Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 21

உன் ரகசிய ரசிகை நான் 21

by Layas Tamil Novel
769 views

ஆதிடன் சண்டை போட்டுவிட்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றாள் துர்கா.

“அவளே வந்து, என் பணத்திற்காகத்தான் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன் என்று சொல்ல வைப்பேன்” என்று சபதம் எடுத்துக் கொண்ட ஆதி, எழுந்து சென்று துர்கா விட்டுப் போன மருந்தை எடுத்து அவனது காயங்களுக்குப் போட ஆரம்பித்தான். முகத்தில் இருந்த காயங்களுக்கு மருந்தை போட்டு முடித்துவிட்டு, படுத்து உறங்கிவிட்டான்.

ஆனால், இங்கு அவனிடம் “டைவர்ஸ் கையெழுத்து போட்டுத் தருகிறேன்” என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியே வந்த துர்கா, நேராக வீட்டுக்கு வெளியே சென்று தோட்டத்தில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

“ஏன் ஆதி இப்படிப் பண்ணின? உனக்கு என் காதல் புரியவே இல்லையா? நான் உன் மேல வச்சிருக்கிற பாசம் உன் கண்ணுக்குத் தெரியவில்லையா? இப்படி வெடுக்கென்று ‘நான் உனக்கு டைவர்ஸ் கொடுக்கிறேன்’ என்று சொல்லிட்டேயே? ஆதி, உன்னை டைவர்ஸ் பண்றதுக்காகத்தான் நான் இவ்வளவு வருஷம் காத்திருந்தேன்” என்று கூறி, கால்களை மடித்து சேரின் மேல் அமர்ந்தவள், தன் மடியில் முகத்தை வைத்து அழ ஆரம்பித்தாள்.

எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. திடீரென்று மழை பெய்ய ஆரம்பிக்க, அப்போதுதான் தான் வெளியே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருப்பதை உணர்ந்த துர்கா, நிமிர்ந்து மழையைப் பார்த்தாள். ‘அந்த மழையுடன் சேர்ந்து தன் கண்ணீரும் கரைந்து போக வேண்டும்’ என்று மனதில் நினைத்தவள், மீண்டும் ஆதி தனக்கு டைவர்ஸ் அளிக்கிறேன் என்று கூறியதை தாங்க முடியாமல் அழத் தொடங்கினாள்.

மழை நின்ற பாடும் இல்லை, துர்காவின் அழுகையும் நின்ற பாடு இல்லை. அவள் அழுது கொண்டே மழையில் நனைந்திருக்க, அப்போது அவள் தோள் மீது ஒரு கை வந்து அவளை அழுத்தமாகத் தொட்டது. அழுது கொண்டே யார் என்று திரும்பிப் பார்த்த துர்கா, அங்கே முத்து தாத்தா குடையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார்.

“டேய் துர்கா பாப்பா! எவ்வளவு நேரம் மழையில நனைஞ்சுட்டு இருந்திருக்க? நான் தண்ணி குடிக்கலன்னு எந்திரிச்சு வந்தப்பதான் வாசல் கதவு திறந்து இருக்கிறதைப் பார்த்தேன்டா. ஏன்டா இந்த நேரத்துல இப்படி இங்கு வந்து உட்கார்ந்திருக்க?” என்று அவளிடம் முத்து தாத்தா கேட்க, தன்னிடம் கரிசனையாகப் பேச இந்த வீட்டில் முத்து தாத்தாவாவது இருக்கிறார் என்று எண்ணி துர்காவிற்கு மேலும் அழுகை வந்தது. எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் முத்து தாத்தா அமைதியாக நின்று, துர்கா நனையாமல் குடை பிடித்துக் கொண்டிருக்க, அவரும் அவளுடன் சேர்ந்து நனைவதைப் பார்த்த துர்காவிற்கு, எழுந்து உள்ளே செல்வதுதான் சரி என்று தோன்றியது. அங்கிருந்து எழுந்து, “வாங்க தாத்தா! நம்ம உள்ள போலாம். ஒண்ணும் இல்லை” என்று கூறி, அவரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல், அவரிடம் இருந்து குடையை வாங்கி, அவருக்கும் சேர்த்து குடை பிடித்துக் கொண்டு இருவரும் உள்ளே சென்றனர்.

உள்ளே வந்ததும் முத்து தாத்தாவை சென்று படுக்கச் சொல்லிவிட்டு, அவளும் தன் அறைக்குச் சென்று உடை மாற்றச் செல்ல, அங்கே ஆதி நன்றாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.

“நான் கோபித்துக்கொண்டு ரூமை விட்டு வெளியே போனோமே, என்ன செய்கிறாள் என்று கூடப் பார்க்க இவனுக்குத் தோன்றவில்லை இல்லையா? அவ்வளவு நெஞ்சுறுதிக்காரனாக இருக்கிறானே ஆதி?” என்று நினைத்தவள், ஒரு வெற்றுப் புன்னகையை அவனைப் பார்த்து சிந்திட்டு, நேராக குளியலறைக்குப் போனாள். குளித்து முடித்து வேறு இரவு உடையை போட்டுக்கொண்டு வந்தவள், ஆதிக்கு அருகில் சென்று தூங்க பிடிக்காமல், நேராக அங்கிருந்த படிப்பு அறைக்குச் சென்றாள்.

ஆதிக்குத் தெரியாமல் தன் வீட்டில் இருந்து கொண்டு வந்த அவளது நாட்குறிப்பை எடுத்து, அன்றைய தினம் காலை முதல் இப்போது வரை நடந்த, அவளை பாதித்த விஷயங்களை எழுத ஆரம்பித்தாள். துர்காவிற்கு இந்த பழக்கம் எப்போது இருந்து வந்தது என்று தெரியாது. ஆனால் அவள் தினமும் நாட்குறிப்பு எழுதுபவளும் இல்லை. எப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறாளோ அல்லது எப்போது மிகவும் சோகமாகவோ, அழுத்தத்துடனோ இருக்கிறாளோ, அன்றெல்லாம் நாட்குறிப்பு எழுதுவது வழக்கமாக கொண்டிருந்தாள் துர்கா. இன்று ஆதி அவளிடம் நடந்து கொண்டது, அதனால் தன் இத்தனை வருட காதல் வீணாய் போய்விட்டது என்றும், அவளுக்கு ஆதி மீது இருந்த காதலும், இப்போது வந்திருக்கும் வெறுப்பு வரை எழுதி இருந்தாள்.

இரவு வெகுநேரம் ஆகியும் தூக்கம் வராமல் இங்கும் அங்கும் நடந்து கொண்டு, எதையாவது செய்து தன் மனதின் சிந்தனையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அலைந்தவள், ஒரு வழியாக மேஜை மீது தலை வைத்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தவள், அப்படியே உறங்கி விட்டிருந்தாள்.

அங்கு துர்கா ஆதியைக் குறித்து நினைத்து அழுது புலம்பிக் கொண்டிருக்க, இங்கு துர்காவின் தங்கை கீர்த்திகா, கதிர் தன்னிடம் பாராமுகம் காட்டுவதை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டு படுத்திருந்தாள்.

அவனை நேருக்கு நேராக பார்த்து அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எவ்வளவோ முறை முயற்சித்தாலும், அவன் இவளைத் திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட, கீர்த்திகாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எப்படியாவது அவனிடம் பேசிவிட வேண்டும் என்றுதான் அன்று அவன் தன் வீட்டிற்கு வந்த பொழுது அவனிடம் பேசுவதற்கு முயற்சி செய்தாள். ஆனால் அவன் இவள் இருக்கும் திசை திரும்பியும் பார்க்கவில்லை. அவனிடம் மன்னிப்புக் கேட்டு ஒரு தட்டில் எழுதிக் கொடுத்தும், அதைப் பார்த்துவிட்டு ஒரு பேச்சிருக்காவது அவளைப் பார்த்து “பரவாயில்லை” என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால், அவள் இன்று நிம்மதியாக இருந்திருப்பாள். ஆனால் கீர்த்திகாவை அவன் முற்றிலும் வெறுத்துவிட்டவன் போலவே நடந்து கொள்ள, கீர்த்திகாவின் மனம் ஏனோ மிகவும் கஷ்டப்பட்டது.

அவனிடம் மன்னிப்புக் கேட்டுத்தான் தனக்கு நிம்மதியாக தூக்கம் வரும் என்று நினைத்தவள், அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்று தீர்மானித்தாள். அவன் எண்ணை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்க, அவளுக்கு சட்டென்று விக்கிதான் ஞாபகம் வந்தது. துர்கா வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, திருமணத்திற்கு முன் விக்கி அடிக்கடி இவர்கள் வீட்டிற்கு துர்காவைப் பார்க்க வருவது வழக்கம். அதனால் விக்கியுடன் கீர்த்திகாவின் உறவு நன்றாகவே இருந்தது. அவனை தன் அண்ணன் என்பது போலவே பாவித்து கீர்த்திகா அவனிடம் உரிமை கொண்டாடி, எப்போதுமே பேசுவாள்.

மற்ற விஷயங்கள் என்றால் தைரியமாக அவனிடம் இது வேண்டும் என்று கேட்டு விடுவாள். ஆனால் கதிரின் எண்ணை எப்படி அவனிடம் கேட்பது? அப்படி கேட்டால் அவன் தன்னை என்ன நினைத்துக் கொள்வான் என்று யோசித்தவள், ஆனால் அவனைத் தவிர அவன் எண்ணை வேறு யாரிடமும் கேட்கவும் முடியாது என்று ஒரு முடிவுக்கு வந்தவளாக, தன் அலைபேசியில் இருந்து விக்கிக்கு “ஹாய் அண்ணா” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

அவள் குறுஞ்செய்தி அனுப்பிய நேரம் இரவு ஆகிவிட்டதால், குறுஞ்செய்தி அனுப்பியதும் அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. “சரி, அவன் தூங்கிக் கொண்டிருப்பான். எப்படியும் தன் குறுஞ்செய்தியை பார்த்துவிட்டு காலையில் அழைப்பான்” என்று நினைத்தவள், அலைபேசியை வைத்துவிட்டு படுக்கப் போனாள். அவள் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வரும் சத்தம் கேட்க, அது அவனாகத்தான் இருக்கும் என்று அவசர அவசரமாக எழுந்து தன் அலைபேசியை எடுத்துப் பார்க்க, விக்கிதான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.

அதை திறந்து பார்க்க, “சொல்லுடா தங்கம். உனக்கு இந்த அண்ணனோட ஞாபகம் இப்பதான் வருதா? உன் அக்காவை கல்யாணம் பண்ணி கொடுத்ததிலிருந்து நீ என்கூட சரியாகப் பேசறதே இல்லை. இந்த அண்ணன் என்ன பண்ணினேன்? என்கிட்ட சரியாவே பேசலை” என்று அவன் பெரிதாகப் பதில் அனுப்பியிருக்க, அவன் அனுப்பிய குறுஞ்செய்தியைப் படித்தவள் மெலிதாக சிரித்துவிட்டு, அதற்குப் பதில் அனுப்பினாள். “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா. நீங்களும் வேலையில ரொம்ப பிசியா இருந்தீங்க. அன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்திருந்த போதும், எல்லாருமே பரபரப்பாக இருந்ததால என்னால சரியா பேச முடியல. என்ன தப்பா எடுத்துக்காதீங்க, சாரி அண்ணா” என்று அவனுக்குப் பதில் அனுப்பியிருந்தாள்.

“சரிடா பரவாயில்லை. நீ இப்போ எதுக்கு இந்த நேரத்துல எனக்கு குறுஞ்செய்தி பண்ணி இருக்க? நீ எப்பவுமே இந்த நேரத்துல குறுஞ்செய்தி பண்ண மாட்டியே?” என்று அவன் கேட்க, “அது, அது வந்து… அண்ணா, நான் ஒண்ணு உங்ககிட்ட கேட்பேன், நீங்க என்ன தப்பா எடுத்துக்கக் கூடாது” என்று குறுஞ்செய்தி அனுப்ப, அதைப் படித்ததும் அவன் திரும்பவும் “பரவாயில்ல கேளுடா, என்கிட்டதானே கேக்குற? நான் எதுவும் நினைக்க மாட்டேன்” என்று சொல்ல, அதைப் படித்துவிட்டு சிறிது தயங்கினாள். பிறகு தைரியம் வந்தவளாக, “அண்ணா எனக்கு கதிரோட எண் கிடைக்குமா?” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

அந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதும், படிக்கப்பட்டது என்று இரண்டு நீல நிற குறிகள் காட்ட, ஆனால் கதிரிடமிருந்து எந்த பதிலும் வராமல் இருக்கவே, கீர்த்திகாவிற்கு பயம் பிடித்துக்கொண்டது. தான் இந்த நேரத்தில் கதிரின் எண் வேண்டும் என்று கேட்டது, அவன் தன்னை எதுவும் தப்பாக நினைத்துக் கொண்டானோ என்று பயந்தவளாக திரும்பவும் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்தாள். “அண்ணா, நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க. அன்னைக்கு துர்காவோட புது வீட்டுக்கு போயிருந்தப்போ கதிர் கூட எனக்கு ஒரு சின்ன சண்டை வந்துருச்சு. அதனால அவரு என் கூடப் பேசல. என்ன இருந்தாலும் அவரு என்னோட அக்கா வீட்டுக்காரருடைய தம்பியாச்சே. நாங்க எப்படி இருந்தாலும் அடிக்கடி சந்திக்க வேண்டி வரும். இப்படி பேசாமல் இருந்தால் அது ஒருத்தருக்கு ஒருத்தர் சங்கடமா இருக்கும் அண்ணா. நீங்களே அன்னைக்கு பார்த்திருப்பீங்க, நம்ம வீட்டுக்கு வந்திருந்தப்ப கூட கதிர் என்கிட்ட சரியா பேசல. அதனால நான் அன்னைக்கு அவர் கூட சண்டை போட்டதுக்கு மன்னிப்புக் கேட்கத்தான் அவர் எண் கேட்கிறேன். அவரை நேரா பார்த்து கேட்கலாம் என்று பார்த்தால், அவர் என் முகத்தைப் பார்க்கவே மாட்டேங்குறாரு” என்று கீர்த்திகா ஒரு பெரிய பத்தி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள் விக்கிக்கு.

அதைப் படித்த விக்கி, “இப்போ என்ன உனக்கு அவனோட எண் வேணும். அவன்கிட்ட நீ மன்னிப்புக் கேட்கணும், அவ்வளவுதானே? சரி, நான் இப்போ உனக்கு அவனோட எண் அனுப்புறேன். ஆனா நீ இப்போ குறுஞ்செய்தி பண்ண வேண்டாம். அவன் வேற ஒரு ஆபீஸ் வேலைல இருக்கான். இப்போ நீ குறுஞ்செய்தி அனுப்பினால் அதையும் பார்த்துட்டு ரொம்ப அதிகமா கோபப்படுவான். நாளைக்கு நான் அவனை சந்திக்கக் கூட்டிட்டு வரேன். எங்கே கூட்டிட்டு வரட்டும் மட்டும் சொல்லு” என்று கேட்க, சிறிது நேரம் அவன் அனுப்பிய குறுஞ்செய்தியைப் பார்த்தவள், “அண்ணா, என் கல்லூரிக்கு எதிரில் ஒரு காபி கடை இருக்கு. அங்கே கூட்டிட்டு வர முடியுமா அண்ணா? கதிர் எதுவும் என்ன நேரா பார்க்கறப்போ ரொம்ப கோபப்பட்டு பேசிட மாட்டானே?” என்று அவள் குறுஞ்செய்தி அனுப்ப, “அதெல்லாம் ஒண்ணும் இல்லடா. நான் பார்த்துக்கிறேன்” என்று கூறியவன், “சரிடா தூங்கு, குட் நைட். நான் உன்னோட எண்ணை உனக்கு அனுப்புறேன்” என்று கூறிவிட்டு, கதிரின் எண்ணை அவளுக்கு அனுப்பிவிட்டு அலைபேசியை வைத்தான்.

“இவனை எப்படி நாளைக்கு கீர்த்திகாவைப் பார்க்க கல்லூரிக்கு கூட்டிட்டு போறது?” என்று யோசித்தவன், “சரி, எதுவா இருந்தாலும் காலையில பார்த்துக்கலாம். இப்போ தூக்கம்தான் ரொம்ப முக்கியம்” என்றவன், அலைபேசியை வைத்துவிட்டுப் படுத்துக் கொண்டான்.

காலையில் தூங்கி எழுந்த ஆதி, எழுந்தவுடன் தன் அருகில் துர்கா இருக்கிறாரா என்று திரும்பிப் பார்க்க, அவள் அங்கு இல்லாததும், நைட்டே அவள் அறைக்கு வெகுநேரமாகியும் வரவில்லையே, எங்கே போனாள் என்று யோசித்தவன், எழுந்து குளியலறைக்குச் சென்று தயாராகிவிட்டு வெளியே வர, படிப்பு அறையில் சிறியதாக ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அங்கே யார் என்று யோசித்தவன், படிப்பு அறை கதவைத் திறந்து பார்க்க, அங்கே மேஜை மீது தன் கைகளையும், கால்களையும் குறுக்கிக் கொண்டு துர்கா உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவள் தன் அருகில் வந்து படுக்கையில் படுக்காமல் இங்கே வந்து படுத்திருப்பதைப் பார்த்த ஆதிக்கு கோபம் கோபமாக வந்தது. “அவ்வளவு தூரம் என்னை வெறுப்பவள், எதற்காக என்னை திருமணம் செய்து இருக்க வேண்டும்? எப்படி இருந்தாலும் இருவரும் காலம் முழுவதும் ஒரே அறையில்தான் இருக்க வேண்டும். இப்படி என்னைப் பார்க்க அருவருப்பட்டுக்கொண்டு படிப்பு அறையில் வந்து படுத்திருக்கிறாள்” என்று அவள் மீது கோபம் வந்தவன், அவளையே சிறிது நேரம் நின்று கோபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு என்ன நினைத்தானோ, வேகமாகத் திரும்பி அறைக்குள் வந்தவன், நேராக குளியலறைக்குச் சென்றான். வெளியே வரும்போது கையில் ஒரு வாளியில் தண்ணீரோடு வந்தான்.

குளியலறையில் இருந்து வெளியே வந்தவன், நேரே துர்கா இருக்கும் படிப்பு அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன், தன் கையில் இருக்கும் வாளியில் இருந்த தண்ணீர் முழுவதையும் அப்படியே தூக்கி அவள் மேல் ஊற்ற, தூங்கிக் கொண்டிருந்த துர்காவின் மீது குளிர்ந்த தண்ணீர் படவும், பதறி அடித்துக் கொண்டு எழுந்தவள், “என்ன?” என்று புரியாமல் தன்னைச் சுற்றிப் பார்க்க, அவள் எதிரே ஆதி கையில் வாளியுடன் கோபமே உருவாக நின்றிருந்தான். அவன் தான் தன் மீது தண்ணீரை ஊற்றி இருக்கிறான் என்பது, அவன் கையில் இருந்த வாளியைக் கண்டதுமே புரிந்து கொண்டாள்.

