Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 48

உன் ரகசிய ரசிகை நான் 48

by Layas Tamil Novel
609 views

EPISODE 48

ஆதி சமையல் அறையில் வேலை செய்துகொண்டிருந்த துர்காவைப் பார்த்துவிட்டு அங்கே வர… அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணி முத்து தாத்தா கார்டனில் வேலை இருக்கிறது என்று கூறி வெளியே சென்றுவிட்டார். துர்காவைச் சீண்டி அவள் இடையை வருட… அவள் “ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று கேட்டதற்கு, அவளிடம் வார்த்தையால் பதில் கூறாமல் முத்தத்தால் பதிலளித்தான்.

அவள் முத்தத்தில் கரைந்துகொண்டு இருந்தவன், துர்கா மூச்சுக்காற்றுக்குச் சிரமப்படுவதை உணர்ந்தவன்… அவள் இதழை மெல்ல விடுவித்து அவளுக்கு மூச்சுவிட இடம் கொடுத்தவன் அவள் முகத்தைப் பார்க்க… ஏற்கனவே சிவந்திருந்த முகம் மேலும் சிவந்து இருந்தது. அவள் இதழ் அவன் கொடுத்த முத்தத்தில் லேசாகத் தடித்து வீங்கி இருக்க… அவன் பற்கள் பட்டு இதழ் ஓரத்தில் லேசாக இரத்தம் வந்திருந்ததைப் பார்த்தவன், தன்னையே மனதுக்குள் இப்படி காயம் ஆகும் அளவுக்கா முத்தம் கொடுப்பாய்? என்று திட்டிக்கொண்டான்.

அவள் முகத்தைப் பார்க்க அவள் சிவந்த முகம் ஆதி முத்தமிட்டதால் மேலும் சிவந்து இருக்க… அவன் அவளை விட்டுப் பிரிந்து நின்றது கூடத் தெரியாமல் கண்மூடி நின்றிருந்தவளை ரசித்தவன், பின் அவள் இடையில் இவ்வளவு நேரம் வருடிக்கொண்டு இருந்தவன், ‘நறுக்கென்று’ அவள் இடையில் கிள்ளிவிட… “ஷ்….” என்று அவன் கிள்ளியதால் சுயம் வந்தவள், கை தன் இடுப்பைத் தேய்த்துக்கொண்டு அவனைப் பார்த்தவள்… அவனிடம் மறுபடியும் ஏதாவது கேட்டு திரும்பவும் அவன் எதுவும் செய்துவிடுவான் என்று எதுவும் பேசாமல் அவனை முறைத்தாள்.

“என்ன துர்கா…. அப்படிப் பார்க்கிற?” என்றான். “நான் உன்னைப் பார்க்கிறேனா?” என்றால் துர்கா கோபத்துடன். “ஆமாம்,” என்றவன் “ப்பா…. செம்ம டேஸ்ட்….” என்றான் அவள் இதழைப் பார்த்துக் கொண்டு. அவன் அவள் இதழைச் சுவைத்துவிட்டு ‘லட்டு டேஸ்டா இருக்கு’ என்று சொல்கிறானே, எப்படி? என்று யோசித்தவள்… சற்று முன் அவள் லட்டை சுவை பார்த்தது நினைவுக்கு வர அதிர்ந்தவள், இவன் என்ன இவ்வளவு மாறிவிட்டான்? என்று அவனை முறைத்துக்கொண்டே பார்த்தவள், “ஆதி…” என்று அவள் கடுமையாக அவனை அழைக்க…

தான் சொன்னதின் அர்த்தம் அவளுக்குப் புரிந்திருக்கும் என்று அவள் கடுமையான குரலிலேயே தெரிந்துகொண்டவன். “இல்ல, லட்டு செம்ம டேஸ்டா இருக்கு,” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவள் இதழைப் பார்த்து கூறியவன் குனிந்து அவள் இதழைத் தன் இதழால் ஒற்றி எடுத்தவன், அவளை விட்டு நகர்ந்தவன் “சரி துர்கா… நீ போய் வேலையைப் பாரு. நான் வந்த வேலை முடிந்தது,” என்று சொல்லிவிட்டு, அவள் அவனை வெறிக்கொண்டு முறைப்பதைப் பார்த்தும் கவனிக்காதவன் போலத் திரும்பிச் சென்று சோஃபாவில் அமர்ந்து பேப்பர் படிக்க ஆரம்பித்தான்.

துர்கா அவனையே பார்த்துக் கொண்டு இருக்க… அப்போது அங்கு வந்த கதிரும், விக்கியும் ஹாலில் ஆதியுடன் அமர… கீர்த்திகா கிச்சனில் துர்காவைப் பார்த்துவிட்டு உள்ளே வர… அவள் கைகளில் லட்டு பிடிப்பதற்காகத் தேய்த்த படி எதுவும் செய்யாமல் நின்றிருந்தவளைப் பார்த்த கீர்த்திகா, “அக்கா என்ன செய்ற? கை எல்லாம் எண்ணெய்யா இருக்கு,” என்று கேட்டுக்கொண்டு வந்த கீர்த்திகா அருகில் இருந்த லட்டுகளைப் பார்த்தவள்…

வேகமாக வந்து ஒரு லட்டைக் கையில் எடுக்க… அதைப் பார்த்த விக்கி ஹாலில் இருந்து வந்தவன், “கீர்த்து, அந்த லட்டு நான் செய்யச் சொன்னேன். அது எல்லாம் எனக்கு மட்டும்தான். நீ கையில் இருக்குற லட்டை எடுத்த இடத்திலேயே வை,” என்றான்.

அவன் சொன்னதும் கீர்த்திகாவின் முகம் சோகமாகி விட, “அண்ணா…. ஒரு லட்டு கூட நான் சாப்பிடக் கூடாதா?” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

அவளைப் பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது. ஆனால் பிள்ளையாருக்குச் செய்த லட்டுவை அவருக்கு மட்டுமே படைக்க வேண்டும் என்று நினைத்தான். அதனால் தான் விக்கி அப்படிச் சொன்னான்.

ஆனால் கீர்த்திகாவைப் பார்க்கப் பாவமாக இருக்க… “சரி, இது ஒண்ணு மட்டும் சாப்பிட்டுக்கோ. நான் அவர் கிட்ட சொல்லி சாரி கேட்டுக்கிறேன்,” என்று விக்கி கூற…

அவனைப் புரியாமல் பார்த்த துர்காவும், கீர்த்திகாவும், “யாருகிட்ட சாரி கேட்கணும் விக்கி?” என்று துர்கா கேட்டாள்.

“அய்யய்யோ…. அவசரத்தில் உளறி விட்டேனே,” என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டவன். “அது… அது… ஒண்ணுமில்ல துர்கா… வேற ஏதோ யோசனையில் சொல்லிவிட்டேன்,” என்றான்.

அதைக் கேட்டதும், “ஆமா ஆமா, எங்க விக்கி அண்ணாவுக்கு நேற்று நைட்டில் இருந்து வேற யோசனை தான்,” என்று கீர்த்திகா கூற… அவளை முறைத்த விக்கி, “சும்மா இரு…” என்று அவளிடம் ஜாடை செய்ய… இதை துர்கா கவனித்துவிட்டாள்.

“ஏய்… இங்க என்ன நடக்குது? நீங்க ரெண்டு பேரும் எனக்குத் தெரியாமல் ஏதோ ஜாடை பேசிக்கிறீங்களே. என்னன்னு ஒழுங்கா சொல்லுங்க,” என்று துர்கா கேட்க…

“அதெல்லாம் ஒண்ணுமில்லை துர்கா… சும்மா தான்…” என்று இழுக்க… அதற்குள் ஹாலில் இருந்த கதிர், “நான் சொல்றேன் துர்கா… நேற்று நைட்டில் இருந்து அய்யா ஃபுல் லவ் மூடிலேயே இருக்காரு உனக்குத் தெரியுமா?” என்றான் கதிர்.

“என்னடா… கதிர் சொல்ற? விக்கிக்கு லவ்வா…. என்னால் நம்பவே முடியலையே.. யார்ரா… அந்த லவர்? நம்ம விக்கியை லவ் பண்ற அளவுக்குப் பொறுமைசாலியாக இருக்குறது?” என்று துர்கா கேட்டாள்.

“அக்கா நான் சொல்றேன்… நான் சொல்றேன்,” என்று கீர்த்திகா முந்திக்கொண்டு வர… “ம்ஹூம்… இதுக்கெல்லாம் முதல்ல வா… படிப்புல மட்டும் கோட்டை விட்டிரு,” என்று விக்கி அவளைக் கலாய்க்க…

“அக்கா…. பாரு… என்னைப் எப்படி எல்லாம் டீஸ் பண்றாங்கன்னு,” என்று கீர்த்திகா சிணுங்க… “டேய் விக்கி அவளை ஏன்டா கிண்டல் செய்ற? அவ மெதுவா எல்லா அரியரையும் கிளியர் பண்ணுவா…” என்று மீனுவும் அவர்களோடு சேர்ந்து கீர்த்திகாவைக் கிண்டல் செய்ய… “அக்கா நீயுமா…” என்று சிணுங்கிக்கொண்டே ஹாலில் இருந்த ஆதி அருகில் வந்தவள், “மாமா…. நீங்களாவது எனக்கு சப்போர்ட் பண்ணுங்க. எல்லாரும் என்னைக் கிண்டல் செய்றாங்க,” என்று அவனிடம் புகார் செய்தால்.

“என்ன சப்போர்ட்? எதுக்கு சப்போர்ட்?” என்று அவன் இதுவரை இவர்கள் பேசியது எதுவும் கவனிக்காதவன் போலக் கேட்க…

“சுத்தம்… உங்க கிட்ட ஹெல்ப் கேட்டு வந்தேன் பாருங்க,” என்றவள். “டேய் விக்கி அண்ணா…. இரு இரு. ஒரு லட்டுவிற்காக என்னைக் எவ்வளவு கிண்டல் செய்றே? உன்னோட லவ்வை நான் ஒண்ணு சேர விடாமப் பிரிக்குறேனா இல்லையா பாரு,” என்று கூற…

“ஐயோ கீர்த்து…. அப்படி எல்லாம் செஞ்சுராதடா… அண்ணா பாவமில்லையா…” என்று விக்கி கெஞ்ச… “பாவமும் இல்லை ஒரு மண்ணும் இல்லை போடா….” என்று சொல்லிவிட்டுத் தன் போனை எடுத்து “இரு இரு. நான் போன் போடட்டும்,” என்று “நேற்று நிலானியிடம் உன்னை அன்ப்ளாக் பண்ணச் சொல்லி, உனக்கு சப்போர்ட் பண்ணி அவகிட்ட உன்னைப் பத்தி நிறைய பில்டப் எல்லாம் பண்ணி, அவகிட்ட பேசிப் பேசி சமாதானம் செஞ்சு உன் கூடப் பேச வெச்சேன் இல்ல. இப்பவே அவ கிட்ட போன் பண்ணி இது எல்லாம் எதுவும் வேணாம். எங்க அண்ணா நல்லவன் இல்லை. அவன் ரொம்ப மோசமானவன், பொம்பளைப் பொறுக்கி, தண்ணி நிறைய அடிப்பான், என் அண்ணன் ஒரு செயின் ஸ்மோக்கர், சிகரெட்டை வாயில் வைத்தால் எடுக்கவே மாட்டான் அது இதுன்னு சொல்றேன் பாரு,” என்று கீர்த்திகா சொல்லிக்கொண்டே நிலானிக்கு போன் செய்யப் போக…

வேகமாக வந்து அவள் கையில் இருந்த மொபைலை பிடிங்கியவன் “அண்ணா பாவமில்லையா….” என்று அவளிடம் கெஞ்ச…

அப்போது கையில் தட்டுகளில் லட்டுவுடன் வந்த துர்கா ஒரு லட்டுக்காக உன் அண்ணாவோட காதலை இப்படி எல்லார் முன்னாடியும் சொல்லிட்டியே என்று துர்கா கிண்டல் செய்ய…

அப்போதுதான் கீர்த்திகாவும், விக்கியும் “அவசரப்பட்டு உளறி விட்டோமே” என்று உணர்ந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க… துர்கா சிரித்துக்கொண்டே எல்லோருக்கும் லட்டுவைக் கொடுத்தாள்.

“அப்பறோம், சொல்லு விக்கி, யார் அந்த நிலானி?” என்று கதை கேட்பது போல உட்கார்ந்து கேட்க…

“அது… அது வந்து… துர்கா….” என்று தயங்கியவன், இனி மறைப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்த விக்கி, முதன் முதலில் நிலானியைச் சந்தித்தது முதல் நேற்று இரவு பேசியது வரை அனைத்தையும் கூறி முடித்தான்.

இதை எல்லாம் கேட்டு முடித்த துர்கா, “எப்படியோ உனக்கு ஒரு காதலி கிடைச்சுட்டா…. எடுத்ததும் அவகிட்ட தடாலடியாப் போய் ‘லவ் பண்றேன்’, ‘மாமான்னு கூப்பிடுன்னு’, ‘ரொமான்ஸ் பண்றேன்னு’ எதுவும் பண்ணி வைக்காதே. முதல்ல அவ மனசுல நீ இருக்கியா? உனக்கு அவளைப் பிடிச்சிருக்கா…. இல்லை அப்படி அவள் மனசில நீ இல்லைனா… அவ மனசுல இடம் பிடிக்கிற மாதிரி, அவளுக்குப் பிடிச்ச விஷயம் எல்லாம் என்னன்னு தெரிஞ்சுட்டு அவ மனசுல இடம் பிடிக்கிற வழியைப் பாரு. ‘தாட் பூட்னு’ எதுவும் செஞ்சு நார்மலாகப் போற விஷயத்தை நீயே கெடுத்துக்காதே,” என்று துர்கா விக்கிக்கு அறிவுரை வழங்கினாள்.

துர்கா கூறியதை எல்லாம் அவளை ரசித்துக்கொண்டே கேட்டவன். துர்கா சொல்றதும் சரி தான், என்று அவள் சொல்லியதை எல்லாம் யோசித்தவன். முதலில் அவள் மனதில் என்னைப் பற்றிக் என்ன நினைக்கிறாள்? அவள் மனதில் நான் இருக்கிறேனா? அவளுக்கு என்ன எல்லாம் பிடிக்கும், எது எல்லாம் பிடிக்காது என்று கண்டுபிடிக்க வேண்டும். என்று நினைத்தவன், அவளைப் பற்றி எப்படித் தெரிந்துகொள்வது? யாரிடம் கேட்டால் துர்காவைப் பற்றித் தெரிந்துகொள்வது? என்று நினைத்தவன் நினைவில் கீர்த்திகா தான் முதலில் வந்தாள்.

சரி அப்போ கீர்த்திகாவிடம் நிலானியைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அதே போலக் கதிருக்கும் விக்கிக்கும் கூடத் துர்காவைப் பற்றி நன்றாகத் தெரியுமே. என்னை விட இவர்கள் மூவரும் தான் துர்காவிடம் நெருக்கமாக இருப்பவர்கள். இவர்களிடம் எப்படி கேட்பது? என்று யோசித்துக் கொண்டிருக்க…

“மாமா… மாமா…” என்று கீர்த்திகா அழைத்தாள். “என்ன கீர்த்து?” என்று ஆதி கேட்டான். “என்ன மாமா? எதையோ யோசிச்சிட்டு இருக்கீங்க. என்ன ஆச்சு?” என்று கேட்டாள். “ஒன்றுமில்லை கீர்த்து,” என்றவன். “நீ இன்று காலேஜ் போகலையா?” என்றான். “இல்லை மாமா. காலையில் அம்மா நேரமே கால் பண்ணினாங்க. ‘நாளைக்கு நாம் எல்லாரும் கும்பகோணம் கோவில் போகணும்னு சொல்லி கால் பண்ணி இருந்தாங்களாம். அதனால ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்து என்னைத் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்காங்க மாமா…’ நான் கடைக்குப் போகணும் மாமா,” என்றாள். உடனே துர்காவும், “ஆனா கீர்த்து, அத்தையும் என்கிட்ட சொன்னாங்க. நீ போகும்போது சொல்லு நானும் வரேன். எனக்கும் கோவிலுக்குக் கொண்டு போக வாங்க வேண்டி இருக்கு,” என்றாள்.

உடனே விக்கி “அண்ணா, நீங்க எங்க கூட வரீங்களா?” என்று கேட்டான். “இல்லை தங்கச்சிமா… இங்க ஒருத்தன் இருக்கான். ஆபீஸ் போகலைனா எங்களை முறைச்சே கொன்னுருவான்,” என்று ஆதியைக் ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டே சொன்னான்.

“என்ன அண்ணா வரலையா எங்க கூட நீங்க? அப்போ… சரி பரவாயில்லை. நான் ஷாப்பிங் போறேன்னு சொன்னதும், நிலானிக்குக் கால் பண்ணி ஷாப்பிங் போறேன்னு அவளை என்கூட வரச் சொன்னேன். அப்படியே நீங்களும் வந்தீங்கன்னா, உங்களுக்கு அவ கூடப் பழக ஈஸியா இருக்கும்னு நினைச்சேன்,” என்றால்.

கீர்த்திகா நிலானி அவளுடன் ஷாப்பிங் வருவாள் என்றதும் தான் தாமதம், “கீர்த்துமா, இன்னுமா நீ கிளம்பலை? நேரம் ஆகுது. சீக்கிரம் போய் ரெடி ஆகும்மா… நாம போகலாம்,” என்றான்.

“அண்ணா அப்போ ஆபீஸ்…” என்று இழுத்தாள் கீர்த்திகா. “அது கிடக்குதுமா. இன்னைக்கு இல்லைன்னா நாளைக்குப் போய்க்கலாம்,” என்றவன் ஆதியைப் பார்த்துக் கொண்டே…

உடனே கதிர், “நான் இங்க ஒருத்தன் இருக்கேனே. என்னை யாராவது ஒருவராவது நீயும் ஷாப்பிங் வாரியான்னு கேட்டீங்களா?” என்று கீர்த்திகாவைப் பார்த்துக் கொண்டே கேட்க…

“நாங்க கூப்பிடலைன்னா நீ என்ன வர மாட்டேன்னா சொல்லப் போறே…? எப்படியும் எங்க கூட வரத்தானே போறே… அப்பறோம் என்ன?” என்றால் கீர்த்திகா. “கொஞ்ச நேரம் கழிச்சு எல்லாரும் கிளம்பிர அப்போ சொல்றோம் வந்து சேரு,” என்றாள் அவனைப் பார்த்து கண்ணடித்து.

“இருடி…. உனக்கு இருக்கு இருக்கு,” என்று அவளைப் பார்த்து ஜாடை செய்ய… “போடா…” என்றாள் அவளைப் பார்த்து.

அனைவரும் ஷாப்பிங் செல்வதால் சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவர்கள், பிறகு கிளம்பலாம் என்று ரெடியாகச் செல்லப் போக… கீர்த்திகா ஆதியைப் பார்த்து “மாமா… நீங்களும் எங்க கூட வரீங்களா…?” என்று கேட்டாள்.

விக்கி கீர்த்திகாவிடம் “அவன் வர மாட்டான் மா… அவனுக்கு இது எல்லாம் பிடிக்காது,” என்று சொல்ல… அதற்குள் ஆதி, “ஒரு டென் மினிட்ஸ், நான் ரெடி ஆகிட்டு வரேன்,” என்று சொன்னவன் எழுந்து மேலே சென்றான்.

அனைவரும் அவனை ஆச்சர்யமாகப் பார்க்க… சென்ற ஆதி சொன்னபடியே பத்து நிமிடத்தில் கிளம்பி வந்தவன், “போலாமா?” என்று சொல்லிவிட்டு முன்னே செல்ல… அதே அதிர்ச்சியுடன் அனைவரும் அவனுடன் கிளம்பினர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured