EPISODE 24
கீர்த்திகாவை அழைத்துக் கொண்டு காரில் வேகமாகச் சென்ற கதிர், அவளது கல்லூரியில் இருந்து தூரமாக அழைத்துச் சென்றான். ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, சிட்டியை விட்டுத் தள்ளி ஆளில்லாத இடமாகப் பார்த்து, ஒரு மரத்தின் அடியில் தன் காரைக் கொண்டு போய் நிறுத்திவிட்டு, காரை விட்டு இறங்கியவன் வெளியே சென்று காரின் மீது சாய்ந்தவாறு நின்று கொண்டான். அவன் இறங்கிச் சென்றதைப் பார்த்துவிட்டு கீர்த்திகாவும் காரில் இருந்து இறங்கி நடந்து வந்தவள், காரைச் சுற்றி வந்து அவன் அருகில் தயங்கித் தயங்கி வந்து நின்றாள். அவன் ஏதாவது பேசுவான் என்று அமைதியாகத் தன் துப்பட்டாவை கையில் பிடித்துக்கொண்டு, அதைத் தன் விரலில் சுற்றிக்கொண்டு நின்றிருந்தாள்.
இருவரும் நீண்ட நேரம் அமைதியாக நின்று கொண்டிருக்கவே, கதிர், அவளாகவே பேசும் என்று காத்துக்கொண்டிருந்தவன், பொறுமை இழந்து அவளைப் பார்த்து, “ஏய்… என்னமோ பேசணும்னு விக்கி இடம் சொல்லி என்னை வரச் சொல்லிட்டு, இப்ப எதுவுமே பேசாம வாயை மூடிட்டு இருந்தா என்னடி அர்த்தம்? எதுக்குடி என்னை வர சொன்ன? என்னடி பேசணும் உனக்கு?” என வார்த்தைக்கு வார்த்தை அவளை ‘டி’ போட்டு கூப்பிட, அவள் நிமிர்ந்து பார்த்து முறைத்த கீர்த்திகா, “இப்போ எதுக்கு என்ன ‘டி’ போட்டு கூப்பிடுற நீ? ஒழுங்கா பேர் சொல்லி கூப்பிட முடியாதா?” என்று அவள் அவனைக் கேட்க, “அப்படித்தான் ‘டி’ போட்டு கூப்பிடுவேன். என்னடி பண்ணுவ?” என்று கூற, “நீ என்ன ‘டி’ போட்டு கூப்பிட்டால், நானும் உன்னை ‘டா’ போட்டு தான்டா கூப்பிடுவேன். நீ என்னடா பண்ணுவ?” என்று அவளும் அவனிடம் மல்லுக்கட்ட, அவள் ‘டா’ சொன்னதும் கோபம் வந்த கதிர், “ஏய்… இப்ப நீ சொல்லப் போறியா? இல்லை உன்னை இங்கேயே விட்டுட்டு நான் கார் எடுத்துட்டு போகட்டுமா?” என்று கேட்க, அவன் செய்தாலும் செய்பவன் தான் என்று மனதில் நினைத்துக் கொண்டவள், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “எதுக்கு வரச் சொல்லுவாங்க? உன்னை அன்னைக்கு நான் கோவமா நடந்துக்கிட்டேன். அதுக்கு ‘சாரி’ கேட்கலாம் என்று சொல்லித்தான் உன்னை சந்திக்கணும் என்று சொல்லி வரச் சொன்னேன்” என்றாள்.
“சரி, அதான் நேரில் வந்துட்டேன் இல்ல, என்கிட்ட மன்னிப்பு கேளு. நிறைய வேலை இருக்கு. உன்கிட்ட இனிமே வெட்டியா பேசிட்டு இருக்க எனக்கு நேரம் இல்லை” என்று அவன் சொல்ல, அவனை முறைத்தவள், “‘சாரி’ கதிர்! அன்னைக்கு நான் ரொம்ப பேசிட்டேன்” என்றாள். “ரொம்பத்தான் பேசின. என்ன பண்ண முடியும்? உனக்கு தான் என்னைப் பார்த்தாலே வெறுப்பானது போலத் தோணுதே! நான் தான் அந்த பெண்கள் பின்னாடி சுத்துறவன் ஆச்சே” என்றான் கோபமாக. “அது தப்பு என்று சொல்லி தானே நான் உன்கிட்ட ‘சாரி’ கேட்கிறேன் கதிர்! என்ன மன்னிச்சிடு. நீ அப்படிப்பட்டவன் இல்லை என்று எனக்குத் தெரியும். எனக்கு ஏதோ கோபத்துல நீ என்னை முத்தம் கொடுத்ததினால் என்னால தாங்க முடியாம, என்ன பண்றதுன்னு தெரியாம நான் அப்படிப் பேசிட்டேன். உன்னை அடிக்கவும் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு கதிர்” என்றாள். அவள் அவனிடம் உண்மையாகவே மன்னிப்பு கேட்க, கதிரின் மனம் அவளுக்காக இலகியது. இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ம்ம்ம்… சரி, நான் உன்னை மன்னிச்சிட்டேன். நீ கிளம்பு” என்றான் தெனாவட்டாக.
தன்னை ஆள் இல்லாத இடத்துக்கு கூட்டி வந்து விட்டு, இப்போது கிளம்பு என்று சொல்லவும் கீர்த்திகாவிற்கு கோபம் வந்தது. “என்ன, கிளம்புனு சொன்னா நான் எப்படி கிளம்புறது? நீதானே கூட்டிட்டு வந்த? திருப்பி கொண்டு போய் நீதான் விடணும்” என்றாள் கீர்த்திகா. “ஏய், நானா உன்னை கூட்டிட்டு வந்தேன்? நீதானே என் காரில் வலுக்கட்டாயமாக ஏறி வந்தே? அப்போ நீதான் கிளம்பனும். சரி, நீ எப்பவோ கிளம்பு. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நான் கிளம்பறேன்” என்று கூறி, அவள் பதிலுக்குக் காத்திருக்காமல் சென்று ஓட்டுநர் இருக்கையின் கதவைத் திறந்து காரில் ஏறி அமர, அதற்குள் கீர்த்திகாவும் ஓடி வந்து, முன்னிருக்கையில் வந்து கதவைத் திறந்து அமர்ந்து கொண்டாள். அவளை திரும்பிப் பார்த்து முறைத்த கதிர், “இப்ப எதுக்குடி வந்து கார்ல ஏறி உக்காந்த? முதல்ல கீழே இறங்கு. நான் கிளம்பனும்” என்று அவன் வேண்டுமென்றே அவளை வம்பு இழுத்தான். “இறங்கப் போறியா இல்லையா?” என்று கேட்க, “இறங்க முடியாதுடா! என்னடா பண்ணுவ? நான் அப்படித்தான் உட்காருவேன். நீ காரை எடுத்தா எடு. இல்லை இங்கேயே நிப்பாட்டினாலும் நிப்பாட்டு. நான் தனியா எல்லாம் போக மாட்டேன். நீ என்னை எங்க ஏத்திட்டு வந்தியோ, அங்கே இறக்கிவிட்டால் போதும். கொண்டு போய் விடு. இல்லைன்னா நான் போக மாட்டேன்” என்று அவள் சொல்லி, இருக்கையில் நன்றாக சாய்ந்து, கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக அமர்ந்துவிட்டாள்.
“இப்போ மட்டும் நீ காரில் இருந்து கீழே இறங்கலைன்னு வை…” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்க்க, “இறங்கலைனா என்னடா பண்ணுவாய்?” என்று அவளும் அவனைக் திருப்பி கேட்க, “உனக்கு இதுதான் முதல் மற்றும் கடைசி வாய்ப்பு. நீ இப்போ இந்தக் காரில் இருந்து இறங்கலை அப்படின்னா, என் கூட இப்ப மட்டும் இல்லை, இந்த வாழ்க்கை முழுக்க நீ என் கூட தான் பயணம் பண்ண வேண்டி வரும். நல்லா யோசிச்சு முடிவெடு. உனக்கு அஞ்சு நிமிஷம் நான் நேரம் தரேன்” என்று கதிர் கூற, “அஞ்சு நிமிஷம் எதுக்கு? நான் இப்பவே சொல்றேன். இப்ப மட்டும் இல்லை, உன் வாழ்க்கை முழுக்க உன் கூடப் பயணம் செய்ய நான் தயாராத்தான் இருக்கேன்” என்றாள் கீர்த்திகா. அவளிடம் பேசும் சாக்கில் தன் காதலைச் சொல்லியிருந்த கதிருக்கு, அவள் உடனே அதற்குப் பதிலும் திருப்பிச் சொல்வாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அவனுக்கு பிடித்த பதிலாகவே சொல்லி இருந்தாள். “உன்னோட வாழ்க்கை முழுக்க பயணம் செய்ய நான் தயாராத்தான் இருக்கேன்” என்று சொல்லிய கீர்த்திகா, வெட்கத்தில் அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் வேகமாக கார் கதவைத் திறந்து கொண்டு எழுந்து வெளியே சென்றாள்.
அவள் தன் காதலுக்கு உடனே ‘சரி’ என்று சம்மதம் சொல்வாள் என்று எதிர்பார்க்கவே இல்லை கதிர். இப்போது நடந்தது கனவா இல்லை நிஜமா என்று தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டவன், “ஷ்… ஆ… வலிக்கிறது” என்று தன் கையைத் தானே தேய்த்து கொண்டவன், “அப்போ இது பொய் இல்லை. கனவில் நிஜம்டா! அப்படியா? என்னை காதல் பண்ண ஒத்துக்கிட்டாளா?” என்று சந்தோஷப்பட்டவன், தன் கார் கதவைத் திறந்து கொண்டு வேகமாக வெளியே வர, கீர்த்திகா அவனைப் பார்க்க முடியாமல் மரத்தின் அருகில் சென்று வேறு புறம் பார்த்து நின்று கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து நின்ற கதிர், அவள் தோளைத் தொட்டுத் தன்னை பார்க்குமாறு திருப்ப, அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தாள் கீர்த்திகா.
“ஏய்… கீ… என்ன பாருடி” என்றான். அவள் “முடியாது” என்று தலையை ஆட்டினாள். “ப்ளீஸ் என்னைப் பாரு. இப்படி குனிஞ்சுக்கிட்டா நான் எப்படி உன் முகத்தைப் பார்த்து பேசுவேன்?” என்றான் கதிர். “ப்ளீஸ், ஒருவாட்டி நிமிர்ந்து என் முகத்தைப் பாரு” என்றான் கதிர். துப்பட்டாவை கையில் பிடித்து சுற்றிக்கொண்டு, மெதுவாகத் தலையை நிமிர்த்தி கதிரின் முகத்தைப் பார்க்க, அவனும் அவளைப் பார்த்து, “நிஜமாகவே உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்க, “ஆமாம்” என்று வேகமாகத் தலையாட்டிவிட்டு, கீர்த்திகா தன் இரு கைகளாலும் தன் முகத்தை வெட்கப்பட்டு மூடிக்கொண்டாள். “ஐயோ! இப்படி வெட்கப்பட்டு என்னைக் கொல்லுடி! நீ வெட்கப்படும்போது எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா கீ? நீ ரொம்ப அழகா இருக்க” என்றான். அவள் எதுவும் கூறாமல் அமைதியாக நின்று இருக்க, “என்னைப் பார்த்து ஒருவாட்டி, ஒரே ஒருவாட்டி, ‘ஐ லவ் யூ கதிர்’ என்று சொல்லேன்” என்றான் கதிர்.
கீர்த்திகா “முடியாது” என்று தலையை இடவலமாக ஆட்ட, அவள் முகத்தை மூடிக்கொண்டு ‘முடியாது’ என்று சொல்லவும், அவள் கையை வலுக்கட்டாயமாக அவள் முகத்திலிருந்து எடுத்தவன், தன் கைக்குள் அவள் கைகளை வைத்துக்கொண்டு, “ப்ளீஸ், என்னைப் பார்த்து ஒரே ஒரு வாட்டி ‘ஐ லவ் யூ’ சொல்லு” என்றான். “முடியவே முடியாது” என்று தலையாட்டிவிட்டு, அவன் கையை உதறிவிட்டு, கார் கதவைத் திறந்து கொண்டு போய் உள்ளே அமர்ந்து கொண்டாள். அவள் வெட்கப்பட்டுத் தன்னை பார்க்க முடியாமல் செல்வதைப் பார்த்த கதிருக்கு, அவள் மேல் இருந்த கோபம் எல்லாம் காற்றே பறந்து இருந்தது. ஒரு முறை ‘ஐ லவ் யூ’ சொல்ல மாட்டாளா என்று ஏக்கம் கொண்டது அவன் மனது. தன்னையே தன்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தன்னிலை மறந்து நின்றிருந்த கதிர், அவள் காருக்குள் சென்று அமர்ந்ததும், அவன் தலையை அழுந்தக் கூடியவன், அவனும் சென்று ஓட்டுநர் இருக்கையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே அமர்ந்தான்.
கீர்த்திகா அவனைப் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருக்க, அவளைப் பார்த்தவன், “நீ இப்போ என்னைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்லலைன்னா நான் காரை ஸ்டார்ட் செய்ய மாட்டேன்” என்றான். அவள் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்க, அவள் கையைப் பிடித்துத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு கதிர், “ப்ளீஸ் கீர்த்தி! ஒரே ஒரு வாட்டி சொல்லுடி. ப்ளீஸ்” என்று கதிர் கெஞ்ச, அவன் கெஞ்சுவதைப் பார்த்து பாவமாக இருக்க, மெல்லத் தன் தலையை நிமிர்த்தி கதிரைப் பார்த்த கீர்த்திகா, அவன் அவளையே குறுகுறுவென்று பார்க்க, அவனின் பார்வையின் ஆழம் தாங்க முடியாமல் மறுபடியும் தலையை கீழே தொங்கப் போட்டவள், “முடியாது” என்றாள். “ஏன்டி சொல்ல மாட்டேங்குற? ப்ளீஸ், ஒரே ஒரு வாட்டி சொல்லு. ப்ளீஸ் கீ…” என்று அவன் கெஞ்ச, “சரி, சொல்றேன். ஆனா அதுக்கு முன்னாடி நீ என்னைப் பார்க்கக் கூடாது. நீ முதல்ல கண்ணை மூடு. அப்பதான் நான் சொல்லுவேன். இல்லைன்னா சொல்ல மாட்டேன்” என்றாள்.
“நீ சொல்றதை பார்க்கணும்னு சொல்லித்தானே நான் ஆசையா கேட்கிறேன்? இப்படி என்னைப் பார்க்கக் கூடாதுன்னு சொன்னா நான் எப்படி நீ சொல்றதை பார்க்க முடியும்?” என்று கதிர் கேட்க, “நான் சொல்றதை நீ கேட்டா போதும். பார்க்கணும்னு ஒண்ணும் அவசியம் இல்லை. இல்லைன்னா நான் சொல்லவே மாட்டேன்” என்று அவள் பிடிவாதம் பிடிக்க, “சரி” என்றவன் தன் கண்களை மூட, “கண்ணைத் திறக்கக் கூடாது, சரியா?” என்று கீர்த்திகா அவனிடம் கேட்க, “டேய்! கண்ணைத் திறக்கல. சீக்கிரம் சொல்லு. நான் எவ்வளவு நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கிறது?” என்றான். “ஏன்டா? ஒரு பொண்ணு அவனை காதலிக்கிறேன்னு சொல்றதுக்காக அவன் பின்னாடி சுத்தி எத்தனை வருஷம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க? இந்த ஒரு மூணு வார்த்தைக்காக! ஆனா நீ என்னடான்னா ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ண மாட்டியா?” என்று கீர்த்திகா கேட்க, “அவனுக்கெல்லாம் முட்டாள்தனமடி. நான் பாரேன்! பார்த்ததும் பிடிச்ச முதல் நாளில் உன்னைக் கிஸ் பண்ணிட்டேன். என்னை மாதிரி வேகமா இல்லைன்னா, வேற ஒருத்தன் வந்து அந்தப் பொண்ணை கொண்டு போயிடுவான்” என்று சொல்ல, “அப்போ பக்குவமா தான் எனக்கு முத்தம் கொடுத்தியா?” என்று கீர்த்திகா கேட்க, “ஆமாம். எனக்கு உன்னை ரொம்பப் பிடித்து இருந்தது. உன்னைப் பார்த்ததும் அந்த ரோஸ் கலர்ல இருக்க உதட்டைப் பார்த்ததும் எனக்கு முத்தம் கொடுக்கணும்னு தோணுச்சு. எப்படி இருந்தாலும் நீ எனக்கு மனைவி ஆகப்போவது தானே? உங்ககிட்ட எதுக்கு அனுமதி கேட்கணும்னு சொல்லிட்டு தான் அன்னைக்கு நீ பந்தயம் கட்டினதும், சமையலறையில் வச்சு உனக்கு முத்தம் கொடுத்தேன்” என்று அவன் சொல்ல, “அடப்பாவி!” என்றவள், “போ! நீ அப்போ அன்னைக்கு பக்குவமாத் தானே பண்ணின? நான் உன்கிட்ட ‘ஐ லவ் யூ’ சொல்ல மாட்டேன். போ…” என்று அவள் கூற, அவன் கண்களை உடனே திறந்தவன், “இப்பதான் சொல்லிட்டேயே, ‘ஐ லவ் யூ’னு” என்று சொன்னவன், இருக்கையில் இருந்து அவள் புறம் சாய்ந்து, கீர்த்திகா எதிர்பாராத நேரம் பார்த்து அவள் இடுப்பில் கை கொடுத்து அவளைத் தூக்கித் தன் மடியில் அமர வைத்துவிட்டான்.
கீர்த்திகா அதிர்ச்சியாகி அவனையே பார்க்க, “எப்படி?” என்பது போலத் தன் புருவத்தை உயர்த்தி கேட்க, அவள் வெட்கப்பட்டவள் அவன் மடியில் அமர முடியாமல் நெளிந்து கொண்டே, “என்னை விடு…” என்று அவன் மார்பில் கை வைத்துத் தள்ள, “ம்ஹும்… முடியாது. என்ன ‘டி’ பண்ணுவ?” என்றான் கதிர். “ப்ளீஸ் என்னை விடு…” என்று அவள் கெஞ்ச, “அப்போ என்னைப் பார்த்து, என் கண்ணை பார்த்து ‘லவ் யூ’ சொல்லு. நான் உன்னை விடுறேன்” என்று கூற, “ம்ஹும்…” என்று மீண்டும் அவள் முதலிலிருந்து ‘முடியாது’ என்று ஆரம்பிக்க, “உன்னை…” என்று பொறுமை இழந்தவன், அவள் இடுப்பை பிடித்திருந்த அவன் கைகளைத் தூக்கி, அவள் முகத்தை அசைய விடாமல் பிடித்துக்கொள்ள, கீர்த்திகா, “டேய், என்னடா… பண்ற? விடுடா… என்னை” என்று அவன் மார்பில் தன் கைகளை ஊன்றி அவனிடம் இருந்து அவனை விளக்க முயற்சிக்க, கதிர் அதை எதையும் சட்டை செய்யாதவன் போல, “நானும் எவ்வளவு தடவை உன்கிட்ட கெஞ்சுவது? ‘லவ் யூ’ சொல்லுடி!” என்றான். “உன்கிட்ட எல்லாம் பேசிட்டு இருந்தா வேலை ஆகாதுடி” என்றவன், அவள் முகத்தைத் தன் அருகில் கொண்டு வந்து அவள் இதழைச் சிறை செய்தான். அவன் இது தான் செய்யப் போகிறான் என்று யூகித்து அவனிடம் இருந்து விலக முயற்சிக்க, அதற்குள்ளாக அவள் இதழைச் சிறை செய்தான். அவனிடம் இருந்து தன்னை பிரித்துக் கொள்ளப் போராட, அவளால் முடியாமல் போகவே, அவனைத் தடுக்க முடியாமல் அவன் முத்தத்தில் மெல்ல மெல்ல கரைந்து கண்களை மூடி முத்தத்தை ஏற்றுக் கொண்டாள். அவன் முத்தத்தை இதுவரை எதிர்த்தவள், இப்போது அமைதியாகிவிட, கதிரின் ஆர்வம் மேலும் முத்தம் கொடுப்பதில் தீவிரமானது.
நிலானியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்ற அவளுடைய மூத்த மாணவி, அவளுடன் வராமல் நிற்கவே திரும்பிப் பார்க்க, அவளது மறு கையை பிடித்துக் கொண்டு விக்கி ‘ஹீரோ’ போல ஸ்டைலாக நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்து அந்தப் பெண், “ஹலோ சார்! உங்களுக்குத் தான் இவளை யாருன்னு தெரியாதுன்னு சொல்லிட்டீங்களே? இப்ப எதுக்கு அவளைக் கையைப் பிடிச்சு இழுக்கறீங்க?” என்று அந்தப் பெண் கேட்க, “நான் இந்தப் பொண்ணை தெரியாதுன்னு உன்கிட்ட சொல்லவே இல்லையேமா… இவ சொல்றது பொய் என்று தானே சொன்னேன்?” என்றான் விக்கி. அவன் கூறியது புரியாமல் அந்தப் பெண் விக்கியைப் பார்க்க, நிலானியும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க” என்று அந்த மூத்த மாணவி கேட்க, “இவர் சொல்றது பொய் என்று தான் சொன்னேன்” என்றவன், நிலானியைப் பார்த்துவிட்டு அந்தப் பெண்ணைப் பார்த்து, “என்ன, அண்ணன்னு தானே சொல்லிக் கூப்பிட்டாள் இவள் என்னை?” “அதைத்தான் அந்தப் பொண்ணு பொய் சொல்லுச்சுன்னு சொன்னேன். இவ என்னை அண்ணன்னு கூப்பிட்டது தப்பு. உண்மையாக நான் நிலானியோட காதலன்” என்றான்.
அவன் தன்னுடைய காதலன் என்று சொன்னதும், நிலானியின் கண்கள் அதிர்ச்சியில் அகலமாக விரிய, அவள் மை இட்ட கண்ணைப் பார்த்த விக்கி, “ஐயோ! இப்படி இரண்டு கண்ணையும் உருட்டி என்னைப் பார்த்துக் கொள்ளுறாளே” என்று மனதில் நினைத்துக் கொண்டவன், அந்த மூத்த மாணவியைப் பார்த்து, “நான் இவளுக்கு அண்ணன் கிடையாது, காதலன்” என்றான் விக்கி. அவன் காதலன் என்று சொல்லிக் கூறியதைக் கேட்டு, அந்த மூத்த மாணவி நிலானியின் கையை விட, உடனே நிலானியை இழுத்துத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து நிறுத்திய விக்கி, “எங்கே, இப்போ இவளை நையாண்டி பண்ணு பார்ப்போம்?” என்றான். அந்தப் பெண் உண்மையிலேயே விக்கியைப் பார்த்து, நிலானியின் காதலன் தான் போல என்று நினைத்தவள், “இல்லை சார்! நான் சும்மா ஒரு ‘ஃபன்’ பண்றதுக்காக தான் நிலானி கிட்ட விளையாடிட்டு இருந்தேன். நீங்க பேசுங்க. நான் போயிட்டு வரேன்” என்று அந்தப் பெண் அங்கிருந்து நகரப் போக, “இந்தாம்மா பொண்ணே” என்று விக்கி அந்தப் பெண்ணை ‘சொடக்கிட்டு’ அழைத்தான். அவளே அவர்களிடமிருந்து தப்பிக்கலாம் என்று செல்லப் போக, அந்தப் பெண் இவன் அழைத்ததும் திடுக்கிட்டு பயந்து கொண்டே அவனைத் திரும்பிப் பார்க்க, “இப்ப எதுக்குமா பயப்படுற? கல்லூரியில் இந்த நையாண்டி எல்லாம் சகஜம் தான். அது ஒரு சின்ன எல்லையோடு இருந்துட்டா பிரச்சனை இல்லை. அவங்களை வருத்தப்படுத்துற மாதிரி இருக்க கூடாது, சரியா? இன்னையிலிருந்து என்னுடைய நிலானியை நீதான் இந்த கல்லூரியில் பாதுகாப்பா பார்த்துக்கப் போற. அவளுக்கு ஏதாவது பிரச்சனைனா உடனே எனக்கு நீ போன் பண்ணி சொல்லணும், சரியா?” என்று கூறி, “எங்கே, உன் போனை கொடு” என்று விக்கி கேட்க, “ச… சார்! எதுக்கு என்னோட போன்?” என்று அவள் கேட்க, “அட, கொடுமா… ஒண்ணும் பண்ண மாட்டேன்” என்று அவளிடம் போனை கேட்க, தன் பையிலிருந்து எடுத்து போனை அவனிடம் தயக்கத்துடன் நீட்டினாள் அந்தப் பெண்.
“‘போனை திற’ பண்ணிக் கொடுமா” என்று சொல்ல, போனைத் திறந்து அவன் கையில் கொடுக்க, அந்த மூத்த மாணவியின் போனில் இருந்து தன் போனுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுத்த விக்கி, “இதுதான் உன் நம்பரா? சரி, உன் நம்பர் என்ன சேமித்து வச்சுக்கிறேன். என்னோட நம்பரையும் நீ சேமித்து வச்சுக்கோ. என் பெயர் விக்கி” என்றான். “சார், என் பெயர் லதா” என்று அந்தப் பெண் சொன்னாள். “சரிம்மா! உன் நம்பரையும் நான் சேமித்து வச்சுக்கிறேன். இந்தா” என்று அந்தப் பெண்ணின் போனை அவளிடம் நீட்டி, “சரி, நீ கிளம்புமா. எங்களுக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு” என்று கூறிவிட்டு அந்தப் பெண்ணை அனுப்ப, அவள் விட்டால் போதும் என்று அங்கிருந்து வேகமாக வெளியே சென்றாள். அந்தப் பெண் செல்லும் வரை அமைதியாக விக்கியையே பார்த்துக் கொண்டிருந்த நிலானி, அவன் கைவளைவில் இருந்து உடனே அவனைத் தள்ளிவிட்டு, அவனிடம் இருந்து விலகி நின்றவள், “நீங்க ஏன் இப்ப அவகிட்ட என் காதலன்னு சொன்னீங்க?” என்று நிலானி கோபமாக அவனிடம் கேட்க, “நான் மட்டும் அப்படிச் சொல்லலைன்னா, அந்தப் பொண்ணு இந்நேரம் உன்னை விட்டிருப்பாளா?” என்று அவன் கேட்க, “ம்ஹும்… இல்லை” என்று தலையாட்டினாள் நிலானி. “அதனாலதான் நான் உன்னோட காதலன் என்று அந்தப் பொண்ணு கிட்ட சொன்னேன்” “ஏன் காதலன்னு சொன்னீங்க? அண்ணன்னு சொல்லி இருந்தாலே அவ என்னை விட்டுட்டு போயிருப்பாளே? நீங்க எதுக்கு அவசரமாக வந்து உங்க காதலன் என்று பொய் சொன்னீங்க?” என்று நிலானி கேட்க, “இல்லையே, நான் பொய் எல்லாம் சொல்லலையே. நான் உண்மையாத் தானே சொன்னேன்?” என்று அவன் கூற, “என்ன சொல்றீங்க?” நிலானி அவனை அதிர்ச்சியாகப் பார்க்க, “ஐயோ! நிலா குட்டி, இந்தக் கண்ணை வச்சு உருட்டி அப்படி என்னைப் பார்க்காதே. என்னால நீ அப்படிப் பார்க்கிறப்போ என்னால என்னைக் கட்டுப்படுத்தவே முடியலை. அப்புறம் இது காபி கடைனு கூடப் பார்க்காம உன்னை இழுத்து வச்சு ஒரு முத்தம் கொடுத்துருவேன்” என்றான். விக்கி அப்படி கூறவும், நிலானியின் கண்கள் மேலும் அதிர்ச்சியில் விரிய, “ஐயோ செல்லம்! இப்பதானே சொன்னேன் அப்படி என்னைப் பார்க்காதேன்னு” என்று கூறிக்கொண்டு, அவன் அவள் அருகில் வர, அவன் தன் அருகில் வந்ததும் வேகமாக அவனை விட்டு விலகிச் சென்ற நிலானி, “ஹலோ, யார் சார் நீங்க? அவசரத்துக்கு ஒரு உதவி என்று வந்து கேட்டால் இப்படி நீங்களே எனக்கு உபத்திரமாக இருக்கீங்களே! யார் சொன்னது நீங்க என்னோட காதலன்னு?” என்று அவள் கோபமாக அவனைப் பார்த்துக் கேட்க, “நான் தான் சொன்னேன். இதை போய் யார் கிட்ட கேட்கணும்? இன்னையிலிருந்து நான் தான் உன்னோட காதலன். எனக்கு உன்னை ரொம்பப் பிடித்திருக்கு” என்றவன், அவள் அருகில் வந்து, “ஐ லவ் யூ… நிலாக்குட்டி” என்றான்.
அவன் ‘ஐ லவ் யூ’ என்று கூறி நிலானியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு நின்றிருக்க, அவன் சிரிக்கும் பொழுது அவன் கண்களைக் குறுக்கி அழகாகச் சிரித்த அவனை, கண்ணிமைக்காமல் பார்த்து, தனக்குள்ளேயே ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் தன்னை விழி இமைக்காமல் ரசிப்பதைப் பார்த்த விக்கிக்குச் சந்தோஷம். “உனக்கும் தன்னைப் பிடிக்கும் போல தான் தெரிகிறது” என்று நினைத்துக் கொண்டவன், நிலானியின் கையைப் பிடித்து, “நிலாக்குட்டி, ‘ஐ லவ் யூ’டா” என்றான். அவன் கையை உதறிவிட்டு, “ஹலோ, இப்படி எல்லாம் பேசாதீங்க. நீங்க யாரு, என்னன்னு எனக்கு எதுவுமே தெரியாது. எப்படி நீங்க வந்து என்கிட்ட இப்படிப் பொது இடத்தில் ‘ஐ லவ் யூ’னு சொல்லலாம்? ஏன் மூத்த மாணவி கிட்ட நீங்க தான் என்னோட காதலன் என்று எப்படி சொல்லலாம்?” என்று கேட்டவள் அங்கிருந்து செல்லப் போக, “நிலா குட்டி, எங்க போற?” என்று அவன் மீண்டும் அவள் கையைப் பிடித்து இழுக்க, “இனிமே என்னை தொட்டு பேசினீங்கன்னா அப்புறம் நடக்கிறதே வேற! முதல்ல என் மேல இருந்து கையை எடுங்க” என்று அவள் கோபமாக கூற, “சரி, ஓகே ஓகே… ‘கூல்’… நான் கையை பிடிக்கல, சரியா?” என்று அவள் கையை விடுவித்தவன், “நான் உன்கிட்ட என்னோட காதலன்னு சொல்லிட்டேன். நீ இப்ப என்கிட்ட சொல்லப் போறியா?” என்று அவன் திருப்பி கேட்க, “நான் எதுக்கு உங்க கிட்ட காதல் சொல்லணும்? எனக்கு உங்களை யாருன்னு தெரியாது. அப்படி எல்லாம் முன்ன பின்ன தெரியாதவங்களையும் என்னால் காதல் பண்ணவும் முடியாது. என்னை முதல்ல இங்கிருந்து போக விடுங்க” என்று சொன்னவள், வேகமாக அங்கிருந்து அவனைத் திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டாள்.
அவனைத் திரும்பியும் பார்க்காமல் செல்லும் நிலானியைப் பார்த்து ஏக்கத்துடன், “இப்படி பிடி கொடுக்காமல் போறாளே!” என்று நினைத்தவன், “சரி, முதல்ல பார்த்தவுடனே திடீர்னு காதல் முன்மொழிதல் பண்ணினால் எந்தப் பொண்ணுக்கும் பயமாத் தானே இருக்கும்? பரவாயில்லை, நம்ம கீர்த்திகாவும் இதே கல்லூரி தானே? அவகிட்ட சொல்லி முதல்ல நிலானியின் நம்பரை வாங்கணும். அதுக்கப்புறம் மற்றதை எல்லாம் பார்த்துக்கலாம்” என்றவன், சந்தோஷமாக மனதிற்குள், “ஆண்டவா! இன்னைக்கு காலையில தான் உன்னிடம் பிரார்த்தனை வைத்தேன். என் பிரார்த்தனை பலிச்சிருச்சு. ரொம்ப ‘தேங்க்ஸ்’ ஆண்டவா! உன்னை சீக்கிரமே வந்து நான் பார்க்கிறேன்” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
ஆதியின் மீது தன் கையையும் காலையும் போட்டுக்கொண்டு கிட்டத்தட்ட அவளின் உடல் ஆதியின் மேல் தான் இருந்தது. காலையில் கண் விழித்த ஆதி, தன் மீது தூங்கிக் கொண்டிருந்த துர்காவைப் பார்த்தவன், அவள் உடல் காய்ச்சல் குறைந்து இருந்து, நடுக்கம் எல்லாம் இல்லாமல் இருப்பதை கண்டு நிம்மதியானான். படுக்கையை விட்டு எழுந்திருக்கலாம் என்று நினைத்தவன், துர்கா அவன் மேல் தூங்கிக்கொண்டிருந்ததால் அவளை எழுப்ப மனமில்லாமல், அவள் கண் விழிக்கும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்தவன், அமைதியாகப் படுத்திருக்க, அவள் மெதுவாக நெளிய ஆரம்பித்தாள். “எங்கே, எழுந்ததும் தன் மேல் படுத்திருந்ததைப் பார்த்து கோபப்படுவாளோ?” என்று எண்ணியவன், என்ன செய்வது என்று தெரியாமல் கண்கள் மூடித் தூங்குவது போலப் படுத்திருந்தான்.
துர்கா கண்களை விழித்ததும் முதலில் தெரிந்தது ஆதியின் முகம் தான். அதை ரசித்துக்கொண்டே அவன் மார்பின் மீது தன் கையை வைத்து, அதில் தன் முகத்தை வைத்துப் படுத்துக்கொண்டே அவன் முகத்தை அவ்வளவு அருகில் பார்த்தவள், அவன் சாந்தமான முகத்தைப் பார்த்தவள், “தூங்கும்போது மட்டும் எப்படி இவ்வளவு சாந்தமா இருக்கே ஆதி? ஆனா கண் விழிச்சா அப்படியே சிங்கம் போலக் கர்ஜிக்கிறேயே. இப்படி சாந்தமான முகத்தை நான் ஒரு நாள் நீ கண் விழிச்சிருக்கும்போது பார்க்கனும் ஆதி” என்றாள். அவள் கூறியதைக் கேட்டு, “இவளுக்கு நான் அமைதியாக இருப்பது தான் பிடித்திருக்கிறதோ?” என்று யோசிக்கும்போதே, அவன் புருவத்தை துர்கா தொடுவதை உணர்ந்தவன், தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாகப் படுத்திருக்க, அவன் நன்றாக உறங்குகிறான் என்று நினைத்தவள், அவன் புருவத்தைத் தன் ஒற்றை விரலால் நீவிவிட்டு, இரு புருவமும் இணைந்து இருக்க, அதைத் தடவிப் பார்த்தவள், “இந்த புருவம் இருக்கே ஆதி, இந்த புருவத்தையும் உன்னோட கண்ணையும் பார்த்து நான் எத்தனை முறை பேச வந்ததை பேச முடியாமல் நான் திணறி இருக்கேன் என்று உனக்குத் தெரியுமா ஆதி?” என்று அவள் கூற, ஆதிக்கு அவள் கூறியதைக் கேட்டு மனதிற்குள் ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது. “என் கண்களையும் புருவத்தையுமே இப்படி ரசிக்கிறாளே! இவளுக்கு என்னைப் பிடிக்குமா? என்னைப் பிடிக்கவில்லை என்றால் இவ்வளவு தூரம் என் புருவங்களை மட்டுமே ரசிப்பாளா என்ன?” என்று யோசித்துக்கொண்டிருக்க, அவள் விரல்கள் அவன் புருவங்களில் இருந்து மூக்கின் மீது வர, அவன் மூக்கின் நுனியை லேசாக ஆட்டியவள், அவனுக்கு வலிக்காதவாறு கிள்ளியவள், “இந்த மூக்கிற்கு மேல எவ்வளவு கோபம் வருதுடா உனக்கு?” என்றாள்.
“என்ன, ‘டா’ வா?” என்று மனதிற்குள் அதிர்ச்சி அடைந்தவன், தனக்கு வந்த கோபத்தை அடக்கப் பெரும்பாடு பட்டான். “என்னடா… நான் உன்னை ‘டா’ சொன்னதும், தூக்கத்தில் கூட உனக்குக் கோபம் வருதோ? உன் மூக்கு தூக்கத்தில் கூடக் கோபத்தில் வீங்குகிறது” என்றவள், அவன் முகத்தைத் தன் இரு கையாலும் வருட, “அவ்வளவு கொப்புளம் பாரேன் ஆதி. என் ஆதி இந்தக் கொப்புளங்களால் எவ்வளவு கஷ்டப்படுறானே! கடவுளே! சீக்கிரமா என் ஆதியை குணம் ஆக்கி என் கிட்ட கொடுத்திரு” என்று வேண்டியவள், அப்படியே கீழே வந்தவள், அவன் உதட்டில் தன் விரல் படவும், மின்சாரம் பாய்ந்தது போலத் தன் விரலை ‘வீரென்று’ எடுத்துவிட்டாள். அவள் விரல் அவன் உதட்டில் பட்டதும், ஆதிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பின் மெல்ல அவன் மேல் இருந்து எழுந்தவள், “அவன் வெற்று உடலுடனா தன்னுடன் படுத்திருந்தான்?” என்று நினைக்கவே, அவளுக்குள் வேண்டாத எண்ணங்கள் எல்லாம் ஓடத் தொடங்க, தன் தலையில் தட்டி, “ஏய் லூசு துர்கா… என்ன ‘டி’ கண்டதெல்லாம் மனசுல ஓட விடற? நீ செய்றது கொஞ்சம் கூடச் சரி இல்லை. இப்போ மட்டும் ஆதி கண் விழிச்சான்னா, அவ்வளவுதான் நீ காலி” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டாள்.
பின் அவன் மார்பைப் பார்த்தவள், ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டவள், “இன்று தூங்கியது போலவே என்னை தினமும் உன் மார்பில் படுக்க வைத்துக்கொள்வாயா ஆதி?” என்றாள். இதைக் கேட்டதும் ஆதிக்கு இதயம் வேகமாகத் துடிக்க, அவனை அவனால் அமைதிப்படுத்த முடியவில்லை. அவள் தன் மீது படுத்துக்கொள்ள ஆசை படுவதைக் கேட்டதும், அவன் மனதில் கொஞ்ச நஞ்சமாக துர்காவின் மேல் இருந்த வெறுப்பும் காற்றைக் கண்ட கற்பூரம் போல ஆகிவிட்டது. தன் மனதிற்குள், “இந்த மார்பில் உன்னைத் தவிர வேறு யாருக்கும் இடம் இல்லை துர்கா” என்று தனக்குத் தானே கூறிக்கொண்டான். அவன் மார்பையே பார்த்துக் கொண்டிருந்தவளைத் தன் அரைக் கண்ணில் பார்த்து ரசித்தவன், எவ்வளவு நேரம் அவள் தன்னையே இப்படி உற்றுப் பார்ப்பதில் அவனுக்கே கூச்சம் வந்துவிட, லேசாகத் தூக்கத்தில் நெளிவது போலத் தன் உடலை நெளித்தான்.
அவன் நெளிவதைக் கண்டதும், “அச்சோ! எழுந்திருச்சிட்டான் போலவே” என்று அவன் மீதிருந்து எழுந்தவள், அவன் வெற்றி உடலை முழுவதும் பார்க்க, அவன் திடகார்த்தமான உடலைப் பார்த்து, தன்னையே மறந்து அவனையே ரசித்துக் கொண்டிருந்தாள். அவன் அசைவதை நிறுத்தவும், “அப்பாடி! எழுந்திருக்கல” என்று நிம்மதி அடைந்தவள், அவனையே குருகுரு என்று பார்க்க, அவள் ஏன் இப்படிப் பார்க்கிறாள் என்று அவன் யோசிக்கும்போதே, அவள் முகம் அன்று அவன் முகத்தில் இருந்த புண்களைப் பார்த்து முகம் சுழித்தது போல, இப்போதும் சுழித்தவள், சட்டென்று படுக்கையை விட்டு எழுந்து கீழே இறங்கி வேகமாகச் செல்வதைப் பார்த்த ஆதிக்கு, அவள் தன் உடலில் இருக்கும் கொப்புளங்களைப் பார்த்து தான் இப்படி முகம் சுழித்துக்கொண்டு சென்றுவிட்டாள் போல என்று கோபம் வர, படுக்கையை விட்டு எழப் போனவன் கண்களைத் திறக்க, வேகமாகச் சென்ற துர்கா கையில் எதையோ கொண்டு வருவதைப் பார்த்தவன், அமைதியாக மறுபடியும் கண்கள் மூடிப் படுத்துவிட்டான்.
கட்டிலில் ஏறி அவன் அருகில் அமர்ந்தவள், கையில் இருந்த களிம்பை எடுத்து அவன் மேல் இருந்த உடைந்த கொப்புளங்களில் பூசத் தொடங்கினாள். என்னதான் அவனிடம் சண்டை போட்டாலும், அவன் தன்னை வெறுத்து ஒதுக்கினாலும், அவன் மேல் இருக்கும் அவளின் காதல் குறையுமா என்ன? அவன் புண்ணிற்கு மருந்து இட்டவள், அவன் உடலில் இருந்த தழும்புகளை எல்லாம் பார்த்தவள், கண்களில் கண்ணீர் வந்துவிட, “அவன் எவ்வளவு சிரமப்பட்டு கொண்டிருப்பான் இவ்வளவு வருடங்களாக?” என்று நினைத்தவளின் கண்ணீர்த் துளி அவன் மார்பின் மேல் விழ, அவள் அழுவதைப் பார்த்த ஆதி, “தன் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாளா இவள்?” என்று எண்ணியவன், அவள் கண்ணீரைத் துடைக்க எண்ணிய கைகளைச் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டான். இதற்கு மேலும் அவள் தன் உடலில் இருக்கும் புண்களையும், தழும்புகளையும் பார்த்து கஷ்டப்பட வேண்டாம் என்று எண்ணியவன், மெதுவாக உடலை நெளித்துக்கொண்டு எழுந்திருப்பது போலப் பாசாங்கு செய்ய, அவன் எழுந்திருக்கப் போகிறான் என்று எண்ணி, வேகமாகப் படுக்கையை விட்டு இறங்கி, குளியலறைக்குள் ஓடிவிட்டாள். அவள் இறங்கி ஓடுவதைப் பார்த்தவன், தன் மீது அவளுக்கு நிஜமாகவே அக்கறை இருப்பதை உணர்ந்தவனின் இதயத்தில் முதல் முறையாக துர்காவின் மேல் காதல் மலர ஆரம்பித்தது. அவனையும் அறியாமல் துர்கா அவன் இதயத்திற்குள் காதல் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டாள்.