தன் மீது அவனுக்கு அப்படி என்ன கோபம்? “நான் அப்படி இவனுக்கு என்ன பாவம் செய்தேன்?” என்று தனக்குத் தானே கோபம் வர, “ஒரு பெண்ணின் மனதைப் புரிந்துகொள்ள முடியாத இவனையா நான் இத்தனை வருடங்கள் உருகி உருகி காதலித்தேன்?” என்று நினைக்கையில் தன்னையே சபித்துக்கொண்ட துர்கா, ஆதியைப் பார்த்து எதுவும் கூறாமல் ஒரு வெற்றுப் புன்னகையை அவனைப் பார்த்து உதிர்த்துவிட்டு, அவனை கடந்து செல்ல, தன்னை அவள் பார்த்து ஒரு அலட்சியப் பார்வை பார்த்து சிரித்துவிட்டு செல்கிறாள் என்று அவள் மீது கோபம் கொண்டவன், துர்கா அவனைத் தாண்டிச் சென்று கொண்டிருக்க, வேகமாக தன் கையில் இருந்த வாளியைத் தூக்கி எறிய, அது “டமார்” என்று சுவற்றில் மோதி உடைய, சத்தம் கேட்டு திடுக்கிட்ட துர்கா திரும்பி அவனைப் பார்க்க, அவன் அவளையே முறைத்துக்கொண்டு நின்றிருந்தான். அவனைப் பார்த்தவள் திரும்பி வாளி விழுந்த இடத்தைப் பார்க்க, அது உடைந்து போயிருக்க, “உன்னுடைய நிலைமைதான் எனக்கும்” என்று அந்த வாளியைப் பார்த்து விரக்தியாகக் கூறியவள், திரும்பி அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.

அவள் தன்னை மீண்டும் மீண்டும் அலட்சியப்படுத்து கொண்டே இருப்பதை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. “இதற்கு மேலும் இங்கு நின்றால், தன் கோபம் முற்றி அவளை ஏதும் செய்துவிடுவோம்” என்று எண்ணம் தோன்ற, உடனே அந்த அறையை விட்டு வெளியே வந்தவன், தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். அவன் கோபமாக அறையை விட்டு வெளியே செல்வதை, ஈரம் சொட்ட நின்றிருந்த துர்கா, அவன் செல்வதையே பார்த்தவள், அவன் தன் பார்வையில் இருந்து விலகும் வரை அங்கேயே நின்று பார்த்துக்கொண்டு இருந்தவள், பின் திரும்பி குளியலறைக்குச் சென்று, அங்கு இருந்த குளியல் தொட்டியில் தண்ணீர் நிறைய இருக்க, அதைப் பார்த்தவள் சென்று அதனுள் குத்தவைத்து அமர்ந்தவள், சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்துகொண்டே இருக்க, அதைத் துடைக்க கூடத் தோன்றாமல் அப்படியே இருந்தவள், ஒரு கட்டத்தில் முடியாமல் வாய் விட்டு “ஆஹ்…” என்று கத்தி, தன் ஆற்றாமையைக் கண்ணீரால் வெளி ஏற்றினாள். அப்படியே பின்னால் சாய்ந்து, தன் தலையை வெளியே தொங்க போட்டுக்கொண்டு, உடல் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருக்க, கால்களை நீட்டிக்கொண்டு அமர்ந்து அழுது கொண்டிருந்தவள், இரவு முழுவதும் சாப்பிடாமல், மழையில் நனைந்து, இரவு முழுவதும் தூங்காமலும், ஆதி அவள் மீது பச்சை தண்ணீரையும் ஊற்றி இருக்க, அவள் உடல் சோர்ந்து தண்ணீருக்குள் அமர்ந்து இருந்தவள் அப்படியே மயங்கிப் போனாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured