Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 47

உன் ரகசிய ரசிகை நான் 47

by Layas Tamil Novel
609 views

EPISODE 47

துர்கா உடை மாற்றிவிட்டு வந்து தன் கை கால்களில் க்ரீமை அப்ளை செய்து கொண்டிருக்க… அவள் குனிந்திருப்பதைப் பார்த்த ஆதி, அவளிடம் இருந்து கண்களை விலக்க முடியாமல் தவிக்க… அவன் எங்கே பார்க்கிறான் என்று புரிந்து கொண்ட துர்கா, “ஆதி” என்று அவனை அழைக்கவும்… தன்னிலை வந்த ஆதி மெதுவாக எழுந்து துர்கா அருகில் செல்ல… அவள் பயந்துகொண்டே பின்னால் நகர்ந்தவள், சுவற்றில் மோதி நிற்க… அவளைத் தன் இருக்கை கொண்டு நகர்விடாமல் அணை கட்டிக்கொண்டு நின்றவன், “நான் எதுக்கு வந்தேன்னு உனக்குத் தெரியாதா துர்கா…?” என்று கேட்டான்.

“எது…. எதுக்கு வந்த ஆதி?” என்று துர்கா திக்கித் திணறி கேட்க… “அதைத்தான் நானும் உன்கிட்ட கேக்குறேன். நான் எதுக்கு வந்தேன் உனக்குத் தெரியாதா?” என்று ஆதி அவள் முகத்தின் அருகில் தன் முகத்தைக் கொண்டு வந்து கேட்க… அவன் மூச்சுக்காற்றுச் சூடாக அவள் முகத்தில் படவும், அதில் துர்காவின் உடல் சிலிர்க்க… எதுவும் செய்ய வார்த்தை வராமல், வெறும் தலையை மட்டும் ‘இல்லை’ என்பது போல இடவலமாக ஆட்டினாள்.

“நான் உன்ன எங்க பார்த்துட்டு இருந்தேன்னு நீ என்கிட்ட கேள்வி கேட்டியே? அதுக்குப் பதில் சொல்லத்தான் நான் இப்போ உன் பக்கத்துல வந்தேன்,” என்று ஆதி கூற… துர்காவுக்கு அவன் சொன்னதைக் கேட்டதும் அவள் இதயம் வேகமாகத் துடிக்கும் ஓசை அவள் காதிற்குக் கேட்க…

ஆதி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் விழிவிரித்து அவனைப் பார்க்க… “என்ன அப்படிப் பார்க்கிற? நீ தானே கேட்ட, எங்க பார்த்துட்டு இருக்கேன்னு. அதைச் சொல்லத்தான் உன் பக்கத்துல வந்தேன்,” என்றான்.

“அதை நீ அங்கிருந்து சொல்லி இருக்கலாமே ஆதி. இப்படிப் பக்கத்தில் வந்து, அதுவும் இவ்வளவு க்ளோஸா நின்னு தான் சொல்லணுமா?” என்று துர்கா தன் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு மெதுவாக அவனிடம் கேட்க…

“அவ்வளவு தூரத்தில் இருந்து ‘நான் எங்க பார்த்தேன்னு’ சத்தமா சொல்லனுமா உன்கிட்ட? நீ கூச்சப்படுவியே! அதனால தான் உன் பக்கத்துல வந்து சொல்லலாம்னு வந்தேன்,” என்று கூற…

“அ… அது… அது எல்லாம் நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் ஆதி. நான் உன்கிட்ட எதுவுமே கேட்கல,” என்று துர்கா கூற… “எதுவுமே கேக்கலையா துர்கா….. இப்பதானே கேட்ட நீ அங்க இருக்கும் போது? கேட்டேயே…” என்று கூற…

“ம்ஹும்….இல்ல…. இல்ல…. நான் எதுவுமே கேட்கல. என்னை விடு,” என்று அவன் மார்பில் தன் இரண்டு கைகளையும் வைத்து அவனைப் பின்னுக்குத் தள்ளப் போக… ஆதி ஹோட்டல் வைத்திருந்த (தடை செய்திருந்த) அவன் கையை எடுத்து, துர்கா தன் மார்பின் மீது வைத்திருந்த அவள் கைகளைத் தன் மார்போடு சேர்த்துப் பிடித்துக்கொண்டவன் அவள் முகத்தைப் பார்க்க… துர்கா படபடக்கும் விழிகளோடு ஆதியையே பார்த்தாள்.

மெல்லக் குனிந்து துர்காவின் காதருகில் “சொல்லட்டுமா….” என்று ஹஸ்கி வாய்ஸில் ஆதி கூற… அவன் சூடான மூச்சுக்காற்று அவள் காதில் பட்டதும், கூச்சத்தில் அவள் முகமும் காதும் சிவந்துவிட… அதை ரசித்துக்கொண்டே “வெறும் மூச்சுக்காத்து பட்டத்துக்கே உன் முகம் இப்படிச் சிவந்துடுச்சு,” என்று கேட்டவன்.

அவளை விட்டுப் பிரிந்து திரும்பி நடக்க… அவன் தன்னை எதுவும் செய்யாமல் சென்றதை நினைத்து துர்கா “அப்பாடா….” என்று மனதுக்குள் நினைத்து பெருமூச்சு விட…

அவளை விட்டுச் சென்றவன் திடீரென்று நிற்கவும், அவனைப் புரியாமல் பார்த்த துர்காவை ஆதி திரும்பிப் பார்த்தான். “நான் எனக்கு உரிமையானதைத்தான் பார்த்தேன். சொல்லப் போனால், நான் பார்க்கத்தான் எல்லாமே இருக்கிறது,” என்றவன் துர்காவை மேலிருந்து கீழாகத் தன் பார்வையாலேயே தின்று விடுவது போலப் பார்க்க…

அவன் பார்வை சென்ற இடமெல்லாம் துர்காவுக்கு உடல் கூசுவது போல இருக்க… தன்னிச்சையாக அவள் கைகள் அவள் உடலை மறைக்கப் போராட… அவள் கூச்சத்தில் தன் உடலை ஆதியிடம் இருந்து மறைக்க முயற்சிப்பதைப் பார்த்துச் சிரித்த ஆதி, “நீ என்ன வேணா இப்போ செஞ்சுக்கோ. நீ இப்ப மறைக்கணும்னு நினைக்கிறது எல்லாமே எனக்கு மட்டும்தான் சொந்தம். நான் உன்னை பார்க்க மட்டும் செய்யணும்னு அவசியம் இல்ல. அதை எடுத்துக்கவும் எனக்கு உரிமை இருக்கு. ஆனா, அதை நான் இப்ப எடுத்துக்க மாட்டேன். நேரம் வரும்போது நானே மொத்தமா எடுத்துக்குவேன். நான் உன்கிட்ட வந்து உன்னை மொத்தமா எடுத்துக்கப் போறேன். அப்போ நீ என்ன பண்றேன்னு நானும் பார்க்கிறேன்,” என்று ஆதி மென்மையாக அவளைப் பார்த்துச் சிரித்துக் கூறிவிட்டுச் சென்று… துர்கா கொண்டு வந்து வைத்த பாலை எடுத்து, சேரில் அமர்ந்து அவளைப் பார்த்தவாறு அவள் இதழ்களைப் பார்த்தவாறு பாலைக் குடித்துக் கொண்டிருக்க…

துர்காவுக்கு அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் அவள் உச்சி முதல் பாதம் வரை உடல் கூசச் செய்ய… என்ன செய்வது என்று தெரியாமல் க்ரீம் பூசிக்கொண்டிருந்தவள், அப்படியே அனைத்தையும் விட்டுவிட்டு, வேகமாகச் சென்று பெட்டில் படுத்து, உடல் முழுவதும் மறைக்குமாறு பெட்ஷீட்டால் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.

***

காலை எழுந்ததும் முதல் வேலையாக ஆதியைப் பார்க்கத்தான் விக்கி சமையல் அறைக்கு வந்தான்.

“என்ன விக்கி! இவ்வளவு காலையில் சீக்கிரமாக எழுந்துட்ட? தூக்கம் வரலையா உனக்கு?” என்று கேட்டாள் துர்கா.

“இல்லை துர்கா. அதெல்லாம் நல்லாத்தான் தூங்கினேன். ஆமா, நீ இப்போ என்ன பண்ணிட்டு இருக்க?” என்று விக்கி கேட்க… “பார்த்தா தெரியலையா விக்கி? நான் டிபன் ரெடி பண்ணிட்டு இருக்கேன்,” என்றால் துர்கா.

“ஓ, ப்ரேக்பாஸ்ட் ரெடி பண்ணிட்டு இருக்கியா? சரி சரி,” என்று சொல்லிவிட்டு எதுவும் பேசாமல் துர்கா அருகிலேயே நின்றிருக்க… “சொல்லு விக்கி, ஏதோ கேட்கத்தானே வந்திருக்க? அப்புறம் ஏன் எதுவுமே கேட்காமல் அமைதியா நின்னுட்டு இருக்க? என்ன வேணும்னு சொல்லு,” என்று கேட்க… “அது ஒண்ணும் இல்லை துர்கா, எனக்குக் கொஞ்சம் லட்டு செஞ்சு தரியா?” என்று விக்கி கேட்டான்.

“என்னது லட்டா? ஏன் திடீர்னு லட்டு எல்லாம் கேக்குற?” என்று துர்கா கேட்க… “ஒண்ணும் இல்லை துர்கா… திடீர்னு லட்டு சாப்பிடணும் போல இருந்துச்சு. கொஞ்ச நாள் முன்னாடி நீ கூட ஆபீஸ்ல எனக்கு லட்டு செய்து கொண்டு வந்து தந்தயே. சூப்பரா இருந்துச்சு. திடீர்னு எனக்கு அந்த ஞாபகம் வந்துச்சு. அதனாலதான் எனக்கு சாப்பிடணும் போல இருக்குன்னு உன்கிட்ட வந்து கேட்டேன். ப்ளீஸ் துர்கா…. கொஞ்சமே கொஞ்சமா லட்டு மட்டும் எனக்கு செஞ்சு கொடு,” என்று விக்கி கெஞ்ச…

அவனைத் திரும்பி ஒரு நிமிடம் பார்த்தவள். “சரி, செஞ்சு கொடுக்கிறேன், போ,” என்று சொல்ல… “துர்கானா துர்காதான்… சூப்பர்! நான் போய் குளிச்சிட்டு வர்றேன். அதுக்குள்ள நீ லட்டு செஞ்சி வெச்சிரு,” என்று சொல்லிக்கொண்டு அவன் அறைக்குச் சென்றான் விக்கி.

அங்கே வந்த முத்து தாத்தா, “பாப்பா, நீங்க போய் விக்கி தம்பி கேட்ட மாதிரி லட்டு வேணா செய்யுங்க. நான் மற்ற வேலைகளை எல்லாம் பார்த்துக் கொள்கிறேன்,” என்று சொல்லிவிட்டு, துர்காவை லட்டு செய்யச் சொல்லிவிட்டு அவர் வேலைகளை ஆரம்பித்தார்.

துர்கா சென்று லட்டு செய்யத் தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து வைத்து லட்டு செய்ய ஆரம்பித்தாள். ஒரு மணி நேரம் போல வெளியே போன் பேசிவிட்டு உள்ளே வந்த ஆதி, கிச்சனில் துர்கா இருப்பதைப் பார்க்க… அவளைப் பார்ப்பதற்காகவே ஹாலில் அமர்ந்து பேப்பர் படிக்க ஆரம்பித்தான்.

ஆதி ஹாலில் இருப்பது கூடத் தெரியாமல் துர்கா வேலை பார்த்துக் கொண்டிருக்க… அவளையே விழுங்குவது போலப் பார்த்த ஆதி, துர்காவை மேலிருந்து கீழாக ரசிக்கத் தொடங்கினான்.

குளித்துவிட்டு ஈரத் தலையுடன் துண்டைக் கட்டிக்கொண்டு, நெற்றி வகுட்டில் குங்குமமும் கழுத்தில் பொன் தாலியும் அணிந்திருந்தவளின் நிறத்திற்கும், தாலியின் ஜொலிப்பிற்கும், அவள் கழுத்துக் குழியில் படிந்திருந்த வியர்வைத் துளியும் அவளை மேலும் அழகாகக் காட்ட… அவள் சங்கு கழுத்தில் இருந்து அவன் கண்கள் ஆதியின் கண்களில் வந்து தஞ்சம் புகுந்தது. அவள் வேலை செய்வதில் மும்முரம் காட்டுவதில் இருக்க… அவள் அசைவிற்கு ஏற்ப அவள் விழிகளும் நடனம் ஆடியது. அவள் செய்த உணவை ருசிபார்க்கக் கையில் எடுத்த லட்டைச் சிறிது பிய்த்து, தலையை மேலே உயர்த்தி வாயைத் திறந்து, பிய்த்த உணவை வாயில் போட்டவள்… தன் சிவந்த உதடுகளை மூடி அதன் ருசியை உணர்ந்து கொண்டே, கண்களை மூடி அதன் சுவையை மெய் மறந்து அனுபவித்தாள்.

அதைப் பார்த்த ஆதிக்கும் சாப்பிடும் எண்ணம் தோன்ற… ச்சே… இவள் சாப்பிடறதைப் பார்த்தால் எனக்குப் பசிக்கிறது, என்று நினைத்தவன் கண்கள் அவள் அங்கங்களை மேய்ந்து கொண்டே கீழே வர… அவள் மெல்லிய இடை அவன் கண்களைக் கவர… அதை இப்பொழுதே தொட்டுப் பார்க்க ஆவல் தோன்ற…

பேப்பர் படிப்பது போல நடித்தவன், கையில் இருந்த பேப்பரைக் கீழே வைத்துவிட்டு எழுந்து கிச்சன் வந்தவன் அவளையே பார்க்க… துர்காவோ ஆதி வந்தது தெரியாமல், கையில் நெய் தடவிப் பூந்தியை எடுத்து, கையில் வைத்து லட்டு செய்துகொண்டு இருந்தாள்.

அவள் கையில் அணிந்திருந்த மெல்லிய தங்க வளையல்கள் அவள் கை அசைவிற்கு ஏற்ப நடனம் ஆடி, லேசாக ஒளி எழுப்பிக்கொண்டு இருக்க… அவள் கையில் வைத்து உருண்டை பிடிக்கும்போது அதற்கு ஏற்ப அவள் உடலும் ஆட… அவள் அங்கங்கள் லேசாக அசைவதைப் பார்த்தவன் மூச்சு நின்று விடும் போல இருக்க… கண்கள் மூடி மூச்சை மெதுவாக இழுக்க… அப்போதும் துர்காவின் வாசம் அவன் நாசியில் ஏற… அவள் அவன் மூளைக்குள் வந்து அமர்ந்து கொண்டாள்.

கிச்சன் வாசலில் நின்றிருந்த ஆதியைப் பார்த்ததும் முத்து தாத்தா அவனை இங்கு பார்த்ததும் அதிர்ச்சியானவர். சமையல் அறை எங்கே இருக்கிறது என்று கேட்பவன் இன்று இங்கு வந்திருக்கிறானே என்று நினைத்தவர், அவனை “தம்பி…” என்று அழைத்தார்.

“சொல்லுங்க தாத்தா,” என்றான் அவரைப் பார்க்காமல், துர்காவைப் பார்த்துக் கொண்டு பேச… அவன் பார்வை சென்ற திசையைப் பார்க்க அவருக்குப் புரிந்து போனது… சமையல் அறைக்கு ஆதி வந்த காரணம் என்ன என்று. அவன் மனைவியை அப்பட்டமாக ‘சைட்’ அடித்துக்கொண்டு நின்றிருந்தான்.

அவனைப் பார்த்தவர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தவர், துர்காவின் அருகில் வந்து, “பாப்பா, தம்பிக்கு என்ன வேணுமோ கேட்டு கொடுங்கம்மா. நான் போய் தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் விட்டு வந்தேன். அதை போய்ப் பார்க்கிறேன்,” என்று கூறிவிட்டு வாசலை நோக்கிச் சென்றார்.

அவர் சென்றதும் திரும்பி வாசலைப் பார்க்க… ஆதி அவளை வெறித்துக்கொண்டு நின்றிருந்தான். அவனைப் பார்த்தவள், “ஏதாவது வேணுமா ஆதி?” என்றால்.

“நீ உன்னோட ஒர்க்கைக் கன்டினியு பண்ணு. நான் பார்த்துக்கறேன்,” என்றவன் கிச்சனிற்குள் வர… துர்கா அவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக அவன் செல்லும் இடம் அவனைப் பார்க்கத் திரும்ப… “என்னை பார்க்குறது தான் உனக்கு ஒர்க்கா?” என்றான்.

துர்கா வேகமாக ‘இல்லை’ என்று தலையை ஆட்டிவிட்டு திரும்பி லட்டு பிடிக்க ஆரம்பித்தாள். அதுவரை எதையோ எடுப்பது போல சமையல் அறைக்குள் வந்தவன், துர்கா திரும்பி நின்று வேலை பார்க்கவும்… அவள் அருகில் இருந்த டம்ளரை எடுப்பது போல வந்தவன் கையை அவளைத் தாண்டிச் செல்லும்போது அவள் இடுப்பை வருடிவிட்டு கையை கொண்டு செல்ல… அவன் துர்காவின் இடையை வருடியதும், லட்டு பிடித்துக்கொண்டு இருந்தவள் அப்படியே ஃப்ரீஸ் ஆகி நிற்க…

அவள் இடுப்பைத் தாண்டி டம்ளரை எடுத்துவிட்டு மீண்டும் அவள் இடுப்பை உரசிக்கொண்டு கையைப் பின்னுக்கு எடுத்துக்கொண்டான். மறுபடியும் அவள் இடுப்பை உரசவும், கூச்சத்தில் துள்ளிக் குதித்துத் திரும்பி நிற்க… அவளைத் தாண்டி எதுவும் நடக்காதவன் போலச் சென்று தண்ணீர் எடுத்து குடித்தான்.

தன் இடுப்பைத் தடவி விட்டு எதுவும் தெரியாதவன் போலச் சென்று தண்ணீர் குடிப்பதைப் பார்த்த துர்காவுக்கு அவன் மீது கோபம் வந்தது.

எவ்வளவு கொழுப்பு இவனுக்கு! ஊருக்குப் போறதுக்கு முன்னால என்னிடம் எப்படி நடந்து கொண்டான். ஊருக்குப் போய் கூட அங்கே என்னிடம் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டான். ஆனால் இப்போ ஊரில் இருந்து வந்ததில் இருந்து இவன் போக்கே சரி இல்லை, என்று இடுப்பை மறைத்தவாறு புடவையை இடுப்பில் சொருகினாள்.

இவனை இப்படியே சும்மா விட்டால் சரி வராது, என்று நினைத்தவள் “ஆ… ஆதி! இப்போ எதுக்கு என் இடுப்பைத் தடவினே?” என்று தைரியத்தை வரவழைத்துக் கேட்டுவிட்டாள்.

“நான் உன் இடுப்பைத் தடவினேனா?” என்று திருப்பிக் கேட்டான் ஆதி. துர்கா, “ஆமா நீதான் என் இடுப்பைத் தடவினே…” என்றவள்.

“இங்கே வந்து என்கிட்ட நின்னு டம்ளர் எடுக்கப் போகும் போது ஒரு தரம், டம்ளரை எடுத்த பிறகு ஒரு தரம்,” என்றால்.

“அப்டியா… எனக்கு ஒண்ணும் தெரியலையே,” என்றவன் அவள் அருகில் வந்து “நான் டம்ளரை எடுக்கும்போது நீ எப்படி நின்னுட்டு இருந்தே?” என்றான்.

“நான் இப்படி திரும்பி நின்னுட்டு இருந்தேன்,” என்றால். “சரி, அப்படி நீ நிக்கிற அப்போ நான் வந்து உன் இடுப்பை உரசினேனா…?” என்று கேட்டான். அவள் “ஆமா நீதான் வந்து என் இடுப்பை உரசினே,” என்று தன் இடுப்பைக் காட்டியவாறு பேசினாள்.

“எப்படி? இப்படி இழுத்து மூடி வெச்சிருக்க உன் இடுப்பை நான் உரசினேனா?” என்றான். அவள் அவனிடம் வாதிட இருந்த வேகத்தில் “இ…இல்ல, அப்போ என் இடுப்பில் சேலை மூடியிருக்கவில்லை,” என்றால்.

“பின்னே எப்படி இருந்துச்சு?” என்று ஆதி கேட்டான். “இதோ இப்படித்தான்,” என்று தன் சேலையை முதலில் இடுப்பு தெரிவது போலக் கட்டி இருந்ததைக் காட்டினாள்.

“ம்ம்ம்…. நீயா சொல்லு. இப்படி நல்லா ‘வழுவழுன்னு கழுவுற மீனுல நழுவுற மீன் மாறி’ வழவழன்னு இடுப்பை வெச்சிட்டு இருக்கிறதும் நீ… இப்படி ஒரு இடுப்பை வெச்சிருக்க…” என்றவன்.

“சரி, டம்ளர் இங்க இருக்குனு வெச்சுக்கோ. நான் அதை எடுக்க வரும்போது என் கை பட்டிருச்சா?” என்றான். துர்காவும் “ஆம்” என்று சொன்னதும் “எங்க நான் பாக்குறேன்,” என்றவன் கையில் இருந்த டம்ளரை மேடை மீது வைத்துவிட்டு அவளை முன்பு நின்றது போல நிற்கச் சொல்லிவிட்டு “இப்போ நான் டம்ளர் எடுக்கிறேன். நீயே பாரு,” என்றவன் கையை அவள் இடையைத் தாண்டிச் கொண்டு செல்ல… அவன் கை முன்பை விட இப்போது துர்காவின் இடையை நெருக்கமாகத் தழுவிச் சென்றது.

அவன் கை தன் இடையை உரசியதும் “பாரு… பாரு… இப்பவும் உன் கை இங்க தடவிட்டுப் போகுது. நான் சரியா தான் சொன்னேன்,” என்றால் துர்கா. “அப்டியே ஆமா… நீ சொன்னது போல என் கை உன் இடுப்பில் உரசுது தான்,” என்றவன். டம்ளரை எடுத்துவிட்டு வரும்போதும் வேண்டுமென்றே அவள் இடையை உரச… இப்போதுதான் துர்காவுக்கு உரைத்தது… அவன் அவளிடம் வேண்டுமென்றே வம்பு செய்து மறுபடியும் தன் இடையை உரசிக்கொண்டு இருக்கிறான் என்று. இதை அறிந்ததும் கோபத்துடன் வேக வேகமாக மூச்செடுத்தவள், “ஆதி….” என்று கத்த… “சொல்லு துர்கா…” என்று எதுவும் அறியாதவன் போல அவள் முகத்தைப் பார்க்க…

“இப்போ… இப்போ…. நீ என்ன பண்றேன்னு தெரியுமா?” என்று திரும்பி நின்று அவனை முறைத்துக்கொண்டு கேட்க… “தெரியுமே….” என்றவன் அவள் அருகில் வந்தவன், துர்காவைச் சமையல் மேடையுடன் சேர்த்து அழுத்தி நிறுத்தியவன்… அவள் உடலோடு தன் உடலை உரசுவது போல நெருக்கமாக நின்றவன்… அவன் இடையில் தன் கையை வைத்து வருடிக்கொண்டே “சொல்லு துர்கா….” என்றான் ஆதி.

“ஆதி, நீ… நீ… எ… என்ன பண்றேன்னு உனக்குத் தெரியுதா?” என்றாள். “ஓ… நல்லாவே தெரியுதே! என் துர்காவுடைய இடுப்பு எப்படி இவ்வளவு வழவழ என்று இருக்கிறது என்று தொட்டுப் பார்த்துட்டு இருக்கேன்,” என்றான்.

அவன் ஏற்கனவே அவள் இடையில் கைவைத்து அவளை உரசிக்கொண்டு இருப்பதே அவளால் கூச்சத்தைத் தாங்க முடியவில்லை. இப்போது இவ்வளவு நெருக்கமாக, உடலோடு உடல் உரசிக்கொண்டு, மூச்சோடு மூச்சு கலந்துவிடுவது போல நின்றிருந்த அவன் நெருக்கமும் அவளை ஏதோ செய்ய… அவள் முகம் சிவந்து இரத்தச் சிவப்பாகத் தெரிய… அவனை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றவள்.

“ஆ… ஆதி… என்னைக் கொஞ்சம் விட்ரியா…” என்று உடல் நடுங்கியபடி கேட்டாள். “ஏன் துர்கா… போகணுமா…” என்றான் அவள் முகத்தைத் தன்னைப் பார்க்குமாறு உயர்த்தி கேட்க… அவனை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல் துர்கா கண்களை மூடிக்கொள்ள…

அவள் ரோஜா இதழ் இவனைச் சுண்டி இழுக்க… அவள் இடையை வருடிக்கொண்டு அதன் ஸ்பரிசம் உணர்ந்தவன், அவள் சிவந்த முகமும், ரோஜா இதழும் அவன் உடல் உணர்வுகளைத் தூண்டி விட… பட்டென்று அவள் இதழைச் சிறை செய்தான்.

ஏற்கனவே அவன் நெருக்கம் அவளை நிலை குலையச் செய்ய… இப்போது இப்படி உரிமையாக வந்து அவள் இதழைச் சிறை செய்தவனிடம் இருந்து விடுபடத் தோன்றாமல், அவன் தரும் முத்தத்தைக் கண்மூடி ஏற்றுக் கொள்ள… தன்னைத் தடுக்காமல் அமைதியாக நிற்கும் துர்காவைப் பார்த்தவன், அவளிடம் மேலும் நெருங்கி ஆழமாக, மிக ஆழமாக முத்தத்தை வழங்கிக்கொண்டு இருந்தான்.

துர்காவின் உதடுகளைப் பார்க்கும் போதெல்லாம் எழும் தன் உணர்வுகளை இப்போது கடவிழ்த்து விட்டது போல… ஆதியின் உணர்வுகள் அவனைத் தூண்டி விட… அவள் இதழை அணுஅணுவாக ரசித்து ருசித்துக்கொண்டு இருந்தான். ஒரு கையால் அவள் பின் தலையில் கை கொடுத்து அவளுக்கு முத்தமிட்டுக்கொண்டு, மறுகையால் அவள் இடையை வருடிக்கொண்டு என்று அவள் உடலோடு தன் உடல் உரசிட நின்றிருக்க… இங்கே துர்காவின் நிலை அவன் உணர்வுகளோடு போட்டி போட முடியாமல் அவன் கைக்குள் அடங்கிவிட்டாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured