EPISODE 30
பூமிகாவின் தோழிகளைச் சந்தித்துவிட்டு கிளம்பிய துர்காவும், கீர்த்திகாவும் பேசிக்கொண்டே அவர்கள் அறையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கீர்த்திகா துர்காவிடம், “அக்கா, பூமிகா அக்காவோட ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் ரொம்ப நல்லா பழகுறாங்க. எனக்கு அவங்க எல்லோரையும் ரொம்ப பிடிச்சுருச்சு. அவங்கள பார்த்ததுமே என்னமோ உன் கூட பழகுற மாதிரியே எனக்கு ஃபீல் ஆச்சு அக்கா. முக்கியமா மீனு அக்கா இருக்காங்க இல்ல? அவங்கள பார்த்ததும் எனக்கு உன்கூட பேசுற மாதிரி தான் இருந்துச்சு. எனக்கு அப்படி தான் தோணுச்சு,” என்றாள் கீர்த்திகா.
கீர்த்திகா கூறியதைக் கேட்ட துர்கா சிரித்துக்கொண்டு, “ஆமாடா. மீனு நல்லாதான் பழகுறாங்க, பேசுறாங்க. அவங்க வந்து சங்கவி மாதிரி ஸ்டேட்டஸ் பார்க்காம நம்ம கூட எல்லாம் பழகுறாங்க. எனக்கு சந்தோஷமா இருக்கு,” என்றால் துர்கா.
“ஆமாக்கா, நீ சொல்றது சரிதான். ஆனாலும் இன்னைக்கு அந்த சங்கவி ரொம்ப ஓவரா தான் உன்னை ரொம்ப மட்டம் தட்டி பேசினா. எனக்கு அவ பேசுறது தாங்கிக்கவே முடியல. நீ எப்படி அவ பேசுறது எல்லாம் கேட்டுட்டு பொறுமையா இருக்க? என்னால எல்லாம் உன்னை மாதிரி எல்லாரும் பேசுவதை கேட்டுட்டு பொறுமையா இருக்க முடியாது. இனிமேல் இந்த மாதிரி அவ ஏதாவது பேசினா, நீ கேட்டுட்டு சும்மா இருக்காதே அக்கா. அவளுக்கு உறைக்குற மாதிரி ஏதாவது பேசிவிடு இல்ல திட்டிவிடு. அப்பதான் அவளுக்கு கொஞ்சமாவது உறைக்கும் அக்கா,” என்றால் கீர்த்திகா.
“அப்படி எல்லாம் சொல்லாதே கீர்த்திகா. அவ பேசுறதுக்கு எல்லாமே நம்ம பதில் பேசிட்டு இருந்தோம்னா, அப்புறம் அவளுக்கும், நமக்கும் வித்தியாசமே இல்லாம போயிடும். அவ வேணும்னு தான் என்னை எல்லார் முன்னாடியும் மட்டம் தட்டி பேசிட்டு இருக்கா. அவ ஆதியை முதல்ல வேண்டாம்னு சொல்லிட்டு, பின்னாடி அவங்க அப்பா பணத்தை பத்தி சொல்லி அவளை இதையும் அதையும் சொல்லி மனசு கெடுத்ததுக்கு அப்புறம் ஆதி வேணும்னு திரும்பவும் கல்யாணத்துக்கு ஒத்துக்குறப்பவே அவளைப் பத்தி நீ தெரிஞ்சுக்க வேண்டாம்? அவளோட புத்தி எவ்ளோ கேடுகெட்ட தனமா இருக்குன்னு. அப்படி இருக்கிறவ கிட்ட நம்மளும் அவளை மாதிரியே திருப்பி பேசணும்னா அப்புறம் அவளுக்கும் நமக்கும் சுத்தமா ஒரு வித்தியாசமும் இல்லை கீர்த்திகா. அதனாலதான் நான் அவ எது பேசினாலும் திருப்பி பேசறது இல்லை. ஆனா ஆதியை மட்டும் அவ ஏதாவது சொன்னா என்னால தாங்கிக்க முடியாது. அன்னைக்கு அவ ஆதியோட ஆபீஸ்ல வச்சு ஆதியை ரொம்ப பேசிட்டா. அவ அப்படி பேசின நாள் தான் நான் அவளை அடிச்சேன்,” என்று துர்கா அன்று நடந்த விஷயங்களை கூறினாள்.
கீர்த்திகா இதெல்லாம் கேட்டுவிட்டு, “பரவாயில்லை அக்கா, உனக்கும் கொஞ்சம் தைரியம் இருக்கத்தான் செய்து. அவளையே ஆதி மாமா ஆபீஸ்ல வச்சு அடிச்சிட்டியே. சூப்பர்,” என்று கீர்த்திகா துர்காவை ஆகா… ஓகோ… என்று புகழ, “ஏய் கீர்த்து, சும்மா பேசாம வா…” என்று அவளை இழுத்துக்கொண்டு சென்றாள்.
கீர்த்திகாவும், துர்காவும் பூமிகாவுடன் வெளியே சென்றுவிட்டு வர வெகு நேரம் ஆகிவிட்டதால், அவர்களை காணோம் என்று அவர்களின் அம்மா வடிவு இவர்களை தேடிக்கொண்டு வெளியே நின்று இருக்க.
அவரைப் பார்த்ததும் துர்கா, கீர்த்திகா ஓடி சென்று “அம்மா” என்று கட்டிக்கொள்ள, “எங்கடா போனீங்க இரண்டு பேரும் இவ்வளவு நேரம்? கொஞ்சம் சீக்கிரமா வர வேண்டியதுதானே? ஏன் துர்கா, அவதான் சின்ன பொண்ணு. போன இடத்துல விளையாட்டுதனமா பேசிட்டு உட்கார்ந்திருக்கான்னா நீயுமா இப்படி இருக்க? உனக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சு. மாப்பிள்ளை அங்க தனியா ரூம்ல இருப்பாரு. உன்னை காணோம்னு தேட மாட்டாரா? இப்படி வந்ததும் வராதுமா வெளியே போயிட்ட. ஆதி தம்பி என்ன பண்றாரு? அவருக்கு ஏதாவது வேணுமான்னு கேட்காம நீ பாட்டுக்கு இவ கூட சேர்ந்துட்டு வெளியே போயிட்ட. முதல்ல போய் ஆதி தம்பியை பார்த்து ஏதாவது வேணுமான்னு கேட்டு, அவருக்கு என்ன வேணும்னு செய், போ…” என்று துர்காவை அதட்டி அனுப்பி வைக்க, கீர்த்திகாவின் முகம் மாறிவிட்டது.
“அம்மா, அக்கா இப்ப தானே வந்தா? கொஞ்ச நேரம் நம்ம கூட இருக்கட்டுமே. அதுக்கப்புறம் ஆதி மாமா கூட பேசிட்டு வரட்டுமே,” என்று சொல்ல.
“ஏய், நீ சின்ன பொண்ணு. உனக்கு ஒண்ணும் தெரியாது. சும்மா இரு,” என்று அவளை அதட்டிவிட்டு வடிவு, “நீ போடா தங்கம்,” என்று துர்காவை அவர்கள் அறைக்கு அனுப்பி வைத்தார் வடிவு.
வடிவினால் வலுக்கட்டாயமாக ஆதியிடம் அனுப்பி வைக்கப்பட, துர்கா, “ஆமாம்மா. உன்னோட மாப்பிள்ளை நான் வரலைன்னு வாசல்ல நின்னு என்ன காணோம்னு தேடிட்டு இருக்காரு பாரு. அவனுக்கு நான் என்ன பண்ணா என்ன? எங்க போனா என்ன? கொஞ்சம் கூட ஒரு ஃபிரண்டுங்குறதுக்கான அக்கறை கூட என் மேல இல்ல. கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்ட எவ்ளோ ஃப்ரெண்ட்லியா இருந்தான். என் மேல எவ்ளோ அக்கறையா இருந்தான். கல்யாணம் ஆனாலும் ஆச்சு. அவன் என்னை கண்டால் எப்ப பார்த்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழறான். என்னைக் கண்டாலே அவனுக்கு பிடிக்க மாட்டேங்குது. இதுல வேற அவனுக்கு என்ன வேணும்னு கேட்டு நான் செய்யணுமா? அவரு என்ன காணோம்னு தேடிட்டு இருப்பாரா?” என்று முனகிக்கொண்டே அந்த ரிசார்ட்டைச் சுற்றி பார்த்தபடியே முணுமுணுத்துக்கொண்டு அவள் அறைக்கு வர.
அங்கே வாசலில் ஆதி இவளுக்காகத்தான் காத்துக் கொண்டு நின்றிருந்தான். “எங்கே இவள் சென்று வெகு நேரம் ஆகிவிட்டது. இன்னும் வரவில்லையே,” என்று யோசித்துக் கொண்டிருக்க, கதவை திறந்து வெளியே வரவும், துர்கா தூரத்திலிருந்து கையில் சேலை தலைப்பைப் பிடித்து திருகிக்கொண்ட, எதையோ பேசிக்கொண்டு, சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்து வருவதைப் பார்த்தவன், “இவ என்ன ஒரு சின்ன புள்ள மாதிரி இப்படி விளையாட்டுத்தனமா நடந்து வரா,” என்று அவளைப் பார்த்துக் கொண்டே நின்று இருக்க, துர்கா அவன் நிற்பதைக் கூட கவனிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே வர.
எதிரே நின்றிருந்த ஆதியின் மீது மோதிவிட, இதை சற்றும் எதிர்பார்க்காத ஆதி, அவள் மோதியதும் நிலை தடுமாற, துர்கா அவனை இடித்த வேகத்தில் பின்னால் விழப்போக, அவளை விழாமல் சட்டு என்று அவள் இடுப்போடு சேர்த்து பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து நிறுத்தி வைத்தான்.
ஆதியின் கை அவள் சேலை கொண்டு அவள் இடுப்பு பிடித்துக்கொண்டு நின்று இருக்க, அதை உணராத துர்கா அவனையே அதிர்ச்சியில் இமைக்காமல் பார்க்க, ஆதியும் துர்காவின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தால்.
ஆதியின் கண்களையே பார்த்துக் கொண்டிருக்க, அவளை பிடித்திருந்த துர்காவின் இடையை அவளை கீழே விழாமல் இருக்க தான் பிடியை இருக்க. அப்போதுதான் நினைவு வந்தவளாக, ஆதி தன்னை பிடித்திருப்பதைப் பார்த்தவள் சட்டென்று அவனிடம் இருந்து விலகி நிற்க.
தான் தொடுவது பிடிக்காமல்ல தான் அவள் இப்படி செய்கிறாள் என்று தப்பாக நினைத்துக்கொண்ட ஆதி, துர்காவை கோபம் கொண்டு முறைத்தான்.
‘இவன் என்ன என்னை இப்படி முறைக்குறான்? மாஸ்க் போட்டு வெறும் கண்ணு மட்டும் தெரியும்போதே அவன் கோபம் இப்படி அப்பட்டமா என்னை நடுங்க வைய்க்குதே. இவன் முகம் முழுசும் இதே கோபத்தோட பார்த்தா அவ்ளோ தான்,’ என்று நினைக்கும்போதே அவள் முதுகு தண்டு சிலிர்த்தது.
அவள் ஏதோ யோசித்துக்கொண்டு நின்றிருந்ததைப் பார்த்த ஆதி, “ஏய்…. என்ன டி… அப்படி யோசிச்சுட்டு இருக்க?” என்று கேட்க.
ஆதி தன்னை ‘டி…’ போட்டு பேசியதைக் கேட்டதும், ஒரு கணம் உள்ளுக்குள் தன்னை உரிமையாக நினைத்து ‘டி…’ போட்டு கூப்பிடுகிறான் என்று நினைக்கும் போதே துர்காவிற்கு ஒரு நிமிடம் உள்ளுக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்தது.
பிறகு மறுகனமே, ‘ச்சே… இவன் தான் என்னைக் கண்டாலே எரிந்து விழுகிறானே. என்னிடம் இருந்து விலக நினைப்பவனை நினைத்து நான் கற்பனையில் சந்தோஷப்பட்டுக்கொண்டு இருக்கிறேனே,’ என்று தன்னையே நொந்துகொண்டவள்.
“ஆதி, என்னை ‘டி…’ போட்டு கூப்பிடறதை இதோட நிப்பாட்டிக்க. இன்னொரு வாட்டி இப்படி கூப்பிட்டா அப்புறம் நல்லா இருக்காது,” என்றாள்.
அவள் இப்படி தன்னிடம் பேசுவாள் என்று சற்றும் எதிர்பார்க்காத ஆதியின் கோபம் மேலும் அதிகரித்தது.
தன்னிடம் இருந்து விலகி நின்றதிலேயே கோபம் கொண்டிருந்த ஆதி, துர்கா இப்படி பேசவும் மேலும் கோபம் கொண்ட ஆதி அவளிடம் நெருங்கியவன், “நான் உன்னை ‘டி…’ போட்டு கூப்பிட கூடாதா? நான் அப்படி தான் உன்னை ‘டி…’ போட்டு கூப்பிடுவேன். என்ன செய்வ நீ?” என்றான்.
“என்னை ‘டி…’ போட்டு கூப்பிட உனக்கு என்ன உரிமை இருக்கு ஆதி? எப்படியும் நீயும் நானும் பிரியத்தானே போகிறோம். அப்படி இருக்க நீ எப்படி என்னை ‘டி…’ போட்டு கூப்பிடலாம்? எனக்காக, என்னை நினைப்பவர்கள் மட்டுமே என்னை உரிமையுடன் நீ கூப்பிட்டது போல கூப்பிட முடியும். அப்படி இருக்க நீ….யார்…. எனக்கு?” என்றால் கோபத்துடன் அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து.
துர்கா தன்னிடம் பழகிய நாட்களில் இருந்து இது போல அவனிடம் பேசியதில்லை. ஆனால் இன்று இவ்வளவு பேசுகிறாள் என்று அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருக்க.
ஆதி எதுவுமே பேசாமல் அமைதியாக நிற்க, ‘தான் காதலித்த ஆதி நீ இல்லை ஆதி,’ என்று மனதிற்குள் அழுதவள் அவனைத் தாண்டி உள்ளே சென்றால்.
தன்னை இவ்வளவு தூரம் எடுத்தெறிந்து பேசிவிட்டு தாண்டி சென்ற துர்காவின் மீது அளவு கடந்த கோபம் வர, ஆதி அதே கோபத்தோடு அறைக்குள் வர அங்கே துர்கா அவள் ஆடைகளை பெட்டியில் வைத்து எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே ஆதியை தாண்டி செல்ல.
தன்னை சுத்தமாக கண்டு கொள்ளாமல், உதாசீனம் படுத்திவிட்டு சென்றவளின் கையைப் பிடித்து இழுத்து தன் முன் நிறுத்த, கையில் இருந்த பெட்டி கீழே விழ, அவனை முறைத்த துர்கா, “இப்போ எதுக்கு என் கையை பிடிச்சே ஆதி? என்ன வேணும் உனக்கு? என்னை விடு,” என்று அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள திமிர.
“என்ன டி… நான் உன் கையை பிடிக்க கூடாதோ? ரொம்ப துள்ளுற,” என்றவன் தான் பிடியை மேலும் இருக்க.
அவன் அழுத்தி பிடித்ததில் வலியில் மேலும் கோபம் கொண்ட துர்கா, “ஆதி… நான் வெளியில் என்ன சொன்னேனோ அதே தான் இப்பவும் சொல்றேன். என் கிட்ட எந்த உரிமையில் நீ இப்படி எல்லாம் நடந்துகிற? உனக்கும் எனக்கும் என்ன மாதிரியான உறவு இருக்கு?” என்று ஏதேதோ கோபத்தில் துர்கா ஆதியை கேட்க.
“என்ன டி… ஆன்னா உன்னா… உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் கேட்டுட்டே இருக்க?” என்று கேட்டவன் அவள் முகத்தை பார்த்து பேசிக் கொண்டிருந்தவனின் பார்வை அவள் கழுத்தில் இருந்து கீழே இறங்க.
அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசிக் கொண்டிருந்த துர்கா அவன் பார்வை செல்லும் இடத்தைப் பார்க்க. தன்னை கழுத்துக்கு கீழ் பார்க்கிறான் என்று தெரிந்ததும் கோபம் கொண்டு அவனை ஓங்கி கன்னத்தில் அறைய, அதை சற்றும் எதிர்பார்க்காத ஆதி, அவள் கையை மேலும் இருக்கி பிடித்தவன், “ஏய்… என்ன டி… நானும் பார்க்கிறேன். ரொம்ப ஓவர் ஆஹ் போற. இப்போ நான் உன்னை என்ன பண்ணிட்டேன்னு என்னை அடிச்ச நீ? உன்னோட கையை பிடிச்சதுக்காக என்னை அடிச்ச நீ?” என்று கேட்க.
“உன் பார்வை என் முகத்தில் இருந்து கழுத்துக்குக் கீழ் ஏன் போனது? அதனால் தான் நான் உன்னை அடித்தேன்,” என்றால்.
“ச்சி… இவ்ளோ தானா நீ? உன் புத்தி என்னை பற்றி இவ்வளவு கேவலமாகவா நினைத்துக்கொண்டு இருக்கிறது?” என்றவன் அவள் கழுத்தில் இருந்த தாலியை கையில் பிடித்து உயர்த்தி, “உன்னிடம் இப்படி எல்லாம் நடந்து கொள்ள எனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்டாயே. இந்த உரிமையில் தான் பேசுகிறேன் என்று சொல்வதற்காக தான் உன் கழுத்தை பார்த்தேன். நீ நினைக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பொறுக்கி அல்ல, ஒரு பெண்ணை கட்டிய மனைவியாகவே இருந்தாலும் அவள் அனுமதி இல்லாமல் கீழ்த்தரமாக பார்ப்பதற்கு,” என்று கூறியவன்.
“ஆனால் எப்போது நீ என்னை இவ்வளவு மட்டமாக நினைத்தாயோ, இனியும் நான் சும்மா இருந்தால் நன்றாக இருக்காது,” என்றவன் துர்காவின் கண்களை பார்க்க, துர்காவும் அவன் கண்களை தான் பார்த்துக் கொண்டிருந்தால். தான் அணிந்திருந்த மாஸ்கை கழட்டியவன் அவளை பார்க்க, துர்கா அவன் மாஸ்கை கழட்டவும், அவன் கோபம் கொண்ட முகத்தை முழுமையாக அதுவும் அவ்வளவு அருகில் பார்க்க.
அவன் மூச்சுகாற்று மிகவும் உஷ்ணமாக அவள் முகத்தில் பட, துர்காவிற்கு பயம் தொற்றிக்கொண்டது. “ஆ… ஆத்… ஆதி…” என்று அவனை அழைக்க, ஆனால் கோபத்தின் உச்சியில் இருந்த ஆதி, துர்கா அழைத்தது அவன் காதில் விழுவதற்குள், துர்கா என்ன என்று யோசிப்பதற்குள் கீழே குனிந்து அவள் இதழை சிறை செய்தான்.
இதை சற்றும் எதிர்பார்க்காத துர்கா அதிர்ச்சியில் கண்களை அகல விரித்து ஆதியின் கண்களை பார்க்க, அவனும் கண்கள் சிவக்க துர்காவின் கண்களை பார்த்துக்கொண்டே அவளை முத்தமிட, அவன் பார்வையில் இருந்தது கோபமா, காமமா, காதலா என்ன என்று புரியாமல் கண்களை மூட மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தால்.
ஆதியை எதிர்க்க கூட தோன்றாமல் அவன் விழிகளையே பார்த்துக் கொண்டிருக்க, தான் முத்தம் கொடுத்ததும் துர்காவிடம் இருந்து எந்த எதிர்வினையும் வராமல் போகவே, முத்தத்தை மேலும் தீவிரமாகியவன் அவள் இதழ்களை வலுக்கட்டாயமாக பிரித்து தன் நாவினால் அவள் நாவை வருட, சட்டென துர்காவும் பெண்மை விழித்துக்கொள்ள, தன்னை அவனிடம் இருந்து விலகிக்கொள்ள அவன் மார்பில் கைவைத்து அழுத்தி அவனிடம் இருந்து பிரிந்தவள்.
“ஆதி…” என்று கத்திவிட்டு, “என் கழுத்தில் தாலி கட்டி விட்டால் நீ என்ன வேண்டுமானாலும் என்னிடம் உரிமை எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்து விட்டாயா? ச்சே… என் ஆதியா…நீ… இல்லை இல்லவே இல்லை. உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை, உன்னை பார்த்தாலே எனக்கு அருவருப்பாக இருக்கிறது. என்னை தொடாதே. எனக்கு நீ தொட்டால் உடல் எல்லாம் நெருப்பைப் பற்றவைத்தது போல இருக்கிறது,” என்று கூறி வெளியேறப் போக, “என்ன டி… சொன்னே? நான் தொட்டால் உனக்கு எரிகிறதா? நானும் போனால் போகட்டும் என்று பார்த்தால் நீ… என்னை மிகவும் கேவலமாக நினைச்சுட்டே போற. இப்போ நான் ஒரு இடம் விடாமல் தொட்டு தடவுகிறேன். அதன் பிறகு மீண்டும் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லி திட்டிக்கொள்,” என்றவன் துர்காவை நெருங்க.
அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியான துர்கா ஆதி அவள் அருகில் நெருங்கி வரவும், அவனை தள்ளி விட்டு வெளியே செல்லப் போக, “எங்க டி… ஓடுற?” என்றவன் அவள் சேலை தலைப்பை பற்றி இழுக்க, அவன் இழுத்த இழுப்பில் அவன் மார்பின் மீது மோதி நிற்க, அவளை அப்படியே இழுத்த வேகத்தில் தன் கையில் துர்காவை தூக்கியவன் அவளை தூக்கி பெட்டில் போட்டான்.
