Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 18

உன் ரகசிய ரசிகை நான் 18

by Layas Tamil Novel
881 views

EPISODE 18

காலை விடிந்ததும் எழுந்த ஆதி, தன் அருகில் துர்காவைப் பார்க்க, அவள் அங்கு இல்லாமல் இருக்கவே ஏமாற்றம் அடைந்தவன், எழுந்து அந்த அறையைச் சுற்றி நோட்டம் விட, பாத்ரூமுக்குள் இருந்து குளித்துவிட்டு வெளியே வந்தாள் துர்கா.

பாத்ரூமிற்குள் இருந்து வெளியே வந்த துர்காவைப் பார்த்த ஆதி, அவள் வெறும் உள் பாவாடையும் ஜாக்கெட்டும் மட்டும் அணிந்து, மேலே ஒரு துண்டை போர்த்திக் கொண்டு வெளியே வரவும், அவளை அப்படிப் பார்த்ததும் ஆதிக்கு துர்காவை அப்படியே அள்ளி அணைக்க வேண்டும் போல் தோன்றியது.

சிரமப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன், வலுக்கட்டாயமாக தன் பார்வையை அவள் மீது இருந்து திருப்பியவன், வேகமாக எழுந்து சென்று துர்கா இருக்கும் இடம் பார்க்காமல் பாத்ரூமுக்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டான்.

அவன் அப்படி செய்ததும் துர்காவுக்கு உள்ளுக்குள் மிகவும் வருத்தமாக இருந்தது. தன்னை நிமிர்ந்து பார்க்கக் கூட பிடிக்காமல் தான் அவன் இப்படி வேக வேகமாக பாத்ரூமுக்குள் எழுந்து சென்று விட்டான் என்று தப்பாகப் புரிந்து கொண்டாள் துர்கா.

தனக்கு அவனுடன் சந்தோஷமாக இருக்கக் கொடுத்து வைக்கவில்லை போல, அவன் தன்னை இன்னும் தன் தோழியாக மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று துர்கா நினைத்து வருத்தப்பட்டாள்.

ஆதி குளித்து வருவதற்குள் துர்கா ரெடியாகி கீழே சென்றுவிட, குளித்துவிட்டு வந்த ஆதி இடுப்பில் ஒரு துண்டோடு தலையைத் துவட்டிக்கொண்டு அந்த அறையைச் சுற்றி நோட்டம் விட்டான்.

அவன் பழகிய அறையில் பாதி கூட இல்லாத அந்த அறை முழுவதும் துர்காவின் சிறு வயது புகைப்படம் முதல் தற்போது வரை எடுத்த புகைப்படங்கள் ஃபிரேம் செய்து மாட்டப்பட்டிருந்தது.

அவளின் ஆறு வயது முதல் தற்போது வரை உள்ள போட்டோக்கள் அதில் இருந்தது. அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு வந்தவன், அவள் ஆறு வயது இருந்தபோது எடுத்துக் கொண்ட போட்டோவைப் பார்க்க, அவனுக்கு ஏதோ தோன்ற, அந்தப் போட்டோவை இதற்கு முன் வேறு எங்கோ பார்த்திருப்பதாகத் தோன்ற, அந்தப் போட்டோவை மட்டும் யாருக்கும் தெரியாமல் எடுத்து தன் பேக்குக்குள் வைத்துக் கொண்டான்.

அதன்பின் சென்று ரெடியாகி ஆதி கீழே வர, அங்கே விக்கியும் கதிரும் வந்திருந்தனர். அவர்களைப் பார்த்து “வாங்கடா” என்று கூறிக்கொண்டு சிரித்துக் கொண்டு அவர்கள் அருகில் வந்து அவன் அமர, ஆதியைப் பார்த்து “என்னடா அதிசயமா சிரிச்சிட்டு வர? உன்னை இப்படி எல்லாம் நாங்க பார்த்ததே இல்லையே இதுவரைக்கும்” என்று விக்கி கேட்க.

விக்கியை முறைத்த ஆதி, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் எப்போதும் போலத்தான் இருக்கேன். உனக்கு தான் கண்டதெல்லாம் தோனிட்டு இருக்கு” என்று அவன் வாயை அடைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த கதிருடன் ஆபீஸ் பற்றி கேட்க ஆரம்பித்தான்.

ஆபீஸ் விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தாலும் ஆதியின் கண்கள் துர்கா எங்கு இருக்கிறாள் என்று தேடிக்கொண்டு இருந்தது.

அப்போது சமையலறைக்குள் இருந்து சிரிப்பு சத்தம் கேட்க, அங்கே திரும்பிப் பார்த்த ஆதி துர்காவைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்துவிட்டான்.

இவர்கள் இருவரும் இன்று ஆதியின் வீட்டிற்கு செல்ல இருப்பதால், துர்காவின் அம்மா இவர்கள் இருவருக்கும் இரவே இவர்கள் இருவரும் உடுத்திக் கொள்ள புதுத் துணியைக் கொடுத்திருந்தார்.

ஆதி பச்சை கலர் சட்டை அதற்கு மேட்ச்சாக பேன்ட் அணிந்திருக்க, அவன் சட்டைக்கு மேட்ச்சாக பட்டு சேலை அணிந்து, லேசாக ஒப்பனை செய்து, சுருளாக பின்னலிட்டு, தலை நிறைய மல்லிகை பூ வைத்து, கீர்த்திகாவுடன் பேசிக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தாள்.

துர்காவைப் பார்த்ததும் அவள் அழகைப் பார்த்து மெய்மறந்து தான் போனான் ஆதி. அதுவரை பேசிக் கொண்டிருந்தவன் திடீரென்று அமைதியாகிவிட, கதிர் நிமிர்ந்து ஆதியைப் பார்க்க, ஆதியின் பார்வை வேறு புறம் இருக்க, அவன் எங்கே பார்க்கிறான் என்று திரும்பிப் பார்த்த கதிர், துர்கா வந்து கொண்டிருக்க, அதைப் பார்த்தவன், ‘ஓஹோ, ஆதி கூட ரூட்டை கரெக்டா போயிட்டிருக்கும் போல’ என்று நினைத்தவன்.

அப்படியே தன் பார்வையை நகர்த்த அவள் அருகில் கீர்த்திகா வந்து கொண்டிருந்தாள். ‘இவளா இது? உன்னைப் பார்த்தாலே எனக்கு ஆத்திரமா வருது’ என்று மனதிற்குள் அவன் நினைத்தாலும், அவன் பார்வை அவளை விட்டு நகரவே இல்லை.

சிம்பிளாக காட்டன் சுடிதார் அணிந்து ஃப்ரீ ஹேர் விட்டு ஒரு கிளிப்பை குத்தி இருந்தாள். கழுத்தில் ஒரு சின்ன செயின் அணிந்திருந்தாள். துர்காவுடன் சிரித்துப் பேசிக்கொண்டே உணவுகளைக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்து வைத்துக் கொண்டே தன் பார்வையை கதிர் இருக்கும் இடம் திருப்ப, அதுவரை அவளைப் பார்த்துக் கொண்டிருந்த கதிர் அவள் தன்னை பார்க்கிறாள் என்றதும் சற்றென்று தன் பார்வையை திருப்பிக்கொண்டு எதிரில் இருக்கும் விக்கிடம் பேசுவது போல அவனைப் பார்க்க, அவன் இவர்கள் இருவரையும் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தான்.

ஆதி இதையெல்லாம் சட்டை செய்துகொள்ளாமல் துர்காவை சைட் அடிப்பதிலேயே குறியாக இருந்தான். ‘அண்ணனும் தம்பியும் ஒரே வீட்ல அக்காவையும் தங்கச்சியையும் அவங்க அம்மா அப்பா முன்னாடியும் தைரியமாக சைட் அடிக்கிறானுங்க. ஆனா எனக்குன்னு ஒருத்தி வந்து மாட்ட மாட்டேங்கிறாளே? நான் மட்டும் இன்னும் சிங்கிளாவே சுற்றிக் கொண்டிருக்கிறேன்’ என்று வருத்தப்பட்டான் விக்கி.

சிறிது நேரத்தில் ஆதியின் பெற்றோரும் வந்துவிட, அவர்களிடம் எல்லோரும் பேசிக் கொண்டு அனைவரும் சென்று சாப்பிட்டுக்கொண்டு இருக்க, அப்போது கதிரின் பக்கத்தில் வந்த கீர்த்திகா, அவனிடம் ஒரு மூடிய தட்டை வைக்க, புரியாமல் அவளை நிமிர்ந்து பார்த்த கதிர் “என்ன?” என்பது போல அவளைக் கோபமாகப் பார்க்க, அவள் “ப்ளீஸ்” என்று அவனிடம் கெஞ்சி, “அந்த தட்டை ஓபன் செஞ்சு பாருங்க” என்று கூறினாள். கதிர் அவளை முறைத்துக்கொண்டு மூடி இருந்த தட்டை லேசாகத் திறந்து பார்க்க, அதில் ‘மன்னித்துவிடு கதிர்’ என்று எழுதி இருந்தது.

அதைப் பார்த்ததும் கதிருக்கு, ‘பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப சாரி கேக்குறாளா இவ? இவ முகத்திலேயே விழிக்க கூடாது என்று தான் இங்கு வராமல் இருந்தேன். துர்கா தான் என்னை வர சொல்லி கட்டாயப்படுத்திட்டாள்’ என்று கூறி அந்தத் தட்டை மூடி வைத்துவிட்டு சாப்பிடத் தொடங்க, அவன் ஏதாவது கோபப்படுவான் என்று எதிர்பார்த்து அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்திகாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அனைவரும் சாப்பிட்டு முடிக்க, ஆதியையும் துர்காவையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்றனர்.

துர்கா விளக்கு பற்ற வைத்து சாமி கும்பிட சொல்லிவிட்டு சாமிக்கு தீபாராதனை காட்டினார் துர்காவின் அம்மா. பின் தீபாரதனை தட்டைக் கொடுத்தவர், “தம்பி, இதுல இருக்குற குங்குமத்தை எடுத்து துர்காவுக்கு வெச்சு விடுங்க” என்று அவர் கூற.

ஆதி “என்ன?” என்பது போல புரியாமல் நிற்க, ‘அவன் தனக்கு குங்குமம் வைத்து விடு விரும்பவில்லை போல’ என்று நினைத்துக்கொண்ட துர்காவின் அம்மா, “குடுங்க, நானே வெச்சிக்கிறேன். ஆதிக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை” என்று கூறி அவர் கையில் இருந்த தட்டை வலுக்கட்டாயமாக வாங்கி, அதில் இருந்து குங்குமத்தை எடுத்து அவளே வைத்துக் கொண்டாள்.

தான் அவளுக்குக் குங்குமம் வைத்து விடுவது பிடிக்காமல் தான் அவள் வலுக்கட்டாயமாக வாங்கி குங்குமத்தை வைத்துக் கொண்டாள் என்று ஆதி தப்பாக நினைத்துக் கொள்ள, இருவரும் ஒருவரை ஒருவர் இப்படி நினைத்துக் கொண்டிருக்க, விக்கி அவர்கள் இருவரையும் பார்த்ததும், ‘இது சரி இல்லையே. ஆளுக்கு ஒரு புறமா போய்ட்டு இருந்தா எப்ப தான் ரெண்டு பேரும் ஒண்ணு சேருவது?’ என்று நினைத்தவன், ‘சீக்கிரமே இதற்கு ஒரு முடிவு கட்டணும்’ என்று நினைத்துக் கொண்டான் விக்கி.

ஆதி அவள் தன்னை குங்குமத்தை விட அனுமதிக்கவில்லை என்று நினைத்தவன் கோபத்தில் துர்காவைப் பார்க்க. அவன் கோபத்தில் இருப்பதை அறியாமல் துர்கா தன் பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தாள்.

பின் அனைவரும் கூறிவிட்டு கிளம்பிப் போக, துர்கா கீர்த்திகாவையும் அவள் அம்மாவையும் கட்டிக்கொண்டு அழுதாள். துர்காவின் அம்மா “அழாதடா. இங்க பக்கத்துல தானே இருக்கு வீடு. நீ நினைச்சதும் அம்மா அப்பாவை பார்க்க வந்திரு. அப்படி இல்ல, எங்களை பார்க்கணும்னு தோணுச்சுன்னா சொல்லிவிட்டு, நாங்க ரெண்டு பேரும் உன்னை பார்க்க உங்க வீட்டுக்கு வந்திருவோம். மாப்பிள்ளை வீட்டுக்கு போகும்போது அழுதுட்டு போகாதடா கண்ணு. சிரிச்சிட்டு சந்தோஷமா போயிட்டு வா” என்று அவளைத் தேற்றி அவள் அம்மா அனுப்பி வைக்க, “சரி” என்று கூறி அவர்களுடன் கிளம்பிச் சென்றாள் துர்கா.


துர்கா வீட்டிலிருந்து கிளம்பி நேராக அவர்கள் இருவரையும் அருகில் இருந்த ஒரு பிரபலமான கோவிலுக்கு அழைத்துச் சென்றனர் விசாலாட்சியும் வெங்கடாசலமும்.

அவர்கள் இருவருக்கும் இந்த கோயிலில் வேண்டுதல் வைத்திருப்பதால், அந்த வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு, அதன் பிறகு ஆதி வீட்டிற்கு செல்லலாம் என்று கூற, “அம்மா என்ன இது? இதெல்லாம் முன்னாடியே சொல்ல மாட்டீங்களா? எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் ஆபீஸ் வர போகணும்” என்று கூற, “உன் கிட்ட நான் என்ன சொல்லி இருந்தேன்? ஒரு பத்து நாளைக்கு நீ ஆபீஸ் போக கூடாதுன்னு சொல்லி இருந்தேன். ஆனா நீ என்னடான்னா நேத்து ஆபீஸ் போனதும் பத்தாதுன்னு துர்காவையும் சேர்த்து உன் கூட வேலைக்கு அழைத்துக்கொண்டு போயிருக்க. நான் சொல்றதை கேட்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா நீ? இன்னும் ஒரு வாரத்துக்கு நீ ஆபீஸ் பக்கம் போனேன்னு கேள்விப்பட்டேன், அப்புறம் நடக்கிறதே வேற” என்று அவனை மிரட்ட, விக்கியையும் கதிரையும் பார்த்து, “ஆதி இந்த ஒரு வாரமும் ஆபீஸ் பக்கம் வந்தால் எனக்குத் தெரிஞ்சது, உங்க ரெண்டு பேரையும் தொலைச்சிடுவேன்” என்று அவர்கள் இருவரையும் மிரட்ட.

கதிர் ஆதி அண்ணனிடம், “கொஞ்ச நாளைக்கு ஆபீஸ் பக்கமே தயவு செய்து வந்துவிடாதே. என்னால் அம்மா கிட்ட தினமும் திட்டு வாங்க முடியாது. ஒரு வாரம் தானே, அட்ஜஸ்ட் பண்ணிட்டு பேசாம துர்கா கூட வீட்டிலேயே இரு” என்று அவன் கூட, வேறு வழி இல்லாமல் ஆதிக்கும் “சரி” என்று சொன்னவன், கோவிலுக்குள் சென்று அவர்களுக்காகச் சொல்லப்பட்ட பரிகாரத்தைச் செய்ய ஆரம்பித்தனர் துர்காவும் ஆதியும்.

சிறு பரிகாரம் தான் என்பதால் சீக்கிரமே பரிகாரத்தை முடித்துவிட்டு அனைவரும் கிளம்பி ஆதியின் வீட்டிற்கு வர மதியம் ஆகிவிட்டது.

ஏற்கனவே முத்து தாத்தாவிடம் இவர்கள் மதியம் சாப்பிட வருவார்கள் என்று விசாலாட்சி கூறிவிட, அனைவரும் சாப்பிட்டுவிட்டு கிளம்ப இப்போது துர்காவும் ஆதியும் மட்டும் அங்கே இருந்தனர்.

இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை, என்ன பேசிக் கொள்வது என்றும் தோன்றவுமில்லை. சிறிது நேரம் அமைதிக்குப் பின்பு ஆதி துர்காவைப் பார்த்து, “நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறதா இருந்தா ரெஸ்ட் துர்கா. நான் என்னோட ஃபிரெண்ட்ஸ் கொஞ்ச பேரு பார்க்க வேண்டி இருக்கு. அவங்கள பாத்துட்டு நான் வந்துட்றேன். நீ போய் ரெஸ்ட் எடு” என்றான். அவளும் “சரி ஆதி” என்றவுடன், அவன் செல்லும் வரை காத்திருந்து விட்டு, தன்னறைக்கு சென்று உடை மாற்றி விட்டு படுத்தவள் உறங்கி விட்டாள்.


வீட்டிலிருந்து கிளம்பிய ஆதி, நேராக ஒரு பிரபல ஹோட்டலுக்கு செல்ல, அங்கே அவனுக்காக முன்கூட்டியே வந்து காத்திருந்த அவனுடைய நண்பன் வினய்.

ஆதியைப் பார்த்ததும் எழுந்து நின்ற தன் நண்பனுக்கு கை கொடுத்து வாழ்த்திய வினய், “வாழ்த்துக்கள் ஆதி. ரொம்ப வருஷம் கழிச்சு எப்படியோ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நான் கேள்விப்பட்டேன். கதிரும் விக்கியும் எனக்கு போன் பண்ணி சொன்னாங்க.”

“நீ திடீர்னு போன் பண்ணி என்ன பாக்கணும்னு வர சொன்னப்போ, உனக்கு ரெண்டு பேரும் உன் கூட வருவானுங்கன்னு தான் நினைச்சேன். ஆனா நீ மட்டும் தனியா வந்து இருக்கியே? என்ன?” என்று கேட்டான் வினய்.

“இது ரொம்ப முக்கியமான விஷயம் வினய். அதனாலதான் அவங்க ரெண்டு பேர் இடமும் சொல்லாம நான் உன்னை பர்சனலா மீட் பண்ணனும் என்று வரச்சொன்னேன்” என்றான் ஆதி.

“என்ன, பர்சனலா மீட் பண்ணனும் அப்படின்னா ஏதோ முக்கியமான விஷயம் தான் இருக்கணும். சொல்லு ஆதி, என்ன விஷயம்?” என்று கேட்டான் வினய்.

தன் பக்கத்திலிருந்த போட்டோவை எடுத்து வினயிடம் காட்டிய ஆதி, “இந்த போட்டோவில் இருப்பது என்னுடைய வைஃப் துர்கா. இது அவளுடைய சின்ன வயசு படம்.”

“இந்த போட்டோவை நான் இதற்கு முன்னாடி எங்கேயோ பார்த்து இருக்கேன். என்கிட்ட தான் எனக்கு சரியா அடையாளம் தெரியல. இவளுடைய குழந்தை வயசு போட்டோவை நான் துர்காவோட அப்பா கிட்ட கேட்டதுக்கு, அவர் அப்போ அந்த போட்டோவை எடுக்கல, ‘அவ ஆறு வயசு இருக்கும்போது தான் போட்டோ எடுத்தோம்’ என்று ஏதோ கூறி என்னிடம் சமாளிக்கிறார். இவளைப் பற்றி ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று எனக்கு என்னுடைய உள் உணர்வு சொல்லிக் கொண்டே இருக்கிறது. நீ இந்த போட்டோவை வைத்து எனக்காக கொஞ்சம் விவரங்களை சேகரித்து தர முடியுமா? துர்காவைப் பற்றிய விவரம் ஏதாவது கிடைத்தால் எனக்கு உடனடியாக நீ சொல்ல வேண்டும்” என்று கூறினான் ஆதி.

போட்டோவை வாங்கிப் பார்த்த வினய், “ஆதி, என்னால எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் எல்லா விஷயமும் கலெக்ட் பண்ணிட்டு உனக்கு கால் பண்றேன்” என்று கூறி, சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் கிளம்பிச் சென்றனர்.

தன் நண்பனைப் பார்த்துவிட்டு தன் வீட்டிற்கு வந்த ஆதி உள்ளே வர, முத்து தாத்தா அவனைப் பார்த்து “தம்பி, வந்துட்டீங்களா? காபி எதுவும் குடிக்கிறீங்களா?” என்று கேட்க, “இல்ல தாத்தா, நான் வெளியே என் ஃபிரெண்ட்ஸ் பார்த்துட்டு தான் வருகிறேன், அங்கேயே சாப்பிட்டு தான் வந்தேன்” என்றான் ஆதி.

அவரிடம் பேசிக் கொண்டே கண்களை நோட்டம் விட, அவன் பார்வையில் அர்த்தம் புரிந்து கொண்ட முத்து தாத்தா, “தம்பி, துர்கா பாப்பா நீங்க போனதும் மேல ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்கிறேன்னு போச்சு தம்பி. இன்னும் கீழே வரவே இல்ல. சரி, நானும் ஏதோ அலுப்புல இருப்பாங்கன்னு சொல்லிட்டு துர்கா பாப்பாவை எழுப்பவே இல்ல. தம்பி, நீங்க வேணா பாப்பாவை போய் உன் மேல பார்க்கிறீங்களா?”

“ரொம்ப நேரமா தூங்குறாங்கன்னு நினைக்கிறேன். இப்பவே மணி ஆறு ஆயிடுச்சு. ராத்திரி முழிச்சுகிட்டாங்கன்னா தூக்கம் வராது பாப்பாவுக்கு” என்று அவர் கூற, அவன் “சரி” என்று தலையாட்டியவாறு தன் ரூமுக்குச் சென்றான்.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன் அங்கு துர்கா படுத்திருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியாக முகம் சுளித்தான்.

அவள் அம்மா வீட்டில் அணிந்திருந்தது போல டீ-சர்ட்டும் ட்ரௌசரும் அணிந்து படுத்திருந்தாள். அது கூட பிரச்சனை இல்லை. ஆனால் தன் கையையும் காலையும் பப்பரப்ப என்று பரப்பிக் கொண்டு கட்டிலில் படுத்திருக்க, அவளை அவ்வாறு பார்த்ததும் ஆதிக்கு கோபம் வர, வேகமாகச் சென்றவன் துர்காவின் தோளைத் தொட்டு உலுக்கி எழுப்ப.

தூக்கத்திலேயே எழுந்த துர்கா, அவன் கழுத்தில் தன் கையைப் போட்டு தன்னோடு சேர்த்து இழுக்க, அதிர்ச்சியான ஆதி அவள் மேல் போய் விழுந்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured