Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 50

உன் ரகசிய ரசிகை நான் 50

by Layas Tamil Novel
483 views

EPISODE 50

நிலானி பிள்ளையாருடன் விக்கி மாலுக்குள் செல்ல, இவர்களுக்காகக் காத்திருந்த ஆதி, துர்கா, கீர்த்திகா, கதிர் ஆகியோரிடம் பிள்ளையார் தன்னை அறிமுகம் செய்து வைக்க… கீர்த்திகா நிலானியையும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.

பின் அனைவரும் சேர்ந்து ஷாப்பிங்கிற்குச் சென்றனர். துர்கா, கீர்த்திகா, நிலானி மூவரும் முதலில் பூஜைக்கானத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்க வேண்டும் என்று சொல்லி, அதை வாங்கச் சென்றுவிட…

ஆண்கள் அனைவரும் சேர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் ஓர் இடத்தில் அமர்ந்திருந்தனர். பூஜைக்கான சாமான்கள் அனைத்தையும் வாங்கிவிட்டுச் சீக்கிரமாக வந்த மூன்று பெண்களை அழைத்துக்கொண்டு, அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுக்க அவர்களுடன் சேர்ந்து சென்றனர்.

அனைவரும் முதலில் ஒரு பெரிய துணிக் கடைக்குச் செல்ல… பெண்கள் அனைவரும் பிஸியாகிவிட… பிள்ளையாருடன் விக்கியும், கதிரும் வம்பு இழுத்துக் கொண்டு இருக்க… கீர்த்திகாவிடம் எப்படித் தனியாகப் பேசுவது என்று ஆதி யோசித்துக்கொண்டிருந்தான். அப்போது கீர்த்திகாவிடம் சென்று விக்கி அவளைச் சுரண்டிக் கொண்டே நின்றிருந்தான். அவனைத் திரும்பிப் பார்த்து “என்ன அண்ணா…” என்று கேட்க…

அவளிடம் மெதுவாகக் குனிந்து, “நீயே என் ஆள் கூடச் சுத்திட்டு இருந்தா நான் எப்படித்தான் அவ கூடப் பேசிப் பழகுறது? கொஞ்சம் அண்ணனுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம் இல்ல தங்கச்சி?” என்று விக்கி மெதுவாகக் கேட்டான்.

“ஓ அப்படியா? சரி கொஞ்ச நேரம் பொறுங்க. நான் அப்படியே அந்தப் பக்கம் வேற டிரஸ் பார்க்கிற மாதிரி இந்த இடத்தை விட்டு நகர்ந்து போறேன். நீங்க வந்து நிலானிகூட ஜாயின் பண்ணிக்கோங்க,” என்றால் கீர்த்திகா. “தங்கச்சின்னா…. தங்கச்சி தான்! ரொம்ப தேங்க்ஸ்டா….” என்று கீர்த்திகாவின் கன்னம் பிடித்துக் கிள்ளிவிட்டு வேகமாகச் சென்று கதிருடன் அமர்ந்து கொண்டான்.

கதிர் விக்கி இருவரும் பேசிக் கொண்டிருக்க… ஆண்கள் செக்ஷனில் துணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த துர்கா, ஆதிக்கும் மற்ற இருவருக்கும் ஆடைகள் எடுக்கலாம் என்று அங்கு பார்த்துக் கொண்டிருந்தாள். துர்கா தனியாக நிற்பதைப் பார்த்த கதிர்…

ஆதியிடம், “அண்ணா… துர்கா தனியா டிரஸ் பார்த்துட்டு இருக்கா. நீ போய்த் துர்காவுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணலாம் இல்ல,” என்று கேட்க.

அவ்வளவு நேரம் துர்காவை யாருக்கும் தெரியாமல் சைட் அடித்துக் கொண்டிருந்த ஆதி, கதிர் இப்படிச் சொன்னதும் இதுதான் சாக்கு என்று அவளுடன் பேசச் சென்றான்.

ஆதி துர்கா அருகில் சென்று நிற்க… தன் அருகில் யாரோ நிற்பது போல உணர்ந்த துர்கா திரும்பிப் பார்க்க… ஆதி நின்றிருப்பதைப் பார்த்தவள். ஏன் ஆதி வந்து இங்க நிற்குறான்? அவனுக்கு இதெல்லாம் பிடிக்காதே என்று யோசித்தவள் என்ன செய்வது என்று தெரியாமல் சட்டென்று திரும்பிக் கொள்ள…

அவள் தன்னைப் பார்த்ததும் திரும்பிக் கொண்டதால், தான் அருகில் வந்தது துர்காவுக்குப் பிடிக்கவில்லையோ என்று நினைத்துக்கொண்ட ஆதி, துர்காவிடம், “ஏன் துர்கா… என்னைப் பார்த்ததும் திருப்பிக்கிட்ட? என்னைப் பார்க்கப் பிடிக்கலையா உனக்கு?” என்று ஆதி கேட்க.

அவன் இப்படி கேட்டதும் “இல்ல… இல்ல… ஆதி. அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. திடீர்னு யாரோ வந்து நின்னாங்கன்னு நினைச்சுட்டுத் தான் பார்த்தேன். வேற ஒண்ணும் இல்ல,” என்றால்.

“சரி, பெண்கள் எல்லாம் அவங்களுக்குத் தேவையான டிரஸ்ஸை அங்க எடுத்துட்டு இருக்கும்போது நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்று ஆதி கேட்டான்.

“எனக்கு டிரஸ் எல்லாம் எதுவும் வேண்டாம் ஆதி. அத்தை ஏற்கனவே நிறைய எடுத்து கொடுத்திருக்காங்க. அதுவே போடாமல் நிறைய நான் வெச்சிருக்கேன். சும்மா இங்கே வந்தேன், உங்க எல்லாருக்கும் எடுக்கலாம்னு சொல்லிட்டுத் தான்,” என்று கூற… “ஓ… அப்போ எனக்கும் நீ டிரஸ் எடுத்து இருக்கியா?” என்று ஆதி கேட்டான்.

“உனக்கு ஏற்கனவே எடுத்துட்டேன் ஆதி,” என்றவள் ஆதிக்காக தான் தேர்வு செய்து வைத்திருந்த சட்டையைக் காட்டினாள். ஏலக்காய் பச்சை நிறத்தில் ஒரு சட்டை எடுத்து வைத்திருந்தாள். அதை கையில் எடுத்த ஆதி சிறிது நேரம் அந்தச் சட்டையையே பார்த்தவன், பின் அவளிடமே கொடுத்துவிட்டான்.

அவன் சட்டையைப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் தன்னிடமே கொடுத்ததும், அவனைப் பார்த்த துர்கா எதுவும் பேசாமல் நின்றிருந்தவள், பின் ஆதியிடம், “ஆதி, இந்தச் சட்டை உனக்குப் பிடிக்கலையா? உனக்குப் பிடிக்கலைன்னா சொல்லு. இதை கொடுத்துட்டு வேற சட்டை எடுத்துக்கலாம். நான் இன்னும் இந்தச் சட்டைக்கு பில் போடச் சொல்லலை,” என்றாள்.

அவள் வேறு சட்டை மாற்றிக் கொள்ளலாம் என்றதும் ஆதி அவசரமாக “துர்கா…. அதெல்லாம் எதுவும் மாற்ற வேண்டாம். இந்தச் சட்டையே இருக்கட்டும். எனக்கு ஓகே..” என்றான்.

அவன் ஓகே சொன்னாவே அதற்கு மறு பேச்சு கிடையாது என்று துர்காவுக்கு நன்றாகவே தெரியும். அவளும் “சரி” என்று விட்டு விக்கிக்கும், கதிருக்கும் சட்டை எடுத்துக் கொண்டு இருந்தாள். துர்கா தீவிரமாகச் சட்டையைத் தேர்வு செய்துகொண்டிருக்க… அவள் சீரியஸாக ஆடையைத் தேர்ந்தெடுப்பதைப் அவளுக்குத் தெரியாமல் ரசித்துக்கொண்டு இருந்தான் ஆதி.

அவள் அருகில் சென்ற ஆதி, “துர்கா, டிரஸ் எல்லாம் செலக்ட் பண்ணிட்டியா?” என்றான். “இன்னுமில்லை ஆதி. ஏன்?” என்று கேட்டாள் துர்கா. “சரி, நீ செலக்ட் பண்ணிட்டு இரு. நான் வரேன்,” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

அதானே! கொஞ்ச நேரம் இங்கே நின்னதே அதிசயம்தான், என்றவள் அங்கிருந்த கதிரை அழைத்து அவனுடன் சேர்ந்து ஆடைகளை எடுத்துக் கொண்டு இருந்தாள்.

****

ஆதி துர்காவிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து வந்தவன், கீர்த்திகா என்ன செய்கிறாள் என்று பார்க்க… அவள் நிலானியுடன் டிரஸ் எடுத்துக்கொண்டு இருந்தாள்.

எப்படி கீர்த்திகாவைத் தனியே அழைத்து பேசுவது என்று ஆதி யோசித்துக் கொண்டிருக்க… சரியாக கீர்த்திகா நிலானியை விட்டுச் சற்றுத் தள்ளிச் சென்று வேறு பக்கம் ஆடைகளைப் பார்த்துக்கொண்டு இருக்க… இது தான் சரியான சமயம் என்று நினைத்தவன் நேராக கீர்த்திகா இருந்த ஆடைப் பிரிவிற்குச் சென்றான்.

அவன் வருவதைப் பார்த்த கீர்த்திகா, “மாமா….. வாங்க! என்ன இந்த பக்கம் காத்து அடிக்குது? எங்க அக்கா அங்க இருக்காளே…” என்று ஆதியைக் கிண்டல் செய்ய…

அவள் தன்னிடம் உரிமையுடன் கிண்டல் செய்வதைப் பார்த்துக் சிரித்த ஆதி, “சும்மாத் தான் நீ தனியா இருக்கியே. உனக்கு ஏதும் ஹெல்ப் வேணுமோ என்று தான் வந்தேன்,” என்றான் ஆதி.

“ஆமாம் மாமா…. எனக்குக் கொஞ்சம் டிரஸ் செலக்ட் பண்ணிக் கொடுங்க மாமா. எந்த டிரஸ் எடுக்குறதுனே தெரியலை. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு,” என்றால்.

“சரி வா… நான் செலக்ட் செய்றேன்,” என்றவன் அங்கிருந்த புடவைகளை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தவன்… ஒரு சேலையை எடுத்துத் திரும்பித் தூரத்தில் இருந்த துர்காவுக்கு நன்றாக இருக்குமா என்று சேலையை உயர்த்திப் பிடித்துப் பார்க்க…

ஆனால் அவன் அருகில் நின்றிருந்த கீர்த்திகாவோ, அவன் தனக்காகத் தான் சேலை செலக்ட் செய்து கொண்டு இருக்கிறான் என்று நினைத்த கீர்த்திகா அவனையே பார்க்க… கையில் வைத்திருந்த சேலையைப் பார்த்துவிட்டு துர்காவைப் பார்த்தவன்… அவளுக்கு இது நன்றாக இல்லை என்பது போலத் தனக்குள்ளேயே அவளுக்கு அந்தச் சேலையை வைத்துப் பார்த்து “வேண்டாம்” என்று தலையை ஆட்டிவிட்டு அடுத்த சேலையை எடுத்தான்.

அவன் இப்படியே ஒரு பத்து, பதினைந்து சேலைகளை துர்காவுக்கு வைத்துப் பார்ப்பதும்… பின் நன்றாக இல்லை என்று வேறு புடவையை எடுத்துப் பார்ப்பதுமாக இருக்க… அவன் அருகில் அவன் தனக்காக ஒரு சேலையை எடுப்பான் என்று ஒவ்வொரு முறையும் ஆவலாக அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருக்க… ஆதி சேலை எடுப்பது போலத் தெரியவில்லை.

நின்று நின்று கீர்த்திகாவுக்குக் கால் வலிக்கவே… அருகில் இருந்த சேரில் அமர்ந்து, அங்கிருந்த சேலைகளை வைக்கும் மேடை மீது ஒரு கையைத் தன் தலைக்கு முட்டுக் கொடுத்த படி… அவன் தனக்காகச் சேலை செலக்ட் செய்யும் வரை அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து ஒருவழியாகப் புடவையைச் செலக்ட் செய்துவிட… “இதை பேக் பண்ணுங்க,” என்று அங்கிருந்த சேல்ஸ் கேர்ளிடம் கூற… “ஐ… மாமா… சாரீ… சூப்பரா… இருக்கு. நான் செலக்ட் பண்ணி இருந்தால் கூட இவ்வளவு அழகா செலக்ட் பண்ணி இருக்க மாட்டேன்,” என்று கூற…

அப்போது தான் கீர்த்திகாவுக்குச் சேலை செலக்ட் செய்யாமல் விட்டது நினைவில் வர… ஒருவாறு அசடு வழிந்து கொண்டே “கீர்த்து…. இந்தச் சாரீ உனக்கு இல்லை. உன் அக்காவுக்கு,” என்றான்.

“என்னது… அப்போ இவ்வளவு நேரம் நீங்க எனக்குச் செலெக்ட் பண்ணலையா? என் அக்காவுக்குத் தான் செலக்ட் பண்ணிங்களா?” என்று பாவமாகக் கேட்க…

“ஒரு ஃபைவ் மினிட்ஸ் கீர்த்து, நான் உனக்கு செலக்ட் பண்றேன்,” என்று திரும்பி கீர்த்திகாவுக்குச் சேலை செலக்ட் பண்ணப் போக… “ஐயோ… மாமா போதும். நீங்க இவ்வளவு நேரம் எனக்குச் செஞ்ச உதவிக்கு. நானே எனக்குச் செலக்ட் பண்ணிக்கிறேன். நீங்க எதுவும் செய்ய வேண்டாம்,” என்று கீர்த்திகா ஆதியைப் பார்த்துக் கை எடுத்து கும்பிட… “சாரி கீர்த்து. கொஞ்சம் வெயிட் பண்ணு. நானே சீக்கிரமா செலக்ட் பண்ணித் தரேன்,” என்று கூறியவன் திரும்பி ஒவ்வொரு சேலையாகப் பார்த்தவன்… பின் அதில் இருந்து ஒரு சேலையை எடுத்துக் கீர்த்திகாவிடம் காட்டி “இது உனக்குப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.

அவன் கையில் வைத்திருந்த சேலையைப் பார்த்தவள், “மாமா…. சூப்பர்! எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு,” என்று அவன் கையில் இருந்த சேலையை வாங்கி அதை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டாள்.

பின் அனைத்தையும் சேல்ஸ் கேர்ளிடம் கொடுத்து பில் போடச் சொன்ன ஆதி, கீர்த்திகாவைப் பார்த்து. “கீர்த்து ஒரு நிமிஷம், நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்,” என்றான்.

“என்ன மாமா… சொல்லுங்க,” என்றால் கீர்த்து. “அது… அது ஒண்ணுமில்லை கீர்த்து. எனக்கு உன்கிட்ட துர்காவைப் பற்றிக் கொஞ்சம் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்,” என்றான்.

“என்ன மாமா… அக்காவைப் பற்றித் தெரிஞ்சுக்க நீங்க அவ கிட்டயே கேட்கலாமே? நீங்க கேட்டா… அவளே சொல்லப் போறா..,” என்றால் கீர்த்து.

“அப்படி இல்லை கீர்த்து. அவளுக்குப் பிடிச்சதை எல்லாம் துர்காவிடமே கேட்டு அவளுக்குச் செய்தால் நல்லா இருக்காதில்லையா? அதான் உன்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுட்டு துர்காவுக்குப் பிடித்ததை பார்த்துப் பார்த்துச் செய்யணும்னு நினைக்கிறேன்,” என்றான் ஆதி.

தன் அக்காவை இம்ப்ரஸ் பண்ண ஆதி இவ்வளவு மெனக்கெடுவதைப் பார்த்த கீர்த்துவிற்கு, தன் அக்கா நினைத்தது போல ஆதி மாமாவுக்குத் தன் அக்காவின் மேல் காதல் வர ஆரம்பித்திருக்கிறது போல என்று நினைத்தவள்.

“மாமா… நீங்க கவலையே படாதீங்க. அவளுக்கு என்னா எல்லாம் பிடிக்கும், பிடிக்காது என்று எல்லாமே நான் உங்களுக்கு ஒண்ணு விடாம சொல்றேன்,” என்றவள் அவனை அழைத்துக்கொண்டு போய் ஓர் இடத்தில் அமர்ந்தவள்… அவனையும் அமரச் சொல்லிவிட்டு, “மாமா அவங்க எல்லாரும் வர்ற வரைக்கும் நான் உங்களுக்குச் சீக்கிரமா அவளுக்குப் பிடிச்சதெல்லாம் சொல்றேன்,” என்றவள் ஆதியிடம் கிடைத்த சிறிது நேரத்தில் துர்காவைப் பற்றிக் கூறினாள்.

அதற்குள் அனைவரும் வந்துவிட… “மாமா மீதியை நான் அப்போ அப்போ… உங்களுக்கு வாட்ஸ்அப் பண்றேன். நீங்க என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க. போன் பண்ணுங்க மாமா…” என்றவள் எழுந்து செல்லப் போனவள்.

“மாமா….” என்று ஆதியை அழைத்தாள். “என்ன கீர்த்து?” என்று நிமிர்ந்து அவளைப் பார்க்க. “நீங்க அக்காவோட டைரியைப் படிச்சிருக்கீங்களா?” என்று கேட்டாள்.

“என்ன டைரி…” என்றான் புரியாமல் ஆதி. “சுத்தம்! இவ்வளவு நாளா அக்கா உங்க கூட இருக்கா. அவ என்ன செய்றான்னு கூட உங்களுக்குத் தெரியலையா?” என்று தலையில் அடித்துக் கொண்டவள்.

“முதல்ல வீட்டுக்குப் போனதும் எங்க அக்கா என்ன எல்லாம் செய்றான்னு ஃபர்ஸ்ட் பாருங்க. அவ தினமும் டைரி எழுதாமத் தூங்கவே மாட்டா… அதில் இருக்குறதைப் படிச்சாலே நீங்க துர்காவோட எல்லா விஷயமும் தெரிஞ்சுக்கலாம்,” என்றால்.

“துர்கா டைரியைப் படிக்கிறது தப்பில்லையா?…” என்றான் ஆதி. “உங்களுக்குத் துர்காவை இம்ப்ரெஸ் பண்ணனுமா வேணாமா…” என்றால். “கண்டிப்பா இம்ப்ரெஸ் பண்ணனும் கீர்த்து,” என்றான்.

“அப்போ அக்காவோட டைரியைப் படிங்க அவளுக்குத் தெரியாமல். ஒருத்தவங்களோட டைரியை அவங்களுக்குத் தெரியாமல் எடுத்துப் படிச்சுப் பாருங்க. அது தனி ஃபீல் மாமா…” என்றவள் அங்கிருந்து சென்றுவிட…

இன்னைக்கு துர்காவின் டைரியை எப்படியாவது கண்டு பிடித்து எடுத்துப் படித்து விட வேண்டும், என்று நினைத்தவன் அவர்களுடன் சென்றான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured