Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 34

உன் ரகசிய ரசிகை நான் 34

by Layas Tamil Novel
660 views

EPISODE 34

அனைவரும் கிளம்பி வரவேற்பு நிகழ்ச்சிக்குச் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருக்க, துர்கா தன் அறைக்கு வந்து ஆதி கிளம்பிவிட்டானா என்று பார்ப்பதற்காக அறைக்குள் வந்தாள். ஆதி ரெடியாகி சோபாவில் அமர்ந்து கொண்டு தன் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான்.

அவன் ‘டிப் டாப்பாக’ அணிந்திருந்த உடையையும் அவனையும் பார்த்த துர்கா, அவன் மாஸ்க் அணிந்த முகத்தையும் அவனையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தாள்.

‘எப்படி இவன் மட்டும் என்ன டிரஸ் போட்டாலும் அழகாக இருக்கிறான்? மாஸ்க் அணிந்த முகமாக இருந்தாலும் அவன் கண்கள் ஒன்றே போதுமே, அவன் பால் தன்னை அது ஈர்த்து விடுகிறதே’ என்று யோசித்துக் கொண்டே வந்தவள், எதிரே இருந்த டேபிளைக் கவனிக்காமல் வந்தாள். அவள் உள்ளே வரும் சத்தம் கேட்டு யதேச்சையாகத் திரும்பிப் பார்த்த ஆதி, துர்கா தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு வருவதைப் பார்த்தவன், ‘என்ன இப்படிப் பச்சையாக என்னைச் சைட் அடிக்கிறாள்?’ என்று இவனும் விடாமல் அவளையே பார்க்க, ஆனால் துர்காவின் மூளைக்கு அவன் தன்னையே பார்க்கிறான் என்று உரைக்கவில்லை.

அவள் தான் பார்ப்பது கூடத் தெரியாமல் இப்படி தன்னையே பார்ப்பதை எண்ணி ஆதிக்கு ஆச்சர்யமாகப் போய், மாஸ்கைக் கழட்டிக்கொண்டே அவளையே அவனும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். காலையில் என்னவென்றால், ‘நான் தொட்டால் உடலெல்லாம் எரிகிறது’ என்றால்; ஆனால், இப்போது அதற்கு நேர் மாறாக இப்படித் தன்னையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு வரும் துர்காவைப் புரிந்துகொள்ள முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த ஆதி, அவள் எதிரே இருக்கும் டேபிளில் மோதப் போகிறாள் என்று பார்த்தவன், “துர்கா… டேபிள்… பார்த்து…” என்று கூற, அது அவள் காதிலேயே விழவில்லை. அவள் அந்த அளவிற்கு மெய்மறந்து போயிருந்தாள்.

அவளை அழைத்தும் அவள் நிஜ உலகிற்கு வராததை எண்ணிச் சிரித்தவன், சோபாவிலிருந்து எழுந்தவன், அவள் டேபிளில் மோதி கீழே விழாமல் இருக்க வேகமாக வந்து அவள் கரத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தப் போக, அப்போதுதான் தான் சுயத்திற்கு வந்தவள் ஆதியைத் திடீர் என்று அவ்வளவு அருகாமையில் பார்த்ததும் பதறியவள், அவனிடமிருந்து விலக நினைக்க, பதட்டத்தில் கால் தடுமாறி விழப் போக, தான் விழாமல் இருக்க எதிரே இருந்த ஆதியின் கோட்டைப் பிடிக்க, அவள் விழுந்த வேகத்தில் ஆதியையும் தன்னோடு சேர்த்து இழுத்துக்கொண்டு கீழே விழுந்தாள்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஆதி சுதாரிக்க முடியாமல் அவள் மேலேயே விழுந்தான். விழுந்த வேகத்தில் இருவர் இதழும் மோதிக்கொள்ள, துர்கா இதை எதிர்பார்க்காததினால் அதிர்ச்சியில் அவனைப் பார்க்க, ஆதியும் அதே நிலையில்தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

காலையில் கொடுத்தது போலவே ஆழமான முத்தமாக இல்லாமல் போனாலும், இந்தத் திடீர் முத்தம் அவனுக்குப் பிடித்திருந்தது. அவளைப் பிரிய மனம் வராமல் ஆதி அவள் மேலேயே படுத்திருக்க, தன் மேல் இருந்து இன்னும் விலகாமல் அப்படியே படுத்திருந்த ஆதியைப் புரியாமல் பார்த்த துர்கா, அவன் உதடு இன்னும் தன் இதழை விட்டுப் பிரியாமல் அவள் உதட்டோடு உரசிய வண்ணம் இருப்பதை உணர்ந்தவள், அவனைத் தன் மேல் இருந்து விலக்கப் போராட, அவள் அவனிடமிருந்து விலகுவதற்காகத் தன் உடலையும் முகத்தையும் அசைக்க அசைக்க, ஆதியின் அழுத்தம் கூடிக்கொண்டே போனது. அதை மிகவும் தாமதமாகவே உணர்ந்தவள், தன் கைகளால் அவன் முகத்தைப் பிடித்துத் தன் முகத்தில் இருந்து பிரித்தவள், “ஆதி” என்று அழைத்தாள்.

“என்ன?” என்றான் அவள் மேல் இருந்துகொண்டே.

“என்ன பண்ற ஆதி? முதல்ல என் மேல இருந்து எழுந்திரு,” என்றால்.

“நான் என்ன பண்ணினேன்? நீதான் என்னை என்னவோ பண்ற,” என்றான்.

அவன் அப்படி கூறியதும், “நான் என்ன பண்ணினேன்?” என்றால் துர்கா.

“நீ என்ன பண்ணுன? பாவமே! கீழே விழப் போறியே என்று வந்து உன்னைப் பிடித்துக்கொண்டால், நீ என்னை இழுத்து உன் மேல் போட்டுக் கொண்டது மட்டும் போதாது என்று எனக்கு முத்தம் வேறு கொடுத்துவிட்டாய்,” என்றான்.

அவன் அப்படி, தான் என்னவோ வலுக்கட்டாயமாக அவனைத் தன் மீது போட்டுக் கொண்டு, தான் வேண்டுமென்றே அவனுக்கு முத்தம் கொடுத்ததாகச் சொல்கிறானே என்று நினைத்தவள், அவனைத் தன் மீது இருந்து மிகவும் சிரமப்பட்டுக் கீழே தள்ளி விட்டவள், எழுந்து நின்று அவனைப் பார்த்து, “நான் வேணும்னு உன்னை ஒன்னும் என் மீது இழுத்து போட்டுக் கொள்ளவில்லை. நான் கீழே விழாமல் இருக்கத் தெரியாமல் உன்னைப் பிடித்து விட்டேன்,” என்றால்.

“ஓ… அப்படியா சொல்ற நீ?” என்று எழுந்தவன், தன் மேல் இருந்த தூசியைத் தட்டிக்கொண்டு எழுந்தவன், “உன்னைப் பார்த்தால் அப்படித் தெரியாமல் பிடித்து இழுத்தது போலவே தெரியலையே. கதவைத் திறந்து வந்ததிலிருந்து என்னையே தான் பார்த்துட்டு இருந்த. நான் உன் பேரைச் சொல்லி கூப்பிட்டும் நீ எதுவுமே பேசலை. இப்படி அப்பட்டமாக என்னை சைட் அடிச்சுட்டு, கடைசியில் ‘நான் வேணும்னு எல்லாத்தையும் பண்ணினேன்’ மாதிரி இல்லை நீ சொல்ற,” என்றான் ஆதி.

‘என்ன! நான் உள்ளே வந்ததிலிருந்து இவன் என்னையே பார்த்துக்கொண்டுதான் இருந்தானா? இதுகூடத் தெரியாமல் நான் இவனையே பார்த்துக் கொண்டு இருந்தது இவனுக்கும் தெரிந்துவிட்டதா?’ என்று நினைத்தவள், அவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் விழிக்க.

அவள் ஏதோ யோசித்த வண்ணம் திருதிருவென விழித்து இருப்பதைப் பார்த்தவன் உள்ளுக்குள் சிரித்தவன், “ம்ஹும்…” என்று தொண்டையைச் செரும, அவன் செருமலில் திடுக்கிட்டவள், “க்… ஆதி, நான் ஒன்றும் உன்னைப் பார்க்கவில்லை. நீ ரெடி ஆகிட்டியா இல்லையா என்றுதான் பார்க்க வந்தேன்,” என்றால் துர்கா.

“ரெடி ஆகிட்டியான்னு பார்க்க வந்தே. சரி. ஆனால், எதுக்கு என்னைப் பிடித்து இழுத்து முத்தம் கொடுத்தே?” என்று கேட்டான்.

அவன் அப்படி கேட்டதும் பதட்டத்தில், “நான் எங்க உனக்கு முத்தம் கொடுத்தேன்? நீதான் எனக்கு முத்தம் கொடுத்தே. நான் எதுவுமே பண்ணலை,” என்றால் அழுவது போலவே முகத்தை வைத்துக்கொண்டு.

“நானா உனக்கு முத்தம் கொடுத்தேன்?” என்று ஆதி கேட்க, அவள் “ஆமாம்” என்று வேகமாகத் தலையை குழந்தை போலவே மேலும் கீழும் ஆட்ட, அதை ரசித்தவன்,

“நானா வந்து உனக்கு முத்தம் கொடுத்திருந்தால் இப்படியா முத்தம் கொடுத்திருப்பேன்?” என்று கூறியவன், சட்டென்று துர்காவின் முகத்தைப் பிடித்துத் தன் அருகில் கொண்டு வந்தவன், அவள் அதிர்ச்சியில் விரிந்த கண்களைப் பார்த்துக் கொண்டே அவளுக்கு அழுத்தமாக ஒரு முத்தத்தைக் கொடுத்தவன், அவளை விட்டுப் பிரிந்தவன், “இப்படித்தான் கொடுப்பேன்,” என்று கூறி மீண்டும் ஒரு முத்தத்தை அவள் தடுக்கத் தடுக்க கொடுத்துவிட்டு அவளை விட்டு விலகி நின்றான்.

அவள் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நிற்க, “ஹேய்… துர்கா…” என்று அவள் முகத்திற்கு நேராகத் தன் கைகளை ஆட்ட, ‘என்ன’ என்பது போலவே அவன் கொடுத்த முத்தத்தில் இருந்து மீள முடியாமல் அவனைப் பார்க்க, “இப்படியே எவ்வளவு நேரம் நிப்ப? ஃபங்ஷனுக்குப் போகணும்னு ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று கேட்க.

அவன் மீது கோபம் கொண்ட துர்கா, “ஆதி, இப்போ எதுக்கு நீ எனக்கு முத்தம் கொடுத்தே?” என்று சண்டையிட்டாள் அவனிடம்.

“இனிமேல் இந்த மாதிரி பண்ற வேலை எல்லாம் வெச்சுக்காதே. என் விருப்பம் இல்லாமல் என்கிட்ட வர வேலை எல்லாம் வேண்டாம். நான் உங்க ஸ்டேட்டஸ்க்கு ஏற்ற ஆள் கிடையாது. அத்தை சொன்ன ஒரே காரணத்துக்காக உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீ சொன்னது போலவே உன்னை வளைச்சுப் போடவோ, உன்கிட்ட இருக்க காசுக்காகவோ இல்லை ஆதி. அதனால நீயா எதுவும் நினைச்சுட்டு இப்படி எல்லாம் என்கிட்ட நடந்துக்காதே. புரியுதா? கொஞ்ச நாள் பொறு ஆதி. ஒரு நல்ல சூழ்நிலையாகப் பார்த்து நான் அத்தை, மாமாகிட்ட பக்குவமாகப் பேசி, ‘உனக்கும் எனக்கும் இந்தத் திருமணத்தில் இஷ்டம் இல்லை. நாங்க ஒண்ணா வாழ்றது காலத்தின் விரயம் தான் ஆகும்’ என்று சொல்ல…”

“ஓ! அப்போ மேடம் எங்க அம்மா அப்பாகிட்ட போய் நாம சந்தோஷமாக இல்லைன்னு சொல்லப் போறீங்க அப்படித்தானே?” என்றான் கோபமாக. அவள் “அம்” என்று தலையை ஆட்ட, அவள் சொன்னதெல்லாம் கேட்டவனின் கோபம் மேலும் அதிகமாக, அவள் முடியைக் கோபத்தோடு பிடித்துத் தன் அருகில் இழுத்தவன், “என்ன டி சொல்ற? நான் உனக்கு வேணாமா? என்கிட்ட இருந்து பிரியணும்னு நீ நினைக்கிறியா? அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதை மாற்றிக்கொள். உன்னை என்னிடம் இருந்து போகவிட்டால் தானே நீ போவே. என்ன ஆனாலும் சரி, நீ என்னிடம் இருந்து போகவேண்டும் என்று நினைத்தது நடக்கவே நடக்காது,” என்றான்.

அவன் தன் முடியைப் பிடித்து இழுத்தது, இப்போது அவன் பேசிய வார்த்தைகள் எல்லாம் கேட்ட துர்காவுக்குக் கண்களில் கண்ணீர் வர, அதைப் பார்த்த ஆதி மனதில் ஏதோ செய்ய, மெல்ல அவள் முடியை விட்டவன், கலைந்திருந்தா அவள் முடியைச் சரி செய்தவன், “கண்ணைத் துடைச்சுட்டு ஃப்ரெஷ் ஆகி வா. நான் வெளிய வெயிட் பண்றேன். நாம கிளம்பலாம்,” என்று சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக வெளியே வந்தான்.

அவன் கூறியதை எல்லாம் கேட்ட துர்காவுக்கு, தான் எடுத்த முடிவு தப்பாகி விட்டதோ என்று யோசித்தவள், பின் தலையைக் குலுக்கிக் கொண்டவள், ‘இதை பிறகு யோசித்துக்கொள்ளலாம்’ என்று நினைத்தவள் கிளம்பி வெளியே வர, அங்கே கதிர், விக்கி, விசாலாட்சி, வெங்கடாச்சலம், அவள் அம்மா அப்பா, கீர்த்தி என்று எல்லோரும் நின்றிருந்தனர்.

அவள் வந்ததும் அனைவரும் கிளம்ப, வடிவு (துர்காவின் அம்மா), “துர்கா, நீங்க சம்மந்தி அம்மா, மாப்பிள்ளை எல்லாரும் முன்னாடி போங்க. எங்களுக்கு அங்கே யாரையும் தெரியதில்லையா? நாங்க கொஞ்ச நேரம் கழித்து வரோம்,” என்று கூற.

“அதனால் என்ன சம்மந்தி! வாங்க போலாம்,” என்று விசாலாட்சி கூற, வடிவு தயங்கிய படியே நிற்க, அவரைப் பார்த்த வெங்கடாச்சலம், “சரி பரவாயில்லை. வா விசாலாட்சி, நாம முதலில் போவோம். அவர்கள் பிறகு வரட்டும்,” என்று கூற, “சரிங்க, அப்போ கதிர், விக்கி, நீங்க இருந்து அவங்களை உங்க கூட அழைச்சுட்டு வாங்க. நாங்க முன்னால் போகிறோம்,” என்று கூறி ஆதியையும், துர்காவையும் அவர்களுடன் அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

****

வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு குடும்பத்துடன் வந்து இறங்கிய வெங்கடாச்சலம், வரவேற்புக்காக நின்றிருந்த அருணாச்சலத்தைப் பார்த்ததும், அவரும் பார்த்துவிட இருவரும் ஒருவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள, அருணாச்சலம் அனைவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். அவருடன் விசாலாட்சியும் சென்றுவிட…

துர்கா என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருக்க, அவள் மீது இன்னும் கோபம் குறையாமல் இருந்த ஆதி அவளை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் அங்கிருந்து செல்ல, துர்காவும் தான் வந்த இடத்தில் தனக்கு யாரையும் தெரியாது என்பதால் அவன் பின்னாலேயே சென்றாள்.

ஆதி வருவதைப் பார்த்து, அவர்களுக்கு முன்னாலேயே வந்திருந்த விக்ரம் (விக்கி) அவனை கை காட்டி வர, துர்காவைப் பார்த்து மீனு கை அசைக்க, துர்கா சிரித்துக் கொண்டே ஆதியைத் தாண்டிச் சென்று மீனுவிடம் பேசினாள்.

இங்கே இவளைப் பார்த்த ஆதி, ‘என்னை பார்த்தால் மட்டுமே இவளுக்குப் பிடிக்கவில்லை போல. எல்லோரிடமும் எவ்வளவு சிரித்த முகமாகப் பேசுகிறாள். ஆனால், என்னைப் பார்த்தால் மட்டும் இவளுக்கு எப்படித்தான் இருக்குமோ?’ என்று யோசித்தவன், பின் விக்ரமிடம் திரும்பிப் பேசிக் கொண்டிருக்க, விக்ரம் மீனுவிடமும் துர்காவிடமும் சொல்லிவிட்டு, ஆதியிடம் ஓசையிடாமல் அவனைத் தனியாக அழைத்துச் சென்றான். ஆதியும் துர்காவை ஒரு முறை பார்த்துவிட்டு விக்ரமுடன் சென்றான்.

****

அனைவரும் ஜோடி ஜோடியாகச் சுற்றிக் கொண்டிருக்க, தான் மட்டும் தனியாக இருப்பதாக ‘ஃபீல்’ செய்த ரித்து (ரித்திகா) அமர்ந்திருக்க, அப்போதுதான் நிகழ்ச்சிக்கு வந்திருந்த கீர்த்தி நேராகச் சாப்பிடச் சென்றவள், ‘ஃபுல் கட்டு’ கட்டிவிட்டு உள்ளே வந்து தெரிந்தவர்கள் எவரேனும் இருக்கிறார்களா என்று தேட, ரித்திகாவைப் பார்த்து விட, அவள் அருகில் வந்தவள், ரித்து புலம்புவதைக் கேட்டு அவளிடம், “யாரைப் பற்றி நினைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறீர்கள் அக்கா?” என்று கேட்டுக்கொண்டு அவளிடம் வந்து அமர. அவளைக் கண்டதும் “ஒன்றுமில்லை, சும்மா தான்,” என்ற ரித்து, இருவரும் பேசிக் கொண்டிருக்க…

அப்போது அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அந்தப் பக்கமாகச் சென்ற சங்கவி, நேராக இவர்கள் இருக்கும் இடத்திற்கு வர, அவளைப் பார்த்ததும் அவ்வளவு நேரம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த கீர்த்திகாவின் முகம் சங்கவி அங்கே வந்ததும் அவள் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது.

இதைக் கவனித்த ரித்து, கீர்த்திகாவின் கை மேல் தன் கையை வைத்து அழுத்தியவள், அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினாள்.

அவர்கள் அருகில் வந்த சங்கவி, “ஹாய்…” என்று ரித்துவைப் பார்த்து கை அசைக்க, ரித்துவும் “ஹாய்” என்றால். “என்ன இங்க உட்கார்ந்து இந்த லோ கிளாஸ் கூடப் பேசிட்டு இருக்கீங்க?” என்றால் சங்கவி.

அவள் தன்னை ‘லோ கிளாஸ்’ என்று மேலும் கீர்த்திகாவுக்குக் கோபம் வர, “ஏய்! யாரைப் பார்த்து லோ கிளாஸ்ன்னு சொல்ற? நீதான் லோ கிளாஸ்! ரொம்பக் கேவலமான எண்ணம் இருக்கிற நீதான் லோ கிளாஸ்! நான் இல்லை!” என்று கீர்த்தி அவளிடம் சண்டைக்குச் செல்ல.

அவளை இடைமறித்து சமாதானம் செய்த ரித்து, சங்கவியைப் பார்த்து, “ஹலோ சங்கவி! ஒரு ஃபங்ஷன் வந்த இடத்தில் இப்படியா பேசுவீங்க? கொஞ்சம்கூட மேனர்ஸ் இல்லாமல்!” என்றவள், “போங்க, நீங்க எதுக்கு வந்திங்களோ அந்த வேலையைப் பாருங்க,” என்று கூற, அவர்களை முறைத்த சங்கவி, ‘இரு டி… உன்னை பிறகுப் பார்த்துக் கொள்கிறேன்’ என்பதுபோல கீர்த்தியைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து செல்ல.

அவள் சென்றதும், “அப்பாடா! ஒரு வழியா ஓடிட்டா! இவளுக்கு என்னையும் என் அக்காவையும் பார்த்தால் எப்படித்தான் இருக்குமோ!” என்று கோபத்தில் பேசிக் கொண்டிருந்த கீர்த்தி, திடீர் என்று “வாவ்…” என்று கத்த, அவளைப் புரியாமல் ரித்து பார்த்து, “என்ன ஆச்சு?” என்று கேட்க, கீர்த்தி தன் கையை உயர்த்தி தனக்கு எதிரே காட்ட, அவள் காட்டிய இடத்தை ரித்துவும் பார்த்தவள் அதிர்ச்சியில் அப்படியே நின்றாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured