EPISODE 31
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ரிசப்ஷன் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து மயோ ஆபீஸ் செல்வதற்காக கிளம்பிக் கொண்டு இருந்தால் , கண்ணாடி முன் நின்று தன் சட்டை பட்டனை போட்டுக் கொண்டு இருந்த அருள் கண்ணாடி வழியாக தெரிந்த மயோவை பார்த்தான்.
மயோ தான் அணிந்து இருந்த
கை இல்லாத வெள்ளை பனியன் அணிந்து ப்ளூ கலர் ஜீன்ஸ் பேன்ட் உடன் நின்று தன் உடையை சரி செய்து கொண்டு இருந்தாள். மயோவை கண்ணாடி வழியாக பார்த்து ரசித்துக் கொண்டு இருந்த அருள் , அவள் உடையை சரி செய்து விட்டு திரும்பியதும் மயோவை கண்டு கொள்ளாதவன் போல திரும்பிய அருளை மயோ அப்போது தான் கவனித்தால் .
ராஸ்கல் சொந்த பொண்டாட்டியையே அவளுக்கே தெரியாமல் சைட் அடிக்கிறான் பார் என்று நினைத்துக் கொண்ண்டவள் அவன் அருகில் வந்து அருளை பின் இருந்து அணைத்துக் கொண்டு என்ன டாக்டர் என்னை சைட் அடிச்ச மாதிரி இருந்தது என்று மயோ அவனை இருக்க அணைத்துக் கொண்டே கேட்க ….
இப்படி மெழுகு சிலை மாதிரி பொண்டாட்டி கண்ணுக்கு முன்னே இருந்த சைட் அடிக்காம இருந்தா நல்லா இருக்காது இல்லையா என்றான் குறும்பாக
ஓஹோ சரி அப்போ இப்படி தள்ளி நின்னே இனிமேல் என்னை சைட் அடிச்சுக்கோ சரியா பக்கத்துல வந்து பேசுற வேலை எல்லாம் வேணாம் என்று அவனிடம் முறைத்துவிட்டு ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து மயோ வெளியே செல்ல ….
என்ன ஆச்சு இவளுக்கு நான் இவளை நல்ல இருக்கான்னு தானே சொன்னேன் .அதுக்கு ஏன் இப்படி பேசிட்டு போற என்று அருள் யோசிக்க …
டேய் மடையா கண்ணனுக்கு எதிரே பொண்டாட்டியை வெச்சிக்கிட்டு அவளை கண்ணாட்டி வழியாக பார்த்து ரசிச்சுட்டு இருக்கியே முட்டாள் நான் உன் அருகில் தானே இருக்கேன் என்னை இப்படித்தள்ளி நின்று ரசித்தாள் மட்டும் போதுமா கிட்டே வந்து ருசிக்க வேண்டாமா என்று சொல்லாமல் சொல்லி விட்டு உன் மனைவி கோபமாக வெளியே செல்கிறாள் அவள் சொல்வது கூட தெறியாமல் இப்படி முட்டாளாக இருக்கிறாயே என்று அருளின் மனசாட்ச்ச்சி அவனை கழுவி ஊத்த ….
அப்போ இது தான் விஷயமா கரும்பு தின்ன கசக்குமா என்ன நான் போய் என் ஹாட்டு கூட ஹாட்டா கலக்க போறேன் என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே வர மயோ அவள் பனியன் மேல் ஒரு ப்ளூ கலர் ஓவர் கோர்ட் எடுத்து போட்டுக் கொண்டு இருந்தாள்.
வேகமாக அவள் அருகில் வந்து மயோவின் கையில் இருந்த அந்த கோர்ட்டை பிடுங்கி தூர வீசியவன் மயோவை இடுப்பை சுற்றி கை வளைத்து அப்படியே தூக்கிக் கொண்டு போய் சோபாவில் அமர்ந்து அவளை தன்மடியில் அமர வைத்துக் கொண்டான்.
அவன் அப்படி செய்ததும் முதலில் அதிர்ந்தவள் பின் அருளைப் பார்த்து டேய் இடியட் என்னடா பண்ற? ஆபீஸ்க்கு ரெடி ஆக வேண்டாமா? என்று கேட்டால்.
ஆபீஸ் இன்னைக்கு போகணுமா என்றான் அருள்.
இடியட் ஏற்கனவே நாம ஆபீஸ் போய் டென் டேஸ்க்கு மேல ஆயிடுச்சு இப்பவும் போகாம இருந்தா நல்லா இருக்குமா… முதல்ல என்ன விடு டைம் ஆகுது கிளம்பனும் என்று அவன் மடியில் இருந்து எழுந்திருக்கப் போனவளே விடாமல் திரும்பவும் அவள் இடுப்பை வளைத்து தன் மடியில் அமர வைத்தவன் ப்ளீஸ் ஹாட்டு…. அட்லீஸ்ட் கொஞ்ச நேரம் கழித்தாவது போய்க்கலாமே என்று அருள் கெஞ்ச…
கொஞ்ச நேரம் கழிச்சு போய்டலாம்னா அது வரைக்கும் நாம ரெண்டு பேரும் இங்கிருந்து என்ன பண்ண போறோம் என்று மயோ கேட்க…
என்ன…. பண்ண போறோமா… என்ன வேணும் பண்ணலாம் என்று சொன்னவன் தன் மடியில் இருந்தவளை அப்படியே அலேக்காக தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்தவன் தன் சட்டை பட்டனை அவிழ்க்க கூட பொறுமை இல்லாமல் வேகமாக தன் சட்டையை தலை வழியாக அவிழ்த்தவன் மயோவின் மேலே பொத்தேன விழுந்தான்.
மெத்தையில் படுத்து இருந்த தன் மேல் விழுந்தவனை பார்த்து தன் இருக்கை கொண்டு தடுத்த மயோ. டேய் இடியட் என்னடா பண்ணிட்டு இருக்க இப்ப எதுக்கு சட்டை எல்லாம் கழட்டினே ஆபீஸ்க்கு நேரம் ஆகுது சும்மா தொல்லை பண்ணாத முதல்ல என் மேல இருந்து எழுந்திரு என்று அவனை தன் மேல் இருந்து விலக்க முயற்சிக்க….
என்ன ஹாட்டு ஆசையா உன்கிட்ட வந்தா இப்படி என்னை துரத்துறியே என்று சொன்னவன் அவள் மேலிருந்து எழுந்து கட்டிலில் அவள் பக்கத்தில் படுத்தவன் போ… என் கூட பேசாதே என்று கோபமாக படுத்துக்கொள்ள…
என் இடியட்டிற்கு கோபம் வந்திருச்சா… என்று அவன் பக்கம் திரும்பி படுத்தவள். அவன் மார்பில் இருந்த முடிகளுக்குள் தன் விரலை நுழைத்து அவன் மார்பை வருடிக் கொண்டே அவனிடம் எனக்கு ஆபீஸ்க்கு லேட்டா போனா பிரச்சனை இல்ல டா ஆனா உனக்கு கிளினிக் லேட்டாயிடுச்சு இல்லையா உனக்காக வந்து பேசண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்களே அவங்கள இப்படி காக்க வைக்கலாமா என்று கேட்டால் மயோ.
அதுவும் இல்லாம பாஜா, கரண் ரெண்டு பேரும் நமக்காக வெயிட் பன்னிட்டு இருகாங்க கீழே என்றாள். மயோ
ஆமா வெயிட் பண்ணிட்டு தான் இருப்பாங்க சீக்கிரம் போகணும் நானும் என்றவன் மயோவை பார்த்து அப்போ ஒரே ஒரு கிஸ் எனக்கு கொடு நான் கிளம்புறேன். மிச்சத்தை நைட்டு வந்து பாத்துக்கலாம் என்று சொல்லி கண்ணடிக்க…
விட மாட்டியே… என்று சிரித்தவள் மெத்தையில் படுத்தபடியே எட்டி அவன் முகத்தை பிடித்து தன் முகத்திற்கு அருகில் இழுத்தவள் அருளின் இதழில் தன் இதழை வைத்து ஒற்றி எடுக்க…
ஹாட்டு இதெல்லாம் கிஸ்னு சொல்லாத நைட்டு வரைக்கும் நான் தங்கணுமா? வேண்டாமா? இப்படி கிஸ் குடுத்துட்டு என்னை ஏமாத்தாதே என்றவன். குனிந்து அவள் இதழை தன் இதழ்களால் சிறை செய்தான்.
அவள் இருபுறமும் தன் கைகளை ஊன்றி அவள் உடல் மேல் தன் பாதி உடலை போட்டு படுத்து இருந்தவன் மிகவும் தீவிரமாக அவளுக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தான்.
அவள் மேலுதடையும் கீழுதுடையும் மாறி மாறி முத்தமிட்டவன். அவள் மொத்த இதழையும் தன் வாய்க்குள் சிறை செய்தான்.
முதலில் மென்மையாக தன் முத்தத்தை ஆரம்பித்தவன் அவளும் அவனுக்கு ஈடு கொடுத்து முத்தம் கொடுக்க ஆரம்பித்ததும் இருவரின் உணர்வுகளும் விழித்துக் கொள்ள மென்மையில் ஆரம்பித்த அவன் முத்தம் வன்மையில் தொடர ஆரம்பித்தது.
மயோவும் அருளின் முத்தத்திற்கு சலிக்காமல் அவனுடன் போட்டி போட்டுக் கொண்டு அவன் கொடுத்த முத்தத்தையே அவனுக்கு திருப்பி கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அருளுக்கும் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த மயோ தன் கைகளை அவன் பறந்து விரிந்த முதுகில் படர விட….
அவள் ஸ்பரிசம் அவன் மேனியில் தாபத் தீயை மூட்டியது. இருபுறமும் ஒன்று இருந்த அவன் கைகளை எடுத்ததும் அவன் மொத்த எடையும் மயோவின் மேல் விழ…
அவன் பாரம் சற்றென்று அவன் மீது அவள் மீது விழுந்ததும் சற்று மூச்சு பிடிக்க சிரமப்பட்டவள் பின் தொடர்ந்து அருளுக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தால்.
மயோவின் கைகள் அருளின் முதுகில் கோலம் மட்டும் கொண்டிருக்க அருளின் கைகள் அவள் இருந்த கை இல்லாத பனியனின் ஜிப்பை அவிழ்த்துக் கொண்டிருந்தது
ஆபீஸ் இருக்கு நேரம் ஆகிவிட்டது போக வேண்டும் என்று அடம் பிடித்தவள் இப்போது தன்னையும் மறந்து அவன் பிடிக்குள் மயங்கிக் கிடந்தால்.
அருள் மயோவின் ஆடைகளை களைவதைக் கூட… உணரும் நிலையில் இப்போது மயோ இல்லை.
இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று கலந்து தங்கள் மோகத் தீயை இன்னும் அதிகரிக்க…
தன் மேல் படுத்திருந்த அருளை கீழே தள்ளி அவனை மெத்தையில் படுக்க வைத்து சட்டென்று அவன் மேல் ஏறி அமர்ந்து அவன் பாதி அவிழ்த்த தன் பனியனில் இருந்த ஜிப்பை மொத்தமாக அவிழ்த்து பனியனே கழட்டி தூர வீசியவள் குனிந்து அருளுக்கு முத்தமிட ஆரம்பித்தால்.
அருளின் முகத்தைப் பிடித்து தன் முத்தத்தை தீவிரமாக்கிக் கொண்டிருந்த மயோவை தன்னிடம் இருந்து பிரித்தவன். மயோவை பார்த்து சிரித்தவன் தன் மேல் அமர்ந்து மூச்சு வாங்கும் மயோவை பார்த்து கீழே பூஜா வெயிட் பன்னிட்டு இருக்காங்க உனக்கு ஆபீஸ்க்கு லேட்டாச்சுன்னு சொன்ன…. நீ ஆபீஸ் போக வேண்டாமா? என்றான் குறும்பாக சிரித்துக் கொண்டு.
அவன் மேலிருந்து மூச்சு வாங்கியவாரே கீழே குனிந்து அவனுக்கு முத்தமிட்டவள் திரும்பவும் அருளின் முகத்தை பார்த்து அவ வெயிட் பண்ணி பார்த்துட்டு போய்டுவா எனக்கு ஆபீஸ் போக வேண்டாம் என்றால்.
ஆனா நான் கிளீனுக்கு போகணுமே பேஷண்ட் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்களே என்றான் அருள்.
அதெல்லாம் உன்னோட ப்ரெண்ட் கரண் பாத்துக்குவான் நாம இவ்வளவு நேரம் ஆகியும் கீழே போகலைன்னா அவங்களே புரிஞ்சுப்பாங்க என்றவள் குனிந்து அவனுக்கு தீவிரமாக முத்தம் கொடுத்து விட்டு அருளின் முகத்தை பார்த்து ராஸ்கல் சும்மா இருந்த என்னை கெடுத்து ஒரு முத்தம் மட்டும் கொடு என்று சொல்லி எனக்கு முத்தம் கொடுத்து மூடை ஏற்றிவிட்டு இப்ப என்னடான்னா ஆபீஸ்க்கு லேட் ஆயிடுச்சு,கிளீனிக்கு போகணும்னு சொல்றியா அது எல்லாம் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்றவள்.
இதற்கு மேலும் தன்னால் பொறுக்க முடியாது என்று குனிந்து அருளுக்கு தீவிரமாக முத்தம் கொடுத்துக் கொண்டிருக்க….
அவனும் அவள் தீவிர முத்தத்திற்கு ஈடாக பதில் முத்தம் தந்தவன் அவள் உள்ளாடையை களைய ஆரம்பித்தான்.
இருவரும் ஆதாம் ஏவாள் போல தங்கள் ஆடைகளைக் கலைந்து ஈர் உடல் ஓர் உயிராக தங்களை பிணைத்துக் கொண்டு கட்டிலில் காதல் வித்தை புரிந்து கொண்டிருந்தனர்.
அவன் மேல் அவளும்… அவள் மேல் அவனும் என கூடி கலைத்து பின் ஓய்வெடுத்து திரும்பவும் கூடி கலைத்து பின் ஓய்வெடுத்து என்று எவ்வளவு நேரம் தங்களை மறந்து இருவரும் கட்டிலில் தங்கள் தேடலை திடர்ந்தனர் என்று தெரியாமலேயே இருவரும் களைப்பில் உறங்கியும் போயினர்.
அவர்கள் இருவரும் இங்கே கட்டில் களைப்பில் உறங்கிக் கொண்டு இருக்க…..இவர்கள் இருவருக்காகவும் காத்துக் கொண்டிருந்த பூஜாவும் கரணும் அருளும் மயோவும் இப்போதைக்கு கிளம்பி வரப் போவதில்லை என்று முடிவெடுத்தவர்கள் தங்கள் வேலையை பார்க்க அங்கிருந்து சென்றனர்.
❤️
மயோவிற்கும் அருளுக்கும் இடையில் பிரச்சனையை உண்டு பண்ணி அவர்கள் இருவரையும் நிரந்தரமாக பிரிக்க வேண்டும் என்று எண்ணிய ஏகாம்பரமும் ராகுலும் தங்கள் என்னம் ஈடேராமல் போகவே அடுத்து என்ன பிளான் செய்து அருளையும் மயோவையும் பிரிக்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
அருளின் குடும்பத்தை பற்றிய தகவல் அனைத்தையும் சேகரித்து வைத்திருந்த ஏகாம்பரம் ராகுலிடம் அவன் கேபினுக்கு வந்தவர் ராகுல் நீ பிஸியா இருக்கியா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொன்னார்.
இல்லப்பா சொல்லுங்க இப்பதான் நான் மீட்டிங் முடிச்சுட்டு வந்தேன் என்று சொன்னான் ராகுல்.
அந்த அருளையும் மயோவையும் பிரிக்க நம்ம போட்ட பிளான் அந்த கிழவன் செழியன் எப்படியோ கண்டுபிடித்து அதை நடக்க விடாமல் பண்ணிட்டேன்.
இப்போ இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் கண்டிப்பா அருளையும் மயோவையும் நான் பிருச்சிடுவேன் அவங்கள பிரிக்கிறது மட்டும் போதாது.
அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சா மட்டும் பத்தாது அவங்க குடும்பத்தையே இருக்கிற இடம் தெரியாம சின்னா பின்னம் ஆக்கிடணும் அவங்க கிட்ட இருக்கிற பணம் சொத்து எல்லாத்தையும் அவங்க கிட்ட இருந்து பிரிச்சு மயோவையும் அந்தச் சொழியனையும் நடுரோட்டில் கொண்டு வந்து நிற்க வைக்கணும் அப்பதான் என் ஆத்திரம் அடங்கும் என்றார் ஏகாம்பரம்.
நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் என்றான் ராகுல்.
ஏன் அந்தச் செழியனையும் மயோவையும் பழிவாங்க துடிக்கிறேன்னு தான கேக்குற என்றார் ஏகாம்பரம்.
ஆமாப்பா என்றான் ராகுல்.
அந்த மயோவுடைய அம்மா யசோதா இருக்காலே அவளும் அவ பொண்ணு மயோவும் அந்த பொண்ணு ஒரே மாதிரி திமிர் பிடிச்ச குணம் படிச்சவங்க.
மயோ உடைய அம்மாவும் அப்பாவும் மட்டுமே தனியா அந்த செழியன் நடத்திட்டு இருக்குற எஸ் என் ஹாஸ்பிடல் அப்போவே அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்கள்.
நான் அந்த ராஜாவிடம் போய் உன்னோட ஹாஸ்பிடல்ல என்னையும் ஒரு பார்ட்னர் தான் சேர்த்துக்கொண்டு சொன்னதுக்கு அவனும் அவன் பொண்டாட்டியும் என்ன பார்த்து என்ன தெரியுமா சொன்னாங்க இது ஒன்னும் பணத்துக்காக செய்ற பிசினஸ் கிடையாது இது ஒரு உயிர் சம்பந்தப்பட்டது. அதுவும் இல்லாம இந்த ஹாஸ்பிடல் எங்க ரெண்டு பேருடைய கடின உழைப்புனால வந்தது அதை எங்க குடும்பத்தை தவிர்த்து வேறு யாரையும் நாங்க இதுல சேர்த்துக்கறதா இல்லை என்று சொல்லிட்டாங்க.
இந்த ராஜா கிட்ட உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் சொல்லு இதுல நான் முதலீடு பண்ற வருமானத்தை நம்ம ரெண்டு பேரும் பாதி பாதியா வச்சுக்கலாம்னு சொன்னதுக்கு இந்த யசோதா கன்ஸ்டிரக்ஷன் பிசினஸ் மாதிரியே இந்த ஹாஸ்பிடலையும் நீங்க நினைச்சிட்டீங்களா
இது ஒன்றும் கல்லையும் மண்ணையும் வைத்துக் கட்டியது இல்லை எங்கள் கோவில் இது இதை எங்கள் இருவரின் உயிரையும் விட அதிகமாக நினைத்து கட்டி இவ்வளவு தூரம் கொண்டு வந்து இருக்கிறோம்.
நீ வந்து இதை வியாபார சந்தை ஆகிவிட்டதே என்று அந்த யசோதா என்னை கேவலமாக நினைத்து பேசினால் . அப்போதே நான் முடிவு செய்தேன் அவர்கள் உயிராக நினைக்கும் அந்த ஹாஸ்பிடலை எனக்கும் , அவர்கள் இருவரின் உயிரை அந்த ஹச்பிடலுக்கும் பலி கொடுக்க எண்ணி அவங்க ரெண்டு போரையும் இடஙக உலகத்தை விட்டே அனுப்பி வைத்தேன் .
ஆனால் அந்த ஹச்பிடலை மட்டும் என்னால் இப்போது வரை கைப்பற்ற முடியவில்லை , அந்த ஹோச்பிடலை அவள் மகள்கள் பெயரில் எழுதி வைத்துவிட்டு இருவரும் திருமணம் செய்து குழந்தை பெட்ற பின்பே அந்த ஹோச்பிடலும் அவர்களுடைய சொத்துக்களும் அந்த மயோவிற்கும் , அவள் தங்கை இளாவிற்கும் சேரும் என்று ஏற்கனவே எழுதிவைத்து இருக்கிறார்கள் என்று எனக்கு பிறகு தான் தெரிந்தது .
இந்த விஷயத்தை எல்லாம் உன்னிடம் சொல்லாமலேயே அந்த மயோவை எப்படியாவது உனக்கு கல்யாணம் பண்ணி வைத்துவிடலாம் என்று நான் நினைத்து இருந்தேன் .
ஆனால் அந்த கிழவன் யாருக்கும் தெரியாமல் காதோடு காது வைத்தார் போல அவன் பேத்திக்கு திருமணம் செய்துவிட்டு விட்டான் என்றார் ஏகாம்பரம்.
அப்பா இப்போ நான் என்ன செய்ய வேண்டும் என்று ராகுல் ஏகாம்பரதிடம் கேட்டான். என்னோட லட்சியமே அந்த SN ஹாஸ்பிடலை அடைய வேண்டும் என்பது தான் ராகுல் என்றார் ஏகம்பரம்.
உங்கள் கனவை நான் நனவாக்குகிறேன் அப்பா என்றான் ராகுல்.
எப்படி ராகுல் அது முடியும் என்றார் ஏகம்பரம்.
நீங்கள் என்ன சொன்னீரகள் மயோ, இளா இருவருக்கும் திருமணம் நடந்து அவர்களுக்கு குழந்தை பிறகு தான் இருவருக்கும் அந்த ஹாஸ்பிட்டலும், மற்ற சொத்துக்களும் பொய் சேரும் என்று சொன்னீர்கள் என்றான் ராகுல்.
ஆமா ராகுல் ஆனா அந்த மயோவுக்கு தான் கல்யாணம் ஆகியிருச்சே என்றார் ஏகம்பரம்.
ஆனால் அவள் தங்கைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே அப்பா என்றான் ராகுல்.
அவன் சொன்னதும் ஆச்சர்யமாக ராகுலை பார்த்தவர். இது சத்தியம் ஆகுமா உன்னை பற்றி தான் அந்த இளாவிற்கு தெரியுமே பிறகு எப்படி என்றார் ஏகம்பரம்.
அப்பா அவளுக்கு என்னை பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அவள் வயிற்றில் என்னுடைய குழந்தைவந்துவிட்டால் அவள் வேறு வழி இல்லாமல் என்னை திருமணம் செய்துகொண்டு தானே ஆக வேண்டும்.
அவர்கள் குடும்பத்தில் தான் ஒரு முறை திருமணம் நடந்துவிட்டால் அதில் இருந்து எந்த காரணம் கொண்டும் பின் வாங்க மாட்டார்களே…. இளாவின் வயிற்றில் என் குழந்தை வளரந்தால் அவளுக்கு என்னை தான் திருமணம் செய்தி வைப்பார்கள்.
அதன் பிறகு அந்த இளாவிற்கு சேர வேண்டிய அனைத்து சொத்துகளையும் அவளிடம் இருந்து நான் எழுதி வாங்கிக் கொள்வேன். அதன் பிறகு அந்த மயோவையும் அருளையும் பிரித்து அந்த மயோவை ஏமாற்றி அந்த சொத்துக்களை எல்லாம் நான் வாங்கிக் கொள்வேன் என்று ராகுல் சொல்ல…
நீ சொல்வதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது ராகுல். ஆனால் இது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லையே என்று ஏகாம்பரம் கேட்க….
எனக்கும் இது எளிதான காரியம் இல்லை என்று தெரியும்ப்பா… கொஞ்சம் எனக்கு டைம் கொடுங்க நானே நேரம் வரும்போது எல்லா விஷயத்தையும் முடித்து காட்டுகிறேன் என்று ராகுல் சொல்ல….
ஏகாம்பரம் அவனை கட்டி அணைத்துக் கொண்டு சபாஷ் ராகுல் இப்போது தான் நீ என்னோட வாரிசுன்னு ப்ரூவ் பண்ணி இருக்கே என்று சொல்லி அவனை கட்டிகொண்டு சந்தோசப்பட்டார்.
ராகுலும் அவனை அப்பாவை கட்டிக் கொண்டவன் கொஞ்ச நாள் பொறுத்து இருங்கப்பா நீங்க நினைச்சா எல்லாமே நடக்கும் அதுவும் நானே நடத்தி வைப்பேன் என்று சொல்லியவன்.
தன் மனதில் அந்த இளாவை எப்படி வளைத்து போடுவது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
EPISODE 32
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
பாரடைஸ் நிறுவனத்தின் எம் டி உடன் இன்று மீட்டிங் மயோவின் ஆபிஸில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது ஏற்கனவே குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் இருந்த கன்ஸ்டருக்ஷன்ஸ் குறித்து பேசுவதற்கு இந்த மீட்டிங்கை பூஜா ஏற்பாடு செய்து இருந்தாள்.
மயோ தன் எதிரே அமர்ந்து இருந்த பாரடைஸ் நிறுவனத்தின் எம். டி. விஷ்வாவை பார்த்தவள்.
என்ன மிஸ்டர் விஷ்வா நாங்க கொடுத்த ப்ரொஜெக்ட்டை இன்னும் முடிக்காமல் இருந்தால் உங்களால் எங்களுக்கு வரும் நஷ்டத்திற்கு நீங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று மயோ கோபமாக கேட்டாள்.
மேடம் நாங்க வேண்டும் என்றே காலம் கடத்த வில்லை, அந்த இடம் தங்களுடையது என்று சொல்லி ஒரு ரவுடி கும்பல் எங்களை வேலை செய்ய விடாமல் பிரச்சனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நாங்களும் எங்களால் முடிந்த அளவு போலீஸ் எல்லாம் வைத்து பேசிப்பார்த்து விட்டோம் ஆனால் அவர்கள் எதற்கும் அசைந்து கொடுப்பது போல தெரியவில்லை.
நீங்கள் எனக்கு கொடுத்த முப்பது நாள் கேடு முடிய இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளது எங்களால் எந்த முயற்சியும் எடுக்க முடியவில்லை என்று விஷ்வா சொல்ல…
சரி அப்போ இந்த பிரச்னையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற மயோ விஷ்வாவை பார்த்து நான் இந்த பிரச்னையை சரி செய்து கொடுத்தால் நீ எனக்கு என்ன தர போறே டா விஷ்வா என்றாள் மயோ.
இவ்வளவு நேரம் இருவரும் பிசினஸ் பார்ட்னர்ஸ் என்ற முறையில் மரியாதையுடன் பேசிக் கொண்டு இருந்தவர்கள்.
இப்போது நண்பர்கள் ஆக மாறி இருவரும் பேச ஆரம்பித்தனர். விஷ்வாவும் மயோவும் லண்டனில் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். விஷ்வா அவன் அப்பாவின் கான்ஸ்டருக்ஷன் தொழிலை எடுத்து நடத்திக் கொண்டு இருக்கிறான்.
அவ்வப்போது மயோவுடன் இணைந்து வேலை செய்வது வழக்கம் அதே போல தான் இந்த முறையும் மயோ கொடுத்த ப்ராஜெக்ட் எடுத்து செய்கிறான்.
இந்த ப்ராஜெக்ட் மட்டும் தான் விஷ்வாவை சரியாக வேலை செய்ய விடாமல் பெரிய குடைச்சலாக இருக்கிறது.
மயோ இந்த பிரச்சனை ஒன்னும் அவ்ளோ லேசுப்பட்ட விஷயம் கிடையாது , அந்த ரவுடி பேரை சொன்னாலே எல்லா ஆஃபீஸ்ர்ஸும் பயந்து நடுங்குறாங்க.
அவன் இதுவரை கணக்கு இல்லாம இடங்களை வளைச்சு போட்டு இருக்கான் , அதை எதிர்த்து யார் கேட்டாலும் அவங்களை கொன்னு அதே கட்டிடத்துல புதைச்சுடராத சொல்ராங்க என்றான் விஷ்வா.
அவன் சொல்லும் விபரங்கவளை எல்லாம் பொறுமையாக கேட்ட மயோ அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் நான் இந்த பிரச்சனையை இன்னும் ஒரே நாளில் முடிச்சு காட்டுறேன்.
அப்படி நான் முடிச்சுட்டா நீ எனக்கு என்ன தருவே என்றால் மாயோ.
நீ என்ன கேட்டாலும் நான் தரேன் மயோ இந்த ப்ரோப்லம் மட்டும் சால்வ் ஆனா போதும் என்றான் விஷ்வா.
சரி அப்போ நான் இந்த ப்ரோப்ளமை சால்வ் பண்ணிட்டு எனக்கு என்ன வேணும்னு சொல்றேன் என்ற மயோ. சரி நீ கிளம்பு நான் உனக்கு பிறகு கால் பண்றேன் என்றால்.
சரி மயோ ரொம்ப ரிஸ்க் எடுக்காத நமக்கு அந்த இடமும் பணமும் ஒரு பெரிய விஷயம் இல்லை , அவனிடம் தேவை இல்லாமல் நீ நேரடியாக வம்பு வளர்த்துக் கொள்ளாதே என்றவன் அவளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான் விஷ்வா.
❤️
விஷ்வாவை அனுப்பி வைத்து விட்டுவந்த மயோ தன் கேபினிற்கு வந்தவள் தனக்கு தெரிந்த சில முக்கிய புள்ளிகளை தொடர்பு கொண்டு அந்த ரௌடியை பற்றி அவனால் வந்த பிரச்னையை பற்றி பேச அவன் பெயரை கேட்டதுமே அனைவரும் தங்களால் இந்த பிரச்சனையில் தலையிட முடியாது என்று சொல்லி விட்டனர்.
அவளும் தனக்கு தெரிந்த ரௌடியைகளையும் பெரிய உயர் அதிகாரிகளிடமும் பேசி பார்த்து விட்டால் யாருமே இந்த வேளையில் தங்களை இணைத்துக் கொண்டு அந்த ரௌடியை எதிர்க்க துணியவில்லை.
மயோ என்ன செய்வது என்று யோசித்தவாறே கண்மூடி தன் சேரில் தலை சாய்த்து படுத்து இருந்த்தால் , அவளை பார்க்க பூஜாவிற்கு கஷ்டமாக இருந்தது , மயோவிடம் வந்த பூஜா அவள் தொழில் கைவைத்து ஏய் மயோ இந்த ப்ராஜெக்ட் ஆரம்பித்ததில் இருந்து உனக்கு பெரும் தலைவலியாக தானே இருக்கிறது.
பேசாமல் இந்த ப்ரொஜெக்ட்டை ட்ரோப் பண்ணிவிட்டால் என்ன என்று கேட்டாள் பூஜா. அவள் அப்படிச் சொன்னதும் கண் விழித்து அவளை பார்த்தவள் எனக்கு அந்த ரௌடியை மீட் பண்ண மீட்டிங் ரெடி பண்ணு இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள நான் அவனை மீட் பண்ணனும் என்றாள் மயோ .
ஏய்….மயோ உனக்கு என்ன பைத்தியம் எதுவும் பிடித்து விட்டதா… அந்த ரவுடி ரொம்ப மோசம் ஆனவன். அவனை போய் நீ மீட் பண்றது அவ்வளவு சரியாய் இல்லை.
நாம வேற எதுவும் வழி இருக்கிறதா என்று பார்க்கலாம் என்றாள் பூஜா. நான் சொல்வதை செய் பூஜ் சீக்கிரம் மீட்டிங் அரேஞ் பண்ணு என்றால் மயோ
நான் சொல்லி நீ என்ன கேட்டிருக்க நீ நினைச்சது நடக்கணும் உனக்கு அப்படி தானே என்ற பூஜா
மயோவை முறைத்து விட்டு அவள் கேபினில் இருந்து சென்றால்.
பூஜா சென்றது அவளை நினைத்து சிரித்தவள் தன் கார்ட்ஸ்களை அழைத்து தான் சந்திக்க போகும் ஆளை சொல்லி அவர்களை தயாராக இருக்க சொன்னாள்.
பூஜாவிடம் சொன்னது போல ஒரு மணி நேரத்தில் அந்த ரௌடியை சந்திக்க மீட்டிங் இங்கே செய்து இருந்தால்.
மயோ மட்டும் தனியாக அந்த ரௌடியை பார்க்க செல்வதாக சொல்ல…. பூஜா அதற்கு ஒப்புக் கொள்ளாமல் அவளும் மயோவுடன் வம்படியாக கிளம்பினாள்.
இருவரும் கிளம்பி அந்த ரவுடி நடத்திக் கொண்டு இருக்கும் பாரிற்கு வந்தனர்.அங்கு தான் அவன் அவர்களை சந்திக்க வர சொல்லி இருந்தான்.
மயோவையும் பூஜாவையும் அங்கிருந்த ஆட்கள் முழுவதுமாக பரிசோதித்த பின்பு தான் அவர்கள் இருவரையும் உள்ளே விட்டனர்.
அந்த இடம் சிட்டியிலேயே மிகவும் பிரபலமான பார் அது.இந்த பாரிற்க்கு மிக்வும் ப்ரபலமானவர்களும் விஐபிக்களும் ரெகுலராக வருபவர்கள்.
மாயோ கூட தன் பிசினஸ் நண்பர்களை சந்திக்க ஓரிரு முறை இந்த பரிற்கு வந்து இருக்கிறாள் , அப்போது எல்லாம் இந்த பார் ஒரு ரௌடியால் நடை பெறுகிறது என்று அவளுக்கு தெறியாமல் போனது.
அந்த பாரை lசுற்றி நோட்டம் விட்டவாறு மிடுக்காக மாயோ நடந்து சென்று கொண்டு இருக்க…அவளுடன் வந்து கொண்டு இருந்த பூஜா ஏய் இந்த இடத்தை பார்ரதியா எதனை ரௌடிங்க இருக்காங்க இங்க இருக்க அத்தனை பேரும் நம்ம ரெண்டு போரையும் தான் பாத்துட்டு இருக்காங்க மயோ.
இப்போ கூட ஒன்னும் கெட்டப் போகலை நாம இப்படியே வெளியே போயிடலாம் இங்க இருகவனுங்க பார்வையே சரி இல்லை என்று பூஜா மயோவிடம் அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல…
ஏய் பூஜ் அழகான பொண்ணுங்க எங்க இருந்தாலும் இந்த ஆம்பளைங்க கண்ணு நம்ம மேல தான் இருக்கும். அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நம்ம வேலையை மட்டும் நாம பாத்துட்டு போயிட்டே இருக்கனும்.
இதை எல்லாம் பெருசா எடுத்துக்காத நீ அமைதியா என்கூட வா போகலாம் என்றவள் பூஜாவின் கையை பிடித்துக் கொள்ள….
அவ்வளவு நேரம் தங்களை சுற்றி நின்ற ரவுடிகளை பார்தது நடுங்கி கொண்டு இருந்த பூஜாவின் கை மயோ பிடித்ததும் அவள் கையை இருக்க பற்றிக்கொண்ட பூஜா மயோவை பார்க்க…
இவ்வளவு பயம் இருக்கு அப்பறோம் ஏன் என்கூட வந்தே பேசாம நீ ஆஃபீஸிலேயே இருந்து இருக்கலாமே என்றால் மயோ.
இப்போ தான் தோணுது டி நான் பேசாம ஆஃபீஸிலேயே இருந்து இருக்கலாம் என்று பாவமாக சொன்னால் பூஜா.
அவளை பார்த்து சிரித்தவாறே நான் இருக்கேன் இல்லை என்று சொன்ன மயோ உள்ளே செல்ல…
இங்கு வெளியே பாருக்குள் மயோவும் , பூஜாவும் வந்ததில் இருந்து என்ன செய்கிறார்கள் என்று உள்ளிருந்து கொண்டே மயோ பார்க்க வந்த ரவுடி சின்னு சிசி டிவி வழியாக உள்ளே இருந்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
தன் ஆட்களிடம் திரும்பி அவ்வளவு பெரிய எஸ் என் நிறுவனத்தை இந்த பெண்ணை நிர்வகித்துக் கொண்டு இருக்கிறாளா?என்று கேட்டான்.
அவன் அருகில் நின்று கொண்டு இருந்த அவனது அடியாள் ஆமாம் பாஸ் இந்த பொண்ணை பற்றி நிறைய நியூஸ் பேப்பரில் வந்து இருக்கிறது இந்த பொண்ணு கான்ஸ்டருக்ஷன் , ஹாஸ்பிடல் , பெரிய பெரிய தொழில் அதிபர்களுக்கு பைனான்ஸ் அப்படி இப்படின்னு ஏகப்பட்ட தொழில் பண்ணிட்டு இருக்கு என்றவன் நீங்க தான் நியூஸ் பேப்பரை படிக்குறதில்லையே என்று சின்னுவின் அடியாள் சொல்ல…அவனை முறைத்தவன் நான் உன்ன கேட்டேனா என்றான் சின்னு.
அப்போது கதவை திறந்து கொண்டு சின்னு இருந்த அறைக்குள் வந்த மயோ தன் பார்வையை அரை முழுவதும் ஒரு முறை சுழல விட்டவள் அங்கே ஒரு பெரிய சோபாவில் வாயில் சுருட்டு ஒன்றை வைத்துக் கொண்டு சுருள் முடியுடன் நல்ல சிவந்த நிறத்தில் பூ போட்ட சட்டை அணிந்து பெரிய சைஸ் பிராண்டட் கூலர்ஸ் அணிந்து முறுக்கிய மீசையும் தாடியும் வைத்து அவன் சிவந்த முங்கத்திற்கு அந்த கரு நிற தாடியும் மீசையும் அவனை எடுப்பாக காட்டினாலும் , பார்ப்பதற்கு மயோ எதிர்பார்த்தது போல ரவுடி என்றாள் இ
ப்படி தான் இருப்பார்கள் என்ற அவள் எண்ணத்தை மாற்றும் வகையில் மிகவும் நீட்டாக உடை அணிந்து கம்பீரமாக சோபாவில் அமர்ந்து இருந்தவனை பார்த்து மயோ இம்ப்ரெஸ்ஸிவ் என்று சொல்ல…..
அவள் அருகில் நின்று இருந்த பூஜா ஏய்….என்ன டி இவனா நாம தேடி வந்த ரவுடி பாக்குறது சப்பி பாய் மாறி இருக்கான்.இவனை பார்த்தால் ரவுடி மாதிரி தெரியலையே என்றால்.
அவளை திரும்பிப் பார்த்த மயோ சிரித்துவிட்டு வா…. என்று சொல்லி அவன் முன்னே சென்று அங்கிருந்த சேரில் கால் மேல் கால் போட்டு திமிராக அமர்ந்தாள் மயோ.
சிவப்பு நிற உடை மிகவும் ஸ்டைலாக அணிந்து சிவப்பு வண்ண உதட்டு சாயம் அணிந்து கருப்பு நிற கண்ணாடி அணிந்து அவன் முன் கம்பீரமாக அமர்ந்து இருந்த மயோவை பார்த்தவன்
( மயோ எப்படி உடை அணிந்து இருந்தால் எப்படி இருக்கும் என்று என்னோட ப்ரொபைல் போட்டோவில் வைத்து இருக்கேன் பாருங்க ஃபிரெண்ட்ஸ் )
மயோவை பார்த்து குட்டி நல்லா அழகா தான் இருக்கே என்றவன் அவள் அருகில் நின்று கொண்டு அவனையே வைத்த கண் வாங்காமல் அதிசயம் போல பார்த்துக் கொண்டு நின்று இருந்த பூஜாவை பார்த்து நீயும் உக்காரு குட்டி என்றான்.
அவள் இல்லை பரவாயில்லை என்று சொல்ல , நோ… நோ… நோ….அப்படி மாட்டேன்னு சொல்லக் கூடாது இப்படி அழகு சிலை மாதிரி இருக்குற நீ என் கண்ணு முன்னாடி நின்னுட்டு இருந்தா எனக்கு தான் வலிக்கும் என்றான்.
அவன் சொன்னதை. கேட்டு என்ன?? என்று பூஜா புரியாமல் அவனை பார்க்க… இங்க…இங்க… வலிக்கும் என்ற சொல்லி தன் இதயத்தை காட்ட….
அவனை முறைத்த பூஜா பரவாயில்லை நான் இங்கயே நிக்குறேன் என்று சொல்ல , தன் அருகில் நின்று இருந்தவனை பார்த்து டேய் இங்க வா.. என்று அழைத்தான். அவன் என்ன பாஸ் என்று சின்னுவின் முகத்தருகே வர…
ஏன் டா அவங்க உக்கார சேர் போடாம உக்காரு உக்காருன்னு சொன்னா அந்த குட்டி எப்படிடி உக்காரும் என்று சொல்லி அந்த ஆடியாளை ஓங்கி ஒரு அரை விட…..
அவன் கன்னத்தைதேய்த்துக் கொண்டே வேகமா சென்று ஒரு சேரை எடுத்து வந்து போட்டான்.டேய் மடையா இது எல்லாம் என்னை பாக்க வர ககஸ்டமருங்க உக்காருற சேர் டா….
நீ போய் உள்ளே இருக்க நான் உக்காருவேன் இல்ல அந்த சேரை எடுத்து வந்தது போடு என்று சொல்ல….
தலைவா அந்த சேரில் நீயும் வருங்கால அண்ணியும் தான் உக்காரனும்னு சொன்னியே இப்போ இந்த பொண்ணை என்று சொல்லி சின்னுவை பார்க்க….
இப்போ நீ போய் அந்த சேரை எடுத்துட்டு வந்து போடுறியா இல்லை நான் உன் கன்னத்துல நாலு போடவா என்று சின்னு அவனை முறைக்க…
அடுத்த நிமிடம் சின்னு சொன்ன சேரை கொண்டு வந்து போட்டவன் பூஜாவிடம் அண்ணி உக்காருங்க என்று சொல்ல…
அவள் புரியாமல் அவனை பார்த்து அண்ணியா என்றவள் என்னை எதுக்கு அண்ணின்னு கூப்பிடறீங்க என்று முறைக்க….
எனக்கு சேர் எல்லாம் எதுவும் வேணாம் நான் இங்கயே இருக்கேன் என்று சொல்லி பூஜா அந்த சாறில் உட்கார மறுக்க….
பூஜ் , உட்காரு என்று மயோ சொன்னாள்.இல்லை மயோ அது வந்து என்று பூஜா தயங்க…
பூஜா , உட்காரு என்று சற்று அதட்டலான குரலில் மயோ சொல்ல…. பூஜா மறுபேச்சு இன்றி பேசாமல் அமர்ந்தாள்.
பூஜா அமர்ந்ததும் அவளையே விழுங்குவது போல பார்துக்கொண்
டு இருந்த சின்னுவின் முகத்திற்கு முன் தன் விரலை சொடுக்கிட்டு.
ஹலோ மிஸ்டர் சின்னு உன் பேரை கேட்டாலே எல்லாரும் பயந்து ஓடுற அளவுக்கு உன் பேரில் என்ன இருக்கு என்று அவனை எரிச்சல் ஆக்கும்படி மயோ பேச…
உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம் பேசாம அந்த இடத்தை என் பேருல எழுதி கொடுத்துட்டு உன் வேலையை பார்த்துட்டு போய்ட வேண்டியது தானே என்றான்.
அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமால் அவள் எதற்காக அங்கு வந்து இருக்கிறாளோ அதை பற்றி அதுவும் தன் முடிவை சொன்னான்.
சின்னு மயோவை பார்த்து முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு பேசியவன். அவளிடம் பேசிவிட்டு பூஜாவிடம் திரும்பியன் தன் முகத்தை சிரித்த முகமாக தன் கன்னத்தில் கை வைத்து அவளை பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவன் தன்னை அப்பட்டி பார்ப்பது பிடிக்காமல் பூஜா அவனை முறைத்தவள் இவன் எல்லாம் ரௌடின்னு யார் சொன்னது. இதுவரைக்கும் பொம்பளைங்களையே பார்த்ததில்லயா….இப்படிக்கடிச்சி திங்குறவன் மாதிரி பாக்குறான் என்று தன் வாய்க்குல்லேயே முணுமுணுத்தவள் அவனை பார்ப்பதை தவிர்க்க….
அவள் பேசியதவு அவனுக்கு மட்டும் அல்ல அங்கிருந்த அனைவருக்குமே கேட்டது. அவளை பார்த்து அசடு வழிய சிரித்த சின்னு.நான் இதுவரை பாக்காத பொம்பளைகளே கிடையாது குட்டி….ஆனா உன்ன பார்த்ததும் நான் எப்படி விழுந்தென்னு எனக்கு தெரியலையே
” நீ வெரி ரேர் பீஸு குட்டி… “என்று சொன்னவன் அவளை பார்த்து சிரித்துவிட்டு மயோவிடம் திரும்பி இதோ உன்பக்கத்துலயும் தான் ஒரு பொம்பளை உக்கார்ந்திருக்கு இது மூஞ்சியை பார்த்தா எவனுக்காவது மூட் வரும்ங்குறே என்றவன் மயோவை ஒரு முறை அலட்சியமாக திரும்பி பார்த்துவிட்டு இது இப்படி உர்ருன்னு மூஞ்சியை வெச்சிருந்தா இது கூட சிரிச்சு பேச எவனுக்காவது தோணுமா…. அப்பறோம் இப்படி தான் பேச தோணும்.
அதுவே உன் முகத்தை பாரு எவ்வளவு அழகா இருக்க அதுவும் குட்டி பொண்ணு மாதிரி களையா சிக்குன்னு இருக்கே என்று சொல்ல….
அவன் மயோவை பொம்பளை என்றும் தன்னை குட்டி பொண்ணு என்று சொன்னதும் பூஜா சிரித்துவிட….
அவள் சிரித்தும் மயோ பூஜாவை முறைத்துவிட்டு ஹலோ மிஸ்டர் தேவை இல்லாம என்னை பத்தி பேசுற வேலை எல்லாம் வேணாம். வந்த வேலையை மட்டும் பேசுங்க என்று மயோ அவனிடம் கடு கடுவென பேச….
பூஜாவை பார்த்தவன் இது கூட எல்லாம் நீ எப்படி வேலை பாக்குறே பேசாம என்கூட வந்திடு நான் உன்னை இங்கே உக்கார வெச்சு உன்னை ராணி மாதிரி பாத்துக்கிறேன் என்று தன் மடியை காட்டி சொல்ல ,….
அவனை முறைத்த பூஜா நான் இவ கூடயே வேலை பாக்குறேன். நீங்க உங்க வேலையை பாருங்க என்று பூஜா கோபமாக பேச….
குட்டி கோபம் வந்தாலும் அழகா தான் இருக்கா… என்று பூஜாவை ரசித்தவரே தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் மயோவைப் பார்த்து நீ என்கிட்டே என்ன சமாதானம் பேச வந்தாலும் வேலையாகாது……பேசாம நீ அந்த இடத்தை என் பேருல எழுதி வெச்சிடு அதுதான் உனக்கு நல்லது என்றான் சின்னு.
அவன் சொல்வதை கேட்ட மயோ சரி உன் பேரிலயே நான் அந்த இடத்தை எழுதி வெச்சுடறேன் என்றாள் மயோ.
மயோ சொன்னதை கேட்டு அதிர்ந்த பூஜா ஏய்… மயோ என்ன? டி சொல்றே!!!அந்த இடத்தோட மதிப்பு என்னனு தெரியுமா அது எவ்வளவு கோடி பெருமானம் உள்ள இடம் அதை ப்பி இந்த ரவுடிக்கு சும்மா தூக்கி கொடுக்குறேன்னு சொல்றியே உனக்கு இதை சரியா படுத்தா சொல்லு… நீ நல்லா யோசிச்சு தான் சொல்றியா மயோ என்று அதிர்ச்சியாக மயோவிடம் கேட்க…
மயோ சிரித்துக் கொண்டே எனக்கு தெரியும் பூஜ் என்றவள் சின்னுவை பார்த்து நீ சொன்னது போல அந்த இடத்தை நாளைக்கே உன் பேரில் நான் மாற்றி எழுதி வைக்கிறேன் என்றாள்.
EPISODE 33
ஹலோ ஃபிரெண்ட்ஸ்🌹
சின்னு மயோவின் இடத்தை அவன் பேரில் எழுதிக் கொடுக்க சொல்லி கேட்க …
அவளும் சரி என்று சொல்லி நீயே andha இடத்தை வைத்துக் கொள் என்று சொல்லவும் .
என்ன நான் கேட்டதும் சரின்னு சொல்லிட்டா எதுவும் பிரச்சனை பண்ணுvaaன்னு இல்ல நினைச்சு இருந்தேன் என்ற நினைத்த சின்னு மயோ நிஜமாகத்தான் சொல்கிறாளா என்பது போல அவளை பார்க்க ….
என்ன அப்படி பாக்குறே நான் நிஜமா தான் சொன்னேனான்னு சந்தேகமா இருக்கா என்றால் மயோ .
சின்னு aaமாம் என்று தலையை ஆட்ட …
நான் சொன்னா சொன்னது தான் ஒரு விஷயம் செய்றேன்னு சொல்லிட்டேன்னா அதில் இருந்து பின் வாங்க மாட்டேன் என்று மயோ சொன்னாள் .
அப்போ இதுக்கு முன்ன அந்த கட்டிடத்தை கட்டி தரேன்னு சொன்னவனுக்கு கொடுக்காம நான் பிரச்சனை பன்றேன்னு சொல்லி தானே நீ எனக்கு கொடுக்குறே அப்போ நீ அவனை ஏமாத்திட்ட தானே என்றான் நக்கலாக .
அந்தப் பழக்கம் என் அகராதியிலேயே கிடையாது என்ற மயோ. அந்த BN இண்டஸ்ட்ரீஸ் கிட்ட இருந்து பாரடிஸ் கான்ஸ்ட்ரக்ஷனில் வேலை நடைபெறாமல் இருக்கவும், என்னோட கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ல வேலை தாமதம் ஆக்குவதற்கும் நீ எவ்வளவு பணம் வாங்கினாய் என்று கேட்டால் மயோ.
BN இண்டஸ்ட்ரீஸ் இடம் பணம் வாங்கிக் கொண்டுதான் சின்னு மயோவின் இடத்தில் பாரடைஸ் கான்ஸ்ட்ரக்ஷனில் வேலைகளை செய்ய விடாமல் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தான்.
இது எப்படி உனக்கு தெரியும் என்று ஆச்சரியமாக சின்னு மயோவை பார்த்து கேட்க…
சின்னுவைப் போலவே பூஜாவும் ஆச்சரியமாக மயோவை பார்க்க…
என்ன பூஜ் அப்படி பாக்குற என்று கேட்டால் மயோ.
நான் கலெக்ட் பண்ண வரைக்கும் இந்த மாதிரி ஒரு இன்ஃபர்மேஷன் எனக்கு கிடைக்கவே இல்லையே. உனக்கு மட்டும் எப்படி கிடைத்தது நான் தானே உனக்கு எல்லா விபரமும் கொண்டு வந்து கொடுத்தேன் என்று பூஜா கேட்க…
நீ கொண்டு வந்து கொடுத்த விபரங்களில் தான் நானும் இதை கண்டுபிடித்தேன் ஆனால் நீ அதை கவனிக்க தவறி விட்டாய் என்றால் மயோ.
இவனைப் பற்றி நான் கொடுத்த தகவல்களில் இருந்தால் நீ இதை கண்டுபிடித்தாய் என்று பூஜா ஆச்சரியமாக கேட்க…
ஆம் என்று தலையாட்டிய மயோ தன் ஹேண்ட் பேக்கில் இருந்து ஒரு போட்டோவை எடுத்து தனக்கு முன் இருந்த டேபிளில் போட…. சின்னு அது என்ன என்று எட்டிப் பார்க்க எழுந்திருப்பதற்குள் பூஜா அந்த போட்டோவை டேபிளில் இருந்து அவசரமாக எடுத்து அந்த போட்டோவை நன்றாக கவனிக்க…
அதில் சின்னு ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஏறப்போகும் அந்த போட்டோ மட்டும்தான் இருந்தது அதை பார்த்த பூஜா இதுல எப்படி நீ சொன்ன தகவல் கண்டுபிடிச்ச என்று பூஜா கேட்க…
அதை வாங்கிய மயோ டேபிளில் வைத்து சின்னவையும் பார்க்குமாறு ஜடை செய்தவள் அந்த கார் நின்றிருந்த இடத்திற்கு பின்னால் இருந்த கட்டிடத்தை சுட்டிக்காட்டி இந்த கட்டிடம் BN நிறுவனத்துடையது.
இவன் அந்த நிறுவனத்தில் யாரையோ சந்தித்து விட்டு தான் வெளியே வரும் போது இந்த போட்டோவை எடுத்து இருக்கிறார்கள் என்று சொன்ன மயோ.
சின்னுவிடம் திரும்பி நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். என்னோட சைட்ல வேலை நடக்க விடாமல் செய்வதற்காக அந்த பி என் நிறுவனத்தில் இருந்து நீ எவ்வளவு பணம் வாங்கினாய் என்று கேட்டால்.
எப்படியும் மயோவிற்கு விஷயம் தெரிந்து போய் விட்டது. இனியும் அவளிடம் மறைப்பதில் பிரயோஜனம் இல்லை என்று நினைத்த சின்னு தன் கைவிரல்களை விரித்து ஐந்து விரல்களையும் காட்ட…
வாட் அஞ்சு கோடி வாங்கினியா என்று மயோ கேட்க..
அவள் சொன்னதும் அதிர்ந்த சின்னு இந்க பாருமா…..5 கோடி கொடுக்கிற அளவுக்கு எல்லாம் நான் இன்னும் பெரிய வேலைக்கு போகல. அந்த ஆளு வேற பேரம் பேசி கடைசியில் 5 லட்சம் தான் தருவேன் என்று சொன்னார் அதுக்கு தான் நான் இந்த ஒரு மாசமா வேலை பாத்துட்டு இருக்கேன் என்று சொன்னான் சின்னு.
சின்னு சொன்னதை கேட்ட மயோ , போயும் போயும் இந்த அஞ்சு லட்சத்துக்காகவா என்னோட பில்டிங்கில் வேலை நடக்க விடாமல் செஞ்ச முட்டாள் என்று சொல்லி மயோ சத்தமாக சிரிக்க…
என்னமா ரொம்ப ஓவரா பேசுற நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் என்ன மட்டம் தட்டு பேசிக்கிட்டே இருக்கேன் நான் எவ்வளவு பெரிய ஆள் என்று உனக்கு தெரியுமா என்று கேட்டான் சின்னு.
இந்த பாரோட மதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா இதுல ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் பணம் வருதுன்னு உனக்கு தெரியுமா என்று சின்னு கோபமாக மயோவை பார்த்து கேட்க…
இதைத்தாண்டா முட்டாள் நானும் கேட்கிறேன் இவ்வளவு பெரிய பாருக்கு சொந்தமான காரணம் நீ வெறும் அஞ்சு லட்சத்திற்காக அந்த பி என் இண்டஸ்ட்ரீஸ் ல பாக்குறியா என்று கேட்டால் மயோ.
இந்த வேலைய முடிச்சு கொடுத்த அஞ்சு லட்சமும் அப்புறம் அந்த பில்டிங்கை கட்டி முடிச்சு கொடுத்ததுக்கு அப்புறம் அதுல ஒரு அபார்ட்மெண்ட் எனக்கு தரேன்னு சொன்னேன் அதனாலதான் இப்போதைக்கு அஞ்சு லட்சம் போதும் என்று சொல்லி நான் வாங்குனேன் என்று சின்னு சொல்ல…
சரி நான் உனக்கு அந்த பில்டிங்கிலேயே உன் பேர்ல எழுதி தரேன் அதுக்கு பதிலா நீ எனக்கு ஒரு வேலை பண்றியா என்று கேட்டால் மயோ.
அந்த பில்டிங்கை எழுதி தருகிறேன் என்று சொன்னதை நம்ப முடியாமல் சின்னு அவளை வாய்ப்பிழந்து பார்க்க…
மயோவின் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்த பூஜா அவள் காதில் உனக்கு இங்க பைத்தியம் பிடிச்சிருச்சாடி அந்த பில்டிங் மதிப்பு எவ்வளவு தெரியுமா இத அவனுக்கு முழுசா கொடுக்கிறேன்னு சொல்ற இவனே ஒரு ரவுடி இவனை நம்பி நீ என்ன வேலையில் இறங்க போற என்று பூஜா கேட்க..
ஓய்க்குட்டி நீ உன் முதலாளியம்மா காதுல பேசுறது எனக்கு எங்க நல்லாவே கேக்குது. சத்தமாவே பேசி இருக்கலாம் என்று சின்னு பூஜாவை பார்த்து பேச..
இங்க பாருங்க என்ன குட்டி கிட்டின்னு கூப்பிட வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க என் பேரு பூஜா என்று சொல்ல…
பூஜா பேரு நல்லாத்தான் இருக்கு ஆனா எனக்கு உன்ன குட்டின்னு கூப்பிட தான் புடிச்சிருக்கு என்று சொன்னால் வலிந்து கொண்டேன் சின்னு அவளிடம்.
நீங்க ரெண்டு பேரும் அப்புறம் சண்டை போடுங்க முதல்ல நம்ம பிசினஸ் டீலிங் முடிச்சிடலாமா மிஸ்டர் சின்னு என்று அவனை மரியாதையாக மயோ அழைக்கவும்.
ஒரு நிமிஷம் இரு குட்டி பிசினஸ் டீலிங் முடிச்சுட்டு அப்புறம் வந்து நான் உன்கிட்ட பேசுறேன் என்று அவளைப் பார்த்து சிரித்தவன் மயோவை பார்த்து சொல்லுங்க மேடம் என்றான் அவனும் மரியாதையாக.
அந்த பி என் கன்ஸ்ட்ரக்ஷனுக்கு கொடுத்த நேரத்துல நான் அந்த பில்டிங் வேலை முடிச்சு கொடுக்கலைன்னா அவனுக்கு 50 கோடி ரூபாய் நஷ்ட ஈடு நான் கொடுக்கணும்.
50 கோடி மதிப்புள்ள பில்டிங்கையும் அவனுக்கு குடுத்துட்டு 50 கோடி நஷ்ட ஈடும் நான் அவனுக்கு கொடுக்கணும்.
அப்படி பார்த்தா எனக்கு தான் நஷ்டம் அதனால நீ அந்த பி என் நிறுவனத்திற்காக தான் வேலை செய்து என்ன சொல்லி ஒத்துக்கணும். சொல்லித்தான் என் கட்டடத்துல வேலை பார்க்க விடாமல் இடைஞ்சல் பண்ணினதா நீ ஒத்துக்கிட்ட அவங்க தான் எனக்கு நஷ்ட ஈடு கொடுக்கணும் அந்த பில்டிங்கையும் அவங்க கிட்ட இருந்து நான் வாங்கி விடுவேன் .
நல்லா யோசிச்சு சொல்லு அவனுக்கு துரோகம் பண்ணிட்டு என் கூட உன்னால வேலை பார்க்க முடியுமா அப்படி நான் சொன்ன மாதிரி செஞ்சு என்ன அந்த பில்டிங்கை உன் பேரில் எழுதி வெச்சிடறேன் அதுவும் இல்லாம நான் நடத்துற பினான்ஸ் பிசினஸ்க்கு எனக்கு ஒரு நம்பகமான ஆள் தேவை நீ பணத்துக்காக எதுவும் செய்யிறவன்னு தெரியும் அதேபோல அதே பணத்துக்காக நியாயமா வேலை பார்க்கிற என்பதையும் நான் தெரிஞ்சுகிட்டேன் .
அதனால அந்த பி என் நிறுவனத்து மேல நான் நடவடிக்கை எடுக்க நீ என் பக்கம் நிற்கணும் அப்பதான் நான் சொன்ன மாதிரி அந்த பில்டிங்கை உனக்கு கொடுக்க முடியும் இந்த டீலிங் உனக்கு ஓகேவா என்று மயோ கேட்க…
அவள் சொன்ன விஷயங்களை எல்லாம் கணக்கு போட்டு பார்த்த சின்னு. அந்த பிஏ நிறுவனத்திற்கு வேலை பார்த்தா அஞ்சு லட்சமும் ஒரே ஒரு அப்பார்ட்மெண்ட் தான் நம்மளுக்கு கிடைக்கும் ஆனால் இந்த அம்மா சொல்ற மாதிரி அவன இவங்கள்கிட்ட மாட்டி விட்டுட்டேன் அந்த மொத்த பில்டிங்கும் எனக்கு தான் சொந்தம்.
அதுவும் இல்லாம இந்த அம்மாவோட பைனான்ஸ் நிறுவனத்துக்கு என்ன வேலைக்கு கூப்பிடறா. இவ்வளவு பெரிய நிறுவனத்தில் இருக்கிற இந்த பொண்ணு பைனான்ஸ் நடத்தூறானா இவ எவ்ளோ பெரிய பணக்காரியா இருக்கனும்.
இவ கிட்டே பணம் வாங்குறவங்க எல்லாம் கோடிக்கணக்குல இல்ல பரிவர்த்தனை செய்வாங்க.இவ கூட வேலை செஞ்சா நம்மளோட ஸ்டேட்டஸ் இன்னும் அதிகமாவும் நாலு பெரிய புள்ளிகளையும் தெரிஞ்சு வச்சுக்கலாம் என்று தன் மனசுக்குள்ளேயே கணக்கு போட்ட சின்னு.
யோசித்துக் கொண்டே அருகில் மயோவின் அருகில் இவனை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்த பூஜாவை பார்த்தவன். இதை எல்லாத்தையும் விட இந்த அம்மா கிட்ட வேலை பார்த்தா இந்த குட்டிய இந்த கிட்டே தானே வேலை பாக்குறா. இந்த அம்மாவை பார்க்க போற சாக்குல இந்த குட்டியை எப்படியாவது பேசி கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம்.
இதுக்காகவே இந்த பொம்பளைகிட்ட வேலைக்கு சேரனும் என்று மனதிற்குள் நினைத்தவன் மயோவை பார்த்து எழுந்து நின்று உங்க கிட்ட வேலை செய்யறதுக்கு நான் பெருமைப்படுகிறேன் என்று சொல்லி அவளிடம் தன் கையை நீட்ட…
தன்னுடைய டீலிங் இருக்கு எப்படியும் சின்னு ஒத்துக் கொள்வான் என்று கணக்கு போட்டு இருந்த மயோ அவன் சம்மதம் சொன்னதும் எழுந்து நின்று சிரித்தவள் அவனிடம் கையை நீட்ட போக வேகமாக குறுக்கே வந்த பூஜா மயோவின் கையை பிடித்துக் கொண்டவள் ஏய் மயோ ஒரு தடவைக்கு இரண்டு தடவை நல்லா யோசிக்க….
இந்த ரவுடி கிட்ட நம்ம வேலை பார்க்கணுமானு என்று பூஜா சின்னுவை முறைத்துக் கொண்டே கேட்க…
நம்ம எங்கடி அவன்கிட்ட வேலை பார்க்கிறோம். அவன் தான் நம்மகிட்ட வேலை பார்க்கிறேன் அத நல்லா ஞாபகம் வச்சுக்கோ சொன்ன மயோ திரும்பி சின்னுவிடம் கை கொடுத்து குழுக்க…
ரொம்ப தேங்க்ஸ் மேடம் என்று சொல்லி சிரித்த சின்னு. பூஜாவை பார்த்து பல்லைக் காட்ட….
டேய் ராஸ்கல் என்கிட்ட எதுக்குடா எப்ப பார்த்தாலும் பல்லை பல்ல காட்டிகிட்டே இருக்க நீ அவகிட்ட தான் வேலை பார்க்கிற அது ஞாபகத்துல வச்சுக்கோ அவளோட பி ஏ நான் தான்.
நீ என்ன வேலை செய்யணும் செய்யக்கூடாது என்று உனக்கு நான் தான் வேலை கொடுக்கப் போறேன் அதனால ஞாபகம் வச்சுக்கோ இப்படி இடிச்சுகிட்டு வந்து என்கிட்ட என்னென்ன நடக்கிறதே வேற என்று பூஜா சின்னுவை பயமுறுத்துகிறேன் என்று அவனிடம் பேச…
எதுக்கு குட்டி வீணா நீ டென்ஷன் ஆக்குற உன் கிட்ட வேலை பார்க்கிறது இல்லை எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் நீ என்ன வேலை சொன்னாலும் நான் செய்ய ரெடியா தான் இருக்கேன் சொல்லு இப்பவே நான் வேலை ஆரம்பிக்கணுமா என்று பூஜாவிடம் வந்து அவன் நிற்க…
பூஜா மயோவை பார்த்து பாரு இதுக்குத்தான் இவன வேண்டான்னு சொன்னேனு கேட்டியா. இப்ப பாரு என்கிட்ட எப்படி வந்து நின்னு பேசுறான்னு என்று கோபமான பூஜா வாடி போலாம் என்று மயோ இழுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியே செல்ல…
அவர்கள் இருவரின் பின்னாலும் வாசல் வரை வந்து வழி அனுப்ப வந்த சின்னு மயோ காரில் ஏறி அமர்ந்ததும் பூஜா காரின் முன்னால் இருந்த சீட்டில் அமரப் போக ..
என்ன குட்டி அதுக்குள்ள அவசரம் இரு நான் வந்து உனக்கு கதவை திறந்து விடுவேன் இல்ல என்று சொல்லி பூஜாவிற்கு கால் கதவை திறந்து விட அவனை முறைத்தவள் எனக்கு கை இருக்கு நானே கதவு திறந்து போய் உட்கார்ந்துக்குவேன் நீ இந்த வேலையெல்லாம் எனக்கு செய்ற என்று அவனை பூஜா முறைக்க…
சும்மா சும்மா என்ன பார்த்து முறைக்காத குட்டி உன் கண்ணுமுழி ரெண்டும் வெளிய வந்து விழுந்திட போகுது. சும்மா உள்ள போய் உட்காரு குட்டி உனக்காக நான் கதவை திறந்து விடாம வேற யாரு திறந்து விடுவா என்று சொல்லி அவள் தோளைப் பிடித்து அழுத்தி அவளை சீட்டில் அமர வைக்க….
தன் தோளில் இருந்த அவன் கையை தட்டி விட்டவள் கார் கதவை சாத்தப் போக…. அவளை கார் கதவை மூடவிடாமல் இறுக்கிப் பிடித்த சின்னு.
உன்னோட போன் நம்பரை சொல்லிட்டு போ குட்டி என்றான் சின்னு.
என்னோட போன் நம்பர் உனக்கு எதுக்குடா என்று பூஜா அவனை முறைக்க என்ன குட்டி இப்படி கேக்குற நம்ம எல்லாம் ஒரே இடத்தில் வேலை பார்க்கிறோம் இல்லையா அப்போ நம்மலோட நம்பர் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சுகிறது நல்லது தானே என்று சின்னு சொல்ல…
ஏதாவது வேலைன்னா நானே உனக்கு கூப்பிடுறேன் உன்னோட நம்பர் என்கிட்ட ஏற்கனவே இருக்கு என்று சொன்னவள் காரில் இருந்து அவன் கையை தட்டி விட்டு கதவை சாற்றிக் கொண்டாள்.
பூஜா கதவை சாற்றியதும் கார் புயல் வேகத்தில் ஸ்டார்ட் ஆகி அங்கிருந்து செல்ல…
அவள் செல்வதையே பார்த்த சின்னு தன் தலைக்கு மேலே இரண்டு கைகளையும் மடக்கி வைத்துக் கொண்டு தன் அருகில் இருந்த அடியாளிடம் டேய் உன் அண்ணி எப்படிடா இருக்கா? என்று கேட்க செம்மையா இருக்காங்க பாஸ் என்று அவன் சொல்ல…
என் ஆள செமையா இருக்கான்னு நீ எப்படி சொல்லலாம் என்று அவனை சட்டையை பிடித்து இழுக்க…
ஐயோ பாஸ் நான் சொன்னது உங்களுக்கும் அவங்களுக்கும் ஜோடி பொருத்தம் செமையா இருக்குன்னு அதான் சொன்னேன் நீங்க வேற ஏதோ தப்பா நினைச்சுக்கிட்டீங்க என்று அந்த அடியால் சின்னு விடம் கூற…
அவன் சொல்வதை கேட்டதும் சரி சரி என்று சொன்னவன் காரை எடு நம்ம நேரா அந்த பி என் நிறுவனத்தோட எம்டிஏ போய் பார்த்துட்டு வருவோம் என்று சொல்லிவிட்டு காரில் ஏறி அமர சின்னுவின் கார் பி.என் நிறுவனம் நோக்கி சென்றது.
EPISODE 34
ஹலோ பிரண்ட்ஸ் 🌹
மயோவிற்கும் அருளுக்கும் திருமணமான விஷயம் மயோவின் தொழில் வட்டாரத்தில் பரவவும்.
தனது தொழில் நிறுவனங்களுக்கும் உன்னுடன் பிசினஸில் பார்ட்னராக இருப்பவர்களுக்கும் தன்னை சார்ந்து இருக்கும் இன்னும் பிற தொழில் வட்டாரங்கள் அனைவரும் அதில் இருக்கும் அனைவருக்கும் தனியாக மயோ ஒரு பார்ட்டி அரேஞ்ச் செய்திருந்தால்.
அருள் கிளினிக்கில் இருந்து தானும் கரணும் நேராக பார்ட்டிக்கு வந்து விடுவதாக சொல்லிவிட்டு கிளினிக் சென்றுவிட மயோவும் பூஜாவும் ஆபீஸ் வேலை பார்ப்பதற்காக ஆபீஸ் சென்று விட்டு மாலை அங்கேயே தயாராகி பார்ட்டிக்கு கிளம்பினர்.
அந்த பார்ட்டியில் அனைத்தும் துறையைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். நகரின் முக்கிய புள்ளிகளும் அதில் கலந்து கொண்டிருந்தனர்.
தன்னுடைய ஆபீஸ் ஸ்டாப்களையும் மருத்துவமனையில் வேலை பார்க்கும் அனைத்து மருத்துவர்களையும் இந்த பார்ட்டிக்கு இன்வைட் செய்திருந்தால்.
மயோ பூஜா உடன் பார்ட்டிக்கு வந்து விட…
இளாவும் மீராவும் தனியாக மயோ ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு கிளம்பிச் சென்றனர்.
பாஸ்கர் மயோ ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு ஹாஸ்பிட்டலில் இருந்து கிளம்பி கொண்டு இருக்க.. உன்னிடம் வந்த நிஷா தானும் அவனுடன் பாட்டிக்கு வருவதாக பாஸ்கரிடம் கெஞ்ச…
நிஷாவிடம் பாஸ்கர் அங்கே வருபவர்கள் எல்லாம் பெரிய விஐபிகளும்,தொழிலதிபர்களும் மட்டுமே அவர்கள் இருக்கும் இடத்திற்கு தான் என்னை மயோ இன்வைட் செய்திருக்கிறாள். நீ வேண்டுமானால் ஸ்டாஃப்கள் அனைவரும் irukumnஇடத்திற்கு செல்லலாம் அதற்கு மேல் வர முடியாது பரவாயில்லையா என்று கேட்க…
அதற்கு நிஷா எனக்கு அந்த பார்ட்டி எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் அதுவும் இல்லாமல் மயோ திருமணம் செய்து கொண்ட அந்த நபர் யார் என்று எனக்கு தெரிய வேண்டும் அதற்காகத்தான் நான் இந்த பார்ட்டிக்கு வருகிறேன்.அதனால் நான் எங்கு வேண்டுமானாலும் அங்கு வந்து இருந்து கொள்கிறேன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நிஷா சொல்ல…
அவனும் வேறு வழியில்லாமல் தன்னுடைய இன்விடேஷனை பயன்படுத்தி தன்னுடன் நிஷாவை அழைத்துச் சென்றான்.
விஐபிகள் இருக்கும் இடத்திற்கு பாஸ்கர் சென்றுவிட நிஷா ஸ்டாப்புகளுக்கு என்று தனியாக ஏற்பட செய்திருந்த இடத்தில் மற்ற ஸ்டாப்புகளோடு கலந்து கொண்டாள்.
பார்ட்டிக்கு மயோ முதற்கொண்டு அனைவரும் வந்துவிட அருள் மட்டும் இன்னும் வராமல் போகவே அவனுக்கு கால் செய்த மயோ அருள் பூனை அட்டென்ட் செய்ததும் இடியட் இன்னும் பார்ட்டிக்கு வராமல் என்னடா பண்ணிட்டு இருக்க எல்லாரும் வந்து உன்ன தான் எங்கேன்னு கேட்டுட்டு இருக்காங்க சீக்கிரம் வாடா இடியட் என்று கத்த..
எதுக்கு டார்லிங் இப்படி டென்ஷன் ஆயிட்டு இருக்கு ஐயம் ஆன் த வே டார்லிங்…இன்னும் 5 மினிட்ஸ்ல வந்துருவேன் என்றவன் போனை கட் செய்ய…
அருளின் ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு வந்த கரன் டேய் இதெல்லாம் உனக்கு நியாயமா இருக்கா அங்கு உன்னோட வயசு ஊர்ல இருக்குற அத்தனை விஐபிக்களையும் பெரிய பெரிய தொழிலதிபர்களையும் கூப்பிட்டு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்காங்க. நீ என்னடான்னா அந்த பார்ட்டிக்கு இந்த டப்பா வண்டியில போயிட்டு இருக்க நீ இப்படி போனா உன் வைஃப் உன் கிட்டே கோச்சுக்க மாட்டாங்களா? என்று கரண் கேட்டான்.
என் பொண்டாட்டி பத்தி உனக்கு என்னடா தெரியும் அவ ஊர்ல இருக்குற எல்லாருக்கும் தான் பயங்கர ஸ்ட்ரிக்ட் ஆனா என்கிட்ட வரும்போது என் டார்லிங் ஒன்னும் தெரியாத குட்டி பேபி தான்.
நான் எது பண்ணினாலும் அவ என்னை எதுவுமே சொல்ல மாட்ட அவளுக்கு நான் அவ கூட இருந்தா மட்டும் போதும் என்று அருள் பெருமை பீட்ரிக் கொள்ள…
கரண் ஸ்கூட்டர் வழியாக கண்ணாடியில் தெரிந்த அருளை பார்த்து ரொம்ப பெருமை பீத்தாதடா பார்க்க சகிக்கல… என்றான் கரன்
என்னை ஏன்டா பார்த்துட்டு இருக்க ரூட்ட பார்த்து வண்டியை ஓட்டு சீக்கிரமா போ என் டார்லிங் எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பா என்று அருள் கரணை வெறுப்பேற்ற…
ஏண்டா பேசமாட்ட உனக்கு தான் கல்யாணம் ஆகி சூப்பரா ஒரு பொண்டாட்டிக்கு வந்துட்டாங்க இல்ல நீ இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசி என்ன வெறுப்பேத்துவ நீ வேணா பாரு நானும் இதே மாதிரி சீக்கிரமா கல்யாணம் பண்ணி என் பொண்டாட்டி கூட உன்ன மாதிரி ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு… இருக்கிறவனை வெறுப்பேத்திட்டு சுத்தல என் பேரு கரண் கிடையாது என்று சொன்னான்.
அதுக்கு நீ முதல்ல ஒரு பொண்ண பார்க்க வேண்டாமா மாப்பிள மூஞ்சி எப்ப பார்த்தாலும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சுக்கிட்டு இருந்தா எந்த பொண்ணு வந்து உன் கிட்ட பேசுவா கொஞ்சம் பொண்ணுங்கள பார்த்தா சிரிச்சு பேசுற அப்ப அதான் அவங்களுக்கு உன்கிட்ட பயமில்லாமல் வந்து பேச தோணும் என்றான் அருள்.
ஏன்டா என் முகத்துக்கு என்ன குறைச்சல் என் மூஞ்சிய பாத்தா என்ன இஞ்சி தின்ன குரங்கு மாதிரியா இருக்கு என்று கரன் கேட்க கண்டிப்பா அப்படிதாண்டா மாப்பிள்ளை இருக்கு என்று அருள் கரணின் முதுகில் தட்ட…
நீ வேணா பாரு நான் சிங்கிளா இருக்கிறது இன்னிக்கு தான் கடைசி நாளா இருக்கும் நாம போற பாட்டி முடிஞ்சு வெளியே வரும்போது எனக்குன்னு ஒரு பொண்ண தேர்ந்தெடுத்து அவகிட்ட என்னோட லவ்வ சொல்லி வெளியே வரும்போது நான் கமிட்டடா தான் வெளிய வருவேன் இது எங்க அம்மா மேல சத்தியம் என்று கரண் சொல்ல…
ஆமாடா மாப்பிள்ளை நான் உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன் ஆமா ஏன் எங்களோட ரிசப்ஷனுக்கு அம்மாவையும் தங்கச்சியையும் நீ கூட்டிட்டு வரல என்று கேட்டான் அருள்.
அருள் கரணின் அம்மாவும் தங்கையும் ஏன் தங்கள் ரிசப்ஷனுக்கு வரவில்லை என்று கேட்டதும் இவ்வளவு நேரம் கலகலவென பேசிக் கொண்டிருந்த கரண் திடீரென அமைதியாகிவிட…
அவன் முகத்தை ஸ்கூட்டரின் கண்ணாடி வழியாக பார்த்த அருள் கரணின் முகம் சரியில்லை என்பதை புரிந்து கொண்டவன் அவனிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க போவதற்குள் பார்ட்டி நடக்கும் இடம் வந்ததும் அருளைப் பார்த்து டேய் அருள் சீக்கிரம் இறங்கு உனக்காக மையோ வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னாங்க இல்ல டைம் ஆகுது என்று சொல்ல சரி இதை பிறகு கரணிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டரை பார்க் செய்துவிட்டு வந்த கரனுடன் சேர்ந்து அருளும் உள்ளே சென்றான்.
ஸ்டாப் கள் இருக்கும் பகுதியை தாண்டி தான் விஐபிக்கள் இருக்கும் ஏரியாவுக்கு செல்ல வேண்டும்.
காரணம் அருளும் உள்ளே வருவதை மேலிருந்து பார்த்த மீரா இளாவிடம், இளா அண்ணா வந்துட்டாங்க இரு நான் போய் அண்ணாவை மேல கூட்டிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு மீரா அருளை பார்க்க கீழே செல்ல…
ஸ்டாப்புகள் இருந்த பகுதியில் நின்றிருந்த நிஷா அருளும் அவனுடன் ஒரு ஆணும் உள்ளே வருவதை பார்த்தவள். அருளைப் பார்த்து புருவம் சுருக்கியவள் இவை எப்படி இங்கே வந்தான் இவனுக்கு எப்படி இந்த பார்ட்டிக்கு வரக்கு இன்விடேஷன் கிடைத்தது என்று யோசித்தவாரே அவன் அருகில் சென்ற நிஷா.
அருளின் முன்பு சென்று நிற்க அப்போது சரியாக மீராவும் அவன் அருகில் வந்து விட்டாள். அருளும் மீராவும் இந்த பார்ட்டிக்கு வந்து இருக்க…அவர்கள் இருவரையும் ஆச்சரியமாக பார்த்த நிஷா.
ஏய் நீங்க ரெண்டு பேரும் எங்க இங்க வந்தீங்க இது எவ்வளவு பெரிய விஐபிகள் அட்டென்ட் செய்கிற பார்ட்டின்னு உங்களுக்கு தெரியுமா உங்களுக்கு யாரு இன்விடேஷன் கொடுத்தது.
ஸ்டேட்டஸ் தெரியாம இந்த பார்ட்டிக்கு யாரை வேண்டுமானாலும் இன்வைட் பண்ணுவாங்களா என்ன… என்ற நிஷா மீராவை பார்த்தவள் அவள் அணிந்திருந்த ஆடையையும் நகைகளையும் பார்த்து ஆச்சரியமானவள் மீராவை பார்த்து எந்த கடையில் இதெல்லாம் வாடகைக்கு வாங்கி போட்டுட்டு வந்த என்று மீராவை பார்த்து கேட்க…
ஹலோ என்ன பேசுறீங்க என்று மீரா கோபமாக பேச…
மீராவின் கையைப் பிடித்து அழுத்திய அருள் பேசாதே என்று சைகை செய்ய மீரா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டாள்.
என்ன உண்மைய சொன்னா உனக்கு கோபம் வருதா நிஷா மீராவை பார்த்து நக்கலாக பேசியவள். அருளையும் அவன் அருகில் நின்ற கரணையும் ஏளன பார்வை ஒன்றை பார்த்துவிட்டு..
சரி சரி நீங்க எப்படியோ எங்க சாப்பிடுறதுக்காக மட்டும்தான் வந்திருப்பீங்க போய் வந்த வேலைய பாத்துட்டு சீக்கிரமா இங்கிருந்து கிளம்புங்க உங்கள மாதிரி ஆளுங்களை எல்லாம் எப்படித்தான் எங்க உள்ள விட்டார்களோ தெரியல என்று நிஷா திமிர் ஆக பேச…
அருளின் அருகில் நின்றிருந்த கரன் யாருடா மாப்பிள்ளை நீயும் உன் மனைவியும் தான் இந்த பார்ட்டியை ஏற்பாடு செஞ்சிட்டு இருக்கீங்கன்னு தெரியாம இந்த பேச்சு பேசிட்டு இருக்கா என்று கேட்க..
நான் உன்கிட்ட சொன்னேனே ஒரு பொண்ண பார்க்க போயிட்டு தவறுதலா மயோ டேபிளுக்கு போயிட்டேன்னு சொல்லி… நான் முதல்ல பார்க்க போன பொண்ணு இவதாண்டா… எங்க அம்மா கிட்ட கூட பணம் நிறைய கேட்டு வாங்கினார்கள் என்று சொல்லிட்டு இருந்தேனே அந்த பொண்ணு தான் டா இவ என்று அருள் சொல்ல.
இவ இருக்கிற மூஞ்சிக்கு உங்க அம்மா கிட்ட அத்தனை பணம் கேட்டு உன்னையும் உங்க அம்மாவையும் அவ்வளவு பேச்சு பேசினா கரண் நிஷாவை பார்த்து நக்கலாக.
நீயே ஏதோ ஒரு ஹாஸ்பிட்டல்ல நிறைய பாக்குறேனு என் பிரண்டு சொல்லி இருந்தா அப்படி இருக்கிற நீயே இந்த ஃபங்ஷனுக்கு வரும்போது நானும் என் பிரண்டும் அவன் தங்கச்சியும் இங்க வரக்கூடாதா என்ன என்று கேட்டான் கரண்.
நானும் கண்ட ஹாஸ்பிடல் வேலை பார்க்கல இந்த சிட்டிலயே மிகப்பெரிய ஹாஸ்பிடல் தெரியுமா எஸ்.என்.ஹாஸ்பிடல் அங்க தான் சீஃப் நர்சா வேலை பார்க்கிறேன் என்றாள்.
நீ அந்த ஹாஸ்பிடல்ல வெறும் நர்ஸா தான் வேலை பாக்குற ஆனா எங்க அருள் வந்த ஹாஸ்பிடல்ல…என்று கரண் சொல்ல வர அவன் கையைப் பிடித்து தடுத்த அருள் சொல்லாதே என்று ஜாடை செய்தான்.
என்ன இவரு அந்த ஹாஸ்பிடல்ல என்ன என்று கேட்டால் நிஷா.
ஒன்னும் இல்ல என்று சொல்லி தன் தோளை குளிக்கினான் கரண்.
அண்ணா இவங்க கிட்ட பேசி ஏன் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க வாங்க போலாம் என்று சொல்லி மீரா அருளின் கையை பிடித்து இழுக்க…
ஏய் நீ என்ன நானும் வந்ததுல இருந்து பாத்துட்டே இருக்கேன் என்னவோ ரொம்ப ஓவராத்தான் துளிர நானும் உங்க அண்ணாவும் பேசிட்டு இருக்கோம்ல பேசாம சாப்பிட தானே வந்து அது போயி பாரு எனக்கு உங்க அண்ணா கிட்ட கொஞ்சம் பேச வேண்டிய வேலை இருக்கு என்று நிஷா சொல்ல…
மீரா திரும்பி அருளையும் கரணையும் பார்க்க… அருள் கரண்டிடம் டேய் கரண் நீ நீ மீரா கூடப்போ இவங்க என் கூட ஏதோ பேசணும்னு சொன்னாங்களே நான் என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன் என்று அருள் சொல்ல…
கரணும் சரிடா ரொம்ப நேரம் எடுத்துக்காத சீக்கிரம் பேசிட்டு வா… நாங்க வெயிட் பண்றோம் என்று சொல்லிவிட்டு கரண் மீராவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
கரணும் மீராவும் விஐபிகளுக்காக ஏற்பாடு செய்து இருந்த இடத்திற்கு வர… கரண்ட் மட்டும் அங்கே வருவதை பார்த்த மயோ அவனிடம் வந்தவள் எங்கே உங்க பிரண்டை காணோம் நீங்க மட்டும் வந்திருக்கீங்க என்று கேட்க…
அவன் நாங்க ரெண்டு பேரும் தான் உள்ளே வந்தோம் அதுக்குள்ள ஒரு முக்கியமான ஆளு அவங்கள மீட் பண்ணிட்டு உள்ள விட மாட்டேன் என்று சொல்லிட்டாங்க அதனால அவங்க கிட்ட பேசிட்டு வரேன்னு எங்க ரெண்டு பேரையும் முன்னாடி போக சொல்லிட்டேன் என்று கரன் சொல்ல..
முக்கியமான ஆளா… அது யாரு? என்று மயோ புருவம் சுருக்கி கரணிடம் கேட்க…
கரண் நிஷாவை பற்றி மயோவிடம் சொன்னவன் அந்த பொண்ணு தான் அருளை உள்ளே விடாம பிடிச்சு வச்சு இருக்கு என்று கரண் சொன்னான்.
ஆமா அண்ணி அந்த நிஷா என்னையும் அண்ணனையும் ரொம்ப பேசிட்டா… போட்டிருக்கிற டிரஸ் நகையெல்லாம் பார்த்துட்டு எந்த கடையில வாடகைக்கு எடுத்துட்டு வந்து என்ன கேக்குறா அண்ணி.
அண்ணாவையும் கரண் அண்ணாவையும் பார்த்து உங்களை எல்லாம் யாரு உள்ளே விட்டதுன்னு கேட்டாங்க அண்ணி. அது மட்டும் இல்லை எங்களை எல்லாம். யாரு. இங்கே இன்வைட் பண்ணினது, நீங்க. மூணு பேரும் இங்க வந்ததே சாப்பிடுறதுக்காக தான.அதனால வந்ததும் சாப்பிட்டு இங்க இருந்து சீக்கிரமா போக சொன்னா…என்று மீரா முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு மயோவிடம் சொல்ல…
நீங்க ஏன் அவ பேசினதெல்லாம் கேட்டுட்டு இருந்தீங்க அவகிட்ட சொல்லி இருக்க வேண்டியதுதானே உண்மையை என்று கேட்டால் மயோ.
நானும் கரண் அண்ணாவும் சொல்லத்தான் வந்தோம் ஆனால் அண்ணாதான் எங்களை சொல்ல வேண்டான்னு சொல்லிட்டாரு என்றால் மீரா.
கரணை பார்த்த மயோ உங்க பிரண்டு எப்பவுமே இப்படித்தானா? என்றால் மயோ .
கரண் என்ன சொல்வது என்று தெரியாமல் சிரிக்க…
கரணை ஒரு பார்வை பார்த்துவிட்டு அருள் இருக்கும் இடத்திற்கு சென்றால் மயோ.
நிஷா அருள் இடம் என்ன மிஸ்டர் அருள் இன்னும் உங்களுக்கு எந்த பொண்ணும் கிடைக்கல போல இருக்கு இப்படி பிரண்டு கூடயும் தங்கச்சி கூடயும் வெளியில பார்ட்டிக்கு வரீங்க இதுவே உங்களுக்கு கல்யாணம் ஆகி இருந்தா நீங்க இங்கே எல்லாம் தனியா தனியா வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே என்று கேட்டால் நிஷா.
என்ன பண்றது மிஸ் நிஷா உங்களுக்கு எல்லாம் மாப்பிள்ளை க்யூல நிக்கும் போது எனக்கு ஒரு பொண்ணு கூட வரலையே நான் என்ன செய்வேன் என்றால் அருள்.
தன்னை நக்கலாக பேசுகிறானா என்பது போல நினைத்த நிஷா அருளைப் பார்த்தவள் பின் இப்போ ஒன்னும் கெட்டுப் போகல எங்க அம்மா அப்பா கேட்ட பணத்தை நீங்க கொடுத்துட்டா நாளைக்கே நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் என்ன சொல்றீங்க என்று கேட்டால் நிஷா.
எனக்கு வரதட்சணை வாங்கறதும் பிடிக்காது கொடுப்பதும் பிடிக்காது நிஷா. உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாதுன்னு நான் அன்னைக்கே சொல்லிட்டேனே திரும்பவும் ஏன் இப்போ என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேக்குறீங்க உங்கள கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு தானே நான் நீன்னு போட்டி போட்டு வராங்கன்னு அன்னைக்கே சொன்னீங்களே அப்புறம் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இங்க தனியா வந்து இருக்கீங்க என்று கேட்டான் அருள்.
அருள் அப்படி கேட்டதும் அவனை முறைத்தவள் இப்படி பேசுவதனால் தான் உனக்கு இன்னும் கல்யாணமே ஆகல, ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசணும்ங்குற விஷயம் கூட உனக்கு தெரியல அப்படி இருக்கிறப்போ உன்ன எந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்குறத்துக்கு ஒதுக்குவா நீ கடைசி வரைக்கும் இப்படி தனியாவே இரு என்றால் நிஷா.
ஒரு சொந்த வீடு இல்ல,பேங்க் பேலன்ஸ் சரியா இல்ல, சரி கிளினிக்கா ஓரளவுக்கு பிரபலமா இருக்கா அதுவும் கிடையாது உன் கிளீனிக்கு எங்க இருக்குன்னு யார்கிட்டயாவது கேட்டா அப்படி ஒரு பேர்ல கிளினிக் இருக்கான்னு கேக்குறாங்க. இப்படி இருக்கிற உனக்கு எல்லாம் யாரு பொண்ணு கொடுப்பா என்று அருளை கேவலமாக நிஷா பேச…
இவ்வளவு நேரம் நிஷா அருளை பேசியது எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மயோ நிஷா அருளை அவமானப்படுத்தியும் அருள் எதுவும் பேசாமல் இருக்கவே கோபமாக அவனிடம் வந்தாள்
EPISODE 35
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
நிஷா அருளை பார்ட்டியில் வைத்து அவமானப்படுத்துவதை பார்த்த மயோவிற்கு நிஷா பேசியதற்கெல்லாம் அருள் எதுவும் பேசாமல் நின்றிருப்பதை பார்த்து கோபம் வந்துவிட அவனை நோக்கி சென்றாள்.
நிஷா பேசுவதெல்லாம் கேட்டு அமைதியாக நின்று இருந்தா அருள் அவள் பேசிமுடித்ததும்.
ஓகே மிஸ் நிஷா நீங்க பேசுவது எல்லாம் பேசி முடிச்சிட்டீங்களா?உங்க மனசுல இருக்குற எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டீங்களா? இப்போ நான் உள்ள போலாமா என்று கேட்டான் அருள்.
என்ன நான் இவ்வளவு பேசுறேன் இவன் அதற்கெல்லாம் எதுவுமே ரியாக்ட் செய்யாமல் இப்படி அமைதியாக பேசுகிறானே நிஷா அவனையே பார்க்க…
அருள் உள்ளே செல்லலாம் என்று திரும்ப அவன் எதிரே வந்து நின்ற மயோவை பார்த்ததும். நான் வர லேட் ஆயிடுச்சுன்னு என்னை கூப்பிட நீயே வந்துட்டியா என்று சொல்லி மயோவை பார்த்து சிரித்த அருள்.
நிஷாவிடம் திரும்பி ஹலோ மிஸ் நிஷா மீட் மை வைஃப் மிசஸ் அருள் என்று சொல்லி மயோவின் இடுப்பில் கை போட்டு இழுத்து அவளை தன்னோடு நெருக்கமாக அணைத்துக் கொண்டு நின்று நிஷாவிடம் மயோவை அறிமுகப்படுத்தினான்.
அருள் சொன்னதை நம்ப முடியாமல் நிஷா அதிர்ச்சியில் வாயை பிளந்து கொண்டு அருளையும் அவன் அருகில் மிக நெருக்கமாக நின்றிருந்த மயோவையும் அருளையும் மாறி மாறி பார்த்தவள் தன் கையில் இருந்த மது கிளாசை கீழே தவற விட்டாள்.
நிஷா தவறவிட்ட மது கிளாஸ் உடைந்து அதிலிருந்து மது சிறிது அருளின் கோட்டில் தெரித்து விட….
கோர்ட்டில் தெளித்த மதுவை பாக்கெட்டில் இருந்து கைக்குட்டையை எடுத்து துடைத்த வாறே… என்ன மிஸ் நிஷா ஒரு கிளாஸ கூட உங்கனால கரெக்டா பிடிக்க முடியலையா பாருங்க…. என் மனைவி எனக்கு ஆசையா வாங்கி கொடுத்த டிரஸ் நீங்க எவ்வளவு பாழ் பண்ணிட்டீங்கன்னு தெரியுமா? இதனோட விலை என்னன்னு உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டான் அருள்.
அருள் பேசியதை கேட்ட நிஷா அவன் அருகில் இருந்த மயோவை பார்த்து சாரி மேடம் நான் தெரியாம என்று வார்த்தைகள் தந்தி அடிக்க நிஷா பேச ….
நிஷா பேசியதை கேட்டு அவளுக்கு எதுவும் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தவாறு மயோ நின்று இருக்க…
நிஷாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தவள் தன் அருகில் இருந்த டிஷ்யூவை எடுத்து அருளின் கோட்டில் கொட்டி இருந்த மதுவை துடைக்கப் போக….
நிஷாவின் முன் கைநீட்டி தடுத்த மையோ அருளைப் பார்த்து இந்தக் கோட்டை இங்கேயே கழட்டி எறிஞ்சிட்டு வாங்க நம்ம வேற போட்டுக்கலாம் என்று சொல்லிவிட்டு அவனை உள்ளே அழைக்க என்ன மயோ இப்படி சொல்ற… இந்த கோட்டை எத்தனை லட்சம் ரூபாய் செலவு பண்ணி நீ எனக்கு வாங்கி கொடுத்து இருக்கேன்னு எனக்கு தான் தெரியும் இதை எப்படி நான் இப்படியே விட்டுட்டு வர முடியும் என்று சொல்ல….
பரவாயில்லை டியர் அதை கழட்டி எறிஞ்சிட்டு வாங்க… என்று மயோ சொல்ல…
ஆர் யூ ஸ்யூர்?அப்போ இது வேண்டாமா? என்று கேட்டான் அருள்.
மயோ தன் தலையை இடவலமாக ஆட்டி வேண்டாம் என்று சொன்னதும் அருள் அந்தக் கோட்டை கழட்டி அப்படியே தரையில் விட்டவன் அவளோடு செல்ல தன் அருகில் இருந்த மயோவின் வேலை ஆளை பார்த்து சாருக்கு வேற டிரஸ் கொண்டு வாங்க என்று சொல்லிவிட்டு அருளோடு கைகோர்த்துக் கொண்டே உள்ளே செல்ல…
அவர்கள் இருவரும் ஜோடி போட்டுக்கொண்டு செல்வதை பார்த்த நிஷா தன் கண்ணையே நம்ப முடியாமல் அங்கே நின்று இருந்தால்.
மயோவும் அருளும் சென்ற சிறிது நேரத்தில் நான் நிஷா இருந்த இடத்திற்கு பாஸ்கர் வேகமாக நிஷா இருந்த இடத்திற்கு வர… மயோ செல்லும் போது எப்படி நின்று கொண்டிருந்தாலோ நிஷா இப்போதும் அப்படியே நின்று கொண்டு இருந்தால்.
அவள் அருகில் வந்த பாஸ்கர் அவள் கையைப் பிடித்து உளுக்கி என்ன பண்ணி வச்சிருக்க… மயோ உன்னை வேலையை விட்டு தூக்க சொல்லி என்னை கூப்பிட்டு சொல்லிட்டு போறா…அப்படி என்ன பண்ணின நீ…என்று பாஸ்கர் கேட்க…
பாஸ்கர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியான நிஷா பாஸ்கரை பார்த்து என்ன சொல்ற என்னை வேலை விட்டு போக சொன்னாங்களா? யாரு சொன்னா?என்று நீதான் கேட்டாள்.
வேற யாரு சொல்லுவா அந்த மயோ தான் நீ நம்ம ஹாஸ்பிடல் வேலை பார்க்கிறது அவளுக்கு பிடிக்கல உன்னை உடனே வேலையை விட்டு தூக்க சொல்லி என்கிட்ட சொல்லிட்டு போறா என்று பாஸ்கர் சொல்ல… நிஷாவிற்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை.
பாஸ்கர் சொன்னதை கேட்டதும் அதிர்ந்த நிஷா அவன் கையை உதறிவிட்டு நேராக மயோ இருக்கும் இடத்திற்கு செல்ல போக… அவளை போக வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே பின்னால் பாஸ்கர் வர…
மயோ இருந்த இடத்திற்கு வந்த நிஷா விஐபிகள் இருந்த மயோ இருக்கும் இடத்திற்கு சென்றவள் உள்ளே நுழைய போக…. அப்போது அங்கு வாசலில் நின்றிருந்த மயோவின் கார்ட்ஸ்கள் நிஷாவை உள்ளது செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.
அவர்களைத் தாண்டி உள்ளே பார்த்த நிஷா மயோவும் அருளும் இருக்கும் இடத்தை பார்த்து அவர்களிடம் நான் அவங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்னை உள்ள விடுங்க என்று சொல்லி அவர்களை தாண்டி உள்ளே செல்ல போக …
அவளை உள்ளே செல்ல விடாமல் இழுத்து நிறுத்திய அந்த காட்சிகள் மேடம் இப்போ ரொம்ப பிசியா இருக்காங்க அவங்கள பார்க்க முடியாது என்று சொல்லி நிஷாவை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்க..
நிஷா அந்த கார்ட்ஸ்களிடம் அருளை காட்டி அவரை எனக்கு நல்லா தெரியும் ஒரு டூ மினிட்ஸ் நான் அவரை பார்த்துட்டு போயிடுறேன் என்று நிஷா கெஞ்ச….
வாசலில் சத்தம் கேட்டு அருளும் மயோவும் திரும்பிப் பார்க்க அங்கே நிஷா இவர்களை பார்த்தபடி நின்றிருந்தவள் அவர்கள் இருவரும் இவளை பார்க்கவும் அருளைப் பார்த்து அருள் ப்ளீஸ்…நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்ன உள்ள விட சொல்லுங்க என்று நிஷா கெஞ்ச…
அவர்கள் வழி விட வேகமாக அருளிடம் வந்த நிஷா மயோவை அருளையும் பார்த்து அருளிடம் அருள் என்ன மன்னிச்சிடுங்க ப்ளீஸ் நான் தெரியாம உங்ககிட்ட அப்படி தவறாக பேசிட்டேன். அதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன் நீங்க உங்க மனைவி கிட்ட சொல்லி என்னைய வேலையை விட்டு தூக்க வேண்டாம்னு சொல்லுங்க என்று நிஷா கெஞ்ச..
சாரி மிஸ் நிஷா என்னோட மனைவியோட ஹாஸ்பிடல் விஷயங்கள்ல நான் தலையிடுவது இல்லை அது அவங்களோட ஹாஸ்பிடல் அவங்களோட முடிவு அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொன்னான் அருள்.
அருள் அப்படி சொன்னதும் செய்வதறியாது நின்ற நிஷா மயோவை பார்த்து மேடம் ப்ளீஸ் இவர் தான் உங்க ஹஸ்பண்டுன்னு தெரியாம இவரை நான் பேசிட்டேன் என்னை தயவு செய்து மன்னிச்சிடுங்க.இந்த வேலை என்னோட கனவு மேடம் உங்க ஹாஸ்பிடல்ல தான் நான் நர்ஸா வேலை செய்யணும்னு ரொம்ப வருஷம் கடினமா உழைச்சு இந்த இடத்துக்கு நான் வந்து இருக்கேன் தயவு செய்து என்னை இந்த வேலையை விட்டு தூக்கிடாதீங்க என்று நிஷா கெஞ்ச..
என் ஹஸ்பண்ட் இத்தனை பேர் முன்னாடி அவமானப்படுத்தின உன்ன நான் எப்படி என் ஹாஸ்பிடல் வேலைக்கு வச்சுக்க முடியும் இது என் ஹஸ்பண்ட்ட நான் அவமதித்ததற்கு சமம் ஆயிடும் என்று மயோ சொல்ல…
என்ன செய்வது என்று கைகளை தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்த நிஷா சுற்றி இருப்பவர்கள் பற்றி எல்லாம் எதுவும் யோசிக்காமல் பட்டென அவர்கள் இருவரும் முன்பும் மண்டியிட்டு அமர்ந்தவள் தன் கைகள் இரண்டையும் கும்பிடுவது போல வைத்து தன் கைகளை தேய்த்தவரை என்னை ரெண்டு பேருமே மன்னிச்சிடுங்க நான் இவரை அவமானப்படுத்தினது தப்புதான் இனிமேல் இந்த மாதிரி தப்ப நான் செய்ய மாட்டேன் இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சு திரும்பவும் என்ன உங்க ஹாஸ்பிடல் வேலைக்கு சேர்த்துக்கோங்க என்று மயோவையும் அருளையும் பார்த்து கெஞ்ச….
நிஷா கெஞ்சுவதை பார்த்து பாவமாக அருளுக்கு தோன்ற மயோவை பார்த்து போகட்டும் விட்டு விடு என்று அருள் கூற
அவனை முறைத்தவள் நிஷாவை பார்த்து என்னோட ஹஸ்பண்ட் கேட்டுட்டாருங்கறதுக்காகத்தான் நான் உன்னை விடுகிறேன் அதுக்காக நான் உனக்கு தண்டனை கொடுக்காமல் இருக்க முடியாது என்னால அப்படி இதை எளிதில் விட்டுட்டு போக முடியாது என்று சொன்னால் மயோ .
மயோ தன்னை மன்னித்து விட்டால் என்பதே நிஷாவிற்கு பெரிய விஷயமாக தெரிய மண்டியிட்டவாரு மயோவை பார்த்து நீங்க எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துகிறேன் அதை முழு மனசோட ஏத்துகிறேன் என்று சொன்னால் நிஷா.
சரி நீ போ நானே சொல்லி அனுப்புறேன் என்று சொல்லிவிட்டு மயோ நிஷாவை போகச் சொல்ல…. நிஷா மயோவையும் அருளையும் பார்த்து எழுந்து நின்று தன் உடலை பாதியாக வளைத்து இருவருக்கும் நன்றி கூறியவள் அங்கிருந்து வேகமாக வெளியே சென்று விட்டாள்.
அந்த விஐபி அறையை விட்டு வெளியே வந்த நிஷா இதுவரை மயோவிடமும் அருளிடமும் மிகவும் கெஞ்சுவது போல நடித்தவள் வெளியே வந்ததும் ஷ்…. அப்பா… என்று பெருமூச்சு விட்டவள் அவ்வளவு சீக்கிரத்தில் இந்த வேலை விட்டு நீ என்னை அனுப்ப முடியாத மயோ, ஏன்னா அந்த ஹாஸ்பிடல் மொத்தமும் கூடிய சீக்கிரத்துல உன் கைய விட்டு போகப் போகுது என்று நினைத்துக் கொண்ட நிஷா அங்கிருந்து பார்ட்டியை விட்டு சென்றாள்.
நிஷா சென்றதும் அருளும் மயோவும் மற்றவர்களை பார்த்து நீங்க பார்ட்டியை என்ஜாய் பண்ணுங்க… இது ஒரு சின்ன விஷயம் தான் என்று மயோ சொல்ல….
அனைவரும் அங்கு நடந்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பார்ட்டியை என்ஜோய் செய்ய ஆரம்பித்தனர்.
மயோவிடம் பணிவாக வந்த அவளுடைய வேலையாள் மேடம் சாருக்கு டிரஸ் ரெடி ஆயிடுச்சு மேல உங்க ரூம்ல வச்சிருக்கேன் என்று வந்து சொன்னார்.
மயோ அவரிடம் நீங்க போங்க என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டு அருளிடம் என்னோட வா… என்று சொல்லி அவன் கையைப் பிடித்து அவள் அறைக்கு அழைத்துச் சென்றாள் .
இளா,மீரா, கரண் மூவரும் பார்ட்டிyல் என்ஜாய் செய்து கொண்டிருக்க…அப்போது சூர்யா விஷ்வாவையும், அவன் தங்கை அழைத்துக் கொண்டு பார்ட்டிக்கு வந்தான்
கரண் சூர்யாவை பார்த்ததும் கைகாட்டி தாங்கள் இங்கே இருக்கிறோம் என்று சொல்ல கரண் விஷ்வாவை தன்னுடன் அழைத்துக் கொண்டு அவர்களுடைய இடத்திற்கு வந்தான்.
கரணின் அருகில் வந்ததும் தான் அங்கு இருப்பதையே சூர்யா கவனித்தல் அவளைப் பார்த்ததும் ஒரு மாதிரியாகிவிட இளாவை நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்த்தவன் கரணை பார்த்து எங்கே உன் பிரண்டை காணோம் என்று கேட்டான் .
அவன் மயோ சிஸ்டர் கூட மேல போயிருக்கான் வந்துடுவான் என்று சொன்னவன் சூர்யாவின் அருகில் இருந்த விஷ்வாவை பார்த்து இவர் யாரும் உன்னோட பிரண்டா என்று கேட்க…
விஷ்வாவும் மயோவும் ஃப்ரெண்ட்ஸ், என்றவன் தன் அருகில் நின்றிருந்த தேஜஸ்வினியை காட்டி இவ தேஜு விஷ்வாவோட தங்கச்சி நானும் இவளும் கிளாஸ்மேட்ஸ் என்றவன் தேஜு உடைய தோளில் கைபோட்டு அவளை தன் அருகில் நிறுத்தி வைத்து சொல்ல…
சூர்யா தேஜுவை தோழி என்று சொல்லி அவள் தோளில் கை போட்டு கரணிடம் அறிமுகம் செய்து வைக்க…. தேஜுவின் தோளில் கை போட்டு இருந்த சூர்யாவை பார்த்து இளாவிற்கு கடுப்பானது .
இளா தன் அருகில் நின்றிருந்த மீராவை பார்த்து ஹே மீரா வாடி நம்ம வேற டேபிளுக்கு போகலாம் என்று சொல்லி மீராவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேறு டேபிள் சென்றால்.
தேஜுவை அறிமுகப்படுத்தியதும் இளா கடுப்பாக அந்த டேபிளை விட்டு சென்றதை கவனித்த சூர்யா உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
சூர்யாவையும் விஷ்வாவையும் பார்த்த அங்கு வந்திருந்த சில முக்கிய பிரமுகர்கள் அவர்களை அழைக்க கரனிடம் தேய்ந்து அறிமுகம் செய்து வைத்து விட்டு நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க நாங்க இப்போ வந்து விடுகிறோம் என்று சொல்லிவிட்டு சூர்யா விஷ்வாவை அழைத்துக் கொண்டு சென்றான் .
அவர்கள் இருவரும் சென்றதும் தேஜுவும் கரணும் மட்டுமே அந்த டேபிளில் இருந்தனர். தேஜுவை பார்த்ததுமே கருணைக்கு மிகவும் பிடித்து விட்டது.இருந்தும் அவளுடன் அவன் தனியாக இருக்கையில் அவளிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் கரண் தடுமாற…
தேஜு கரணிடம் ஹலோ என்று சொல்ல…
கரணும் ஹாய் என்றான்.
நீங்க எங்க அண்ணாவுக்கு பிரண்டா என்று கேட்டால் தேஜு.
இல்ல என்னோட பிரண்டு சூர்யா தான். நான் இப்போதான் உங்க அண்ணாவையே பார்க்கிறேன் என்று சொன்னால் கரண்.
நீங்க ரொம்ப நர்வஸா இருக்கீங்களா?என்று கேட்டால் தேஜு.
கரண் ஆமாம் என்று தலையாட்டியவன் பிறகு இல்லை என்று வேகமாக தலையை ஆட்டினான்.
உன் குழப்பமாக தலையாட்டுவதைப் பார்த்து சிரித்தேன் எதுக்கு இவ்வளவு நேர்வஸ் ஆகுறீங்க… என்ன பார்த்தா என்ன அவ்வளவு பயமா இருக்கா? என்று கேட்டால் தேஜு சிரித்துக் கொண்டே .
இதற்கும் காரணம் என்று தலையாட்டிவிட்டு பிறகு மறுபடியும் இல்லை என்று தலையை இடவலமாக ஆட்ட கரணை பார்த்து தேஜு சத்தமாக சிரித்து விட்டால்.
இப்ப எதுக்கு நீங்க இப்படி பதட்டப்படுறீங்க என்று கேட்டால் தேஜு.
அது ஒன்னும் இல்லைங்க முதல் முறையா ஒரு அழகான பொண்ணு வந்து என்கிட்ட இவ்வளவு சாதாரணமா பேசுறப்போ எனக்கு என்ன பேசுறது என்ன பண்றதுன்னு தெரியல அதுதான் கொஞ்சம் இல்ல ரொம்பவே பதட்டமா இருக்கிறேன் என்று கரண் சொல்ல…
அப்படியே பேசிக்கிட்டு இருக்கும்போது என்னை அழகா இருக்கேன்னு சொல்லிட்டீங்க அப்படித்தானே என்று வெட்கத்தோடு சிரித்தால் தேஜு.
உண்மைய சொல்லித் தாங்க ஆகணும் என்றாண் கரண்.
ஓஹோ அப்போ நீங்க நிஜமாவே நான் அழகா இருக்கேன்னு தான் சொன்னீங்களா என்று கேட்டால் தேஜு.
ஆமாங்க நீங்க நல்லா கலையா நச்சுன்னு அழகா இருக்கீங்க… உங்க நிறத்துக்கு ஏற்ற மாதிரி பேபி பிங்க் நிறத்தில் உடை அணிந்து ரொம்பவே அழகா வந்து இருக்கீங்க பார்ட்டிக்கு என்றவன் உங்களுடைய லிப்ஸ் ரொம்ப அழகா இருக்கு என்றான்.
அவன் அப்படி சொல்லவும் தேஜுவிற்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை .
தேஜு எதுவும் பேசாமல் அமைதியாக விட அதை பார்த்த கரண்.ஏங்க நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா? கோவிச்சுட்டீங்களா? என் மேல ஏன் எதுவும் பேச மாட்டேங்கறீங்க என்று கேட்டான் கரண்.
ஆமா கோவிச்சுக்கிட்டு உங்க மேல என்றாள் தேஜு.
தேஜு அப்படி சொன்னதும் கரணுக்கு கஷ்டமாகிவிட… அவன் முகம் உடனே வாடிவிட்டது அதை கவனித்த தேஜு இப்படி முகத்துக்கு நேரா நான் அழகா இருக்கேன்னு என் லிப்ஸ் அழகா இருக்குன்னு சொன்னா எனக்கு கோபம் வருமா வராதா… ஒரு பெண்ணை எப்படி இம்ப்ரஸ் பண்றதுன்னு கூட உங்களுக்கு தெரியலையே என்று சொல்லி தேஜு சிரிக்க…
அவள் சிரிப்பதை பார்த்ததும் தான் கரணுக்கு நிம்மதியாக இருந்தது. அப்போ அப்போ நெஜமாவே உங்களுக்கு என் மேல கோபம் இல்லை தானே என்று கேட்டான் கரண்.
தேஜு கையில் இருந்த ஜூசை குடித்துக் கொண்டு இல்லை என்ற தலை ஆட்ட…
அப்பாடா நான் என் ஃபிரெண்ட் கிட்ட சொன்னது நடந்துடும் போல இருக்கே என்று சற்று சத்தமாகவே சந்தோஷத்தில் கரண் உளர…
அப்படி என்ன? உங்க பிரண்டு கிட்ட நீங்க என்ன நடந்திடும் சொன்னீங்க என்று கேட்டால் தேஜு.
நான் சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே என்ற கரண் தேஜுவை பார்த்து தயங்கி வாரேன் அருளுடன் இந்த பார்ட்டிக்கு வரும்போது அவனிடம் பேசியாதை கரண் சொல்ல…
அப்போ நீங்க சொன்ன மாதிரியே பார்த்துவிட்டு போகும்போது கமிட்டடா தான் போக போறீங்களா? என்று தேஜு கேட்க..
நான் பார்ட்டியை விட்டுப் போகும்போது சிங்கிளா போறதா இல்ல கமிட்டடா போறதா என்பது உங்க கையில தான் இருக்கு என்று கரண் சொல்ல…
தேஜு அவனை செல்லமாக முறைக்க…
ப்ளீஸ் தேஜு என்னை பார்த்தா பாவமா இல்லையா எல்லாரும் ஜோடி ஜோடியா சுத்துறாங்க எனக்கு மட்டும் இத்தனை வருஷமாகியும் ஒரு ஜோடியும் செட்டாக மாட்டேங்குது. எனக்கு உங்களை பார்த்தது ரொம்ப பிடிச்சு போயிடுச்சு உங்களுக்கும் அப்படித்தான்னு நான் நினைக்கிறேன்.தயவு செய்து என்னை சிங்கிளா இங்கே இருந்து அனுப்பிடாதீங்க என்று கரண் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தேஜுவை பார்க்க…
அவனைப் பார்த்து சிரித்த தேஜு… சரி இன்று மட்டும் ஒரு நாள் நீங்க கமிட்டடா இருந்துக்கோங்க அதுக்கு நான் பர்மிஷன் தரேன் என்று சொல்ல…
நான் இன்னிக்கு மட்டும் கேக்கல தேஜு என் வாழ்க்கை முழுக்க நான் உங்க கூட கமிட்டாகணும்னு நினைக்கிறேன் என்று நேரடியாகவே கரண் சொல்லவும்.
கரண் இப்படி நேரடியாக கேட்கவும் ஏற்கனவே சிவந்து இருந்த தேஜுவின் முகம் மேலும் சிவந்து விட அவனைப் பார்த்து சரி என்பது போல வெட்கத்துடன் தலையாட்டினாள்.
தனக்கு சம்மதம் கிடைத்துவிட்டது என்று சந்தோசத்தில் கரணுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அய்யோ!!! டேய் அருள்..எங்கடா போயிட்ட… நான் சொன்ன மாதிரியே கமிட் ஆயிட்டேன் டா.. என்று வாய்விட்டு சற்று சத்தமாக சொல்ல.
அவன் அருகில் நின்றிருந்த தேஜூ வேகமாக தன் சேரிலிருந்து எட்டி கரணின் வாயை முடியவள் தன் உதட்டில் ஒற்றை விரலை வைத்து ஷ்… அவனை அமைதியாக இருக்கச் சொல்லி சைகை செய்தால்.
நானும் சிரித்துக் கொண்டே வாயிலிருந்து தேஜுவின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்தவன் சரி என்று தலையாட்டி விட்டு அவள் கையை இறுக்கப்பற்றிக் கொண்டான் .
பார்த்து பேசி சில நிமிடங்களிலேயே தன்னிடம் இவ்வளவு நெருக்கமாக பேசும் கரணைக் கண்டு தேஜுவிற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அவன் கையை தேசம் விருது பற்றி கொண்டவள் அவர்கள் இருவரிடமும் சூர்யாவும் விஷ்வாவும் வருவதை பார்த்து கரணின் கையில் எடுத்து தன் கையை எடுத்துக்கொள்ள அவளை புரியாமல் பார்த்த கரண் இப்போதுதான் சூர்யாவும் விஷ்வவும் தங்கள் டேபிளுக்கு வருவதை உணர்ந்தவன் அமைதியாகிவிட்டான்.
நீஉடை மற்ற சென்ற அருளும் மயோ
வும் சற்று நேரத்தில் வந்துவிட.. அவர்கள் இருவரும் வந்ததும் பார்ட்டியில் இவர்களுக்காக தயாரிக்கப்பட்டிருந்த ஆள் உயிரைக் கேட்கக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார்கள்.
அவர்கள் கேக்கை கொண்டு வந்து மயோவின் முன் வைத்ததும் அதை பார்த்தவளுக்கு தான் இதை செய்ய சொல்லவில்லையே என்று யோசனையோடு இருக்க….
அவள் அருகில் நின்று இருந்து அருள் மயோவில் இடுப்பில் கை கொடுத்து தன்னருகில் இழுத்து மயோவை நிறுத்தியவன் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக என்ன பார்க்கிற…. உனக்காகத்தான் நான் இந்த கேக்கை ஏற்பாடு செய்யச் சொன்னேன்.
இவ்வளவு பெரிய பார்ட்டியில் கேக் வெட்டாம ஸ்டார்ட் பண்ணா nallanஇருக்காது இல்லையா அதனால் தான் என்றான்.
மயோ அருளைப் பார்த்து சிரித்தவள் பரவாயில்லையே உனக்கு இதெல்லாம் தெரியுமா இன்று ஆச்சரியமாக கேட்டவள் கேக்கை அனைவரும் வெட்டச் சொல்ல…
நான் இந்த கேட்க வெட்டுவதற்கு முன்னாடி இப்போ நான் உங்களுக்கு எல்லாம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் அதுக்காக தான் இந்த பார்ட்டியை நான் அரேஞ்ச் பண்ணி இருந்தேன் என்று சொன்னால் மயோ.
மயோ என்ன சொல்லப் போகிறாள் என்று அருள் முதல் கொண்டு அங்கு கூடியிருந்த அனைவரும் மயோ என்ன சொல்லப்போகிறாள் என்று ஆவலாக அவளையே பார்த்துக்கொண்டு இருந்தனர்
EPISODE 36
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
மயோ ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு வந்திருந்தவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப… அருகில் இருந்த ஸ்பூனை எடுத்து தன் கையில் வைத்து இருந்த மது கோப்பையில் தட்ட… அதன் ஒலியில் அனைவரும் திரும்பி மயோவை பார்த்தனர்.
மயோ ஏற்பாடு செய்து இருந்த பார்ட்டியில் முக்கியமான அறிவிப்பை தெரிவிப்பதற்காக தான் இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்ததாக மயோ அனைவரிடமும் தெரிவித்தாள்.
மயோ என்ன அறிவிப்பை தெரிவிக்க போகிறாள் என்று அங்கிருந்து அனைவரும் மயோவை ஆர்வமாக பார்க்க…
அவள் அருகில் நின்றிருந்த அருள் அப்படி என்ன முக்கியமான விஷயம் சொல்ல போற என்கிட்ட கூட சொல்லலையே!!! என்று கேட்டான்.
அது சர்ப்ரைஸா இருக்கணும்னு தான் நான் உன்கிட்ட சொல்லல என்ற மயோ நீயே இப்ப தெரிஞ்சுக்க போற என்றவள்.
மயோ என்ன சொல்லப் போகிறாள் என்று மற்றவர்களைப் போலவே ஆர்வமாக அவளை பார்த்துக்கொண்டு அங்கு நின்ற பாஸ்கரை பார்த்து அவளிடம் வருமாறு அழைத்தாள்.
மயோ பாஸ்கரை அழைத்ததும் தன்னை எதற்கு அழைக்கிறாள். முக்கிய அறிவிப்பை தெரிவிப்பதாக இப்போது தான் சொன்னாள். சொல்லி முடித்ததும் என்னை எதற்கு அழைக்கிறாள்.ஒருவேளை தனக்கு ஹாஸ்பிடலில் முக்கிய பொறுப்பு எதுவும் தர போகிறாளா என்று யோசித்தவாறே பாஸ்கர் மயோவிடம் வர…
அவனை தன் அருகில் நிறுத்தி வைத்த மயோ அனைவரையும் பார்த்து உங்கள் எல்லோருக்கும் மிஸ்டர் பாஸ்கரை நன்றாக தெரியும் என்னுடைய SN ஹாஸ்பிடலை இன்று வரை திறமையாக நடத்திக் கொண்டு இருப்பவர், என்னுடைய ஹாஸ்பிடலின் இருதய அறுவை சிகிச்சை பிரிவில் தலைமை பொறுப்பில் இருப்பவர், அதே சமயம் என்னுடைய ஹாஸ்பிடல் டீன் ஆகவும் இருந்து நிறைய பொறுப்புகளை எடுத்து இன்று வரை எந்த ஒரு குறையும் இல்லாமல் திறம்பட நடத்திக் கொண்டு இருப்பவர்.
இவர் என்னுடைய ஹாஸ்பிடலில் பணிபுரிகிறார் என்பதையும் தாண்டி எங்கள் செழியன் குடும்பத்தின் முக்கிய உறவில் இருப்பவர் என்றாள்.
அவளை புரியாமல் அங்கிருந்த சிலர் பார்க்க… அவர்கள் முக மாறுதலை கவனித்த மயோ நீங்க யோசிப்பது புரிகிறது. எங்கள் குடும்பத்திற்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் என்று யோசிக்கிறீர்கள் இல்லையா என்றவள். இவர் வேறு யாரும் இல்லை என் அப்பாவின் பெரியப்பாவின் பேரன் தான் மிஸ்டர் பாஸ்கர் என்றாள் மயோ.
இதுநாள் வரையில் பாஸ்கர் கூட அவளிடம் தன் உறவை பற்றி சொல்லியதில்லை காரணம் தான் யாரு என்று தெரிந்தால் ஹாஸ்பிடலில் தன்னை வேலைக்கு அமர்த்தி தன்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கண்டிப்பாக ஒப்படைத்து இருக்க மாட்டாள்.இதற்கு காரணம் அவள் அப்பாவின் உறவுகள் அனைத்தும் மயோவின் சொத்திற்காகவவும், அவர்கள் வழி வழியாக கொண்டு வரும் செழியன் குடும்பத்தின் பாரம்பரியமும், நாட்டில் அவர்களுக்கும், இந்த பெயரில் உள்ள அதிகாரத்திற்காகவும் செழியனையும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் அழிப்பதற்க்காக செழியனின் தாத்தா மார்க்கண்டேய செழியன் காலத்தில் இருந்து இன்று வரை இவர்களை அழிக்க… பல வழிகளில் இருந்து இந்த செழியன் குடும்ப உறுப்பினர்கள் முயற்சித்து வந்து இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த பாஸ்கர் தன்னை இதுவரை மயோவிடம் அடையாளப் படுத்தியதில்லை காரணம், செழியனுடைய தாத்தா காலத்திலேயே பாஸ்கருடைய தாத்தாவை நாடுகடத்தி விட்டனர்.
பாஸ்கரின் தாத்தா மார்க்கண்டேய செழியனின் குடும்பம் மொத்தமாக அழிக்க திட்டம் போட்டு இருந்தார். அதை எப்படியோ கண்டு பிடித்து முறியடித்துவிட்ட மார்க்கண்டேயன். அந்த சதி காரணத்திற்காக பாஸ்கரின் தாத்தாவை நாடு விட்டு நாடு கடத்திவிட்டார் அவரை அவர்கள் குடும்பத்திற்குள் இருந்து ஒதுக்கும் வைத்து விட்டார்.
தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள தன் குடும்பத்தோடு பாஸ்கரின் தாத்தா மலேசியா சென்றுவிட்டார். அதன் பிறகு இன்று வரை இந்தியா வரவே இல்லை அவர் இறக்கும் தருவாயில் பாஸ்கரை அழைத்து மார்க்கண்டே செடியின் குடும்ப உரிமையை அவன் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவரின் கடைசி ஆசையாக கூற அதை செய்து முடிப்பதாக பாஸ்கர் அவன் தாத்தாவிற்கு சத்தியம் செய்திருந்தான். அதன் பொருட்டுதான் தன் அடையாளங்களை எல்லாம் மறைத்து மயோவின் ஹாஸ்பிடலில் முதலில் ஆரம்பகால மருத்துவராக வேலைக்கு சேர்ந்தார் படிப்படியாக செழியனின் நம்பிக்கையை பெற்று அவருடைய ஆஸ்பிட்டலிலேயே உயர் பதவியான ஹாஸ்பிட்டலின் டீனாக வளரும் அளவிற்கு பாஸ்கர் அவர்களின் நம்பிக்கை கூறிவராக இன்றுவரை இருந்திருக்கிறார்.
தன்னுடைய இருபதுகளின் தொடக்கத்தில் செலினின் ஹாஸ்பிடலில் வேலைக்கு சேர்ந்தவர் இன்று தன்னுடைய 38 வயதில் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பதற்கு காரணம் இதுவே.
இப்படிப்பட்ட பாஸ்கரின் அனைத்து விஷயங்களையும் இப்போது மயோ அனைவரும் முன்னிலையிலும் போட்டு உடைத்து விட… சற்றும் எதிர்பார்க்காத பாஸ்கரின் முகம் மயோவிற்கு உண்மை தெரிந்து விட்டது என்று வெளிரிப் போய்விட்டது.
மயோ அனைவரையும் பார்த்து பாஸ்கர் ஒரு வகையில் எனக்கு அண்ணன் முறை ஆகிறார். அவருக்கு இந்த வயதிலேயே நான் நிறைய பொறுப்பை கொடுத்து விட்டேன். அதனால் அவரை இந்த டீன் பொறுப்பில் இருந்து அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அந்த பொறுப்பில் என் கணவர் அருளை நியமித்து இருக்கிறேன் என்று சொல்லவும்.
அவள் அருகில் நின்றிருந்த பாஸ்கருக்கும் அருளுக்கும் ஒரு சேர அதிர்ச்சியாக இருக்க இருவரும் திரும்பி மயோவை பார்த்தனர்.
மயோ அருளை தன்னுடைய ஹாஸ்பிடளின் டீன் ஆக அறிமுகம் செய்த ஒரு உடன் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்தது.
ஏனென்றால் பாஸ்கரை பற்றிய விபரங்கள் தெரிந்த மயோவினுடைய குடும்பம் அவளுக்கு எதிராக பாஸ்க்குடன் சேர்ந்து சதி வேலைகளில் ஈடுபட்டு இருந்தது. அவர்களுக்கும் இந்த விஷயம் அதிர்ச்சியாக தான் இருந்தது.
அவர்களில் ஒரு சிலர் மயோவிடம் எந்த ஒரு முன் அனுபவம் இல்லாத சாதாரண ஒரு பிளாஸ்டிக் சர்ஜனை கொண்டு வந்து எப்படி அவ்வளவு பெரிய பொறுப்பில் நீ அமர்த்துகிறாய் என்று கேட்டனர்.
அவர்கள் கேட்டதையே சிலரும் ஆமோதிக்க அவர்கள் அனைவரிடமும் மயோ அருள் சில வருடங்களாக ஹார்ட் சர்காரிக்காக படித்து அதில் பிராக்டீஸ் செய்ததை பற்றி சொன்னாள்.
ப்ரசிட்டிசில் இருக்கும் ஒரு நபரை பொறுப்புள்ள ஒரு பதவியில் எப்படி எந்த வித முன் அனுபவமும் இல்லாமள் உங்கள் கணவர் என்று ஒரு காரணத்திற்காக எப்படி அந்த பதிவில் நீங்கள் அவரை நியமிக்கலாம் .
இது எல்லாவற்றையும் விட இவ்வளவு பெரிய பதவியில் ஒருவரை நியமிப்பதற்கு முன்பு ஹாஸ்பிடலில் போர்டு மீட்டிங் ஏற்பாடு செய்து. அனைவரும் ஆதரவும் கிடைத்த பின்பு தானே உங்கள் கணவரை அந்த பகுதியில் அமர வைக்க வேண்டும் என்று கேட்டனர்.
அது எல்லாம் தெரியாமல் தானா நான் இங்கு வந்து இந்த விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வேன் என்று கேட்டாள் மயோ.
அவள் அருகில் நின்று இருந்து பாஸ்கர் எனக்கு தெரியாமல் எப்போ நீங்க போர்டு மீட்டிங் அரேஞ்ச் செய்தீர்கள் என்று கேட்டால்.
என்னுடைய ஹாஸ்பிடலில் போடும் மீட்டிங் நடப்பதை நான் எதற்கு உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டால் மயோ.
மயோ இப்படி கேட்டதும் நம் பாஸ்கர் அவளுக்கு எதிராக எதுவும் பேச முடியாமல் அப்படியே அமைதியாக நின்று விட்டான்.
தன்னிடம் கேள்வி கேட்டவரை திரும்பிப் பார்த்து உங்களுக்கு பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் திரு ராமசாமியை தெரியுமா என்று கேட்டால்.
அவரை தெரியாதவர்கள் இந்த மருத்துவத்துறையில் எவருமே கிடையாது. அவரை எனக்கு நன்றாக தெரியும் என்று சொன்னார் அந்த நபர்.
அப்படியா!!!என்று கேட்ட மயோ ஒரு நிமிஷம் இருங்க என்று சொன்னவள் அருளை திரும்பிப் பார்த்து சிரித்தவள் தன் பின்னால் இருந்த வேலையாளை அழைத்து அவரிடம் காதில் ஏதோ சொல்ல….அவர் சரி என்று தலையாட்டிவிட்டு உள்ளே சென்றவர் தன்னுடன் திரு ராமசாமியை அழைத்து வந்தார்.
அவரைப் பார்த்த அனைவருக்குமே இங்கு நடப்பது உண்மைதானா என்று சற்று அதிர்ச்சியிலேயே இருந்தனர் ஏனென்றால்
நாட்டிலேயே மிகவும் பிரபலமான இருதய அறுவை சிகிச்சை நிபுணர் இந்த ராமசாமி. அவரை சந்திப்பதை என்பது சாமானியர்களால் முடியாது. அப்படிப்பட்டவர் இந்த பார்ட்டிக்கு வந்திருப்பதை பார்த்த அனைவருக்குமே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.
மயோவை பார்த்து சிரித்தவர் அருளைப் பார்க்க அருளும் அவரை இங்கே எதிர்பார்க்காததினால் அதிர்ச்சிலேயே நின்றிருந்தான்.
அருளைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவன் அருகில் வந்த ராமசாமி அருளின் தோளில் கை போட்டு என்ன அருள் என்னை இங்கே நீ எதிர்பார்க்கலையா என்று கேட்க…
அவர் தன்னிடம் வந்து பேசியதும் தான் சற்று நினைவுக்கு வந்தவன் போல ஆ… ஆ…ஆமா சார் என்றான் அருள்.
அவன் தோளில் கை போட்டவரே அவனைப் பார்த்து சிரித்த ராமசாமி தன்னை பார்த்து நின்றிருந்தவர்களை உங்க எல்லாருக்கும் என்னை பார்த்து ஆச்சரியமாகத்தான் இருக்கும். நீங்க வந்ததற்கு முக்கிய காரணமே என்னுடைய அசிஸ்டன்ட் அருளுக்காக தான் என்று சொன்னார்.
அவர் அருளை தன்னுடைய அசிஸ்டன்ட் என்று சொன்னதும் பாஸ்கருக்கு அதிர்ச்சியாகிப் போனது. அவரை சந்திக்க பாஸ்கர் பலமுறை முயற்சித்து இருக்கிறேன் அவரிடம் சில நாட்களாவது வேலை செய்ய வேண்டும் என்பது பாஸ்கரின் நீண்ட நாள் கனவு ஆனால் அவர் அருளை தன்னுடைய அசிஸ்டன்ட் என்று அறிமுகம் செய்யவும் அவனால் அதை நம்பவே முடியவில்லை.
அருளை தன்னுடைய அசிஸ்டன்ட் என்று அறிமுகம் செய்து கொண்ட திரு இராமசாமி எல்லாருக்கும் என்னுடைய சிறந்த மாணவன், எனக்கு அடுத்த நிலையில் இப்போது எனக்கு அசிஸ்டெண்டாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அருளை உங்களுக்கு ஹாட் சர்ஜயனாக அறிமுகம் செய்வதில் நான் சந்தோஷப்படுகிறேன் என்று சொன்னார்.
அருளை உங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் மருத்துவராகத்தான் தெரியும் ஆனால் அதற்குப் பின்பு அவன் என்னுடைய அசிஸ்டன்டாக இருப்பதற்காக எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறான் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.
அருள் உடைய மனைவி மயோ என்பது தெரிந்து கொண்டபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மயோ என்னிடம் வந்து அருளைப் பற்றிய விஷயங்களை சொல்லி தன்னுடைய ஹாஸ்பிடலுக்கு அருளை டீன் ஆக நியமிக்க வேண்டும் என்றும் அதற்கான தகுதிகள் அருளுக்கு இருக்கிறதா தான் அருளை நம்பி இந்த பொறுப்பை கொடுக்கலாமா என்று என்னிடம் கேட்டபோது நான் மிகவும் மகிழ்ச்சியாக தாராளமாக அருளுக்கு இந்த பொறுப்பை கொடுப்பதில் ஒரு தயக்கமும் அவருக்கு தேவைப்படாது கண்டிப்பாக அருள் தாங்கள் கொடுக்கும் பொறுப்பை நல்லபடியாக செய்வான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று நான் தான் அருளை மயோவிற்கு பரிந்துரைத்தேன் என்று சொன்னார் ராமசாமி.
நான் சொன்னதை கேட்ட அருளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது தன்னை பற்றி இவ்வளவு நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கும் தன் குருவை நினைத்து அருளுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது அதே சந்தோஷத்தோடு தன் மனைவியை பார்க்க மயோ அருளைப் பார்த்து சிரித்துவிட்டு கண்ணடித்தவள் அவளிடம் கேள்வி கேட்டவரிடமும், அருளுக்கு எதிராக பேசியவர்களிடமும் திரும்பி இப்போது சொல்லுங்கள் அருளை என்னுடைய ஹாஸ்பிடலுக்கு டீன்னாக நியமிப்பதில் உங்கள் யாருக்கும் ஆட்சியபனை இருக்கிறதா? என்று நேரடியாக கேட்டாள்.
ராமசாமி சொன்னதை கேட்ட பிறகு அருளை எதிர்த்து அங்க இருந்தவர்கள் யாராலும் பேச முடியவில்லை அப்படியே அமைதியாகி விட…
மயோ அவர்களை பார்த்து உங்களுடைய ஒத்துழைப்பிற்கு நன்றி என்று சொன்னவள்.ராமசாமியிடம் திரும்பி உங்கள் நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி இவ்வளவு தூரம் வந்து என்னுடைய கணவரை பற்றி இங்க இருப்பவர்களுக்கு நம்பிக்கை வரும்படி பேசியதற்கு நன்றி என்றாள்.
என்னுடைய திறமையான மாணவனின் அடையாளத்தை இந்த உலகிற்கு எடுத்து சொல்லும் முதல் நபர் நான் என்பதில் பெருமை அடைகிறேன் என்றார்.
அருளிர்க்கு இந்த தருணத்தை நினைத்து மிகவும் சந்தோசமாக இருந்தது. தன்னை உலகிற்கு அடையாளப் படுத்திய தன் குருவையும் அதற்கு காரணமான தன் மயோவையும் நினைத்து நெகிழ்ந்து போனான்.
EPISODE 37
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
பார்ட்டியிலிருந்து அருளும் மயோவும் கிளம்ப இளாவையும்,மீராவையும் தங்களோடு வர சொல்ல… அவர்கள் இருவரும் இன்னும் கொஞ்ச நேரம் பார்ட்டியில் இருந்து விட்டு வருவதாக மயோவிடம் கெஞ்ச…
இருவரையும் சீக்கிரம் கிளம்பி வர சொல்லிவிட்டு இவர்கள் இருவாரும் வீட்டிற்கு வர… அமுதாவும், செழியனும் உறங்கி இருக்க… ஒன்று இரண்டு வேலையாட்களை தவிற வேறு யாருமே ஹாலில் இல்லை.
பார்ட்டியில் இருந்து கிளிம்பி வீட்டிற்கு வரும்வரை இருவரும் எதுவும் கொள்ளவில்லை. வீட்டுக்குள் வந்து தங்களை சுற்றிலும் ஒரு முறை நோட்டமிட்ட இருவரும் ஹாலில் யாருமில்லை என்பதை உணர்ந்ததும் சட்டென திரும்பி ஒருவரை ஒருவர் பார்க்க…..
அருள் மயோவின் முகத்தை மிகவும் உணர்ச்சி வசத்தோடு தன் இரு கைகளிலும் பிடித்து ஹாலில் வைத்து அவளுக்கு முத்தமிட தொடங்கினான்.
மயோவும் இவ்வளவு நேரம் இதைத்தான் எதிர்பார்த்தால் போல அவளும் அவனுக்கு ஈடு கொடுத்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள்.
பார்ட்டி முடிந்ததில் இருந்து ஒருவருக்கு ஒருவர் எப்போது தனிமை கிடைக்கும் என்று காத்திருந்தவர்கள் இவ்வளவு நேரம் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தவர்கள். வீட்டிற்குள் நுழைந்ததும் யாரும் இல்லை என்பதை உணர்ந்ததும். இதற்கு மேலும் தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது என்று முத்த தேடலை தொடங்கினர்
அருள் மயோவிற்கு முத்தம் கொடுத்தவன் அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டு மாடிப்படிகளில் ஏறி தன்னறைக்கு சென்றவன் அவளை இறக்கிவிட்டு கதவை தாளிட்டு திரும்ப அவன் திரும்பி வேகத்தில் மயோ வந்து அருளை கதவோடு சாற்றி அவன் மீது முழு உடலையும் போட்டு அவனுக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தால்.
அவள் முகத்தை தன் இரு கைகளாலும் பிடித்து தன்னிடம் இருந்து பிரித்த அருள் என்னடி ஆச்சு உனக்கு, இன்னைக்கு இவ்வளவு வேகமா இருக்க என்று கேட்டான் அருள்.
நான் உன் மேல பயங்கர கோபமா இருக்கேன் அதனால தான் இப்படி நடந்துக்கிறேன் என்று சொன்னவள் மீண்டும் அருளிர்க்கு வன்மையாக முத்தம் கொடுத்தான்.
தான் மூச்சு திணறும் அளவு மயோ தனக்கு முத்தம் கொடுப்பது ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும் தன் மீது அவள் கோபமாக இருக்கிறேன் என்று சொன்னதும் எதற்காக என்று புரியாமல் தன்னை இம்சிக்கிறேன் என்று நினைத்து இன்ப அவஸ்தையாக முத்தம் கொடுத்து இருந்தவளை வலுக்கட்டாயமாக தன் மீது இருந்து பிரித்தவன் என் மேல எதுக்கு கோபம் என்றான் புரியாமல்.
அருளிடம் இடமிருந்து பிரிந்து நின்று மயோ வேகவேகமாக மூச்சு வாங்கிய படியே அவர்களைப் பார்த்து நீ மிஸ்டர் ராமசாமி கிட்ட ஹார்ட் சர்ஜனை அசிஸ்டன்ட்டா இருக்கேன்னு என்கிட்ட ஏன் சொல்லல அதனால தான் நான் கோபமா இருக்கேன் என்றால் .
உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்லை மயோ நேரம் வரும்போது நானே சொல்லனும்னு இருந்தேன்.ஆனா அதுக்குள்ள எப்படி உனக்கு இந்த விஷயம் தெரிஞ்சது என்று கேட்டான்.
நம்மோட ரூம்ல நீயும் கரணும் இத பத்தி பேசிகிட்டு இருந்தத நான் கேட்டேன் என்று சொல்ல…
அருள் எப்போது பேசினோம் என்றபடி யோசிக்க அவனைப் பார்த்தவள் நம்ம ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு என்று சொன்னாள்.
அப்போ நாங்க பேசுனத நீ ஓட்டு கேட்டியா என்று சிரித்தான் அருள்.
ஆமாமா கதவை திறக்கறதுக்கு முன்னாடியே நீங்க பேசுறது வெளிய வர கேட்டது இதுல வேற ஒட்டு கேக்குறாங்க என்று சொல்லி அவன் தோளில் அடித்தால் மயோ.
நாங்க ஒன்னும் அப்படி பெருசா பேசிக்கலையே அதுவும் நான் பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்குறத மட்டும் தானே பேசினேன் அவர்கிட்ட அசிஸ்டென்டா போனத பத்தி பேசவே இல்லையே என்று அருள் கேட்டான்.
நீ சொன்ன அந்த ஒரு சின்ன விஷயம் போதாதா உன்ன பத்தி எல்லாமே தெரிஞ்சுக்கறதுக்கு நீ சொன்ன மறுநாள் எனக்கு உன்னைப் பற்றிய எல்லா விபரமும் தெரிந்து விட்டது. அதுவும் இல்லாமல் கரணும் உன்னோடு சேர்ந்து ராமசாமி இடம் வேலை செய்வதும் எனக்கு தெரியும் என்று சொன்னால்.
அவளை ஆச்சரியமாக பார்த்த அருள் உன்கிட்ட இருந்து எதுவுமே மறைக்க முடியாது போலையே என்று சொல்லி சிரித்தான்.
நீ மறச்சு தான் பாரேன் என்றால் மயோ நக்கலாக.
இப்போதைக்கு எனக்கு உன்கிட்ட மறைக்க எதுவுமே இல்லை என்று சொன்னவன் ஆனா நீ தான் என்கிட்ட இருந்து மறைக்கிற என்று சொன்னான்.
நானா? உன்கிட்ட இருந்து மறைக்கிறேன். அப்படி எதுவுமே இல்லை எங்கே சொல்லு அப்படி நான் என்ன உன்கிட்ட இருந்து மறைக்கிறேன் என்று கேட்டால் மயோ.
மயோவின் அருகில் வந்த அருள் அவள் ஆடையை பிடித்து தன்னோடு இழுத்தவன் இந்த டிரஸ் தான் உன்ன என்கிட்டே இருந்து முழுசா பார்க்க விடாம மறைக்குது என்று சொல்ல…
அவன் சொன்னதும் மயோவிற்கு வெட்கம் வந்துவிட…அருளை தள்ளிவிட்டு ஓடப் போக… அவளை பிடித்து நிறுத்தியவன் எங்க போற?எனக்கு இங்கேஏ….இப்பவே உன்ன பாக்கணும் என்று சொல்ல…
நான் கழட்ட மாட்டேன் என்று மயோ பிடிவாதம் பிடிக்க…
நான் கழட்டி விடுறேன் என்று சொல்லி மயோவை தன்னோடு சேர்த்து நிறுத்தியவன் அவள் ஆடையில் பின்புறம் இருந்த ஜிப்பு முழுவதையும் அவிழ்க்க….
அவள் ஆடையை முழுவதும் அருள் கலைவதற்குள் அவனைப் பிடித்து அங்கிருந்து சோபாவில் தள்ள… அவள் தள்ளிய வேகத்தில் சோபாவில் பொத்தென அமர்ந்த அருள் மயோவை பார்க்க….
தன் ஹீல்ஸ் அணிந்த காலை தூக்கி அவன் மார்பில் வைத்து அழுத்தியவள் நீ தானே கலட்டுவேன்னு சொன்ன…. கழட்டு என்று சொல்லி தன் பார்வையாலேயே தன் காலிலிருந்த ஷூவை காட்ட…
அவளைப் பார்த்து சிரித்தவாரே தன் மார்பின் மீது இருந்த அவள் காலில் இருந்த ஷூவை அவிழ்க்க…. அந்த ஷூவை உதரி தள்ளிய மயோ தன்னுடைய மறு காலையும் எடுத்து அவன் மார்பு மீது வைத்து அழுத்த ….
இந்த முறை அவள் ஷூவை அவிழ்க்காமல் அவள் ஷூவிலிருந்து தன் கைகளை அவல காலை தழுவிக் கொண்டே மேலே சென்றவன் அவள் தொடைக்கு மேலே ஆடைக்குள் கையை விட்டு அவள் இடைக்கு வந்தவன் அவள் உடலை ஒட்டி அதே நிறத்திலேயே அணிந்திருந்த ஸ்கின்னர் ஷாக்சய் அவிழ்த்தான் .
பாதம் வரை அவிழ்த்தவன் அவள் காலில் இருந்த ஷூவையும் கழட்டி எறிந்தவன் அவள் பாதத்தை பிடித்து அவள் உள்ளங்களில் முத்தம் வைத்தான்.
ஒரு பாதத்திலிருந்து முத்தம் வைத்து கொண்டே வந்தவன் கால்களை விட்டுவிட்டு அப்படியே இடைவெளி முன்னேறி இடையில் இருந்து முத்தம் வைத்துக் கொண்டே அவள் வயிற்றைத் தாண்டி….மென்மையைத் தாண்டி…. கழுத்தை தாண்டி…. என ஒவ்வொரு இடமாக அழுந்த முத்தம் வைத்துக் கொண்டே வந்தவன் கடைசியாக அவள் இதழை சிறை செய்தான்.
மயோவிற்கு முத்தம் வைத்துக் கொண்டே
அவள் மேல் அணிந்திருந்த ஆடையை கழட்டி விட…அவள் அணிந்து இருந்த ஆடை அவள் உடலை விட்டு நழுவி சரிந்து மயோவின் பாதத்தில் வந்து விழுந்தது .
அதையெல்லாம் உணரமுமே நிலையில் மயோ இப்போது இல்லை. அவள் தான் அருளின் முத்தத்தில் தன்னை மறந்து மயங்கி போய் நின்று இருக்க….
மயோவிற்கு முத்தம் கொடுத்துக்கொண்டே அவளை அப்படியே தள்ளிக் கொண்டு போய் சுவற்றோடு சேர்த்து நிறுத்தியவன் அவள் உள்ளாடைகளையும் களைந்து விட்டு…. மயோவின் வலது காலை தூக்கி தன் இடுப்பை சுற்றி இருந்தவாறு போட்டு படித்துக் கொண்டவன். தன் இடுப்பில் இருந்து ஆடையை மொத்தமாக ஒரு கையால் கலைந்து விட்டு அருள் அவளோடு கூடலில் இணைந்தான்.
❤️
இளா,மீரா, கரண்,விஷ்வா, தேஜு, சூர்யா…. இவர்கள் மட்டுமே பார்ட்டி நடந்த இடத்தில் இப்போது இருந்தனர்.
சூர்யாவும் தேஜுவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் தேஜு சூர்யாவிடம் விஷ்வாவிற்கு தெரியாமல் கரணை விரும்புவதாக கூற…
அவளை அதிசயம் போல பார்த்த சூர்யா எப்படி பார்த்து கொஞ்ச நேரத்திலேயே உனக்கு அவன பிடிச்சுடுச்சு என்று கேட்க….
ஏன் சூர்யா பார்த்ததும் பிடிக்க கூடாதுன்னு எதுவும் இருக்கா? என்று கேட்டால் தேஜு.
அப்படி இல்ல காலேஜ் டீஸ்ல உன்கிட்ட எவ்வளவு பசங்க வந்து ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்க…. ஏன் உன் கூட ரொம்ப வருஷமா பிரண்ட்ஸா இருந்தா பசங்க கூட உனக்கு ஐ லவ் யூ சொல்லி இருக்காங்க ஆனா நல்லா தெரிஞ்சா அத்தனை பேரையும் விட்டுட்டு இப்பதான் நீ கரணை பார்த்த அதுக்குள்ள எப்படி அவனை உனக்கு பிடிச்சது என்று கேட்டேன் சூர்யா.
ஏன்? எப்படி? என்று எல்லாம் என்கிட்ட கேள்வி கேட்காத… என் மனசுக்கு பிடிச்சிருக்கு அவ்வளவுதான். இந்த விஷயத்தை நீ என் அண்ணன் கிட்ட சொன்னேன்னு வச்சுக்கோ… அப்புறம் நடக்கிறதே வேற என்று சொல்லி தேஜு சூர்யாவே மிரட்ட…
எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுப்பா எனக்கு இந்த விஷயம் தெரியாத மாதிரியே நான் இருக்கிறேன். நீ என்னவோ பண்ணு என்று சொன்னான் சூர்யா.
சூர்யாவும் தேஜுவும் பேசிக் கொண்டிருக்க அவளது போனிற்க்கு மெசேஜ் வரவும் தேஜு அவள் போனை எடுத்துப் பார்க்க…. அதில் கரண் மை டார்லிங் என்று வந்திருந்தது.
அதை பார்த்து சூர்யா அடிப்பாவி அதுக்குள்ள நம்பர் வாங்கி இந்த மாதிரி பேர் போட்டு சேவ் பண்ற அளவுக்கு வந்துட்டியா என்று ஆச்சரியமாக கேட்க…
டேய் கத்தி பேசாதடா… என் அண்ணா காதில் விழுந்திட போகுது வாய மூடு என்று அவனை மிரட்டியவள் தன் ஃபோனில் கரண் அவளுக்கு அனுப்பிய மெசேஜ் ஓபன் செய்து அவனுக்கு பதில் அளிக்க ஆரம்பித்தால்.
தங்கச்சி வந்ததும் ஒருத்தங்கிட்ட விழுந்தது கூட தெரியாம இவன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான் என்று யோசித்தவாறு சூர்யா விஷ்வாவை பார்க்க….
அவன் இளாவுடன் சிரித்து பேசிக்கொண்டு இருந்தான். இளாவிற்கும் விஷ்வாவிற்கும் ஏற்கனவே பழக்கம் என்பது சூர்யாவுக்கு ஏற்கனவே தெரியும் அவன் மயோவை பார்க்க அடிக்கடி அவள் வீட்டிற்கு செல்லும் போது இளா உடனும் நன்றாக தான் பழகுகிறான் என்பது சூர்யாவிற்கு நன்றாகவே தெரியும்.
அப்போதெல்லாம் விஷ்வா இளா உடன் பேசும்போது சூர்யாவிற்கு எதுவும் பெரிதாக தெரியவில்லை.ஆனால் இன்று சூர்யா இளாவும் விஷ்வாவும் சிரித்து பேசிக்கொண்டு இருப்பதை பார்த்ததும் உள்ளுக்குள் ஏதோ அவனுக்கு எரிச்சலாக இருந்தது.
அது ஏன் என்று அவனால் உணர முடியவில்லை. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கோபத்தோடு சூர்யா பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க…. விஷ்வாவுடன் பேசிக் கொண்டிருந்த இளா எதர்சையாக சூர்யாவை பார்க்க….
இளா தன்னைப் பார்க்கிறாள் என்று தெரிந்ததும் தன் அருகில் இருந்த மீராவிடம் பேசுவது போல சூர்யா முகத்தை திருப்பிக் கொள்ள…
அவன் இவ்வளவு நேரம் தங்கள் இருவரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தான் என்பதை புரிந்து கொண்ட இளா உள்ளுக்குள் சிரித்தவள் விஷ்வாவிடம் அவனுக்கு மட்டும் கேட்கும்படியாக விஷ்வா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? என்று கேட்டால்.
என்ன இளா இப்படி கேட்கிற என்ன பண்ணனும்னு சொல்லு என்று கேட்டால் விஷ்வா.
விஷ்வா நான் சூர்யா மாமாவை எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்கு நல்லாவே தெரியும். ஆனால் அவர்கிட்ட நான் அவரை லவ் பண்றேன்னு நேரடியா சொல்லியும் அதை ஏத்துக்க மறுத்துட்டாரு. ஆனா இப்போ பாருங்க நீயும் நானும் சிரிச்சு பேசிட்டு இருக்குறத பாத்து பொசசிவ் ஆகுறாரு. நான் அவரை பார்த்ததும் என்ன கண்டுக்காத மாதிரி திரும்பி மீரா கூட பேசிக்கிட்டு இருக்காரு.
அதனால சூர்யா மாமாவே வந்து என்கிட்ட அவர் என்னை லவ் பண்றேன்னு சொல்ற வரைக்கும் நீ என்னோட லவ்வரா நடிக்க முடியுமா? என்று கேட்டால் இளா.
இளா தன்னிடம் லவ்வராக நடிக்க வேண்டும் என்று கேட்டதும் விஷ்வாவிற்கு தூக்கி வாரி போட்டது. அவன் குடித்துக் கொண்டிருந்த மதுவை அதிர்ச்சியில் துப்பி விட….
அதைப் பார்த்த கரண் ஏய் விஷ்வா என்னடா ஆச்சு? என்று கேட்க விஷ்வா இளாவை பார்க்க இளா கண்களாலேயே ப்ளீஸ்…. என்று விஸ்வாவிடம் கெஞ்சவும், அவன் வேறு வழியில்லாமல் ஒன்றுமில்லை தெரியாமல் சிந்திட்டேன் என்று சொல்லி சமாளித்தான் விஷ்வா.
விஷ்வா மதுவை துப்பி விட அது அவன் அணிந்திருந்த சட்டையில் சிறிது சிந்தி விடவும் அதை பார்த்த இளா அச்சச்சோ…. என்ன விஷ்வா இப்படி பண்ணிட்ட…என்று சொல்லி தன் அருகில் இருந்து டிஷ்யூ பேப்பரை எடுத்து அவன் சட்டையில் இருந்த மதுவை துடைத்து விட்டால்.
இளா விஷ்வாவிடம் அருகில் அமர்ந்து கொண்டு அவன் சட்டையில் சிந்தியிருந்த மதுவை தீவிரமாக துடைத்துக் கொண்டிருந்தால் அதை பார்த்த சூர்யாவிற்கு கடுப்பாக இருந்தது.
ஏய் இளா அவன் சட்டைல ட்ரிங்க்ஸ் சிந்தி இருந்தா அவனுக்கு துடைக்க தெரியாதா? அதை நீ தான் தொலைச்சு விடணுமா? என்று கேட்டான் எரிச்சலாக.
இதில் என்ன இருக்கு சூர்யா மாமா… பாவம் விஷ்வா டிரஸ் எல்லாம் எப்படி சிந்திரிச்சு பாருங்க….நான் துடைக்காம வேற யாரு அவனுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க என்று கேட்டால்.
அவளை முறைத்தவன் மீராவிடம் திரும்பி சரி வா மீரா உன்னையும் இளாவையும் வீட்டில் விட்டுட்டு என் வீட்டுக்கு போறேன் என்று சூர்யா சொல்ல…
நான் சூர்யாவிடம் சூர்யா மாமா நீங்க வேணா மீராவை கூட்டிட்டு போங்க நான் விஷ்வா கூட தனியா கார்ல வரேன் என்று சொல்லவும். ஓகே அவள் சொன்னதை கேட்டு விஷ்வை பார்த்து முறைக்க…
அதை பார்த்த விஷ்வா இளாவிடம் என்னடி இதெல்லாம் நீயும் அவனும் சேருறதுக்குள்ள நானும் சூர்யாவும் திருந்திடுவோம் போல இருக்கே இதெல்லாம் சரி வராது நீ பேசாம அவன் கூடயே கிளம்பி போ நானும் தேஜுவும் வீட்டுக்கு கிளம்பறோம் என்று விஸ்வா சொல்ல…
டேய் வெண்ண திரண்டு வரும்போது தாளியை உடைக்காதடா என் மாமா இப்பதான் என் வழிக்கு வந்திருக்கிறார் பேசாம நான் சொல்றதை கேட்டுட்டு அமைதியா வா…. இல்ல அப்புறம் நடக்கிறது வேற என்று இளா அவன் கையை பிடித்து இருக்கிக் கொண்டு பேச….
விஷ்வாவின் கையை பிடித்துக் கொண்டு ஏதோ பேசுகிறாள் என்று சூர்யாவுக்கு புரிந்தது. ஆனால் அவள் அவனைத் திட்டுவது அவனுக்கு தெரியவில்லை. அவனுடன் கையை பிடித்து பேசும் அளவுக்கு இளா விஷ்வாவிடம் மிகவும் நெருக்கமாக இருப்பதை பார்த்த சூர்யாவுக்கு மிகவும் கடுப்பாகி போக…தான் அமர்ந்து இருந்த சேரில் இருந்து வேகமாக எழுந்தவன் மீரா நீ என் கூட இப்ப வரியா?இல்லையா? என்று கேட்க….
அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இளாவை பார்க்க ஹேய்…மீரா நீ சூர்யா மாமா கூட வீட்டுக்குப் போ….நானும் விஸ்வவும் கொஞ்சம் பர்சனல் ஆஹ் பேச வேண்டி இருக்கு நாங்க பேசிட்டு வீட்டுக்கு வந்திருவோம் என்று சொல்ல… சரி என்று தலையாட்டிய மீரா சூர்யாவின் பின்னால் சென்றான்.
இளா பேசியதெல்லாம் கேட்டுக் கொண்டே சென்ற சூர்யா நீ வீட்டுக்கு வாடி உனக்கு இருக்கு என்று பல்லை கடித்து கொண்டே காரை எடுத்தான். மீராவிற்கு இங்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியாமல் பேசாமல் சூர்யாவுடன் வீட்டிற்கு கிளம்பி சென்றாள்.
சூர்யாவும் மீராவும் சென்ற பிறகு இளா விஷ்வாவை பார்க்க… என்னடி இதெல்லாம் என்ற விஸ்வா சொல்ல… நீ அமைதியா இரு நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னவர் சரி வா நீ என்னை கொண்டு போய் எங்க வீட்ல வீடு என்று இளா கிளம்ப…
ஏய் நானும் தேஜுவும் தான் ஒண்ணா வந்தோம் நீ என்ன என்ன கொண்டு போய் டிராப் பண்ண சொல்ற எந்த விஷ்வா கேட்க….
அதெல்லாம் கரண் பாத்துக்குவாங்க நீ பேசாம வா என்று சொல்லி இளா கரணிடம் தேஜுவை அவள் வீட்டில் விட்டு விடச் சொல்லிவிட்டு விஷ்வாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு காரில் எரிச் சென்றாள்.
காதலித்த முதல் நாளே தன் காதலியை வீட்டில் ட்ராப் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்ததும் கரணுக்கு சந்தோசம் பிடிப்படவில்லை.
தேஜுவை பார்த்து சிரித்துக் கொண்டே போலாமா? என்று கேட்க…அவள் வெட்கத்துடனே ம்ம்ம்ம்… என்று தலையாட்டினாள்.
மீராவை வீட்டில் விட்டுவிட்டு கோபமாக காரை எடுத்துக் கொண்டு சூரியா அங்கிருந்து கிளம்பினான்
இல்லாவின் வீட்டிலிருந்து சூர்யாவின் கார் புயல் வேகத்தில் செல்வதை பார்த்த விஷ்வா இளாவிடம், ஏய் இளா நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல…சூர்யா என்ன பத்தி என்ன நினைச்சுட்டு இருப்பான். எனக்கும் அவனுக்கும் இருக்கிற நல்ல பிரண்ட்ஷிப்பை தேவையில்லாம நான் கெடுத்துக்க விரும்பல.
நாளைக்கு முதல் வேலையை நான் சூர்யா கிட்ட நீ என்கிட்ட நடிக்கச் சொல்லி கேட்டதை சொல்ல போறேன் என்று சொல்ல….
விஷ்வா ப்ளீஸ் டா கொஞ்ச நாளைக்கு நான் சொன்னது போல இரு அதுக்கப்புறம் நானே சூர்யா மாமா கிட்ட உண்மைய சொல்லுறேன் என்று இளா கெஞ்ச என்னால முடியாது ஒரு சின்ன விஷயத்துக்காக நானும் சூர்யாவும் சண்டை போடுற நிலைமைக்கு நான் விடமாட்டேன் நாளைக்கு காலைல முதல் வேலையா சூர்யாவுக்கு இந்த விஷயத்தை சொல்லிட்டு தான் நான் மறு வேலை பார்ப்பேன் என்று சொன்னவன் இளாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
காரிலிருந்து இறங்கிய இளா விஷ்வா அமர்ந்திருந்த டிரைவர் சீட் அருகில் வந்து குனிந்து கார் ஜன்னலில் கையை ஊன்றி நீ மட்டும் சூர்யா மாமா கிட்ட நான் நடிக்கச் சொன்ன விஷயத்தை சொன்னேன் வை, அதுக்கப்புறம் நான் உன்கூட பேசவே மாட்டேன் இது சத்தியம் என்று சொன்னவள் குனிந்து அவன் கன்னத்தை பிடித்து கிள்ளி வரட்டுமா விஷவா… என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல…
ஐயோ… இவ என்ன இந்த பாடு படுத்துகிறாளே இது எல்லாம் பார்த்தா சூர்யா என்ன நினைப்பானோ என்று ❤️புலம்பிய விஷவா காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான் அங்கிருந்து.
விஷ்வா கிளம்பியதும் இளா தன் கையில் இருந்த ஹேண்ட்பேக்கை மேலே தூக்கிப்போட்டு கேட்ச் பிடித்து விளையாடியவாறு சூர்யாவை நினைத்து ஒரு காதல் பாட்டு பாடிக்கொண்டு உள்ளே வர….
இளா உள்ளே வரவும் அவளை பின் இருந்து ஒரு கை அவள் வாயை பொத்தி அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் இழுத்துச் சென்றது.
EPISODE 38
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
சூர்யா மீராவை அழைத்து வந்தவன் அவளை மயோவின் வீட்டில் விட்டுவிட்டு சூர்யா கிளம்பிச் செல்ல…. அவனை பாலோ செய்து வந்த விஷ்வாவும் இளாவை அவள் வீட்டில் இறக்கிவிட்டு செல்ல…
சூர்யாவை நினைத்துக் கொண்டே மனதில் ஒரு காதல் பாடலை நினைத்து அதை ஹம் செய்தவாறே லேசாக நடனமாடிய படி அகிலிருந்த ஹேண்ட்பேக்கை தூக்கி போட்டு பிடித்து விளையாடிக் கொண்டே வீட்டுக்குள் இளா வர…
வாசல் கதவை தாண்டி இளா உள்ளே வந்ததும் அவளை பின்னால் இருந்து வாயை பொத்தி யாரோ இழுத்துச் செல்லவும் இளாவிற்கு முதலில் பயமாக இருந்தாலும் பின் யாராக இருக்கும் என்று யோசித்தவரே அவன் இழுத்த இழுப்பிற்கு செல்ல…
அவளை வாய் பொத்தி இழுத்துச் சென்றவனுக்கே சற்று குழப்பமாக போய்விட்டது தன்னிடம் இருந்து தப்பிக்க போராடுவாள் என்று நினைத்தவனுக்கு இவள் என்ன எதுவும் பேசாமல் தனக்கு இணங்கியவாறு அவனுடன் வருவதை நினைத்து குழப்பம் அடைந்தான்.
வீட்டிலிருந்து வெளியே கார்டனுக்கு இளாவை இழுத்து வந்தவன் அவள் வாயில் இருந்து கையை எடுத்து அவளை தன் பக்கம் திருப்ப…
தன்னை இழுத்து வந்தவன் தனக்கு எதிரே நிற்பதை பார்த்த இளா எந்த ஒரு அதிர்ச்சியும் இல்லாமல் நிற்பதை பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவளை புரியாமல் பார்த்தவனிடம் என்ன சூர்யா மாமா… நீங்க என்ன இழுத்துட்டு வந்ததும் சத்தம் போட்டு பிரச்சனை பண்ணி வீட்ல இருக்கறவங்களை எல்லாம் கூப்பிடுவேன்னு நினைச்சீங்க அப்படித்தானே… என்றால் இளா.
இளாவை விட சூர்யா தான் இப்போது அதிர்ச்சியாக அவளை பார்த்தவன் அவள் கேட்டதற்கு ஆமாம் என்று தலையாட்ட…
நீங்க என் பக்கத்துல வந்து என் வாய பொத்தும்போதே உங்களோட ஸ்பரிசமும் உங்களோட வாசமும் எனக்கு நீங்கதான காட்டிக் கொடுத்துடிச்சு மாமா… அதனால்தான் நீங்க என்னை இழுத்துட்டு வந்தாப்போ நான் எதுவும் செய்யாமல் அமைதியா உங்க கூட வந்தேன் என்று இளா சொல்ல…
சூர்யாவுக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இளாவிடம் நெருக்கமாக பழகியோ அல்லது அவளை தொட்டுக் கூட பேசியதில்லை ஆனால் அவள் தன்னுடைய ஸ்பரிசமும் வாசமும் அவளை அழைத்து வந்தது நான் தான் என்பது எப்படி தெரிந்தது என்று குழப்பமாக சூர்யா இளாவை பார்க்க…
அவள் எதுவும் பேசாமல் சூர்யாவை பார்த்து சிரித்தவாறு நின்று இருந்தால்.
சூர்யாவிடம் சரி சொல்லுங்க மாமா இப்போ எதுக்கு என்ன இங்கே தள்ளிட்டு வந்தீங்க என்று கேட்டாள்.
அது… அது வந்து… என்று சூர்யா தடுமாற…
என்ன மாமா வந்து போயின இழுக்குறிங்க எதுக்கு என்ன இங்க கூட்டிட்டு வந்தீங்க முதல்ல சொல்லுங்க என்று கேட்டாள்.
நீ அந்த விஷ்வா கூட பழகுவது எனக்கு பிடிக்கல என்றான் நேரடியாக.
ஏன் இத்தனை நாளா நான் விஷ்வா கூட எப்படி பழகிட்டு இருந்தேனோ அதேபோல தானே இப்பவும் பழகிட்டு இருக்கேன் இவ்வளவு நாளா நீங்க எதுவுமே சொல்லல இப்ப மட்டும் ஏன் நான் விஷ்வா கூட பேசக்கூடாது பழகக் கூடாதுன்னு சொல்றீங்க என்று கேட்டால் இளா.
நீ இத்தனை நாள் பழகுறதுக்கும் இப்ப பழகுறதுக்கும் ஏதோ வித்தியாசம் இருக்கிற மாதிரி எனக்கு தெரியுது அவனை நீ ஏன் தொட்டு தொட்டு பேசுற அவன்கிட்ட நீ ஏன் அவ்வளவு நெருக்கமா பழகுற என்று கேட்டேன் சூர்யா.
நான் ஒன்னும் வேணும்னே அவனை தொட்டு பேசலையே மாமா அவன் மேல ட்ரிங்க்ஸ் சிந்திச்சு அதை தான் நான் அவனுக்கு துடைக்க ஹெல்ப் பண்ணினேன். தவிர எங்களுக்குள்ள நெருக்கமா பழகுவதற்கு ஆயிரம் விஷயம் இருக்கும் அதை எதுக்கு நீங்க கேக்குறீங்க என்றால் இளா.
அவள் அப்படிச் சொன்னதும் சூர்யாவிற்கு கோபம் வந்துவிட அவள் கழுத்தை பிடித்து அப்படியே பின்னால் தள்ளி கொண்டு சென்றவன் கார்டனில் இருந்த ஒரு பெரிய தூணில் அவளை சாய்த்து நிறுத்தி வைத்தவன் என்னடி சொன்ன அவன்கிட்ட நெருக்கமா பழகிரதுக்கு உனக்கு ஆயிரம் விஷயம் இருக்குமா!!!
நீ எதுக்கு? அவன் கிட்ட நெருக்கமா பழகணும் உனக்கு அவனுக்கு அப்படி என்ன நெருக்கமா பழகுவதற்கு விஷயம் இருக்கு? என்று கோபமாக அவள் கழுத்தை இறுக்கிக் கொண்டே சூர்யா கேட்டான்.
சூர்யா இளாவின் கழுத்தை நெருக்க அவளுக்கு மூச்சு விட சிரமமாக இருக்க…
அவன் கையில் அடித்த இளா மாமா என்னால மூச்சு விட முடியல எனக்கு ரொம்ப வலிக்குது என்ன விடுங்க என்று தினறிக்கொண்டே மூச்சு விட சிரமப்பட்டு இளா பேச…
முதல்ல நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லு அதுக்கு பிறகு உன் கழுத்து விடலாமா வேண்டாமான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன் என்று சொன்ன சூர்யா இளா என்ன சொல்லப் போகிறாள் என்று அவளை பார்க்க…
என்ன மாமா பதில் வேணும் உங்களுக்கு நான் விஷ்வா கூட எப்படி பழகினால் உங்களுக்கு என்ன வந்துச்சு உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கு நீங்க என்னோட அத்தை பையன் அவ்வளவு தான். அதுக்கு மேல உங்களுக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிட்ட இந்த மாதிரி பேசுற வேலை எல்லாம் வேண்டாம் என்று இளா சூர்யாவை மேலும் கோபம் அடைய வைத்தால்.
என்னடி சொன்ன….உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையா? என்று சொன்னவன் இளாவின் அருகில் தன் முகத்தை கொண்டு வந்து அவள் உதட்டில் அழுந்த முத்தம் வைத்துவிட்டு அவள் கழுத்தை விட்டவன். இனிமேல் அந்த விஷ்வா கூட நீ இவ்வளவு நெருக்கமா பேசுறதை பார்த்தேன் உன்ன அங்கேயே கொன்னுடுவேன் ஜாக்கிரதை என்றான் சூர்யா.
மாமா!! இப்ப எதுக்கு நீங்க எனக்கு முத்தம் கொடுத்தீங்க…உங்களுக்கும் எனக்கும் தான் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நீங்க ஏற்கனவே சொல்லிட்டீங்க இல்ல.
எனக்கு முத்தம் கொடுக்குற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது. நான் விஷ்வா கூட எப்படி பேசினால் என்ன?என்ன? பேசினாள் உங்களுக்கு என்ன? வந்துச்சு. நீங்க தான் என்னை வேண்டாம் என்று சொல்லிட்டீங்களே….அதுக்கப்புறம் நான் யாரு கூட எப்படி பழகினால் உங்களுக்கு என்ன? வந்தது என்று இளாவும் பதிலுக்கு கோபமாக சூர்யாவிடம் பேச….
ஓஹோ…நீ என்கிட்ட வந்து லவ்வை சொன்னப்ப நான் உன்னை வேண்டாம் என்று சொன்னதும்.உடனே என்னை மறந்துட்டு வேற ஒருத்தன் கிடைத்ததும் அவன் கூட போயிட்டியா….ஏன் திரும்பவும் வந்து என்கிட்ட பேசி இருக்க வேண்டியதுதானே இல்ல என்ன எப்படியாவது பேசி சம்மதிக்க வைத்திருக்க வேண்டியதுதானே அதை விட்டுட்டு வேற ஒருத்தன் கிடைச்சான்னா என்னை மறந்துவிட்டு அவன் கூட என்ன விட்டுட்டு போயிடுவியாடி நீ என்று சூர்யா கேட்க…
அவன் பேசுவதை எல்லாம் கேட்ட இளாவிற்கு உள்ளுக்குள் சந்தோசமாக இருந்தது. அப்பா விஷ்வா கூட சேர்ந்து நான் போட்ட பிளான் சரியா இப்போதான் ஒர்க் அவுட் ஆகுது என்று மனதிற்குள் நினைத்த இளா அதை சூர்யாவிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அது எப்படி மாமா நான் திரும்ப வந்து உன்கிட்ட லவ் பண்றேன்னு சொல்ல முடியும்.
நீ தான் நான் உனக்கு முத்தம் கொடுத்து பிறகும் கூட என்னை ஒரு பொருட்டாவே நினைக்காமல் போயிட்டியே அப்படி இருக்கிறவங்க கிட்ட நான் எப்படி திரும்பவும் வந்து நான் உன்னை காதலிக்கிறேன் என்று உரிமையா சொல்ல முடியும் என்று கேட்டாள்.
அவள் அப்படிச் சொன்னதும் சூர்யாவிற்கு திருப்பி பதில் பேச தெரியவில்லை. நான் உங்கள காதலிக்கிறேன்னு வெளிப்படையா சொல்லியும் ஒரு பெண்ணுங்கறது மறந்து நானே வந்து உங்களுக்கு முத்தம் கொடுத்தும் கூட நீங்க உங்க காதலை என்கிட்ட வாய் திறந்து சொல்லல.
அப்படி இருக்கிறப்ப உங்களுக்காக நான் எதுக்கு காத்துட்டு இருக்கணும் என்ன வேண்டான்னு சொல்லிட்டு போறவங்களுக்கு பின்னாடி நான் போய் கெஞ்சனுமா? என்று கேட்டால் இளா.
அப்போதும் சூர்யா எதுவும் பேசாமல் இருக்க… அவன் அருகில் வந்த இளா சூர்யாவின் சட்டையைப் பிடித்து தன்னிடம் எடுத்தவள் நீ என்ன லவ் பண்றியா?சொல்லு மாமா என்று கேட்டால் இளா.
சூர்யாவிற்கு இளாவின் முகத்தை நேருக்கு நேராக பார்க்கவே சங்கடமாக இருந்தது அவள் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லாமல் சூர்யா அமைதியாக நிற்க…
பாரு நீ என்ன லவ் பண்றியா?என்று நான் உன்கிட்ட நேரடியா கேட்டேன் ஆமா இல்லைன்னு கூட உன்னால சரியா பதில் சொல்ல முடியவில்லையே மாமா.இப்படி நீ குழப்பமா இருக்க அப்போ நான் உன்னை எதுக்கு நம்பி என் வாழ்க்கையை வீணடிக்கணும் என்று கேட்டால் இளா.
நான் விஷ்வா கூட இப்படி வேணா பேசுவேன் என்ன வேணா பேசுவேன் அத நீங்க கேக்குறதுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று சொன்னாயுள்ள போங்க போய் வேற எதுவும் வேலை இருந்தா பாருங்க. நான் எப்படி போனா உங்களுக்கு என்ன… உங்களுக்கு தான் என்ன பிடிக்காதே என்று சொன்னவள் அவனைத் தாண்டி வீட்டிற்குள் சென்று விட..
வீட்டுக்குள் செல்லும் இளாவை பார்த்துக் கொண்டு கார்டனில் நின்றிருந்த சூர்யா இளா கேட்ட கேள்விக்கு ஏன் தன்னால் பதில் சொல்ல முடியவில்லை என்று தன்னையே நொந்து கொண்டான்.
தான் அவளை காதலிக்கிறேன் இல்லையா என்று தனக்கே சரியாக தெரியாத போது நான் எப்படி அவள் கேட்டோம் கேட்கும் கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியும் என்று சூர்யா நினைக்க
அப்போது அவன் தோளில் கை வைத்து அவன் பின்னால் இருந்து என்ன சூர்யா குழப்பமா இருக்கா? என்று கேட்டுக் கொண்டே அவனை திருப்ப…
சூர்யாவுக்கு எதிராக செழியன் நின்றிருக்க அவரை பார்த்ததும். தாத்தா நீங்க எப்படி இங்க?எப்போ வந்தீங்க?என்று அதிர்ச்சியில் கேட்டான் சூர்யா.
நீ மீராவை வீட்டில டிராப் பண்ணிட்டு நம்மளுடைய டிரைவரை உன் காரை எடுத்துட்டு போக சொன்ன அப்பவே நான் வந்துட்டேன் என்றார் செழியன் .
அப்போ…அப்போ… நீங்க நாங்க பேசுனது எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தீங்களா? என்றான் சூர்யா.
செழியன் ஆமாம் என்பது போல தலையை ஆட்ட…
தாத்தா அது… அது… வந்து இளா விஷ்வா என்று ஏதோ சூர்யா சொல்ல வர…
நீங்க பேசுனது எல்லாம் நான் கேட்டுட்டு தான் இருந்தேன் சூர்யா இலா கேட்டதில்லை என்ன தப்பு இருக்கு ஒரு பொண்ணே வந்து மனசு துறந்து அவளோட காதுல உன்கிட்ட சொல்லியும் நீ எந்த பதிலும் பேசாமல் இருந்திருக்க…
இப்போ கொஞ்சம் முன்னாடி கூட இல்ல உன் கிட்ட அவள நீ காதலிக்கிறாயா இல்லையான்னு கேட்டப்போ நீ உன்னோட முடிவை தெளிவா அவ கிட்ட சொல்லி இருக்கணுமா? இல்லையா? என்றார்.
சூர்யா என்பது போல தலையை ஆட்ட….
இப்போ சொல்லு சூர்யா உன் மனசுல இளாவை பற்றி நீ என்ன நினைச்சுட்டு இருக்க?என்று கேட்டார்.
தாத்தா அதுதான் எனக்கே இன்னும் சரியா பிடிப்படல அவ விஷ்வா கூட நெருங்கி பேசுறப்போ எனக்கு அவ என்ன தவிர வேறு யார்கிட்டயும் அப்படி நெருக்கமா இருக்கக் கூடாதுன்னு தோணுது . அவகிட்ட நான் மட்டும் தான் உரிமையா இருக்கணும்னு தோணுது ஆனா அவளை நான் லவ் பண்றேனா? என்னன்னு எனக்கு சரியா தெரியல தாத்தா எனக்கு ஒரே குழப்பமா இருக்கு என்றான் சூர்யா .
அடேய் பேராண்டி இதுக்கு பேரு தான் டா காதல்ன்னு சொல்லுவாங்க நமக்கு உரிமையானவங்க நம்ம கிட்ட மட்டும் தான் எல்லா உரிமையும் எடுத்துக்கணும் நம்ம கிட்ட மட்டும் தான் பேசணும் நம்ம கூட மட்டும்தான் இருக்கணும்னு எப்போ தோன்ற ஆரம்பிக்குதோ அப்போவே காதல் வந்திருச்சுன்னு தாண்டா அர்த்தம் அதனால தான் நீ இளா விஷ்வா கூட பேசினத பார்த்து கோபப்பட்டு இருக்கேன் இல்லன்னா உனக்கு கோபம் வந்திருக்குமா சொல்லு என்று கேட்டார் செழியன்.
தாத்தா நான் அப்போ இதுதான் காதலா என்று கேட்டான் சூர்யா.
அவனைப் பார்த்து சிரித்தவாறு சொல்லி என் இவ்வளவு வயசாயும் காதல்னா என்னன்னு தெரியாம இப்படி வளர்ந்து இருக்கியேடா உன்னை கல்யாணம் பண்ணிட்டு என் பேத்தி எவ்வளவு கஷ்டப்பட போறாளோ தெரியலையே என்று சொல்லி சிரித்தவர் போடா… போ… காதல் வந்தது கூட தெரியாம எங்கிட்டயே இதுதான் காதலன் வேற கேள்வி கேட்கிறேன் போடா என்று அவன் தோளில் அடித்து விட்டு வீட்டுக்குள் வந்து விட்டார் செழியன்.
சூர்யாவிற்கு இப்போது தன் மனது சற்று தெளிவாக இருப்பதை உணர்ந்தான். இளாவின் மீது தனக்கு காதல் இருக்கிறது என்பதையும் இப்போதுதான் உணர்ந்தான்.
தன் காதலை உணர்ந்த மறு நொடி சூர்யாவிற்கு இளாவை பார்க்க வேண்டும் என்று தோன்ற… இப்போதே சென்று பார்க்கலாமா என்று நினைத்தவன். முதலில் நிலாவை எங்காவது வெளியில் அழைத்துச் சென்று அவளிடம் என் மனதில் இருப்பதை சொல்ல வேண்டும் இப்போது போய் சொன்னால் நான் ஏதோ யோசிக்காமல் அவசரத்தில் சொல்லுகிறேன் என்று நினைத்து அதற்கும் ஏதாவது சொல்லி என்னை வெளியே அனுப்பி விடுவாள் என்று நினைத்த சூர்யா இளாவிடம் எப்படி தன் காதலை சொல்வது என்று நினைத்தவரே அங்கிருந்து கிளம்பினான்.
❤️
சின்னு பி என் கன்ஸ்ட்ரக்சன் சிஇஓ வருணிடம் இனிமேல் தன்னால் அவனுக்கு வேலை பார்க்க முடியாது என்று அவனிடம் சொன்னான்..
இதை சற்று எதிர் பாத்திராத வரும் சின்னு உனக்கு என்ன ஆச்சு ஏன் திடீர்னு என்கிட்ட வேலை பார்க்க மாட்டேன் என்று சொல்கிறாய் என்று கேட்டான் வருண்.
அந்த மயோ கம்பெனி கிட்ட இருந்து நீ கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கு மேல நஷ்ட ஈடா வாங்க போற ஆனா எனக்கு வெறும் அஞ்சு லட்சம் மட்டும் தான் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கே.
உனக்காகத்தான் அங்கே இருக்கிறவங்கள வேலை பார்க்க விடாம இப்போ வரைக்கும் நான் நிறுத்தி வைத்து இருக்கேன் ஆனா நீ எனக்கு வெறும் அஞ்சு லட்சத்துக்கு கொடுத்துட்டு அவ்வளவு பெரிய தொகையையும் அந்த பில்டிங்கையும் வாங்க போற இதுல எனக்கு என்ன பெரிய லாபம் இருக்கு என்று கேட்டான் சின்னு.
இந்த விஷயம் எல்லாம் எப்படி சின்னுவுக்கு தெரியும் என்று யோசித்தான் வருண்.
சின்னு இந்த வேலை இன்னும் ரெண்டு நாள்ல முடிஞ்சிடும் நீ அதுக்குள்ள இப்படி பின் வாங்கினால் நான் என்ன செய்வேன் உன்னை நம்பி தானே நான் அந்த மயோவை எதிர்த்து இந்த வேலையில் இறங்கினேன் என்றான் வருண்.
அதெல்லாம் எனக்கு தெரியாது என்கிட்ட உண்மையாக இருக்கிறவங்க கிட்ட தான் நான் வேலை பார்ப்பேன் ஆனா நீ என்கிட்ட பொய் சொல்லி என்னை ஏமாற்றி இருக்க இனியும் உன் கூட நான் வேலை பார்க்கிறதா? இல்லை என்று சொன்னால் சின்னு.
சின்ன இப்படி சொன்னதும் தன் மனதிற்குள்ளேயே கணக்கு போட்ட வரும் இவனால் தான் இது போன்ற நிறைய பில்டங்குகளை அதற்கு நஷ்ட ஈடாக பணத்தையும் நிறைய சம்பாதித்திருக்கிறேன் அப்படி இருக்க எவன் சென்று விட்டால் இவனைப்போல ஒரு ஆள் வருணிக்கு கிடைப்பது கடினம் என்று உணர்ந்தவன் சின்னுவிடம் நீ எவ்வளவு கேட்கிறேன்னு சொல்லு அதை நான் தரேன் எனக்கு இந்த வேலையும் முடிச்சு கொடு என்று கேட்டான் வருண்.
நீ எதுவும் எனக்கு செஞ்சு தர வேண்டாம் என்கிட்ட உண்மையை மட்டும் சொல்லு அது போதும் வேற எதுவும் எனக்கு வேண்டாம் என்றான் சின்னு.
சரி நான் எப்பொழுதுமே என்னுடைய பிசினஸ் ரகசியத்தை அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் சொன்னதில்லை நீ என்னுடைய நம்பிக்கைக்குரிய ஆள் என்பதால் தான் நான் உன்னிடம் எல்லாவற்றையும் சொல்கிறேன் என்று சொன்ன வருண்.
மயோவிடம் தனக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்ய வேண்டும் என்று கொடுத்துவிட்டு அதை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்து தர வேண்டும். அப்படி இல்லை என்றால் தனக்கு நஷ்ட ஈடாக 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி இருந்த வருண்.அவன் கொடுத்த ப்ராஜெக்டில் பாதிவேலை முடிந்து இருந்த நிலையில் சரியாக அந்த நேரம் பார்த்து சின்னுவிடம் சொல்லி அந்த சைட்டில் வேலை செய்ய விடாமல் ஆட்களை தடுத்து நிறுத்த சொல்லியும் தான் கொடுத்த கெடுவரை அவர்கள் யாரும் வேலை செய்யக்கூடாது என்று பிளான் செய்து அங்கு நடந்த வேலையை நிறுத்தி வைத்தால் தனக்கு அந்த பில்டிங்கும் அதே போல நஷ்ட ஈடாக மேலும் 50 லட்சம் கிடைக்கும் என்றும் வருண் சொன்னான்.
அவன் சொன்னதை எல்லாம் கேட்ட சின்னு. பலே ஆள் தான் பா நீ.. பில்டிங் கட்டுதல் சொல்லி காசையும் கொடுத்துட்டு அதை வேலை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி அதில் இருந்து நஷ்ட ஈடு வாங்குனதுக்கு பிறகு நீ கட்டி கொடுக்க கொடுத்த காசையும் திருப்பி வாங்கி ஓசியிலேயே அந்த பில்டிங்கை உன் பேர்ல எழுதி வைக்க எத்தனை வேலை பண்ற நீ.
உன்கிட்டே நான் நிறைய கத்துக்க வேண்டி இருக்கு… என்ற வரும் சேரில் இருந்து எழுந்தவன் சரிப்பா நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு சின்னு கிளம்ப போக…
சின்னு என்ன எல்லாத்தையும் கேட்டுட்டு எதுவுமே சொல்லாம போற இன்னும் ரெண்டு நாளைக்கு அங்க வேலை நடக்க விடாம செய்யப் போற தானே என்று கேட்க…
என்னோட பில்டிங்கில் வேலை செய்ய விடாமல் நானே தடுத்து நிறுத்துவேனா என்று சின்னு சொல்ல ….
என்ன சின்னு சொல்ற உன்னோட பில்டிங்கா எனக்கு புரியல என்று வருண் கேட்க..
உனக்கு விஷயம் தெரியாதா ஏன்னா அந்த மயோ மடத்து கிட்ட வேலைக்கு சேர்ந்து முழுசா ஒரு நாள் ஆச்சு.
அவங்க அந்த பில்டிங்கை என் பேர்ல எழுதிக் கொடுக்கிறதா சொல்லி இருக்காங்க. உலக அவங்க பைனான்ஸ் கம்பெனில என்ன ஒரு முக்கியமான பதவியில் வேலைக்கு எடுத்து இருக்காங்க. இதைவிட எனக்கு வேற என்ன வேணும் உன்கிட்ட அஞ்சுக்கும் பத்துக்கும் வேலை செஞ்சுட்டு இருந்த சின்னு நான் இல்லை இப்போ நான் ஒரு பெரிய அப்பார்ட்மெண்டுக்கு முதலாளி அதை தெரிஞ்சுக்கோ என்று சொல்லிவிட்டு சின்னு அங்கு இருந்து செல்ல போக..
என்ன அந்த மயோ உன்ன வச்சு என்கிட்ட விளையாடுறாளா அந்த ப்ராஜெக்ட் என் பேர்ல இருக்கு.அது ஞாபகம் இருக்கா? இல்லையா? அவளுக்கு அதை எப்படி உனக்கு எழுதிக் கொடுப்பா நீயும் அவ சொல்றத கேட்டுட்டு முட்டாள் தனமா என்கிட்ட வந்து பேசிக்கிட்டு இருக்கேன் என்று சொன்னால் வரும்.
அப்படியா அதுக்கு நீ உண்மையா இருந்துருக்கணுமே நீ தான் அந்த மயோவை ஏமாத்தி என்ன வச்சு அந்த ப்ராஜெக்ட்ட நடத்த விடாம செஞ்சிட்டியே என்று என்று சின்னு சொல்ல…
அது உனக்கும் எனக்கும் மட்டும் தானே தெரியும் நீ அதை போய் அவ கிட்ட சொன்னாலும் ஆதாரம் இல்லாம அதை நிரூபிக்க முடியாது அது உனக்கு தெரியுமா என்று கேட்டான் வருண்.
வருண் சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்த சின்னு உன்னை எல்லாம் யார் யார் இந்த சிஇஓ போஸ்ட்ல உட்கார வைத்தது.
ஒருத்தன் வந்து உன்கிட்ட வேலை செய்ய முடியாது நீ உண்மையெல்லாம் சொன்னாதான் வேலை செய்ய வேண்டும் என்று சொன்னா உடனே அதை நம்பி நீ எல்லா உண்மையும் எதுவுமே யோசிக்காமல் சொல்லிடுவியா…
பாரு நீ இப்போ சொன்ன உண்மை எல்லாமே எனக்கு ஆதாரமா கிடைச்சிடுச்சு இனி எனக்கு இது போதுமே என்று சொல்லி தன் பாக்கெட்டில் இருந்து மொபைலை தூக்கி காட்ட…
அதைப் பார்த்ததும் வருண் உடனே வெளியில் இருந்த தன் காட்ஸ்களை அழைத்தவன் சின்னுவை காட்டி இவன் கையிலிருந்த போன பிடுங்கிவிட்டு இவன் கை காலை உடைத்து ஆபீஸ விட்டு தூக்கி வெளியே போடுங்க என்று உத்தரவிட….
சின்ன ஒருவனை சுற்றி கிட்டத்தட்ட பனை மரம் போல இருந்த நான்கைந்து பாடி கார்டுகள் அவனை சுற்றி வளைத்தனர்.
சின்ன ஒருவன் இத்தனை ஆளு எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தன்னைச் சுற்றி இருந்தவர்களை பார்க்க….
வருண் சின்னுவை பார்த்து டேய் என்ன சொன்ன எனக்கெல்லாம் யாரும் இந்த சிஇஓ போஸ்டிங்காக கொடுத்தாங்கன்னு கேக்குறியா…. நீ வெறும் ரவுடி தாண்டா நான் உன்ன மாதிரி பல பேரை எனக்கு கீழ வச்சு வேலை பார்த்து இருக்கேன் உங்கள எல்லாம் எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியாது நினைச்சுட்டியா.
இப்படி அந்த மகிழ்வுக்கு ஆதரத்த சேகரிச்சு தரேன்னு சொல்லி தனியா வந்து என்கிட்ட மாட்டிகிட்டியே… இப்போ எப்படி இவங்க கிட்ட இருந்து நீ தப்பிச்சு போவ ஐயோ… பாவம் என்று வருண் சொல்ல….
சின்னுவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நின்றான்.
EPISODE 39
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
சின்னுவை சுற்றி வருணின் பாடிகாட்ஸ்கள் சூழ்ந்துவிட சின்னுவை நக்கலாக பார்த்த வரும் என்ன சின்னம் எப்படி தனியா வந்து என்னோட கார்ட்ஸ் கிட்ட மாட்டிகிட்டியே என்றான்.
பேசாம உன் கையில் இருக்கிற ஃபோனை என்கிட்ட கொடுத்துட்டு நான் சொன்ன மாதிரி அந்த ப்ராஜெக்டை இன்னும் ரெண்டு நாளைக்கு நடத்த விடாம நிறுத்தி வைக்க சம்மதம் சொன்னா உன்ன நான் எங்கிருந்து உயிரோடு அனுப்பவேன். இல்லைன்னா உன் உயிருக்கு நான் உத்தரவாதம் கிடையாது என்று தன் தோலை குலுக்கி வரும் சொல்ல…
ஐயையோ!!!நீ என்னை மிரட்டுவதை பார்த்தா எனக்கு ரொம்ப பயமா!!!இருக்கு. என்னை எதுவும் பண்ணிடாதீங்க வருண் சார் இந்தாங்க உங்களுக்கு இந்த போன் தானே வேணும் என்ன விட்ருங்க இந்த போனை வச்சுக்கோங்க என்று சொல்லி தன் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து வருண் இடம் கொடுத்தான்.
நீங்க சொன்னது மாதிரியே அந்த சைட்ல வேலை நடக்காம நான் பார்த்துக்கிறேன்.என்னை எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லி உங்க கார்ட்ஸ்களிடம் சொல்லுங்க எனக்கு இவங்கள பார்த்தாலே ரொம்ப பயமா இருக்கு என்று பம்மினான் சின்னு.
வருண் சிரித்துக் கொண்டே அப்படி வா வழிக்கு உன்கிட்ட எல்லாம் பேச வேண்டிய விதத்தில் பேசினால் தான் சரி படுவ என்று சொல்லிக்கொண்டே அவன் கையில் இருந்த போனை வருண் வாங்க போக….
ஆஹ்… ஆசைய பாரு நீ கேட்ட அப்படியே தூக்கி உன்கிட்ட தூக்கி கொடுத்துட்டு உன் காலில் வந்து விழுவேன்னு நினைச்சுட்டியா…. என்று சின்னு நொடியும் தாமதிக்காமல் அவனை சுற்றி இருந்த கார்ட்ஸ்களை பந்தாட தொடங்கினான்.
பனைமரம் போல வளர்ந்த அந்த கார்ட்ஸ்களை கண்ணிமைக்கும் நேரத்தில் இன்னும் அவர்களை போட்டு புரட்டி எடுக்க அவர்கள் நால்வரும் ஆளுக்கு ஒரு மூலையில் மயங்கி நிலையில் கிடந்தனர்.
நொடிப் பொழுதில் தன்னுடைய கார்ட்ஸ்களை அடித்து வீழ்த்தி இருந்த சின்னுவை அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் வருண்.
அவர்கள் நால்வரையும் அடித்து முடித்த பிறகு சின்னு தன் கைகளை தூசி தட்டுவது போல தட்டி விட்டுக்கொண்டு வருணிடம் வந்து அவன் தோளில் கை வைத்து என்ன பத்தி நீ இன்னும் புரிஞ்சிக்கவே இல்லையே.
டீல முடிச்சுக்கலாம்னு உன்கிட்ட நான் மட்டும் தனியா வந்து பேசும்போது நீ என்ன பத்தி புரிஞ்சிருக்கணுமே உனக்கு இன்னும் அறிவு பத்தல வருண்.
எப்பவும் உனக்கு எதிர்ல இருக்குற ஆளுங்கள குறைச்சு எடை போடாத சரியா என்றவன் கையிலிருந்த போனை தூக்கி வருணின் டேபிள் மேல் போட்டவன்.
உனக்கு இந்த போன் தானே வேணும் நீயே வச்சுக்கோ எனக்கு இது தேவைப்படாது ஏன்னா நான் இந்த போன்ல எதையுமே ரெக்கார்ட் பண்ணல. இங்கே நடக்கிறது எல்லாம் லைவா வேறொரு பக்கம் ரெக்கார்ட் ஆகி கொண்டிருக்கிறது என்று சொல்லி தன் சட்டையில் இருந்த பட்டன் கேமராவை தூக்கி அவனிடம் காட்டிவிட்டு,
இந்த சட்ட வேணுமா வேணும்னா நான் அதை கழட்டி கொடுத்துட்டு போகட்டுமா என்று கேட்டான் சின்னு.
வருணின் தலை வேண்டாம் என்று தன்னிச்சையாக ஆடியது.
வருண் ஒருவேளை உன் ஆளுங்க எல்லாம் என்ன அடிச்சு வெளியே போக விடாம செஞ்சி இருந்தாலும் இந்த ஆதாரம் எல்லாம் இந்நேரம் சேர வேண்டியவங்க கைக்கு போய் சேர்ந்திருக்கும் என்றவன் வருணை பார்க்க…
சின்னு சொன்னதை கேட்ட வருண் அப்புறம் ஏன் என்று சொல்ல வர….
அப்புறம் ஏன் நீ அந்த போன்ல ஆதாரம் இருக்கிறதா காட்டிகிட்டு அதை என்கிட்ட இருந்து காப்பாத்தணும்னு சொல்லி என்னோட கார்ட்ஸை எல்லாம் அடிச்சு போட்டேன் அப்படித்தானே நீ கேக்க போற நீ தான் வர என்றான் சின்னு.
அது ஒன்னும் இல்ல வரும் இங்க நடக்கிறது எல்லாம் லைவா வேற ஒருத்தவங்க இங்கிருந்து பார்த்துட்டு இருக்காங்களா அவங்க என்ன என்ன லைவா பாத்துட்டு இருக்குறப்போ அவங்களோட சேர்ந்து என்னோட ஆளும் என்னை கண்டிப்பா பார்த்துட்டு இருக்கும்.
ஏன் ஆளு என்ன பார்க்கும்போது எல்லாம் நான் ஒரு வேஸ்ட் பீசுங்குற மாதிரியே பாக்குறா…. ஆனா நான் வேஸ்ட் பீஸ் இல்ல மாஸ் பீஸ்னு அவகிட்ட காட்ட வேண்டாமா…. அதுக்காகத்தான் இந்த சின்ன ஃபைட் சீன் என்றுவன்.
தன் சட்டையை கழட்டி எதிரில் இருந்த வருணின் தோள் மீது போட்ட சின்னு, என்ன குட்டி…. உன் மாமன் மாஸா…. இப்பவாது இந்த மாமனை பத்தி நீ கொஞ்சம் புரிஞ்சிருப்பேன்னு நினைக்கிறேன் என்றவன் தன் வலது கை ஆள் காட்டி விரலையும், மோதிர விரளையும் ஒன்று சேர்ந்து சுடுவது போல கேமராவின் முன் காட்டியவன் அந்த இரு விரல்ககளையும் அவன் உதட்டில் வைத்து முத்தம் வைத்து கையை சுடுவது போல கேமராவின் முன் காட்டி…
ஓய் குட்டி… இந்த முத்த புல்லட் உனக்கு தான் பிடிச்சுக்கோ… என்று சொல்லி கேமராவை பார்த்து கண்ணடித்து சுட்டவன் வரட்டாஆஹ்… என்று வருணின் தோள் மேல் இருந்த தன் சட்டையை தூக்கிப் போட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
அடப்பாவி இவன் ஆளுகிட்டே சீன் போட… தேவையே இல்லாம ஃபைட் பண்ணி என்னோட கார்ட்ஸ்களை பார்த்தவன். இவனுங்க இருக்கிற நிலைமைய பார்த்தா இன்னும் பத்து பதினைந்து நாளைக்கு எழுந்திருக்க மாட்டாங்க போல இருக்கு இவனுங்கள நான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி செலவு செய்ற அளவுக்கு கொண்டு வந்து விட்டுட்டானே என்று வருண் வாய் விட்டே புலம்பினான்.
ஆனால் இதையெல்லாம் யாருக்காக செய்தானோ அவள் யாருனு பாக்குறீங்களா…அதாங்க அவனோட ஆளு…. அட அதாங்க அவனோட குட்டி…. அட…வேற யாரும் இல்லைங்க நம்ம மயோட ஃப்ரெண்ட் பூஜா தான் இதையெல்லாம் இவ்வளவு நேரம் கேமராவில் வருண் நடத்திய சீனை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு தலையே சுத்துவது போல ஆகிவிட மயோவின் அருகில் இருந்த சேரில் பொத்தென விழுந்தாள்.
இவ்வளவு நேரம் சின்னு செய்த சேட்டைகள் எல்லாம் பார்த்து புன்முறுவல் செய்த மயோ பூஜாவிடம் திரும்பி என்னடி… உன் ஆளு பயங்கர பார்ம்ல இருப்பான் போல இருக்கு… உன்னை இம்ப்ரஸ் பண்ண எப்படி எல்லாம் வேலை செய்றான்னு பார்த்தியா என்று பூஜாவை பார்த்து மயோ கண்ணடிக்க…
சேரில் விழுந்து கிடந்த பூஜா வேகமாக எழுந்து மயோவிடம் வந்தவள் ஏய் வேணாம் அவனை என்னோட ஆளுன்னு சொல்லாதே எனக்கு அவனை பார்த்தாலே இரிடேட் ஆகுது. நான் என்னிக்கு அவனை பார்த்தேனோ அன்னிக்கு பிடிச்சுது எனக்கு…. அவனை முதல்ல ஏதாவது செஞ்சு இங்கே இருந்து அனுப்பிரு என்று பூஜா சொல்ல…
ஹேய்… பூஜ் ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறே… அவன் பார்க்க நல்லா தானே இருக்கான். நல்லா ஸ்மார்ட் ஆஹ் வேலையும் செய்றான் இதுக்கு மேல என்ன குவாலிஃபிகேஷன் வேணும் என்று வேண்டுமென்றே மயோ பேச….
ஓஹோ… அவன் ஸ்மார்ட் ஆஹ்… இருந்தா நீ உன் புருஷனை டிவெர்ஸ் பண்ணிட்டு அந்த ரௌடியை கட்டிக்கோ என்னை விட்டுரு என்று சொல்லிக் கொண்டு அவள் அறையை விட்டு கோபமாக வெளியே செல்ல திறக்க போக…
அப்போது தான் கதவை திறந்து கொண்டு அருள் மயோவை பார்ப்பதற்காக வந்தவன் பூஜா பேசுவதை எல்லாம் கேட்டுவிட்டு என்ன சிஸ் என் வாழ்க்கையில விளையாடிட்டு இருக்கீங்க போல இருக்கு என்று சொல்லிக்கொண்டே உள்ள வந்த அருள் மயோவையும் பூஜாவையும் பார்க்க…
பூஜா திரும்பி மயோவை முறைத்துவிட்டு நாங்க ஒரு ரவுடிய பார்க்க போனோம் அருள் அந்த ரவுடி என்ன பாத்து அழகா சிக்கன்னு சின்ன பொண்ணு மாதிரி இருக்கேன்னு சொன்னான்.
ஆனா அவன் மயோவ பாத்து என்ன சொன்னான்னு தெரியுமா என்றால் பூஜா
என்ன சொன்னான் என்று அருள் கேட்க.
ஏய் பூஜா…. பேசாம வெளியே போயிடு தேவையில்லாம பேசி என்ன டென்ஷன் பண்ணிட்டு இருக்காத என்று சேரிலிருந்து எழுந்த மயோ ஓடிவந்து பூஜாவை பிடிக்க போக…
மயோ தன்னை அடிக்க வருவதை பார்த்ததும் பூஜா வேகமாக அருளின் பின்னால் சென்று நின்று அவன் தோளை பிடித்துக் கொண்டு மயோ தன்னிடம் வராதவாறு அருளின் பின்னால் நின்று கொண்டு மயோவிடம் மாட்டிக் கொள்ளாதவாறு எங்கும் அங்கும் ஓடி அவனையும் தன்னோடு சேர்த்து திருப்பிக் கொண்டு இருந்தாள்.
அது அந்த ரவுடி சொன்னான் இவ மூஞ்சி எல்லாம் பார்த்தா எப்படி மூடு வரும். எப்போ பாத்தாலும் முகத்தை உருன்னு வெச்சி இருக்கா சிரிக்கவே தெரியாதா அப்படின்னு சொன்னான்.
மயோ பாக்க பொம்பள மாதிரி இருக்கிறதாவும், நான் சின்ன பொண்ணு மாதிரி இருக்கிறதாவும் அவன் சொன்னான் சரியா சொல்லணும்னா என்ன குட்டி பொண்ணுன்னு சொல்லி கூப்பிட்டான் என்று பூஜா வெட்கப்படுவது போல பேச…
அந்த ரவுடி சொன்னதையெல்லாம் பூஜை அவரிடம் சொன்னதும் மையோவிற்கு பூஜா வின் மேல் ஆத்திரமாக வர… அருளின் பின்னால் இருந்தவளே நின்ற இடத்தில் இருந்து ஒரே எட்டில் மயோ பூஜாவை பிடித்து விட அவளிடம் இருந்து தப்பிப்பதற்காக பூஜா தன் முன் நின்று இருந்த அருளை மயோவின் மேல் திடீரென்று தள்ளி விடவும்.
அருளின் பாரம் தாங்காமல் மயோ கீழே விழ பூஜா தள்ளியதில் நிலை தடுமாறி அருளும் மயோவின் மேல் விழுந்தான் .
மயோவின் மேல் விழுந்த அருளின் கண்களும் மயோவின் கண்களும் சந்தித்துக் கொள்ள….இருவரும் அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்த வாரு விழுந்தபடி இருக்க…
இவர்கள் இருவரையும் பார்த்த பூஜா இப்போதைக்கு இவளால எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைத்த பூஜா. இதுதான் சமயம் என்று பூஜா அங்கிருந்து அவள் அறையில் இருந்து வெளியே ஓடிவிட்டாள்.
மயோவின் அறையை விட்டு வெளியே வந்த பூஜா அவள் அறைக்கு முன் நின்றிருந்த பியூனிடம் இன்னும் ஒரு அரை மணி நேரத்துக்கு உள்ளே யாரையும் விடாதீங்க மேடம் ஒரு முக்கியமான விஷயமா அவங்க ஹஸ்பண்ட் கூட பேசிட்டு இருக்காங்க என்று சொல்லிவிட்டு தன் கேபினுக்கு சென்றாள்.
தன் மேல் படுத்து இருந்த அருளைப் பார்த்து இப்படியே எவ்வளவு நேரம் என் மேலயே படுத்து இருக்கப் போறேன் என்று கேட்டாள்.
இல்ல இவ்வளவு அழகா இருக்குற என் பொண்டாட்டிய பார்த்து அவன் எப்படி பொம்பள மாதிரி இருக்குன்னு சொல்லிட்டான். பொண்ணுன்னு சொல்லி இருந்தா கூட நல்லா இருக்கும் பொம்பளைன்னு சொன்னா கொஞ்சம் வயசானவங்க மாதிரி தெரியுது இல்லையா என்றான் அருள்.
அவன் கண்ணுக்கு என்ன பாத்தா பொம்பளை மாதிரி தெரியுது உன் கண்ணுக்கு என்ன பாத்தா எப்படி தெரியுது? என்றால் மயோ கடுப்பாக.
உன்ன பார்த்தா என் கண்ணுக்கு எதுவுமே தெரியலையே என்ற அருள் மயோவை மேலிருந்து கீழ் வரை ஒரு மார்க்கமாக பார்க்க…
அவன் சொன்னதின் அர்த்தமும், பார்வையின் அர்த்தமும் புரிந்த மயோ தன் மேலிருந்தவனை கீழே தள்ளிவிட்டு எழுந்தவள் ராஸ்கல் உனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு டா என்றாள்.
மயோவை பார்த்து சிரித்துக் கொண்டு அவளை நோக்கி தன் கையை நீட்ட…. அவன் கையைப் பிடித்து மேலே தூக்கி விட அருள் எழுந்திருக்காமல் அவளை பிடித்து தன்மேல் இழுத்து போட்டுக் கொண்டான்.
அருளின் மேல் வந்து விழுந்த மயோ டேய் இடியட் என்னடா பண்ணிட்டு இருக்க இது என்ன வீடா நீ விளையாட்டுக்கு இது ஆபீஸ் உனக்கு தெரியாதா என்றால் மயோ.
ஓ….நல்லாவே தெரியுமே என்றான் அருள்
ஆமா… என்ன திடீர்னு என் ஆபீஸ் பக்கம் வந்து இருக்க என்று கேட்டால் மயோ.
சும்மாதான் நீதான் என்னோட கிளினிக்கு போக வேண்டாம் என்று சொல்லிட்டே.
உன்னோட ஹாஸ்பிடல்ல நான் வேலை பார்க்கிற வரைக்கும் சும்மாதானே இருக்கணும் அதான் வீட்ல இருக்க போர் அடிச்சது சரி என் பொண்டாட்டிய சும்மா போய் பாத்துட்டு வருவோம் என்று இங்கு வந்தேன் என்றான்.
அப்போ உனக்கு இப்ப எந்த வேலையும் இல்லையா என்று கேட்டால் மயோ.
எனக்கு எந்த வேலையும் இல்லன்னு யார் சொன்னது. நீ சொல்ற வேலையை செய்ய நான் தயாராத்தான் இருக்கேன் என்றவன் தன் மேல் படுத்திருந்த மயோவின் முதுகை வருட…
டேய் ராஸ்கல் இது ஆபீஸ் டா… நீ நினைச்சதை எல்லாம் இங்கே பன்னிட்டு இருக்க முடியாது என்றாள் மயோ பொய் கோபத்தோடு.
இங்கே உன்னோட காபின்கு உள்ள உன்னோட பர்மிஷன் இல்லாமல் யாராவது உள்ளே வர முடியுமா? என்று கேட்டான் அருள்.
ம்ஹும் முடியாது ஏன்? என்றாள் மயோ.
ஏய் பொண்டாட்டி… ஐ மிஸ் யூ சோ…. மச் டி….என்று சொல்லி மயோவின் இதழில் முத்தம் வைத்தான்.
இதை எதிர்பாராத மயோ அவனிடம் இருந்து பிரிந்து அருளின் முகத்தை பார்க்க…
என்னடி ஹாட்டு அப்படி பாக்குற என்றான் அருள்.
ம்ஹும்…. என்று தலையை இடவலமாக ஆட்டிய மயோ. நீ…. நீ இருக்கியே சரியான இடியட் டா… என்று சொன்னவள் குனிந்து அருளுக்கு முத்தம் வைக்க தொடங்கினாள்.
தாங்கள் இருவரும் ஆபிசில் இருக்கிறோம் என்பதை கூட மறந்து போய் இருவரும் மூச்சு முட்டும் அளவிற்கு போட்டி போட்டுக் கொண்டு முத்தம் வைத்தனர்.
❤️
ராகுலும் ஏகாம்பரமும் மிகவும் டென்ஷனாக இருந்தனர்.
ஏகாம்பரம் ராகுலிடம் அந்த அருளுக்கு பயோவா கல்யாணம் பண்ணிக்கவே தகுதி இல்லைன்னு நான் நெனச்சிட்டு இருக்கேன் ஆனா அவ என்னடான்னா ஒரு படி மேலே போய் அவ ஹாஸ்பிடல்ல அந்த அருளிளையே டீனா ஆகியிருக்கா…
நிஜமாவே இதையெல்லாம் அந்த மயோ தெரிஞ்சி தான் பண்றாளா இல்லைன்னு தெரியல அவங்களோட தகுதிக்கும், அந்தஸ்துக்கும் இந்த அருளை கொண்டு போய் எப்படி அங்க உட்கார வச்சா. எனக்கு ரொம்ப கடுப்பா இருக்கு ராகுல்.
ஏய் இப்ப நடக்கிறது எல்லாம் பார்த்தா எங்கே அந்த ஹாஸ்பிடல நான் அடைய முடியாமல் போயிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு என்றார் ஏகாம்பரம்.
அப்பா கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க நீங்க நினைச்சது எல்லாமே ஒவ்வொரு நாள் நடக்கும் அதுக்காகத்தான் நான் பிளான் பண்ணிட்டு இருக்கேன் என்று சொன்னான் ராகுல்.
நீ என்ன பிளான் பண்றதாய் இருந்தாலும் கொஞ்சம் சீக்கிரமா செஞ்சு முடி ராகுல் இந்த பயோ போறத போக்கை பார்த்தா அவளோட சொத்து எல்லாத்தையும் அந்த அருள் பெயரில் எழுதி வைத்துவிடுவா போல இருக்கு அந்த அளவுக்கு அவ மேல பைத்தியமா இருக்கா… அதனால தான் எவ்வளவு பெரிய ஹாஸ்பிடல் ஹாஸ்பிடல் பொறுப்பையும் தூக்கி அவன் கையில கொடுத்திருப்பா என்றார் ஏகம்பரம்.
நீங்க கவலையே படாதீங்க டாடி இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க அந்த இளாவை நான் எப்படியும் என்னோட வழிக்கு கொண்டு வரப் போறேன். அப்படி அவ என் வழிக்க வரவில்லை என்றாலும் நீங்க நெனச்சத ஏன்னா முடிச்சு காட்றேன் என்று சொன்னான் ராகுல்.
சரிப்பா எப்படியாவது அந்த இளாவை நீ கல்யாணம் பண்ணிக்கணும்.அப்போதான் அவளை வச்சு மயோவை மிரட்டி கொஞ்சம் கொஞ்சமா அவகிட்டே இருக்கிற ஆசி அந்தஸ்து அனைத்தையும் நம்ம பேர்ல எழுதி வாங்கிக்க முடியும். அந்த மயோவுக்கு இளா என்றாள் அவ்வளவு இஷ்டம்னு எனக்கு நல்லாவே தெரியும் என்று சொன்னார் ஏகாம்பரம்.
சரிப்பா கூடிய சீக்கிரம் போங்க ஆசை நிறைவேறும் என்று சொன்னான் ராகுல்.
❤️
அருள் தன்னுடைய கிளினிக் இருக்கு இனிமேல் வரப்போவதில்லை என்று முடிவாக இருப்பதால் கரண் மட்டும் ஒற்றை ஆளாக பம்பரமாக அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
முன்பை விட இப்போதெல்லாம் அவர்களுடைய கிளினிக்கிற்க்கு நிறைய கிளைண்டுகள் வர ஆரம்பித்திருந்தனர்.
அருள் இருக்கும்பொழுது இருவரும் சமாளிக்க மிகவும் திண்டாடுவர் ஆனால் இப்போது அருளும் இல்லாமல் போகவே கரண் தான் மிகவும் சிரமப்பட்டான்.
கரண் மட்டும் அங்கே தனியாக வேலை பார்த்து சிரமப்படுவான் என்று அருள் ஏற்கனவே அங்கு மற்றொரு மருத்துவரை வேலைக்கு எடுக்க முடிவு செய்து இருந்தான்.
அவரை நேரடியாக கிளினிக்கிற்க்கு வரச் சொல்லி இருந்தான் அருள் .
கிளினிக்கில் பிஸியாக இந்த கரணுக்கு அருள் கால் செய்து தனக்கு திடீர் என்று ஒரு முக்கியமான வேலை வந்து விட்டதாகவும்,இன்று தன்னால் கிளினிக் இருக்கு வர முடியாது தன்னால் வர முடியாது என்று தன் மேல் படுத்து இருந்த மயோவை கட்டிக்கொண்டு அருள் கூற….
நீ அப்படி என்ன முக்கியமான வேலை செஞ்சிட்டு இருக்கேன்னு எனக்கு தெரியாது நினைச்சிட்டியா டா அருள் என்று சொன்னால் கரண்.
கரண் சொன்னதை கேட்டு அதிர்ச்சியான அருள் தான் மையோவுடன் இருப்பது இவனுக்கு எப்படி தெரியும் என்று யோசித்தவவாரே கரணிடம் எப்படிடா!! என்று ஆச்சரியமாக கேட்டான்.
அதெல்லாம் அப்படித்தான் உனக்கு கல்யாணம் ஆன நாளிலிருந்து நீ என்னைக்கு கரெக்ட்டா கிளினிக்கு வந்திருக்க அத வச்சு தான் கெஸ் பண்ணி சொன்னேன் என்று சொன்னான் கரண்.
சரி சரி அதெல்லாம் விடு உனக்கு துணையாக மற்றொரு மருத்துவரை நான் போனிலேயே இன்டர்வியூ செய்து விட்டேன். அவர் இன்னும் சிறிது நேரத்தில் கிளினிக்கிற்கு வந்து விடுவார் அவர் வந்த பிறகு மற்ற விஷயங்களை எல்லாம் நீயே பார்த்துக்க… சரியா…
சும்மா சும்மா தேவையில்லாம போன் பண்ணி என்னைய இடைஞ்சல் பண்ணாத சரியா என்று சொன்ன சிரித்துக் கொண்டே போனை வைத்தான்.
உனக்கு என்னடா கல்யாணம் ஆயிடுச்சு நீ நினைச்ச நேரத்துல உன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க…
ஆனா என்ன பாத்தியா எப்படியோ சிங்கிளா இருந்த நான் ஒரு வழியா கமிட் ஆயிட்டேன். ஆனா கமிட் ஆகிட்டேன் என்று தான் பேரு. பார்ட்டி முடிஞ்சு அவளை கொண்டு போய் வீட்ல டிராப் பண்ணிட்டு வந்ததோட என் வேலை முடிஞ்சுது.
அதன் பிறகு இப்போ வரைக்கும் என் டார்லிங்கிட்டே இருந்து எனக்கு ஒரு போன் இல்ல,ஒரு மெசேஜ் இல்ல…என்னடா இதெல்லாம் என்று தன்னையே நொந்து கொண்டான் கரண்.
அப்போது இன்டர்காமில் அழைத்த நர்ஸ் சார் அருள் சார் அனுப்புன நியூ டாக்டர் வந்திருக்காங்க. அவங்களை நான் உள்ள அனுப்பட்டுமா? என்று கேட்டார்.
சரிமா… அனுப்பு என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
அவனுடைய கேபினின் கதவை தட்டிக்கொண்டு மே ஐ கம்மின் என்று சொல்லிக் கொண்டே…. அருள் அப்பாயிண்ட் செய்த டாக்டர் உள்ளே வர…
அவரை நிமிர்ந்து பார்த்த கரண் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய்விட்டான்.
EPISODE 40
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அருள் தேர்வு செய்த மருத்துவர் சற்று நேரத்தில் கிளினிக் இருக்கு வந்து விடுவார் என்று கரணுக்கு தகவல் சொல்லி இருந்தான்.
நான் சொன்னது போலவே கரணை சந்திக்க மருத்துவர் ஒருவர் வந்திருக்கிறார் என்று இன்டர் காமில் அழைத்து ஆகணும் அந்த வேலை பார்க்கும் நர்ஸ் சொல்ல அவர்களை உள்ளே அனுப்பச் சொன்னான்.
கரணின் கேபினை தட்டி விட்டு உள்ளே வந்த டாக்டரை பார்த்ததும் கரணுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
அவன் கேபின் கதவை திறந்து கொண்டு புதிதாக சேர்ந்திருக்கும் மருத்துவராக தேஜஸ்வினி உள்ளே வந்தால்.
டாக்டர் கோர்ட் அணிந்து உள்ளே வந்த தேஜஸ்வனியை பார்த்து ஆச்சரியமாக கரண்.
தேஜு!!! நீயா?? வாட் அ சர்ப்ரைஸ் என்றாn தன் கண்ணையே தன்னால் நம்ப முடியாதவனாக கரண்.
நானே தான் டார்லிங் என்ன உன்னால நம்ப முடியலையா என்று கேட்டால் தேஜு.
ஆமா தேஜு பார்ட்டி முடிச்சு உன்ன வீட்ல டிராப் பண்ணதோடு சரி அதன் பிறகு ரெண்டு நாளா நீ என் கூட பேசவே இல்ல உனக்கு எப்படி உன் காலில் மெசேஜ் பண்றது என்ன யோசனையிலேயே இருந்துட்டேன் இப்ப கூட கொஞ்சம் முன்னாடி உன்ன பத்தி நினைச்சுட்டு தான் இருந்தேன் ஆனா நீ எப்படி இங்க என்று புரியாமல் கரண் கேட்டான்.
ஏன் நான் இங்கே வரக்கூடாதா என்று கேட்டால் தேஜு.
நான் அப்படி சொல்வேனா என்ற கரண் என்னால இப்பவும் நம்ப முடியல நீ டாக்டரா? என்றான்.
கரணை செல்லமாக முறைத்த தேஜு…. உங்க அளவுக்கு நான் ப்ரொபஷனல் டாக்டர் இல்ல மிஸ்டர் கரண்.
நான் எம்பிபிஎஸ் முடிச்சுட்டு ப்ரொபஷனலா இந்த கேரியரத்தான் சூஸ் பண்ணனும்னு அதன் பிறகு டூ அந்த ஹால்ப் இயர்ஸ் பிளாஸ்டிக் செஞ்சுரியில் எம். எஸ்.முடிச்சுட்டு நான் பிரெஷா வெளியே வந்து இருக்கேன்.
நாம ரெண்டு பேரும் இன்னும் நம்மள பத்தி நீ சரியா பேசாத அதனால உங்களுக்கு என்ன பத்தி தெரியல . ஆக்சுவலா நான் என்னோட ப்ரொபஷனல் ரிலேட்டடா ட்ரெயின்லியா போகணும்னு பிளான் பண்ணி இருந்தேன்.
அண்ணாதான் இப்பதான் படிப்பு முடிச்சிருக்க கொஞ்ச நாள் வீட்ல இரு அதுக்கப்புறம் நானே உனக்கு கிளினிக் வைத்து தரேன்னு சொன்னாரு. நான் காலேஜ் முடிச்சு ஒரு ஆறு மாசமா வீட்ல தான் இருந்தேன்.
நம்ம பார்ட்டியில் மீட் பண்ணதுக்கு பிறகு விஷ்வாவுக்கு மயோ ஃபோன் பண்ணி அவங்க ஹஸ்பண்டோட கிளினிக்கிற்க்கு நியூவா ஸ்டாப் வேணும் ஏன் நம்ம தேஜவை அங்க அனுப்பக்கூடாது அப்படின்னு சொன்னாங்க.
அண்ணா முதல்ல வேண்டான்னு தான் சொன்னாங்க நான் தான் ரொம்ப கம்பல் பண்ணி நான் காலேஜ் முடிச்சு ஆறு மாசமா வீட்ல சும்மா இருக்கேன் படிச்சதெல்லாம் எனக்கு மறந்துடும் போல இருக்கு அதனால நான் பிராக்டிஸ் ஆகவாது போயிட்டு வரேன்னு கெஞ்சி இங்க வர எங்க அண்ணா கிட்ட சம்மதம் வாங்கினேன் என்று சொன்னால் தேஜு.
அப்போ இனிமேல் நீ என் கூட இங்க தான் இருக்க போற அப்படித்தானே என்றான் கரண்.
எப்பவுமே இங்கே இருக்க மாட்டேன் என் அண்ணா எனக்கு ஒன் இயர் தான் பர்மிஷன் கொடுத்திருக்காங்க. அதுக்கப்புறம் எனக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க போறதாகவும். எனக்கு கல்யாணம் பண்ணின பிறகு நான் என்ன வேணா முடிவு பண்ணிக்கலாம்னு சொல்லி இருக்காங்க என்றாள்.
ஒரு வருடத்தில் தேஜுவிற்கு திருமணம் என்று சொன்னதும் கரணின் முகம் வாடிப் போய்விட்டது.
அவன் முகம் வாடியதை புரிந்து கொண்ட தேஜு. என் அண்ணன் சொன்னதுக்கு நான் ஓகே சொல்லிட்டு தான் இங்க வந்து இருக்கேன் என்றால் தேஜு.
அப்போ நீ ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்க போறியா என்று கேட்டான் கரண்.
ஆமா… என்றால் தேஜு.
அப்போ நம்ம காதல்? என்றான் கரண்.
இன்னும் ஒன் இயர் டைம் இருக்கே….அதுக்கு அப்புறம் தானே என் அண்ணா எனக்கு கல்யாணம் பண்ண போறதா சொல்லி இருக்காரு. அதுவரைக்கும் நான் உன்னை காதலிச்சுக்கிறேன் என்று சொன்னாள் தேஜு.
அவள் சொன்னதை கேட்டதும் கரணுக்கு கோபம் வந்துவிட இப்படி டைம் பாஸுக்காக லவ் பண்ற கேட்டகிரி நான் கிடையாது அதுக்கு நீங்க வேற ஆள பாருங்க என்று கரண் கோபமாக பேச…
இனி எங்க போய் நான் வேற ஆளை பார்க்கிறது இன்னொரு ஆளை பார்த்து… பேசி…பழகி…அவனுக்கு என்னை பிடிக்கனும்,எனக்கு அவனை பிடிக்கணும் இதெல்லாம் நடக்கவே ஒரு வருஷம் ஆய்டும். அதுக்குள்ள என் அண்ணா எனக்கு கல்யாணம் பண்ணிடுவார்.அப்புறம் எப்படி நான் லவ் பண்ணி பார்க்கிறது என்றால் தேஜு.
அப்படி நீங்க லவ் பண்ணனும்னா உங்க அண்ணா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு அப்புறம் அந்த பையன லவ் பண்ணுங்க வீனா… உங்க பொழுதுபோக்கிற்காக இன்னொரு பையனோட வாழ்க்கையில விளையாடாதீங்க என்றால் கரண் காட்டமாக.
நான் ஏன் கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் லவ் பண்ணனும். நான் இப்போ உன்ன லவ் பண்றேன் நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆன பிறகு நீ என்ன லவ் பண்ணு என்றாள்.
தேஜு சொன்னதை முதலில் சரியாக புரிந்து கொள்ளாத கரண். உனக்கு கல்யாணம் ஆன பிறகு நான் எப்படி உன்னை லவ் பண்ணுவேன், அது தப்பான விஷயம் நான் அதை செய்ய மாட்டேன் என்றான் கரண்.
தான் அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்து வந்த தேஜு… கரண் அமர்ந்து இருந்த சேரை லேசாக வெளியே இழுத்து அவன் மடியில் அமர்ந்து அவன் கழுத்தில் தன் கையை போட்டால் ஏ லூசு நீயும் நானும் கல்யாணம் பண்ணின பிறகு நீ என்ன லவ் பண்ணனும் நான் சொன்னேன் நான் சொன்னதை சரியா கேட்டியா?இல்லையா? என்றாள்.
தேஜு சொன்னது இப்போதுதான் கரணுக்கு புரிய… அப்போ நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி தான் சொன்னியா? நான் வேற யாரையோ இல்லையா? என்று கேட்டான் கரண்.
ம்ம்… ஆமா என்று சொல்லி தலையை மேலும் கீழும் ஆடினால் தேஜு.
அவள் இடுப்பில் கை போட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட கரண். உங்க அண்ணா நம்ம கல்யாணத்துக்கு சம்மதித்து விடுவாரா என்று கேட்டான் கரண்.
சரியா தெரியல என்றால் தேஜு.
உங்க அண்ணா நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லவில்லை என்றால் நீ என்ன பண்ணுவ என்றான் கரண்.
ம்ம்ம்…. என்று யோசித்த தேஜு என் அண்ணன் பாக்குற பையனை கல்யாணம் பண்ணிக்குவேன் என்றால் சிரித்துக் கொண்டு.
விளையாடாத தேஜு… நான் சீரியஸா கேட்கிறேன் சப்போஸ் உங்க அண்ணா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் நீ என்ன செய்வ என்றான் கரண்.
என் விருப்பத்திற்கு எதிராக கண்டிப்பா என் அண்ணன் நடந்துக்க மாட்டார். அதனால நீயும் நானும் தான் கல்யாணம் பண்ணிக்க போறோம் கவலைப்படாதே என்றாள் தேஜு.
தன் மடியிலிருந்து தேஜுவை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட கரண் அவளோடு சிறிது நேரம் காதல் செய்துவிட்டு அவளை அழைத்துக் கொண்டு போய் தன் கிளினிக்கில் இருந்த மற்ற ஸ்டாப்புகளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
❤️
இன்று மயோவிற்கும் அருளுக்கும் மயோவின் அத்தை தேன்மொழி வீட்டில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்காக அனைவரும் அங்கே குழுமியிருக்க… அருள் என்ன சார்பாக அவன் சொந்த பந்தங்களை யாரும் அழைக்க வேண்டாம் என்றவன் கரணை மட்டும் அழைத்தால் போதும் என்று சொல்லிவிட்டான்.
அருளின் சித்தப்பா வந்தால் வேண்டாத பேச்சுக்கள் எல்லாம் பேசி அனைவரையும் கஷ்டப்படுத்தி விடுவார் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்திருந்தால் அருள் அதற்கு அமுதாவும் எதுவும் சொல்லவில்லை.
செழியன் எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஏற்கனவே தேன் மொழியின் வீட்டிற்கு வந்திருக்க…
சூர்யா விஸ்வாவையும் தேஜுவையும் நண்பன் என்ற முறையில் இங்கு அழைத்து இருந்தான் . அவனுக்கு விஷ்வாமும் இளாவும் நெருங்கி பழகுவது பிடிக்கவில்லை என்றாலும். இளாவிடம் என் காதலை சொல்லி அவளை எப்படியும் தன் பக்கம் இழுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருப்பதால் அவர்கள் பழகுவது அவனுக்கு ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ள தோன்றவில்லை .
அனைவரும் வந்திருக்க விருந்திற்கு முக்கியமான நபர்களான அருளும் மயோவும் மட்டும் இன்னும் வரவில்லை.
செழியனிடம் என்ன தாத்தா உன் பேத்தி எப்பவுமே ஆன் டைமுக்கு வந்துடுவா இன்னைக்கு என்ன இவ்வளவு நேரம் ஆகியும் ஆளையே காணோம் என்றான் சூர்யா.
அவளை வம்பு இழுக்கலைன்னா உனக்கு அந்த பொழுதே போகாதே…. என்று சொல்லி அவ வரும்போது வரட்டும் உனக்கென்ன இங்கே வர வேண்டியவர்கள் elarymbவந்தாச்சுல்ல… வேற என்ன வேணும் என்று இளாவைப் பார்த்து சூர்யாவிடம் செழியன் கண்ணை காட்ட…
தாத்தா… என்று பல்லை கடித்தவன் செழியனிடம் வந்தவன் நீயே அவகிட்ட என்ன காட்டிக் கொடுத்துடுவே போல இருக்கே… நானா சொல்ற வரைக்கும் நீ கொஞ்சம் பேசாம இரு தாத்தா…என்றான் சூர்யா.
சரி சரிடா நான் எதுவும் சொல்லல என்று சொல்லி சிரித்தார் செழியன்.
விஷ்வாவும் தேஜுவும் வந்துவிட தேஜு கரணை விஷ்வாவிற்கு அறிமுகம் செய்து வைத்தால்.அண்ணா நீ இவரை ஏற்கனவே பார்ட்டில பார்த்திருப்ப அருள் அண்ணாவோட ஃப்ரெண்ட் மிஸ்டர் கரண். அருள் அண்ணாவோட கிளினிக்கில தான் இவரும் ஒன் ஆஃப் த டாக்டர் வொர்க் பண்ணிட்டு இருக்காரு நானும் இவரும் சேர்ந்த தான் ஒர்க் பண்றோம் என்று சொல்லி கரணை அறிமுகப்படுத்தினால்.
கரணிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்ட விஷ்வா. தேஜுவை காட்டி இவ இப்போதான் இந்த மெடிக்கல் லைனுக்கு புதுசா வந்திருக்கா அதனால நீங்க கொஞ்சம் அவளை கவனமா வேலை செய்றப்போ பாத்துக்கோங்க தேஜுவால் எதுவும் பிரச்சனை வந்துட போகுது என்று சொன்னான் விஷ்வா.
அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை அவங்க நல்லா தான் ஒர்க் பண்றாங்க நான் பார்த்துக்கிறேன் என்றான் கரண்.
உடனே விஷ்வாவிடம் தேஜு அண்ணா…. நான் என்ன வரவங்களை எல்லாம் கொலையா செய்யப் போறேன். எதுவும் பிரச்சனை வந்துடுன்னு சொல்றீங்க நானும் ஒரு டாக்டர் தான் அதை ஞாபகத்துல வச்சுக்கோங்க என்றால்.
எனக்குத் தெரியுமா 1000 நோயாளியை கொன்னாதா ஒரு டாக்டர் உருவாக முடியும்னு சொல்லுவாங்க. அதுதான் எனக்கு பயமா இருக்கு என்று சொல்லி விஷ்வா சிரிக்க…
அண்ணா…. என்று தேஜு அவன் தோளில் அடித்து சிணுங்க…
நீங்க கவலைப் படாதீங்க மிஸ்டர் விஷ்வா உங்க தங்கச்சி கிட்ட இருந்து அந்த ஆயிரம் பேரை காப்பாற்ற வேண்டியது என்னோட பொறுப்பு என்றான் கரணும் விஷ்வா உடன் சேர்ந்து கொண்டு.
தன் அண்ணனுடன் சேர்ந்து கரணும் தன்னை கிண்டல் செய்யவும் தேஜுவிற்கு கோபம் வர… ம்ஹும்… நான் கோபமா போறேன் என்று தேஜு எழுந்து செல்ல போக… எங்கடி வீட்டுக்கா என்றான் விஷ்வா நான் எதுக்கு வீட்டுக்கு போறேன் நான் கிச்சனுக்கு போய் ஆன்ட்டி என்ன செஞ்சுருக்காங்கன்னு பார்க்க போறேன் என்று சொல்லிவிட்டு எழுந்து கிச்சனுக்கு சென்றால்.
அப்போது சரியாக மயோவும் அருளும் வந்து விட… தேன் மொழியும் முருகவேளும் சென்று அவர்களை வரவேற்க ….
அவர்களுக்காக வாங்கி வந்த பரிசுப் பொருட்களை அருளும் மயோவும் இருவரிடமும் கொடுக்க….
தங்கள் கைநிறைய பரிசு பொருட்களால் நிறைத்து இருந்த தன் மருமகளையும் அருளையும் பார்த்த இருவரும் எதுக்கு இவ்வளவு வாங்கிட்டு வந்து இருக்கீங்க என்று கேட்க…
அதான் அத்த நானும் இவன்கிட்ட சொன்னேன். ஆனா இவன்தான் முதன் முதலில் உங்க அத்தை வீட்டுக்கு விருந்திற்கு போறோம் வெறும் கையோடு உங்களைப் பார்க்க வரக்கூடாதுன்னு சொல்லி இவனே எல்லா கட்சியும் பார்த்து பார்த்து உங்களுக்கும் மாமாவுக்கும் வாங்கினான் என்று சொன்னாள்.
சரி வாங்க என்று சொல்லி இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றனர்.
அருள் வந்ததும் கரணிடம் அமர்ந்து கொள்ள மயோவும் அவர்களோடு சேர்ந்து அரட்டை எடுத்துக் கொண்டிருந்தால்.
அது அங்கு வந்த சூர்யா மயோவையும் அருளையும் வரவேற்றுவன் மயோவை பார்த்து அப்புறம் மயோ மேரேஜ் லைப் எல்லாம் எப்படி போகுது என்றான்.
அவனை ஒரு மார்க்கமாக பார்த்த மயோ… அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போறே என்றாள் திமிராக.
நான் எதுவும் பண்ண போறதில்ல… சும்மா ஒரு போது அறிவுக்காக.. என்றான் சூர்யா.
சம்பந்தமே இல்லாம ஏதாவது உளறு என்றால் மயோ .
இதற்கு மேல் இவளிடம் பேசினால் சரி வராது என்று நினைத்த சூர்யா வந்ததிலிருந்து என் ஆள நான் கவனிக்கவே இல்ல அவ என்ன பண்றான்னு முதல்ல பார்ப்போம் என்று சொல்லிவிட்டு இளாவை தேட… இளா, மீரா,தேஜு மூவரும் கிச்சனில் அவன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
அவளைப் பார்த்ததும் நேராக கிச்சனுக்கு வந்த சூர்யா இளாவை பார்க்க ….
தான் வந்ததிலிருந்து தன்னை கண்டு கொள்ளாமல் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்த சூர்யாவை பார்த்தவள் அவன் தன் அருகில் வந்து நிற்பது கண்டுகொள்ளாதவள் போல தேனு நான் போயி விஷ்வா கூட பேசிட்டு இருக்கேன். நீ எனக்கு கொஞ்சம் ஸ்னாக்ஸ் மட்டும் அங்க கொடுத்து விடு என்று சொல்லிவிட்டு சமையல் மேடையில் அமர்ந்திருந்தவள் அதிலிருந்து குதித்து சூர்யாவை தாண்டி விஷ்வா இருக்கும் இடத்திற்கு செல்ல…
தேன்மொழி தேஜுவிடமும் மீராவிடமும் இவ என் வீட்டுக்கு மருமகளா வரதுக்கு முன்னையே என்ன இந்த வேலை வாங்குறா…. இவ இந்த மட்டும் என் வீட்டுக்கு மருமகளா வந்துட்டா என் பாடு ரொம்ப கஷ்டம் என்று சொல்லி சிரித்தார் தேன்மொழி.
ஆமாமா இந்த வாயாடிய கட்டிட்டு வந்து நான் தான் கஷ்டப்பட போறேன்னு உனக்கு என்ன என்றான் சூர்யா.
தேன்மொழி சூர்யாவை பார்த்து டேய் என்னடா சொல்ற அப்போ உனக்கு நிலாவ கல்யாணம் பண்ணிக்க சம்மதமா என்றார் ஆச்சரியமாக.
சூர்யா வெட்கப்பட்டு கொண்டு ஆமாம்மா எனக்கு அவ வேணும் என்று திருவிழாவில் பஞ்சு மிட்டாயை பார்த்து அம்மாவிடம் கேட்கும் குழந்தை போல இளாவைக் காட்டி சூர்யா அவள் தனக்கு வேண்டும் என்று கேட்க…
தேன்மொழிக்கு மிகவும் சந்தோஷமாக போய்விட்டது ஏனென்றால் இலா ஏற்கனவே சூர்யா வந்து அவளிடம் நன்றாக பேசிப் பழகிய பிறகுதான் அவள் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வதாக கூறியிருக்க அதற்கு ஏற்றார் போல சூர்யாவும் இப்போது இளாவை வேண்டும் என்று சொன்னதும் தேன்மொழிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
தேஜுவும் மீராவும் கூட சூர்யா சொன்னதே கேட்டு மகிழ்ச்சியடைந்தனர்.
டேய் இருடா இப்பவே இந்த விஷயத்தை நான் போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு தேன்மொழி அங்கிருந்து செல்ல போக….
அம்மா…. என்ன பண்றாங்க அதெல்லாம் எதுவும் நீ செய்ய வேண்டாம்.முதல்ல இங்க வா காரியத்தை நீ கெடுத்துடுவ போல இருக்கு என்று சூர்யா தேன்மொழியை பிடித்து நிறுத்தி வைத்தான்.
உடனே தேஜு ஏன்டா அம்மா இது சந்தோஷமா எல்லார்கிட்டயும் ஷேர் பண்ணனும்னு தானே போறாங்க ஏன் சொல்ல வேண்டாம்னு சொல்ற என்று கேட்டால்.
நானே இன்னும் என்னோட லவ்வ இளாகிட்ட சொல்லல அதுக்கு முந்தி அம்மா போய் சொன்னா நல்லா இருக்காது. நான் முதல்ல என்னோட லவ்வ இல்ல கிட்ட சொல்றேன் அதுக்கு பிறகு எல்லாருக்கும் தெரிஞ்சிட்டா எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது நான் என்னோட லவ்வ யார் சொல்லியும் கேட்கக்கூடாது நானா அவகிட்ட நேரா சொல்லணும் என்று சொன்னான் சூர்யா.
அண்ணா பில்ட்அப் எல்லாம் பயங்கரமா இருக்கு அவளுக்கு ஏற்கனவே உங்கள பிடிக்கும் தானே அப்புறம் ஏன் இன்னும் உங்க லவ்வ அவ கிட்ட சொல்லாம வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க… இப்பவே போய் சொல்லுங்க என்றாள் மீரா.
இல்ல மீரா இது சரியான டைம் கிடையாது நானே ஒரு நாள் அவளை தனியா அழைச்சிட்டு போய்.என்னோட காதலை அவகிட்ட சொல்லி ப்ரபோஸ் பண்ண போறேன். அதுவரைக்கும் நீங்க யாரு அவ கிட்ட இந்த விஷயத்தை பற்றி மூச்சு விடக்கூடாது என்றான் சூர்யா.
உடனே மூவரும் சேர்ந்து தங்கள் கட்டை விரலை தூக்கி தம்சப் காட்டி…நாங்க எதுவும் சொல்ல மாட்டோம் என்று சொன்னார்கள்.
EPISODE 41
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஆறு மாத காலம் சிறை தண்டனை என்று வருணனுக்கு தீர்ப்பு வந்து இருக்க கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேல் அவன் சிறையில் இருக்க திடீரென்று யாரோ அவனை ஜாமீனில் எடுத்தது கேள்விப்பட்டவன் வெளியே வந்ததும் தன்னை ஜாமில் எடுத்தது யார் என்று அடுத்தவன் நேராக தன்னை ஜாமினில் எடுத்தவரை பார்க்க அவரிடத்திற்கு சென்றிருந்தான் வருண்.
வருண் வந்திருந்தது ராகுலின் ஆபீசிற்கு தான்.
வருணை தன் கேபினுக்குள் வர சொன்ன ராகுல் அவன் உள்ளே வந்ததும். தன் சேரில் இருந்து எழுந்தவன் இடம் வந்து கை கொடுத்து அவனை வா…வருண் எப்படி இருக்க என்று பேசி அழைத்துக் கொண்டு போய் சோபாவில் அமர வைத்து விட்டு தான் அவனுடன் அமர்ந்து கொண்டான்.
வருண் எதுவும் புரியாமல் ராகுலையே பார்க்க….
என்ன வரும் அப்படி பாக்குற என்னடா இவனுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே… இவ்வளவு செலவு செஞ்சு ரிஸ்க் எடுத்து என்னை ஏன் இவன் ஜாமினில் வெளிய எடுக்கணும் அப்படித்தானே நீ யோசிக்கிற என்று கேட்டான் ராகுல்.
வருண் ஆமாம் என்று தலையாட்ட..
நான் காரணமில்லாமல், அவர்களிடம் எந்த ஆதாயமும் இல்லாம யாருக்குமே எப்பவுமே உதவி செய்ய மாட்டேன் என்ற சொன்ன ராகுல் வருணை பார்க்க…
என்கிட்ட என்ன ஆதாயம் உனக்கு ஆக வேண்டி இருக்கு என்று வருண் நேரடியாக கேட்கவும்.
பரவாயில்லையே டக்குனு நான் சொல்ல வரத புரிஞ்சிட்டேன் என்று சொன்ன ராகுல். உனக்கு உன்னால ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு அதுக்காகத்தான் உன்ன இவ்வளவு செலவு செஞ்சு ஜாமனில் வெளியே எடுத்தேன் என்ற ராகுல்.
இது ஒரு உதவி செஞ்சு ஆகணும் என்றான் ராகுல் கட்டளையாக.
என்ன இவ்வளவு ரிஸ்க் எடுத்து ஜாமினில் எடுத்து இருக்கீங்க அதுக்கு நான் நன்றி கடனா நீங்க என்ன உதவி கேட்டாலும் செய்ய தயாராத்தான் இருக்கேன் என்றான் வருண்.
குட்… என்ற ராகுல். உன்ன இந்த நிலைமைக்கு கொண்டு வர காரணம் அந்த மயோ தான்னு எனக்கு நல்லா தெரியும் என்றான் ராகுல்.
ராகுல் அந்த மயோவ பத்தி மட்டும் என்கிட்ட பேசாதீங்க அவ பேரு கேட்டாலே எனக்கு பிடிக்கல என்னோட நிலைமைக்கு காரணமே அவதான். நானே வெளியே வந்ததும் முதல் வேலையா அவளுக்கு ஏதாவது பண்ணனும்னு நினைச்சு தான் வந்தேன் அதுக்கு முன்னாடி எனக்கு உதவி செஞ்ச உங்கள பாத்து நன்றி சொல்லிட்டு போகலாம்னு அதான் இங்கே வந்தேன் என்று சொன்னான் வருண்.
உன்னோட கோபம் எனக்கு புரியுது வருண் உனக்கு இப்போ அந்த அந்த மயோவ அழிக்கணும் அப்படித் தானே என்று கேட்டான் ராகுல்.
ஆமாம் ராகுல் அவளை என் கையாலேயே கொன்னாதான் என்னோட ஆத்திரம் அடங்கும் என்றால் வருண்.
அவளை பழிவாங்கணும்னா அதுக்காக அவளை கொல்லனும்னு ஒன்னும் அவசியம் இல்லையே, அவள் இவ்வளவு வருஷமா பாதுகாத்துக்கிட்டு வர அவளுடைய அம்மா அப்பாவின் சொத்துக்கள்,அவள் கூட இருக்கிறவங்களையும் அவகிட்ட இருந்து பிரிச்சாலே அவ இறந்ததுக்கு சமம் தானே என்றான் ராகுல்.
என்ன சொல்றீங்க ராகுல் எனக்கு புரியல என்று வருண் கேட்க …
நான் உனக்கு புரியும்படியா சொல்றேன் வருண் என்ற ராகுல் . மயோவை எப்படி பழிவாங்க வேண்டும் என்று என்னிடம் சொன்ன ராகுல் முதல்ல அவளோட தங்கச்சியை அவகிட்ட இருந்து பிரிக்கணும்.
பிறகு அவளோட தாத்தா அந்த கிழட்டு செழியன உலகத்தை விட்டு அனுப்பனும் அவ தான் அவர்தான் அவளுக்கு ஆணிவேர் மாதிரி அவர உன்னாலே மயோவுடைய உயிர் பாதி போனதுக்கு சமம்.
அதன் பிறகு அவள் புருஷன் அந்த அருள் இருக்கானே அவனைப் பற்றிய உண்மையை அந்த மயோவுக்கு தெரிய வைக்க வேண்டியது.
மயோவிற்கு அவ புருஷனை பற்றி என்ன விஷயங்கள் தெரிந்ததுமே அவ சுக்கு நூறா உடைந்து போயிடுவா… அவ்வளவே அவன அந்த வீட்டை விட்டு தன்னோட வாழ்க்கை விட்டு கண்டிப்பா துரத்திடுவார் அதன் பிறகு அவளை பாதுகாப்பதற்கோ அவளை கேட்பதற்கோ என்று அவளுக்கு யாருமே இருக்க மாட்டார்கள் அந்த நேரத்தில் சரியாக நாம காய நகர்த்தி அவகிட்ட இருக்குற சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிட்டு அதன் பிறகு அவளை இந்த உலகத்தை விட்டு அனுப்பிடலாம் என்ற ராகுல் வருணை பார்த்து நான் சொல்றது சரிதானே என்று கேட்டான்.
வருணுக்கு ராகுல் சொல்வதுதான் எனக்கு சரி என்று தோன்றியது. நீங்க சொல்றதெல்லாம் நல்லா தான் இருக்கு பாஸ் எப்படி இதையெல்லாம் செயல்படுத்த போறீங்க அதுக்கு நான் என்ன பண்ணனும் இதுக்காகத்தான் நீங்க என்ன ஜெயில்ல இருந்து வெளிய எடுத்தீங்களா என்று கேட்டான் வருண்.
ஆமா வரும் என்னோட பிளான நான் தனியா செய்யறத விட உன்ன மாதிரி அவளை அழிக்கணும்னு ஒருத்தன் இருக்கிறப்போ உன்னோட சேர்ந்து செய்யும்போது அந்த பிளான் இன்னும் ஸ்ட்ராங்கா அந்த மயோவுக்கு எதிரா வேலை செய்யும்.
அதனாலதான் நான் உன்னை ஜாமினில் வெளியே எடுத்தேன் என்றால் ராகுல்.
ஓகே ராகுல் நான் இப்போ என்ன செய்யணும்னு எனக்கு சொல்லுங்க நான் அதுபடியே செய்கிறேன் அந்த மயோவை சீக்கிரமா ஒன்னும் இல்லாதவளா ஆக்கி, நடை பிணமா அலையவிட்டு அவள இந்த உலகத்தை விட்டு அனுப்பனும் அப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கும் என்றான் வருண்.
சபாஷ் இதே கோபத்தோடையும் ஆக்ரோஷத்தோடையும் இருக்கணும் அப்போதுதான் நம்மளால அவள அழிக்க முடியும் என்று வருணுடன் கைகோர்த்த ராகுல் தன் அடுத்த திட்டத்தை வருணுக்கு தெளிவாக விளக்க ஆரம்பித்தான்.
❤️
சூர்யாவை வெறுப்பு ஏற்றுவதாக நினைத்து கொண்டு இளா வேண்டுமென்றே அடிக்கடி விஷ்வாவுடன் வெளியே செல்வதும் அவனுடன் நேரம் கழிப்பதுமாக சூர்யாவை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.
இதையெல்லாம் பார்த்து சூர்யாவிற்கு ஆத்திரமாக தான் வந்தது விஷ்வா தன்னுடைய நண்பன் என்றாலும் அவனால் அவர்கள் இருவரும் ஒன்றாக நேரம் செலவழிப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இளா மீதான தன் காதலை அவளிடம் தெரிவிக்காமல் இப்போது வரை அவளிடம் தன் வெறுப்பை காட்டுவது போல சூரியா நடித்துக் கொண்டிருக்க…
ஆனால் இளாவிற்கோ தான் அவனை இவ்வளவு வெறுப்பேற்றியும் தன்னை காதலிக்கிறேன் என்று வாயைத் திறந்து சொல்கிறேனா பார் என்று அவன் மீது அவளுக்கு அவன் இன்னும் கோபம் தான் வர ஆரம்பித்தது.
பார்ட்டி முடிந்து வந்த அன்று இரவு சூர்யா இளாவிடம் விஷ்வாவுடன் பழகுவது பிடிக்கவில்லை என்று சூர்யா சொன்னதிலேயே இளாவிற்கு சூர்யா அவருக்கு தன் மீது காதல் நிச்சயமாக இருக்கிறது என்று நம்ப ஆரம்பித்தால்.
அதன் பொஸசிவ் காரணமாகத்தான் விஷாலுடன் நெருங்கி பழகும் போதெல்லாம் சூர்யாவிற்கு கோபம் வருகிறது என்பதையும் புரிந்து கொண்டிருந்தால் இளா ஆனாலும் இத்தனை நடந்தும் அவன் வாயைத் திறந்து ஒரு வார்த்தை தன்னை காதலிக்கிறேன் என்று சொல்ல மாட்டேன் என்கிறான் என்று அவன் மீது ஆத்திரமாக வந்தது இளாவிற்கு.
சூரியாவாகவே வந்து தன்னிடம் எப்போது காதலை சொல்வான் என்று இளா எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவனோ தூரத்திலிருந்து இளாவை சைட் அடித்துக் கொண்டிருந்தானே ஒழிய அவளிடம் தன் மனதை திறந்து தன் காதலை இன்று வரை சொல்லாமல் நேரம் கடத்தி வந்தான்.
இன்று மயோவை பார்க்க சூர்யா அவள் வீட்டிற்கு வந்திருக்க ஹாலில் செழியனுடன் அமர்ந்திருந்த இளா அவன் வருவதை பார்த்தவள் பார்த்தும் பார்க்காதவள் போல முகத்தை திருப்பிக் கொள்ள…
வாசலில் அருகில் வரும் பொழுது இளா ஹாலில் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு சூர்யா . அவனும் அவளை கண்டுகொள்ளாதவன் போல செழியனிடம் சென்று அமர்ந்தவன்.
ஹாய் தாத்தா என்றான் சூர்யா.
வாடா… பேராண்டி என்ன இவ்வளவு தூரம் வந்திருக்க என்ற செழியன் நீ காரணமில்லாமல் இந்த பக்கம் வரமாட்டியே என்று சொல்லி இளாவை ஜாடை காட்டி சூரியாவிடம் கேட்க..
ஆமா தாத்தா மயோ கிட்ட ஒரு முக்கியமான டாகுமெண்ட் பத்தி பேச வேண்டி இருக்கு அதுக்காகத்தான் வந்தேன். அப்படியே உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு நீ எப்படி இருக்க? நல்லா இருக்கியா? அப்படின்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன் என்று இளாவை பார்த்துகொண்டே சொல்ல..
எனக்கு என்னடா பேராண்டி நான் நல்ல ராஜா மாதிரி சௌகர்யமா இருக்கேன் என் பேத்திங்க ரெண்டு பேரும் என்ன ஆபிஸ் பக்கமே வரக்கூடாதுன்னு ஸ்ட்ரைட்டா சொல்லிட்டாங்க அதனால நான் நிம்மதியா ரெஸ்ட் எடுத்துட்டு வீட்ல இருக்கேன் என்று சொல்ல…
அவருக்கு மட்டும் கேட்கும்படி நீ எப்படி இருந்தா எனக்கு என்ன கிழவா நான் என் ஆளைத்தான் எப்படி இருக்கா?நல்லா இருக்காளா என்று பார்த்துட்டு போக வந்தேன் உன்னை யாரு பார்க்க வந்தா என்று சொல்ல …
அவனை திரும்பி முறைத்த செழியன் இந்த தாத்தாவ ரொம்ப சாதாரணமா நினைக்காத சூர்யா ஒரு நாள் இந்த தாத்தாவுடைய உதவி உனக்கு கண்டிப்பா தேவைப்படும்.அப்போ நீ என்கிட்ட தான் வந்தாகணும் அதை ஞாபகத்துல வச்சுக்கோ.. என்று இளாவை திருமணம் செய்து கொள்ள சூர்யாவிற்கு தன்னுடைய சம்மதம் இருந்தால் மட்டுமே முடியும் என்பதை அவனுக்கு சொல்லாமல் சொன்னார் செழியன்.
அதைப் புரிந்து கொண்டு சூர்யா உடனே சுதாரித்துக் கொண்டவன் என்ன தாத்தா இப்படி பேசுறேன் என்னோட தயவு இல்லாம நான் எந்த விஷயத்தையும் பண்ண மாட்டேன் உனக்கு தெரியும் இல்லையா நான் சும்மா உன்ன கிண்டல் செய்வதற்காகத்தான் அப்படி சொன்னேன் நான் நிஜமாகவே உன்ன பாக்க தான் வந்தேன் தாத்தா என்று சூர்யா அப்படியே பல்டி அடிக்க…
டேய் பேராண்டி உனக்கு தாத்தா டா நான் நீ எப்படி எல்லாம் மாத்தி பேசுறேன் எனக்கு புரியாது என்று நினைத்து விட்டாயா… சரி போ… போ… உன்னை நான் பாவம் பார்த்து மன்னிச்சு விடுறேன் என்ன இருந்தாலும் நீ கூட பேர் என்னாச்சு என்றார் செழியன்.
என் செல்ல தாத்தா என்று சொல்லி செழியனின் கன்னம் கிள்ளிய சூர்யா. சரி தாத்தா மயோ இன்னும் ஆபீஸ்க்கு கிளம்பலையா அவளை இன்னும் கீழயே காணோம் என்று சூர்யா கேட்க…
மயோவும் அருளும் கிளம்பி ஆபீஸ் போய் ரொம்ப நேரம் ஆகுது சூர்யா என்றார் செழியன்.
தாத்தா இதை நீ முதலிலேயே சொல்லி இருக்கலாமே நான் வந்ததும் கிளம்பி போயிருப்பேன் என்று சூர்யா.
நானும் எவ்வளவு நேரம் தாண்டா வீட்டுக்குள்ளேயே சும்மா இருக்கிறது அது தான் பேச்சு துணைக்கு நீ வந்ததில்ல என் மயோ ஆபீஸ் போனது சொல்ல மறந்துட்டேன் என்று சொன்னார் செழியன்.
உனக்கு ஏன் தாத்தா வீட்டில் இருந்து போர் அடிக்குது அதுதான் இந்த வீட்டில ஒருத்தி வெட்டியா இருக்காலே அவ கிட்ட பேசிட்டு இருக்க வேண்டியதுதானே நீ ஏன் இப்படி தனியா பொலம்பிட்டு இருக்க இந்த சூர்யா தன் எதிரில் இருந்த இளாவை காட்டி கேட்க…
ஹலோ என் தாத்தாவை பார்க்க வந்தால் அவர்கிட்ட மட்டும் பேசிட்டு போங்க என்னை இந்த ஜாடை பேசுற வேலை எல்லாம் வேண்டாம் நான் என்ன வெட்டியா இருக்கேன்னு நீங்க வந்து பாத்தீங்களா ஏற்கனவே சூர்யாவின் மீது கடுப்பில் இருந்த இளா அவன் தன்னை கிண்டல் செய்யவும் அவனிடம் எரிந்து விழுந்தால்.
பாத்தியா உன் பேத்திக்கு உண்மைய சொன்னதும் கோபம் பொத்துக்கிட்டு வருது என்று சொன்ன சூர்யா சரி தாத்தா நான் வந்த வேலை முடிஞ்சது நான் கிளம்புறேன் பாய் என்று சொன்னவன் இளாவை பார்த்து வரட்டா என்று சொல்லி கையாட்டி விட்டு வெளியே செல்ல…
அவனை வெறுப்பேற்ற நினைத்த இலா சரி தாத்தா எனக்கும் விஷ்வாவை மீட் பண்ண நேரம் ஆச்சு நானும் கிளம்புறேன் நான் போயிட்டு நைட் லேட்டா தான் வருவேன் நானும் விஷ்வாவும் டேட்டிங் போலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் என்று இளா செழியனிடம் சொல்ல..
அங்கிருந்து எழுந்து செல்லப்போன சூர்யா இளா விஷ்வாவுடன் டேட்டிங் டேட்டிங் செல்கிறேன் என்று சொன்னதை கேட்டதும் அப்படியே நின்று விட்டான்.
அவன் உறைந்து போய் தன்னைப் பார்ப்பதை ஓரக்கண்ணால் கவனித்த இலா உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள் அப்படி வாடி வலிக்கு நான் சொன்னது கேட்டு உனக்கு ஷாக் ஆகுதா அதே சாக்குடைய இரு என்று நினைத்தவள் சரி தாத்தா நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு தன் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்ப…
அவள் தன்னைத் தாண்டி செல்லும்வரை அப்படியே நின்று சூர்யா அவள் கிளம்பிச் செல்லும் போது வேகமாக அவள் பின்னால் வந்தவன் நெஜமாவே நீ விஷ்வா கூட வெளியே போறியா என்று கேட்க…
சூர்யா மாமா நானும் விஷ்வாவும் இன்னைக்கு தான் டேட்டிங் போலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் எங்களோட மனசுல இருக்குறத நாங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேச போறோம் அதனால தான் நான் நைட் வரைக்கும் லேட் ஆகும்னு சொன்னேன். நாங்க எங்க மனசுல இருக்குறத வெளிப்படையா பேசினா தானே ஒருத்தர ஒருத்தர நல்லா புரிஞ்சுக்க முடியும் சொன்ன இல்ல சரி மாமா எனக்கு நேரம் ஆச்சு நான் போயிட்டு வரேன் எனக்காக என் விஷ்வா காத்துட்டு இருப்பான் என்று சொல்ல…
அப்போது இவர்கள் இருவரும் பேசிக்கொண்டதை கேட்டுக் கொண்டே வந்த மீரா. ஏய் இளா என்னடி சொல்ற நிஜமாவே நீ விஷ்வாவை லவ் பண்றியா? என்று அதிர்ச்சியாக மீரா கேட்டாள்.
ஆமாடி நானே உன் கிட்ட இன்னைக்கு நைட் வந்து இத சொல்லணும்னு நெனச்சேன் நல்லவேளை நீயும் இங்கே வந்துட்ட…. விஷ்வா கிட்ட நான் என் மனசு தந்து இன்னைக்கு என்னோட காதல சொல்ல போறேன் அவனும் கண்டிப்பா என்னோட காதல ஏத்துக்குவான் என்று சொன்ன இளா… சரி மீரா நான் கிளம்புறேன் லேட் ஆச்சு எனக்காக விஷ்வா காத்துட்டு இருப்பான் என்று சொல்லி இளா கிளம்ப…
சூர்யாவிடம் வந்த மீரா என்ன அண்ணா இப்படி சொல்லிட்டு போறா நீங்களும் பார்த்துட்டு பேசாம இருக்கீங்க இப்படியே நீங்க பாத்துட்டு இருந்தா விஷ்வாகிட்டே அவ லவ் பண்றேன்னு போய் சொல்ளிட போறா அண்ணா என்று மீரா மிகவும் அக்கறையாக சூர்யாவிடம் சொல்ல…
ஆமா மீரா நீ சொல்றதும் சரிதான் இனியும் நான் வெயிட் பண்ணி பிரயோஜனம் இல்ல முதல்ல அவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்கன்னு ஃபாலோ பண்ணி நிஜமாவே இளா விஷ்வாவை லவ் பண்றாளான்னு நான் தெரிஞ்சுக்கணும்.
அதுக்கு பிறகு கண்டிப்பா நான் என்னோட காதலை அவகிட்ட சொல்லியே தீருவேன். சரி நான் இளா எங்கே போறான்னு பாக்கணும் என்று சொல்லிவிட்டு கிளம்ப…
இருங்க அண்ணா நீங்க மட்டும் தனியா போகாதீங்க நானும் கூட வரேன் என்றும் மீரா சொல்ல சரி வா என்று சொல்லி மீராவையும் அழைத்துக் கொண்டு சூர்யா காரில் கிளம்பி எல்லா செல்லும் காரை பாலோ செய்து கொண்டு சென்றான்.
EPISODE 42
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
இளா விஷ்வா உடன் டேட்டிங் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிச் செல்ல அவளை பாலோ செய்து சூர்யாவும் மீராவும் அவர்கள் பின்னால் அவர்களுக்கு தெரியாமல் காரில் சென்றனர்.
இவள் இருவரும் இளாவிற்கு தெரியாமல் அவள் பின்னால் செல்கிறோம் என்று நினைத்திருக்கிறார்கள் ஆனால் இளாவிற்கு இவர்கள் இருவரும் வருவது நன்றாகவே தெரியும்.
வீட்டிலிருந்து கிளம்பி இளா நேராக விஷ்வாவின் ஆபீஸிற்கு சென்றாள். காரில் இருந்து இறங்கிய இளா டிரைவரை போகச் சொல்லிவிட்டு நேராக விஷ்வாவின் ஆபிசிற்க்குள் சென்றாள்.
விஷ்வாவின் ஆபீஸ் இருக்கு வெளியே சற்று தள்ளி சூர்யா தனது காரை நிறுத்தி இருந்தான்.
இளா அவர்களை கண்டுகொள்ளாதவள் போல உள்ளே சென்றவள் விஷ்வாவிடம் வந்து விஷ்வாவின் அறைக்குள் வந்தவள் சீக்கிரமா என்கூட கிளம்பி வா விஷவா… நாம வெளியே போலாம் சீக்கிரம் வா… என்று அவனை அவசரப்படுத்த.
ஏய் இளா எங்க போறேன்னு சொல்லு நீ ஏன்? இவ்வளவு அவசரமா கூப்பிடுற முதலிலேயே என்கிட்ட சொல்லி இருந்தா நான் கிளம்பி இருப்பேன் இல்ல என்று சொல்ல…
அதெல்லாம் நான் போற வழியில சொல்றேன் நீ முதல்ல என் கூட இப்போ கிளம்பி வா என்று சொல்லி விஷ்வாவின் கையைப் பிடித்து அவன் சேரிலிருந்து எழுப்பியவள் அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அவனுடன் அவன் ஆபிஸை விட்டு கிளம்பினால்.
விஷ்பாவும் இளாவும் கைகோர்த்துக் கொண்டு காரில் ஏறி கிளம்ப அதை பார்த்துக் கொண்டிருந்த சூர்யாவிற்கு ஆத்திரமாக வந்தது எனக்கு போதும்.
தன் கார் ஸ்டியரிங்கை கைகளால் குத்தியவன் ச்சே… எவ்வளவு நெருக்கமா அவன் கையை கோர்த்துட்டு கூட சிரிச்சு பேசிட்டு போறா பாரு என்று புலம்பியவன்.
என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு அவன் கூட சேர்ந்து டேட்டிங் போறா பாரு என்று மீராவிடம் இளாவை குற்றம் சொன்னான்.
ஆமா அண்ணா… எனக்கும் அதேதான் யோசனையா இருக்கு.சரி நீங்க சீக்கிரமா காரை ஸ்டார்ட் பண்ணுங்க அவங்க நம்ம கண்ணுல இருந்து மறைஞ்சிற போறாங்க என்று சூர்யாவை வேக படுத்தினால் மீரா.
அவர்களின் காரை பாலோவ் செய்து கொண்டே தங்கள் காரை அவர்கள் இருவரும் கவனித்து விடாதபடி தொலைவிலேயே அவர்களை பின்தொடர்ந்து சூரியா காரை ஓட்டிக்கொண்டு சென்றான்.
விஷ்வா காரை ஓட்டிக் கொண்டே இளாவிடம் ஏய் இளா எங்கே போறோம் நாம எதுவுமே சொல்லாம திடீர்னு வந்து கிளம்பி வான்னு சொல்லி என்னை கூட்டிட்டு வந்துட்டே… எங்கே போறோம்னு கேட்டாலும் எதுவும் சொல்லாம வர என்றான் விஷ்வா.
சொல்றேன் டா… எதுக்கு இவ்ளோ அவசர படுற… எனக்கு இன்னைக்கு ஒரு வேலையும் இல்லை அதனால தான் உன்னை கூட்டிட்டு போகலாம்னு வந்தேன் என்றாள் இளா கூலாக.
காரை ஓட்டிக் கொண்டு இருந்த விஷால் அதிர்ச்சியாக இளாவை பார்க்க…
என்ன பாக்குற டா… நேரா பார்த்து வண்டியை ஓட்டு… என்றாள் இளா.
சரி எங்கே போலாம் சொல்லு என்றான் விஷால் கடுப்பாக.
ம்ம்ம்…. என்று கன்னத்தில் கை வைத்து இளா யோசிக்க…
சுத்தம் எங்கே போறோம்னு கூட யோசிக்காம தான் என்னை வெளியே கூட்டிட்டு போறியா என்றான் விஷால்.
எஸ்… என்று கியூட்டாக விஷாலை பார்க்க…
அவளை. பார்த்து சிரித்து விட்டு ஏய் அருந்தவாலு… கியூட்டா இருக்கோம்னு நினைப்பா உனக்கு என்றவன். அடச்சீ… நல்லாவே இல்லை லுக்கை மாத்து என்றவன்.இப்போ எங்கே போலாம்னு முதல்ல சொல்லு என்றான் விஷால்.
ம்ம்ம்… பஸ்ட் என்னை எங்கயாச்சும் ஷாப்பிங் கூட்டிட்டு போ.. என்றாள் இளா.
சரி என்று சொல்லி சிட்டியின் மிகப்பெரிய மாலிற்கு அவளை அழைத்து சென்றவன் அவளை இறங்க சொல்லிவிட்டு காரை பார்க் செய்துவிட்டு வர..
அவனை கண்டதும் துள்ளிக் குதித்து அவன் கையை பிடித்துக்கொண்டு போலாமா? என்றாள் இளா.
ம்ம்.. என்று சொல்லி அவளுடன் நடந்தான் விஷால்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சூர்யாவிற்கு ஆத்திரமாக வந்தது. மீராவை தன்னுடன் அழைத்துக் கொண்டு அவர்கள். பின்னே செல்ல…
இளாவும் விஷ்வாவும் முதலில் மாலில் இருவருக்கும் சென்று ஆடைகள் வாங்கும் கடைக்கு சென்று இருவரும் மாற்றி மாற்றி தங்களுக்கு வாங்க வேண்டிய ஆடைகளை தங்கள் மேல் வைத்து சரி பார்த்து வாங்கினர்.
இதை எல்லாம் பார்த்து சூர்யா வயிறு எரிந்து கொண்டு இருக்க… அவன் அருகில் நின்று இருந்த மீரா… அண்ணா அவளை பாருங்க உங்களை நிக்க வெச்சு அழகு பாக்க வேண்டிய இடத்துல அந்த விஷாலை நிக்க வெச்சிட்டு இருக்கா… என்று ஏற்கனவே வயிறு எரிந்து கொண்டு இருந்த சூர்யாவை மேலும் எரிய வைத்துக் கொண்டு இருந்தாள்.
அவள் சொன்னதும் ஆமா தங்கச்சி என்று சொன்ன சூர்யா. இரு நான் அவளை என்ன பண்றேன் பாரு என்று சொல்லி அங்கிருந்து செல்லப் போக…
அவன் கையை பிடித்து இழுத்து நிறுத்திய மீரா… அண்ணா கொஞ்ச நேரம் பேசாம இருங்க… இப்பவே போய் காரியத்தை கெடுத்துறாதீங்க என்றாள்.
சூர்யா அமைதியாக இருக்க…
இளாவும், விஷாலும் தாங்கள் வாங்கிய ஆடைகளுக்கு பில் செய்துவிட்டு கடையை விட்டு வெளியே வந்தவர்கள் அப்படியே அந்த மாலை சுற்றி பார்த்துக் கொண்டு இருக்க…
அப்போது அந்த மாளின் ஒரு பிரபல நகை கடையை பார்த்த இளா… விஷ்வாவின் தோளை சுரண்டி அந்த கடையை காட்டி அங்கே போகலாம் என்று கேட்க…
சரி வா.. என்று சொல்லி இளாவுடன் அந்த கடைக்குள் நுழைய… அவர்களை வார வேற்ற பெண் உங்களுக்கு எந்த மாதிரியான நகை வேண்டும் என்று கேட்க..
இளா உடனே கபில்ஸ் யூஸ் பண்ற மாறி ஜூவேல்ஸ் காட்டுங்க என்றாள் இளா.
அவர்களை அழைத்துக் கொண்டு போய் அமர வைத்த அந்த பெண் சேல்ஸ் மேனிடம் சொல்லி அவர்களுக்கு கபில்ஸ் அணியும் நகைகளை காட்ட சொல்லிவிட்டு வந்தாள்.
அந்த பெண் அவர்களை தாண்டி வந்ததும் அந்த பெண்ணின் கையை பிடித்து ஓரம் கட்டிய மீரா அந்த பெண்ணிடம் இளா விஷ்வாவை காட்டி அவங்க என்ன கேட்டாங்க உங்க கிட்டே என்றாள்.
அந்த பெண் மீராவையும் அவாள் அருகில் நின்று நகம் கடித்துக் கொண்டு. இருந்த சூர்யாவை பார்த்தவள் நீங்க எதுக்கு கேக்குறீங்க என்றாள்.
உடனே மீரா அவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான் நீங்க சொல்லுங்க என்று கேட்டாள்.
அவங்க ரெண்டு பேரும் கபில்ஸ் போடுற மாறி நகைகள் கேட்டாங்க என்றார்.
சரி நீங்க போங்க என்று அந்த பெண்ணை அனுப்பிவிட்டு சூர்யாவிடம் திரும்பிய மீரா. அண்ணா… என்று ஏதோ சொல்ல வர.. நீ எதுவும் சொல்ல வேண்டாம் என்றவன். இளாவையும் விஷ்வாவையும் பார்க்க…
அவர்கள் தங்களுக்கான நகைகளை தேர்ந்து எடுத்துவிட்டு கிளம்பி செல்ல…
அவர்கள் பின்னே இருவரும் செல்ல…
இளா மாலில் இருந்த தியேட்டறை காட்டி அங்கே போகலாம் என்று சொல்ல…
ஏய்… இளா… மூவி பார்த்து டைம் வேஸ்ட் பண்ணனுமா என்று கேட்க…
இன்னிக்கு ஒரு நாள் எனக்காக உன்னோட டைம் வேஸ்ட் பண்ணு. ஒன்னும் ஆகாது என்றாள் இளா.
நான் மாட்டேன்னு சொன்னா நீ என்ன விடவா போறே… உன்னை எல்லாம் என் நண்பன் சூர்யா கட்டிக்கிட்டு என்ன பாடுபடப் போறானோ எனக்கு தெரியலை என்றான் விஷ்வா.
அது எல்லாம் அவன் தலை எழுத்து எதுவும் பண்ண முடியாது. நீ பேசாம வா என் கூட என்று அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு டிக்கெட் கவுண்டருக்கு போனவள் ஒரு ஆங்கில கார்ட்டூன் படத்திற்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல…
அண்ணா என்ன அண்ணா இவ லவர் கூட படத்துக்கு போற அப்போ ஏதாவது ரொமான்ஸ் மூவிக்கு தானே போவாங்க. ஆனா இவ என்ன கார்ட்டூன் படத்துக்கு போறா என்றாள் மீரா.
அவளை திரும்பி சூர்யா முறைக்க… அப்போது தான் மீரா விஷ்வாவை இளாவின் லவர் என்று சொன்னது நினைவிற்கு வர.. அடடா… தெரியாம உளறிட்டோமே என்று நினைத்தவள் சூர்யாவை பார்த்து அண்ணா சாரி… தெரியாம… என்று அசடு. வழிய சரி வா… என்று சொல்லி. அவளை. அழைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் வாங்கிய படத்திற்கு சூர்யாவும் டிக்கெட் வாங்கிவிட்டு மீராவை அழைத்துக் கொண்டு பெரிய பாப் கார்ன் வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல…
அவர்கள் அமர்ந்து இருந்த சேருக்கு பின்னால் அவர்களை தாண்டி தங்கள் முகத்தை பார்த்துவிடக்கூடாது என்று கையில் வைத்து இருந்த பாப்கார்ன் பாக்கட்டை வைத்து தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு அவர்களை தாண்டி சென்று அமர்ந்தனர்.
படம் ஆரம்பித்ததும் அனைவரும் திரையில் தெரிந்த படத்தை பார்க்க… சூர்யாவும், மீராவும் தங்கள் முன்னாள் அமர்ந்து இருக்கும் விஷாலும் இளாவும் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு. இருந்தனர்.
இவர்கள் தங்கள் பின் இருக்கிறார்கள் என்று விஷாளுக்கு தெரியாது. ஆனால் இளாவிற்கு தான் தெரியுமே…அவள் வேண்டும் என்றே விஷாலை இடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
அவள் தன்னுடைய தோழி என்பதால் இதை விஷால் எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் இங்கு சூர்யாவிற்கு தான் தான் கோபத்தை கட்டுப்படுத்த தெரியாமல் தன் கையில் இருந்த பாப்கார்னை அள்ளி வாயில் வைத்து மென்று கொண்டு இருந்தான்.
படம் முழுவதும் விசாலும் இளாவும் பேசிக் கொண்டே படம் பார்க்க… ஆனால் சூர்யாவும் மீராவும் தாங்கள் எந்த படத்திற்கு வந்தோம் என்று கூட தெரியாமல் தங்கள் முன் இருந்த இருவரையும் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தனர்.
படம் முடிந்ததும் தியேட்டறை விட்டு வெளியே விஷாலுடன் வெளியே வந்த இளா, விஷாலிடம் பசிக்கிறது என்று தன் வயிற்றை தடவிக் காட்ட…
அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்த kfc க்கு சென்று உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டவர்கள் அங்கிருந்து நேராக கிளம்பி. பீச்சிற்கு செல்ல…
காரை நிறுத்தி விட்டு விஷால் வர… அவன் கையை பிடித்துக்கொண்டு இளா கடற்கரை மணலில் நடக்க…
மீரா சூர்யாவிடம் அண்ணா இதுக்கு மேல என்னால பொறுக்க முடியலை நீங்க வேணா இதை எல்லாம் பாத்துட்டு பொறுமையா இருங்க… ஆனால் என்னால் இந்த கன்றாவியை எல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்க முடியலை என்று சொன்னவள். தன் தோளில் போட்டிருந்த துப்பட்டாவை தூக்கி கழுத்தை சுற்றி ஸ்டைலாக போட்டவள் நேராக இளா, விஷ்வாவை நோக்கி நடக்க…
அவள் கையை பிடித்து போக வேண்டாம் என்று சூர்யா தடுக்க… அவன் பிடித்து இருந்த தன் கையை திருப்பி அவன் கையை பிடித்த மீரா சூர்யா வேண்டாம் என்று மருத்தும் அவனை இழுத்துக் கொண்டு போய் இளா விஷ்வாவின் முன் நிறுத்த…
அவர்களை அங்கு எதிர் பார்க்காத விஷ்வா அதிர்ச்சியாக தன் முன்னாள் நிற்கும் இருவரையும் பார்த்தான்.
EPISODE 43
ஹலோ நண்பர்களே 🌹
விஷ்வாவும் இளாவும் மால் தியேட்டர் என்று சுத்தி சுற்றிவிட்டு கடைசியில் பீச்சுக்கு வர…
இவர்கள் இருவருக்கும் தெரியாமல் அவர்களை பாலோ செய்து கொண்டு வந்த சூர்யாவும் மீராவும் வீச்சில் இருவரும் கைபிடித்து நடந்து செல்வதை பார்த்து கடுப்பான மீரா சூர்யாவை இழுத்துக்கொண்டு போய் அவர்கள் முன் நிற்க…
இளாவிற்கு ஏற்கனவே சூர்யாவும் மீராவும் தங்களை பின் தொடர்வது தெரியும் என்பதால் அவள் முகத்தில் எந்த ஒரு அதிர்ச்சியும் தெரியவில்லை ஆனால் விஷால் இருக்கு இந்த விஷயம் தெரியாததால் அவர்கள் இருவரையும் திடீரென்று இங்கு பார்க்கவும் அவன் முகம் பேய் அறிந்தது போல மாறிவிட்டது.
விஷால் அதிர்ச்சியாக அவர்கள் இருவரையும் பார்த்து நீ… நீங்க.. எப்படி இங்க என்று தடுமாறி பேச…
ஏன் எங்க ரெண்டு பேரையும் நீ..இங்க எதிர்பார்க்கலையா?என்றால் மீரா.
விஷால் அதிர்ச்சியாக ஆமாம் என்று தலையை மேலும் கீழும் ஆட்ட…
ஓஹோ… அப்போ எங்களுக்கு தெரியாமலே நீ இந்த வேலை எல்லாம் பண்ணனும்னு நினைச்சிட்டு இருந்திருக்க அப்படித்தானே… என்று விஷாலிடம் மீரா கோபமாக கேட்க..
என்ன இது விஷால கொஞ்சம் கூட மரியாதை இல்லாம நீ வா பொண்ணு பேசுற என்று சூர்யா அவளை பார்க்க…
விஷால் அப்படி எல்லாம் இல்ல மீரா என்று அவளிடம் பேச வர…
அவன் முன் கையை நீட்டி அவனை பேசவிடாமல் தடுத்த மீரா இளாவை பார்த்து ஏண்டி சூர்யா அண்ணாவை லவ் பண்றேன்னு சொல்லிட்டு இவன் கூட என்னடி உனக்கு வேலையை வேண்டி இருக்கு என்றால் மீரா.
உடனே இளா வேண்டுமென்று விஷாலின் கையை கோர்த்து தன் அருகில் அவனை இழுத்து நிற்க வைத்தவள்.
எனக்கு யாரை பிடிக்குதோ அவங்க கூட தான் பேச முடியும் என்னை சூரியா மாமா லவ் பண்ணலேன்னு சொல்லிட்டாரே.. அதுக்கு பிறகு நான் எதுக்கு அவருக்காக வெயிட் பண்ணனும் என்றால் இளா.
ஒருத்தர உண்மையா லவ் பண்ணி இருந்தா அவரு உன்ன லவ் பண்ணலேன்னு சொன்னாலும் எப்படியாவது அவரை சம்மதிக்க வச்சு அவரை உன் பக்கம் இழுக்கணுமே தவிர… இப்படி உன்னை வேண்டான்னு சொன்னதும் அடுத்த ஆள பாத்துட்டு போறது என்ன பழக்கம் இது என்றால் மீரா இருவரையும் கோபமாக பார்த்து .
மீரா இவ்வளவு கோபமாக பேசுவதை பார்த்த சூர்யாவிற்கே ஏதோ போல இருந்தது. அவளைப் பிடித்து தன் அருகில் இழுத்து சூர்யா மீரா வேண்டாம் விடுமா இதுக்கு மேல இப்படி வந்து நம்ம பேசணுமா இது நல்லா இருக்காது வா போலாம் என்று அவளை தன்னுடன் அழைத்துச் செல்ல இழுக்க…
அவன் கையை உதறிய மீரா அண்ணா நீங்க சும்மா இருங்க இதையெல்லாம் இப்படியே விடக்கூடாது இவங்க ரெண்டு பேரையும் நாக்க புடிக்கிற புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்டா தான் இவங்களுக்கு புத்தி வரும் என்றாள் மீரா .
என்ன வேண்டான்னு சொல்லிட்டு தானே இளா விஷால் கூட பழகுறா அப்படி இருக்கிறப்போ இன்னைக்கு நான் இப்படி போய் அவகிட்ட என்ன காதலிக்க சொல்லி சொல்ல முடியும் வேண்டாம் என்று சூர்யா சோகமாக பேச…
உங்களுக்கு வேணா இந்த விஷயம் பரவா இல்லையா இருக்கலாம் அண்ணா.ஆனா எனக்கு கிடையாது என்று சொன்ன மீரா திரும்பி எல்லாவையும் விஷாலையும் பார்க்க…
மீரா விஷாலை பார்த்து முறைக்க… இளா கைக்குள் இருந்த தன் கையை தன்னிச்சையாக விஷால் எடுத்துக்கொண்டு இளாவை விட்டு சற்று தள்ளி நிற்க…
இவன் எதுக்கு மீராவுக்கு எல்லாம் பயந்துட்டு இருக்கான் என்று சூர்யா யோசிக்க..
தன்னை விட்டு விஷால் தள்ளி நின்றதும் இளா வேண்டும் என்றே அவனிடம் ஒட்டிக்கொண்டு நிற்க…
இதை பார்த்த சூர்யா அவனே தள்ளி போறான். இவ சும்மா இருக்காளா பாரு என்று இளாவை தன் மனதிற்குள் திட்டிய சூர்யா. மீராவின் கையைப்பிடித்து போகலாம் வா என்று இழுக்க….
அவன் கையை உதறிய மீரா விஷாலை ஒட்டிக்கொண்டு இருந்த இளாவை அவனிடமிருந்து தள்ளிவிட…. மீரா இளாவை தள்ளிய வேகத்தில் இளா கடற்கரை மணலில் விழுந்தால்.
இளா கீழே விழுந்ததும் தன்னிச்சையாக சூர்யா அவளிடம் வந்தவன் அவள் கை பிடித்து மேலே தூக்கி விட….
இளா விழுவதை சட்டை செய்யாமல் மீரா விஷாலிடம் வந்தவள் தன் இடுப்பில் கை வைத்த படி அவனைப் பார்த்து முறைக்க…
விஷால் மீரா அவளிடம் எதுவும் கேட்காமலேயே தன்னிச்சையாக தலையை பயத்தில் இல்லை என்று இடவலமாக ஆட்ட…
ஏண்டா என்ன லவ் பண்றேன்னு சொல்லி என் பின்னாடி சுத்திக்கிட்டு இவள கரெக்ட் பண்ணி இவ கூட ஜாலியா தியேட்டர் பீச் என்று சுத்திட்டு இருக்கியா?…
உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் ஒரே நேரத்துல இளாவை லவ் பண்ணிட்டு… அதே நேரம் தினமும் நான் போற இடம். எல்லாம் என்ன லவ் பண்ண சொல்லி என் பின்னாடி சுத்திக்கிட்டு இருப்ப என்று சொல்லி விஷாலின் காலரை பிடித்து அவனை உழுக்க…
மீரா சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியான சூர்யா அவள் சொல்வதை எல்லாம் நம்ப முடியாமல் மீராவையும் விஷாலையும் பார்க்க…
விஷாலின் சட்டையை பிடித்து உலுக்கிய மீரா அவனை கடற்கரை மணலில் கீழே தள்ளி அவன் மேல் இரண்டு பக்கமும் காலை போட்டு அமர்ந்தவள் அவன் கன்னத்தில் மாறி மாறி அடித்த மீரா.
நான் மாட்டேன்னு சொல்லி உன்னை அலைய விட்டா…. நீ என்ன சமாதானம் பண்ணி என்னை தான்டா லவ் பண்ணனும்.
அதை விட்டுட்டு நான் வேண்டாம்னு சொன்னா உடனே என்னை திரும்பியும் பார்க்காமல் இவ பின்னாடி சுத்துவியா? என்று சொல்லி மீரா விஷாலை அடிக்க…
ஏய் மீரா… நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லடி… நான் சொல்றது கொஞ்சம் பொறுமையா கேளு மீரா என்று அவள் தன்னை அடிப்பதை தடுக்க விஷால் முயற்சிக்க…
பேசாதடா….உனக்கு ஒரே நேரத்துல ரெண்டு பொண்ணு கேக்குதா? அதுவும் இன்னைக்கு அவ கூட டேட்டிங் வேற போற… என்று சொல்லி விஷாலின் வயிற்றில் ஓங்கி குத்த…
என்னது டேட்டிங்கா!!! என்று தன்னை அடித்துக் கொண்டிருந்த மீராவின் கையைப் பிடித்து நிறுத்தியவன் அதிர்ச்சியாக திரும்பி இளாவை விஷால் பார்க்க…
இதற்கெல்லாம் காரணமான இளாவோ தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல அங்கே நின்று இருந்தால்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சூர்யா திரும்பி இளாவை பார்த்து என்ன இளா இதெல்லாம் இவன் அதிர்ச்சியாகி உன்னை பார்ப்பதை பார்த்தால். அவனுக்கு உன் கூட டேட்டிங் வந்தது கூட தெரியாது போல இருக்கே.. என்றான் சூர்யா.
ஆமா அவனுக்கு நான் அவன டேட்டிங் அழிச்சிட்டு போறேன்னு தெரியாது என் கூட சும்மா வெளிய வா ன்னு சொல்லித்தான் நான் அவனை எல்லா பக்கமும் கூட்டிட்டு போனேன் என்றாள் கூலாக.
அவள் சொன்னதை கேட்டதும் விஷால் மீராவை பார்த்து பார்த்தியா… அவ எனக்கு தெரியாமையே என்ன வெளியே டேட்டிங்கன்னு கூட்டிட்டு வந்து இருக்கா… எனக்கு இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விஷால் தன் பக்க நியாயத்தை மீராவிடம் எடுத்துக் கூற…
சரி அவ கூட டேட்டிங் வந்தேன்னு தான் உனக்கு தெரியாது அப்புறம் எதுக்கு அவளை உரசி கிட்டு கைய புடிச்சுகிட்டு சுத்திகிட்டு இருந்த ஏன் தனித்தனியா கை பிடிக்காமல் துரைக்கு நடக்க முடியாதோ அப்படி கையை கோர்த்துக்கிட்டே தான் ஜோடியை சுத்தணுமா அப்புறம் அது என்ன நகைக்கடைக்கு போய் கப்பிள்ஸ் ஜுவல் பாக்குறீங்க ரெண்டு பேரும் அப்படியா எங்க அவளுக்காக நீ வாங்கி கொடுத்த அந்த நகையை எடு நான் பார்க்கிறேன் என்று அவன் காலரை பிடித்து உளுக்க…
உடனே இளா மீராவை பார்த்து அவன் தான் வாங்கி என்கிட்ட கொடுத்துட்டானே அவன்கிட்ட ஏன் போய் கேக்குற என்றாள்.
உன்மேல் அமர்ந்திருந்த மீரா கொலை வெறியோடு திரும்பி இளாவை பார்க்க அவள் பார்க்கும் பார்வையை ஒரு நிமிடம் இளாவிற்கு சற்று பயத்தை தந்தது.
அவன் மேலிருந்து எழுந்த மீரா நேராக இளாவிடம் வந்தவள் அவள் கையில் இருந்த பையை பிடுங்க போக…
மீரா தன் கையில் இருந்த பேக்கை பிடுங்காதவாறு சட்டென்று தன் கையை வேகமாக பின்னால் இழுத்துக் கொண்ட இளா ஏய் அவன் எனக்காக வாங்கி கொடுத்தான்.அது எதுக்கு நீ பாக்கணும் என்று வேண்டுமென்று அவளை வெறுப்பேற்றும் படி இளா பேச…
என் அதை நான் பார்த்தா என்ன என்றால் மீரா.
உனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?அவன் எனக்காக விஷால் ஆச ஆசையா பார்த்து செலக்ட் பண்ணி வாங்கி கொடுத்தது. அதை ஏன் நீ பார்க்கணும் என்று அவளை கடுப்பேற்ற…
என்ன சொன்ன…என்ன சொன்ன…எனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கா? அவன் என்னதான் காதலிக்கிறான்.உன்னை இல்ல… அவனை நானும் காதலிக்கிறேன்.அந்த உரிமையில் தான் அதை உன்கிட்ட கேக்குறேன் ஒழுங்கா அதை என் கைல கொடு… என்று மீரா கடுப்பாக இளாவிடம் பேச…
மீரா தன் வாய் திறந்து விஷாலை விரும்புகிறேன் என்று சொன்னதும் இளா மீராவை தாண்டி அவள் பின்னால் மணலில் படுத்திருந்த விஷாலை பார்த்து எப்படி?நான் சொன்ன பிளான் வொர்க் அவுட் ஆச்சா.. என்று சிரித்தவாறு இளா கேட்க…
மீரா தன்னை விரும்புகிறேன் என்று சொன்னதை கேட்ட விஷால் மணலில் தன் கைகளை தலைக்கு பின்னால் கொடுத்து படுத்துக்கொண்டு இளாவைப் பார்த்து மிகவும் சந்தோஷமாக….
ஆமா இளா நீ சொன்ன மாதிரியே இவ முன்னாடி நம்ம ரெண்டு பேரும் கிளோஸ் ஆக இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டா போஸசிவ்னஸ்னால… இவ அவளோட லவ்வ தானாவே சொல்லுவான்னு நீ சொன்னது சரியா போச்சு.
ஆனால் இவ்வளவு தூரம் அவ இறங்கி வந்து என் கூட சண்டை போடுவா என்று நானே எதிர்பார்க்கல என்றான் விஷால்.
இளாவும் மீராவும் பேசியதை கேட்டு அதிர்ச்சியாகி நின்ற சூர்யாவும் மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள…
அவர்களைப் பார்த்த இளா என்ன அப்படி பாக்குறீங்க..நாங்க ரெண்டு பேரும் உண்மையான லவ்வர்ஸ் கிடையாது.
சூர்யா மாமா என்ன லவ் பண்றாரா இல்லையான்னு டெஸ்ட் பண்ண தான் முதல்ல நான் விஷால் கூட லவ்வரா இருக்கிற மாதிரி நடிக்க ஆரம்பிச்சேன்.
ஆனா அதுக்கப்புறம் தான் விஷால் உன்ன லவ் பண்றதா என்கிட்ட சொன்னான் என்று மீராவை பார்த்து சொன்னவள்.
நான்தான் விஷால் கிட்ட இந்த ஐடியாவை கொடுத்தேன் நாம் இரண்டு பேரும் சூர்யா மாமாவும் மீராவும் இருக்கிறப்போ கிளோஸ் ஆகி இருக்கிற மாதிரி அவங்க முன்னாடி காட்டிக்கணும் லவ்வர்ஸ் மாதிரி நடந்துக்கணும்.
அவங்க ரெண்டு பேருக்கும் உண்மையாவே நம்ம மேல லவ் இருந்தா கண்டிப்பா அவங்க அதை சொல்லிடுவாங்கன்னு நான் தான் விஷாலுக்கு இந்த ஐடியாவை கொடுத்தேன் என்று தனி இல்லாத காலரை தூக்கிவிட்டு எப்படி என்று சூர்யாவையும் மீராவையும் பார்த்து சொல்ல…
மணலில் படுத்திருந்த விஷால் எழுந்து சூர்யாவை பார்த்து என்னடா என் அருமை நண்பா நெஜமாவே நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்ன்னு நீயும் நம்பிட்ட தானே என்று கேட்க…
ஆமாம் என்று சூர்யா தலையாட்டியவன் மீராவை பார்த்து மீரா நீ சொல்லு நம்ம ரெண்டு பேரையும் இத்தனை நாளா அலையவிட்ட இவங்க ரெண்டு பேரையும் என்ன செய்யலாம் என்றான்.
அண்ணா இவங்க ரெண்டு பேரையும் சும்மா விடக்கூடாது இவங்க ரெண்டு பேரும் கையும் காலையும் கட்டி இந்த கடல்ல தூக்கி போட்டுரலாம். நமக்கு இவங்க தேவையே இல்லை என்று மீரா சொல்ல…
ஐயோ!!! தங்கச்சி மா இவங்க ரெண்டு பேரையும் கடலை தூக்கி போட்டுட்டா அப்புறம் நீயும் நானும் என்ன பண்றது? என்று கேட்க…
அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லன்னா நம்ம ரெண்டு பேரையும் வெறுப்பேத்த தானே இவங்க இப்படி பண்ணுனாங்க இவங்க இருந்தா என்ன கேடுகெட்டு போனா நமக்கு என்ன நம்ம இவங்க ரெண்டு பேரையும் லவ் பண்ணினா அப்பவும் இதே மாதிரி தான் ஏதாவது செஞ்சு நம்மள வெறுப்பேத்திட்டு இருப்பாங்க…
ஆனா இவங்க ரெண்டு பேரையும் இங்கேயே போட்டு தள்ளிட்டு தடையை தாளிச்சிட்டு நம்ம ரெண்டு பேர் இங்கிருந்து போயிடலாம் என்று சொல்ல…
ஆமா மீரா நீ சொல்றதும் சரிதான் என்று சொல்லி திரும்பி இளாவையும் விஷாலையும் பார்க்க…
இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட விஷாலும் இளாவும் எங்கே இப்போது இவர்கள் இருவர் கையிலும் மாட்டிக் கொண்டால் தாங்கள் அவ்வளவுதான் என்று புரிந்து கொண்டவர்கள் அங்கிருந்து ஒரே ஓட்டமாக கிளம்ப….
டேய் விஷால் ஒழுங்கா நில்லுடா… என் கையில நீ மாட்ன மவனே சட்னி தான் என்று சொல்லி மீரா விஷாலை துரத்த…
ஏய்…இளா ஒழுங்கா அங்கு ஏன் நில்லு… நானா வந்து புடிச்சு உன்ன பிடிச்சி என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ஒழுங்கா நீயே என் பக்கத்துல வந்துரு என்று சொல்லிக் கொண்டு அவளை துரத்தி ஓட…
போடா சூர்யா மாமா… உன் கையில மாட்டி அடிவாங்க நான் என்ன லூசா முடியாது போ.. என்று இளா ஓட….
ஏய்…ஒழுங்கா நில்லுடி என்று துரத்திக் கொண்டே சூர்யா இளாவின் பின்னால் ஓடவும், மீரா விஷாலின் பின்னால் ஓடவும். பீச்சில் அமர்ந்து இருந்த மற்ற காதல் ஜோடிகள் இவர்கள் இவர்கள் நால்வரும் இதுவரை பேசியதெல்லாம் கேட்டு வயிறு குலுங்க சிரிக்க… அந்த இடமே கடல் அலை சத்தத்தோடு அவர்களின் சிரிப்பலையும் சேர்ந்து கொண்டது.
EPISODE 44
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
மயோ உடைய பைனான்ஸ் பிசினஸ் ஏற்கனவே பெரிய அளவில் நடந்து கொண்டிருக்க இப்போது சின்னுவும் அவளுடன் சேர்ந்து கொண்டதால் மயோவின் பிசினஸ் முன்பை விட மிகவும் விரிவடைந்து பிரபலமாக ஆனது.
மிகவும் பிரபலமான நபர்களுக்கு கூட மிகவும் அவசர தேவை என்றால் மயோவில் பினான்ஸ் கம்பெனி வைத்தால் நாடுகிறார்கள்.
முதலில் சிறிய வட்டத்தின் ஆரம்பத்திருந்த மயோ அவளுடைய செல்வாக்கையும் அந்தஸ்தையும் பயன்படுத்தி தனது வட்டத்தை பெரிதாக்கி இருந்தால்.
இப்போது சின்னுவுடன் இணைந்த பிறகு லட்சங்களில் போய் கொண்டிருந்த அவளது பிசினஸ் இப்போது கோடிகளை தாண்டி விட்டது கோடிகள் என்றால் பல்லாயிரம் கோடிகள் வரையும் தாண்டிவிட்டது.
தன்னுடைய பிசினஸில் மயோ ஒரு கொள்கை வைத்திருக்கிறாள். தன்னிடம் வந்து யார் பணம் கேட்டாலும் அவர்கள் எந்த காரணத்திற்காக பணம் கேட்கிறார்கள். நல்ல விஷயத்திற்காக செலவழிக்கிறார்களா? இல்லை வேறு எதுவும் தவறான வழிக்கு உபயோகப் படுத்துகிறார்களா?என்பதை முழுவதுமாக ஆராய்ந்து பிறகு மயோ பணம் கொடுப்பாள்.
முதலில் சின்ன கூட அவன் தனியாக தொழில் செய்து கொண்டிருக்கும்போது என்ன ஏது என்றெல்லாம் கேட்டுக் கொள்ள மாட்டான் பணம் கேட்டால் கொடுப்பான் அவன் சொன்ன நேரத்திற்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் இருக்கும் இடம் சென்று கையில் என்ன கிடைக்கிறதோ அதை எடுக்க எடுப்பதும் அவர்களை அடித்து பிடுங்குவதுமாகத்தான் இருந்தால் ஆனால் மயோவிடம் வேலைக்கு வந்த பிறகு அவனும் நிறையவே மாறி இருந்தான்.
அவன் மாறாத இரண்டு விஷயங்கள் என்னவென்றால் ஒன்று ட்ரிங்க்ஸ் சாப்பிடுவது மற்றொன்று பூஜாவை வம்பு இழுப்பது மட்டும்தான் .
எவ்வளவு வேலை செய்தாலும் தினமும் குடித்துவிட்டு பூஜாவிற்கு கால் செய்து சிறிது நேரம் பேசி விட்டு தான் போனை வைப்பான்.
அவள் முதலில் சின்னு பூஜாவிற்கு போன் செய்தால் எடுக்கவே மாட்டாள். போனை சைலன்டில் போட்டு விடுவாள் இல்லையென்றால் ஸ்விட்ச் ஆஃப்பே செய்து விடுவாள் இவன் தொல்லை தாங்காமல்.
ஆனால் அவனும் விடாமல் அவளுக்கு போன் செய்வதே விட்டுவிட்டு எப்படியோ அவளுடைய அம்மா அப்பாவின் போன் நம்பரை கண்டுபிடித்து அவர்களுக்கு இரவு போன் செய்ய ஆரம்பித்தான்.
அவர்கள் வயதானவர்கள் என்பதால் இரவு மாத்திரை போட்டு படுத்து விட இவன் போன் செய்து அவர்கள் இருவரையும் தொந்தரவு செய்கிறான் என்ற ஒரே காரணத்துக்காகத்தான்.
பூஜா எத்தனை மணிக்கு சின்னு போன் செய்தாலும் அட்டென்ட் செய்து காதில் வைத்துவிட்டு படுத்துக்கொள்வாள்.அவன் பாட்டுக்கு பூஜாவிடம் தன் மனதில் உள்ளது எல்லாம் பேசிக் கொண்டிருந்தால் பூஜா தன் கடமையை செவ்வனே செய்து கொண்டிருப்பாள்.
என்னங்க என்ன கடமைன்னு தானே பாக்குறீங்க ராத்திரி ரெண்டு மணிக்கு அவளை போன் பண்ணி டார்ச்சர் பண்ணா அவ என்ன செய்வா அவன பேச விட்டுட்டு இவன் கண்ணை மூடி படுத்து தூங்கிடுவா அதுதாங்க அவளோட முக்கிய கடமை.
இன்றும் அதேபோலத்தான் சின்னு பூஜாவிற்கு கால் செய்திருந்தான். போனை ஆன் செய்து தன் காதில் வைத்துவிட்டு படுத்துக்கொண்டாள் பூஜா.
இன்னைக்கும் நீ வழக்கம் போல போன் ஆன் பண்ணி வச்சிட்டு தூங்க தானே போற… குட்டி என்றான் சின்னு.
வழக்கத்தை விடவும் என்று சின்னவின் குரல் சற்று வித்தியாசமாக இருக்கவும் அவளிடம் பேசுவதா? வேண்டாமா? என்று யோசனை இருந்தவள்.
இல்ல சொல்லு நான் முழிச்சிட்டு தான் இருக்கேன் என்றால் பூஜா.
நான் ஏன் உன்னை பார்த்ததும் பிடிச்சுருச்சுன்னு சொன்னேன்னு உனக்கு தெரியுமா என்றான் சின்னு.
நீ தான் அன்னைக்கே சொன்னியே என்ன பாத்தா சின்ன பொண்ணு மாதிரி அழகா இருக்குன்னு அதனாலதானே நான் என்று கேட்டால் பூஜா.
அது அன்னைக்கு நான் சும்மா உன்னை ஐஸ் வைக்கிறதுக்காக சொன்னேன். நீ அதை நிஜமாவே நான் சொன்னதா நினைச்சு நம்பிட்டியா என்று கேட்டான் சின்னு.
அவன் இப்படிச் சொன்னதும் கடுப்பான பூஜா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க….
என்ன குட்டி என் மேல கோபமா இருக்கியா? நான் உன்னை வெறுப்பேத்த தான் இப்போ சும்மா சொன்னேன். நீ எப்படி இருக்கன்னு நான் உண்மைய சொல்லட்டுமா என்று கேட்டான் சின்னு.
ஒன்னும் தேவை இல்ல… வழக்கம் போல நீ எனக்கு கால் பண்ணி உளறுவதை உளறிட்டு போய் படுத்து தூங்கு எனக்கு தூக்கம் வருது என்று பூஜா சொல்ல …
என்ன குட்டி உன்கிட்ட ஆசையா பேசணும்னு நான் தினமும் போன் பண்றேன் ஆனா நீ ஒரு தடவை கூட நான் சொல்றத காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறியே எனக்கு எவ்வளவு வருத்தமா இருக்கு தெரியுமா?என்றான் சின்னு.
உன்னோட தொல்லை தாங்காம தான் நான் போனையே அட்டென்ட் பண்றேன். இல்லன்னா இந்த நேரத்துக்கு உன் கூட உட்கார்ந்து பேசிட்டு இருக்க நான் என்ன பைத்தியமா? நீ தான் தண்ணி போட்டுட்டு தேவையில்லாம ஏதாவது போன் பண்ணி என்கிட்ட வம்பு வளர்த்துக்கிட்டு இருப்ப…. உன்ன மாதிரியே நானும் இருக்க முடியுமா? என்று கேட்டால் பூஜா.
அப்போ நிஜமாகவே உனக்கு என் கூட பேச விருப்பமே இல்லையா?என்று கேட்டான் சின்னு.
சத்தியமா இல்ல நீ மட்டும் இப்ப போன வச்சேன்னு வை… நான் எப்படி தூங்குவேன் தெரியுமா? என்று பூஜா அவனை வம்பு இழுக்க…
என்ன குட்டி இப்படி எல்லாம் சொல்ற என்று சின்னு மிகவும் கவலையாக பேச…
பின்ன என்னடா நீ என்னைக்கு எனக்கு போன் பண்ண ஆரம்பிச்சியோ அன்னிலிருந்து என் தூக்கமே போயிடுச்சு.
நானும் போனால் போகுதுன்னு எவ்வளவு நாளைக்கு தான் நீ போன் பண்ணும் போதெல்லாம் நேரம் காலம் பார்க்காம போன் பண்ணி காதுல வச்சுக்கிட்டே தூங்குறது எனக்கு கொஞ்சம் நிம்மதி வேண்டாமா? என்று பூஜா சீரியஸாகவே பேச…
பூஜா பேசுவதை கேட்ட சின்னு அவளுக்கு எதுவும் பதில் பேசாமல் அமைதியாக இருக்க…
என்ன இவன் திடீர்னு எதுவும் பேசாம அமைதியாயிட்டான் என்று பூஜா யோசித்துக் கொண்டிருக்க…
பூஜாவின் போன் கட் ஆகுது அவளுக்கு கேட்க காதில் இருந்து போனை எடுத்து பார்க்கவும் சின்னு அவள் போனை கட் செய்து இருந்தான் .
ஒருவேளை நான் சொன்னதுக்கு கோவிச்சுட்டானோ என்று நினைத்து போச்சா பின் போச்சா கோச்சிட்டு போகட்டும் நான் தூங்க வேண்டாமா எப்ப பாரு ராத்திரி ஒரு மணிக்கு ரெண்டு மணிக்கு கால் பண்ணி என்ன இம்சை பண்ண வேண்டியது என்று புலம்பியவள் போனை அருகில் இருந்து டேபிளில் வைத்துவிட்டு இழுத்து போர்த்தி படுத்து நன்றாக உறங்கி விட்டாள்.
❤️
அருள் மயோவின் ஹாஸ்பிடலில் டீனாக பொறுப்பேற்று சில வாரங்கள் ஆகியிருந்தது.
அருள் ஹாஸ்பிடல் டீணாக பதவியேற்றுதில் இருந்து அங்கு வேலை பார்த்த பாஸ்கருக்கு இருந்த பிரபலம் ஆன பெயர் குறைந்துவிட்டது.
அவனால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்ன செய்து அருளை இந்த வேலையில் இருந்து கீழே இருக்கலாம் என்று அருளை கண்காணித்தவாறு இருந்தான் பாஸ்கர்.
நிஷாவிற்கு தண்டனை கொடுக்க போவதாக பார்ட்டியில் சொல்லி இருக்க… மயோவை அருளின் அம்மாவிற்கு உண்மையாக இருப்பதற்காக அவள் வீட்டிலேயே நிஷாவை ஹோம் நற்சாக அப்பாயிண்ட் செய்திருந்தால்.
இந்த வேலை அவளுக்கு பிடிக்காத ஒன்றுதான் என்றாலும் தற்போது அவள் வேலையை காப்பாற்றிக்கொள்ள இதைத் தவிர நிஷாவிற்கு வேறு வாய்ப்பே இல்லை என்பதால் மையம் சொன்னதற்கு சம்மதித்துவிட்டு அமுதாவை பார்த்துக்கொள்ள மயோவில் வீட்டில் தான் இப்போது அமுதாவுடன் ஒரே அறையில் இருக்கிறாள்.
ஏற்கனவே இருந்த இரண்டு நர்சுகளையும் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி விட்டால் மயோ.
நிஷா ஒற்றை ஆளாக இருந்து அமுதாவை கவனித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தால்.
அமுதாவிற்கும் நிஷா தனக்கு துணையாக இங்கே இருந்து வேலை பார்ப்பது பிடிக்கவில்லை.
நீ இருந்தாலும் முதலில் நிஷா தன் மகனுக்கு பார்த்த பெண்ணே அவளைக் கொண்டு வந்து மகன் திருமணம் செய்த வீட்டிலேயே வேலைக்கு வைத்தால் அது தன் மகனுக்கும் சங்கடமாக இருக்கும். இந்தப் பெண்ணுக்கும் கஷ்டமாக இருக்கும் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான் அமுதாவிற்கு இப்படி எண்ணம் தோன்றியது.
அமுதாவும் மயோவிடம் நிறைய முறை எடுத்துக் கூறிவிட்டார்.ஆனால் மயோ இந்த விஷயத்தில் அவர் பேச்சை கேட்பதாக இல்லை.
அத்தை நீங்க சொல்ற காரணம் எனக்கு புரியுது. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு அவ இல்ல, அவளை பத்தி உங்களுக்கு முழுசா தெரியாது அவளோட திமிர அடக்கத்தான் நான் இங்கே உங்களுக்கு துணையா வேலைக்கு வெச்சிருக்கேன்.
நீங்க வேண்டாம்னு சொன்னா அவளை நான் இங்கிருந்து அனுப்ப மாட்டேன். வேலையை விட்டு வெளியே அனுப்பிவிடுவேன் என்று மயோ சொல்ல…
இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நிஷா அமுதாவிடம் வந்தவள். மேடம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நான் அந்த மாதிரி எல்லாம் உங்கள் மகனை திருமணம் செய்ய முடியவில்லை என்று நினைத்து கவலைப்பட மாட்டேன்.
எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம். அதனால தயவு செய்து நீங்க மேடம் கிட்ட எனக்காக பேசுறது விட்டுடுங்க அமுதாவிடம் நிஷா மிகவும் நல்லவள் போல அமுதாவிடம் நடிக்க…
அமுதாவும் நிஷா சொல்வதைக் கேட்டு நம்பிவிட்டார். சரி நிஷா உன் விருப்பம் போலவே நீ எங்க வேலைக்கு இரு ஆனா ரொம்ப கஷ்டப்படத் தேவையில்லை என என் மருமகள் கிட்ட எப்படியாவது பேசி உனக்கு சீக்கிரமா ஹாஸ்பிடல்லிலேயே வேலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்றேன் என்றார்.
சரி மா என்று நிஷா இப்போது வரை அமுதாவிடம் மிகவும் நல்லவள் போல நடித்துக் கொண்டிருக்கிறாள்.
இங்கிருந்தபடியே அவ்வப்போது பாஸ்கருக்கு கால் செய்து ஹாஸ்பிடலில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நிஷா விசாரிக்க தவறுவதில்லை.
❤️
இன்று ஒரு முக்கியமான ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டி இருக்கிறது மதியம் 3 மணி போல இந்த ஆபரேஷன் தொடங்க உள்ளது அதற்காக ஏற்பாடுகள் எல்லாம் அவனுக்கு அசிஸ்டன்டாக இருப்பவர் இருக்கும் டாக்டர்கள் அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர்.
தன்னுடைய வழக்கமாக வரும் அவுட் பேஷண்ட்களை பார்த்துவிட்டு ஆபரேஷன் செய்வதற்காக ஆபரேஷன் தியேட்டர் வந்த அருள் பேஷன்ட் பற்றிய விபரங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை தானே சரி பார்த்து விட்டு தான் ஆபரேஷன் தியேட்டறுக்குள்ளேயே சென்றான்.
ஏழு வயது குழந்தைக்கு இதய கோளாறு என்று அருளிடம் காட்ட வந்த அந்த குழந்தையின் பெற்றோர் தங்களுக்கு ஆபரேஷன் செய்யும் அளவிற்கு வசதி இல்லை வெறும் மருந்து மாத்திரையிலேயே தன் மகளை உயிர் வாழ வைக்க முடியுமா என்று அருளிடம் கேட்க…
குழந்தைக்கு செய்ய வேண்டிய ஆபரேஷன் சென்டர் போல் அனைத்தையும் தங்கள் ஹாஸ்பிடலில் செய்து விடுவார்கள். அதனால் நீங்கள் பணத்தைப் பற்றிய கவலையெல்லாம் பட வேண்டாம் உடனே ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யுங்கள் என்று சொல்லி இருந்தான் அருள்.
அருள் சொன்னது போலவே எந்த ஒரு செலவும் இல்லாமல் அந்த குழந்தைக்கு வெற்றிகரமாக ஆபரேஷனை முடித்து இருந்தான்.
ஆப்ரேஷன் முடித்துவிட்டு வெளியே வந்த அருள் அந்த குழந்தையின் பெற்றோரிடம் ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்து விட்டது இன்னும் மூன்றும் மணி நேரத்தில் உங்கள் மகளை வெளியே ஐ சி யூ வார்டுக்கு அழைத்து வருவார்கள் நீங்கள் அவளை தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல…
இப்படி அருள் செய்யும் ஆபரேஷன்கள் எல்லாமே வெற்றிகரமாக முடிந்து கொண்டிருக்க இதையெல்லாம் பார்த்த பாஸ்கருக்கு தானும் எத்தனையோ முறை ஆப்ரேஷன் செய்திருக்கிறேன்.
ஆனால் ஒருவர் கூட இவனைப் பார்த்து பாராட்டுவது போல தன்னை பாராட்டுவதில்லை என்று பாஸ்கருக்கு வயிற்று எரிச்சலாக இருந்தது.
எப்படியாவது அருள் செய்யும் அடுத்த ஆப்ரேஷனில் ஏதாவது சதி வேலை செய்து அந்த ஆப்ரேஷனில் குளறுபடி ஏற்படும்படி செய்ய வேண்டும் அப்போதுதான் இவனுக்கு எங்கிருக்கும் மதிப்பு குறையும் என்னுடைய அருமையும் எல்லோருக்கும் புரியும் என்று நினைத்துக் கொண்ட பாஸ்கர் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான்.
EPISODE 45
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
சூர்யாவும் இளாவும் ஒருவருக்கு ஒருவர் காதலிக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும் விஷாலுடன் இலா பொய்யாக டேட்டிங் சென்றால் என்பதே தெரிந்ததுமே அவள் மீதும் விஷால் மீதிலும் இருந்த கோபம் முழுவதும் சூர்யாவிற்கு வற்றிவிட்டது.
மீராவும் விஷாலும் விரும்புகிறார்கள் என்பதை தெரிந்ததுமே சூர்யாவிற்கு தன்னுடைய ஆச்சரியத்தை மறைக்க முடியவில்லை.
அன்றில் இருந்து இளாவிடம் பேசும்போது எல்லாம் சூர்யா கேட்டுக்கொண்டு இருந்தான் இவன் எப்படி மீராவை கரெக்ட் பண்ணினான் நாம எல்லாரும் அவன் கூட தானே இருந்தோம் ஆனால் நமக்கு தெரியாம எப்படி மீரா கூட எப்போ பேசினான் என்று கேட்டுக் கொண்டே இருந்தான்.
இளாவை வெளியே அழைத்துக் கொண்டு வந்து அதையேதான் இப்போதும் அவளுடன் பேசிக் கொண்டிருந்தான் சூர்யா.
சூர்யா மாமா உனக்கு அவ்வளவு ஆர்வமா அவங்க ரெண்டு பேரும் எப்படி லவ் பண்ணாங்கன்னு தெரிஞ்சுக்கணும்னா நீ நேரடியா விஷால் கிட்ட இல்லனா மீரா கிட்ட கேளு என்கிட்ட கேட்காதே என்றால் கோபமாக…
இளா பேசியதிலேயே சூர்யாவுக்கு தெரிந்தது அவள் கோபமாக இருக்கிறாள் என்று.
சரி சரி கோபப்படாதே, எதுவும் சாப்பிடுறியா? என்று கேட்டான் சூர்யா.
எனக்கு எதுவும் வேண்டாம் மாமா என்றால் இளா.
இப்படித்தான் சொல்லுவ என்றவன் பேரரை அழைத்து இருவருக்கும் இளாவிற்கு பிடித்த ஒரே ஒரு ஐஸ்கிரீம் கொண்டு வரச் சொன்னான்.
இளாவின் கையைப் பிடித்துக் கொண்டு அவள் கையில் தடவிக் கொண்டே உனக்கு ஏன்?என்ன புடிச்சிருக்கு இளா என்று கேட்டான்.
இது என்ன மாமா கேள்வி.. சின்ன வயசுல இருந்தே நீ என்றால் எனக்கு உயிர் மாமா… ஆனா உனக்கு தான் அது இவ்வளவு நாளா தெரியாம போயிடுச்சு என்று அவன் கையில் அடித்தாள்.
என்னடி பண்றது உன் அருமை எனக்கு இப்போதான் தெரிஞ்சிருக்கு என்று சூர்யா சொல்ல…
ம்கூம்… தெரிஞ்சு என்ன செய்றது ஆனா இன்னும் நீ வாயை திறந்து என்னை பார்த்து ஐ லவ் யூ… என்று சொல்ல மாட்டேங்கறியே என்று மனதில் நினைத்துக் கொண்டால் இளா.
அவள் ஏதோ யோசித்து பாரு அமர்ந்திருப்பதை உணர்ந்த சூர்யா என்ன செல்லக்குட்டி அமைதியா உக்காந்து இருக்க… என்ன யோசிக்கிற என்று கேட்டான்.
ஒன்னும் இல்ல மாமா ஐஸ்கிரீம் உருகிட போகுது சாப்பிடு என்று சொல்லிவிட்டு தன் கிண்ணத்தில் இருந்து ஐஸ்கிரீமை சாப்பிடுவதற்காக ஸ்பூனை உள்ளே நுழைத்தால்.
இளா கிண்ணத்திற்குள் ஸ்பூனை விட்டு ஐஸ்கிரீமை எடுத்து வாயில் வைக்க…
ஐஸ்கிரீமை சப்பியவள் தன் வாயில் ஏதோ தட்டுப்படவும் உன்னை கீழே வைத்துவிட்டு தன் வாயில் தட்டுப்படும் பொருளை வெளியே எடுத்து பார்க்க… அவள் கையில் நீ ஒரு வைர மோதிரம் மின்னியது.
அதைப் பார்த்ததும் ஆச்சரியமாகி எதிரே இருந்த சூர்யாவை இளா பார்க்க…
அவளை பார்த்து மென்மையாக புன்னகைத்தவன் தன் கைகளை தட்ட… ஹோட்டலில் இருந்த இசைக்கலைஞர்கள் வந்து அழகாக ஒரு காதல் கீதத்தை பின்னணியாக வாசிக்க…
இரண்டடுக்கு கேக்கை கொண்டு வந்து அவர்கள் இருவரின் முன்பு டேபிளில் மற்றொருவர் வைத்தார்.
அந்த கேக்கின் மேல் இரு ஜோடிகள் கைகோர்த்து நிற்பது போல இருக்க அவர்களை சுற்றி அழகழகான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அதிலிருந்து ஒரு சிவப்பு ரோஜாவை கையில் எடுத்த சூர்யா தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து இளாவின் முன் ஒற்றை காலை தரையில் முட்டி போட்டு அமர்ந்தவன். இளாவைப் பார்த்து வில் யு மேரி மீ….என்று கேட்டான்.
சூர்யா செய்தது சற்றும் எதிர்பார்க்காத இலா தன்னைச் சுற்றி அவன் ஏற்பாடு செய்திருந்தை பார்த்த இளாவிற்கு பேச வார்த்தைகளை வரவில்லை .
தன் கைகளில் இருந்து மோதிரத்தை பார்த்தவள் அவனைப் பார்த்து அவன் வில் யு மேரி மீ என்று கேட்டதற்கு சம்மதம் என்று தலையாட்டி தன் கையில் இருந்த மோதிரத்தை அவனிடம் நீட்ட…
தன் கையில் இருந்த ரோஜாவை டேபிளில் வைத்த சூர்யா இலாவின் கையில் இருந்த மோதிரத்தை வாங்கி அவளின் மோதிர விரலில் மாட்டிவிட்டு அவள் கையில் முத்தம் வைத்தவன் தரையில் இருந்து எழுந்து ஆர்டர் செய்து இருந்த கேக்கை இருவரும் ஒன்றாக சேர்ந்து வெட்டி அதிலிருந்து கேட்க எடுத்து இருவரும் மாற்றி மாற்றி ஊட்டிக் கொண்டனர்.
இது எல்லாம் முடிந்த பிறகு அவர்களை சுற்றி இருந்தவர்கள் இவர்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டு செல்ல….
சூர்யா இளாவை பார்த்து என்ன?இளா இப்போ நீ ஹேப்பியா? என்று கேட்டான்.
இல்ல ஒரு நிமிடம் யோசித்து விட்டு ஹேப்பி தான் மாமா என்றால்.
இந்த ஒரு நிமிட யோசனையிலேயே சூர்யாவிற்கு நன்றாக தெரிந்தது அவள் வேறு எதையோ எதிர்பார்க்கிறார் என்று.
நான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணதுல உனக்கு சந்தோஷம் இல்லையா இளா என்று கேட்டான்.
என்ன மாமா இப்படி கேக்குற இந்த சர்ப்ரைஸ் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் மாமா என்றாள்.
பொய் சொல்லாத இளா நீ வேற எதுவும் யோசிக்கிற ஆனா என்கிட்ட தான் சொல்ல மாட்டேங்குற என்றான் சூர்யா.
அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா நான் உண்மையாவே நான் ஹேப்பியா தான் இருக்கேன் என்றால் இளா.
நீ எதுக்காக அப்படி இருக்கேன்னு எனக்கு தெரியும் என்றான் சூர்யா.
என்ன மாமா சொல்ற என்று இளா கேட்க…
எழுந்து வந்து அவள் கையைப் பிடித்தவன் கூடவா என்று இளாவை அழைத்து சென்றான்.
அந்த ரெஸ்டாரண்டை ஒட்டி அமைந்திருந்த கடற்கரைக்கு அவளை அழைத்துச் சென்றவன். சிறிது தூரம் மணலில் இளாவின் கைகோர்த்து படி நடந்தவன்.
சற்று தூரத்தில் அழகாக ஒரு மேடை அமைத்து அதில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது அதை பார்த்ததும் இளா சூர்யாவிடம் மாமா அங்கே பாரு அந்த இடம் அழகா இருக்குல்ல என்று சொல்ல…
ம்ம்ம்ம்… ஆமா நிலா அழகாத்தான் இருக்கு சரிப்பா அங்க போகலாம் என்று சொல்லி அவள் கை பிடித்து அந்த மேடைக்கு அழைத்துச் சென்றவன் அவளை மேடை ஏறச் சொல்ல….
மாமா… இங்கே எதுக்கு? நம்ம இது எப்படி இருக்குன்னு பாக்கத்தானே வந்தோம் என்று சொல்ல….
சூர்யா சிரித்துக் கொண்டே அவள் கையை பிடித்து மேடை ஏறியவன்.தன் பாக்கெட்டில் இருந்து ஒரு கிப்ட் பாக்ஸை எடுத்து இளாவிடம் நீட்ட….
அவனை ஆச்சரியமாக பார்த்த இளா, சூர்யா தந்த பரிசு பொருளை கையில் வாங்கியவள் சூர்யாவை பார்க்க….
ம்ம்ம்…என்ன பார்க்கிற அந்த கிஃப்ட் பிரிச்சு பாரு என்றான்.
சரி என்று சிரித்தவளாக தலையாட்டி விட்டு அந்த பரிசு பொருளை திறந்து பார்க்க… அதில் அழகான ஒரு வைர பெண்டன்ட்டுடன் கூடிய செயின் இருந்தது. அதை பார்த்த இளா செயினை கையில் எடுத்து அந்த செயினை பார்க்க….
அந்த வைர பெண்டன்ட் வட்ட வடிவில் இருக்க அதற்கு நடுவில் எஸ் என்று எழுதி அந்த எழுத்தை இரண்டாக பிரிப்பதுபோல ஐ என்று நடுவில் எழுதியிருந்தது. {$} இந்த சிம்பல் போல இந்த செயினில் சூர்யாவின் பெயரில் உள்ள முதல் எழுத்தையும், இளாவின் பெயரில் உள்ள முதல் எழுத்தையும் ஒன்றாக இணைக்கும்படி அமெரிக்க நாணயத்தை குறிக்கும் சிம்பிள் போல அதில் எழுதி இருந்தது அதை பார்த்த இளா சந்தோசமாகி இந்த டாலர் ரொம்ப அழகா இருக்கு என்று அவளிடம் அதை காட்ட…
ஆமாம் அதனாலதான் இந்த டாலரை நானே டிசைன் பண்ணி அதை செய்ய சொல்லி உனக்காக வாங்கிட்டு வந்தேன் உனக்கு பிடிச்சிருக்கா என்று கேட்டான்.
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு மாமா என்று சந்தோஷத்தில் அவனே சிரித்து முகமாக இளா பார்க்க…
அவள் கையில் இருந்த செயினை வாங்கி இளாவை திரும்பி நிற்க வைத்து அவள் கழுத்தில் அந்த செயினை மாட்டி விட்டவன் தண்ணி பார்க்கும் போது இளாவை திருப்பியவன்.
அவள் நெற்றியில் காதலாக முத்தம் வைக்க அவன் எதிரே நின்றிருந்த இல்லா கண்கள் மூடி அதை முழுமையாக ஏற்றுக் கொண்டால்.
இளா அப்படியே நிற்பதை பார்த்தவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு… அவள் கண்கள் இரண்டில் முத்தம் வைத்தவன் அப்படியே கீழே குனிந்து அவள் இதழில் தன். இதழை ஒற்றி எடுக்க….
தன் இதழ்களில் சூர்யா முத்தம் வைத்ததும் தன் கண்களை மெல்ல திறந்து சூர்யாவை இளா பார்க்க…
” I LOVE U MY SOUL “என்றான் சூர்யா.
இதற்காகத்தான்.. இந்த நொடிக்காகத்தான்.. இந்த நாளிற்காகத்தான்…..இந்த வார்த்தைக்காக தான்….இளா இத்தனை நாட்கள் காத்திருந்தாள்.
சற்று நேரத்திற்கு முன்பு கூட இளா ரெஸ்டாரன்டில் வைத்து இதையே தான் தன் மனதில் நினைத்திருந்தால். சூர்யா சொன்ன இந்த வார்த்தையை கேட்டதும் இளாவின் முகம் மிகவும் சந்தோசமாகி பிரகாசமானது.
இதை பார்த்த சூர்யா…. கொஞ்ச நேரம் முன்னாடி நான் உன்னை ப்ரொபோஸ் பண்ணப்ப கூட நீ இவ்வளவு சந்தோசமா இல்ல ஆனா உன்கிட்ட நான் இப்போ ஐ லவ் யூ சொன்னதும் இவ்வளவு சந்தோசப்படுற இது தெரிந்திருந்தால் நான் முதலிலேயே இந்த வார்த்தையை சொல்லி இருப்பேனே என்றால் சூர்யா.
அதே சந்தோஷத்தோடு சூர்யாவை பார்த்து சிரித்த இளா… ஏட்டி அவன் இதழில் அழுந்த ஒரு முத்தத்தை வைத்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி கீழே ஓடியவள்.
ஓடிக்கொண்டே சூர்யாவை பார்த்து அது சொன்னா உனக்கு புரியாது மாமா என்று சொல்லிவிட்டு அவன் கைகளில் சிக்காமல் அங்கிருந்து ஓடினாள்.
அவள் இப்படி தனக்கு திடீரென்று முத்தம் வைத்துவிட்டு அங்கிருந்து ஓடுகால் என்று எதிர்பார்க்காத சூர்யா ஆச்சரியமானவன் சிரித்துக் கொண்டே அவள் பின்னால் அவளை பிடிக்க ஓடியவன் ஏ இளா ஓடாத நில்லுடி… என்று சொல்லிக் கொண்டே அவளை துரத்திக் கொண்டு ஓடினான்.
சூர்யாவின் கைகளில் சிக்கி விடக்கூடாது என்று இளா வேகமாக அவன் தன் பின்னால் வருகிறான் என்று பார்த்துக் கொண்டு ஓட…
அப்போது யார் மீது மோதி ஓடிய வேகத்தில் மோதியதால் நிலை தடுமாறி கடற்கரை மணலில் கீழே பொத்தென்று விழ…
அவள் பின்னால் சிரித்துக் கொண்டே ஓடிவந்த சூர்யா அவள் யார் மீதும் மோதி கீழே விழுந்ததை பார்த்தவன் அவள் மோதிய நபரை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியாகி உறைந்து போய் நின்றான்.
EPISODE 46
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
சூர்யாவின் கைகளில் சிக்கி விடக்கூடாது என்று இளா வேகமாக அவன் தன் பின்னால் வருகிறான் என்று பார்த்து சிரித்துக் கொண்டே ஓட…
அப்போது யார் மீதோ ஓடிய வேகத்தில் மோதியதால் நிலை தடுமாறி கடற்கரை மணலில் கீழே பொத்தென்று விழுந்தால்.
அவள் பின்னால் சிரித்துக் கொண்டே இளாவை தூரத்திக்கொண்டு ஓடி வந்த சூர்யா அவள் யார் மீதோ மோதி கீழே விழுந்ததை பார்த்தவன்.
அவள் மோதிய நபரை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியாகி உறைந்து போய் நின்றான்.
இளாவின் அருகில் கொடூரமாக சிரித்துக் கொண்டு ராகுல் நின்றிருந்தான்.
அவனைப் பார்த்த சூர்யாவிற்கு இவன் எதற்கு இங்கே வந்திருக்கிறான் என்று இளாவின் அருகில் செல்ல போக…
அப்போது பின்னால் இருந்து யாரோ சூர்யாவின் தலையில் கட்டையால் அடிக்க நொடியில் அப்படியே மயங்கி சரிந்து தரையில் விழுந்தான்.
சூர்யாவை அடித்ததை பார்த்ததும் மணலில் விழுந்த இளா பதறி அடித்துக் கொண்டு சூர்யா மாமா…. என்று கத்திக்கொண்டே எழுந்து அவனிடம் செல்ல போக….
அவள் முடியை கொத்தாக பிடித்து தன் அருகில் இழுத்து நிறுத்திய ராகுல் சூர்யாவை அடித்த வருணை பார்த்து இன்னும் என்னடா அங்கேயே நின்னுட்டு இருக்க வா போகலாம் வந்து வேலை முடிஞ்சுது என்று சொல்லி நிலாவையும் முடியை பிடித்து தரதரவென அவளை இழுத்துக் கொண்டு ராகுலும் அவர்களுடன் சேர்ந்து வரணும் ராகுலின் காரில் ஏறி சென்றனர்.
நீண்ட நேரம் ஆகியும் இளா என்னும் வீட்டுக்கு வராமல் போகவே அவள் எப்படியும் சூரிய உடன் தான் இருப்பாள் என்று நினைத்த செழியன் சூர்யாவிற்கு போன் செய்ய….
சூர்யாவின் போன் முழுவதுமாக ரிங்காகி கட்டானது. இளாவும் போன் எடுக்கவில்லை சூர்யாவும் போன் எடுக்கவில்லை என்றதும் செழியனுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.
உடனே தன்னுடைய கார்ட்ஸ்களை அழைத்த செழியன் இளாவிற்கும் சூர்யாவிற்கும் என்ன ஆனது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தனக்கு வேண்டும் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தவர்.
எதற்கும் சூரியாவின் வீட்டிற்கு கால் செய்யலாம் என்று தேன்மொழிக்கு கால் செய்ய அவரும் இங்கே இருவரும் வரவில்லை என்று சொல்லிவிட…
செழியனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மீராவிடம் கேட்டால் தெரியும் என்று அவள் அறைக்கு செழியன் செல்ல…
மீரா நன்றாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தால். மீராவை எழுப்ப மனமில்லாமல் அவள் அறையை விட்டு வந்த சொழியன் மயோவிற்கு கால் செய்தார்.
அவளிடம் விவரம் கூறி விழாவிற்கும் சூர்யாவிற்கும் போன் செய்தால் இருவருமே போன் எடுக்கவில்லை எங்கு சென்றிருக்கிறார்கள் என்றும் புரியவில்லை அவர்கள் வீட்டுக்கும் செல்லவில்லை என்று தேன்மொழியும் சொல்லி விட்டாள் என்ற செழியன்.
எனக்கு ரொம்ப பயமா இருக்கு மாயோள் சூர்யாவுக்கும், இளாவிற்கும் எதுவும் ஆயிருக்கும்ன்னு தோணுது என்றார் செழியன் மிகவும் வருத்தமாக .
தாத்தா நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் நடந்திருக்காது நீங்க கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க நான் அவங்க எங்க இருக்காங்கன்னு கொஞ்ச நேரத்துல பாத்துட்டு உங்களுக்கு கால் பண்றேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தால் மயோ.
போனை வைத்துவிட்டு மயோ யோசனையாக அமர்ந்திருக்க… அப்போது மயோவிடம் கலெக்ஷன் ஆன பணத்தைப் பற்றிய விபரங்களை சொல்ல உள்ளே வந்த சின்னு மயோ ஏதோ யோசனையாக அமர்ந்திருப்பதை பார்த்தவன்.
மேடம்….என்று அழைத்தான்.
யோசனையுடனே சின்னுவை திரும்பி பார்த்து மயோ என்ன? என்று கேட்க…
என்ன ஆச்சு மேடம் ஏதோ யோசனை எல்லாம் இருக்கீங்க என்றான் சின்னு.
என்னோட தங்கச்சியும், அவளை கல்யாணம் பண்ணிக்க போற என் அத்தை பையனும் எங்க இருக்காங்கன்னு தெரியல. அவங்க ரெண்டு பேருக்கு போன் பண்ணினாலும் போன் எடுக்க மாட்டேங்கறாங்க என்றால் மயோ.
அட எதுக்கு மேடம் இவ்வளவு பீல் பண்றீங்க சின்னஞ்சிறுசுக தனியா எங்கேயும் எதுவும் ஒன்னா ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருப்பாங்களா இருக்கும்.
நீங்க போன் பண்ண நேரத்துல ரொம்ப பிசியா இருந்திருப்பார்களோ என்னவோ… இதுக்கு எதுக்கு இவ்வளவு பீல் பண்ணிட்டு இருக்கீங்க என்றான் சின்னு.
முதல்ல இந்த மாதிரி பேசுறது நிப்பாட்டு என்று அவனை முறைத்தவள் அவங்க ரெண்டு பேரும் அப்படி கிடையாது என்றால் மயோ.
சாரி மேடம் நான் எதுவும் ரொம்ப பெரிய இடம் கொஞ்சம் அப்படி இப்படி இருப்பாங்கன்னு நினைச்சு அப்படி சொல்லிட்டேன் மன்னிச்சுக்கோங்க…. என்றான் சின்னு.
மீண்டும் அவனை மையம் முறைக்க சாரி சாரி மேடம் இந்த வாய் இருக்கே என்று தன் வாயிலையே இரண்டு அடி போட்டுக் கொண்டவன் அவங்கள கடைசியா யாராவது பார்த்ததுன்னு உங்ககிட்ட சொன்னாங்களா என்று கேட்டான் சின்னு.
அவங்க ரெண்டு பேரையும் கடைசியா பீச்ல வச்சு தான் பார்த்திருக்காங்க.அங்க வச்சு சூர்யா இளாவுக்கு ப்ரொபோஸ் பண்ணி இருக்கான்.
இப்போ உங்க ஆளுங்க எல்லாம் எங்க இருக்காங்க என்று கேட்டான் சின்னு.
இளாவுடைய பிரண்ட்ஸ் வீட்ல… சூரியாவோட ஃபிரண்ட்ஸ் சூர்யா போற இடம் எல்லாம் தேட சொல்லி இருக்கேன் என்று மயோ சொல்ல.
சரி அவங்க கடைசியா போன பீச்சுக்கு யாரும் போய் பார்த்தார்களா என்று கேட்டான் சின்னு.
அவங்கதான் அங்கு இருந்து கிளம்பிட்டதா சொன்னாங்களே அதனால நான் அங்க யாரையும் அனுப்பல என்றால் மயோ.
சரி என் கூட வாங்க நம்ம ரெண்டு பேரும் நேரா அந்த பீச்சுக்கு போகலாம் என்றான் சின்னு.
மயோ அவனை புரியாமல் பார்க்க… அவங்க ரெண்டு பேரும் அங்கிருந்து போயிட்டு தான் சொன்னீங்க எதுல போனாங்க எப்படி போனாங்கன்னு எந்த விபரமும் தெரியாது இல்லையா அதை நம்மளே நேரில் போய் விசாரிச்சு பார்த்து தெரிஞ்சுக்கலாம் வாங்க என்று. மயோவை அழைக்க….
சரி என்று விட்டு மயோ கிளம்ப போக… அப்போது பூஜா அவர்கள் அறைக்குள் வர மயோ பூஜாவையும் தன்னுடன் வருமாறு அழைத்துக் கொண்டு சின்னு உடன் பீச்சுக்கு சென்றால்.
சூர்யாவையும் இளாவையும் கடைசியாக பார்த்த இடத்திற்கு மூவரும் செல்ல… சின்னு சென்று அங்கே இருந்த சின்ன சின்ன கடைகளை எல்லாம் விசாரிக்க ஆரம்பித்தான் பூஜாவும் அவர்களோடு சேர்ந்து அங்கிருந்த ரெஸ்டாரண்டுளில் சென்று விசாரித்துக் கொண்டிருக்க…
கடற்கரை மணலில் படுத்திருந்த ஒரு முதியவரிடம் சென்று சின்னு தன் மொபைலில் இருந்த சூர்யா இளாவின் போட்டோவை காட்டி அவரிடம் விசாரிக்க…
அவர்கள் இருவரையும் அந்த முதியவர் பார்த்ததாக சொன்னவர் பின் சொன்னார் மயோவும் பூஜாவும் அருகில் விசாரித்துவிட்டு சின்னுவை தேடிக்கொண்டு வர….
அவன் ஒரு முதியவரிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த அவன் அருகில் வரவும் அந்த முதியவர் சூர்யாவையும் இளாவையும் பார்த்ததாக சொல்வதைக் கேட்ட இருவரும் தங்கள் முகத்தை ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்துக் கொண்டு முதியவர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று ஆர்வமாக கேட்க…
அந்த பொண்ணும் பையனும் சிரிச்சு பேசிக்கிட்டே கைகோர்த்துக்கொண்டு அங்கே நடந்து போனாங்க… அவங்க ரெண்டு பேரும் ஏதோ பேசி அந்த மேடை மேலே ஏறி நின்னு அந்த பையன் ஒரு மோதிரம் எடுத்து அந்த பொண்ணு கையில் போட்டு விட்டான்.
மறுபடியும் ரெண்டு பேரும் ஏதோ சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க…. திடீர்னு அந்த பொண்ணு இந்த மேடையில் இருந்து குதிச்சு ஓட ஆரம்பிச்சிடுச்சு அந்த பையனும் அந்த பொண்ணு துரத்திக்கிட்டே ஓடினான்.
பின்னாடி ஓடி வந்த அந்த பையனை திரும்பி பார்த்துகிட்டு ஓடுனா அந்த பொண்ணு போய் யார் மேலயோ மோதி மணல்ல விழுந்துடுச்சு.
அந்தப் பொண்ணு துரத்திகிட்டு வந்து பையனை அவன் பின்னாடி வந்து யாரோ ஒரு கட்டையால் தைலையில அடிக்க அந்த பையன் அங்கே மயக்கம் போட்டு விழுந்துட்டான்.
அந்த பொண்ணு மோதி விழுந்த ஆளு அந்த பொண்ணை முடியை புடிச்சு தரதரன்னு இழுத்துட்டு போனான்.அந்த பையனை கட்டையால் அடிச்ச ஆளும் oஅவன் கூட சேர்ந்து அந்த பொண்ணு இழுத்துட்டு போய் காரில் ஏத்தி அங்கிருந்து கிளம்பி போயிட்டாங்க என்றார் அந்த முதியவர்.
அவர் சொல்வதைக் கேட்டு மயோவிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. என் தங்கையை யாரோ கடத்திக்கொண்டு சென்றிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட மயோ பிறகு சூர்யாவிற்கு என்ன ஆனது என்று தெரியாமல் அந்த பெரியவரிடம்.
தாத்தா ஒரு ஆள் கட்டையால் அடிச்சு இந்த பையன் மயக்கம் போட்டு விழுந்துட்டான்னு சொன்னீங்களே அவன் என்ன ஆனான் என்று கேட்க…
கொஞ்ச நேரம் கழிச்சு அந்த ஆளு மயக்கம் போட்டு விழுந்தத பாத்து இங்க வந்த நாலு அஞ்சு பசங்க அவனை தூக்கிட்டு போனாங்க. அவனை அநேகமா இங்கே ஏதாவது ஆஸ்பத்திரியில் தான் சேர்த்து இருப்பாங்க என்று அந்த முதியவர் சொன்னார்.
அந்த முறையை முதியவர் செய்த உதவிக்கு நன்றி சொன்ன மயோ தன் ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு கற்றை 500 ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவரிடம் கொடுத்து இதை உங்க செலவுக்கு வச்சுக்கோங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அவள் இவ்வளவு பணம் தன் கையில் கொடுத்துவிட்டு போவாள் என்று அந்த முதியவர் எதிர்பார்க்கவில்லை அவர் அதிர்ச்சியாக அந்த பணக்கட்டையும் செல்லும் மயோவையும் பார்த்தவர் அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்தினார்.
அவள் பின்னாலேயே சென்ற சின்னு என்ன மேடம் சாதாரணமா ஒரு 500 ரூபாய் கட்ட தூக்கி அந்த கிழவன் கிட்ட கொடுத்துட்டீங்க என்றான்.
ஏன் உனக்கு அதுல என்ன கஷ்டம் உன் பணத்தையா தூக்கி அந்த தாத்தா கிட்ட கொடுத்தா அவளோட பணத்தை தானே கொடுத்தா என்று கேட்டால் பூஜா.
ஹலோ பூஜா மேடம் நான் உங்ககிட்ட பேசல நீங்க உங்க மேடம் கூட வந்தீங்கன்னா அந்த வேலையை மட்டும் பாருங்க வினா என்கிட்ட பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க என்று சின்ன அவளிடம் கடுப்பாக பேசினான்.
அவனே என்ன ஆச்சு இவனுக்கு என்பது போல பார்த்துவிட்டு போச்சா மயோ உடன் நடக்க… சின்னு அவர்கள் இருவரையும் பார்த்து நைட்டு ரொம்ப நேரம் ஆயிடுச்சு பொண்ணுங்க நீங்க ரெண்டு பேரும் தனியா இங்கே சுத்த வேண்டாம்.
நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க… நான் போய் பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடல்ல விசாரிச்சுட்டு வரேன் அந்த சூர்யா சார் எங்கயும் அட்மிட் பண்ணி இருப்பாங்களா என்று சின்னு சொன்னான்.
எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல நாங்களும் வரோம் என்று சொல்லிவிட்டு மயோ அவனுடன் செல்ல…
அதானே இந்தம்மா இன்னிக்கி சொல்லி என் கேட்டிருக்கு என்று நினைத்துக் கொண்டவன் நான் காரை எடுக்கப் போக அப்போது மயோவின் போன் இருக்கு அருள் அழைத்து இருந்தான்.
இவ்வளவு நேரம் மையோ அருளுக்குத்தான் விஷயத்தை சொல்ல அவனுடன் பேச அவன் போன் இருக்கு கால் செய்தால் ஆனால் அவள் அழைத்த கால்களை எல்லாம் அருள் எடுக்காமல் போகவே அவன் எதுவும் ஹாஸ்பிடல் பிஸியாக இருப்பான் இந்த நேரத்தில் அவனுடன் சொல்ல வேண்டாம் என்று விட்டுவிட்டால்.
இப்போது அருளே அவளுக்கு கால் செய்யவும் போனை அவசரமாக எடுத்து காதில் வைத்த மயோ ஹலோ…என்று சொல்ல…
ஹலோ மயோ நீ எங்க இருக்க இப்போ என்று பதட்டமாக பேசினான் அருள்.
ஏன் அருள் ரொம்ப பதட்டமா பேசுற என்ன ஆச்சு என்று கேட்டால் மயோ.
அவன் ஒரு இடத்தை சொல்லி…நீ முதல்ல நான் சொன்ன இடத்துக்கு உடனே கிளம்பி வா…. சீக்கிரமா வா சொல்ல …
ஏன் அருள் என்ன ஆச்சு ஏன் இவ்வளவு பதட்டமா பேசுற முதல்ல என்னன்னு சொல்லு என்று மயோ கேட்க..
என்னை நீ நேரில் வா நான் எல்லா விஷயமும் சொல்றேன் நான் கார் ஓட்டிட்டு இருக்கேன் என்னால அவசரத்தில் தெளிவா பேச முடியாது நீ சீக்கிரம் நான் சொன்ன இடத்துக்கு வா என்று சொல்லிவிட்டு போனை வைத்தான் அருள்.
மயோ திரும்பி சின்னுவை பார்க்க… மயோ போனை ஸ்பீக்கரில் போட்டு தான் அருளுடன் பேசினாள். சின்னுவும் அருள் சொன்னதை கேட்டவன் காரை ஸ்டார்ட் செய்து புயல் வேகத்தில் அருள் சொன்ன இடத்திற்கு சீரிப்பாய்ந்தான்.
EPISODE 47
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
இளாவையும் சூர்யாவையும் தேடி சின்னு மயோ, பூஜா கடற்கரைக்கு சென்று இருக்க அங்கிருந்த முதியவர் சூர்யாவை அடித்துவிட்டு, இளாவை இரு ஆண்கள் கடத்தி சென்றதாக கூறினார்.
அவர்களைத் தேட சென்ற போது அருள் மயோவிற்கு கால் செய்து ஒரு இடத்தை சொல்லி உடனே அவளை அங்கு வர சொன்னான்.
அருள் சொன்ன இடத்திற்கு சின்னு மயோவையும் பூஜாவையும் அழைத்துக் கொண்டு செல்ல…
அவன் சொன்ன இடத்திற்கு வந்த மூவருமே காரை நிறுத்திவிட்டு அந்த இடத்தை பார்க்க….
சிட்டியின் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த ஒரு பெரிய காடு அது….ஆள் அரவமற்ற அந்த இடத்தில் வந்து காரை நிறுத்திய சின்னு மயோவை பார்த்து மேடம் நீங்க சொன்ன இடம் இதுதானா? நல்லா தெரியுமா? என்று கேட்டான் சின்னு .
மயோ மீண்டும் தன் மொபைலில் அருள் அனுப்பியிருந்த லொகேஷனை பார்த்துவிட்டு இந்த இடம் தான் என்று சொல்லி காரை விட்டு கீழே இறங்கினாள்
பூஜாவும் அவளோடு சேர்த்து இறங்க…
காரை ஆப் செய்துவிட்டு கீழே இறங்கிய சின்னு மேடம் எதுக்கும் சார் கிட்ட ஒரு வாட்டி போன் பண்ணி கேளுங்க….இந்த இடம் தானான்னு இங்கு ஒன்றுமே இல்லையே என்று சுற்றும் முற்றும் பார்த்து சின்னு சொல்ல…
மயோ அருளிர்க்கு அழைக்க போனை எடுக்க… சரியாக அப்போது அருள் அவளுக்கு கால் செய்தான்.
அவசரமாக அருளின் போனை அட்டென்ட் செய்த மயோ இது என்ன இடம் அருள் இங்கே எதுக்கு என்ன வரச் சொன்ன என்று மயோ புரியாமல் கேட்க…
மயோ சீக்கிரமா உள்ளே வா…என்னால ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க முடியாது என்று அருள் கத்த….
அந்தப் பக்கம் அவன் யாரையோ அடிப்பது மயோவிற்கு நன்றாக கேட்டது. அருள் என்ன ஆச்சு ஏன்? ஒரே சத்தமா இருக்கு உன் குரல் ஏன்? இப்படி இருக்கு என்று கேட்டாள்.
அதெல்லாம் விளக்கி சொல்ல எனக்கு இப்ப நேரம் இல்ல நீ சீக்கிரமா உள்ளே வா… என்று உன் அருள் கத்த…
அருள் இது காடு இந்த இடத்தில நான் எங்கே உள்ள வராது என்று அருளிடம் புரியாமல் கேட்டாள் மயோ.
அப்போது சின்னு மேடம் என்று மயோவை அழைக்க…அவனை திரும்பிப் பார்த்தவள் அவன் அந்த காட்டிற்குள் ஒரு பாதை சொல்வதை காட்டி அங்கே ஒரு கட்டிடம் இருக்கு என்று சொன்னான்.
சரி அருள் நான் வரேன் என்று போனை கட் செய்த மயோ பூஜாவிடம் திரும்பி, பூஜா நீ எங்க கூட வரவேண்டாம்.நீ காருக்குள்ள லாக் பண்ணிட்டு இரு…யாரு வந்து உன்கிட்ட எது கேட்டாலும் பேசினாலும் காரை விட்டு வெளியே வராதே என்று சொன்ன மயோ.
நாங்க இப்போ உள்ள போறோம். நாங்க ரெண்டு பேரும் சரியா ஒரு மணி நேரம் கழிச்சு வெளியே வரவில்லை என்றால் உடனே நீ போலீசுக்கு கால் பண்ணிடு என்று சொல்லிவிட்டு சின்னுவை அழைத்துக் கொண்டு மயோ உள்ளே என் செல்லப் போக….
மேடம் ஒரு நிமிஷம் என்ற சின்னு தன் கார் கதவை திறந்து சீட்டிற்கு கீழ் இருந்த இரண்டு துப்பாக்கியை எடுத்து அவளிடம் நீட்டி….
இது உங்க பிரண்டு கிட்ட கொடுத்து பத்திரமா இருக்க சொல்லுங்க என்று சொன்னவன் தன் இடுப்பில் இருந்த துப்பாக்கி எடுத்துக்கொண்டு முன்னே நடக்க….
மயோ தன் கையில் இருந்த துப்பாக்கியை பூஜாவிடம் கொடுத்து இதை எப்படி யூஸ் பண்ணனும் உனக்கு தெரியும் தானே என்று கேட்க…
தெரியும் நீ தான் எனக்கு ட்ரெயின் பண்ணி இருக்கியே என்று சொன்ன பூஜா அவளிடம் துப்பாக்கி வாங்கிக் கொண்டு காருக்குள் அமர்ந்து காரை லாக் செய்து கொள்ள…
மயோவும் சின்னுவும் அருள் சொன்ன இடத்திற்கு வேகமாக விரைந்தனர்.
சின்னு காட்டிய வழியை தாண்டி உள்ளே செல்ல அங்கே ஒரு பாழ் அடைந்த பெரிய கட்டிடம் ஒன்று இருந்தது.
இருவரும் வேகமாக அந்த கட்டிடத்திற்கு அருகில் விரைந்து செல்ல அந்த கட்டிடத்தில் இருந்த பெரிய கேட் ஏதோ பெரியதாக மோதி உடைந்து கிடந்ததை பார்த்துக் கொண்டே அதை தாண்டி உள்ளே செல்ல அங்கே சூர்யாவின் கார் நின்று கொண்டு இருந்தது.
அது நின்று இருந்த விதத்தை பார்த்தாலே அந்த காரைக் கொண்டுதான் மோதி இந்த பில்டிங்கின் கேட்டை உடைத்து உள்ளே சென்று இருக்கிறார்கள் என்று புரிந்தது.
சூர்யாவின் கார் கதவுகள் எல்லாம் திறந்தபடி இருக்க… கார் ஸ்டார்ட் செய்ய பட்டு அப்படியே இருக்க… அதை பார்த்த மயோவிற்கு அதிலிருந்து அவர்கள் எவ்வளவு பரபரப்பாக உள்ளே சென்று இருப்பார்கள் என்பது புரிந்தது.
மயோவும் சின்னுவும் இருவரும் காரை பார்த்துவிட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க…
இருவருக்கும் இப்போது அங்கு இருக்கும் நிலை புரிய சின்னு தலையை ஆட்டிவிட்டு உள்ளே செல்ல மயோ அவன் பின்னே சென்றாள்.
உள்ளே இருவரும் செல்லப் போக….அதன் வாயிலில் சில அடியார்கள் குத்துயீரும் கொலை உயிருமாக தரையில் விழுந்து கிடந்தனர்.
இவர்களெல்லாம் அடித்து போட்டு விட்டு தான் சூர்யாவும் அருளும் உள்ளே சென்று இருக்க வேண்டும் என்று யூகித்துக் கொண்டு சின்னுவும் மயோவும் கைகளில் துப்பாக்கியை ஏந்தியபடி உள்ளே செல்ல தரையில் படுத்திருந்த ஒருவன் மயோவின் காலை பிடித்து இழுக்க….
அவனிடம் இருந்து தன் காலை பிரிக்க மயோ முயற்சிக்க அவன் விடாமல் காலை இருக்கமாக பிடிக்கவும். அவன் பிடித்த காலை தரையில் ஊன்றி மற்றொரு ஹில்ஸ் காலால் ஓங்கி அவன் தலையில் உதைக்க அவள் அடித்த வேகத்தில் அவன் தலையில் இருந்து ரத்தம் பொலபொலவென வர அப்படியே மயங்கி தரையில் சரிந்தான்.
அதை பார்த்த சின்னுவிற்க்கு ஒரு நிமிடம் அப்படியே அதிர்ந்து போய் விட்டது. என்ன இந்த. மேடம் இவ்வளவு வெறியா அடிக்குது…. இதை தெரியாம இந்த மேடத்தை என்ன எல்லாம் பேசிட்டேன் என்று நினைத்துக்கொண்டே மயோவை பார்க்க…
அவளை மாட்டேரு ஆள் உள்ளே செல்ல விடாமல் தடுக்க பார்க்க….மயோவிற்கு சண்டை போடத் தெரியுமா என்பது போல யோசித்தவன் இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை என்று வேகமாக உள்ளே சென்றான் சின்னு.
கதவைத் தாண்டி துப்பாக்கி ஏந்தப்படியே இருவரும் உள்ளே செல்ல அங்கே ஹாலில் அருளை நான்கைந்து ரவுடிகள் அவனை அடித்துக்கொண்டிருக்க…. அவர்களையெல்லாம் சமாளித்தபடி சூர்யாவை பார்த்து சூர்யா இளா எங்க இருக்கான்னு தேடு இவங்களை எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.
அருள் சூர்யாவை அழைத்த திசையை சின்னமும் மயோவும் திரும்பி பார்க்க… தலையில் பெரிய கட்டுடன் சூரியா பரபரப்பாக அங்கிருந்த ஒவ்வொரு அறையாக இளா எங்கிருக்கிறாள் என்று தேடிக்கொண்டே சென்றவன் பிறகு மாடி ஏறி சென்று கொண்டிருந்தான்.
அதை பார்த்த சின்னமும் மயோவும் துரிதமாக செயல்பட ஆரம்பித்தனர். அருளை சுற்றி வளைத்து அடித்துக் கொண்டிருந்த ரௌடிகளை அவர்கள் நெற்றிப் போட்டிலேயே மயோ சுட… மயூவின் துப்பாக்கி சத்தம் கேட்கவும் வேறு சில ரவுடிகள் இவர்களை நோக்கி இவர்களை தடுக்க வர அவர்களையெல்லாம் ஆச்சுன்னு மையவும் அடித்து அடித்து கை கால்களை உடைத்து அவர்களை விலக்கிவிட்டு அருளிடம் வந்த மயோ.
சின்னுவிடம் இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் நீ சூர்யாவோட மேல போ
… அங்கே எப்படி நிலவரம் என்று தெரியாது என்று சொல்லி சின்னுவை சூர்யாவுடன் மேலே அனுப்பிய அருளை திரும்பி பார்க்க….
அப்போது இரண்டு ரவுடிகள் அருளை இரு பக்கமும் பிடித்திருக்க…. மற்றொருவன் கையில் கத்தியோடு அருளை குத்துவதற்கு அவன வயிற்றுக்கு நேராக கையை ஓங்க… அதை பார்த்து அடுத்த நிமிடமே மயோத் தன் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவன் கையிலே சுட்டாள்.
அவன் கையில் சுட்டதில் அவன் கையில் இருந்த கத்தி தெறித்து கீழே விழ….அவன் கையில் காயம் ஆகி ரத்த வெள்ளமாக இருந்தது.அதே கையோடு அவன் மயோவை அடிக்க அந்த ரௌடி வர…
அவன் அடிக்க வந்த கையை பிடித்தவள் மற்றொரு கையால் துப்பாக்கியின் பின்புறமாக அவன் தலையிலேயே திரும்பத் திரும்ப அடிக்க அவன் அப்படியே மயக்கம் போட்டு கீழே விழுந்தால
இதை பார்த்த அருளை பிடித்திருந்த இரண்டு ரவுடிகளும் ஒருவன் மையோவை தாக்க வர…
அவனை பார்த்த மயோ அவனை சுடுவதற்காக துப்பாக்கியை உயர்த்தியவள் பிறகு இவனுக்காக எதற்கு இந்த குண்டு வேஸ்ட் செய்யணும் என்று நினைத்து துப்பாக்கியின் பாக்கெட்டில் வைத்துவிட்டு அவன் வந்து மறுபடியும் தன் காலை ஒரு சுழட்டு சுழற்றி அவன் வயிற்றில் உதைக்க அந்த இடத்திலிருந்து பறந்து போய் அங்கு இருந்த ஒரு டேபிள் மீது விழுந்தால் சுக்குநூறாக உடைந்தது அவனும் அப்படியே மயங்கி தரையில் சரிந்தான்.
டேய் மேலே சென்ற சூர்யாவும் சின்னுவும் அங்கிருந்து ஒரு அரை ஒன்று விடாமல் தேட அங்கேயும் இளாவைக் காணவில்லை.
இந்த கட்டிடத்தில் தான் இருப்பதாக சொல்லி தானே தங்களை இங்கே வர வைத்தான் அந்த ராகுல்.
அவன் சொன்னதை வைத்து தானே அருளும் சூர்யாவும் இங்கே வந்தனர். அப்படி இருக்க இங்கே இல்லாமல் எங்கே சென்று இருப்பார்கள் என்று யோசித்தவாறு சூர்யா கீழே வந்தவன் அவர்களிடம் இலா இங்கே இல்லை என்று சொல்ல…
இந்த.நேரத்தில் அருளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தவனை அருள் கழுத்தைப் பிடித்து அப்படியே தள்ளிக் கொண்டு போய் சுவற்றில் அடித்து நிறுத்தியவன் சொல்லுடா இளாவை கடத்திட்டு வந்த ராகுலும் வருணும் எங்கே… அவங்க இந்த பில்டிங்கில் தானே இருக்காங்க… எங்க இருக்காங்க என்று கேட்க…
அவன் கழுத்தை நெரித்துக் கொண்டு அருள் இளா எங்கே அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று கேட்க…
எ… எனக்கு தெரியாது என்று அந்த ரவுடி உண்மையை கூற மறுக்க….
அவன் அருகில் நெருங்கி வந்த மயோ அவன் கையைப் பிடித்து அவன் உள்ளங்கையில் துப்பாக்கியால் சுட்டவள் இப்ப சொல்லு இளாவை எங்கு மறைச்சு வச்சிருக்கீங்க என்று கேட்க….
அவன் வழியில் கதறியபடியே அங்கிருந்த ஒரு சுவற்றை காட்ட… அந்த இடத்தை பார்த்த சூர்யாவும் மற்றவர்களும் குழப்பத்தில் சுருக்கி அவனை திரும்பி பார்க்க…
அதுக்குள்ள போனா இன்னொரு இடம் வரும் அங்கதான் அந்த பொண்ண அடிச்சு வச்சிருக்காங்க என்றான் அந்த ரவுடி சொல்லிவிட்டு தரையில். மயங்கி சரிந்தான்..
அந்த சுவற்றை நோக்கி செல்ல அதை எப்படி திறப்பது என்று தெரியாமல் பதட்டமாக அந்த சுவற்றுக்கு அருகில் சென்று உள்ளே செல்ல எதுவும் வழி இருக்கிறதா என்று கைகளால் தொட்டு தடவி பார்த்துக் கொண்டிருந்தான் அருளும் சூர்யாவும்.
பார்த்துக் கொண்டிருந்த சின்னுவோ ஹலோ பாஸ் என்ன பண்ணிட்டு இருக்கீங்க நகருங்க என்று சொல்ல…
என்ன சின்ன பண்ற இதுக்குள்ள தானே ஏதோ இடம் இருக்கு அங்க தானே இல்லாத அந்த ரவுடி சொன்னான் என்றும் அயோ கேட்க…
தெரியுது மேடம் அதுக்காக தான் சொன்னேன் இவங்க ரெண்டு பேரையும் முதல்ல நகரச் சொல்லுங்க என்று சொல்ல மயோ அவர்கள் இருவரையும் பார்க்க இருவரும் அந்த சுவற்றை விட்டு சற்று விலகி நின்றனர்.
அங்க நிக்காதீங்க பாஸ் என் பின்னாடி வாங்க என்றான் சின்னு.
சூர்யாவும் அருளும் அவனை புரியாமல் பார்த்தபடி அந்த சுவற்றில் இருந்து நகர்ந்து 10 அடி தள்ளி நின்றிருந்த சின்ன்னுவை பார்தேப்படி பின் பின்னால் வந்து நிற்க…
அவர்களைப் பார்த்து ஒரு மார்க்கமாக சிரித்த சின்னு,வேகமாக அந்த சுவற்றுக்கு அருகில் சென்றவன் தன் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்தான்.
அதை எடுத்து சுவற்றில் தன் கையில் இருந்த பட்டன் போன்று இருந்த ஒன்றை ஒட்டியவன். அதில் இருக்கும் சுவிட்சை ஆன் செய்தவிட்டு கையில் இருந்த ஒரு சிறிய ரிமோட்டை சுவற்றில் சிகப்பு நிறமாக எரிய ஆரம்பித்தது இருந்ததை பார்த்த சின்னு வேகமாக அந்த சோற்று விட்டு பின்னால் ஓடி வந்த சின்னு இவர்கள் மூவரையும் இன்னும் பின்னால் தள்ளி நிற்கச் சொல்ல அவர்கள் இது ஏதோ விபரீதமாக இருக்கிறது என்று நினைத் நினைத்துக் கொண்டு அவள் பின்னால் நகர ..நகர அடுத்த நொடி அந்த சுவர் சக்கல் சுக்கலாக வெடித்து சிதறியது.
சின்னு பாக்கெட்டில் இருந்து எடுத்து சுவற்றில் ஒட்டிய பட்டன்கள் எல்லாம் மினி டைம் பாம்கள்.அதையெல்லாம் ஒட்டி வைத்துவிட்டு தன் கையில் இருந்த ரிமோட்டால் அதை ஆன் செய்தது தான் தாமதம் அந்த சுவர் சுக்கலாக உடைந்தான்
இப்படி ஒரு விஷயம் இருக்கும் என்று இப்போதுதான் மூவருக்குமே தெரியும் அவனை சாதாரண ரவுடி என்றுதான் இத்தனை நாள் அனைவரும் நினைத்து இருந்தனர்.
அவன் ஆச்சர்யமாக ñbbbமூவரும் பார்த்து நின்றிருக்க.. என்னை இப்படியே பார்த்துட்டு எவ்வளவு நேரம் நிக்க போறீங்க வாங்க போய் சின்ன பாப்பாவை காப்பாத்தலாம் என்று சொல்லிவிட்டு சின்னி அந்த உடைந்த சுக்கலாக உடைந்த சுவற்றைத் தாண்டி அந்த அங்கே இருந்த ஒரு பெரிய அறையை பார்த்தவன் உள்ளே செல்ல….
அவன் பின்னால் மூவரும் சென்றனர் அந்த அறைக்கதவு ஒரே உதையில் உதைத்து திறந்த சின்னு உள்ளே சென்று பார்க்க… அந்த அறை காலியாக இருந்தது.
சுவற்றின் பின்னால் ஒரு அறை இருக்கிறது அதுவும் காலியாக இருக்கிறது என்று உருவம் நொடிப்பொழுதில் யோசித்த சின்னு வேகமாக அந்த அறையை ஒரு முறை சுற்றி வந்தவன் அந்த அறையில் வெறும் சோபாவும் சேரும் மட்டுமே இருக்க…
அதை சின்னு வேகமாக சென்று அங்கிருந்து சோபாக்களை அகற்ற இவர்கள் எதுவும் புரியாமல் sinnubmvxsv பார்க்க என்ன பார்க்கிறீங்க இது எல்லாத்தையும் சீக்கிரமா நகர்த்துங்க என்று சொல்ல…
அவனிடம் ஏன்? எதற்கு! என்று கேட்காமல் வேகமாக சுற்றி இருந்த சோபாக்கள் டேபிள் சேர் என அனைத்தையும் அகற்றியவர்கள் கீழே ஒரு பெரிய கார்பெட் இருந்தது அந்த
கார்பெட்டை வேகமாக இழுத்த சின்னு பார்க்க???¿ அங்கே கீழே ஒரு அறை இருந்தது தரையில்.
இதை பார்த்தது சின்னுவை தவிற அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர்.
EPISODE 48
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
கதவை தகர்த்து எரிந்து சின்னு உள்ளே செல்ல… அவன் பின்னால் மயோ அருள் சூர்யா மூவரும் சென்றனர்.
அங்கு இருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல அங்கே வெறும் காலி இடமாக வெறும் சோபாவும் டேபிள் மட்டுமே இருந்தது.
சின்னுவை தவிர அந்த அறையில் ஒருவருமே இல்லாததை கண்டு மூவரும் அதிர்ந்தனர்.
அந்த அறைக்குள் வந்ததிலிருந்து சின்னம் மட்டும் அந்த அறையை சுற்றி நோட்டமிட்டு கொண்டிருந்தான். அங்கே வேறு ஏதோ கதவுகளோ அல்லது வேறு அறையோ இருக்கும் இடமே தெரியவில்லை.
வேறு எதுவும் அரங்கிருக்கிறதா என்று சின்னு அறை முழுதும் நோட்டமிட்டவன் அங்கு டேபிளும் சோபாவும் தவிர வேற எதுவுமே இல்லை.
திடீரென்று யோசனை வந்தவனாக அங்கிருக்கும் சோபாக்களை நகர்த்த ஆரம்பித்தான் சின்னு அவனை புரியாமல் மூவரும் பார்த்திருக்க அவர்களை பார்த்து என்ன நான் ஒருத்தனை எல்லா வேலையும் செய்யணுமா வாங்க வந்து நீங்கலும் ஹெல்ப் பண்ணுங்க என்று சொல்ல…
மூவரும் சேர்ந்து அங்கிருக்கும் டேபிளையும் சோபாவையும் நகர்த்த சின்னுவிற்க்கு உதவி செய்தனர்.
டேபிலையும் சோபாவையும் நகர்த்திய பிறகு அதற்க்கு கீழே விரிக்கப்பட்டு இருந்த விரிப்பை வேகமாக சின்னு இழுக்க…
தரையில் ஒரு மரத்தினால் ஆன கதவு ஒன்று இருந்தது.அதை வேகமாக சின்னு திறக்க… அதனுடன் கீழே செல்வதற்கு படிகள் அமைந்து இருந்தது.
கண்டிப்பாக இந்த அறையில் தான் இளா இருக்க வேண்டும் என்று உறுதியாக அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது.
கீழே செல்லலாம் என்று சின்னு படிகளில் இறங்க போக… அவனை தடுத்த சூர்யா நான் முதல்ல போறேன் என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் வேகமாக படிகளில் இறங்கி கீழே இறங்கினான்.
கீழே இறங்கிய சூர்யா அங்கே கண்ட காட்சியில் அப்படியே உரைந்து போய் நின்றுவிட்டான்.
சூர்யாவும் மற்றவர்களும் இந்த அறையை கண்டுபிடிப்பதற்கு முன்….
கீழே அண்டர் கிரௌண்டில் இருக்கும் அறை சவுண்ட் ப்ரூப் கொண்டது. வெளியே என்னவ்டி நடக்கிறது என்ற சத்தம் உள்ளே கேட்கது… அதே போல. ஆட்கள் உள்ளிருக்கும் சத்தம் வெளியே இருப்பவர்களுக்கும் தெரியாது.
இளாவை கடத்திக் கொண்டு வந்த ராகுலும் வருணும் அவளை இந்த அண்டர் கிரௌண்டில் இருக்கும் அறைக்கு தான் இழுத்து வந்து இருந்தனர்.
இளாவை பிளாக் மெயில் செய்தி அவளை திருமணம் செய்து கொள்ளவே ராகுல் வருணின் உதவியோடு இளாவை இங்கு தூக்கி வந்து அடைத்து வைத்து இருந்தான்.
இளாவை இங்கே பாதுகாக்க சொல்லி வருணை காவலுக்கு வைத்துவிட்டு தான் நினைத்த விஷயம் முடியும். வரை தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ராகுல் தன் ஆஃபிஸிற்கு சென்றுவிட்டு இருந்தான்.
அந்த இடைப்பட்ட நேரத்தில் ஜெயிலில் இருந்து வந்திருந்ததில் இருந்த வருண் மயோவின் மீது கொலை வெறியில் இருந்த வருண். அங்கே இருந்த மதுவை குடித்துக் கொண்டு மயோவை பழி வாங்க யோசித்துக் கொண்டு இருந்தான்.அவளை பழிவாங்குவதற்காக இளாவின் வாழ்க்கையை கெடுக்க எண்ணியவன்.
தனியாக இருந்த இளாவை மானபங்கப்படுத்திக் கொண்டு இருந்தான்.இளா அவனிடம் என்னை விட்டுடு ப்ளீஸ்… உனக்கு என்ன வேணும்னாலும் என் அக்கா கிட்டயும் என் சூர்யா மாமாகிட்டயும் சொல்லி வாங்கி தரேன் ப்ளீஸ் என்று கெஞ்சிக்கொண்டு இருந்தாள்.
எனக்கு வேணுங்கறது இப்போதைக்கு நீயும். உன்னோட உடம்பு மட்டும் தான் என்றவர் அவளை எட்டி பிடிக்க….எங்க டி ஓட பாக்குறே.. என்று சொல்லி அவளைப் பிடித்து அவள் உடைகளை கண் மண் தெரியாமல் கிழித்து வீசினான்.
பாதி உடல் கிழிந்த ஆடையில் வெளியே தெரிய…அவளை அந்த கோலத்தில் பார்த்த வருண் இளாவை பார்த்து…டிரஸ் ஓட பாக்குறதை விட… இப்படி அறையும் குறையுமா தெரியுற உன் உடம்பை பார்க்க எப்படி இருக்கு தெரியுமா என்று சொல்லி அவளை நெருங்க…
ப்ளீஸ்… ப்ளீஸ்… என்னை விட்டுட்டு… உன்னை கெஞ்சி கேக்குறேன் என்று வருணிடம் கெஞ்சிக்கொண்டே… தன் உடலை மறைக்க போராடினாள்.
எதுக்கு வீனா சிரமபட்டுட்டு இருக்க…. இங்கே உன்னை காப்பாத்த யாரும் வர மாட்டாங்க… ஒழுங்கா நாம் சொன்னதை கேட்டு என்னோட ஒத்துழைச்சா… சுமுகமா எல்லாமே முடிஞ்சிரும் இல்லை… முடியாதுன்னு அடம் பிடிச்சா… கடைசில நடக்குற எதுக்கும் நான் பொறுப்பு இல்லை என்றவன்.
போதையில் தட்டுத் தடுமாறி இளாவின் அருகில் வந்த வருண் ஏற்கனவே முதுகில் இருந்த ஆடை முழுவதும் கிழிந்து அவளை உள்ளாடை அப்பட்டமாய் வெளியே தெரிய… குடிப்போதையில் இருந்த வருணிற்கு அவளை அந்த மாதிரி பார்க்கவும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவள் மீது வெறித்தனமாக பாய்ந்து அங்கிருந்த கட்டிலில் இளாவை தள்ளியவன் அவளை உடலில் ஒட்டி இருந்த கிழிந்த மீதி மேல் ஆடையையும் பிடித்து இழுத்து தூர எரிந்தான்.
அவன் அப்டி செய்ததும் இளா மேலாடை முழுவதும் அவள் உடலில் இருந்து கிழித்து எறியப்பட்டு மேலே அணிந்திருந்த உள்ளாடையோடு கட்டிலில் போய் விழுந்தாள்.
சும்மா சொல்லக்கூடாது டி… சும்மா ஜம்முனு இருக்க நீ… என்று தன் கைகளைக் கொண்டு மானத்தை காக்க மறைத்துக் கொண்டு இருந்த மார்பைகளை பார்த்து சொன்ன வருண் இளாவை நெருங்க…
அவனை தன்னை நெருங்க விடாமல் அங்கிருந்து தப்பிக்கலாம் என்று கட்டிலில் இருந்து இளா எழுந்திருக்கப் போக….
அவளை பிடித்து மறுபடியும் கட்டிலில் வருண் தள்ள இளா தடுமாறி மெத்தையில் குப்புற விழுந்தாள்.
அவள் அப்படி விழுந்ததும் நல்லா வசதியா போயிடுச்சு என்று சொல்லிக்கொண்டு அவள் முதுகில் தன் கைகளை மேய விட்டவன் பின்னால் இருந்த அவளின் உள்ளாடை ஹூக்கை கழட்டவும்.
அதிர்ச்சியான இளா வருணிடம் இருந்து எப்படி தன் மானத்தை காத்துக்கொள்ள எண்ணி தன் உள்ளாடையை பிடித்துக்கொண்டு அவனிடம் சிக்கிக் கொள்ளாமல் மெத்தையில் இருந்து எழுந்தவள் வருணை கட்டிலில் தள்ளிவிட்டு அங்கிருந்து ஓட பார்க்க…
இப்படியெவா நீ வெளியே போவ… என்று சொல்லி வருண் சிரித்துக் கொண்டே எழுந்து வந்த வருண் இளாவை பிடித்து அவளை பிண் இருந்து கட்டிக் கொள்ள…
அவன் தன்னை தொட்டதும் அருவருத்த இளா… அவனை தன்னிடம் இருந்து தள்ளி விட்டவள் அங்கே வருண் குடித்து போட்டிருந்த பாட்டிலை உடைத்து நொடியும் தாமதிக்காமல் தன்னை தானே குத்திக் கொண்டாள்.
இதை சற்றும் வருண் எதிர்பார்க்க வில்லை… முதலில் அதிர்ச்சியாக அவளை பார்த்தவன். சிரித்துக் கொண்டே…
நீ செத்துட்டா நான் பாவம் செத்து போய்ட்டாலேன்னு அப்படியே விட்டுட்டு போய்டுவேன்னு நினைச்சியா என்றவன் அவளை கையில் இருந்த பாட்டிலை பிடிங்கி தூர எரிந்தவன் அவளை மார்பகங்களை பார்த்தவாறு அவளிடம் நெருங்க…
இளாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை… பாட்டிலால் வயிற்றில் குத்தியதில் வலி ஒரு பக்கம் அவள் உயிரை பறித்துக் கொண்டு இருந்தது.
மற்றொரு பக்கம் இந்த நிலையில் கூட இரக்கமில்லாமல் தன் கற்பை சூரையாட நினைக்கும் காமுகனை நினைத்து ஒரு புறம் அவள் மனம் வலித்தது.
உடலும் மனமும் ஒன்று சேர்ந்து வலியில் அவளை வாட்டி வதைக்க… உடலில் வருணை எதிர்த்து போராட வாழுவில்லாமல் அவனிடம் இருந்து தன் கர்ப்பை பாதுகாக்க… போராடிக் கொண்டு இருந்தாள்.
தன்னை கட்டிக்கொண்டு நின்று இருந்த வருணை தன்னிடம் இருந்து உடலெல்லாம் ரத்தம் படிந்த கரையோடு ஒரு கையில் தன் மார்பை மறைத்திருந்த ஒரு கையோடும். மறுபக்கம் வருணை தன்னிடம் இருந்து பிரிக்க மற்றொரு கையால் அவனை விளக்கிக் கொண்டு போராடிக் கொண்டு இருந்தாள்.
மேலே சின்னுவிடம் நான் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு சூர்யா கீழே வர… அவன் பின்னால் மற்றவர்கள் இறங்க வந்த போது…
இளா…. நின்று வருணுடன் போராடிக் கொண்டு இருந்த கோலத்தை பார்த்து தான் அப்படியே உறைந்து போய் பாதி படி இறங்கிய நிலையில் அப்படியே நின்றான்.
இளா கதறிய படி தன் மேல் ஒட்டிக்கொண்டு இருந்த வருணை தன் பலம் மொத்தமும் திரட்டி தன்னிடம் இருந்து வருணை பிரித்தவள் தன் கைகளில் பலம் இல்லாமல் போகவே ஆத்திரத்தோடு அவன் மார்பிலேயே ஓங்கி உதைக்க… வருண் அப்படியே தரையில் போய் விழுந்தான்.
அப்போது தான் சூர்யா இளா இருந்த நிலையை பார்த்தான். அப்படியே உறைந்து போனவன் பின் சுதாரித்துக் கொண்டு தன் இளாவை வேறு யாரும் இந்த நிலையில் பார்த்துவிடக் கூடாது என்று நினைத்தவன் நொடிப்பொழுத்தில் திரும்பி மேலிருந்து கீழே வந்துகொண்டு இருந்த… சின்னுவை மேலே போ… மேல… போ… என்று கத்தி அவன் மார்பில் கைவைத்து மேலே தள்ளியவன்.
அவர்களை உள்ளே வர விடாமல் மீண்டும் கீழே இறங்கியவன் கதவை சாற்ற போக… பின் மேலே நிமிர்ந்து மயோ நீ மட்டும் உள்ளே வா… என்றுவிட்டு வேகமாக கீழே சென்றான்.
கீழே விழுந்த வருண் சுதாரித்து எழுந்து இளாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு இருக்க….
அதை பார்த்துக்கொண்டே வந்த சூர்யா… வந்த வேகத்தில் வருண் மார்பில் ஓங்கி உதய்க்க… சூர்யா உதைத்த வேகத்தில் சுவரில் போய் மோதியவனின் வாயில் இருந்து ரத்தம் தெரிக்க. சரிந்து மயங்கி தரையில் விழுந்தான்.
அவனை அடித்துவிட்டு சூர்யா திரும்பி இளாவை பார்க்க… எங்கே தன்னை இந்த கோலத்தில் சூர்யா தன்னை இந்த கோலத்தில் பார்த்துவிட்டுவனோ என்று பதறிய இளா தன் வயிற்றில் ஒரு கையை வைத்துக் கொண்டு நின்ற இடத்தில் அப்படியே குருகி தரையில் அமர்ந்துவிட…
கீழே வந்த மயோ இளா இருந்த கோலத்தை பார்த்து பதறி அடித்துக் கொண்டு அவளிடம் வந்து இளா… என்று அழைக்க…
மயோவின் குரல் கேட்டதும் நிமிர்ந்து பார்த்த இளா… அக்கா… என்று கதறி அழுத படி வலிக்குது அக்கா… என்று அழற…
அவள் கதறிய குரல் சூர்யாவின் உயிர் வரை செல்ல… வேகமாக அவளை அருகில் வந்தவன் அவள் கையை பிடித்து மேலே தூக்க…
இளா அவனோடு வர மறுக்க…. இளா… என்று கத்திய சூர்யா… தன் சட்டையை கழட்டி அவள் மீது போர்த்தி விட்டவன் அவளை மேலே தூக்க…
இளாவை இந்த நிலையில் பார்த்த மயோ அவளை வயிற்றில் இருந்து ரத்தம் வழிவதை பார்த்த மயோ இதுவரை எதற்கும் கலங்காதவள் இன்று தன் தங்கை இருக்கும் நிலையை பார்த்து நிலைகுழைந்து போனால்.
அவளை தூக்கிக்கொண்டு செல்லும் சூர்யாவை பார்த்துக் கொண்டு நின்று இருந்த மயோ திரும்பி வருணை வெறியோடு தன் கையில் இருந்த துப்பாக்கியால் அவன் உடல் சல்லடை ஆகும் வரை சுட்டு தன் வெறியை தணிக்கை முயன்றால்.
EPISODE 49
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
இளாவிற்கு கடற்கரையில் வைத்து சூர்யா தன் காதலை சொல்லி அவளை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்க… அவனுக்கு தன் காதலை சம்மதம் சொல்லிவிட்டு அவனுடன் விளையாடிக் கொண்டே கடற்கரை மணலில் இளா ஓட…
அப்போது பிரியாவை அடித்துப் போட்டுவிட்டு ராகுலும் வருமும் விழாவை கடத்திச் சென்றுவிட்ட சென்றுவிட….
அவர்களைத் தேடிக் கொண்டு மயவோம் சின்ன அவனுடன் பூஜா மூவரும் கடற்கரைக்கு வந்து விசாரிக்க அப்போது அங்கிருந்த ஒரு பெரியவர் சூர்யாவை அடித்து போட்டுவிட்டு நிலாவை இரண்டு ஆண்கள் தூக்கிக்கொண்டு சென்றதாய் பார்த்ததாக சொல்ல…
அவர்களை தேடி கொண்டு சின்னுவும் மயோவும் கிளம்பலாம் என்று இருக்கும்போது அருள் அவர்களுக்கு கால் செய்து ஒரு இடத்தில் லொகேஷனை அனுப்புவதாக அங்கே உடனே அவர்களை கிளம்பி வர சொல்லி பதட்டமாக போனை வைத்தான் அவன் சொன்ன இடத்திற்கு மயோ பூஜா சின்ன மூவரும் செல்ல…
அருள் அனுப்பிய இட whatsapp லொகேஷனுக்கு மூவரும் வர அங்கே ஒரு பெரிய பாழடைந்த பங்களா இருக்க அதன் முன்பு அருளின் கார் நின்று இருக்கவும் பூஜாவை காரிலேயே பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு அவளிடம் அவளுடைய பாதுகாப்பிற்காக சின்ன கொடுத்த துப்பாக்கி மயூர் அவளிடம் கொடுத்துவிட்டு அந்த பங்களாவிற்குள் சின்னமும் மயோ
வும் செல்ல…
ஏற்கனவே அங்கே வந்து இருந்த அருளும் சூர்யாவும் அங்கே இருந்த ரவுடிகள் எல்லாம் அடித்து போட்டுவிட்டு விழாவை அந்த பங்களா முழுவதும் தேடிக் கொண்டே இருக்க…
ஒரு சின்ன அங்கு இருந்த ஒருவனை அடித்து மிரட்டி அவனை கொன்று விடுவதாக சொல்லி விரட்டியவன் இலா எங்கே என்று கேட்க அவன் அந்த பங்களாவில் இருந்த ஒரு வெற்றி சுவற்றைக் காட்டி அதற்கு பின்னால் ஒரு அறை இருக்கிறது அங்கு தான் நிலாவை கடத்தி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னவன் அப்படியே மயங்கி சின்னு அடித்த அடியில் தரையில் விழுந்தான்.
அந்தக் அந்தச் சுவற்றை தாண்டி எப்படி உள்ளே செல்வது என்று தெரியாமல் மூவரும் வைத்துக் கொண்டிருக்க சின்னு தன் பாக்கெட்டில் இருந்து ஏதோ குட்டி குட்டியாக ஸ்டிக்கர் போல எடுத்தவன் அந்த சுவற்றில் நாலா பக்கமும் ஒட்டியவன் அந்த சுவற்றை விட்டு சில அடி தூரம் பின்னே வந்து தன் கையில் இருந்த பட்டனை ஆன் செய்ய அந்த சுவர் தூள் தூளாக வெடித்து சிதறியது.
சோற்றுக்குப் பின்னால் ஒரு அறை இருக்க அறையை திறந்து கொண்டு மூவரும் உள்ளே நால்வரும் வர அந்த அறையை காலியாக இருக்க அங்கிருந்த பெஞ்ச் சோபாக்களை நகர்த்தி நகர்த்தி விட்டு பார்க்க தரையோடு தரையாக ஒரு கதவு இருந்தது அந்த கதவை திறந்து கொண்டு முதலில் சூரிய உள்ளே செல்ல அங்கே வரும் நிலாவை அரை நிர்வாணமாக ஆக்கி அவளை கற்பழிப்பதற்காக அவளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க தன்னை காத்துக் கொள்வதற்காக இலா அங்கிருந்த பாட்டிலை உடைத்து வருனிடமிருந்து தன் கற்பை காப்பாற்றிக் கொள்வதற்காக தன்னையே குத்திக் கொண்டாள்.
அவள் ஆடை முழுவதும் கிழிந்து இருக்க அவள் போட்டிருந்த உள்ளாடையின் முன்பகுதியை வைத்து தன் மார்பை மறைத்தவாறு இளா சுருண்டு தரையில் விழ….
இவ்வளவு நேரம் இதை பார்த்துக் கொண்டிருந்த சூர்யா மட்டும் கீழே வர தண் கூடவே மயோவை மட்டும். வர சொல்லிவிட்டு பதறி அடித்துக் கொண்டு இளாவின் அருகில் சென்றவன் தன் கோட்டை கழட்டி அவள் மீது போட்டுவிட்டு வருமே சரமாரியாக அடித்தான்.
அதன் பின்பு மயோ வந்தவள் வருணை அடித்து தன் கையில் இருந்த துப்பாக்கியால் தன் தங்கையை இந்த நிலைக்கு ஆளாகிய வருனை சல்லடையாக சுட்டு தன் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முயன்று தோற்றால் கீழே சத்தம் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு சின்னுவும் அருளும் வர…
தரையில் வருண் செத்துக் கிடக்க இளாவோ தன் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியே போனதால் அப்படியே மயங்கி தரையில் சரிந்தாள்.
கண்ணாடி பாட்டிலால் தன் வயிற்றில் குத்திக்கொண்ட இளாவின் வயிற்றிலிருந்து ரத்தம் நிறைய போகவே அவள் உன் கற்பை காப்பாற்றிக் கொள்ள வருனிடம் போராடி பொருந்தி இருக்க அவளை தூக்க சூர்யா கீழே குனிய…
சூர்யா இளாவின் அருகில் குனியவும் அவனைப் பார்த்து கூனைக்குறுகி அவனிடம் ஒதுக்கம் காட்டி திரும்பிக் கொள்ள….
இந்த நிலையிலும் அவள் தன்னிடம் வர மறுப்பதை பார்த்த சூர்யாவிற்கு அவள் மேல் கோபம் தான் வந்தது இளா…. என்று கத்திக்கொண்டே அவள் அருகில் குனிய….
சூர்யா இளாவின் அருகில் செல்லும்போது அவள் உடல் முழுவதும் நடுங்க ஆரம்பித்தது. அதைப் பார்த்து சூர்யாவிற்கு உள்ளுக்குள் வலிக்கத்தான் செய்தது.
சூர்யாவை பார்த்து நடுங்கிக்கொண்டே தரையில் ஒன்றி அமர போக அவள் அழுத்தியதில் வயிற்றில் இருந்த கண்ணாடி மேலும் அவள் வயிற்றுக்குள் ஏற அதன் வலி தாங்காமல் கத்திக்கொண்டே அக்கா வலிக்குது என்று சொல்லிக் கொண்டே இலா மயங்கி விழுந்தால்.
..அதைப் பார்த்து சூர்யா பதறி அடித்தவன் அவளை தன் கைகளில் ஏந்தி அங்கிருந்து வெளியேற…
சின்னுவை இங்கு நடந்த விஷயத்தை வெளியில் வராமல் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு மயோ சூர்யாவின் பின்னால் செல்ல அருளும் அவளோடு சேர்ந்து ஹாஸ்பிடல் இளாவை அழைத்துக் கொண்டு விரைந்தனர்.
இளாவை கடத்தி வைத்திருந்த இடம் சிட்டிக்கு ஒதுக்குப்புறமாக இருக்க அதனால் அவளை அழைத்துக் கொண்டு வந்த சூர்யா அங்கே அருகில் இருந்த ஒரு நல்ல ஹாஸ்பிடலுக்கு அவளை அழைத்துச் சென்று அட்மிட் செய்திருந்தான் .
மூவரும் பதட்டமாக வெளியே இருக்க இளாவிற்கு ஆபரேஷன் உள்ளே நடந்தது. நீண்ட நேரம் ஆகியும் ஆபரேஷன் தியேட்டர் இருந்து ஒருவருமே வராமல் இருக்க
….
மயோ,அருள், சூர்யா மூவருமே ஆப்ரேஷன் தியேட்டருக்கு வெளியில் மிகவும் பதட்டமாக இருந்தனர்.
ஒரு விஷயம் பூஜாவின் மூலம் விஷயம் கேள்விப்பட்டு செழியனும் மீராவும் ஹாஸ்பிடல் வந்து விட்டனர்.
காருக்குள் இருந்தவள் இவர்கள் பதட்டமாக வெளியே செல்வதை பார்த்துவிட்டு தான் செழியனுக்கு கால் செய்து அங்கே நடந்த விஷயங்களை சொல்ல….
அதன் பிறகு தான் அருளுக்கு கால் செய்த செழியன் இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டு நேராக மருத்துவமனைக்கு வந்து விட்டார். அனைவருடன் விஷயம் கேள்விப்பட்டு தேன்மொழியும் கனகவேளும் ஹாஸ்பிடல் வந்து இருந்தனர்.
இதுவரை அமைதியாக இறுக்கமாக இருந்த மயோ தன் தாத்தா ஹாஸ்பிடலுக்குள் வந்து மயோவின் கையைப் பிடித்துக் கொண்டு இளாவிற்கு என்ன ஆனது என்று கேட்டதும் தான் தாமதம்.
அப்படியே வெடித்து சிதறி தாத்தா… என்ற கத்தி அழ ஆரம்பித்தால் மயோ.
அருளுக்கு கூட அவளை இந்த மாதிரி ஒரு நிலையில் இதுவரை பார்த்திடாதவன் அவளின் இந்த முகம் அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.
செய்வது அறியாது அருளும் சூர்யாவும் மயோவை பார்த்துக் கொண்டே இருக்க…
செழியனை கட்டிக்கொண்டு கதறி அழுது கொண்டு இருக்க அவள் முதுகில் கொடுத்த செழியன் மயோவை நார்மலாக்க முயன்றார்.
தன் தாய் தந்தை இறந்ததற்கு பின்பு தேன்மொழியும் கனகவேலம்தான் தன்னையும் தன் தங்கையையும் தங்கள் குழந்தை போலவே அத்தனை பாசத்தையும் கொட்டி பார்த்துக்கொண்டனர் என்னதான் அவர்கள் பார்த்துக் கொண்டாலும் மயோவிற்கு தன் தங்கையின் மேல் எப்போதுமே அதீத பாசம் உண்டு..
அவளை தன் பொக்கிஷம் போலவே மையம் எப்போதுமே பார்த்துக்கொள்வாள் அப்படிப்பட்ட பொக்கிஷத்தை இன்று ஒரு காட்டுமிராண்டி சுக்கல் சுக்களாக கிழித்து எழுந்து அவள் மனதை இவ்வளவு தூரம் புண்படுத்தி இருக்கிறானே என்று நினைக்கும் போது மயோவிற்கு அந்த வழியை தாங்கவே முடியவில்லை.
அனைவரும் அமைதியாக ஆபரேஷன் தியேட்டர் முன்பு நின்று இருக்க கிட்டத்தட்ட மணி நேரம் கழித்து ஆபரேஷன் தியேட்டர் விட்டு வெளியே வந்தார் டாக்டர்.
ஆபரேஷன் தியேட்டரில் இருந்து டாக்டர் வெளியே வரவும் அங்கே குறுக்கும் நடுக்கம் நடந்து கொண்டிருந்த சூர்யா பதறி அடித்துக் கொண்டு டாக்டரிடம் வந்தவன் அவர் கையைப் பிடித்துக் கொண்டு டாக்டர் என் எல்லா இப்போ எப்படி இருக்கா அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லையே அவ நல்லா இருக்காளா அவளுக்கு எந்த ஒரு ஆபத்தும் இப்போது இல்லையே என்று அடுக்கடுக்காக டாக்டரிடம் சூர்யா கேள்விகள் கேட்க….
திடீரென்று சூர்யா இப்படி வந்து பேசியதும் டாக்டருக்கு எந்த கேள்விக்கு பதில் சொல்வது என்று தெரியாமல் சிறிது தடுமாறியவர் பின்பு இவரைப் போலவே எத்தனை பேரை இந்த டாக்டர் கடந்து வந்திருப்பார் அதனால் அவர் சுதாரித்துக் கொண்டவர் சூர்யாவின் கையை பிடித்து தட்டிக் கொடுத்தவர்.
கவலைப்படாதீங்க மிஸ்டர் சூர்யா உள்ளே இருக்க மிஸ் இலா இப்போ ஆபத்து கட்டுத்த தாண்டிட்டாங்க அவங்க வயிற்றுக்குள்ள கண்ணாடி பாட்டிலோட சில்லுகள் நிறைய இருந்தது அதை ரிமூவ் பண்ணி சுத்தமா கிளீன் பண்ணி ஆபரேட் பண்றதுக்கு தான் எங்களுக்கு இவ்வளவு நேரம் ஆகிவிட்டது மற்றபடி அவங்களோட உயிருக்கு ஆபத்து வராமல் நாங்க எங்களால எல்லா விஷயத்தையும் செய்து அவங்கள காப்பாத்திட்டோம்.
அவங்க இன்னும் மயக்கமா இருக்காங்க இன்று ஒரு நாள் முழுவதும் அப்சர்வேஷனில் வைத்துவிட்டு அவரை நார்மல் வாடிற்கு அழைத்து வந்து விடுவார்கள் அதன் பிறகு நீங்கள் இளாவை போய் பார்க்கலாம் என்றார் டாக்டர்.
டாக்டர் இப்போ போய் நான் ஒரே ஒருவாட்டி என் இளாவை பாத்துட்டு வந்துட்டேன் டாக்டர் அவளை நான் எந்த டிஸ்டர்பும் பண்ண மாட்டேன் அவ எப்படி இருக்கான்னு ஒரு ஓரத்தில் நின்னு நான் பார்த்துட்டு வந்துடறேன் ப்ளீஸ் டாக்டர் என்று சூர்யா டாக்டரிடம் கெஞ்ச…
சூர்யாவிடம் சொன்னா புரிஞ்சுக்கோங்க மிஸ்டர் சூர்யா அவர்களுக்கு பண்ணியிருக்கிறது மிகப்பெரிய மேஜர் ஆபரேஷன் அப்படி இருக்கிறப்போ நீங்க உள்ளே போய் அவங்களுக்கு எதுவும் இன்பெக்சன் ஆயிடுச்சுன்னா அப்புறம் அவங்களுக்கு தான் இன்னும் ரிஸ்க்கு இன்னிக்கு ஒரு நாள் பொறுமையா இருங்க நான் உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று நான் சொல்லிட்டேனே நாளைக்கு அவர்களை வார்டுக்கு அழைச்சிட்டு வந்த பிறகு நீங்க அவங்கள போய் பாருங்க அதுவரைக்கும் எல்லாமே டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று சொன்னவர் அங்கிருந்து சென்றார்.
இளாவிற்கு இப்போது எந்த பிரச்சினையும் இல்லை என்று சொன்னது அங்கிருந்து அனைவருக்கும் சற்று ஆறுதலாக இருந்தது..
தன் தாத்தாவையும் மற்றவர்களையும் விட்டுவிட்டு மயோ தன் போனை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடல் விட்டு வெளியே வர ……
அவள் பின்னாலேயே அருளும் மயோவுடன் வந்தான். மையோ முதலில் சின்ன விற்கு தான் கால் செய்தான். அவன் கால் அடித்துக் கொண்டே இருக்க… போனை கட் செய்த மயோ இந்த ராஸ்கலுக்கு போன் எடுக்காம அப்படி என்ன முக்கியமான வேலையா இருக்கும் என்று முழங்கியவள் உடனே பூஜாவிற்கு அழைத்தாள் அவளும் அவனோடு தான் இருப்பாள் என்று அவளுக்கு நன்றாக தெரியும் ஹாஸ்பிடல் வரும்பொழுது பூஜாவை அங்கேயே விட்டுவிட்டு தான் இவர்கள் மூவரும் வந்தனர்.l
EPISODE 50
ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
ஹாச்பிடலில் இருந்து மயோ சின்னுவிற்கு கால் செய்ய…அவன் எடுக்காமல் போகவே அவனை திட்டிக் கொண்டே அவனுடன் தான் பூஜா இருப்பாள் அவளை அங்கேயே விட்டு விட்டு வந்தது நினைவில் வர பூஜாவிற்கும் கால் செய்தால் மயோ.
அனால் அவளது போனும் முழுதாக ரிங் ஆகி கட் ஆனது .
புருவ முடுச்சுகளோடு என் இவர்கள இருவரும் போனை எடுக்கவே இல்லை என்று யோசனையில் மயோ நின்று இருக்க…
அப்போது ஐ சி யு வில் இருந்து ஒரு நுர்சே டாக்டர் என்று கத்தி கொண்டே வெளியே வந்தவர் வெளியே பதட்டமாக அவர் குரல் கேட்டு நின்று இருந்தவர்களை எல்லாம் தாண்டி வேகமாக டாக்டரை அழைக்க சென்றார்.
சென்ற சில நிமிடத்தில் டாக்டர் பதட்டத்தோடு உள்ளே சென்றார்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த இளாவின் குடும்பம் மொத்தமும் பீதியில் நின்று இருந்தது .
அவளுக்கு எதுவும் பிரச்சனையோ …. இப்போது தானே டாக்டர் இளாநன்றாக இருக்கிறாள் என்று சொல்லிவிட்டு சென்றார்.அதற்குள் அவளுக்கு எதுவும் பிரச்சனையோ என்று அனைவரும் பதட்டத்தில் இருக்க…
நீண்ட நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர் இவர்களை எல்லாம் கடந்து செல்ல போக…
தன்னிடம் எதுவும் சொல்லாமல் டாக்டர் செல்கிறார் என்று யோசனையில் சூர்யா அவரிடம் வந்து அவரை மறித்து நின்றவன்.
டாக்டர் என்ன ஆச்சு …என் இளா எப்படி இருக்கிறாள் அவளுக்கு எதுவும் பிரச்சனையா கொஞ்ச நேரத்திற்கு முன் நர்ஸ் உள்ளிருந்து பதட்டமாக உங்களை அழைத்துக் கொண்டு சென்றார் என்று பதட்டமாக கேட்டான் சூர்யா.
மிஸ்டர் சூர்யா நீங்க நினைக்கிற மாதிரி மிஸ் இளாவிற்கு எந்த பிரச்னையும் இல்லை .
ஐ சி யு வில் இளா மட்டும் தான் பேசேன்ட் ஆகா இருக்கிறாரா என்ன …சுமேரு சொல்லி சிரித்தவர்.
உள்ளே ஒரு வயதான நபர் ஒரு கார் அச்சிடேன்ட்டில் இதயத்திற்கு அருகில் ஒரு பெரிய கம்பி ஏறிய நிலையில் அவரை இங்கு கொண்டு வந்து அட்மிட் செய்து இருந்தார்கள்.
அவரை அட்மிட் செய்துவிட்டு அவருடன் வந்த நபர் திடீர் என்று சொல்லாமல் க்கொள்ளாமல் இங்கிருந்து சென்று விட்டார்.
அச்சிடேன்ட் ஆனா அந்த பெரியவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு இதயத்தை உரசிக் கொண்டு அந்த கம்பி குத்தி இருக்கிறது .
அவருக்கு ஆபரேஷன் இந்த நிலையில் செய்தால் மிகவும் ரிஸ்க் ஆகிவிடுமென்று எங்களுடைய சீனியர் டாக்டர் சொல்லிவிட்டார்.
இது மிகவும் சின்ன மருத்துவமனை என்பதால் எங்களிடம் அந்த பேசேன்ட்ட்டை பாத்துருக்கக்க போதுமான கருவிகள் கிடையாது.
வேறு மருத்துவமனைக்கு அனுப்பலாம் என்றால் நோயாளியின் உறவினர்கள் யாரும் இல்லாமல் நாங்களே அவரை எங்கும் அனுப்ப முடியாது .
அந்த நோயாளிதான் இப்பொது ஆபத்து கட்டத்தில் இருக்கிறார்.அவரை உயிரோடு வைத்து இருக்க எங்களால் முடிந்தவரையில் போரடிக்க கொண்டு இருக்கிறோம்.
அவர் இதயத்திற்கு அருகில் குத்திய கம்பி அவர் இதயத்தை அழுத்திக் கொண்டு இருக்க…அவருக்கு மிகவும் மோசமான நிலை ஆகி விட்டது .அவர் இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வருகிறது அந்த எமெர்ஜென்சிக்காக தான் நர்ஸ் என்னை அழைத்தார் என்றார் டாக்டர்.
அவர் பேசியதை எல்லாம் கெடுக்க கொண்டு இருந்த அருள் டாக்டரிடம் நான் அவருடைய ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்க்கலாமா என்று கேட்க…
அருள் தன் பாக்கெட்டில் இருந்து விசிட்டிங் கார்டை எடுத்து கொடுத்து தன்னை அறிமுகம் செய்து கொள்ள…
அவன் பெயரையும் அவன் மருத்துவ துறையில் சமீபமாக வளர்ச்சி அடைந்து வருவதையும் சகா டாக்டர் என்ற முறையில் இளாவிற்கு சிகிச்சை செய்த டாக்டரும் அருளை பற்றி தெரிந்து வைத்து இருந்தவர்.
அருளை இப்பொது நேரிலேயே பார்த்தவர் தன்னுடைய சந்தோசத்தை பகிர்ந்து கொண்டவர் அருளை அழைத்துக் கொண்டு தன் கேபினுக்கு அழைத்து செல்ல…
மயோவிடம் பார்வையாலேயே போய்வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவருடன் கிளம்பினான்..
ஒரு புறம் தன் கணவனின் முன்னேற்றம் நினைத்து மயோ மகிழ்ந்தாலும்…மறுபுறம் தன் தங்கை இந்த நிலையில் இருப்பதாய் தாங்க முடியாமல் பாதை பதைப்போடு எப்போது அவளை பாப்போம் என்று நாளைக்காக காத்திருந்தாள் மயோ.
அங்கே இளாவிற்காக மயோ மட்டும் காத்திருக்கவில்லை இளாவை அந்த கோலத்தில் பார்த்ததில் இருந்து தான் அவளிடம் நெருங்கி சென்ற போது தன்னை நெருங்க விடாமல் இளா பயந்து போனது வரை …
தன் மனக்கண்ணில் அத்தனையையும் ஓட்டிப் பார்த்துக் கொண்டு அவள் தன்னை பார்த்தல் எப்படி நடந்து கொள்வாள் தன்னிடம் பேசுவாலை என்று இளாவை நினைத்து வருந்திய படி சூர்யா நின்று இருந்தான்.
❤️
இங்கு வருணை வெளியில் இருந்த ரௌடுகளுக்கு தெரியாமல் எப்படி அவன் உடலை அப்புறப்படுத்துவது என்று யோசித்த சின்னு..
தான் இருந்த அறையில் வெளியே செல்ல எதுவும் வலி இருக்கிறதா என்று அந்த அரை முழுவதும் ஒரு இந்து இடுக்குஇல்லாமல் தேடிப்பார்த்து சின்னு ..
கடைசியில் பாத்ரூமிற்குள் ஒரே ஒரு வெண்டிலேட்டர் இருப்பது தெரிந்து அதன் வழியே வெளியே செல்ல வலி இருக்கிறதா என்று அங்கிருந்த ஓரு பாக்கெட்டை அடுத்து குப்புற போட்டு அதன் மேல் ஏறி நிடன்று சுற்றிலும் பார்த்தான்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவுமே அவனுக்கு தெறிய வில்லை . யோசனையோடே இறங்க வந்தவன் தூரத்தில் தான் ஒட்டிக் கொண்டு வந்த தன் கார் நின்று இருப்பதாய் பார்த்தவன் அதற்குள் பூஜா அமர்ந்து இருப்பதை பார்த்தான்.
அவளை பார்த்ததும் அவன் முகம் பிரகாசமாக ஆகியது…ஆஹா என் ஆளு தனியா எனக்காக தான் காத்துட்டு இருப்பாள் போலயே என்று நினைத்தவன்.
பின் உடனே ம்ஹும்… அவளுக்கு நான் தொந்தரவாக இருப்பதாக அன்று இரவு நான் ஆவலுடன் போன் பேசும் போது சொன்னாலே …
இப்போது நான் போய் பேசினால் மட்டும் என்ன அப்படியே சந்தோசமாக பேசிவிட போகிறாளோ என்ன என்று நினைத்தவன் கீழே இறங்கி என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
ஐடியா….என்று தன் விரலில் நாடு விரலையில் ஆட்காட்டி விரலையும் சேர்த்து சொடக்கிட்டவன் .தன் மொபைலை எடுத்து பூஜாவிற்கு கால் செய்தான்.
காருக்குள் சற்று பயத்தோடு அமர்ந்து இருந்த பூஜா சின்னுவின் கால் வந்ததும் பதறினாள் பின் சுதாரித்துக் கொண்டு போனை அட்டெண்டட் செய்த பூஜா இன்னும் உள்ளேயென்ன பங்கிட்டு இருக்க..
என்னை இங்கே தனியா விட்டுட்டு எல்லாரும் கிளம்பி போய்ட்டாங்க …
நீ வந்த பிறகு நான் உன்கூட வரலாம்னு காத்துட்டு இருக்கேன் இன்னும் வராம உள்ளே என்ன டா.. பங்கிட்டு இருக்கே என்று கேட்டால் பூஜா.
திமிரை பாரதிய இவளுக்கு நான் இவளை ஆசையா குட்டின்னு கூப்பிட்ட அப்படி எல்லாம் கூப்பிடக்கூடாதுனு என்கிட்டே சண்டைக்கு ஒருவா…
ஆனா இவை மட்டும் என்னை மரியாதையை இல்லாம வாடா.. போடான்னு பேசுறா என்று நினைத்துக்கொண்டு இருக்க…
டேய் எருமை… உன்னை தான் டா…என்ன எதுவும் பேசாம இருக்கே…எதையாவது வாயை திறந்து பேசி தொலையேன் எனக்கு இங்கே தனியா இருக்க பயமா இருக்கு என்று பூஜா புலம்ப…
பூஜா…பூஜா….என்று இந்த பக்கத்தில் இருந்து சின்னு திடீர் என்று காத்த ஆரம்பித்தான்.
அவன் கத்தியதும் பதறிய பூஜா காரில் இருந்து துப்பாக்கியோடு வெளியே வந்தவள் டேய் சின்னு என்னடா ஆச்சு உனக்கு ..ஏன் இப்படி உயிர் போற மாதிரி கத்துற.. என்று பதட்டமாக பூஜா கேட்டால்.
அவள் பதட்டப்படுவதை ஜன்னல் வழியாக பார்த்து சிரித்துக் கொண்டே …பூஜா…அந்த வருண்…வருண்…என்னை கட்டி வெச்சி அடிக்குறான்.
என்னை இவன் கிட்டே மாட்டி விட்டுட்டு உன்னோட பிரிஎண்ட்ஸ் அதான் அந்த சிடுமூஞ்சி பொம்பளை இங்கே இருந்து போய்டுச்சு…
நான் மட்டும் இவன் கிட்டே தனியா மாட்டிகிட்டேன் பூஜா…தயவு செந்துஜூ என்னை வந்து காப்பாத்து பூஜா என்று சின்னு கதற…
அவன் சொன்னதை கேட்டு பூஜாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை …பதட்டமாக தான் நின்று இருந்தத இடத்தில இருந்து எங்கே செல்வது என்று தெரியாமல் பூஜா இங்கும் அங்கும் பார்த்தவாறு ..
டேய் அறிவு கெட்டவனே…நீ எல்லாம் ரௌடியன்னு போய் வெளியே சொல்லிடாதே ..உன்னை போய் நம்பி எவ்வளவு பெரிய வேலையை அந்த மாயோ லூசு கொடுத்து இருக்கா..
நான் அப்பவே சொன்னேன் இவன் நமக்கு வேணாம் டி..ன்னு நான் சொல்லி அவ என்னிக்கு கேட்டு இருக்கா….என்று புலம்பியவள் இப்போ எங்கே டா இருக்கே நீ நான் வந்து உன்னை காப்பாத்துறேன் என்று பூஜா வீரா வேசமாக பேச…
அடி பாதகத்தி!!!! இங்க ஒருத்தன் என்னை காப்பாத்துன்னு தொண்டை தண்ணி வத்த கத்திட்டு இருக்கேன் .
எனக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு கொஞ்சமாவது பாவ படுறாளா பாரேன் .இப்போ கூட என்னை கழுவி ஊத்துறதை மட்டும் மறக்காம செய்யுறா என்று நினைத்தவன்.
இன்னும் இருந்த இடத்தில்ிருந்தே பூஜாவிற்கு எப்படி வரவேண்டும் என்று வழி சொல்ல…
சின்னு நின்றிருந்த பாத்ரூமிற்க்கு வெளியே நின்று கொண்டு பூஜா இப்ப எங்க இருக்க சொல்லு….நான் எப்படி உள்ள வரது என்று கேட்டால்.
சின்னு நீ நின்னுட்டு இருக்குற இடத்துல இருந்து அப்படியே வலது புறம் திரும்பி பாரு அங்கே ஒரு சுவர் இருக்கிறத? என்று கேட்டான் சின்னு.
அவன் சொன்னது போலவே பூஜா திரும்பி பார்க்க…அங்கே ஒரு பெரிய சுவர் ஒன்று இருந்தது.
அதை பல்லாண்டு பார்த்த பூஜா ஆமா இருக்கு இவ்ளோ பெரிய சுவரை தாண்டி குதிச்சு வந்து நான் உன்னை காப்பாத்தணுமா? என்று அலட்சியமாக கேட்டால் பூஜா.
அவள் போன் முகபாபு பாவனைகளை பார்த்தவாறு பாத்ரூமுக்குள் இருந்து அவளிடம் அந்த சுவர இன்னும் நீ தாண்டி வர வேண்டியது இல்ல இந்த சுவரை எப்படியாவது நீ இடிச்சா போதும் மத்தத நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னான் சின்னு.
ஏன்டா நீ நெஜமாவே இதற்கு முன்னாடி ரவுடியா தான் இருந்தியா இவ்வளவு பெரிய சுவற்றை என் ஒருத்தியால எப்படி இடிச்சிட்டு வர முடியும்.
என்னமோ வழியில் குறுக்கே கிடந்த ஒரு கல்லை தூக்கி அந்த பக்கம் போட்டுட்டு வா அப்படின்னு சொல்ற மாதிரி இல்ல இருக்கு உன் பேச்சு என்று கடிந்து கொண்டால் பூஜா.
இப்படி எல்லாம் கேள்வி கேட்டு என்னோட இத்தனை வருஷம் தொழிலையே கேவலப்படுத்துறாளே என்று மனத்திற்குள் புலம்பிய சின்னு.
உன்னால முடியலைன்னா பரவால்ல பூஜா என்று சின்னு சொல்லிக் கொண்டிருக்கும் போது திடீரென ஐயோ….அம்மா…. வலிக்குது அடிக்காத வருண்.
எனக்கு ரொம்ப வலிக்குது தயவு செய்து என்னை எதுவும் பண்ணிடாத… என்று வேண்டுமென்றே சின்னு நடிக்க…
அவன் நடிக்கிறான் என்பது பூஜாவிற்கு தெரியாததால் உண்மையாகவே அவன் வருணிடம் அடி வாங்குகிறான் என்று பதட்டம் அடைந்த பூஜா.
போனில் சின்னு நீ எப்படியாவது கொஞ்ச நேரம் சமாளி….நான் எப்படியாவது இந்த சுவற்றை இடிச்சுக்கிட்டு உள்ள வந்துடுறேன் என்று பூஜா அங்கிருந்து சுவற்றை அடிக்க எதுவும் கிடைக்கிறதா என்று தேட சென்றாள்.
அவள் சுவற்றை இடிக்க ஏதாவது பொருள் கிடைக்குமா என்று இங்கும் அங்கும் பூஜா அழிந்து கொண்டிருப்பதை பாத்ரூம் ஜன்னலில் அதன் கையை ஊன்றி கன்னத்திற்கு முட்டு கொடுத்தவாறு பூஜாவை ரசித்து கொண்டு இருந்தான் சின்னு.
இங்கும் அங்கும் அவன் கண் முன்னாலேயே அலைந்து கொண்டிருந்த பூஜா… திடீரென்று காணாமல் போகவே…
பதட்டம் அடைந்த சின்னு அவள் எங்கே போகச் சென்றார் என்று ஜன்னலில் தனக்கு எட்டிய தூரம் வரை பார்க்க அங்கு எங்குமே பூஜா இல்லை.
ஒருவேளை கட்டிடத்திற்குள் அந்த பக்கம் இருந்த ரவுடிகள் எல்லாம் சேர்ந்து பூஜாவை பிடித்து விட்டார்களோ என்று பயந்தான் சின்னு.
வெளியே தேடியவாறு சின்னு மீண்டும் தன் போனிலிருந்து பூஜாவிற்கு டயல் செய்ய…
அவள் போன் முழுவதுமாக ரிங் ஆகி கட்டானது பூஜா போனை எடுக்கவே இல்லை.
இப்போது உண்மையிலேயே சின்னுவிற்குக்கு மிகவும் பதற்றம் ஆகிப்போனது.
தான் செய்தது தவறு… இப்படிப்பட்ட ஒரு ஆபத்தான இடத்தில் அவளை வைத்து நான் விளையாட கொண்டு இருந்திருக்கிறேன் என்று தன்னைத்தானே நொந்து கொள்ள இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான் சின்னு.
