Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 42

உன் ரகசிய ரசிகை நான் 42

by Layas Tamil Novel
362 views

EPISODE 42

அனைவரும் இரவுபோல வீட்டிற்கு வர, துர்காவையும், ஆதியையும் இறக்கிவிட்டுவிட்டு மற்றவர்கள் கிளம்பப் போனார்கள்.

“துர்கா… இவ்ளோ தூரம் வந்துட்டு இப்பவே எல்லாரும் கிளம்பணுமா என்ன? யாரும் போக வேணாம். நைட் இங்கேயே தங்கிட்டு நாளைக்குப் போகலாம்,” என்று கட்டளையாகச் சொல்லிவிட, வேறு வழி இல்லாமல் அனைவரும் அங்கேயே தங்கிவிட்டனர்.

விக்கியும் கதிரும் அறைக்குச் சென்று ஃப்ரெஷ் ஆகி வரச் சென்றுவிட, கீர்த்திகாவை அங்கே இருந்த கெஸ்ட் ரூமில் ஃப்ரெஷ் ஆகச் சொல்லிவிட்டு வந்த துர்கா, அனைவர்க்கும் முத்து தாத்தாவிடம் சொல்லி இரவு உணவு தயார் செய்யச் சொல்லிவிட்டு, அவருடன் சேர்ந்து சமையல் செய்துகொண்டிருந்தாள்.

மேலே தன் அறைக்குச் சென்ற ஆதி, துர்கா தன் அறைக்கு வருவாள் என்று நினைத்தவன் அவளுக்காகக் காத்திருக்க, வெகு நேரமாகியும் துர்கா வராததால், தன் அறையில் இருந்து வெளியே எட்டிப் பார்த்தான். அவள் சமையல் கட்டில் தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்தாள்.

ச்சே… இந்தக் துர்காவை யாரு இப்போ சமையல் செய்யச் சொன்னது? அதுக்குத்தான் ஆட்கள் இருக்காங்களே. இவளேதான் போய்ச் சமையல் செய்யணுமா என்ன?

இங்கே ஒருத்தன் அவளுக்காகக் காத்துட்டு இருக்கானே அப்டிங்குற நினைப்பு இவளுக்கு கொஞ்சமாவது இருக்கா பாரு! என்று நினைத்தவன், துர்காவை நினைத்துக்கொண்டே குளிக்கச் சென்றான்.

குளித்துவிட்டு வெளியே வந்த ஆதி, இடுப்பில் வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு, மற்றொரு டவலால் தன் தலையைத் துவட்டியவாறே வெளியே வர… அங்கே துர்கா துணி இருக்கும் அலமாரியின் முன் நின்றுகொண்டு ஏதோ எடுத்துக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் ஆதிக்குச் சந்தோஷமாகிவிட, கையில் இருந்த டவலைக் கட்டிலில் போட்டுவிட்டு, மெதுவாக அவள் அருகில் சென்றவன், துர்காவின் பின்னால் சத்தமின்றி வந்து நின்றான். எதுவும் பேசாமல் அவள் என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்த்தான்.

“இந்த ஆதிக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லை. எப்போ பாரு டிரஸ்ஸையெல்லாம் கலைச்சு வைப்பதையே வேலையா வெச்சிருக்கான். எல்லாம் இந்த அத்தையைச் சொல்லணும். கொஞ்சமாவது பொறுப்பா வளர்த்திருக்காங்களா அவனை? ஆபீஸில் மட்டும் ‘அது சரியா இருக்கணும், இது சரியா இருக்கணும்’னு கொஞ்சம் டேபிளில் ஃபைல்ஸ் எல்லாம் கலைஞ்சிருந்தா என்னைக் எவ்வளவு திட்டு திட்டுவான், ‘இப்படித்தான் பொறுப்பில்லாம இருப்பியா?’ என்று. ஆனால், இங்க வீட்ல பாரு எப்படி வெச்சிருக்கான்னு. நின்ன இடத்தில் டிரஸ்ஸைக் கழட்டிப் போட வேண்டியது. குளிச்சுட்டு வந்தா டவலை ஈரத்தோட கொண்டு வந்து பெட்டில் போட வேண்டியது. டிரஸ்ஸை களையாமல் எடுக்கத் தெரியுறதில்லை. இவனை என்ன செய்வது?” என்று புலம்பிக்கொண்டே, தனக்கு மாற்றிக்கொள்ள உடைகளை எடுத்துக்கொண்டு திரும்ப… இவ்வளவு நேரம் துர்கா தன்னைத் திட்டியதை எல்லாம் கேட்டுக்கொண்டு அவள் அருகில் கை கட்டி நின்றிருந்த ஆதி மீது மோதி, அவனை இடித்த வேகத்தில் பின்னால் சென்று அலமாரியில் முட்டி நின்றாள் துர்கா.

அவனிடமிருந்து பின்னால் நகர்ந்து நின்றவள், அப்போதுதான் அவனை முழுதாகப் பார்க்க… ஆதியின் உடலில் ஈரத்துடன் தலையில் நீர் சொட்டிக்கொண்டு இருக்க, இடுப்பில் ஒற்றைத் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அவள் முன்னாள் நின்று இருந்தவனை, கீழிருந்து மேலாகப் பார்த்தாள். அவன் இடுப்பில் கட்டியிருந்த துண்டைத் தாண்டி அவள் பார்வை மேலே வர… என்னதான் உடல் முழுக்க கொப்புளங்களும் தழும்புகளும் இருந்தாலும், அதையும் தாண்டி அவன் சிக்ஸ் பேக் உடம்பு அவளைச் சுண்டி இழுக்க, அதைத் தொட்டுப் பார்க்கும் ஆவலைக் கஷ்டப்பட்டுத் தடுத்தாள். மேலே நிமிர, அவள் தன்னை ரசிப்பதைக் கவனித்தான் ஆதி.

துர்காவை மேலிருந்து கீழாகப் பார்த்தவன்… அவள் சேலையை மிக நேர்த்தியாகக் கட்டி இருக்க, அவள் உடல் வளைவுக்கு ஏற்றதுபோல அவள் உடம்பில் கச்சிதமாகப் பொருந்தி இருந்த சேலையும், அவள் இடுப்பில் சொருகி இருந்த சேலைத் தலைப்பும் அவள் வெற்று இடையை அப்பட்டமாகக் காட்ட… அவள் இடையைப் பார்த்ததும் தானாகத் தொடச் சென்ற தன் கையை கஷ்டப்பட்டு அடக்கியவன், தன் கண்களை அப்படியே லேசாக மேலே உயர்த்த… ஆதி இவ்வளவு அருகில் நின்றிருப்பதால் துர்காவுக்குப் பதட்டம் தொற்றிக்கொள்ள, அவள் பெரிய மூச்சுகளாக எடுத்துக்கொண்டு நின்றிருந்தாள். அவள் செய்த செய்கையால் அவள் நெஞ்சுப் பகுதி மேலும் கீழும் ஏறி இறங்க, ஒரு பெருமூச்சுடன் அதைப் பார்த்துவிட்டு துர்காவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். துர்காவும் ஆதியைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

கடவுளே!! நான் இவ்வளவு நேரம் ஆதியைத் திட்டியதை எல்லாம் அவன் கேட்டுக்கொண்டுதான் நின்றிருந்தானா? இப்போது ஏதாவது கேட்டால் நான் என்ன செய்வேன்? மணி வேற இவனை ரொம்பத் திட்டிவிட்டேனே. கடவுளே! இவனிடம் இருந்து என்னைக் காப்பாற்று! என்று துர்கா மனதிற்குள் கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருக்க… அவள் முகத்தில் ஒரு நிமிடத்தில் எழும் முக பாவனையைப் பார்த்தவன்,

“என்ன துர்கா… கடவுள் கிட்டே பலமான வேண்டுதல் போல…” என்றான். அவன் எப்படித் தன் மனதில் கடவுளிடம் வேண்டியதை அப்படியே சொல்லிவிட்டானே என்று ஆச்சர்யமாக அவனைப் பார்க்க…

அவள் கண்களை அகல விரித்து, கருவிழிகளை உருட்டி ஆதியைப் பார்க்க… “என்னடா மனசில் நினைச்சதை அப்படியே சொல்லிவிட்டானே என்று யோசிக்கிறியா?” என்று ஆதி கேட்க,

“இ… இல்லை… ஆதி,” என்று அவள் தலையை இட வலமாக ஆட்ட… அவள் கன்னத்தை ஒரு கையால் பிடித்தவன், “இப்படி கண்ணை உருட்டி என்னைப் பார்க்காத துர்கா…” என்றான்.

“ஏ… ஏன்… ஆதி?” என்று துர்கா புரியாமல் கேட்க, “உனக்கு அதையெல்லாம் சொன்னால் புரியாது,” என்றவன், அவள் முகத்தருகில் தன் முகத்தைக் கொண்டு வர… “ஆ… ஆதி… என்ன பண்ற?” என்று திக்கித் திணறி கேட்க… “ஷ்…” என்று அவள் உதட்டில் தன் ஒரு விரலைக் கொண்டு அவளைப் பேசாதே என்று தடுத்தவன்…

தன் மற்றொரு கையால் அவள் முகத்தில் இருந்து கையை கீழே இறக்க… துர்காவின் இதயம் அவன் செயலால் வேகமாகத் துடிக்க… இப்போது என்ன செய்வது என்று யோசித்தவள், ஒரு வழியாக “ஆதி என்… என்ன பண்ற?” என்று கேட்டே விட்டாள்.

“நான் என்ன பண்ணப் போறேன்னு நீ நினைக்கிறே?” என்று அவளிடமே திருப்பிக் கேட்டான். அவள் எதுவும் சொல்ல முடியாமல் விழிக்க, “இப்போதானே சொன்னேன், இந்தக் கண்ணை வெச்சுட்டு இப்படி உருட்டாதே,” என்று சொன்னவன், அவன் கைகளை துர்காவின் மார்பைத் தாண்டி கீழே கொண்டு வந்தவன், அவள் இடுப்பில் சொருகி இருந்த சேலைத் தலைப்பை வெடுக்கென்று இழுத்தான்.

ஆதி தன் சேலைத் தலைப்பைப் பிடித்து இழுக்கவும், என்ன செய்வது என்று தெரியாமல் அவனையே பார்க்க… “என்ன துர்கா… என்னைப் அப்படிப் பார்க்கிறே? நான் உன்னை எதுவும் செய்துவிடுவேன் என்று பயமா இருக்கா?” என்று கேட்டான்.

அதற்கு துர்கா “ஆமாம்” என்று மேலும் கீழும் தலையை மெல்ல ஆட்டியவள், பிறகு வேகமாகத் தலையை இட வலமாக ஆட்டி “இல்லை” என்று சொன்னாள்.

அவள் செய்ததைப் பார்த்துச் சிரித்தவன், “ஒன்னு ஆமான்னு சொல்லு, இல்ல இல்லைன்னு சொல்லு. அது என்ன எதுக்குமே சம்பந்தம் இல்லாம தலையை எல்லாப் பக்கமும் ஆட்டுற? வாயைத் திறந்து பேச மாட்டியா? இந்த வாய்க்குள்ள அப்படி என்ன வெச்சிருக்க? எங்கே ஆ… காட்டு,” என்றவன், அவள் முகத்தைப் பிடித்திருந்த தன் கையை கொஞ்சம் உயர்த்தி, அவள் கன்னங்களைத் தன் விரல்களால் பிடித்து அழுத்த… மூடியிருந்த அவள் உதடுகள் பிரிந்து மீன் போல துர்காவின் உதடுகள் குவிந்திருக்க… அதைத் தன் ஒற்றை விரலால் வருடியவன், நேற்று அவளுக்கு முத்தம் கொடுத்தது ஞாபகம் வர ஒரு பெரு மூச்சு விட்டான்.

துர்கா அவன் செய்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் அவனையே பார்க்க, “உன் வாய்க்குள்ள தான் எதுவுமில்லையே. இப்போ சொல்லு, நான் கேட்ட கேள்விக்குப் பதில்,” என்றான்.

“ஆதி… நீ எதுக்கு என் சேலையை…” என்று பாதியிலேயே கேள்வியைக் கேட்டு அவனைப் பார்க்க… “உன் சேலையை இடுப்பில் இருந்து எதற்கு எடுத்தேன் என்று நீ நினைக்கிறே?” என்று மறுபடியும் அவளிடமே கேட்க… “அ… அது… வந்து…” என்று சொல்லும்போதே சேலையை அவள் முகத்திற்கு நேராக உயர்த்தியவன், துர்காவின் முகத்தில் இருந்த வியர்வைத் துளிகளை அவள் சேலைத் தலைப்பைக் கொண்டு ஒற்றி எடுக்க, துர்காவுக்கு “அப்பாடா…” என்று இருந்தது.

அவள் முகத்தைத் துடைத்து விட்டவன், “அவளை விடு! இதற்குத்தான் என் சேலையை எடுத்தியா ஆதி? என்கிட்டவே சொல்லி இருக்கலாமே. நானே துடைச்சிருப்பேனே,” என்று கூற…

“ஆமா, உன் வியர்வையைத் துடைக்கத்தான் நான் உன் இடுப்பில் இருந்த சேலையை எடுத்தேன். நான் எதற்கு உன் சேலையை உன் இடுப்பில் இருந்து எடுத்தேன் என்று நீ என்னவென்று நினைச்சே? உன்னை நான் என்ன செய்வேன்னு நீ நினைச்சே?” என்று ஆதி கேட்க…

ஐயோ… கடவுளே! இவனுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? என்கிட்ட இவ்ளோ நெருக்கமா வந்து பேசுறான். என்னென்னவோ செய்றான். கேட்டா, ‘நான் என்ன நினைச்சேன்னு’ என்கிட்டயே திருப்பிக் கேட்கிறானே! என்று மனதிற்குள் நினைத்தவள், “நான்… நான்… ஒன்னும் நினைக்கலையே,” என்றவள், “ஆதி! கொஞ்சம் வழியை விடு. நான் போய்க் குளிக்கணும்,” என்றாள்.

“இவ்ளோ இடம் இருக்கு! இதற்கு மேலும் நான் வழி விடணுமா உனக்கு இங்க இருந்து போறதுக்கு?” என்று கேட்க… அவன் சொன்னதும் தங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைப் பார்த்தவள், ஒரு புக்கை இருவருக்கும் இடையில் வைத்தால் இருக்கும் இடத்தை விட மிகச் சிறியதாகத்தான் இடைவெளி இருந்தது.

இவனிடம் இதைச் சொன்னால், அதற்கும் என்னிடமே ஏதாவது கேள்வி திரும்பக் கேட்பான் என்று நினைத்தவள், தன் மூச்சை லேசாக மேலே இழுத்து, அவன் மேல் மோதிவிடாமல் மெல்ல மெல்ல அவனை விட்டு நகர்ந்து, அவனிடம் இருந்து வேகமாக பாத்ரூம் நோக்கி ஓடிவிட்டாள்.

ஓஹோ… மேடம் என் மேல மோதிடாம போறீங்களா? எவ்வளவு நாளைக்கு இப்படி இருக்கேன்னு நானும் பார்க்கிறேன், என்று நினைத்தவன், எப்படியும் நைட் நீ ரூமிற்கு வந்துதானே ஆகணும்? அப்போ இருக்கு உனக்கு, என்று நினைத்தவன், உடை மாற்ற ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் சென்றான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured