EPISODE 8
ஆதி தன் அம்மா விசாலாட்சி, பத்து நாட்களுக்கு ஆபீஸ் போக வேண்டாம் என்று சொன்னதும், வேறு வழியில்லாமல் “சரி” என்று சம்மதம் சொல்லிவிட்டு சாப்பிடாமல் மேலிருந்த ரூமுக்கு செல்லப்போக, “டேய், எங்கேடா போற?” என்று விசாலாட்சி ஆதியைக் கூப்பிட்டார்.
“அம்மா, என்னை ஆபீஸ் போக வேணாம்னு சொல்லிட்டீங்க. மேல என் ரூமுக்குதானே போறேன். அதுக்கு ஏன் இவ்வளவு பதட்டமா கேக்குறீங்க?” என்றான் கடுப்பாக.
“இங்கேயே ஹால்ல கொஞ்ச நேரம் உட்காருடா. நானும் துர்காவும் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறோம். அப்புறம் எல்லாரும் சேர்ந்து வெளியே கிளம்பணும். நீ மேல உன் ரூமுக்கு போய்ட்டா, அப்புறம் உன்னை வரவைக்கிறது பெரும்பாடு ஆகிரும்” என்றவர், “துர்கா வாம்மா, நாம சாப்பிடலாம்” என்று இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
ஆதி அருகில் இருந்த கதிரிடம், “எங்கே போறோம்?” என்று கேட்க, “தெரியவில்லை” என்று தோளைக் குலுக்கினான். விக்கியும் அதே பதிலைச் சொன்னான்.
அவர்கள் இருவரும் சாப்பிட்டு வரும்வரை அனைவரும் காத்திருக்க, சாப்பிட்டு முடித்து விசாலாட்சி, “சரி, வாங்க எல்லாரும் போலாம்” என்றார். ஆதி உடனே, “அம்மா, அப்போ இருந்து வெளிய போகணும்னு சொல்றீங்க, எங்கேன்னு சொல்ல மாட்டேங்குறீங்க. எங்கே போறோம் நாம?” என்றான்.
“அதை அங்கே போய் தெரிஞ்சுக்க. இப்போ பேசாம என்கூட கிளம்பி வாங்க” என்றவர், “விக்கி, நீ, கதிர், ஆதி, துர்கா எல்லாரும் ஒரு கார்ல வாங்க. நான், அப்பா, துர்காவோட அம்மா, அப்பா, தங்கை எல்லாம் ஒரு கார்ல வறோம். எங்க கூடவே நீங்க பின்னாடி வாங்க” என்றார். அப்போது கீர்த்திகா, “அத்தை, நான் அக்கா கூட அந்த கார்ல போறேனே?” என்றாள்.
அவள் கூறியதும் துர்காவின் அம்மா, “ஏய், சும்மா வரமாட்டியா நீ…. எங்கே போனாலும் ஏதாவது பண்ணிட்டே இருக்கணுமா உனக்கு?” என்றவர், “பேசாமல் எங்க கூட வா…” என்று அவளை அதட்டினார்.
“சம்மந்தி, விடுங்க. அவள் சின்னப் பொண்ணு. அவளை ஏன் அதட்டுறீங்க? போடி… நீ உன் அக்கா கூடவே அந்த கார்ல வா” என்று கூறி, அவளை அந்தக் காரில் அனுப்பி வைத்துவிட்டு, மற்றவர்கள் ஒரு காரில் ஏறி கிளம்பினர்.
காரின் முன் இருக்கையில் டிரைவர் காரை ஓட்ட, அவர் அருகில் இருந்த சீட்டில் ஆதியும் துர்காவும் அமர்ந்திருந்தனர். அதன் பின் இருந்த சீட்டில் கதிரும் கீர்த்திகாவும் இருந்தனர்.
இங்கு கதிருக்கு உள்ளுக்குள் அவ்வளவு சந்தோஷம். தான் அருகில் கீர்த்திகா அமர்ந்து வருவது. ஆனால் அவள் வந்ததிலிருந்து அவன் இருந்த திசைகூட திரும்பவில்லை. வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டோ இல்லை என்றால் கையில் இருக்கும் மொபைலை நோண்டிக்கொண்டோ வந்தாள்.
வெகுநேரம் கார் அமைதியாகவே செல்ல, பின்னால் இருந்த கீர்த்தி துர்காவின் தோளை சுரண்டினாள். அவளை திரும்பிப் பார்த்த துர்கா, “என்னடி….” என்றாள். “அக்கா, ரொம்ப போர் அடிக்குது. டிரைவர் கிட்ட சொல்லி பாட்டுப் போட சொல்லு அக்கா” என்றாள்.
“ஏய், கொஞ்ச நேரம் சும்மா இருடி. ஆதிக்கு அதெல்லாம் பிடிக்காது” என்று அவளை அதட்ட, இருவரும் ஏதோ ரகசியம் பேசிக்கொள்வதுபோல இருக்க, ஆதி அதைக் கண்டும் காணாமலும் அமர்ந்திருந்தான்.
“இவர்கள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள்” என்று கதிர், “துர்கு, என்ன பேசிக்கிறீங்க நீயும் உன் அருமை தங்கச்சியும்?” என்று அவன் கீர்த்திகாவை கிண்டல் செய்ய, அவனை முறைத்த கீர்த்திகா, “ம்ம்ம்… இங்கே ஒரே போரிங்கா… இருக்கு. டிரைவர் கிட்ட சொல்லி பாட்டுப் போட சொன்னேன். அதுக்கு என் அக்கா உங்க அண்ணாவுக்கு பாட்டெல்லாம் கேட்கப் பிடிக்காது, பேசாம இருன்னு சொல்லிட்டா.”
“என்ன எல்லாரும் இப்படி இருக்கீங்க? ஒரு ஜாலியா இல்லாம, உருன்னு எப்போது பார்த்தாலும் முகத்தை வெச்சுட்டு… நான் பேசாம அந்தக் கார்லயே போயிருக்கலாம் போல இருக்கு. அங்கே பெரியவங்க இருக்காங்க, போர் அடிக்கும்னு இங்கே வந்தா, இங்கே அதுக்கு மேல இருக்கே.”
“ஏன் துர்கா? நீ டெய்லி பாட்டு கேட்காமல் எழுந்திருக்க மாட்டே, தூங்க மாட்டே. நீ எப்படி மாமா கூட குடும்பம் நடத்தப் போற? ஒரு பாட்டுகூட கேட்கப் பிடிக்காதுன்னா, அவர் எப்படி இன்ட்ரஸ்டிங்கா இருப்பாரு? ரொம்ப போர் அடிக்குமே இப்படி இருந்தா….” என்று சொல்ல, அவள் கூறியதை அனைத்தும் கேட்டுக்கொண்டிருந்த ஆதி திரும்பி கீர்த்திகாவைப் பார்க்க, அவன் மாஸ்க் அணிந்திருந்த முகத்தில் அவன் விழிகள் மட்டும் அவளை ஆழமாகப் பார்க்க, அதைப்பார்த்த கீர்த்திகா எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டாள்.
‘ஆத்தி…. என்ன மாமா இப்படி கண்ணாலேயே மிரட்டுறாரு? இனி எதுவும் பேசாம கம்முனு வந்துரணும்’ என்று மனதிற்குள் பேசிக்கொண்டவள், அமைதியாக இருந்துவிட்டாள்.
இதை எல்லாம் கவனித்த கதிர், கீர்த்திகாவின் அருகில் வந்து அவளுக்கு மட்டும் கேட்கும்படி, “இப்போ புரியுதா? ஏன் எல்லாரும் சைலன்டா வரோம்னு? உனக்கு என் அண்ணனைப் பற்றி எதுவும் தெரியாது. பேசாம கப் சுப்னு வரணும், சரியா?” என்றான்.
அவன் இப்படி கூறியதைக் கேட்டு அவனை முறைத்த கீர்த்திகா, “நீ என்னவோ ஆபீஸ்ல புலி மாதிரி வேலை செய்வேன்னு என் அக்கா அப்பப்போ வந்து என்கிட்ட உன்னைப்பத்தி பெருமையா சொல்லுவா. ஆனா, ஒரு பாட்டு போடறதுக்கு உங்க அண்ணா சொன்னால்தான் போடணும். அதுக்குக்கூட உன்னால செய்ய முடியலை. உன்னைப்போய் என் அக்கா ஓவரா… பில்டப் எல்லாம் கொடுத்துட்டாளே! கடைசியில உன் அண்ணாதான் டேர்ரர் போல. நீ டம்மி பீஸா….?” என்று அவனை வார, ‘தன்னை “அவன், இவன்”னு சொன்னது பத்தலைன்னு “டம்மி பீஸ்”னு வேற சொல்றா. இவளுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்?’ என்று அவளை முறைக்க, தன்னை முறைத்த கதிரைப் பார்த்து, “என்ன முறைக்குற? ரோஷம் வந்திருச்சோ…? அவ்வளவு ரோஷம் உள்ளவனா… இருந்தா, எங்கே? இப்போ இந்தக் கார்ல பாட்டுப் போட சொல்லு பார்ப்போம்” என்று கீர்த்திகா அவனை உசுப்பேற்றினாள்.
“நான் டம்மி பீஸா…டி…? நான் உனக்கு…” என்றான். “ரொம்ப வாய் பேசாத, சரியா? அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது, பார்த்துக்கோ” என்று அவளை முறைக்க, “ஏய், என்னை ‘டி…’ போட்டு பேசுற வேலை எல்லாம் வெச்சுக்காத, சரியா?” என்று அவனை முறைக்க, “நீ மட்டும் என்னை ‘அவன், இவன்’னு மரியாதை இல்லாம பேசுவ. நான் உனக்கு மரியாதை தர? நீ என்ன இந்த ஊரு மகாராணியா?” என்றான்.
“ஆமாடா… நான் மகாராணிதான். ஏன்? நீ இந்த ஊரு மகாராஜாவோ…? ரொம்பத்தான் பேசுற. ஒரு பாட்டுப் போட முடியலை உன்னால. பேச வந்துட்டான், போடா….” என்று கதிரை முறைக்க, “ஏய், ‘டா…’ போட்டு பேசுற வேலை எல்லாம் வெச்சுக்காத” என்றான். “அப்படித்தான்டா பேசுவேன். என்ன பண்ணுவ?” என்றாள் கீர்த்திகா. “என்ன பண்ணுவேனா…? இதுவே காரா மட்டும் இல்லாம இருந்துச்சு… உன்னை…. உன்னை….” என்று அதற்கு மேல் எதுவும் பேசாமல் இருக்க, “சொல்லுடா… சொல்லு…. நான் அப்படிதான் உன்னை ‘டா…’ போடுவேன். என்னை… என்னை என்ன பண்ணுவ நீ? போடா, டம்மி பீஸ்” என்று அவள் அவனை மேலும் வெறுப்பேற்ற, “ஷ்…. என்ன அங்கே ரெண்டு பேரும் ரகசியம் பேசிட்டு வரீங்க? அமைதியா இருக்க முடியாதா உங்களால?” என்று ஆதி அதட்ட, இருவரும் அமைதியாகினர்.
கீர்த்திகாவிடம், “இப்போ நான் பாட்டு போட்டுட்டா, நீ என்னடி… செய்வ?” என்றான். “நீ முதல்ல பாட்டை போடு பார்க்கலாம்” என்றாள். “சரி, நான் இப்போ இந்தக் கார்ல பாட்டு போட்டுட்டா, நீ நான் என்ன சொன்னாலும் செய்யணும், சரியா?” என்றான். இவளும் அவனுடன் பேசிய கடுப்பில் “சரி” என்று சொல்லிவிட்டாள்.
‘வா…டி.. வா…. நல்லா வந்து என்கிட்ட வசமா மாட்டிக்கிட்ட’ என்று மனதிற்குள் நினைத்தவன், அவளைப் பார்க்க, கீர்த்திகாவும் திரும்பி கதிரைப் பார்க்க, அவள் முன் தான் வலது கையை உயர்த்தியவன், மெதுவாக தன் ஒவ்வொரு விரலாக “ஒன்…. டூ……” என்று எண்ணிக்கொண்டு வர, ‘இவனுக்கு என்ன ஆச்சு? லூசா இவன்?’ என்று யோசித்தவள் அவனையே பார்க்க, கதிர் “த்ரீ….” என்று மூன்றாவது விரலை உயர்த்தியதும் காரில் பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது.
இதை எதிர்பார்க்காத கீர்த்திகா அவனைப் பார்த்து, ‘இவ்வளவு நேரம் நம்மகிட்ட சண்டை போட்டுட்டுதானே இருந்தான்? அப்புறம் எப்படி பாட்டு போட்டான்?’ என்று அவனை அதிர்ச்சியாகப் பார்க்க…… தன்னை வியந்து பார்க்கும் கீர்த்திகாவைப் பார்த்து சாய்ந்து அமர்ந்தவன், காலரைத் தூக்கிவிட்டு, அவளைப் பார்த்து புருவம் உயர்த்தி “எப்படி….” என்று கேட்டான்.
‘ஐயோ…. நான் வேற இவன் கேட்டதுக்கு ‘சரி’னு சொல்லி தலையை ஆட்டி வெச்சிட்டேனே! என்ன கேட்கப் போறானோ?’ என்று மனதிற்குள் நினைத்து பயந்தாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவனைப் பார்த்து உதட்டைச் சுழித்து ‘வெடுக்’கென வேறுபுறம் திரும்பிக்கொண்டாள்.
அவளின் இந்த செயலைப்பார்த்து உள்ளுக்குள் ரசித்துச் சிரித்தாலும், வெளியே அதே மிடுக்குடன் அமர்ந்திருந்தான் கதிர்.
என்ன ரீடேர்ஸ், இவன் எப்படி கீர்த்திகா கூட சண்டை போட்டுட்டே பாட்டு போட்டானு பார்த்தீங்களா? கீர்த்திகா பாட்டு கேட்டதுமே, தன் மொபைலில் இருந்து காரின் முன்னால் அமர்ந்திருந்த விக்கிக்கு “ப்ரோ…..” என்று மெசேஜ் அனுப்பினான். காரின் பின் இருந்து ‘எதற்காக எனக்கு மெசேஜ் அனுப்புகிறான்?’ என்று திரும்பி கதிரைப் பார்க்க, அவன் தான் மொபைலை ஆட்டி அதைப் பார்க்கச் சொன்னான். “சொல்லுடா….” என்று ரிப்ளை செய்தான் விக்கி.
“ப்ரோ…. ஒரு நல்ல ரொமான்டிக் சாங் போடு ப்ரோ” என்றான் கதிர். இதைப் படித்த விக்கி, “என்ன விளையாடுறியா நீ…? உன் அண்ணனைப் பத்தி யோசிச்சியா? அவன் என்னைக் கொன்னே போட்டுருவான்டா. என்னால முடியாது” என்றான் விக்கி.
“ப்ரோ…. ப்ளீஸ்” என்று கெஞ்சி மெசேஜ் அனுப்ப, அவனைத் திரும்பிப் பார்த்த விக்கி, கதிர் தன் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு விக்கியைப் பார்க்க, “சரி” என்று தலையை ஆட்டிவிட்டு, “என்ன பாட்டு போடறது?” என்று விக்கி கதிருக்கு மெசேஜ் அனுப்ப, தற்போது பிரபலமான ஒரு ரொமான்டிக் பாட்டின் பெயரைச் சொல்லிப் போடச் சொல்லிவிட்டு, “நான் சொல்லும்போது பாட்டு போடு ப்ரோ. ப்ளீஸ். அண்ணனை நான் சமாளிச்சுக்கிறேன்” என்று கூறி விக்கியிடம் கெஞ்சி இருந்தான்.
“ஓகே” என்று தம்ப்ஸ் அப் ஸ்மைலி அனுப்பினான் விக்கி. சரியாக கீர்த்திகாவிடம் வேண்டுமென்றே வம்பிழுத்துவிட்டு, அதன் பிறகு விக்கிக்கு சிக்னல் அனுப்பி இருந்தான் பாட்டு போட சொல்லி.
இப்படி கெஞ்சிதாங்க நம்ம கதிர் பாட்டு போட்டுட்டு கீர்த்திகாவிடம் கெத்து காட்டினான். ஒரு லவ்வை சக்சஸ் செய்யறதுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு பாருங்க ஃபிரெண்ட்ஸ்.
முன்னால் வெங்கடசாலம், விசாலாட்சி சென்ற காரை பின்தொடர்ந்து சென்றவர்கள் கார் ஒரு பெரிய மாளிகை போன்ற வீட்டின் முன் கார் நின்றதும், ஆதி சென்ற காரும் அங்கு நின்றது.
காரை விட்டு அனைவரும் இறங்க, ஆதி துர்காவை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு, வேலைக்காரனிடம் விசாலாட்சி சைகை செய்ய, அந்த வேலைக்காரன் கையில் ஆரத்தி தட்டுடன் வர, அதை வாங்கிய விசாலாட்சி துர்காவின் தாயையும் கீர்த்தியையும் அழைக்க, மூவரும் சேர்ந்து ஆதிக்கும் துர்காவுக்கும் ஆரத்தி சுற்றி, திருஷ்டி கழித்துவிட்டு, அவர்களை உள்ளே வரச்சொல்ல, அவர்கள் இருவரும் ஒன்றும் புரியாமல் உள்ளே செல்ல, “வலது காலை எடுத்துவைத்து ரெண்டு பேரும் உள்ளே போங்க” என்று விசாலாட்சி கூறிவிட்டு, ஆரத்தி தட்டை வேலைக்காரனிடம் கொடுத்துவிட்டு, அவர்களுடன் அந்த வீட்டிற்குள் வந்தவர், “ஆதி, உள்ளே வந்தவன் அந்த மாளிகை போன்ற வீட்டைச் சுற்றி நோட்டம் விட, “என்ன ஆதி அப்படி பாக்குற? இந்த வீடு யாரோடதுன்னு பாக்குறியா? உங்க அப்பா தான் உனக்குக் கல்யாணம் ஆனதும் உனக்குக் கல்யாண பரிசாக இந்த வீட்டை கொடுக்கணும்னு முன்னாடியே ரெடியாக பண்ணி இருந்தாரு. கல்யாணம் முடிஞ்சு நேரா உன்னை இங்கேதான் அழைச்சுட்டு வர்றதா இருந்தது. ஆனா, நேத்து அவள் பண்ணின காலேபரத்துல உனக்கும் துர்காவுக்கும் கல்யாணம் ஆன சந்தோஷத்துல முதல்ல நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன். அதான், இன்னைக்கு நல்ல நாளா இருக்குனு இன்னைக்கே உங்களை இங்கே கூட்டிட்டு வந்துட்டேன்.”
“இனிமேல் நீயும் துர்காவும் இங்கேதான் இருக்கப் போறீங்க” என்று விசாலாட்சி கூற, அவரைப் பார்த்து ஆதி ஏதோ கூற வந்தவன், விசாலாட்சி மிகுந்த சந்தோஷத்துடன் துர்காவின் கையைப் பிடித்து, “அம்மாடி… துர்கா, என்னடா… அத்தை உன்னைக் கல்யாணம் ஆன மறுநாளே தனியா வெச்சுட்டேன்னு யோசிக்கிறியா?” என்றார்.
“இல்லை அம்மா. நீங்க எது செஞ்சாலும் எங்க நல்லதுக்காகத்தான் இருக்கும்னு எனக்குத் தெரியும். நான் எதுவும் நினைக்கலை அம்மா. ‘நாளைக்கே நீங்க நம்ம வீட்டுக்கு வந்திருங்க’னு எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டா, நான் உடனே அங்கே வந்திருவேன். நீங்க வருத்தப்படாதீங்க அம்மா” என்று அவரிடம் ஆறுதல் சொல்ல, அதைக் கேட்டதும் விசாலட்சியின் முகம் மகிழ்ச்சியில் இருந்ததை கவனித்த ஆதி எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டான்.
‘இதுவும் நலத்திற்குத்தான். இப்படி இருந்தால் தான் நானும் துர்காவும் கணவன் மனைவி போல் நடிக்க வேண்டியதில்லை. இல்லை என்றால், அம்மா எதுவும் கண்டுபிடித்துவிட்டால் பிறகு அனைவருக்குமே சிரமம்தான்’ என்று எண்ணிக்கொண்டவன் அமைதியாகிவிட்டான்.
“சரி, வா. நல்ல நேரம் முடியுறதுக்குள்ள பால் காய்ச்சிவிடலாம்” என்று அனைவரும் சமையலறைக்குச் சென்று பால் காய்ச்சிவிட்டு, பூஜைஅறையில் விளக்கேற்றிவிட்டு வந்து, அனைவரும் ஆளுக்கு ஒருபுறம் வீட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர்.
துர்காவையும், ஆதியையும் அழைத்துக்கொண்டு ஆதியின் அப்பா வெங்கடசாலமும், துர்காவின் அப்பாவும் ஒருபுறம் செல்ல, விக்கியிடம் விசாலாட்சி வீட்டில் வேறு எதுவும் வேலைகள் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டிருக்க, அவருடன் துர்காவின் தாயும் இருந்தார்.
இப்போது தனியாக இருப்பது நம்ம கீர்த்திகாவும் கதிரும் தான். கீர்த்திகா ஒவ்வொரு அறையாக சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்க, அவள் பின்னாலேயே அவளைப் பின்தொடர்ந்து சென்ற கதிர், அவள் அங்கே மாடியில் இருந்த ஆதி அறையில் பால்கனியில் இருந்த ஊஞ்சலைப் பார்த்ததும் “ஐ……” என்று வேகமாக அங்கே ஓடியவள், அங்கிருந்த ஊஞ்சலில் ஏறி அமர்ந்தவள், அதை ஆசையாக ஆட்டிவிட்டு சந்தோஷமாக ஊஞ்சல் ஆடினாள் கீர்த்திகா.
அவள் ஆசையாக, சந்தோஷமாக ஊஞ்சல் ஆடுவதை ரசித்த கதிர், ‘ஓஹோ… நம்ம ஆளுக்கு ஊஞ்சல்னா பிடிக்கும் போல இருக்கே’ என்றவன், ‘நோட் பண்ணிக்கோடா கதிர்’ என்று மனதிற்குள் குறித்துக்கொண்டான்.
பின் மெதுவாக அவள் அருகில் சென்றவன், அவள் ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலைப் பிடித்து நிறுத்த, “யார்?” என்று திரும்பிப் பார்த்த கீர்த்திகா, திரும்பிப் பார்க்க, அங்கே இவளைப் பார்த்து வித்தியாசமாக சிரித்த கதிரைப் பார்த்து ஒரு நிமிடம் பயந்துவிட்டாள்.
பின், ‘ச்சே… இவனா? இவனுக்கா நாம பயந்தோம்? கீர்த்து, பயந்திராத. அப்புறம் இவன் நம்மளை என்ன சொல்லி கிண்டல் பண்ணுவான்னு தெரியாது’ என்று மனதிற்குள் தனக்குத்தானே சமாதானம் செய்தவள், ஊஞ்சலிலிருந்து இறங்கி கதிரைத் தாண்டி அவள் பாட்டுக்கு அறையைவிட்டு வெளியே செல்ல, அப்போது தனக்கு எதிரே வந்தவரைப் பார்த்து அதிர்ச்சியாகி அப்படியே உறைந்து நின்றாள் கீர்த்திகா….
