EPISODE 23
கதிரிடம் விக்கி ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்று கூறி, அவனை அழைத்துக்கொண்டு கிளம்பிச் சென்றான். “எங்கே போகிறோம்? யாரை பார்க்கப் போகிறோம்?” என்று வழியெல்லாம் கேட்டுக்கொண்டே வந்த கதிரிடம், “கொஞ்ச நேரம் பேசாமல் அமைதியாக வாடா…” என்று அவனை மிரட்டுவது போலப் பார்த்த விக்கி, பின் “டேய் கதிர்” என்று அழைத்தான்.
அவனைப் பார்த்த கதிர், “என்ன, சொல்லு” என்றான் விக்கியை முறைத்துக்கொண்டு. “சரிடா, கோச்சுக்காதே” என்று அவன் தோளில் கை வைத்துத் தடவ, “முதல்ல மேல இருந்து கை எடுடா” என்றான் கதிர். “எதுக்குடா கோச்சுக்கிற? நான் ஒரு முக்கியமானவங்களை சந்திக்கத் தானே உன்னை கூட்டிட்டுப் போறேன். அங்கே போனால் யாரு, என்னன்னு நீயே தெரிஞ்சுக்கப் போற. அதை விட்டுட்டு சும்மா போற வழியில எங்க போற, யாரை பார்க்கப் போறோம்னு நினைச்சுக்கிட்டே இருந்தா எனக்கு கோவம் வந்துருச்சு. அதனாலதான் உன்னை அப்படிப் பேசிட்டேன்” என்றான் விக்கி. “சரி, பரவாயில்லை. இப்பவாவது சொல்லு, நாம யாரை பார்க்கப் போறோம்?” என்று கதிர் கேட்க, “நான் எது பண்ணாலும் உனக்கு நல்லதுக்கு தானே பண்ணுவேன்?” என்று கேட்டான் விக்கி. “எதுக்குடா திடீர்னு கேக்குற?” என்று விக்கியைப் பார்த்துக் கதிர் கேட்க, “நான் சொன்னதுக்கு முதல்ல பதில் சொல்லு” என்றான் விக்கி. “கண்டிப்பா நீ பண்ணுவது எங்கள் நல்லதுக்காகத்தான் இருக்கும். இதுல நானும் சரி, என் அண்ணனும் சரி, உன் மேல முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்றான் கதிர். “அப்போ இன்னும் கொஞ்ச நேரத்துக்கு எதுவும் கேட்காமல் பேசாமல் அமைதியா வரியா?” என்று கேட்க, “அப்போ கடைசி வரைக்கும் நம்ம யாரை பார்க்கப் போறோம்னு நீ என்கிட்ட சொல்ல மாட்ட அப்படித்தானே?” என்றான் கதிர். “டேய்! இன்னும் அஞ்சு நிமிஷத்துல நம்ம அவங்களை சந்திக்கப் போறோம். அதுக்குள்ள எதுக்குடா இந்த பரபரப்பு? கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு” என்றவன், “ஒரு ஐந்து நிமிடங்கள் அமைதியா, ரிலாக்ஸாக வா. உனக்கு அங்கே போனதும் தெரிஞ்சுடும்” என்றான்.
இதற்குமேல் விக்கியிடம் கேட்டு பிரயோஜனமே இல்லை என்று முடிவு செய்த கதிர், “சரி, என்னமோ பண்ணித் தொலை” என்று அமைதியாக இருக்கையில் சாய்ந்து வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான். ஐந்து நிமிடத்தில் கார் நின்றது ஒரு கல்லூரி முன்பு என்று தெரிந்ததும், திரும்பி விக்கியை முறைக்க, “ப்ளீஸ் டா, கோச்சுக்காதே. கொஞ்சம் இறங்குறியா?” என்று கூறி அவனை இறங்கச் சொல்ல, “நீ இப்ப எதுக்கு என்னை இங்கே கூட்டிட்டு வந்து இருக்க? அதுவும் இந்த கல்லூரிக்கு?” என்றான் கதிர். “என்னன்னு சொல்றேன். ஒரு நிமிஷம் நீ கீழே இறங்குடா” என்ற விக்கி கீழே இறங்கி, கதிரின் அருகில் சென்று கார் கதவைத் திறக்க, ஏதோ யோசனை செய்தவாறு காரில் இருந்து இறங்கினான் கதிர். “சரி, இறங்கிட்டேன். இப்ப சொல்லு. இங்க எதுக்கு என்னை கூட்டிட்டு வந்த? இங்க யாரை சந்திக்கப் போறோம்?” என்று கதிர் கேட்க, “இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்தேன்னு நீ யோசி. இங்கு யாரை சந்திக்கப் போறேன்னு உனக்குத் தெரிந்திருக்கும் தானே?” என்றான் விக்கி கதிரைப் பார்த்து. “இப்ப எதுக்கு அவளைப் பார்க்கறதுக்கு என்ன இங்க கூட்டிட்டு வந்த?” என்று கேட்டான் கதிர். “முதல்ல வந்து காரை ஸ்டார்ட் பண்ணு. முதல்ல கிளம்பலாம் இங்கிருந்து. எனக்கு யாரையும் சந்திக்க இஷ்டம் இல்லை” என்று கதிர் கூற, “உன்னை இன்னைக்கு அவளை சந்திக்க கூட்டிட்டு வரேன்னு கீர்த்திகா கிட்ட உறுதி கொடுத்துட்டேன்டா. ப்ளீஸ், ஒரு ஐந்து நிமிடங்கள் வந்து அவளிடம் என்னன்னு மட்டும் பேசு. அதுக்கப்புறம் போயிடலாம்” என்று கூறினான்.
விக்கி கதிரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும்போது, அங்கே கீர்த்திகா வந்தாள். வந்தவள் கதிரைப் பார்த்து பயந்து கொண்டே விக்கியைப் பார்த்து, “ஹாய் அண்ணா, நல்லா இருக்கீங்களா?” என்று கேட்க, “அடடா! வாடா தங்கச்சி, வந்துட்டியா? நல்லா இருக்கேன்டா, நீ எப்படி இருக்க? கல்லூரி எல்லாம் எப்படிப் போகுது?” என்று அவனும் பேச, இவர்கள் இருவரும் கதிரைச் சட்டை செய்யாமல் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்த கதிர் மேலும் கோபம் வர, “இப்ப நீ வந்து முதல்ல காரை எடுக்கப் போறியா? இல்லை நான் கிளம்பிப் போகட்டுமா?” என்று ஓட்டுநர் இருக்கையில் சென்று அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தவன், குனிந்து கீர்த்திகாவைப் பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு, விக்கியைப் பார்த்து, “இப்ப நீ உள்ள ஏறலைன்னா நான் காரை நிறுத்தாமல் கிளம்பிடுவேன்” என்று சொல்லிவிட்டு, விக்கிக்காக காத்திருக்க, கதவு திறக்கவும் விக்கிதான் வந்து அமர்கிறான் என்று திரும்பிப் பார்க்க, காரில் கீர்த்திகா அமர்ந்திருந்தாள்.
“நீ எதுக்கு வந்து காருக்குள்ள போற? முதல்ல கீழே இறங்குடி” என்று கோபமாக கீர்த்திகாவைப்பார்த்துப் பேச, “இங்க பாரு, என்னை ‘டி’ போட்டு கூப்பிட்டால் அப்புறம் நானும் உன்னை ‘டா’ போட்டு கூப்பிட வேண்டி வரும்” என்று கீர்த்திகா சொல்ல, “‘டா’ போட்டு கூப்பிடு பார்ப்போம்! என்னை ‘டா’ போட்டு கூப்பிட்ட வாயைக் கிழிச்சிடுவேன்” என்று கூற, “அப்போ நீயும் என்னை ‘டி’ போட்டு கூப்பிடாதே” என்றாள். அவளைப் பார்த்துக் கை எடுத்து கும்பிட்ட கதிர், “அம்மா தாயே! உன்னை நான் எதுவும் சொல்லி கூப்பிடல. முதல்ல காரில் இருந்து இறங்குறியா?” என்று கூற, அவன் அப்படி செய்ததும் கீர்த்திகாவிற்கு சிரிப்பு வந்துவிட, தன் உதட்டை மடித்து வந்த சிரிப்பை அடக்கினாள். “சிரிக்காதேடி” என்று அவள் சிரிப்பை அடக்கியதைப் பார்த்தவன், “இப்ப நீ மட்டும் காரில் இருந்து இறங்கலைன்னா…” என்று கூறி நிறுத்த, “இறங்கலைனா என்ன பண்ணுவ?” என்று அவளும் விடாமல் அவனிடம் வம்பு இழுக்க, ஸ்டார்ட் செய்திருந்த காரை வேகமாகச் சாலையில் செலுத்தினான்.
கதிர் திடீரென்று காரை வேகமாகச் செலுத்த, கீர்த்திகாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கதிரைக் கலவர முகத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தவள், “இப்போ எதுக்கு காரை இவ்வளவு வேகமா ஓட்டிட்டுப் போற நீ?” என்று பயந்து கொண்டே கதிரைப் பார்த்துக் கேட்க, “காரை விட்டு இறங்க மாட்டேன்னு நீதானே சொன்ன? அதான் உன்னைக் கடத்திட்டுப் போகலாம்னு” என்றவன் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்க்க, அவன் கூறியதைக் கேட்டு கீர்த்திகாவின் முகம் அந்த குளிர்சாதனப் பெட்டியிலும் வியர்த்துக்கொட்டியது. “கடத்திட்டுப் போறியா என்னை? எனக்குப் பயமா இருக்கு. முதல்ல என்னை இறக்கிவிடு” என்று அவள் கெஞ்ச, அவன் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.
கதிர் காரை எடுத்துக்கொண்டு வேகமாகச் செல்வதைப் பார்த்த விக்கி, “நல்லா இருக்குடா! உங்க சண்டையில என்னை நடுரோட்டில் விட்டுட்டீங்களே!” என்று புலம்பியவன், தன் அலைபேசியை எடுத்து ஒரு ‘கேப்’பை முன்பதிவு செய்துவிட்டு, அது வரும் வரை காபி கடையில் காத்திருக்கலாம் என்று கீர்த்திகா சொன்ன காபி கடைக்குச் சென்று, காபி ஆர்டர் செய்துவிட்டு, தன் அலைபேசியை எடுத்து நோண்டிக் கொண்டிருந்தான் விக்கி. அவனது காபியும் வந்துவிட, அதை எடுத்து ஒவ்வொரு சிப்பாகக் குடித்துக்கொண்டே அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்த விக்கியின் தோளில் ஒரு மென்மையான கரம் அவனை அழுத்தியது.
“யார்?” என்று திரும்பிப் பார்த்த விக்கிக்குத் தன் அருகே இருந்தவரைப் பார்த்ததும் புருவங்கள் இரண்டும் முடிச்சிட, குழப்பத்தோடு பார்க்க, அவள் அழகில் அப்படியே உறைந்துபோனான். என்ன ஒரு சாந்தமான அழகு அவள் முகத்தில் தெரிகிறது! வகிடு எடுத்துப் படிய தலை சீவி, ஒப்பனை இல்லாத முகத்தில் கண்ணில் அழகாக மை இட்டு இருந்தாள். அந்தக் கண்ணைக் கண்டதும் நம்ம விக்கி விழுந்துவிட்டான். அதில் ஒரு கண்ணாடியும் அணிந்திருக்க, அவளை ரசித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து அந்தப் பெண், “ஹலோ அண்ணா! எப்படி இருக்கீங்க? இப்போதான் வந்தீங்களா?” என்று கூறிக்கொண்டே ஒரு பெண் அவன் எதிரே வந்து அமர, “யாருமா நீ? உனக்கு என்னை இதற்கு முன்னே தெரியுமா? என்னை தெரிந்தவள் போலப் பேசுகிறாயே?” என்று கேட்க, அவனிடம் சிரித்துக்கொண்டே பேசுவதுபோல, “அண்ணா, கொஞ்ச நேரம் நான் இங்கேயே உட்கார்ந்துக்கிறேன் அண்ணா. என்னோட மூத்த சகோதரிகள் எல்லாம் என்னை ரொம்ப நையாண்டி பண்றாங்க. அவங்க கிட்ட நான் என் அண்ணா என்னை பக்கத்துல இருக்கும் காபி கடையில வெயிட் பன்னிட்டு இருக்காருன்னு போய் சொல்லிட்டு வந்துட்டேன். ஆனா அதை நம்பாம அவங்க என்னை ‘ஃபாலோ’ பண்ணிட்டு வந்துட்டாங்க. நான் உண்மையா தான் சொல்றேனா? இல்லை அவங்க கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காக பொய் சொல்லிட்டு வந்து இருக்கேன்னு பாக்குறதுக்காக வந்துட்டாங்கண்ணா” என்றாள். “அதனால நான் இந்த காபி கடைக்குள்ள வந்து சுத்தி முத்திப் பார்த்துட்டு நீங்க மட்டும் தான் தனியா உட்கார்ந்து இருந்தீங்க. அதுவும் உங்களை பார்த்தா ரொம்ப நல்லவர் மாதிரி தெரியுது அண்ணா” என்று வார்த்தைக்கு வார்த்தை அந்தப் பெண் ‘அண்ணா’ என்று கூப்பிடவும், அவனுக்கு இவ்வளவு அழகாக இருக்கிற பெண் தன்னை ‘அண்ணா’ என்று கூப்பிடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை.
“முதல்ல நீ என்னை அண்ணன்னு கூப்பிடுறதை நிறுத்து” என்றவன், “சரிமா, நான் இப்ப என்ன பண்ணட்டும் சொல்லு” என்று அவன் கேட்க, “கொஞ்ச நேரம் என் கூட தெரிஞ்சவள் போலப் பேசிட்டு இருங்க அண்ணா. அது போதும்” என்றாள். “அப்படியா? சரிமா” என்றவன், “முதலில் நீ என்னை அண்ணன்னு கூப்பிடாதே” என்று அவளைத் தெரிந்தவன் போலச் சிரித்துக்கொண்டு பேச ஆரம்பித்தான் விக்கி. “ஏன் அண்ணா நான் உங்களை அப்படி கூப்பிடக் கூடாதா?” என்று அவளும் சிரித்துக்கொண்டே பேச, “நீ என்னை அண்ணன்னு கூப்பிடுறது எனக்குப் பிடிக்கலை” என்றான் அவன் சிரித்துக்கொண்டே. அவளும் சிரித்துக்கொண்டு, “அப்போ ஏன் நான் உங்களை அண்ணன்னு கூப்பிடுறது உங்களுக்குப் பிடிக்கலை?” என்று அந்தப் பெண் கேட்க, “இவ்வளவு அழகான ஒரு பொண்ணு என்ன வந்து அண்ணன்னு சொல்லி கூப்பிட்டால், கல்யாணம் ஆகாத ஒரு ‘சிங்கள்’ பையனைப் பார்த்து அண்ணன் சொன்னா எனக்குக் கஷ்டமா இருக்காதா?” என்று அவன் கூற, அவன் பேச்சு வேறு மாதிரி செல்வதை உணர்ந்த அந்தப் பெண், “நாம தெரியாமல் இவனிடம் வந்து பேசி கொடுத்துவிட்டோமோ?” என்று யோசித்தவள், எழுந்து, “சரி அண்ணா நான் போயிட்டு வரேன்” என்று செல்லப் போக, சரியாக அவள் கூறிய அவளுடைய மூத்த மாணவிகள் அவளைக் காண அந்த காபி கடைக்குள் வந்துவிட, திரும்பவும் வந்து அவன் மேசையிலேயே அமர்ந்து கொண்டாள்.
“அண்ணா, ப்ளீஸ் அண்ணா! தயவுசெய்து கொஞ்ச நேரம் அமைதியா இருங்களேன். அவங்க எல்லாம் போனதுக்கு அப்புறம் நான் எந்திரிச்சு போயிடுறேன். ப்ளீஸ்” என்று அவள் கெஞ்ச, “நீ என்னை அண்ணன்னு கூப்பிடாம இருந்தா நான் சும்மா இருப்பேன்” என்று விக்கி கூற, அவள் “சரி” என்று தலையை ஆட்டியவள் அமைதியாக அமர்ந்து கொண்டிருக்க, அப்போது அங்கே வந்த அவளுடைய கல்லூரி மூத்த மாணவி, “ஏய், இவன்தான் உன் அண்ணனா?” என்று கூற, அந்தப் பெண் விக்கியைப் பார்த்து “ஆம்” என்று தலையாட்ட, விக்கி அவளை முறைத்துப் பார்த்தவன், நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்து, “அந்தப் பொண்ணு பொய் சொல்லுதுமா” என்று கூற, நின்று கொண்டிருந்த பெண் திரும்பி அவன் எதிரில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்து, “ஏய்… நிலானி… இந்த ஆள் சொல்றது உண்மையா?” என்று கேட்டாள்.
“நிலானி” என்று அந்தப் பெண் பெயர் சொல்லி அழைக்க, அதைக் கேட்ட விக்கி, “நிலானி… நிலானி… நிலா…னி… நிலா…” என்று மாற்றி மாற்றி அவள் பெயரைச் சொன்னவன், எதிரே இருக்கும் நிலானியைப் பார்க்க, அந்தப் பெண் நிலானியின் கையைப் பிடித்து, “என்கிட்டயே பொய் சொல்றியா?” என்று கூறி அவளை, “என் கூட வாடி…” என்று அவளை இழுத்துக்கொண்டு செல்ல, நிலானி விக்கியை, “இப்படி என்னை மாட்டிவிட்டுட்டியே!” என்று அவனை முறைத்துக்கொண்டே, அந்தப் பெண்ணிடம், “மூத்த சகோதரி, ப்ளீஸ் மூத்த சகோதரி என்னை விடுங்க” என்று அவளிடம் கெஞ்சிக்கொண்டே, மேசையிலிருந்து அந்தப் பெண்ணின் இழுப்பிற்கு எழுந்து போன நிலானி, விக்கியை முறைத்துக்கொண்டே அவனைத் தாண்டிச் செல்ல, அவளை இழுத்துக்கொண்டு சென்ற அந்தப் பெண் மறுஅடி எடுத்து வைக்கும்போது நிலானியை இழுக்க முடியாமல் அவளைத் திரும்பிப் பார்க்க, நிலானியின் மற்றொரு கையை விக்கி பிடித்துக்கொண்டு, ‘ஹீரோ’ போல ஸ்டைலாக நின்று கொண்டிருந்தான்.
துர்காவிற்கு மீண்டும் உடல் நடுங்கத் தொடங்க, செவிலியர் கூறியது நினைவில் வர, ஒரு முடிவுக்கு வந்தவனாக, தான் மேல் சட்டையைக் கழற்றிக்கொண்டு படுக்கைக்குச் சென்று, துர்காவை போர்த்தி விட்டிருந்த போர்வைக்குள் நுழைந்து அவளுடன் நெருக்கமாகப் படுத்துக்கொண்டான்.
அவன் வெற்று மார்பு அவள் மேல் படவும், அவன் உடல் சூடு அவள் குளிருக்கு இதமாக இருக்க, தன் அருகில் ஆதிதான் இருக்கிறான் என்று தெரியாமல் அவளாகவே அவனை அணைத்துக் கொண்டாள். அவள் உடல் நடுக்கம் குறைந்த பாடில்லை. அவள் கை, கால்கள் நடுங்க, உதடுகள் ‘தந்திரி’ அடிப்பதைப் பார்த்தவன், அவளைத் தன் கை வளைவில் கொண்டு வந்து, தன்னோடு எவ்வளவு சேர்ந்து படுக்க வைக்க முடியுமோ அவ்வளவு நெருக்கமாக துர்காவைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், அவள் கைகளை எடுத்துத் தன் மீது போட்டுக்கொண்டான். அவள் காலைத் தூக்கி அவள் கால் மேல் போட்டு, அவள் கால்களைத் தன் காலால் உரசி சூடேற்ற முயன்றான்.
அவளுக்குக் குளிர் குறைவதாகத் தெரியவில்லை. அவன் கைகள் அவள் உடல் முழுவதும் தேய்த்துவிட்டுக்கொண்டிருக்க, அவள் உடலைத் தொட்டதும் துர்காவிற்கு உடலில் வேதியியல் மாற்றம் நிகழ, அவனை இறுக அணைத்து, அவன் முகத்தோடு தன் முகத்தை ஒட்டி வைத்துக்கொண்டு, அவன் கன்னத்தோடு தன் கன்னத்தை வைத்து உரச, ஆதியின் நிலைதான் இங்கே பரிதாபத்திற்கு உரியதாகிவிட்டது. காலையில் தான் அவள் தன்னை ஒதுக்குகிறாள் என்று அவளை அவ்வளவு பேசினான். தன் முகத்தில் இருக்கும் கொப்புளங்களை அவள் முக சுழிப்போடு பார்த்தது அவனுக்கு நினைவில் வர, ஆனால் இப்போது அவள் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தன் முகத்தோடு அவள் முகம் உரசிக் கொண்டிருக்கிறாளே என்று யோசித்தவன், அவள் உடலை வருடிக் கொண்டிருந்த அவன் கையை எடுத்து, அவள் முகத்தைத் தன்னிடம் இருந்து பிரித்தவன், அவள் முகத்தைப் பார்க்க, அவள் உதடு நடுங்கிக் கொண்டிருக்க, கண்கள் அரை மயக்கத்தில் இருக்க, அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“துர்கா” என்று அழைத்தான். அவள் எதுவும் பேசாமல் அவன் கால்களோடு தன் கால்களை உரசிக்கொண்டும், அவனை கட்டியிருந்த கைகளை அவன் முதுகில் அலை பாய விட்டுக்கொண்டும் இருக்க, அவன் உடம்பில் ஒரு வித மாற்றம், ‘இது என்ன உணர்வு?’ என்று சொல்ல முடியாத ஒரு வித உணர்வு அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ஈன ஸ்வரத்தில் “துர்கா” என்று அவன் அழைக்க, தன் கண்களை மெல்லத் திறந்து பார்க்க, அவள் எதிரில் அவன் முகம் மிக நெருக்கமாகத் தெரிய, “ஆதி” என்று கிறக்கத்தோடு அவன் பெயரை அழைக்க, அவள் குரலில் இருந்த கிறக்கம் இவனையும் தொற்றிக்கொண்டது.
“துர்கா… என்ன… என்ன பண்ற?” என்றான். அவள் மயக்கத்திலேயே அவனிடம் திருப்பி, “என்ன பண்ணிட்டு இருக்கேன்?” என்று அவன் கேட்ட கேள்வியையே அவனிடம் கேட்டாள். “இப்போ உனக்குப் பரவாயில்லையா?” என்று அவன் கேட்க, “ம்ம்ம்ம்…” என்றாள் மெதுவாக. “சரி” என்றவன், அவளை விட்டு எழ மனமில்லாமல் அவளை விட்டு எழ, அவன் எங்கோ எழுந்து செல்கிறான் என்று அவன் கையைப் பிடித்து, “எங்க போறே?” என்றாள் குழந்தை போல.
அவன், “உனக்கு இப்போ நல்லா இருக்கு. நீ மாத்திரை சாப்பிட்டிருக்க. நல்லா தூங்கு” என்று எழுந்தான். அவள் உதடுகள் நடுங்க, “எனக்குத் தூக்கம் வரலை ஆதி. ரொம்பக் குளிருது” என்று படுத்திருந்தவள் எழ முயற்சிக்க, அவள் மிகவும் சோர்ந்து போய் எழ முடியாமல், ‘போதென்று’ மறுபடியும் படுக்கையில் ‘பொத்தென’ விழ, அவளைப் பார்த்த ஆதி பதறி, “இப்போ எதுக்கு துர்கா எழற? பேசாமல் படு” என்று மீண்டும் எழுந்தவளை எழ விடாமல் படுக்கையில் படுக்க வைக்க, அவள், “அப்போ நீயும் என்கூடப் படுத்துக்கோ” என்று படுத்துக்கொண்டே அவன் கழுத்தில் கைவைத்து, அவனைத் தன்னோடு சேர்ந்து படுக்க வைத்துவிட்டாள். அவனை அருகில் படுக்க வைத்தவுடன், அவன் மீது தன் கையையும் காலையும் போட்டு நெருங்கிப் படுத்தவள், அமைதியாகப் படுத்திருக்க, ஆதியினால் அவளை அவளிடம் இருந்து பிரிக்க முடியாமல், அமைதியாக அவன் கைக்குள் படுத்திருக்கும் துர்காவை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அவன் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு கண்கள் மூடித் தூங்க ஆரம்பிக்க, அவனும் அவள் தூங்கட்டும் என்று கட்டிலில் சாய்ந்து படுத்துக்கொண்டான்.
அவளோடு சேர்ந்து அவனும் அசதியில் தூங்கிவிட, திடீரென்று துர்காவின் உடல் குளிரில் நடுங்கத் தொடங்க, அவள் கைகள் ஆதியை குளிரில் மேலும் இறுக்கிப் பிடிக்க, அவள் பிடி இறுகவும் கண் விழித்த ஆதி, துர்காவைப் பார்க்க, அவள் நடுங்கிக்கொண்டிருந்தாள். பதறி எழுந்தவன், அவள் கைகளையும் கால்களையும் சூடு பறக்கத் தேய்த்துவிட, அவள் குளிரும் காய்ச்சலும் குறைவதாகத் தெரியவில்லை. அவள் அருகில் படுத்து, அவளைத் தன் உடலோடு சேர்த்து இறுக அணைக்க, துர்காவும் அவனை இறுகக் கட்டிக்கொண்டாள். அவன் மார்போடு தன் முகத்தை ஒட்டி வைத்துக்கொண்டு அவள் முகத்தை உரச, அவளை இறுகக் கட்டிக்கொண்டு அவளுக்குத் தன் உடல் சூட்டைக் கொடுத்துக்கொண்டிருந்தவனின் உடல் மேலும் தணிக்கத் தொடங்கியது.
துர்கா அவனை கட்டிக்கொண்டே அவன் முகத்தருகில் வந்தவள், அரை மயக்கத்திலேயே அவனைப் பார்க்க, அவனும் அவளையே ஏக்கத்தோடு தன்னை பார்க்கும் துர்காவைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் அதிர்ச்சியில் கண்கள் திடீரென்று அகல விரிந்தது. அவன் என்ன நடக்கிறது என்று உணரும் முன்னே, துர்கா அவன் இதழில் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அவளைத் தன்னிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்த ஆதி, “துர்கா… என்ன பண்ற?” என்று அவளைத் தன்னிடம் இருந்து பிரிக்க முயற்சிக்க, அவள் அவனை மேலும் இறுக அணைக்க, “துர்கா… விடு! என்ன பண்றேன்னு உனக்குத் தெரியுமா?” என்று அவள் பிடியில் இருந்து விலகப் போராடிக்கொண்டே அவளைப் பார்க்க, அவள் அவனைப் பார்த்து, “லவ் யூ ஆதி…” என்றாள்.
அவள் அப்படிச் சொன்னதும், ஒரு நிமிடம் ஆதியின் இதயத்திற்குள் என்னவோ ஒரு உணர்வு தோன்ற, அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த ஆதி, “து… துர்கா… என்ன சொன்ன?” என்று அவன் கேட்டது சரிதானா என்பது போல மறுபடியும் துர்காவைப் பார்த்துக் கேட்க, “ஏன்டா… உனக்கு என்னை பிடிக்கவே பிடிக்காதா? நான் எவ்வளவு வருஷமா உனக்காகக் காத்துட்டு இருக்கேன் தெரியுமாடா? ஏன்டா இப்படிப் பண்ற? என்னைப் பார்த்தா உனக்குப் பிடிக்கலையாடா ஆதி?” என்று அவள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு குழந்தை போல உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அழ ஆரம்பிக்க, “அவள் தன்னை பார்த்து ‘லவ் யூ’ சொன்னாளே! அவளாகவே வந்து எனக்கு முத்தமிட்டாளே! இப்போது, எனக்காகக் காத்திருந்தேன் என்று சொல்கிறாளே!” என்று தனக்குள்ளேயே அவள் கூறியதை எல்லாம் அசை போட்டுப் பார்த்தவன், அவளிடமே கேட்டுவிடலாம் என்று அவளைப் பார்க்க, அவன் கைக்குள் குழந்தை போலத் தன் உடலைக் குறுக்கிக்கொண்டு, அவனை கட்டிக்கொண்டு தூங்கிவிட்டிருந்தாள் துர்கா. அவள் கன்னத்தை மெதுவாகத் தட்டி, “துர்கா” என்று அவளை எழுப்ப, அவள் மருந்தின் வீரியத்தில் நன்றாகத் தூங்கிவிட்டிருந்தாள். கொஞ்ச நேரம் அவள் கூறியதை எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவன், அவனும் தூங்கிவிட்டான்.
