Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 17

உன் ரகசிய ரசிகை நான் 17

by Layas Tamil Novel
869 views

EPISODE 17

ஆதி சங்கவியை எச்சரித்துவிட்டு சென்ற பிறகு ஆபீஸில் இருப்பதற்கு சங்கவிக்கு மனமே வரவில்லை. விருப்பம் கொள்ளாதவள் நேராகக் கிளம்பி தன் வீட்டிற்கு வந்தாள்.

வந்தவுடன் கையிலிருந்த பொருட்களை எல்லாம் இங்கு ஒன்றும் அங்கு ஒன்றுமாக விட்டு சிதறி அடித்தவள், “அம்மா….” என்று அலறினாள். அவளின் அலறல் சத்தம் கேட்டு கிச்சனில் இருந்து சங்கவியின் அம்மா ரமா வேகமாக வெளியே ஓடி வந்து, “ஏய் சங்கவி, என்னடி ஆச்சு? எதற்காக இப்படி கத்துற?” என்று கேட்க.

“எனக்கு தலை வலிக்குது. போய் உடனே எனக்கு ஒரு கப் காபி எடுத்துட்டு வா” என்று சொன்னாள் சங்கவி. “சரிடி, காபி தானே? போட்டு எடுத்துட்டு வரேன். அதுக்கு ஏன் இப்படி கத்துற?” என்று சங்கவியைப் பார்த்து கேட்க, “போ அம்மா… போய் முதல்ல காபி எனக்கு எடுத்துட்டு வா போ!” என்று அவரை விரட்டிவிட்டாள்.

‘இவளுக்கு என்ன ஆச்சு? தேவையில்லாமல் அவங்க அப்பனைப்போலவே தாட் பூட் என்று கத்துறாள். அறிவு கெட்டவள்’ என்று திட்டிக்கொண்டே செல்ல.

அவர் சங்கவியைத் திட்டியது அப்படியே சங்கவியின் காதில் விழ, “அம்மா….” என்று மறுபடியும் கத்த, தன் இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு சங்கவியைப் பார்த்து, “இப்போ எதுக்குடி கத்துற? நான் தான் காபி எடுத்துட்டு வரேன்னு சொல்றேன் இல்ல. சும்மா அம்மா… அம்மா… ன்னு கத்திட்டே இருக்க. கொஞ்ச நேரம் அமைதியா இரு, கொண்டு வரேன்” என்று அவளைத் திட்டி விட்டு உள்ளே செல்ல.

அப்போது அங்கு வந்த சங்கவியின் அப்பா விஜய் “என்னடி… சங்கவியைத் திட்டிக்கிட்டே இருப்பதாய்ப் போல இருக்கே?” என்று தன் மனைவியை அதட்டிக்கொண்டு உள்ளே வந்தார்.

அவர் வந்ததும் சங்கவி அவரைப் பார்த்து “அப்பா, வாங்க அப்பா. வந்துட்டீங்களா? நான் உங்க கிட்ட தான் பேசணும்” என்று கூற, “என்னடா சொல்லு” என்று அவள் அருகில் வந்து அவள் தலையை வருடி விட.

உள்ளே சமையல் அறையில் இருந்து இவர்கள் இருவரையும் பார்த்த சங்கவியின் அம்மா ரமா. “ம்க்கும்…. இந்த ஆளும் வந்துட்டானா? இனி அவ்ளோதான். இவனும் நல்லது செய்ய மாட்டான், தன் பிள்ளைக்கும் நல்லது செய்ய மாட்டான். ரெண்டும் சேர்ந்து இன்னிக்கு எந்த குடும்பத்தை கெடுக்க பிளான் பண்ணப் போகுதுங்களோ…” என்று தனக்குத்தானே பேசிக்கொள்ள. அவர் அருகில் வேலை செய்து கொண்டிருந்த அவர் வீட்டு சமையல்கார பாட்டி, “அடியே ரமா, மெதுவா பேசுடி. உன் வீட்டுக்காரன் காது பாம்பு காது. ஏதாவது கேட்டுற போகுது” என்று சொல்ல, “ஆமா பாட்டி, அவன் காதுல விழுந்தா அவ்ளோதான்” என்றவர் மற்றொரு வேலைக்கார பெண்ணை அழைத்து, அவள் கையில் காபியைக் கொடுத்தவர், “இதை நீயே கொண்டு போய் அந்த ரெண்டு பிசாசுகளுக்கும் கொடுத்திட்டு வா… நான் போனா இதுங்க ரெண்டும் சேர்ந்து என் தலையை உருட்டுங்க…” என்று கூறி அவள் கையில் காபியைக் கொடுத்து அனுப்ப.

இங்கு சங்கவி தன் அப்பா விஜய்யிடம் ஆபீஸில் இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருந்த அனைத்தையும் கூறியவள், இன்று நடந்த காபி மேட்டரையும் கூற.

அவள் அப்பா “நீ எதுக்குமா இப்போ அங்க போய் தேவை இல்லாத வம்பை பேசி விலைக்கு வாங்கிட்டு வந்த? இப்போதான நான் உன்னை அந்த ஆதியின் ஆபீசில் நுழைத்திருக்கிறேன். கொஞ்ச நாள் பொறுமையா இரு. அதன் பிறகு நீ நினைத்ததெல்லாம் கண்டிப்பாக நடக்கும்” என்று அவளுக்கு ஆறுதல் கூற, “ஆமா ஆமா, உங்க பொண்ணுக்கு இன்னும் நல்லாதான் சொல்லி கொடுங்க. அப்போதான் அவ எல்லார் கிட்டயும் போய் இன்னும் சண்டை போட்டுட்டு வருவா. எங்க அவ தான் புத்தி இல்லாம இப்படி நடந்துகிறானா? நீங்களும் அவளுக்கு ஒத்து ஊத்துறீங்களே. இது நல்லா இருக்கா? அவளுக்கு கால காலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சு அவளுக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சி கொடுக்க வேணாமா நீங்க?” என்று கிச்சனில் இருந்து ரமா சத்தமிட.

அதைக் கேட்ட சங்கவி, “அப்பா… அந்த லூசை கொஞ்ச நேரம் பேசாம இருக்க சொல்லுங்க. நான் ஏற்கனவே டென்ஷன்ல இருக்கேன். இது வேற வந்ததிலிருந்து என்னை கடுப்பேத்திட்டே இருக்கு” என்று சொல்ல, அவள் ஹாலில் இருந்து “ஏய் ரமா இங்க வாடி” என்று அழைக்க.

அவர்களுக்காக காபி கொண்டு வந்த வேலைக்காரப் பெண் கையில் காபி வைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் நிற்க, அவளைத் திரும்பிப் பார்த்த சங்கவி, “ஏய் உன்னை யாருடி காபி கொண்டு வரச் சொன்னது? நான் எங்க அம்மாவை தானே காபி கொண்டு வரச் சொன்னேன்?” என்று அந்தப் பெண்ணை முறைத்தவர், “ரமா” என்று அவள் அம்மா பெயரைச் சொல்லி கத்த.

“இப்ப எதுக்குடி அப்பாவும் பொண்ணும் மாத்தி மாத்தி என்னை ஏலத்துல விடறீங்க? அதான் நான் வந்துட்டு இருக்கேன் இல்ல. ஏன் அவ காபி கொண்டு வந்து கொடுத்தா நீ குடிக்க மாட்டியா? நானே தான் கொண்டு வந்து உன் கையில் கொடுக்கணுமா?” என்று அவர் கேட்க.

ஆபீஸில் துர்காவிடம் காபி கேட்டபோது அவளுக்குப் பதிலாக அந்த லதா தான் காபி கொண்டு வந்து கொடுத்தாள். அதேபோல இங்கே தன் அம்மாவும் தன்னை அவமானப்படுத்துகிறார் என்று உள்ளுக்குள் எரிந்த சங்கவி, அவள் அம்மாவை எதுவும் கூற முடியாமல் பல்லைக் கடித்தவள், “அப்பா, இந்த அம்மா ஏன் அப்பா இப்படி இருக்கு? நம்மக்கு மட்டும் எப்பவுமே சப்போர்ட் பண்ணவே மாட்டேங்குது” என்று சலித்துக் கொள்ள. அதற்குள் ரமா அவள் அப்பாவிடம் வந்து “ஏங்க, இப்ப எதுக்குங்க என்னை கூப்பிட்டீங்க?” என்று சலித்துக் கொண்டு அவள் அவர் பக்கம் வந்து நிற்க, அவர் எழுந்து ரமாவை ஓங்கி ஒரு அறை விட்டார்.

அவ்வளவு நேரம் வாய் வாய் பேசிக் கொண்டிருந்த ரமா, சங்கவியின் அப்பா அவரை அறிந்ததும் அப்படியே எதுவும் பேசாமல் அமைதியாக நின்று விட்டார். அவர் கண்ணில் கண்ணீர் மடமடவென்று வெளியே வர, அதையெல்லாம் பார்த்த சங்கவிக்குக்கும் அவள் அப்பாவிற்கும் துளிகூட அவர் மேல் இரக்கம் கொள்ளவில்லை.

அவர் ரமாவைப் பார்த்து, “இங்கு பாரு, இன்னொரு தடவை என் பொண்ணுக்கு கோபமாக இருக்கிறப்ப அவகிட்ட நான் அதை எதையும் பேசி அவளை மறுபடியும் டென்ஷன் பண்ணேன்னு வை, அப்புறம் நடக்கிறதே வேற. உன் வேலை என்ன, சமையல் கட்டுக்குப் போய் சமைக்கிறது மட்டும்தான். அதை மட்டும் நீ செய், சரியா? என் பொண்ணுக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைக்கணும், அவளுக்கு என்ன செஞ்சு கொடுக்கணும்னு எனக்கு நல்லா தெரியும், புரிஞ்சுதா?” என்று அவர் கர்ஜிக்க, அதற்கு மேல் ரமா எதுவும் பேசாமல் “சரி” என்பது போல தலையை பாவமாக ஆட்டிவிட்டு நேராக சமையலறைக்குச் சென்று விட்டார்.

அழுதுகொண்டு சமையலறைக்குள் சென்றவர், அங்கே இருந்த அவர்கள் வீட்டில் சங்கவி பிறப்பதற்கு முன்னாலேயே வேலை செய்து கொண்டிருக்கும் அந்தப் பாட்டி ரமாவை சமாதானம் செய்ய, “உனக்குத்தான் உன் புருஷனைப் பத்தி தான் நல்லா தெரியுமே? அவன் ஒரு கல் நெஞ்சக்காரன். பெத்த பிள்ளையவே யாருக்கும் தெரியாம யாருக்கோ தூக்கி கொடுத்திருந்தானே” என்று அவர் ஏதோ கூற வர, ரமா வேகமாக அவர் வாயை பொத்தி, “சுற்றியும் வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். ஜாக்கிரதையாக பேசவும்” என்று அவரிடம் ஜாடை செய்துவிட்டு, கண்களை துடைத்துக் கொண்டு தன் வேலையைப் பார்க்கச் சென்று விட்டார்.

அந்தப் பாட்டியும் தன் மனதுக்குள்ளேயே ‘இவனுக்கு எப்போதான் புத்தி வரப்போகுதோ? பாவம் இந்தப் பிள்ளையைப் போட்டு இந்த பாடுபடுத்துறானே’ என்று நினைத்தவர், ‘சரி இதெல்லாம் நம்ம கையிலையா இருக்கு.’

‘இந்த ரமாவுக்கு சீக்கிரமா ஒரு நல்ல வழியை காமிடா கடவுளே’ என்று கடவுளிடம் ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு சென்று ரமாவுக்கு ஒத்தாசையாக வேலை பார்த்தார்.


ஆதிக்கு ஆபீஸ் வேலை முடிந்ததும் கிளம்பத் தயாராக, துர்காவும் தன் வேலைகளை முடித்துவிட்டு அவனுக்காக தன் கேபினில் காத்திருந்தாள். லதாவும் விவேக்கும் அவளிடம் வந்து கூறிவிட்டு கிளம்பிச் செல்ல, அப்போது ஆபீஸில் மற்றவர்களும் கிளம்பிச் சென்றனர்.

இப்போது ஆதி, துர்கா, கதிர், விக்கி நால்வர் மட்டுமே இருந்தனர். கதிர் தன் கேபினில் இருந்து வெளியே வர, அவனுடன் சேர்ந்து விக்கியும் உள்ளே வர, துர்காவிடம் அருகில் வந்து இருவரும் “என்ன துர்கா, இன்னும் கிளம்பலையா?” என்று விக்கி கேட்டுக்கொண்டே வர, “இல்ல விக்கி, அவருக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்று உள்ளே கையை காட்டி, “ஓ உங்க வீட்டுக்காரர்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்களா?” என்று அவன் கிண்டல் செய்ய, “டேய், எல்லாரையும் மாதிரியும் நீயும் ஏண்டா எங்க ரெண்டு பேரையும் சேர்த்து கிண்டல் பண்ற? உனக்கே எங்க கல்யாணம் எப்படி நடந்தது என்று தெரியும் தானே?” என்று துர்கா கூற, “இன்னைக்கு எங்க வீட்டுக்கு போறோம், நாளைக்கு தான் அங்க நம்ம வீட்டுக்கு வருவோம். எங்க அம்மா அப்பா போன் பண்ணிட்டாங்க. எங்க ரெண்டு பேரையும் சீக்கிரமா கிளம்பி வரச் சொல்லி. ஆனால் ஆதி கிட்ட போய் இப்படி சொல்லி வரச் சொல்றதுக்கு எனக்கு பயமா இருக்கு” என்றாள்.

“இதுக்கு எதுக்குடி பயந்துட்டு இருக்க? நேரா போய் ‘இந்த மாதிரி… இந்த மாதிரி… இந்த மாதிரி…’ அப்படின்னு இந்த விஷயத்தைச் சொல்லிட்டு வர வேண்டியதுதானே? அவனும் ‘சரி வா போலாம்’னு உன்கூட கெடந்து வந்து இருக்கப் போறான்” என்று விக்கி கூற.

“ஓ அப்படியா? அப்ப நீயே ‘அந்த மாதிரி… அந்த மாதிரி… எங்க அம்மா அப்பா இப்படி சொன்னாங்க’ அப்படின்னு நீயே போய் உன் ஃபிரெண்டுகிட்ட அந்த மாதிரி சொல்லிட்டு வா பார்ப்போம்” என்று துர்கா கூற. விக்கி அதற்கு மேல் எதுவும் பேசாமல் தன் வாயை மூடிக்கொள்ள, “இப்போ புரியுதா நான் ஏன் ஆதி கிட்ட சொல்றதுக்கு யோசிச்சேன்னு?” என்று அவள் கூற, “சரி தாயே, ஒத்துக்கறேன். என் ஃபிரெண்டு பயங்கர கோவக்காரன்னு ஒத்துக்கறேன். வெளியே வர வரைக்கும் வெயிட் பண்ணுவோம். என்ன பண்றது?” என்று விக்கி அமைதியாக இருக்க, அந்த நேரத்தில் ஆதி வேலைகளை முடித்துவிட்டு லேப்டாப்பைக் எடுத்துக்கொண்டு அவன் கேபினை விட்டு வெளியே வந்தான்.

வந்ததும் நேராக துர்காவைப் பார்க்க, அங்கே விக்கியும் கதிரும் அவளுடன் அரட்டை அடித்து கொண்டிருப்பதைப் பார்த்தவன், ‘இவங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இருக்காதா? எப்ப பாரு இந்த துர்கா பின்னாடி சுத்திட்டு இருக்காங்க’ என்று மனதில் நினைத்து அவர்களை வறுத்தெடுத்தவன், அவர்கள் அருகில் வந்ததும் “ம்க்கும்….” என்று தன் தொண்டையை கனைக்க.

விக்கி கண்களை துர்காவிடம் காட்ட, அவளும் திரும்பி எழுந்து நின்று ஆதியைப் பார்க்க, துர்காவைப் பார்த்து “போலாமா?” என்று அவன் கேட்க, “ஓகே ஆதி, போகலாம். நான் ரெடியா தான் இருக்கேன்” என்று கூறிவிட்டு தன் ஹேண்ட்பேக்கை கையில் எடுத்துக் கொண்டு இவர்கள் இருவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பியவள், பின் இவர்கள் இருவரையும் பார்த்து “நாளைக்கு காலைல நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு சாப்பிட வந்துடுங்க” என்று கூற, கதிர் அங்கு கீர்த்திகா இருப்பாள் என்று மனதில் வைத்துக்கொண்டு, “இல்ல துர்கா, நாங்க நேராக ஆபீஸ் வந்துருவோம். நீயும் ஆதியும் நாளைக்கு ஆபீஸ் வந்துருங்க” என்று அவன் கூற, “நான் உன்ன ‘வரேன்னு’ கேட்கல. ‘வரச் சொன்னேன்’, சரியா? விக்கி, நீயும் அவன் கூட நாளைக்கு காலைல நேரமே எங்க வீட்டுக்கு சாப்பிட வந்துடுங்க” என்று கூறிவிட்டு திரும்பியும் பார்க்காமல் ஆதியுடன் கிளம்பிச் சென்றாள்.


ஆதி துர்கா வீட்டுக்கு வரவே இரவு 10 மணி ஆகிவிட்டது. அவர்கள் வந்ததும் துர்காவின் அம்மாவும் அப்பாவும் ஹாலில் அமர்ந்திருக்க, அவர்களைப் பார்த்து “வாங்க மாப்பிள்ளை, சாப்பிடலாமா? நான் எடுத்து வைக்கிறேன்” என்று கூற, “இல்ல மாமா. இனிமேல் தான் சாப்பிடணும். ஒரே நிமிஷம், நான் ப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன்” என்று ஆதி துர்காவின் அறை நோக்கி மேலே செல்ல.

துர்கா அருகில் வந்து அவள் அம்மா “என் மாப்பிள்ளை உன்கிட்ட நல்லா பேசுறாரா?” என்று கேட்க, “ஏம்மா, ஆதி என்ன, அவன் எப்பவும் போலத்தான் என்னிடம் நல்லா தான் பேசிட்டு இருக்கான்” என்று கூற.

“அடியே, எப்பவும் போல பேசுறது வேற, கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டி ஆனதுக்கு பிறகு பேசறது வேறடி. மனைவி என்கிற முறையில உன்கிட்ட அன்பா பழகுறாரா?” என்று கேட்க, “அம்மா, எனக்கும் ஆதிக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தான் ஆகுது. அதுக்குள்ள இப்படி எல்லாம் கேட்டா நான் என்னன்னு பதில் சொல்லுவேன்? கொஞ்ச நாள் எனக்கும் ஒரு டைம் வேண்டாமா?” என்று கூறியவள் “சரி, நீங்க ரெண்டு பேரும் சாப்டீங்களா? கீர்த்திகா சாப்பிட்டாளா?” என்று கேட்க, “நாங்க எல்லாரும் சாப்பிட்டோம். கீர்த்திகா தூங்கிவிட்டால். உங்க ரெண்டு பேருக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தோம்” என்று கூற, “சரி, வா. ஆதி வந்ததும் நானே அவனுக்கு சாப்பாடு பரிமாறறேன். நீங்க போய் தூங்குங்க” என்று கூறி அவள் பெற்றோரை தூங்க அனுப்பி வைத்தாள்.

அவர்கள் சென்றதும் ஆதி “ஒரு ஃபைவ் மினிட்ஸ் நான் டிரஸ் ஆகிட்டு வந்துடுறேன். ப்ளீஸ், கொஞ்சம் வெயிட் பண்ணு” என்று கூற, “ஓகே துர்கா, டேக் யுவர் டைம்” என்று கூற, “தேங்க்ஸ் ஆதி” என்று கூறி சிரித்தவள் வேகமாக தன்னறைக்கு ஓடினாள்.

அவள் வேகமாக ஓடிச் செல்வதைப் பார்த்து ரொம்ப சிரித்தவன், அவள் வரட்டும் என்று டைனிங் டேபிளில் அவளுக்காக காத்திருக்க, மேலே சென்று ஐந்து நிமிடங்களில் ரெடியாகிவிட்டு கீழே இறங்கி வர, அவள் வரும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவன் அப்படியே வாயை பிளந்து நின்றான்.

“சாப்பிடலாமா ஆதி?” என்று கூறிக்கொண்டு அவன் அருகில் வந்த துர்கா, அவன் வாயைத் திறந்து கொண்டு அவளைப் பார்ப்பதை கவனித்தவள் மனதிற்குள் சிரித்துக் கொண்டு, அவன் தோளைத் தொட்டு “ஆதி, ஏன் என்னாச்சு? இப்படி பார்க்குற?” என்று கேட்க.

அவளை கீழே இருந்து மேலாக ஒரு பார்வை பார்க்க, அவன் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவள் “சாரி ஆதி, நமக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டு தான் ரெண்டு நாளா நான் அந்த சேலையை கஷ்டப்பட்டு கட்டிக்கிட்டு இருந்தேன். என்னால அதை கட்டிட்டு தூங்க முடியல ஆதி. அதனாலதான் நான் எப்பவும் போடுற நைட் டிரஸ் போட்டுட்டு வந்தேன். உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே? இல்ல நான் போய் மறுபடியும் சேலையை கட்டிக்கவா?” என்று கூற.

அவள் அணிந்திருந்த நைட் டிரஸ்ஸை கீழிருந்து மேலாகப் பார்க்க, ஒரு குட்டி டிரௌசரும் அதன் மேல் இடுப்புவரை மறைத்து குட்டி சட்டையும் அணிந்திருந்தாள். கீழிருந்து மேலாக அவர் கால்களைப் பார்க்க, சந்தன நிறத்தில் வாழைத்தண்டு போல அவள் கால்கள் இருக்க, அதைப் பார்த்ததும் ஏனோ அவனுக்கு அதைத் தொட்டு தடவி பார்க்க வேண்டும் என்பது போல ஏக்கம் வந்தது. அதை அடக்கிக் கொண்டவன் அப்படியே தன் பார்வையை மேலே உயர்த்த, திரண்டு இருந்த இரண்டு மாம்பழங்களைப் பார்த்ததும் ஏனோ அவன் மனமும் கண்ணும் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தது.

“ஆதி” என்று துர்கா அவனை அழைக்கவும், வலுக்கட்டாயமாக தன் கண்களை அவள் மார்பின் மேல் இருந்து பிரித்தவன், “என்ன” என்பது போல அவளைப் பார்க்க, “உனக்கு ஓகேவா? நான் இல்லன்னா போய் சாரி கட்டிட்டு வரட்டுமா?” என்று அவள் கேட்க, “இல்ல இல்ல, பரவாயில்லை. இந்த டிரஸ் நல்லா தான் இருக்கு. நீ இதையே போட்டுக்கோ” என்று அவன் கூற, அவனைப் பார்த்து சிரித்துவிட்டு “தேங்க்ஸ் ஆதி. சாப்பிடலாமா?” என்று கூறி, அவனுக்கும் தட்டில் உணவைப் பரிமாறி அவளும் சாப்பிட, “சரி ஆதி, நீ மேல ரூமுக்கு போ. நான் உனக்கு பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன்” என்று கூறி அவனை அனுப்பி வைத்துவிட்டு, பின்னாலேயே பாலை காய்ச்சி கொண்டு போய் ஆதிடம் கொடுத்தாள்.

அவள் ஒரு டம்ளர் மட்டுமே கொண்டு வந்திருக்க, “நீ சாப்பிடலையா?” என்று ஆதி கேட்க, “இல்ல ஆதி, பால் உனக்கு அளவு கொஞ்சமா தான் இருந்துச்சு. எனக்கு வேண்டாம். நீ குடிச்சுக்கோ. உனக்குத்தான் பால் சாப்பிடலைன்னா நைட் தூக்கம் வராதுன்னு சொன்னாங்க. எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல” என்று அவள் கூற, “இல்ல பரவாயில்லை துர்கா… இன்னைக்கு கொஞ்சம் குடிச்சுட்டு கொடு. அப்புறம் நான் குடிச்சிக்கிறேன்” என்று கூறி அவள் கையில் பால் டம்ளரை நீட்ட, “இல்ல ஆதி, பரவாயில்லை” என்று அவள் கூற, “பரவாயில்லை துர்கா, இந்தா குடிச்சுட்டு கொடு” என்று கூறி அவள் கையில் டம்ளரைத் திணிக்க, “சரி” என்று வாங்கி பாலை சிறிது குடித்துவிட்டு அவனுக்கு கொடுத்தாள். ஆதிக்கும் அவள் ஒதுக்கப்பட்ட டம்ளரை வாங்கி, அதே இடத்தில் வாய் வைத்து அவனும் குடிக்க, அவனுக்கு ஏனோ அவள் இதழை சுவைத்தது போல தோன்ற, கவனிக்காத துர்கா “சரி ஆதி, நான் தூங்கறேன்” என்று கூறி அவனைத் தாண்டிச் சென்று கட்டிலின் மறுபக்கம் படுத்து உறங்கிவிட்டாள்.

கொடுத்துவிட்டு திரும்பிப் பார்த்த ஆதி, அதற்குள் துர்கா உறங்கி விட்டதைப் பார்த்ததும் ஏக்கமாக அவளைப் பார்க்க, அன்று மதியம் ஆபீஸில் நடந்த விஷயங்களை ஆசைப்பட்டவன், அவள் தனக்காக சங்கவியிடம் சண்டையிட்டு அவளை அடித்தது, தன்னை ‘என் ஆதி’ என்று அவள் சொன்னதும் நினைவில் வர, அவனுக்கு துர்காவின் மீது மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் உண்டானது.

தன் மேல் அவள் வைத்திருக்கும் பாசத்தை நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டான் ஆதி. அவள் தூங்கிக்கொண்டிருக்க, அவள் முகத்தை உற்றுப் பார்த்தவன், அவள் தலைமுடி அவள் முகத்தை மறைக்க, அதை லேசாகத் தன் விரல்களால் ஒதுக்கி அவள் காதோரம் ஒதுக்கி விட்டவன், அவள் முகத்தையே பார்க்க, துர்கா நன்றாகத் தூங்கிவிட்டாள்.

மெல்ல தன் விரல்களை அவள் முடியிலிருந்து எடுத்தவன், அப்படியே அவள் முகத்திற்கு கீழாகக் கொண்டு வந்தவன், அவள் உதட்டை லேசாகத் தன் விரலால் தொட்டுப் பார்க்க, அது பஞ்சை விட மிருதுவாக இருக்க, பின் தன் விரலைக் கொண்டு அதைத் தடவிப் பார்த்தவன், உதட்டைச் சுவைக்க வேண்டும் போல தோன்ற, பின் தனக்குத்தானே “டேய் ஆதி, என்னடா பண்ணிட்டு இருக்க? அவ உன்னை நம்பித்தான் உன் பக்கத்துல படுத்துட்டு இருக்கா. ஆனா நீ அவளுக்குத் தெரியாம அத்துமீறி வேலை பார்த்துட்டு இருக்க” என்று அவனது மனம் அவனை எச்சரிக்கை.

அவன் அவளிடமிருந்து கையை எடுத்தவன், அவளிடம் இருந்து தள்ளி படுத்துக் கொண்டான். அவளிடம் இருந்து தள்ளி படுத்தானே ஒழிய, அவன் பார்வை முழுவதும் துர்காவின் மேலேயே இருந்தது.

அவள் எப்போது புரண்டு படுத்து தன் மீது கைகளையும் கால்களையும் தூக்கி போடுவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டே படுத்திருந்தான் ஆதி. அவள் இன்று முழுவதும் வேலை செய்த களைப்பில் நன்கு அசந்து தூங்கிவிட்டால். சிறிது கூட அசையவே இல்லை. இவனும் ‘அவள் தன்மேல் கை கால்களை போடுவாள்’ என்று பார்த்து, அவன் எதுவும் நடக்காமல் ஏமாற்றத்திலேயே படுத்தவன் அப்படியே உறங்கி விட்டான்.

நள்ளிரவில் திடீரென்று தன்மேல் யாரோ கை வைக்கவும், கண்களை விழித்துப் பார்த்த காட்சி, அவன் மீது துர்கா தன் கையையும் காலையும் போட்டு அவன் அருகில் படுத்திருப்பதைப் பார்த்தவன், லேசாகப் புன்னகை செய்தவன் திரும்பி, தன் மீது அவள் போட்டிருந்த காலின் மீது தன் கையை வைத்து அவள் காலைத் தொட்டுப் பார்த்தான். வாழைத்தண்டு கால்கள் நன்கு வழுவழுவென்று இருக்க, சிறிது நேரம் அவள் காலை தடவ, துர்கா தூக்கத்தில் தன் காலில் ஏதோ ஊறுவது போல உணர்ந்து அவள் கையை கொண்டு தன் காலைத் தட்டி விட, ஆதி அப்போதுதான் முட்டாள்தனத்தை நினைத்தவன், அவள் கையையும் காலையும் தன் மீது இருந்து எடுத்து விட்டவன், “துர்கா” என்று கத்தினான்.

அவன் அப்படி கத்தவும், நன்கு தூங்கிக்கொண்டிருந்த துர்கா அதிர்ந்து “என்னவோ” என்று பதறி அடித்துக்கொண்டு எழ, “உன்னால ஒரு பக்கம் அசையாமல் படுத்து தூங்க முடியாதா? இப்படி அசிங்கப்படுத்தி என் மேல கையையும் காலையும் தூக்கிப் போட்டுட்டு இருந்தா நான் எப்படி தூங்குவது?” என்று அவன் மிகவும் கோபமாக அவளைப் பார்த்து கேட்க.

தான் தூக்கத்தில் புரண்டு ஆதி மீது தன் கையையும் காலையும் தூக்கிப் போட்டு தூங்கிவிட்டோமோ, அவனை சங்கடப்படுத்தி விட்டோமே என்று நினைத்தவள், “சாரி ஆதி, மன்னிச்சிடு. நான் தெரியாம இப்படி பண்ணிட்டேன். நான் இனிமேல் அப்படி பண்ண மாட்டேன்” என்று கூறியவள், கட்டிலில் இருந்து தலைகாணி எடுத்துக்கொண்டு இறங்கிச் சென்று சோபாவில் படுத்துக்கொண்டாள்.

அவசரப்பட்டு அவளைத் திட்டிவிட்டோமே என்று வருத்தப்பட்ட ஆதி, “துர்கா, சாரி. நான் சரியா தூங்க முடியலைன்னு சொல்லிட்டு ஏதோ கோபத்திலும் ஒண்ணும் அப்படி சொல்லிட்டு. அதுக்காக நீயே அங்க போய் படுத்துக்கிற? பரவாயில்லை, இங்கே வந்து படு” என்று கூற, “இல்லை ஆதி, பரவாயில்லை. நான் உன் பக்கத்துல படுத்தா மறுபடியும் கையும் காலையும் தூக்கி போடுவேன். உன்னால சரியா தூங்க முடியாது. உங்க வீட்டு கட்டில் அளவுக்கு எங்க வீட்டு கட்டில் ரொம்ப பெருசு இல்லை. அதனால இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நீ அட்ஜஸ்ட் பண்ணிக்க. நாளைல இருந்து நம்ம வீட்ல படுக்கும்போது நான் உனக்கு டிஸ்டர்ப் பண்ணாம படுத்து தூங்குகிறேன்” என்று அவள் சொல்ல, ஆதியின் மனம் ஏனோ மிகவும் சங்கடப்பட்டது.

“மறுபடியும் சாரி துர்கா, மேலே வந்து படுத்துக்கோ” என்று கூற, “அவசியம்” என்று கூறிவிட்டு அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு தலைகாணியைப் போட்டு “இனிமேல் உனக்கு என்னால் டிஸ்டர்ப் ஆகாது ஆதி. நீ படுத்து தூங்கு” என்று கூறி அவளும் திரும்பி படுத்துக் கொண்டாள்.

தங்கள் இருவருக்கும் இடையில் தலைகாணியைப் போட்டு படுத்ததும் ஆதிக்கு ஏமாற்றமாய் போய்விட்டது. வேறு வழியில்லாமல் அவனும் படுத்து உறங்கிவிட்டான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured