Home Uncategorizedஎன்னை கொண்டாட பிறந்தவனே 11

என்னை கொண்டாட பிறந்தவனே 11

by Layas Tamil Novel
346 views

EPISODE 11 

“என்ன தாமரை தாமரை அப்படியே நிக்குற.. உன் புருஷன் ஆபீஸ்க்கு லேட்டா ஆச்சுன்னு சொல்றானில்ல நீ அவனுக்கு பிடிக்கும்னு பாத்து பாத்து செய்துவெச்சிருக்க போய் அவனை உக்கார வெச்சு பரிமாறு ” என்று அதிதி தாமரையை அழைக்க…

“அப்பாடா அத்தை ஏதும் கேட்டுக்கல ” என்று பெருமூச்சுவிட்டவள் வேகமாக வீட்டிற்குள் நுழைந்த விஜய்யை பார்த்து “விஜய் மாமா வாங்க நீங்களும் வந்து சாப்பிடுங்க. உங்களுக்கு பிடிச்சதெல்லாம் செய்து வெச்சிருக்கேன் ” என்று அவனை சாப்பிட அழைத்தாள் .

அவள் பேசியதை கேட்டு உள்ளே வந்து கொண்டிருந்த விஜய் மாடியில் இருந்து இறங்கி வந்த  வம்சியை பார்த்தான் . வம்சியும் விஜய்யை பார்த்துக்கொண்டு இறங்கியவன் தாமரை பேசியதை கண்டுகொள்ளாதவன் போல அவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு நடந்துவந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

“விஜய் வா … நீயும் வந்து சாப்பிடு ” என்று அவனை அழைத்தாள் அதிதி.

வம்சியின் முன்பு உரிமையாக அவனை சாப்பிட அழைத்த தாமரையை என்ன சொலவ்து என்று தெரியாமல் விழித்தவன் . அவள் பேசியதை கேட்டு வம்சி தாமரையை தவறாக எதுவும் நினைத்துவிடுவானோ என்று சற்று கலக்கமாகவும் இருந்தது விஜய்க்கு.

‘விஜய் என்ன டா … அங்கயே நின்னுட்டு இருக்க… வா டா வந்து சாப்பிடு ” என்று அழைக்க…

“அம்மா எனக்கு வேண்டாம் . நான் வெளியவே சாப்பிட்டு வந்துட்டேன் ” என்றவன் திரும்பி தன் அறைக்கு செல்லப் போக..

“விஜய் வா வந்து கொஞ்சமா சாப்பிடு, உனக்காக  தாமரை ஆசை ஆசையா சமைச்சு வெச்சிருக்கா ” என்று வம்சி அழைக்க…

அவனை திரும்பி பார்த்தான் விஜய் . வம்சியும் விஜய்யை பார்த்தவன் திரும்பி தாமரையை பார்த்தான். அவன் கண்கள் சென்றிருந்த திசையை திரும்பி பார்த்த விஜய் தாமரை விஜய்க்காக ஆசையாசையாக செய்ததை அவன் மறுக்கவும் முகம் வாடிப்போய் கண்களில் இப்போ அப்போ என்று விழக்காத்திருந்த கண்ணீரையும் பார்த்தவன் அடுத்து வேகமாக வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

அவன் வந்து அமர்ந்த அடுத்த நொடி கண்ணீரை துடைத்தபடி வந்தவள் தட்டை எடுத்து வைத்து விஜய்க்கு பரிமாறத்துவங்கினாள் . விஜய்க்காக பார்த்து பார்த்தது செய்த பதார்த்தங்களை அவன் தட்டில் அடுக்கிக்கொண்டு இருந்தாள் தாமரை.

அவள் விஜய் சாப்பாடு வேண்டாம் என்று சொன்னதும் முகம் மாறியதும் . விஜய் சாப்பிட வந்ததும் அவள் முகம் ப்ரகாசமாவதையும் வம்சி கவனித்தட்டுவிட்டு தான் விஜய்யை சாப்பிட அழைத்தான்.

“அட என்ன தாமரை உன் புருஷனுக்காக பார்த்து பார்த்து செய்ததை எல்லாம் விஜய்க்கு வெச்சிட்டு இருக்க…  கொஞ்சம் அவனையும் கவனி தாமரை . சின்னதுல இருந்து விஜய் மாமா… விஜய் மாமான்னு அவன் மேல பாசமா அவனையே சுத்திகிட்டு இருப்ப… இப்பவும் அப்படியே சின்ன பிள்ளை மாதிரி இருந்தா சரியா வருமா . கொஞ்சம் வம்சியையும் கவனி தாமரை ” என்று கிண்டல் செய்தாள் அதிதி.

“போதும் வம்சிக்கு சாப்பாடு வை ” என்று அதிதி சொன்னபிறகு தான் விஜய் கவனித்தான் . தன் தட்டு முழுவதும் வைத்திருந்த உணவுகளில் ஒன்று கூர் அவன் தட்டில் இல்லை என்று .

அதிதி சொன்னதை காதிலேயே வாங்கிக்கொள்ளாத தாமரை விஜய் சொன்னதும் வம்சி தட்டில் வேண்டா வெறுப்பாக உணவு வைத்தாள் .

“ஆமா வம்சி வெளியே போயிருக்கான் அவன் வர நேரம் தான்னு சொன்னியே ஆனா என் புள்ள ரூமில் இருந்துதானே கீழே வந்தான் . நீ ஏன் வம்சி வெளியே இருந்து வராதா சொன்னே…” என்று அப்போது விட்ட கேள்வியை  இப்பொது தொடர்ந்தாள் .

அதிதி மீண்டும் விட்ட இடத்தில இருந்து தொடர.. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தாமரை மலங்க மலங்க விழித்தாள்.

“அம்மா சீக்கிரமா ரெடி ஆகிடு நாம வெளியே போகணும்னு நான் தாமரைக்கிட்டே சொல்லிட்டு ஒரு சின்ன வேலையா வெளியே போயிருந்தேன். திரும்பி வர அப்போ தாமரை கிச்சன்ல இருந்தா. நான் வந்ததை கவனிச்சு இருக்க மாட்டா அதான் நான் இன்னும் வரலையினு நினைத்து உங்க கிட்டே அபப்டி சொல்லி இருக்கா ” என்றான்.

“அப்டியா சரி வம்சி ” என்ற அதிதி “என்ன தாமரை அப்படியே நிக்குதே போ பொய் வம்சிக்கு வெச்சிட்டு நீயும் சாப்பிடு ” என்றார் .

“இல்லை அத்தை நான் மாமா சாப்பிட்டதும் அப்பறோம் சாப்பிடுகிறேன் ” என்று விஜய்யை நினைத்து சொல்ல…

ஆனால் வம்சி சாப்பிட்ட பிறகு தாங்கள் சாப்பிட்டுக் கொள்வதாக சொல்கிறாள் என்று அதித்தி தவறாக புரிந்து  கொண்டார் .

“பரவாயில்லையே புருஷன் சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் பொண்டாட்டி சாப்பிடணும்னு அந்த காலத்து நடைமுறைகளை எல்லாம் இப்போ நீ  செய்யறது பார்க்கிறப்ப சந்தோஷமா இருக்கு”என்று அது தேடி சொல்ல …

அதை கண்டும் காணாதவள் போல நான் அதிர்ச்சியை தாண்டி  வம்சியிடம் வந்தது

அவனுக்கு விருப்பமில்லாமல் பரிமாறும் உணவை பார்க்க பார்க்க கோபமாக வந்தது. என்ன தான் அவன் தாத்தாவின் வற்புறுத்தலில் தாமரையை திருமணம் செய்திருக்கிறான் என்றாலும். தாமரையை திருமணம் செய்து கொண்டவன் மனதில் அவள் மீது மனைவி என்று உரிமை அவனையும் அறியாமல் தோன்ற ஆரம்பித்திருந்தது .

அதன் விளைவு தான் இந்த வெறுப்பு அவனுக்கு தோன்றி இருந்தது. அவள் விஜய் மீது காட்டும் அன்பும் , அக்கறையும் அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவசர அவசரமாக வம்சி சாப்பிட்டு முடித்து எழுந்து கொள்ள… அதே நேரம் விஜய்யும் சாப்பிட எழுந்தான்.

விஜய்க்கு பரிமாறிக்கொண்டு இருந்தவள் அவன் சரியாக சாப்பிடாமல் எழுந்து கொண்டதை பார்த்ததும் “விஜய் மாமா உக்காருங்க.. ஏன் சாப்பிடாம பாதியில் எழுந்துட்டீங்க…” என்று அவன் கை பிடித்து அமர வைக்க போக…

அதை பார்த்த வம்சிக்கு என்னவோ போல இருந்தது தாமரை வார்த்தைக்கு வார்த்தை விஜய் மாமா விஜய் மாமா என்று உருகி உருகி பேசுவதும் அவனிடம் உரிமை எடுத்துக்கொள்வதும் எரிச்சலை தர… “தாமரை கிளம்பிவா நாம கொஞ்சம் வெளியே போக வேண்டி இருக்கு ” என்றான்.

“அஞ்சு நிமிஷம் பொறுங்க விஜய் மாமா சாப்பிட்டுட்டு இருக்காரு அவரு சாப்பிட்டதும் போகலாம்” என்றால் தாமரை

“விஜய்க்கு தானே  தாமரை நான் அவனுக்கு சாப்பாடு பரிமாறிக்கிறேன் .அதான் வம்சி குற்றாலம் நீ கெளம்பு எங்கேயோ அவசரமா போகணும்னு வேற சொல்றான் நீயும் கொஞ்சம் சாப்பிட்டு கிளம்பு என்று அவர் கையில் இருந்த பாத்திரத்தை அதுக்கு வாங்கிக் கொண்டு தாமரையை சாப்பிட அவளை அமரவைத்து உணவு பரிமாறினால் .

“இல்ல அத்தை எனக்கு பசிக்கல வம்சி மாமா வேற அவசரப்படுத்தறாங்க நான் போயிட்டு வரேன்” என்றாள்  .

“அதெல்லாம் எந்த அவசரமும் இல்லை அவன் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவான்” என்று   அதித்தி அவளை எழுந்திருக்க விடாமல் உட்கார வைத்த அதித்தி வழிச்சியுடன் ” டேய் ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்nu சாப்பிட்டு வருவா” என்று அவனை அமர வைத்தார் .

அதற்கு மேலும் தாமரையை அவசரப்படுத்த விரும்பாத  வம்சி அவள் சாப்பிட்டு வரும்வரை பொறுமையாக இருந்து தன்னோடு அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான் .

அவன் பின்னால் சென்ற தாமரை விஜய்யை திரும்பி திரும்பி பார்த்தபடி அங்கிருந்து செல்ல மனமே இல்லாமல் வம்சியோடு வக்கீலை சந்தித்து டைவர்ஸ் அப்ளை பண்ண சென்றால்

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured