EPISODE 6
ஆதி, கதிர் மற்றும் விக்கி மூவருக்கும் சொத்துக்களை பிரித்துக்கொடுத்துவிட்டு வெங்கடசாலம் இப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது.
இனி நான் எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக வீட்டில் ரெஸ்ட் எடுக்க போகிறேன் என்னை பிசினஸ் அது இது என்று இனி யாரும் தொந்தரவு செய்யக்கூடாது நானும் என் பொண்டாட்டியும் ஊர் சுற்ற போகிறோம் என்ன விசாலாட்சி போலாமா என்று தன் மனைவியை பார்த்து கண்ணடிக்க என்னங்க நீங்க பசங்க முன்னாடி இப்படி எல்லாம் அதுவும் இந்த வயசுல என்றார் வெட்கப்பட்டுக் கொண்டே.
அத்தை மாமா உங்களை எவ்வளவு அழகா ரொமான்ஸ் பன்றாரு இந்த வயசுலயே. உங்க மேல அதே காதலோட இருக்கிறது எல்லாம் வரம் அத்தை என்ஜோய் பண்ணுங்க அத்தை என்றாள் கீர்த்தி. அவள் கூறியதை கேட்டு அவளை திரும்பி பார்த்த கதிர் கீர்த்திகாவா இப்படி பேசுவது என்று ஆச்சர்யமாக அவளை பார்க்க அவள் விசாட்சியிடம் ஏதோ பேசி கிண்டல் செய்து சிரித்துக்கொண்டு இருந்தால்.
அவளை பார்த்ததும் கதிருக்கு ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோன்ற என்ன இது இன்னைக்கு இவளை புதுசா பாக்குற மாதிரி ஏன் நான் பார்க்கிறேன். இவள் எத்தனை முறை துர்காவுடன் பாத்திருக்கிறேன் அப்போதெல்லாம் ஏன் இப்படி தோன்றவில்லை என்று அவளையே பார்த்துக்கொண்டிருக்க அருகில் இருந்த விக்கி ரைட்டு…. அங்க என்ன டா பார்வை உனக்கு வேண்டி இருக்கு இந்த பக்கம் திரும்புடா என்று கதிரின் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.
சரி எல்லாரும் சாப்பிட வாங்க நேரம் ஆகுது என்று எல்லோரையும் வர சொல்லிவிட்டு கிட்சனிற்கு சென்றுவிட்டார் விசாலாட்சி அவர் சென்றதும் துர்காவும் அவருடன் செல்ல போக அம்மாடி… துர்கா இங்க வாம்மா என்றார் வெங்கடாச்சலம்.
அவர் அழைத்ததும் சொல்லுங்க மாமா என்று அவர் அருகில் வந்தவலை தன் பக்கம் அமர செய்து உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தானே டா… நாங்கள் அனைவரும் உன்னை கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டோம் அதனால் நீயும் இந்த திருமணத்திற்கு சரி என்று சொல்லிவிட்டாய்.
ஆனால் உன்மனதில் என்ன இருக்கிறது என்று எனக்கு முழுதாக தெரியவில்லை இன்றிலிருந்து நீ இந்த வீட்டின் மருமகள் என் மகனின் மனைவி ஆகியிருக்கிறாய் அதை நீ முழு மனதோடு ஏற்றுக் கொண்டாயா என்று தெரிந்துக் கொள்ளவே உன்னிடம் கேட்கிறேன்.
நீ மனதில் என்ன நினைக்கிறாயோ அதை அப்படியே சொல்லி விட்டு அம்மா நான் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக தான் இருக்கிறேன் என்றார். அவர் அவ்வாறு கூறியதும் எதுவும் கூறாமல் துர்கா அமைதியாக இருக்க.
அவள் என்ன சொல்ல போகிறாள் என்று அனைவரும் ஆவலாக அவளையே பார்க்க இங்கு ஒருவன் அனைவரையும் விட மிக ஆவலாக இருந்தான் துர்கா சொல்ல போகும் பதிளுக்காக வேற யாரு ஃபிரெண்ட்ஸ் நம்ம ஹீரோ ஆதி தான்.
ஏன் துர்கா அமைதியா இருக்க என்ன நினைச்சிருக்கியோ இந்த கல்யாணத்தை பத்தி அதை அப்படியே சொல்லு என்று விசாலாட்சி அவள் அருகில் வந்து உன் மனசுல என் மகன் இருக்குறானு அவனை நான் விரும்பி தான் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னேன்னு சொல்லு என்றார்.
சொல்லுமா என்று துர்காவின் அம்மாவும் கூற எனக்கு பிடிச்சு தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிட்சேனிற்குள் ஓடி விட்டாள்.
அவள் கூறியதை கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைய ஆதி மட்டும் அதிர்ச்சியில் துர்காவையே பார்த்துக்கொண்டு இருந்தான். இவள் என்ன சொல்கிறாள் பிடித்து தான் திருமணம் செய்திருக்கிறாளா என்னை அப்படி என்றாள் அவள் என்னை…. என்று யோசித்தவன் ச்சேச்சே இருக்காது துர்கா அப்படி எல்லாம் இருப்பவள் இல்லையே இருந்திருந்தால் இத்தனை வருடத்தில் என்னிடம் சொல்லி இருப்பாளே என்று யோசிக்க.
அவன் அருகில் அமர்ந்திருந்த விக்கி என்ன டா துர்காவை அவளோ அதிர்ச்சியா பாக்குற இதை வரை நீ பார்த்த துர்காவா இவள் என்று தானே யோசிக்கிற இன்னும் போக போக பாரு நீ பார்த்த துர்காவை விட இவள் இன்னும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் உனக்கு கொடுக்க போகிறாள் என்று கூறிய விக்கி. அவளிடம் இன்று இரவு எதுவும் கேட்டு அவளை சங்கட படுத்தி விடாதே என்று கூற என்ன இன்று இரவா… என்றான் புரியாமல்.
டேய் உனக்கு உண்மையாவே தெரியலையா இல்லை தெரியாத மாதிரி நடிக்கறியா என்று கெட்டவன் இன்றைக்கு உனக்கு முதல் இரவு டா என்றான் விக்கி இதை கேட்டதும் ஆதி அதிர்ச்சியில் வாட்….. என்று அவனை பார்க்க எனக்கு பசிக்குது வாடா… கதிர் நாம சாப்பிட போகலாம் என்று கூறிவிட்டு
இது என்ன முதல் இரவா அம்மாடி இளமைக்கு புது வரவா….
என்று ஓரு பாடலை ஹ்ம்ம்… செய்துகொண்டே டைனிங் டேபிள் சென்றான். அவன் முதல் இரவு என்று கூறி சென்றதும் ஆதிக்கு முகமெல்லாம் வெர்த்து வடிந்தது. இதுவரை எந்த பெண்ணையும் தான் அருகில் விட்டாதில்லை ஆனால் இனி ஒரு பெண்ணுடன் வாழ்நாள் முழுவதும் ஒரேய அறையில் ஒரே படுக்கையில் எப்படி என்று தன்னை தானே கேட்டுக்கொண்டு விடை தெரியாமல் டைனிங் ஹாலில் பார்க்க அங்கே துர்கா பிங்க் நிற ஷிப்பான் சேலை கட்டி அதற்கு மேட்சாக ப்ளௌஸ் போட்டு தலையை பிரீ ஹேர் விட்டு அதில் சின்னதாக ஒரு கிளிப் மட்டும் போட்டு மேக் அப் இல்லாத முகத்தில் ஒரு குட்டி வட்ட பொட்டு வைத்துக்கொண்டு சிரித்த முகத்தோடு மற்றவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தால்.
இதுவரை அவன் துர்காவை இவ்வளவு நுனுக்கமாக கவனித்ததில்லை ஆனால் இன்று ஏன் இவளை இவ்வளவு தூரம் கவனிக்க தோன்றுகிறது என்று புரியாமல் அப்படியே அமர்மதிருந்தான்.
ஆதி….. என்று விசாலாட்சி அழைக்க அவன் கவனம் அப்போதுதான் நினைவுக்கு வந்தது. என்னபா…அங்கேயே உக்காந்துட்டு இருக்க நீயும் வா…. சாப்பிடலாம் என்று அழைக்க ஆதி எழுந்து வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்.
அவன் தட்டில் உணவுகளை துர்கா பரிமாற அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் அமர்ந்திருந்தான் ஆதி.உணவை எதுவும் சாப்பிடாமலே ஒரு வித தயக்கதோடே அமர்ந்திருந்த ஆதியை கவனித்த அவன் அம்மாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்திக்கொள்ள விசாலாட்சி அவரிடம் ஏங்க நீங்க சொல்லுங்க அவன்கிட்ட நான் சொன்ன கோச்சுக்குவான் என்றார்.
வெங்கடேசலம் திரும்பி ஆதி… நாம மட்டும் தான இப்போ நம்ம வீட்டில இருக்கோம் இன்னும் ஏன் அந்த மாஸ்க்ய் கழட்டாமல் இருக்க.
சும்மா மாஸ்க்ய் கழட்டிட்டு சாப்பிடு பா… என்றார்.அவன் முகம் உடல் என எல்லா பக்கமும் சிவந்த தடித்த கொப்பலங்கள் இருப்பதால் எப்போதும் அவன் முழுக்கை சட்டையும், தான் உடலை முழுதாக மறைத்திருக்கும் படியான ஆடைகளை தான் போடுவான்.
அவன் அம்மா அப்பா கதிர் விக்கியை மற்றும் முத்து தாத்தாவை தவிர அவன் முகத்தை மாஸ்க் இல்லாமல் யாரும் பார்த்தது கிடையாது ஏன் இவ்வளவு வருஷத்தில் ஆதியின் பர்சனல் அசிஸ்டன்ட் ஆக அவன் கூடவே இருக்கும் துர்கா கூட அவன் முகத்தை பார்த்ததில்லை.
அவன் வீட்டில் மட்டும் தான் மாஸ்க் இல்லாமல் சாதாரண உடையில் இருப்பான். இன்று இவனுக்க்கு திருமணம் ஆகிவிட்டு அவன் வீட்டில் இப்போது துர்காவும் அவன் குடும்பத்தில் உள்ளவர்களும் இருக்க ஒருவித சங்கடத்துடனேயே இருந்தான் ஆதி.
வீட்டிற்கு வந்ததில் இருந்தது அவன் வெளியே செல்லும்போது எப்படி உடை அணிந்திருக்கிறானோ அதே போல தான் இப்போதும் உடை அணிந்திருந்தான்.அவன் அப்பா சொன்னதும் யோசித்துக்கொண்டே அமர்ந்திருக்க அவன் அருகில் இருந்த விக்கி டேய் எப்படியும் ஒரு நாள் துர்காவும் அவள் வீட்டிலும் உன்னை பார்த்துதான் ஆக வேண்டும் பேசாமல் மாஸ்க்ய் கழட்டு டா என்றான்.
ஆதிக்கு வேறு வழியே இல்லை இப்போது எப்படியும் மாஸ்க்ய் கழட்டிவிட்டு தான் சாப்பிட்டாக வேண்டும் துர்காவும் இனி என்னுடன் இங்கு தான் இருக்க போகிறாள் அவள் பெற்றோரும் அடிக்கடி வந்து போகும்போளுது எப்படியும் நான் அவர்களை சந்தித்து தான் ஆக வேண்டும் என்று யோசித்தவன் ஒரு முடிவுடன் மாஸ்க்ய் கழட்ட போக அப்போதி சரியாக துர்கா மாமா… ஆதி சார்க்கு பிடிக்காத விஷயத்தை செய்ய சொல்லி சார்ரை போர்ஸ் பண்ணாதீங்க என்றாள்.
அவள் அவ்வாறு கூறியதும் தன்னை எப்போதும் ஆபீஸில் பார்த்து பார்த்து கவனித்து என் மனநிலைக்கு தகுந்து அனைத்தையும் செய்யும் துர்கா இன்று என் வீட்டிலும் அதையே செய்கிறாள் என்று நினைத்தவன்.துர்கா கூறியதற்கு இல்லை பரவாயில்லை என்று கூறி தான் மாஸ்க்ய் கழட்டினான்.
வெறும் அவன் கண்களையும் அவன் குணத்திஸ்யங்களை மட்டுமே பார்த்து காதல் செய்து கொண்டிருந்த துர்கா இன்றுடன் இத்தனை வருடத்தில் அவன் முகத்தை முழுவதுமாக பார்க்கிறாள்.தனக்கு தாலி கட்டும் போது கூட அவன் முகமூடியுடனேயே தான் இருந்தான்.
அவன் முகத்தை முதன் முறை நன்கு பார்த்தால் துர்கா. அவனின் அழுத்தமான பார்வைக்கு எற்றார் போல அவன் முகமும் சற்று கடுமையுடனேயே இருந்தது.அவன் முகம் முழுதும் கோபுலங்கள் இருப்பதால் அவன் மீசை தாடி என்று எதையும் வைத்துக் கொண்டதில்லை இதுவரை.
சிவந்த அவன் தோளிர்க்கும் அவனது கோபுளங்களுக்கும் ரொம்ப பெரிய வித்யாசம் எதுவும் இல்லை.அவன் முகத்தில் அவை ஆங்காங்கே சிவந்து சிறிது சிறிதாக வீங்கிப்போய் இருந்தது. ஆனால் அது ஒன்றும் அவன் அழகான முகத்தை கெடுக்க வில்லை ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் கொஞ்சம் பெரியதாக கோபுலங்கள் இருந்தன.
ஆதியின் முகத்தை அனு அனுவாக பார்த்து தான் மனதிற்குள் படம் பிடித்துக் கொண்டிருந்தால் துர்கா. தன் முகத்தை பார்த்ததும் துர்கா முகம் சுழித்து விடுவாள் என்று இனிய ஆதிக்கு,அவள் தன் முகத்தை இவ்வளவு ஆர்வமாக முகம் சுலிக்காமல் பார்க்கிறாள் என்பதே ஆதிக்கு நம்ப முடியவில்லை.
இவன் துர்காவை பார்ப்பதை கூட அவள் கவனிக்கவில்லை பரிமாறுவதை விட்டு விட்டு, துர்காவை கவனித்த கீர்த்திகா அக்கா மாமாவை சைட் அடிச்சது போதும் எனக்கு கொஞ்சம் சாம்பார் ஊத்துறியா என்றாள்.
அப்போது தான் இவ்வளவு நேரம் நான் இப்படியே நின்றிருந்திருக்கிறேன் போல ஆதி என்னை பற்றி என்ன நினைப்பான் என்று யோசித்தவள் வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தால்.
கீர்த்திகா ஏதாவது ஒன்று பேசிக்கொண்டே இருந்தால். ஆதியிடம் மாமா நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லட்டுமா என்று கேட்டாள். அவள் தன்னை உரிமையோடு மாமா என்று அழைப்பதை பார்த்து சந்தோசமாக சொல்லு கீர்த்தி என்றான் ஆதி.
நீங்க ரொம்ப ஹாண்ட்ஸம் ஆஹ் இருக்கீங்க மாமா நான் மட்டும் முதல்லயே உங்க முகத்தை பார்த்திருந்தா எப்பவோ உங்களுக்கு ப்ரொபோஸ் பன்னி இருப்பேன் என்றாள். அவள் கூறியதை கேட்டு ஆதிக்கு புரை ஏறியது.
தன் அக்காவை வைத்துக்கொண்டு இவள் என்ன பேச்சு பேசுகிறாள் என்று நினைத்துக்கொண்டு திரும்பி துர்காவை பார்க்க அவள் கீர்த்திகாவை முறைத்துக்கொண்டு நின்றிருந்தால்.
இதை எதையும் கவனிக்காத கீர்த்திகா என்ன மாமா நான் சொல்றது உண்மைதானே என் அக்கா எப்படி உங்கள் முகத்தை பார்க்காமலேயே இவ்வளவு நாள் காத…… என்று அவள் ஏதோ கூற வரவும் துர்கா கீர்த்தி…. என்று சத்தமிட அப்போது தான் கீர்த்திக்கு ஐயோ…. இன்னேரம் நான் அக்காவை பற்றி உளறி இருப்பேனே என்று துர்காவை பயத்துடன் துர்காவை பார்க்க அவள் எரிக்கும் பார்வை வீசிக்கொண்டு இருப்பதை பார்த்து போச்சு அவ்ளோ தான் நான் இன்னிக்கு என்று மனதிற்குள்லேயே தன்னை தானே திட்டிக் கொண்டிருந்தால்.
துர்காவை தவிற இன்னோரு ஆள் கீர்த்தியை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான் வேறு யாருமில்லை நம்ம. கதிர் தான். நான் இங்கு ஒருவன் இருக்கிறேன் என்னை விட்டு விட்டு என் அண்ணனை அதுவும் திருமணம் ஆனவனிடம் போய் எப்படி பேசுகிறாள் என்று மனதிற்குள் அவளை திட்டிக் கொண்டிருக்க கீர்த்திகாவிற்கு புரை ஏரியாது இப்போது.
அவளுக்கு அவசரமாக தண்ணீரை கொடுத்த அவள் அம்மா கொஞ்ச நேரம் பேசாம சாப்பிடறிய நீ… இப்படி தான் எப்பவும் ஏதாவது ஒன்று பேசிட்டே இருப்பா நீங்க அவள் பேசியது எதையும் மனசுல வெச்சுக்காதீங்க தம்பி என்று ஆதியிடம் அவர் கூற என்ன சம்மந்தி இன்னும் தம்பிஞ்சு சொல்லிட்டு இருக்கீங்க என் பிள்ளைய மாப்பிள்ளை என்று வாய் நிறைய கூப்பிடுங்க என்றார் விசாலாட்சி.
சரிங்க சம்மந்தி அம்மா என்றவர் கீர்த்தி பேசாம சாப்பிடு என்று அவளை அதட்டி விட்டு சாப்பிட தொடங்கினார்.
இங்கு ஆதி கீர்த்தி இப்போ ஏதோ சொன்னாலே துர்கா பற்றி அதற்குள் அவள் இவளை அதட்டிவிட்டாளே அவள் ஏதோ சொன்னாலே என் அக்கா எப்படி இவ்வளவு நாள் உங்க முகத்தை பாக்காமயே கா…. ன்னு ஏதோ சொன்னாலே எனவே இருக்கும் என்று யோசிக்க ஏதும் புரியாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து அம்மா நான் ரூம்க்கு போறேன் என்று கூற டேய்.. டேய்… எங்க டா போற இரு கொஞ்ச நேரம் நீ கதிர் ரூம்ல போய் இரு உன் ரூமை எல்லாம் கிளீன் பண்ண சொல்லிருக்கேன் என்று கூற ஏன் மா என் ரூம் நல்லா தான இருக்கு என்றவனை பார்த்தவர் இவனை என்ன செய்வது என்று புளம்பியவர் விக்கி என்று அழைக்க அம்மா நான் பாத்துக்கிறேன் நீங்க ஆக வேண்டிய வேலைய பாருங்க என்று கூறிவிட்டு ஆதியை அவன் அழைத்து சென்றான்.
கதிர் ரூமிற்குள் வந்தா ஆதி என்ன டா இது என்று கேட்க நான் அப்போவே என்ன சொன்னேன் உனக்கும் துர்காவுக்கும் இன்னிக்கு முதல் இரவு என்று சொன்னேனே என்றான் விக்கி.
டேய் எனக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்லை இப்போ எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம் என்று கூறியவன் நான் இப்பவே போய் அம்மா கிட்ட பேசுறேன் என்று சென்றவனை பிடித்து நிறுத்திய கதிர் அண்ணா இது எல்லாம் அம்மா அப்பா திருப்திக்காக செய்றது நீ போய் வேண்டாம்னு சொல்லி அம்மாவை சங்கட படுத்தாத ப்ளீஸ் என்றான் கதிர், இதை கேட்ட பின் ஆதியால் எதுவும் செய்ய முடியவில்லை.
சிறிது நேரத்தில் ஆதியை ரெடியா செய்துவிட்டு அவனிடம் ஆதி நீ உன்னோட கோபம் எல்லாம் துர்கா கிட்ட காட்டி அவளை வந்தா முதல் நாளே சங்கட
பட வைத்துவிடாதே நான் சொன்னது போல முதலில் அவள் என்ன நினைக்கிறாள் என்று எதுவும் தெரியாமல் அவளிடம் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லி விடாதே சரியா என்று கூறி அவனை அழைத்துக்கொண்டு போய் அவன் அறையில் விட்டான்.
உள்ளே வந்தவன் கதவை சாற்றி விட்டு திரும்பி பார்க்க அங்கே துர்கா கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்து இருந்தால்.ஆதி வருவதை பார்த்தவள் அவசரமாக எழுந்து நின்றவள் கைகளை பிசைந்து கொண்டு நின்றாள்.
உள்ளே வர தயக்கப்பட்டுக்கொண்டே வந்த ஆதி சென்று கட்டிலின் மறுபுறம் அமர்ந்தவன் து…துர்கா… நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றான்.
நானும் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் சார் என்றாள் துர்கா. என்ன பேசணும் சொல்லு என்று கேட்டான் ஆதி நீங்க சொல்லுங்க சார் பரவாயில்லை என்றாள். இல்லை பரவாயில்லை நீ சொல்லு என்று அவளையே பார்க்க அவனை பார்த்து அமர்ந்தவள் இப்படி சட்டுனு கல்யாணம் நம்ம ரெண்டு பேருக்கும் நடக்கும் என்று நான் நினைக்கல நீங்களும் நினைச்சிருக்க மாட்டீங்க சார்.
அது மட்டுமில்லாமல் உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தில் நீங்கள் எப்போதும் திரும்பி கூட பார்க்க மாட்டிர்கள் இந்த திருமணமும் அப்படித்தான் உங்களுக்கு என்று எனக்கு நன்றாகவே தெரியும். உங்களுடைய தகுதிக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்பது எனக்கு நன்றாகே தெரியும் நாம் இருவரும் இந்த ரூமிற்குள் இப்போது போலவே எப்போதும் இருக்கலாமா சார் வெளியே செல்லும்போது அத்தைக்காக என்னுடன் என்னை பிடித்தது போல உங்களால நடந்து கொள்ள முடியுமா சார் என்றாள் பாவமாக.
துர்கா இப்படி சொல்வால் என்று ஆதி நினைக்கவில்லை நான் கூற நினைத்ததையே அவளும் கூற சரி என்று தலையை ஆட்டினான்.நாம எப்பவும் போல ஃபிரெண்ட்ஸ் ஆவே இருக்கணும்னு நான் எதிர் பாக்கிறேன் என்றாள் துர்கா.
சரி துர்கா இதில் எந்த மாற்றமும் இருக்காது என்றான் ஆதி. அப்பறோம் இன்னோரு வேண்டுகோள் என்றாள் துர்கா. ஹேய் என்ன இது வேண்டுகோள் அது இது என்று சொல்லிட்டு என்ன கேட்கணுமோ கேளு சரியா என்றான்.
நாளையில் இருந்து நான் எப்போதும் போல் ஆஃபிஸிற்கு உங்களுடைய பர்சனல் அசிஸ்டன்ட் ஆகவே வரலாமா என்றாள். அவள் கூறியதை கேட்டு யோசித்தவன் கண்டிப்பா வரணுமா எனக்கு மனைவி ஆகிவிட்ட பிறகு என்றான்.
அவன் அவ்வாறு கூறியதும் ஒரு நிமிடம் அவன் தான் அவ்வாறு கூறினானா என்று அவனையே பார்க்க. உனக்கும் எனக்கும் திருமணம் ஆனது நம் ஆபீஸ் முழுக்க தெரியும் அப்படி இருக்க நீ வேளைக்கு வந்தே ஆக வேண்டிய அவசியம் எதுவும் இருக்கிறதா என்று தான் கேட்கிறேன் என்றான்.
என் வீட்டில் எனக்கு சில கடமைகள் இருக்கு அதை எல்லாம் முடிக்க எனக்கு கொஞ்ச காலம் தேவைப்படும், அதுவுமில்லாமல் என்று ஏதோ சொல்ல வந்தவள் அமைதியாகிவிட சொல்லு துர்கா என்றான்.
நம்முடைய கல்யாணத்தில் உங்களுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என்று தெரியும். நாளைக்கே உங்களுக்கு பிடித்த ஒரு பெண் ஏதும் வந்துவிட்டால்.என்னை உங்களை விட்டு விலகிக்கொள்ள நீங்கள் கேட்டாள், அதன் பின் என் நிலை எனக்கு என்று ஒரு பிடிப்பு வேண்டாமா சார் அதுவும் ஒரு காரணம் நான் என் வேலையை திருமணத்திற்கு பிறகு தொடர என்றாள்.
தான் சில விஷயங்கள் துர்காவிடம் கூற நினைத்ததில் பெரும்பாலானவை துர்காவே சொல்லிவிட்டால்.ஆனால் அவளை நான் வேண்டாம் என்று சொல்லிவிடுவேன் என்ற துர்கா கூறிய வார்த்தையை கேட்டு அவனுக்கு ஏனோ இதயம் வலித்தது.
துர்கா கூறியதை எல்லாம் கேட்டவன் சரி என்றான் சொல்லிவிட்டு எழுந்து படுக்க போக சார்…. என்று துர்கா தயக்கத்தோடு திரும்பவும் அழைக்க சொல்லு துர்கா இன்னும் எதுவும் சொல்லனுமா என்று கேட்க இல்லை சார் என்று தலையை ஆட்டினால். அப்பறோம் ஏன் கூப்பிட என்றான் இல்ல…. நீங்க ஏதோ என்கிட்ட பேசணும்னு சொன்னிங்க… அதான்…. என்று இழுத்தால்.
ஓ …. அதுவா… நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நீ சொல்லிட்ட அதான் நான் எதுவும் பேசாமல் இருந்துட்டேன் என்றான் ஆதி. இனி எதுவுமில்லையே என்னிடம் சொல்வதற்கு என்று கேட்டான் அவள் இல்லை என்று தலையை ஆட்டியதும் சரி தூங்கலாமா என்றான்.
ம்ம்…. என்று தலையை ஆட்டிவிட்டு பெட்டில் இருந்த ஒரு தலையணையையும் பெட்ஷீட் ஒன்றையும் எடுத்துக்கொண்டு செல்ல போனவளை பார்த்து எங்க போற துர்கா என்று கேட்டான் ஆதி. அந்த சோபாவில் படுக்க போறேன் சார் என்றால்.
ஏன் அங்க போய் படுக்கிற இங்கயே படுக்க வேண்டியதுதானே என்றான். அவன் அவ்வாறு கூறியதும் மனதிற்குள் ஐ….. நான் நினைச்சது நடக்குது என்று சிரித்துக்கொண்டவள் வெளியே எதுவும் தெரியாதவள் போல இங்கயா….. என்றாள் குழந்தை போல. ஆமா இங்க தான் ஏன் என்று கேட்டான். இல்லை இது நீங்க தூங்குற பெட் அதான்…..என்று இழுக்க
இங்க பாரு துர்கா தெரிஞ்சோ தெரியாமலோ நாம இப்போ கணவன் மனைவி ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் இம்போர்ட்டன்ஸ் கொடுத்துக்கணும் சரியா நீ இங்கயே வந்து படு என்று பெட்டை கைகாட்டின்னான்.
சார் அது வந்து…. என்று அவள் இழுக்க ஏன் நீ இங்க வந்து படுக்க இவ்ளோ யோசிக்கிற நான் என்ன உன்னை எதுவும் பண்ணிவிடுவேனா என்று கோபமாக கேட்க அவன் கோபத்தை பார்த்து பயந்தவள் இல்ல சார் நான் இங்கயே படுத்துக்கிறேன் என்று வேகமாக தன் கையில் இருந்த தலையனையை பெட்டில் போட்டுவிட்டு மேலே ஏறி போர்வையை போர்த்திக்கொண்டு கப் சிப் என்று படுத்துவிட்டால்.
அவள் அவ்வாறு பயந்து படுப்பதை பார்த்து ஆதிக்கு சிரிப்பு வந்துவிட்டது.அவளை அந்த பக்கம் படுத்திருக்க ஆதிக்கும் லேசாக புன்னகைத்தவன் பெட்டில் படுத்து கண்களை மூடி கொஞ்ச நேரத்தில் உறங்கிப்போனான்.
அவன் நன்றாக உறங்கி விட்டான் என்று உறுதி படுத்திய துர்கா மெல்ல எழுந்து ஆதியை பார்க்க அந்த மங்கிய விளக்கொளியில் அவன் அவன் முகம் அழகாக தெரிய அவன் புறம் வந்து அருகில் படுத்துக்கொண்டு ஒரு கையில் தான் தலைக்கு முட்டுக்கொடுத்து படுத்துக்கொண்டு அவன் தூங்குவதை பார்த்து கொண்டு மெல்ல இத்தனை வருசமா நான் பக்கத்துல இருந்திருக்கேன் ஆனா இவ்ளோ பக்கத்துல நினைச்சே பாக்கலை என்று கூற அவள் மூச்சுகாற்று ஆதியின் முகத்தில் லேசாக பட சட்டென கண் திறந்து ஆதி பார்க்க அவன் கண் திறக்கிறான் என்று தெரிந்ததும் சட்டென பெட்டில் தூங்குவது போல கண் மூடி படுத்துக் கொண்டால்.
தன் மீது விழுந்த காற்றின் வாசம் அவனை ஏதோ செய்ய என்ன இது இதுவரை நான் உணராத ஒரு வாசம் என்று யோசித்தவன் துர்காவை பார்க்க அவள் நன்கு தூங்கிக் கொண்டிருந்தால் இல்லை தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்தால்.
இவளிடமா இந்த வாசனை வருகிறது என்று அவள் முகத்திற்கு அருகில் தன் முகத்தை கொண்டு வர அவளின் மூச்சுகாற்று அவன் முகத்தில் பட ஆதிக்கு சொல்ல முடியாத ஒரு உணர்வு அவன் உடலில் ஏற்பட்டது. தன்னிலை இழந்தது போல ஒரு உணர்வு அவள் மூச்சு காற்று அவன் மேல பட பட அதன் உஸ்னம் அவனை ஏதோ செய்ய இங்கே துர்காவின் நிலை இன்னும் மோசமாக இருந்தது.அவன் இவ்வளவு அருகில் இருப்பதை அவளால் நம்ப முடியாமலும் அவன் அருகாமை அவளை ஏதோ செய்ய இதற்கு மேல் தாங்காது என்று நினைத்து கண் விழிக்க அவள் கண் விழிப்பதை எதிர் பாராமல் ஆதி திட்டுகிட்டு எழ போக எழ முடியாமல் தடுமாறி துர்காவின் மேலே விழ அவன் உதடும் அவள் உதடும் ஒன்றை ஒன்று தொட்டு ஒட்டிக்கொண்டது…
