக்கு வந்த இலக்கியா அவன் அரை கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல…

இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு உடல் முழுவதும் ஈரம் சொட்டச் சொட்ட அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான் தமிழ்.

அவனுக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டுதான் இலக்கியா இங்கே வந்திருக்க, ஆனால் அவன் உடலோ நனைந்து தொப்பலாக ஈரத்துடன் இருப்பதைப் பார்த்தவளுக்குப் பதட்டமாக, நேராக அவனிடம் வந்தவள் அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் கட்டிலில் அமர வைத்து அங்கிருந்த கதவைத் திறந்து ஒரு டவலை எடுத்து வந்து அவன் தலையில் போட்டு தமிழின் தலையைத் துவட்ட ஆரம்பித்தாள்.

ஏற்கனவே மருந்தின் வீரியம் அவன் உடலில் இருந்து குறையாமல் தமிழைப் போட்டு பாடாய்ப் படுத்திக் கொண்டு இருக்க…

போதாக் குறைக்கு இப்போது இலக்கியா வேறு அவன் முன்பு இரவு அணியும் ஆடையுடன் சிக்கென அவன் முன்பு வந்து நின்று அவனுக்குத் தலையைத் துவட்டிக் கொண்டு இருக்க….

அவள் கைகள் உயர்த்தி தமிழின் தலையைத் துவட்டிக் கொண்டு இருந்ததால். இலக்கியாவின் புடவை மேலே தூக்கிக் கொண்டு இருக்க அவள் சிறிய இடை அவன் கண்ணுக்குத் தெரியவும்.

சிறிதும் தாமதிக்காமல் அவள் இடையோடு சேர்த்துப் பிடித்தவன் அவளை அப்படியே தூக்கி தன் மடியில் அமர வைத்தான்.

இதை சற்றும் எதிர்பாராத இலக்கியா தமிழைப் பார்க்க…. அவன் கண்கள் இரண்டும் சிவந்து இருக்க… அவன் பார்வையே ஏதோ சரியில்லை என்று அவளுக்கு உணர்த்தியது.

சட்டென அவன் மடியில் இருந்து இலக்கியா இறங்கி அவனை விட்டுப் போக…

“எங்க போற, என்னைப் பார்க்க தானே வந்த?” என்று சொல்லி கீழே இறங்கிச் சென்றவளின் அருகில் வந்து…

அவள் தோள்களுக்குக் கீழே கைகளுக்கு இடையில் தன் கையை நுழைத்து அவளை அப்படியே தூக்கி அங்கிருந்த மேஜையில் அமர வைத்த தமிழ்.

அடுத்த நொடி அவள் முகத்தைப் பிடித்து வன்மையாக முத்தம் கொடுக்க ஆரம்பித்தான்.

இதை சற்றும் எதிர்பார்த்திராத இலக்கியா அவனைத் தன்னிடம் இருந்து விளக்கப் போராட…

தமிழ் இருக்கும் நிலையிலோ இலக்கியாவை விடுவதாக இல்லை.

அவளை, அவள் இதழை முத்தமிட்டவன் நிமிர்ந்து இலக்கியாவைப் பார்த்து, “நீதானே என்னை தேடி வந்த… இன்று நடப்பதற்கு நான் பொறுப்பாக முடியாது” என்றவன் அவளை தூக்கிக் கொண்டு போய் அப்படியே மெத்தையில் கிடத்த…

தமிழின் கண்கள் சிவந்து இருக்கவும்… அவன் உடல் சூடாக விறைத்து இருக்கவும்…. கட்டிலில் படுத்திருந்தவள் அவனை அப்போதுதான் முழுமையாகப் பார்த்தாள்.

அவன் சிவந்த கண்களும்… சூடேறிய முகத்தையும் பார்த்துக் கொண்டு பார்வையை கீழே கொண்டு செல்ல…

தமிழின் திண்தகாத்திரமான உடல் முறுக்கேறி இருக்க…

அவள் பார்வையை அவன் சிக்ஸ் பேக் வயிற்றில் படர விட்டபடி இடுப்பிற்குக் கீழே பார்க்க…

அவன் இடையில் கட்டி இருந்த துண்டை தாண்டி அவன் ஆண்மை விறைத்து அவளுக்கு அப்படியே தெரிய…

அதைப் பார்த்ததும் இலக்கியா கண்களை அகலமாக விரித்தவள் நிமிர்ந்து தமிழைப் பார்க்க…

“என்ன பாக்குற…” என்றவன் தன் இடையில் கட்டி இருந்த துண்டை அவிழ்த்து தூர வீசியவன் இலக்கியாவை நெருங்க….

“கடவுளே….. என்னை இவன் கிட்டே இருந்து” என்று கத்தியபடி தன் கைகளால் அவள் முகத்தை மூடிக் கொண்டாள்.

“இப்படி கண்ணை மூடிக்கிட்டு எத்தனை நாள் இருக்கப் போறே….” என்றவன் கட்டிலில் படுத்திருந்தவளின் கால்களைப் பற்றி தன் அருகில் இழுத்தவன் அவளை தலை முதல் பாதம் வரை பார்த்தவன்.

அவளை ஆடையில்லாமல் இப்போதே பார்க்க வேண்டும் என்று தமிழுக்கு தோன்றிய அடுத்த நொடி இலக்கியாவின் உடலில் இருந்த ஆடையைக் கிழித்து வீசினான்.

இதை முற்றிலுமாக எதிர்பார்த்திராத இலக்கியா அவனை அதிர்ச்சியோடு அவனைப் பார்க்க…அவள் அதிர்ச்சியாவதை எதையும் கவனிக்காமல் தன் தேவையைத் தீர்த்துக் கொள்ள இலக்கியாவை நெருங்கினான் தமிழ்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured