EPISODE 15
கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த ஓவியாவை கதவின் பின் இருந்து பார்த்துகொண்டு நின்றிருந்தான் ராகவ்.
“லைட் கூட போடாம என்ன பண்ணிட்டு இருக்காரு இந்த IPS, வெறும் பெட் ரூம் வெளிச்சத்துல என்ன பண்ணிட்டு இருக்கு நம்ம IPS? ஒருவேளை ரூம்ல இல்லையோ?” என்று யோசித்தபடி அறைக்கதவை சாத்திவிட்டு கதவின் அருகே இருந்த ஸ்விட்சை போடப்போக, அப்போது அவளைப் பின் இருந்து அணைத்த ராகவ், ஓவியாவை அலேக்காக கைகளில் ஏந்தியவன், “ஏன் டி திருட்டு கழுதை! இவ்ளோ நேரமாவா டி என்னை காக்க வைப்ப?” என்றான்.
அவன் தூக்கியதில் அதிர்ந்தவள், “டேய் டேய்! இப்படியா சத்தமில்லாம வந்து என்னை பயமுறுத்துவ? ஒரு நிமிஷம் எனக்கு ‘பக்கு’னு ஆகிடுச்சு. நான் ப்ரெக்னன்ட்டா இருக்குறது உனக்கு மறந்து போயிருச்சா?” என்று அவனை முறைத்தாள்.
“ஷ்… சாரி டி சாரி! உன்னை சர்ப்ரைஸ் பண்ணனும்னு ஆர்வத்துல இப்படி பண்ணிட்டேன். சாரி டி!” என்று மீண்டும் அவளிடம் மன்னிப்புக்கேட்டான்.
“சர்ப்ரைஸா? எதுக்கு?” என்றாள் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு.
“அது சும்மா. நீ ரூம்க்கு வர்ரதை கவனிச்சேன். உடனே ஒளிஞ்சுக்கணும்னு தோணிச்சு, அதான்” என்றான்.
“சரி சரி, அதான் சர்ப்ரைஸ் பண்ணிட்டே இல்ல! என்னை இறக்கிவிட்டுட்டு போய் லைட்டை போடு. இருட்டா இருக்கு இல்ல?” என்றாள்.
“ஓய் என் செல்லக்கழுதை! எதுக்கு டி லைட் ஆன் பண்ணனும்? நமக்குத் தான் இருட்டுல வேலை நிறைய இருக்கே” என்று அவள் நெற்றி முட்டினான்.
அவன் சொன்னதை அதிர்ந்து கேட்டவள், “இப்போத்தானே வந்திருக்கோம். மணி 8 தான் ஆகுது. அதுக்குள்ள என்ன அவசரம் என் காக்கி மாமாவுக்கு?” என்று அவன் சட்டை பட்டனை தன் விரல் கொண்டு நோண்டினாள்.
“செல்லக் கழுதை! இப்படி முனுமுனுன்னு பேசுறதுலையே எனக்கு இப்பவே நீ வேணும்னு தோணுது டி!” என்று அவள் கீழ் உதழைச் சுவைத்து விடுவித்தவன், “நைட் 8 மணியா இருந்தாலும், காலையில 8 மணியா இருந்தாலும் எனக்கு ஓகே தான். உனக்கு?” என்று அவளைப் பார்த்தான்.
கீழ் உதட்டில் படிந்த ராகவ்வின் எச்சிலை தன் நாக்குக் கொண்டு சுவைத்தவள், “எனக்கும் ஓகே தான்” என்று அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
“அப்பறோம் என்ன டி?” என்று அவளை மெத்தையில் கிடத்தி ஓவியாவின் அருகில் படுத்துக்கொண்டான்.
ராகவ் முகத்தை ஏறிட்டவள், அவன் மோகப்பார்வையின் ஆழம் தாங்க முடியாமல் வெட்கத்தில் நாணி தலை கவிழ, அவள் மோவாயில் விரல் வைத்து தன்னை பார்க்கச் செய்தவன், ஓவியாவின் நெற்றியில் முத்தம் வைத்து, “என் மேல கோபம் இன்னமும் இருக்கா டி உனக்கு?” என்றான்.
அவன் கண்களை ஏறிட்டவள், “திகழை கல்யாணம் பண்ணிக்கறேன்னு மணமேடை வரைக்கும் வந்தது தான் எனக்குக் கோபமே. அப்பறோம் அவளும் நீங்களும் காரணம் சொன்னதும் கோபம் கொஞ்சம் குறைஞ்சிருச்சு” என்றாள்.
“அப்போ இன்னமும் என்மேல உனக்கு கோபம் இருக்குன்னு சொல்றியா?” என்றான் ராகவ்.
“ம்ம் ஆமா” என்றாள்.
“இந்த கோபம் எதுக்காக?” என்றான்.
அவன் பார்வையில் இருந்து தன் பார்வையை தாழ்த்திக்கொண்டவள், “நேத்து டாக்டரை போய் பார்த்துட்டு வந்தோம். அவங்க நமக்குள்ள எல்லாம் நடக்கலாம்னு சொல்லியும், இப்போ வரை டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க இந்த முறுக்கு மீசை காக்கியை நினைச்சு எனக்கு கோபம்” என்று சட்டைக்குள் தெரிந்த ரோமத்தைப் பிடித்து இழுத்தாள்.
“ஷ்… ஹேய்! வலிக்குது டி!” என்று சிரித்தவன், “அப்போ என்னை விட என் செல்லக் கழுதை ரொம்ப ஆர்வமா இருப்பிங்க போல!” என்று தன் சட்டை பட்டன்களைக் கழட்டியபடி கேட்டான்.
“ம்ம்ம் அன்னிக்கு நம்ம ஒண்ணா இருந்தது உனக்கு தான் சுத்தமா நியாபகம் இல்ல. ஆனா எனக்கு அன்னிக்கு நடந்த ஒவ்வொன்னும் நினைப்பு இருக்கே. மறுபடி எப்போன்னு…” என்று அவள் அதற்கு மேல் சொல்ல வெட்கப்பட,
“அப்பறோம் திகள்கிட்டே ஏண்டி என்கிட்டே இருந்து உன்னை காப்பாத்த சொன்ன?” என்றான் செல்லக் கோபத்தோடு.
“ம்ம்ம் எனக்கு இருக்க ஆர்வத்தை விட உனக்கும் ஆர்வம் அதிகமா இருக்கும்னு தெரியும் காக்கி மாமா. உள்ளே வந்ததும் ஆர்வத்துல பாய்ஞ்சுட்டா, அப்பறோம் நம்ம குட்டிக்கு ஏதாவது வந்திருமோன்னு கொஞ்சம் பயம். அதான் அபப்டி சொன்னேன்” என்றாள்.
“ஹேய் ஓவி! எனக்கு இந்த அளவுக்கு கூட பொறுமை இல்லேன்னு நினைக்குறியா நீ?” என்றவன் சட்டையைக் கழட்டி போட்டுவிட்டு, அவள் முன் கை இல்லாத பனியனுடன் படுத்திருந்தான்.
அவன் திடகாத்திரமான உடலைக் கண்டு ஓவியாவின் விழி விரிந்தது. அன்று மொட்டை மாடி இருட்டில் இருவரும் ஒன்றாக இருந்த போது அவன் ஸ்பரிசம் மட்டுமே உணர்ந்து அதை இன்றும் நினைவில் வைத்திருப்பவளுக்கு, இன்று பெட் லாம்ப் வெளிச்சத்தில் ஒளிர்ந்த அவன் உடற்கட்டைக் கண்டு மெய் மறந்து போனாள்.
அவள் பார்வை சென்ற திசையைக் கவனித்தவன், தன் ஆர்ம்ஸை மடக்கி முறுக்கேறிய புஜங்களை அவளிடம் காட்டி, “பாத்தியா என் உடம்பை எப்படி வெச்சிருக்கேன்னு?” என்றான்.
அதை ஆசையாக தடவிப் பார்த்தவள், குனிந்து அவன் புஜத்திற்கு மென் முத்தம் வைத்தாள்.
“உனக்கு இப்படி கட்டுமஸ்தா இருக்குறது பிடிக்குமாடி?” என்றான்.
வெட்கப்பட்டுக்கொண்டே ‘ஆமாம்’ என்று ஓவியா தலையாட்ட, “அப்போ இங்கையும் முத்தம் கொடு” என்று எழுந்து மற்றொரு கையை முறுக்கிக் காட்டினான்.
சிரித்துக்கொண்டே அங்கும் முத்தம் வைத்தாள் ஓவியா.
“ஹே செல்லக் கழுதை! இது கூட ஒரு மாதிரி கிக்கா இருக்கு டி” என்றவன் தன் பனியனை வேகமாக கழட்டி, தன் படிக்கட்டு தேகத்தைக் காட்டி, “இங்க பாரு எவ்ளோ இருக்குன்னு! இங்கையும் முத்தம் கொடு” என்று நெஞ்சை நிமிர்ந்து அவளிடம் உடலை முறுக்கேற்றிக் காட்டினான்.
அவனின் இந்தச் செயலால் வெட்கம்கொண்டு, அவனை அப்படிப் பார்க்க கூச்சப்பட்டுக்கொண்டு முகத்தை மூடிக்கொண்டாள் ஓவியா.
“இப்போதான் டி இதெல்லாம் பிடிக்கும்னு சொன்ன. அப்பறோம் முகத்தை மூடிக்கிட்ட?” என்று அவள் கைகளைக் விலக்கி ஓவியாவின் முகத்தைப் பார்த்தவனுக்கு, அந்த சிறிய வெளிச்சத்தில் அவள் முகம் சிவந்து இருப்பதை கண்டுகொண்டவன், “வெட்கமா இருந்தா வேண்டாம். அப்பறோம் முத்தம் கொடு. இப்போ நான் உனக்கு முத்தம் கொடுக்கிறேன்” என்று அவள் கையை தன் மேல் போட்டுகொண்டு கட்டிலில் சரிந்தான்.
அவன் மார்பில் வைத்திருந்த ஓவியாவின் கை அவனை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டது. அவளை இடை வளைத்து தன் மீது தூக்கிப் படுக்க வைத்தவன், “ஓவியா! ஓவி டார்லிங்! ஏய் என்னைப் பாரு டி! உனக்கும் இதெல்லாம் வேணும்னு இருக்கு தானே?” என்றான்.
அவன் இந்த அருகாமையும் தீண்டலும் பெண் அவளுக்கு மூச்சுவிடவும் சிரமமாக இருந்தது. வேக மூச்செடுத்த படி அவனை ஏறிட்டவள், “ம்ம்ம்” என்றாள் ஒற்றை பதிலாக.
“அப்பறோம் இப்படி கூச்சபட்டுட்டே இருந்தா என்ன டி அர்த்தம்?” என்றான்.
அவன் மார்பு ரோமத்தில் கோலம் போட்டவள், “வேணும்னு தான் இருக்கு. ஆனா வெட்கம் வருதே” என்றாள்.
“இங்க பாரு டி. நீயும் நானும் முன்ன மாதிரி லவ்வர்ஸ் கிடையாது. இப்போ நம்ம புருஷன் பொண்டாட்டி டி. நமக்குள்ள இந்த வெட்கம், கூச்சம், தயக்கம் எல்லாம் இருக்கவே கூடாது” என்றவன், “சொல்லப்போனா எனக்கு இதுல எதுவுமே தெரியாது. ஒரு ஆர்வத்துல உன்னை இப்படி மேல போட்டு படுத்திருக்கேன்” என்றான்.
அவனைச் செல்லமாக நிமிர்ந்து பார்த்து முறைத்தவள், “உனக்கா எதுவும் தெரியாது? உனக்கு என்ன எல்லாம் தெரியும்னு எனக்குத் தான் தெரியும்” என்று சிரித்தாள்.
அவள் சிரிப்பதை ரசித்துக்கொண்டே, “அது… அது அன்னிக்கு நான் போதையில் இருக்க, அப்போ எனக்கே தெரியாம எனக்குள்ள தூங்கிட்டு இருந்த திறமையை உன்கிட்டே காட்டிட்டேன். ஆனா இப்போ எனக்கும் கொஞ்சம் பதட்டமா தான் டி இருக்கு” என்றான்.
“ம்ம்ம் அதே திறமை இன்னமும் உனக்குள்ள தான் இருக்கு. அதை கொஞ்சம் தட்டி எழுப்பினா இந்த பதட்டம் எல்லாம் காணாம போய்டும்” என்று அவன் மார்பில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.
“ஹேய்!” என்று கிள்ளிய இடத்தை வலியில் தேய்த்து விடபோனவன் கையைப் பிடித்து நிறுத்தியவள், குனிந்து தன் இதழ் கொண்டு அந்த இடத்தை வருடி முத்தம் வைத்தாள்.
மென்மையான அவள் இதழ் அவன் மார்பில் எச்சில் செய்ய, அதில் ராகவ் உணர்வுகள் மேல் எழுந்தது. அடுத்த நொடி தன் மேல் இருந்தவளை கீழே தள்ளி, அவளது இதழை தன் இதழுக்குள் தன் வசமாக்கி இருந்தான்.
உதடும் உதடும் உரசிக்கொள்ள, அவன் கைகள் ஓவியாவின் உடலில் மேய்ந்து கொண்டு இருந்தது. அவன் மேய்ச்சலுக்கு அவள் ஆடைகள் தடையாக இருக்க, அதைக் களைந்து இருந்தவன், அவள் ஆடையில்லா உடலை முதல் முறை கண்ணார கண்டு ரசித்தான்.
அவளுக்கோ கூச்சம் பிடுங்கித் தின்றது. நெளிந்துகொண்டே உடலை மறைக்க நினைத்தவள் கையைப் பிடித்து நிறுத்தியவன், பார்வையால் இவ்வ்ளவு நேரம் பருகியதை இதழ் கொண்டு சுவைக்க எண்ணி கீழ் நோக்கி வளைந்தான்.
அவனைத் தன் மேல் இருந்து கட்டிலில் தள்ளிவிட்டு, அருகில் இருந்த போர்வையை மொத்தமாக தன் உடலை மூடி மறைத்துக்கொண்டாள்.
“திருட்டு கழுதை! என்ன டி இது?” என்றான் ஏமாற்றமாக.
அவனுக்கு முதுகு காட்டி திரும்பிப் படுத்திருந்தவள், “நீ இப்படி எல்லாம் என்னை பார்க்குறது என்னவோ போல இருக்கு” என்றாள்.
“நான் பார்க்கத் தானே எல்லாம் இருக்கு. வேணும்னா நீயும் என்னை முழுசா பாத்துக்கோ. பாரு எனக்கு கூச்சமே இல்லை” என்று அவளை தன் பக்கம் பிடித்து வம்படியாக திருப்பினான்.
ராகவ்வின் திரண்ட தேகத்தை பார்வையாலே அளந்தவள், இடை வரை சென்றது. அதற்கு கீழே செல்லப்போன பார்வையை சட்டென்று மூடிகொண்டவள், “போடா! உனக்கு வெட்கமே இல்லை” என்றாள்.
“என் பொண்டாட்டிகிட்டே எனக்கு என்ன டி வெட்கம்?” என்று அவள் இதழை மீண்டும் சிறை செய்து தன் முத்ததை தீவிரப்படுத்தினான்.
அதில் கண்மூடி அவனுடன் ஒன்றிப் படுத்திருந்தவள், முத்தத்தின் மோகத்தில் தன்னை மறந்து இதழை அவனிடம் முழுவதுமாக கொடுத்திருந்தாள். மெல்ல அவன் கைகள் அவள் முகத்தில் இருந்து கீழ் நோக்கி போர்வைக்குள் நுழைந்து அவள் மென்மைகளை ஸ்பரிசித்தது.
ஏற்கனவே மோகம் அவள் உணர்வுகளைத் தூண்டிவிட்டிருக்க, அவள் மென்மைகளை அவன் விரல்கள் வருடவும், இருவருக்குமே அந்தத் தீண்டல் கன்னாபின்னாவென்று உணர்வுகளைத் தூண்டி விட்டிருந்தது. அடுத்த நொடி போர்வைக்குள் முழுவதுமாக தன்னை நுழைத்துக்கொண்ட ராகவ், அவள் முகத்தில் இருந்து எச்சில் செய்துகொண்டே போர்வைக்குள் நுழைந்தான்.
கண்கள் கிறங்கி அவனோடு கட்டிலில் ஒன்றிப்போனாள் ஓவியா.
போர்த்தி இருந்த போர்வைக்கு இப்போது விடுதலை கொடுத்து, அவளுக்கு போர்வையானான் ராகவ்.
இருவரும் சங்கமத்தில் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டு இருந்தனர் விடியும் வரை.
