Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 45

உன் ரகசிய ரசிகை நான் 45

by Layas Tamil Novel
692 views

EPISODE 45

கீர்த்திகாவைக் கட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்த கதிர் அவள் இதழில் முத்தமிட… முதலில் அவனுக்கு எதிர்ப்பு தெரிவித்தவள், பின் அவன் முத்தத்தில் கரைந்தவள், அவன் கழுத்தைத் தன் கைகளால் மாலைபோல் கோர்த்து கட்டிக்கொண்டாள்.

அவளுக்கு முத்தமிட்டுக்கொண்டே அவளைக் கட்டிலில் சாய்த்தவன், அவனும் அவளுடன் கட்டிலில் சரிந்தான்.

அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு இருந்தவள், அவன் தந்த முத்தத்தில் கிறங்கியவள், கதிரை இருக்கக் கட்டிக்கொள்ள… கீர்த்திகாவாகவே வந்து தன்னை அணைத்துக்கொண்டதும் கதிருக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாகிவிட, தன் முத்தத்தைத் தீவிரப்படுத்தினான்.

இருவரும் முத்தத்திலேயே தங்கள் காதலைப் பரிமாறிக்கொண்டிருக்க, தங்களை மறந்து காதல் என்ற நிலையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு இருவரின் உணர்ச்சிகளும் செல்லத் தொடங்க… மெல்லக் கீர்த்திகாவைக் கட்டிக்கொண்டிருந்தவன் கைகள் அவள் முதுகில் இருந்து இறங்கி அவள் இடுப்பில் வந்து அவள் இடையை வருட… சட்டென்று அவள் கதிரின் கையைப் பிடித்துக்கொண்டு அவனை முத்தமிடுவதை நிறுத்தி அவனைப் பார்க்க… கதிரும் அவளிடம் பார்வையாலேயே “ப்ளீஸ்….” என்று கெஞ்ச… அவனிடம் இருந்து எழுந்து அமர… கதிரும் எழுந்தவன் அவளைப் புரியாமல் பார்க்க… கீர்த்திகா, “வேணாம் கதிர், இது தப்பு….” என்றாள்.

“என்ன தப்பு? நீயும் நானும் தான் காதலிக்கிறோமே…” என்றான் கதிர். அதற்கு கீர்த்திகா, “காதல் தானே செய்கிறோம் கதிர்? இன்னும் நமக்குக் கல்யாணம் ஆகவில்லையே,” என்றாள்.

“ஆனால் நான் உன்னைத்தானே திருமணம் செய்யப்போகிறேன்? பிறகு என்ன?” என்று கேட்டான். “என்னைத்தான் திருமணம் செய்யப் போகிறாய் என்றால், அதற்காகத் திருமணத்திற்கு முன்பே இதெல்லாம் தப்பு கதிர்,” என்றாள் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு.

“இதில் என்ன தப்பு இருக்கு கீர்த்திகா? உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு, எனக்கும் உன்னைத்தான் பிடிச்சிருக்கு. ரெண்டு பேரும் இப்போ காதலிச்சுட்டு இருக்கோம். இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணமும் பண்ணிக்கப் போறோம்,” என்றான்.

“கதிர், நீ புரிஞ்சுதான் பேசுறியா இல்லையா? இது எல்லாம் மேலை நாட்டுக் கலாச்சாரத்துக்கு வேணும்னா சரியா இருக்கலாம். ஆனா நம்ம ஊருக்கு நீ சொல்ற காரணம் எல்லாம் எதுவுமே பொருந்தாது,” என்றாள்.

தான் சொல்வதைக் கேட்கவில்லை என்றதும் கதிருக்குக் கீர்த்திகாவின் மீது கோபம் வந்துவிட… கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவன் அறையை விட்டு வெளியே செல்லப் போக… “கதிர்…. நில்லு கதிர்!” என்றாள் கீர்த்திகா.

அறைக் கதவு வரை சென்றவன், கீர்த்திகா நிற்கச் சொன்னதும் அப்படியே நின்றான். எதுவும் பேசாமல் அமைதியாக அவன் அருகில் வேகமாக வந்த கீர்த்திகா, அவன் முன் சென்று நின்றவள், “கதிர் என் மேல கோபமா?” என்றாள்.

அவன் எதுவும் பேசாமல் அமைதியாக வேறு பக்கம் பார்த்துக்கொண்டு நிற்க… அவன் முகத்தைத் தன் கைகளால் ஏந்தி அவனைத் தன்னைப் பார்க்குமாறு திருப்ப… அவன் கீர்த்திகாவைப் பார்த்த பார்வையில் தெரிந்துவிட்டது தன் மீது கோபம் இருப்பது.

“கதிர் ப்ளீஸ்… நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா… இது எல்லாம் தப்புடா… கல்யாணத்துக்கு முன்னாடி என்னதான் நீயும் நானும் நெருங்கிப் பழகினாலும், நமக்குள்ள ஒரு வரம்பு நிர்ணயம் பண்ணி இருக்கணும்டா… நான் உனக்குச் சொந்தமானவள். உனக்கு மட்டுமே சொந்தமானவள் கதிர். என்னிடம் உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதே போலத்தான் எனக்கும். ஆனால், அதற்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா? நீயும் நானும் இப்போது உணர்ச்சியின் பிடியில் தவறாக இருந்துவிட்டோம் என்றால், இதை நினைத்து நாளையே என்னை விட நீதான் வருத்தப்படுவாய், ‘நாம் அவசரப்பட்டுவிட்டோமோ’ என்று. ஆனால் இன்னும் கொஞ்ச நாள் நம் உணர்ச்சிகளை எல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டு இதை எல்லாம் கடந்து வந்தோம் என்றால், ஒரு நாள் நான் உனக்கு முழுமையாக உரிமையான பிறகு, உன்னிடம் நான் என்னை முழுவதுமாகத் தருவதில் எனக்கு இப்போதைவிட இன்னும் சந்தோஷமாக இருக்கும் கதிர். என் காதலனான நீயே என் கணவனாக வரும்போது, அப்போது என்னிடம் நீ இப்படி இல்லை எப்படி நடந்துகொண்டாலும் நான் உன்னைத் தடுக்கவே மாட்டேன். கொஞ்சம் புரிஞ்சுக்கோ கதிர். நமக்கும் நிறைய கனவு, லட்சியம் எல்லாம் இருக்கிறது. அதை எல்லாம் நாம் அடைய வேண்டாமா? இப்போது இப்படி இருந்துவிட்டு, பின்னாளில் இதனால் எதுவும் பெரியதாக நடந்துவிட்டால் என்ன செய்வது? கொஞ்சம் யோசிச்சுப் பாரு கதிர் ப்ளீஸ்….” என்று கீர்த்திகா கெஞ்சிக்கொண்டே கூற…

தன் முகத்தைப் பிடித்துக்கொண்டு தன்னிடம் இவ்வளவு மென்மையாக இந்தச் சூழ்நிலையை எடுத்துச் சொல்லி, தன்னைச் சமாதானம் செய்யும் கீர்த்திகாவைப் பார்த்தவன், அவள் கைகளைத் தன் முகத்தில் இருந்து பிரிக்க…

அவன் இன்னும் தன் மீது கோபத்தில் இருக்கிறானோ என்று பதறிய கீர்த்திகா, “கதிர்!” என்று அவனை கவலையுடன் பார்க்க… அவள் கைகளை அப்படியே கொண்டு தன் இடுப்பில் அவள் கைகளை வளைத்துக் கட்டிக்கொண்டு, கீர்த்திகாவைத் தன் அருகில் இழுத்து அணைத்துக்கொண்டவன், “உன்னிடம் எனக்கு உரிமை இருக்குதானே?” என்றான். அவளும் “ஆம்” என்று தலையை மேலும் கீழும் ஆட்டினாள். “அப்போ எனக்கு இப்போ ஒரு கிஸ் நீயே கொடு. அதன் பிறகு நான் ரூமுக்கு போறேன்,” என்றான்.

அவன் இப்படிப் பேசியதும் தன் மீது கதிர் கோபத்தில் இல்லை என்று தெரிந்ததும் சந்தோஷப்பட்ட கீர்த்திகா, தன் கால்களை உயர்த்தி அவன் நெற்றியில் முத்தமிட… “ஏய்… என்ன இங்க கொடுக்கிற?” என்று கதிர் கேட்க… “வேற எங்க?” என்றால் கீர்த்திகா.

அவன் தன் உதட்டைக் குவித்துத் தன் உதட்டைக் காட்ட… அவன் உதட்டில் தன் விரலால் அடித்தவள், “என்ன ஆனாலும் காரியத்திலேயே கண்ணா இருக்கேடா… ராஸ்கல் நீ…” என்றவள் அவன் கீழ் உதட்டைத் தன் விரலால் கிள்ள… “ஷ்… வலிக்குதுடி….” என்றவன், “இப்போ நீ எனக்குக் கிஸ் கொடுக்கப் போறியா இல்லையா?” என்று பொய்யாக கோபத்துடன் கேட்க…

“விட மாட்டியே,” என்றவள் மெல்ல எக்கி அவன் உதட்டில் லேசாகத் தன் உதடு கொண்டு ஒற்றி எடுக்க… “இதுக்கு பேருதான் கிஸ்ஸா?” என்றவன், அவள் முகத்தைப் பிடித்து அவள் உதட்டில் நீண்ட ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு, “கிஸ் என்றால் இப்படித்தான் இருக்கணும்,” என்றவன் திரும்பவும் அவள் உதட்டில் ‘பச்சக்’ என்று ஒரு முத்தத்தை வைத்தவன், “சரி, லேட் ஆச்சு. நீ தூங்கு. நானும் ரூமுக்குப் போறேன்,” என்றவன் கதவைத் திறந்து கொண்டு வெளியே செல்ல… அவன் செல்லும் வரை பார்த்துவிட்டு, ரூம் கதவைச் சாற்றிவிட்டு வந்து படுத்தாள் கீர்த்திகா.

கதிர் கீர்த்திகாவின் அறையில் இருந்து வெளியே வரவும், அவனைப் பார்த்துக்கொண்டு சிரித்தபடி நின்றிருந்த கீர்த்திகாவையும், அங்கு இருந்த கர்டைனின் பின்னால் நின்றிருந்த ஒரு உருவம் பார்த்துக் கொண்டு இருந்தது.

*****

பிள்ளையார் சென்றதும் தன் மொபைலில் மெசேஜ் டோன் கேட்க, அதை எடுத்துப் பார்த்த விக்கிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

நிலானிதான் மெசேஜ் அனுப்பி இருந்தாள். வேகமாக அதை ஓபன் செய்து பார்த்த விக்கி அவள் அனுப்பி இருந்த மெசேஜைப் பார்த்து முகம் மலர்ந்தான்.

நிலானி அனுப்பிய மெசேஜில் “சாரி” என்று மட்டும் அனுப்பி இருந்தாள்.

அதைப் பார்த்துச் சந்தோஷப்பட்ட விக்கி, உடனே மேலே பார்த்து “பிள்ளையாரப்பா, யூ ஆர் கிரேட்! சொன்ன மாதிரியே செஞ்சுட்டியே! ரொம்ப தேங்க்ஸ் பிள்ளையாரே!” என்று அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டவன்.

நிலானியின் மெசேஜைப் படித்துவிட்டு “எதுக்கு சாரி?” என்று அனுப்பினான். மெசேஜை அனுப்பிவிட்டு அவள் மெசேஜைப் பார்த்துவிட்டாளா என்று பார்க்க… அனுப்பிய வேகத்தில் விக்கி அனுப்பிய மெசேஜைப் படித்துவிட்டாள் என்று காட்டியது. பிறகு அவள் ஏதோ டைப் செய்கிறாள் என்று காட்ட, இன்னொரு செய்தி வந்தது நிலானியிடம் இருந்து.

“உங்களைத் திட்டிவிட்டு ப்ளாக் பண்ணினதுக்கு தான் சாரி கேட்டேன்,” என்று அனுப்பினால்.

“பரவாயில்லை. நான் எதுவும் நினைக்கவில்லை. நானும் கொஞ்சம் உன்னிடம் ஓவராகத்தான் பேசிவிட்டேன். நானும் சாரி,” என்றான்.

அவன் அனுப்பிய செய்தியைப் படித்துவிட்டுச் சிரித்தவள், “ஆமாம், கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவராத்தான் பேசுறீங்க. கீர்த்திகாவோட அண்ணா அப்படிங்குறதுனால நான் உங்களை மன்னிச்சு விடுறேன்,” என்றாள். கூடவே ஒரு சிரிக்கும் ஸ்மைலியை அனுப்பினால்.

அவள் அனுப்பிய செய்தியைப் படித்தவன் சிரித்துக்கொண்டே, “என்னை மன்னித்ததற்கு நன்றி தாயே!!” என்றான்.

அதைப் படித்தவள், “தாயே எல்லாம் சொல்லி என்னைப் பெரியவள் ஆக்கிடாதீங்க. நான் சின்னப் பொண்ணு,” என்றாள்.

“ஓஹோ… சின்னப் பொண்ணு நீ… அப்போ என்னை மன்னிச்சிரு நிலாக்குட்டி….” என்று அனுப்பினான்.

“நான் என்ன நிலாக்குட்டின்னு சொல்லாதீங்கன்னு காலையிலேயே சொன்னேனே. மறுபடியும் இதே போல சொல்றிங்களே,” என்று சோகமாக இருப்பது போல ஸ்மைலி அனுப்பினால்.

“ஏன் நான் உன்னை அப்படி கூப்பிடக் கூடாதா?” என்று கேட்டான்.

“கீர்த்திகா போன் பண்ணி, ‘நான் உங்களை ப்ளாக் பண்ணிட்டேன்னு நீங்க வருத்தப்பட்டீங்க’ அப்டின்னு சொன்னதுனால தான் இப்போ உங்களுக்கு மெசேஜ் பண்ணினேன். மறுபடியும் இப்படிக் கேட்டால் நான் என்ன செய்றது?” என்றவள், “நான் உங்களை அப்படி கூப்பிடக் கூடாதான்னு கேக்குறீங்களே… நீங்க ஏன் என்னை அப்படி கூப்பிடணும்னு நான் கேட்குறேன் உங்ககிட்ட. இதுக்குப் பதில் சொல்லுங்க. நானும் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன்,” என்றால்.

அவள் அப்படி கேட்டால், அதற்கு மேல் தன்னை நிலாக்குட்டி என்று கூப்பிட மாட்டான் என்று நினைத்து இந்தச் செய்தியை அவனுக்கு அனுப்ப…

அதைப் படித்த மறுநிமிடமே அவனிடம் இருந்து பதில் வந்தது.

“நான் உன்னை நிலாக்குட்டி அப்படின்னு கூப்பிடுறேன்னா, நீன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன்னோட அழகான முகம் இப்பவும் நான் கண்மூடி உன்னை நினைத்தால் அப்படியே உன் முகம் எனக்கு நினைவில் வரும். உன் முகத்தையும் அந்தக் கண்ணாடி போட்ட கண்ணையும் பார்க்க ரொம்பப் பிடிக்கும். ஒரு தடவைதான் நான் உன்னை நேரில் பார்த்திருக்கேன் என்றாலும், நீ என்னோட மனசுல ஆழமாப் பதிஞ்சுட்டே.

எனக்கு அம்மா, அப்பா ரெண்டு பேருமே கிடையாது. எனக்கு என்று ஒரு குடும்பம் எண்டது எதுவும் கிடையாது. என்னோட ஃபிரெண்ட்ஸ் தான் என்னோட சொந்தம். ஆனா, உன்னை நேரில் பார்த்ததும், நீதான் என்னோட குடும்பம்னு தோணுச்சு. உன்னைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாதுதான். ஆனால், நீ என் வாழ்க்கை முழுக்க என்கூட வரணும் என்று உன்னைப் பார்த்ததும், ‘நீதான் எனக்கு எல்லாமே’ என்று எனக்குத் தோன்றியது.

எனக்கு மட்டும் தான் உன் மேல எல்லா உரிமையும் இருக்கு என்று தோன்றியது. உன்னை என்னால் மட்டுமே நல்லா பாத்துக்க முடியும். உனக்கு எல்லாமாக நான் மட்டும் தான் இருக்கணும் அப்படின்னு உன்னைப் பார்த்த அடுத்த நிமிஷமே எனக்குத் தோணிருச்சு. அதனால தான்…. அந்த உரிமையில் தான்…. நான் மட்டும் தான்…. உன்னை நிலாக்குட்டி… என்று கூப்பிடுவேன்,” என்று அனுப்பியவன்,

பின் மறுபடியும், “நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் அனுப்பிட்டேன். நான் கேட்டதுக்கு நீ என்ன பதில் சொல்லப் போற நிலாக்குட்டி….” என்று அனுப்பி இருந்தான்.

அவன் அனுப்பிய செய்தியைப் படித்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, இப்படித் தன்னைப் பார்த்துக் கொள்ள யாருமே இல்லையே என்று ஏங்கியவளுக்கு விக்கியின் இந்தக் பதில் பிடித்திருந்தாலும், அவனிடம் அதை ஒப்புக்கொள்ள நிலானியின் மனம் சம்மதிக்கவில்லை.

அவன் அனுப்பிய மெசேஜை மீண்டும் மீண்டும் படித்தாளே ஒழிய, விக்கிக்கு ரிப்ளை பண்ணவே இல்லை.

விக்கியும் போனை கையில் வைத்துக்கொண்டே, நிலானி பதில் அனுப்புவாள் என்று வெகு நேரம் அவள் மெசேஜையே பார்த்துக் கொண்டிருந்தவன், கையில் போனை வைத்துக்கொண்டே களைப்பில் தூங்கியும் போனான்.

கீர்த்திகாவின் அறையில் இருந்து வந்த கதிர் நேராக இவர்கள் இருவரும் இருக்கும் அறைக்குள் வர, அங்கே விக்கி கட்டிலில் படுத்துக்கொண்டு, காலை சுவற்றில் தூக்கி வைத்து, கையில் மொபைல் ஆன் ஆகி இருக்க… அது கூடத் தெரியாமல் அப்படியே தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த கதிர், அவன் அருகில் வந்து போனை எடுத்து அணைத்து வைக்கப் போனவன்… அதில் ‘நிலானிக்குட்டி’ என்று நம்பர் சேவ் செய்யப்பட்டு இருந்ததைப் பார்த்தவன், என்ன மெசேஜ் பண்ணி இருக்கிறான்? என்று ஆவல் வர… ‘படிக்கலாமா, வேண்டாமா?’ என்று யோசித்தவன்…

பரவாயில்லை, ஒரு முறைதானே? படிக்கலாம், என்று நினைத்தவன் இருவரும் பேசிக்கொண்டதைப் படிக்க… அப்போது தான் நிலானியின் மேல் உண்மையாகவே விக்கி காதலில் இருக்கிறான் என்று கதிருக்கு புரிந்தது.

சீக்கிரமே ஏதாவது செய்து விக்கியின் காதலுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தவன், அவன் போனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

முத்து தாத்தா பாலைக் கொடுத்து ஆதிக்குக் கொடுக்கச் சொல்லி துர்காவை அவர்கள் அறைக்குப் போகச் சொல்ல…

பால் டம்ளருடன் யோசனையுடனே படிகளில் ஏறி ரூம் வாசல் வரை வந்தவள், உள்ளே செல்ல யோசனையாக அங்கேயே நின்றிருந்தாள்.

இன்று காலையில் இருந்து ஆதி, துர்காவிடம் நடந்துகொள்ளும் விதமே வித்தியாசமாக இருக்க… போதாக்குறைக்கு வீட்டிற்கு வந்த பிறகும் அவன் தன்னிடம் என்றும் இல்லாமல் உரிமை எடுத்துக்கொண்டு பேசுவதும், தன்னை நெருங்கி வருவதும் அவளுக்குப் புதிதாகத்தான் இருந்தது.

என்னதான் அவனை காதலித்தாலும், ஆதியின் இந்தத் திடீர் மாற்றமும், அவன் அருகாமையும் அவளை ஏதோ செய்தது. உள்ளே செல்லலாமா…. வேண்டாமா…. நேற்று நான் ஆதியைப் பிரிந்து செல்ல முடிவெடுத்தது சரியா? தவறா? என்று யோசித்துக்கொண்டே கதவருகே நின்றிருந்த துர்காவை, உள்ளிருந்து கவனித்துக் கொண்டிருந்த ஆதி, “இன்னும் எவ்வளவு நேரம் அங்கேயே நிக்கப் போறீங்க? உள்ள வரப் போறீங்களா இல்லையா?” என்று உள்ளே இருந்து சத்தமிட…

இவ்வளவு நேரம் தான் வெளியில் நின்றிருந்ததை ஆதி கவனித்துக் கொண்டுதான் இருந்தான் என்று நினைத்ததும் துர்காவுக்குப் பக்கென்று இருந்தது.

ஆதியின் குரல் கேட்டதும் துர்காவுக்கு வியர்த்துவிட… தன் சேலைத் தலைப்பைக் கொண்டு முகத்தைத் துடைத்தவள், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு நீண்ட மூச்சை ஒன்று இழுத்துவிட்டவள், கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே வருவதைப் பார்த்துக் கொண்டே, சேரில் அமர்ந்து கையில் புக்கை வைத்துப் படித்துக்கொண்டிருந்த ஆதி, புக்கைப் படிப்பது போலப் பாவனை செய்துகொண்டு, ஓரக் கண்ணால் துர்காவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தான் உள்ளே வருவது தெரிந்தும், தன்னைத் திரும்பியும் பார்க்காமல் அமர்ந்து தீவிரமாகப் புக்கைப் படித்துக் கொண்டிருக்கும் ஆதியைப் பார்த்த துர்காவுக்கு… நம்ம வரோம்னு தெரிஞ்சும் திரும்பி கூடப் பார்க்க மாட்டேங்குறான். இவனுக்குப் பயந்துட்டா இவ்வளவு நேரம் உள்ள வராம வெளியவே நின்னுட்டு இருந்தோம்? என்று முனகியவள் அவன் அருகில் வந்து, “ஆதி!” என்று அழைத்தாள்.

“என்ன? சொல்லு துர்கா…” என்று அவளை நிமிர்ந்தும் பாராமல் கேட்க… “முத்து தாத்தா இந்தப் பாலை உன்கிட்ட கொடுக்கச் சொல்லி கொடுத்துவிட்டார்,” என்று கையில் இருந்து பாலை அவனிடம் நீட்டினாள்.

அவள் கையில் இருந்த பால் டம்ளரையும் பார்த்தவன் அப்படியே நிமிர்ந்து துர்காவின் முகத்தைப் பார்த்தான்.

பாலை வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க… “என்ன ஆதி அப்படிப் பார்க்கிற? இந்தா குடி. சூடு ஆறிடும்,” என்றாள்.

“சரி குடிக்கிறேன். நீ அங்க வெச்சுட்டுப் போ…” என்றான். “ம்ம்… சரி,” என்றவள் அவன் அருகில் இருந்த மேஜையில் பாலை வைத்துவிட்டு, ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு உடை மாற்றச் சென்றாள்.

அவள் சென்றதும் பாலை எடுத்து குடித்தவன், மீண்டும் புத்தகம் படிக்க ஆரம்பித்தான். துர்கா ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வர…

அவளைப் பார்ப்பதற்காகத் தலையை நிமிர்த்திய ஆதி, துர்காவைப் பார்த்ததும் ஃப்ரீஸ் ஆகி அப்படியே நின்றான்.

திருமணம் ஆன புதிதில் அவள் இரவு உடை மாற்றிக்கொண்டு வந்த போது பார்த்தவன், பிறகு ஆபீஸ், ஃபங்ஷன் என பிஸி ஆகிவிட, அவளை இவ்வளவு நாள் சேலையிலேயே பார்த்துக்கொண்டு இருந்தவன்… இப்போது இரவு அவள் எப்போதும் அணியும் பனியனும், குட்டி டிரௌசரும் அணிந்ததைப் பார்த்துத்தான் ஆதி இப்படி அசையாமல் அமர்ந்திருந்தான்.

துர்கா நேராக வந்து அங்கிருந்த கண்ணாடியின் முன் அவள் முகத்தைப் பார்த்துவிட்டு, அங்கிருந்த க்ரீமில் இருந்து ஒன்றை எடுத்துத் தன் உள்ளங்கையில் ஊற்றி, அதை இரண்டு கைகளாலும் தேய்த்தவள், தன் முகம், கழுத்து எனத் தேய்க்கத் துவங்கினாள்.

அவள் தன் முகத்தைக் க்ரீம் கொண்டு பூசிக்கொண்டு மசாஜ் செய்து கொண்டு இருக்க… ஏற்கனவே அவள் முகம் பளீரென இருக்க, இப்போது இந்த க்ரீமை பூசிக்கொண்டிருக்க அவள் முகம் மேலும் தகதகவென மின்னியது.

முகத்தில் தேய்த்தவள், பின் மறுபடியும் தன் கையில் வேறு ஒரு க்ரீமை ஊற்றியவள், அதைத் தன் கைகள் இரண்டிலும் மாறி மாறிக் தேய்க்க… அவள் கைகளில் க்ரீமைத் தேய்க்கும் போது, கையை மேலே தூக்கவும், கீழே இறக்கவும் என அவள் பூசிக்கொண்டிருக்க… அவள் உடலும் அதற்கு ஏற்ப வளைவதும், குலுங்குவதும் என இருக்க… ஒரு பெருமூச்சோடு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

கைகளில் தேய்த்துவிட்டு, தன் கால்களுக்குத் தேய்பதற்காகக் கீழே குனிந்தவள், எதேச்சையாக ஆதியைப் பார்க்க… அவன் கண் இமைக்காமல் துர்காவையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

துர்கா குனியவும், அவள் குனிந்ததும் பனியன் லூஸாக இருந்ததால் அவள் மென்மைகள் லேசாக மேலிட்டு அவன் கண்களுக்கு விருந்தாக… ஆதியின் மனம் எவ்வளவு முயன்றும் அவள் அழகைப் பார்க்காமலும், ரசிக்காமலும் இருக்க முடியவில்லை.

ஆதி எவ்வளவு முயன்றும் அவன் கண்களை அவளிடம் இருந்து பிரிக்கவே முடியவில்லை. அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த துர்கா, “ஆதி…” என்று அழைத்தாள்.

எங்கே அவனுக்குக் கேட்டால் தானே? அவன் தான் துர்காவின் அழகில் மயங்கி அப்படியே இருக்கிறானே. தான் அழைத்தும் ஆதி எதுவும் பேசாமல் இருக்க… அவன் எங்கே பார்க்கிறான் என்று அவன் பார்வை சென்ற திசையைப் பார்க்க… அவன் பார்வை சென்ற இடம் கண்டதும் அதிர்ந்தவள், தன் ஒரு கையால் பனியனை உடலோடு ஒட்டிப் பிடித்தவள் வேகமாக எழுந்து, “ஆதி….” என்று சத்தமாக அவனை அழைத்தாள்.

இவ்வளவு நேரம் எவ்வளவு முயன்றும் வெளிவராதவன், துர்காவின் குரல் கேட்டதும் தெளிவு வந்தவன் போல, எதுவும் நடக்காதவன் போல நிமிர்ந்து துர்காவின் முகத்தைப் பார்த்து, “என்ன துர்கா? ஏன் என்னைக் கூப்பிட்ட?” என்றான்.

அவன் இப்படிப் பேசவும் துர்காவுக்கு என்னப் பேசுவது என்று ஒரு கணம் மறந்து போனது. இப்போ எதுக்காக நான் இவனை அழைத்தேன்? ஆனால் இவன் எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லாதவன் போல எவ்வளவு சாதாரணமாகப் பேசுகிறானே! என்று நினைத்தவள்,

“ஆதி, இப்போ… இப்போ… நீ என்ன பண்ணிட்டு இருந்தே?” என்று கேட்டாள். “நான் என்ன பண்ணிட்டு இருந்தேன்?” என்று அதே கேள்வியை அவளைப் பார்த்துக் கேட்க… இவன் என்ன இப்படி மாறிவிட்டான்? என்று நினைத்தவள்.

“இப்போ நீ என்னை எங்கே பார்த்துட்டு இருந்தே…” என்று திக்கித் திணறி கேட்டுவிட்டாள். “நான் எங்க பார்த்தேன்னு உனக்குத் தெரியலையா?” என்றான்.

அவள் தான் கேட்ட கேள்விக்கு ஏதாவது சொல்லிச் சமாளிப்பான் என்று நினைத்திருந்தவள், ஆதியின் இந்தக் அதிரடி பதிலில் எதுவும் பேச முடியாமல் நின்றாள்.

ஆதி எதுவும் பேசாமல் இருந்த அவளையே பார்த்தவன், எழுந்து அவள் அருகில் வர….

“க… ஆதி….” என்று பதட்டத்தில் பின்னால் நகர….

“எங்க பின்னாடி போற….” என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் வர…

“ஆதி… இப்போ எதுக்கு என் கிட்ட வர?” என்று கேட்டுக்கொண்டே பின்னால் நகர…

“எதுக்குக் கிட்ட வருவேன்னு உனக்குத் தெரியலையா?” என்றவன் அவள் அருகில் நெருங்க….

துர்கா பின்னால் நகர… அதற்கு மேல் நகர முடியாமல் பின்னால் இருந்த சுவற்றில் முட்டி நின்றவள், படபடக்கும் விழிகளால் ஆதியைப் பார்க்க…

“இப்படிக் கண்ணு வெச்சுட்டு என்னைப் பார்க்காதேன்னு நான் சொன்னேன் இல்ல….” என்று கூறிக்கொண்டே அவள் அருகில் வந்து, துர்காவின் இருபுறமும் கையை வைத்து அவளை அசைய விடாமல் தன் கைகளால் அணை போட்டவன், துர்காவையே பார்க்க… அவளும் அவனையே பார்த்தாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured