EPISODE 29
பூமிகாவின் கல்யாண வரவேற்புக்காக அவளது வீட்டிற்கு வந்த ஆதியின் குடும்பத்தினர், பூமிகாவுடன் அங்கிருந்து கிளம்பி அவளது தந்தை ஏற்பாடு செய்திருந்த ரிசார்ட்டிற்குச் சென்றனர்.
அவர்களுடன் பூமிகாவும் செல்வதாகவும், அங்கே சென்று தனது தோழிகளையும் அப்படியே பார்த்துவிட்டு வருவதாகவும் அவள் அப்பாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.
பூமிகா கிளம்புவதாகக் கூறவும், அவளது அப்பா அருணாச்சலம், “சரிடா, பத்திரமா போயிட்டு சீக்கிரமா வந்துரு. உன் ஃபிரெண்ட்ஸைப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு அவங்க கூட அங்கேயே இருந்திராத. உனக்குத் தான் இன்னைக்கு சாயங்காலம் கல்யாண வரவேற்பு இருக்கு, ஞாபகத்துல வச்சுக்கோ,” என்று அருணாச்சலம் கூற.
“ஒண்ணும் பிரச்சினை இல்லைப்பா. நான் மேக்கப் பண்றவங்கள நேரா ரிசார்ட்டுக்கே வர சொல்லிட்டேன். அவங்க நேரமே அங்க வந்துடுவாங்க. நாங்க எல்லாருமே அங்கிருந்து கிளம்பி ரெடியாகி உன்னை மண்டபத்துக்கு வந்துருவோம்ப்பா. நீங்க கவலைப்படாதீங்க. நான் பத்திரமா சீக்கிரமா வந்துருவேன்,” என்று கூற, “சரிம்மா, என்னமோ பண்ணு, ஆனால் பத்திரமா சரியா,” என்று கூறியவர்.
திரும்பி துர்காவிடம், “அம்மா துர்கா, நீ கொஞ்சம் இவளைப் பார்த்துக்கொள் அம்மா. இவ ஃபிரெண்ட்ஸ் எல்லாம் பார்த்ததும் அரட்டை அடிக்க உட்கார்ந்துக்குவா. நேரம் போறது இவளுக்குத் தெரியாது. சீக்கிரமா ரெடியாகி ரிசப்ஷனுக்கு வரணும் இல்லையா? இவளே லேட்டா வந்தா அப்புறம் நல்லா இருக்காதுமா. நீ கொஞ்சம் அவ கூட இருந்து பார்த்துக்கோ,” என்று கூற, “சரிங்க, நான் பார்த்துக்கிறேன்,” என்று துர்கா கூற, “என்னம்மா? அங்கிருந்து கூப்பிடுற? என்னை ‘அப்பா’ என்று கூப்பிடுமா?” என்று சொல்ல, அவள் சிரித்துக்கொண்டே “சரிங்க அப்பா, நான் பார்த்துக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.
சிறிது நேரத்தில் அனைவரும் ரிசார்ட் வந்து சேர, அவர்கள் எல்லாம் காரில் இருந்து இறங்கவும், சரியாக கீர்த்திகாவும் அவள் அம்மா, அப்பாவும் வந்த காரும் ரிசார்ட்டிற்கு வர சரியாக இருந்தது.
கீர்த்திகாவின் கார் வருவதைப் பார்த்த கதிர், காரை விட்டு கீர்த்திகா இறங்குவதைப் பார்ப்பதற்காக நின்று கொண்டிருக்க, அம்மாவும் அப்பாவும் முதலில் இறங்கிவிட, அவர்கள் பின்னாலேயே கீர்த்திகா இறங்கி வந்தாள்.
கீர்த்திகா இறங்கியதும் துர்காவைப் பார்த்ததும் “அக்கா” என்று ஓடிவந்து அவளை கட்டிக்கொள்ள, துர்காவும் சிரித்துக்கொண்டே கீர்த்திகாவைப் பார்த்து, “இன்னும் சின்ன பிள்ளை மாதிரி இப்படி ஓடி வரியா? உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இத்தனை பேர் இருக்காங்க இல்ல? மெதுவா நடந்து வாடி,” என்று அவளைப் பார்த்துக் கூற.
“இங்க யாரு இருக்காங்க? நம்ம குடும்பத்து ஆளுக மட்டும் தானே இருக்காங்க? நீ எதுக்கு இப்படி எப்ப பார்த்தாலும் என்னை அம்மா மாதிரியே திட்டிட்டு இருக்க? இனிமே இப்படி திட்டினேன்னா உன் கூட பேசவே மாட்டேன், போ,” என்று கீர்த்திகா சிறு பிள்ளை போல துர்காவிடம் கோபித்துக்கொள்ள.
“அச்சோ… கோபித்துக்கொண்டாயா? சரி சரி டி. இனிமே நான் உன்னை எதுவும் சொல்ல மாட்டேன். உன் இஷ்டப்படியே இரு. சரியா? எனக்கு என்ன, அப்புறம் அம்மா எதுவும் சொன்னா என்ன, சொல்ல கூடாது,” என்று துர்கா கூறினாள்.
அவர்கள் இருவரும் செல்லமாக சண்டையிட்டுக் கொண்டும் கட்டிப்பிடித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த பூமிகாவிற்கு ஏக்கமாக இருந்தது. தன்னுடன் பிறந்தவர்கள் என்று யாருமே இல்லாமல் போனது நினைத்து இப்போதுதான் முதல்முறையாக அவள் வருந்தினாள்.
துர்காவும் கீர்த்திகாவும் பேசிக் கொண்டிருக்க, விசாலாட்சி கீர்த்திகாவிடம் வந்தவர், “என்னடா கண்ணு? இதிலிருந்து உன் அக்கா கிட்ட மட்டுமே பேசிட்டு இருக்க? இங்க ஒரு அத்தை உனக்காக இருக்கேன்னு நீ பார்க்கவே இல்லையே,” என்று விசாலாட்சி கூற, “ஐயோ அத்தை, உங்களை நான் எப்படி பார்க்காமல் போயிடுவேன்? வந்ததும் அக்காவை பார்த்த உடனே அங்கே பேசிட்டு இருந்தேன். உங்களை பார்க்காமல் நான் போவேனா?” என்று கூறிக்கொண்டு திரும்பி அவரையும் சேர்த்து கட்டிப்பிடித்துக்கொண்டு பேச, அதை பார்த்து வடிவு, “ஏய்….கீர்த்திகா…. என்ன பண்ணிட்டு இருக்க? முதல்ல அவங்க மேல இருந்து கையை எடு. பெரியவங்கன்னு கொஞ்சமாவது மரியாதை இருக்கா பாரு,” என்று கூற.
“விடுங்க சம்பந்தி. சின்ன பொண்ணு தானே அவள்? எதார்த்தமா எல்லார்கிட்டயும் பழகிட்டு இருக்கா. நீங்க ஏன் அவளை ஏதுன்னு சொல்லிட்டே இருக்கீங்க? பரவாயில்லை, அவளும் என் பொண்ணு மாதிரி தானே,” என்று கூறியவர், “நீ வாடா. அவங்க ஏதாவது சொல்லிட்டு தான் இருப்பாங்க. நம்ம போலாமா?” என்று கூறி, துர்காவையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, வடிவையும் வர சொல்லிவிட்டு அங்கிருந்து நகர.
விசாலாட்சி சந்தோஷமாக துர்காவிடமும் இருப்பதைக் பார்த்த வெங்கடாசலம், “உங்க அம்மாவுக்குப் பொண்ணு இல்லைன்னு ரொம்ப வருத்தப்பட்டு இருந்தாடா. நீங்க ரெண்டு பேரும் பையனா பிறந்துட்டீங்கன்னு சொல்லிட்டு. அதுக்காகவே துர்காவும், கீர்த்திகாவும் அவளுக்கு கிடைச்சிருக்காங்க போல. பாரு, எவ்வளவு சந்தோஷமா நம்மள எல்லாம் மறந்துட்டு அவங்க மூணு பேரும் போறத,” என்று ஆதியிடமும் கதிரிடமும் கூறி சிரிக்க, “ஆமாம்” என்பது போல இருவரும் தலையை ஆட்டினர்.
அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு வந்த விசாலாட்சி நேராக பூமிகாவிடம் சென்றவர்.
“கீர்த்திகாவை எப்படி துர்கா எனக்கு மருமகளோ, அதே மாதிரி இவளும் என்னோட மருமகள்,” என்று கூற, “என்ன ஆண்ட்டி? சொல்லவே இல்லை நீங்க. கதிருக்கு பார்த்திருக்கப் பொண்ணா?” என்று கேட்டால் பூமிகா.
அதை கேட்டதும் கதிருக்கு மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி பறப்பது போல சந்தோஷத்தில் மிதந்தான். அவன் அருகில் இருந்த விக்கி கதிரின் கையைப் பிடித்து இழுத்தவன்.
“டேய், வாயை மூடுடா.. எதுக்கு இப்போ இப்படி ரொம்ப சந்தோஷமா இருக்க மாறி முகத்தை வெச்சிருக்க? நீயே உன்னோட லவ்வ காட்டி கொடுத்திருவ போல இருக்கே,” என்று கதிரின் காதில் கூற, அப்போதுதான் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று உரைத்தது கதிருக்கு. உடனே எதையும் காட்டிக்கொள்ளாதவன் போல முகத்தை மாற்றிக்கொள்ள, அதை பார்த்த விக்கி, “ஏய் அப்பா… என்ன டா… இவ்ளோ சீக்கிரம் எக்ஸ்பிரஷன் மாத்துற? நல்லா நடிக்கிற டா நீ,” என்றான் விக்கி.
பூமிகா கூறியதை கேட்ட விசாலாட்சி, “அப்படி இல்ல டா… கீர்த்திகா துர்காவோட தங்கச்சி. அந்த முறையில் சொன்னேன் டா. இவளும் எனக்கு மருமகள் தான்னு சொன்னேன்,” என்றார்.
“அதனால் என்ன ஆண்ட்டி? பேசாம கதிருக்கும் இவங்களையே கல்யாணம் பண்ணி வெச்சிருங்களேன். அக்காவும் தங்கையும் ஒரே வீட்டில் இருந்த மாதிரியும் ஆச்சு, அண்ணாவையும் தம்பியையும் பிரிக்காமையும் இருப்பங்களே,” என்று கண்ணடித்து பூமிகா கூற.
“அதெல்லாம் இல்ல டா கண்ணு. ஏற்கனவே கல்யாணம் பண்ணின வீட்ல மறுபடியும் பொண்ணு எடுக்க மாட்டேன். துர்காவின் வீட்டில் திரும்ப பெண் எடுக்க மாட்டேன் டா கண்ணு,” என்றார்.
இதை கேட்டதும் கீர்த்திகா அதிர்ச்சியாகி நிற்க, அவளை விட அதிர்ச்சியானது நம் கதிர் தான். விசாலாட்சியிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தை வரும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.
விசாலாட்சி அப்படி கூறவும், “ஏன் ஆண்ட்டி அப்படி சொல்றீங்க?” என்று பூமிகா கேட்க. “அது வந்துமா…. எனக்கு…என்று விசாலாட்சி ஏதோ கூற வர, உடனே வெங்கடாசலம், “விசாலாட்சி, வந்த இடத்துல என்ன வளவளன்னு பேச்சு? முதல்ல எல்லாரும் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். பூமிகாவும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். அவளுக்கு சாயங்காலம் நேரமே இருக்காது,” என்று அவர் அதட்ட. “சரிங்க, நான் சும்மா அப்படியே பேசிட்டு இருந்துட்டேன்,” என்றவர், “சரி வாங்க போகலாம்,” என்று அனைவரையும் அழைத்துவிட்டு துர்கா, கீர்த்திகாவுடன் செல்ல.
வெங்கடாசலம் அவசரமாக விசாலாட்சி ஏதோ கூற வருவதை தடுத்ததை பார்த்த ஆதி, இவர்களுக்குள் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. அதனால் தான் அம்மா ஏதோ பூமிகாவிடம் சொல்ல வரும்போது அப்பா அதை வேண்டாம் என்பதற்காகவே அம்மாவை திசை திருப்பி இருக்கிறார் என்று புரிந்துகொண்ட ஆதி, இது என்ன என்று சீக்கிரமே கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
கதிரின் மனதில் ஏதோ பாரமாக இருப்பது போல உணர, எதுவும் பேசாமல் அவர்கள் பின்னால் போனான். இதே நிலையில் தான் கீர்த்திகாவும் இருந்தால்.
வெங்கடாசலம் விசாலாட்சிக்கு ஒரு அறை, கீர்த்திகா அவள் அம்மா அப்பா உடனும் தங்கும் அறையை காட்டிவிட்டு, அவளை தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்து, அவள் அறைக்கு பக்கத்திலேயே கதிர், விக்கி இருவருக்கும் ஒரு அறையை காட்டி தங்க வைத்துவிட்டு, ஆதி, துர்காவிற்கு என்று தனி அறையை காட்டி, அவர்களுடன் வந்த பூமிகா துர்காவுடன் நன்றாக அதற்குள் பழகிவிட, அவள் தங்கையாக கீர்த்திகாவுடனும் நன்றாக மிங்கில் ஆகி விட்டால் பூமி.
துர்காவையும் கீர்த்திகாவையும் தன் தோழிகளுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு வருவதாக கூறி அவர்கள் இருவரையும் தன்னோடு அழைத்துக்கொண்டு பூமிகா அவள் தோழிகளைப் பார்ப்பதற்காக கிளம்புவதாக கூறிவிட்டு செல்ல போக, அப்போது அருணாச்சலம் பூமிகாவிற்கு அழைத்திருந்தார்.
போனை அட்டென்ட் செய்தவள், அவர் கூறிய விபரங்களை கேட்டுவிட்டு திரும்பி துர்காவைப் பார்க்க.
“என்ன பூமி? ஏன் என்னை இப்படி பாக்குற?” என்று கேட்டால் துர்கா. “உங்க அப்பா கூட போன்ல ஏதோ பேசலையே? ஏன் எதுவும் ப்ராப்ளமா?” என்று கேட்க, பூமி அதற்கு “ஆமாம்” என்பது போல தலையாட்ட, உடனே கீர்த்திகா அவளிடம் வந்தவள், “அக்கா, என்ன ப்ராப்ளம் என்று சொல்லுங்க,” என்று கேட்டால்.
“ப்ராப்ளம் வரது என்னமோ உண்மைதான். ஆனால் எனக்கு இல்லை, உனக்கு தான்,” என்று துர்காவைப் பார்த்து பூமிகா கூற.
“என்ன சொல்ற பூமி? கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு. எனக்கு புரியல. எனக்கு என்ன ப்ராப்ளம் வரப்போகுது? அதுவும் இங்க.. இப்பதான் நான் இந்த இடத்துக்கு முதல் முறையாக வந்து இருக்கேன்,” என்று துர்கா கூற.
“அப்பா போன் பண்ணி சொன்னாரு, அந்த சங்கவியும் அவளோட அம்மா, அப்பாவும் இங்கதான் வந்துட்டு இருக்காங்கன்னு சொல்லிட்டு. உங்க நேரா எங்க வீட்டுக்கு போறதா தான் இருந்துச்சு. ஆனா அப்பதான் நம்ம எல்லாருமே இங்க வந்துட்டோம்னு சொல்லிட்டு, அவங்களுக்கு நேரம் இங்க வர சொல்லிட்டாரு. அவங்க இப்போ இங்க தான் வந்துட்டு இருக்காங்க,” என்று பூமிகா கூற.
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த துர்காவின் முகம் சட்டென சங்கவியின் பெயரை கேட்டதும் இறுகிப் போனதாக மாறியது.
துர்காவின் முகம் மாறுவதைப் பார்த்து பூமிகாவும் கீர்த்திகாவும் அவளிடம் வந்து, கீர்த்திகா, “அக்கா, நீ ரொம்ப ஃபீல் பண்ணாத. அவங்க கல்யாணத்துக்கு தானே வந்திருக்கா? நல்ல நம்மளுக்கு என்ன பிரச்சனை வந்துட போகுது,” என்று கீர்த்திகா கூற.
“உனக்கு அவளைப் பத்தி சரியா தெரியல கீர்த்திகா. அவ இன்னும் உங்க மாமா மேல தான் குறியா இருக்கா. அவரை எப்படியாவது மறுபடியும் விழ வைக்கணும்னு நினைச்சுட்டு இருக்கா. ஆனால் அதை நேரடியா உங்க மாமா கிட்ட காமிச்சுக்கல. நாளைக்கு ஆபீசுக்கு வந்துட்டு ரொம்ப கலாட்டா பண்ணிட்டா, உங்க மாமாவே கோபம் வந்து அவளை அடிச்சிட்டாரு. அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு எல்லாரும் முன்னாடியும் உங்க மாமா சொல்லி மண்டபத்தை விட்டு அனுப்பின கோபத்தில் இருக்கா. போதாக்குறைக்கு ஆபீஸ்ல வச்சு அவளை அடிச்சிட்டாரு. அவ ஏதோ பிளான் ஓட தான் திரும்பவும் ஆதி கூட ப்ராஜெக்ட் காரணமா வச்சு திரும்பவும் ஆதி கூட ஆபீஸ்க்கு வந்து இருக்கா. அவ சும்மா ஒண்ணும் திரும்பவும் அந்த ஆபீஸ்க்கு வரலன்னு எனக்கு நல்லாவே புரியுது. இது கூடவே நோயை காரணமா காட்டி, அவன் பணத்துக்காக தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதாகவும், அவனை விருப்பப்பட்டு ஒண்ணும் நான் கல்யாணம் பண்ணல என்று சங்கவி ஆதி முகத்துக்கு நேரா சொன்னா. ஆதிக்கு தன்னோட நோயால யாருகிட்டயும் சரியா பழகாமல், ஒரு தாழ்வு மனப்பான்மையோடு சுத்திட்டு இருக்கான். இப்போ பத்தாததுக்கு இந்த சங்கவி வேற அவன் நோயை சொல்லியும், அவனோட காசுக்காக தான் நான் ஆதியை கல்யாணம் பண்ணிட்டேன்னு சொல்லி அவனுக்கு மனசுல கண்டதை விதைச்சிட்டா. அவ சொன்னதை எல்லாம் ஆதியும் முழுசா நம்பிட்டாருன்னு தான் நானும் நினைக்கிறேன். அதனால தான் என்கிட்ட எப்பவுமே வெறுப்பை காட்டுற மாதிரியே பேசுறது, நடந்துக்குறதுமா இருக்கான் ஆதி. எனக்கு அது ரொம்பவே கஷ்டமா இருக்கு. காசுக்காக தான் நான் அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு அந்த சங்கவி சொன்னப்போ, ஆதி அவளிடம் திருப்பி எதுவுமே பேசாம அமைதியா இருந்தான். எனக்கு அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு கீர்த்தி. எல்லாம் பத்தலைன்னு சொல்லிட்டு இப்போ இந்த கல்யாணத்துக்கும் வந்து இருக்கா. இங்க வந்து இனி என்ன எல்லாம் பண்ண போறாளோ, எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு,” என்றால் துர்கா.
எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கீர்த்திகாவும் பூமிகாவும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அப்போது கீர்த்திகா, “அக்கா, நீ எதைப்பற்றியும் கவலைப்படாதே. அவளை மாமா கிட்ட வராம பாத்துக்கிட்டா மட்டும் போதும். அவளை நாம இருக்க பக்கம் நெருங்க விடாமல் பாத்துக்கணும்,” என்றால்.
பூமிகாவும், கீர்த்திகா சொல்வதும் சரிதான் என்று கூறியவள். “நான் அந்த சங்கவி அண்ட் ஃபேமிலியை நீங்க இருக்க ஏரியாவை விட்டுட்டு வேறு பக்கம் ரூம் கொடுத்துறேன். அப்போதான் அவ நீங்க இருக்க பக்கம் வர மாட்டாள்,” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே ரிசார்ட்டின் வாயிலில் ஹார்ன் சத்தம் கேட்க, அங்கே நின்றிருந்த செக்யூரிட்டி கார் சத்தம் கேட்டு வேகமாக சென்று கதவை திறந்து விட்டார்.
கார் உள்ளே வந்ததும் அதில் இருந்து இறங்கிய சங்கவி நேராக கேட்டை திறந்து விட்ட வாட்ச்மேன் இடம் சென்றவள், அவர் அருகில் சென்றதும் அவர்கள் திரும்பிப் பார்க்க, ஓங்கி பலம் கொண்டு ஒரு அறை அறைந்தால் சங்கவி.
சங்கவி அந்த வாட்ச்மேனை அறைந்ததை யாருமே எதிர்பார்க்கவே இல்லை. சங்கவியின் அருகில் வேகமாக சென்று துர்கா, “மேடம், எதுக்கு இப்போ அந்த வாட்ச்மேன் அடிச்சீங்க?” என்று கேட்க.
“நான் அவனை அடிச்சா உனக்கு என்னடி வந்துச்சு? நீ எதுக்கு என்னை கேள்வி கேட்கிறாய்? என்னை கேள்வி கேட்கிற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருச்சா? இல்ல அவ்ளோ பெரிய ஆளா ஆயிட்டியா நீ?” என்றால் சங்கவி துர்காவைப் பார்த்து.
“வேலைக்கு வந்தவ தானே நீ? ஆதியை வளைச்சு கல்யாணம் பண்ணவ தானே நீ? என்ன கேள்வி கேட்கக்கூடாது. உன் அந்தஸ்து என்ன? உன்னோட இடம் என்னவென்று தெரிந்துகொண்டு அங்க போய் நில்லு. நீ எல்லாம் என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?” என்று சங்கவி, வாட்ச்மேனிடம் திரும்பி, “ஹே வாட்ச்மேன், எவ்வளவு தைரியம் இருந்தா நான் வரும்போது கதவை சாத்தி வச்சிருப்ப? வெளியே வந்து ஹாரன் அடிச்சு எவ்வளவு நேரம் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கனுமா நாங்க?” என்று கேட்க.
அந்த வாட்ச்மேன் கன்னத்தில் கையை வைத்து தேய்த்தபடியே, “இங்க பாருங்க மேடம். நீங்க யாரு என்னன்னு எல்லாம் எனக்குத் தெரியாது. நான் இங்கே மரியாதை கொடுக்க வேண்டியது எங்க பூமிகா மேடம், அவங்களோட அப்பாவுக்கு மட்டும்தான். இங்க வரவங்களுக்கு எல்லாம் எப்படி நடந்துக்கணும்னு சொல்லி கொடுத்திருக்காங்க எங்களுக்கு. நீங்க யாரு? எப்படி என்னன்னு எனக்கு எப்படி தெரியும்? வந்து ஹாரன் அடிச்சா யாரு, என்னனு விசாரிச்சு தான் நாங்க உள்ளேயே விடுவோம். நீங்க பாட்டுக்கு வந்து அவ்வளவு நேரம் ஹாரன் அடிச்சுட்டே இருந்த நாள் தான் உங்களை என்ன ஏதுன்னு கேட்காமல் நான் கதவை திறந்து விட்டேன். நீங்க உள்ளே வருவதற்காக,” என்ற அந்த வாட்ச்மேன்.
“அப்போ நான் எங்க அருணாச்சலம் ஓட ரிசார்ட்க்கு வரதுக்கு உங்களை எல்லாம் கேட்டுட்டு நீங்க என்ன விசாரிச்சதுக்கு அப்புறம்தான் நான் உள்ளே வரணுமா?” என்று கேட்க.
இருவரையும் பேச விட்டால் சண்டை வளர்ந்து கொண்டே போகும் என்று புரிந்துகொண்டு பூமிகா நேராக சங்கவியிடம் வந்தவள்.
“சங்கவி, ஒரு நிமிஷம் இரு. இப்ப எதுக்கு வந்தது வராதுமா இவ்ளோ கோபப்படுற? இது இங்கே இது ஒரு ரூல்ஸ். எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், யார் வந்தாலும் அவங்கள ஃபுல்லா தரவா செக் பண்ணாம நாங்க உள்ள கூட்டிட்டு வர மாட்டோம். ஏன்னா இது எங்க அப்பாவோட முக்கியமான இடம். இங்கு பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் வந்துட்டு போற இடம். அதனால் அவங்களோட பாதுகாப்பு முக்கியம். அதே மாதிரி எங்களுக்கு எந்த கெட்ட பெயரும் வராமல் இருக்க தான் இந்த ஏற்பாடு நாங்க பண்ணிருக்கோம். இது தெரியாம நீ போய் அந்த வாட்ச்மேனை அடிச்சிட்டேன். முதல்ல நீ அவர்கிட்ட மன்னிப்பு கேளு அவர் அடிச்சதுக்காக,” என்று பூமிகா கூற.
“வாட்…..நான் இங்கே வரவங்க போறவங்களுக்கு கதவு திறந்து விட நின்னுட்டு இருக்குற இந்த வாட்ச்மேன் கிட்ட மன்னிப்பு கேட்கணுமா? அட ஸ்டேட்டஸ் என்ன? என்னோட அந்தஸ்து என்னன்னு உனக்கு தெரிஞ்சும் நீ அவன்கிட்ட என்னை மன்னிப்பு கேட்க சொல்றியா?” என்று அந்த வாட்ச்மேனைப் பார்த்து மரியாதை இல்லாமல் கூற.
வாட்ச்மேன் பூமிகாவிடம் வந்து, “மேடம், பரவாயில்லை விடுங்க மேடம். இவங்கள மாதிரி நான் எவ்வளவோ பேரை பாத்துட்டேன். இவங்க மன்னிப்பு கேட்கணும்னு அவசியம் இல்ல. நீங்க வந்தவங்கள கவனிங்க மேடம். உங்களுக்காக அங்க ரெண்டு பேர் பாருங்க பாத்துட்டு இருக்காங்க,” என்று கூற, அப்போதுதான் துர்காவும் கீர்த்திகாவும் ஞாபகத்துக்கு வர, சரி என்று தலையை ஆட்டிய பூமிகா நேராக துர்காவும் இருக்கும் இடத்திற்கு போகவும், அப்போதுதான் காரை பார்க் செய்துவிட்டு வந்த சங்கவி அப்பாவும் அம்மாவும் வர, அவர்கள் இருவரும் துர்காவைப் பார்த்ததும் எதுவும் கூறாமல் சங்கவியைப் பார்க்க, சங்கவி கோபத்தில் நின்றிருப்பதைப் பார்த்ததும் சங்கவியின் அப்பா அவள் அருகில் சென்று, “என்னடா ஆச்சு? ஏன் இவ்வளவு கோவமா இருக்க?” என்று கேட்க.
சங்கவி அங்கு நடந்த விஷயத்தை அவள் அப்பாவிடம் கூறவும், “வந்த இடத்திலேயே ஆரம்பிச்சுட்டியா? கொஞ்ச நேரம் அமைதியா இரு. இப்படியே நீ இப்படி பண்ணிட்டு இருந்தா உன்னைப் பத்தி தப்பான விஷயம் தான் அந்த ஆதி கிட்ட போகும். கொஞ்சம் அமைதியா இரு, நான் பார்த்துக்கிறேன்,” என்று கூறிவிட்டு பூமிகாவைத் திரும்பிப் பார்த்து அவளிடம் நலம் விசாரித்தவர், அவர்கள் அறை எங்கே இருக்குது என்று கேட்டுவிட்டு சங்கவியை இழுத்துக் கொண்டு அங்கே சென்றனர்.
இதுவரை எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருந்த துர்காவைப் பார்த்த கீர்த்திகாவிற்கும், பூமிகாவிற்கும் ஏதோ போல ஆகிவிட்டது.
சங்கவி அவளை மனது நோகும்படி பேசி விட்டதால், துர்கா தன்னுடைய தகுதியைப் பற்றி சங்கவி இப்படி பேசிவிட்டாளே என்று எனக்கு மிகவும் நொந்து போய் நின்று இருக்க, அவளிடம் சென்று கீர்த்திகாவும், பூமிகாவும் ஆறுதல் கூறியவர்கள், “பூமிகா, சரி வா முதல்ல நாம என்னோட ஃபிரெண்ட்ஸ் போய் பாத்துட்டு வரலாம். நீ அங்க வந்து பார்க்கும்போது தெரிஞ்சுரும், இந்த சங்கவியைப் பத்தி எல்லாம் உனக்கு ஒரு விஷயமாகவே தெரியாது. என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாம் எப்படி என்னனு நீ பார்த்தீன்னா உனக்கு தெரிஞ்சிடும். அவங்கள விடு, உனக்காக நாங்க இருக்கோம்,” என்று கூறிக்கொண்டு துர்காவின் தோல் மேல் கை போட்டுக்கொண்டு, பூமிகா துர்காவை அழைத்துக்கொண்டு தன் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றால்.
