logo

sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
159
ஆலோனுக்கு தெரியாமல் சத்தம் இல்லாமல் ரூமை விட்டு வெளியே செல்லலாம் என்று வென்மா அவர்கள் இருந்த அறை கதவை திறக்க போக தூக்கத்திலிருந்து கண்விழித்த ஆலோன் வென்மாவிடம் வந்தவன் அவளை குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் போட்டவன்.



அரண்டு விழித்துக் கொண்டிருந்த வென்மாவின் கண்களை பார்த்து அதில் கிறங்கி போனவன் "என்ன baby girl நைட் எல்லாம் என்ன தூங்க விடாம என் கழுத்தை கட்டிக்கிட்டு என் மேல ஏறி டிரைவர்… டிரைவர் ,drive me-ன்னு சொல்லி சவாரி செஞ்சு என்ன கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்க விடவே இல்ல. ஆனா இப்ப என்னை இப்படி பாதியில அம்போன்னு விட்டுட்டு போறியே இது உனக்கே நியாயமா?" என்றான் ஆலோன் .



ஆலோன் சொன்னதை நம்ப முடியாமல் வென்மா அவனை பார்க்க..



"என்ன நான் சொன்னதை கேட்டு உன்னால நம்ப முடியலையா ?"என்றான் .



வென்மாவின் தலை ஆமாம் என்று மேலும் கீழும் ஆட...



"எனக்கும் தான் இன்னமும் நம்ப முடியல இன்னிக்கு நான் உன்ன முதல் முதலாக பார்த்தேனோ அப்போ இருந்து என்னால உன்ன பத்தின நெனப்பு மறக்கவே முடியல . அதைவிட உனக்கு நான் கிஸ் பண்ணின அப்போ .... உன்னோட ஃபர்ஸ்ட் கிஸ் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவனுக்கு தானே சொல்லி என்கிட்ட சண்டை போட்டப்போ எனக்கு கோபம் வரல சந்தோசமா தான் இருந்தது உன்னோட முதல் முத்தம் எனக்கு கிடைத்தது என்று நான் ரொம்ப பெருமை பட்டேன் . ஆனா அதைவிட இப்ப நான் ரொம்ப கர்வமா இருக்கிறது உன்னோட முதல் முறையும் நான் தான்கிறது ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு" என்றான் .



வென்மாவிற்கு அவன் சொல்வதையெல்லாம் கேட்டு என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை அவனே பார்த்துக் கொண்டிருக்க அவள் அருகில் படுத்துக் கொண்டிருந்தவன் வென்மாவின் முகத்தில் ஒற்றை விரலை வைத்து வருடி கொடுத்து அவள் புருவங்கள் மூக்கு உதடு என ஒவ்வொன்றிலும் ஆலோன் முத்தம் வைக்க அவளால் ஏனோ அதை தடுக்க முடியவில்லை.



அவன் சொல்வதையெல்லாம் வென்மா நினைவு படுத்தி பார்க்க முயற்சித்தால் ஆனால் ஏற்கனவே போதை மருந்தின் விளைவாக வென்மாவின் தலை வின்னென்று வலித்துக் கொண்டிருக்க போதாததற்கு ஆலோன் வேறு அவளை விடாமல் கட்டிக்கொண்டு அவளோடு ஒட்டி உரசி கட்டிலில் படுத்திருக்க அவன் சொல்வதை எல்லாம் யோசித்து நினைத்துப் பார்க்கையில் மேலும் அவளுக்கு தலைவலி அதிகமானது. கண்களை இருக்க மூடி தலையை பிடித்துக் கொண்டு "ஆஹ்ஹ்!!!" என்று வலி தாங்காமல் கத்தினாள்.



அவள் தலையை பிடித்துக் கொண்டு கட்டுவதை பார்த்தவனுக்கு அவள் தலைவலி தாங்காமல் சிரமப்படுகிறாள் என்பதை புரிந்தவன் "1 minute baby girl" என்றவன் இன்டர்காமில் அழைத்து hangover soup வென்மாவிற்காக கொண்டுவரச் சொன்னான் .



அவன் இன்னமும் ஆடை இல்லாமல் நின்றிருக்க அதை பார்த்ததும் மீண்டும் கண்களை மூடி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டவள் "ஹேய் தயவுசெய்து கொஞ்சம் டிரஸ் போடுறியா இப்படி என் முன்னாடி டிரஸ் இல்லாம நிக்கறது உனக்கு வெக்கமாவே இல்ல . என்னால இதையெல்லாம் பார்க்க முடியல ப்ளீஸ்.." என்று வென்மா அவனிடம் கெஞ்ச ..



"நல்லா இருக்கே நீ பேசுறது . நான் போட்டிருந்த டிரஸ் எல்லாம் கிழிச்சு எறிஞ்சிட்டு இப்போ ட்ரஸ் போடு டிரஸ் போடுன்னா நான் எதை எடுத்து போட்டுக்கிறது" என்றான் ஆலோன் .



அவன் சொல்வதை எல்லாம் வென்மாவால் நம்ப முடியவில்லை அதிர்ச்சியில் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் அவனைப் அந்த கோலத்தில் பார்க்க முடியாமல் மீண்டும் முகத்தை திருப்பிக் கொண்டு அந்த அறைக்குள் முழுவதும் நோட்டமிட அவன் சொன்னது போல ஆலோன் ஆடைகள் கிழிந்து இங்கு அங்கொன்றுமாக இருந்தது .



வென்மாவிற்கு நேற்று நடந்தது என்ன என்று புரியாமல் தலையே வெடித்துவிடும் போல இருந்தது தலைவலி வேறு ஒரு பக்கம் உயிரை எடுத்துக் கொண்டிருக்க இங்கே ஆலோன் அவளை நேற்று இப்படி நடந்து கொண்டேன் அப்படி நடந்து கொண்டேன் என்று சொல்லிச் சொல்லி அவளை மேலும் வெறுப்பேற்றினான் .



நான் டிரஸ் இல்லாம இருக்கிறது தான் உனக்கு பிரச்சனை அப்படித்தானே பேபி கேர்ள் என்றவன் நீயும் என்ன மாதிரியே ஆகிட்ட இரண்டு பேரும் ஆதாம் ஏவாள் மாதிரி ஃப்ரீயா இருக்கலாமே என்று சொல்லி அவளிடம் நெருங்கி வெண்மா அணிந்திருந்த சட்டையை வேகமாக கழட்டப் போக ..



அதிர்ந்து போன வென்மா அவசரமாக தன் சட்டையை கழட்டிக் கொண்டிருந்தவனின் கையை தட்டி விட்டவள் ஓங்கி பளார் என்று ஆலோனின் கன்னத்தில் அறைந்தாள் .



இவ்வளவு நேரம் பொறுமையாக வென்மாவிடம் பேசிக் கொண்டு இருந்தவன் அவள் அறையவும்

கோபமாக வென்மாவை பார்த்தவன் . கண்களை மூடி மூச்சை உள் இழுத்துக்கொண்டு தன் கோபத்தை தனித்து கண்கள் திறந்து வென்மாவை பார்த்தான் .



அவன் செயலை கண்டு அவன் கோபத்தை கட்டுப்படுத்துகிறான் என்பதை புரிந்து கொண்ட வென்மா பயந்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள் .



"நைட் முழுக்க என்ன விடாமல் கட்டிக்கிட்டு என்னை விட்டு ஒரு இன்ச் கூட இடைவெளி இல்லாம என் கூடவே ஒட்டி இருந்த நீ காலையில இப்படி கோபம் வந்து அடிக்கிற அளவுக்கு என்ன ஆச்சு" என்றான்



" ஐயோ நேத்து நைட் முழுக்க... நேத்து நைட் இப்படி நடந்ததுன்னு மாற்றி மாற்றி சொல்லி என்னை ஏன் குழப்புற .நேத்து என்ன நடந்ததுன்னு எனக்கு கொஞ்சம் கூட ஞாபகம் இல்ல. நீ இப்படி ஒவ்வொன்றையும் சொல்ல சொல்ல எனக்கு இதெல்லாம் பொய்யா இருக்க கூடாதுன்னு தோணுது . அப்படியே நான் உன்கிட்ட அத்துமீறி நடந்துகிட்டு இருந்தா அதுக்கு காரணம் நான் இல்ல நேத்து என்ன நடந்ததுங்கிற ஞாபகமே எனக்கு இல்லாதபோது நான் எப்படி உன்கிட்ட அந்த மாதிரி எல்லாம் நடந்துக்கிட்டேன்னு நீ சொல்ற. நீ சொல்ற எதையும் என்னால நம்ப முடியல" என்றாள் வென்மா.



என்ன பேசுவதும் ஆள் உனக்கு புரிந்தது அவள் போதை மருந்தின் தாக்கத்தால் தான் நேற்று இரவு தன்னிடம் அவ்வளவு நெருக்கமாக இரவு முழுவதும் கட்டிலை பகிர்ந்து கொண்டால் என்பதை உணர்ந்தாலும் அதில் ஒன்று கூடவா அவளுக்கு நினைவில் இல்லை என்று அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது



"இப்போ என்ன உனக்கு நேற்று நைட் நடந்ததெல்லாம் ஞாபகம் வரணும் அவ்வளவுதானே. நான் சொல்றதை கேளு நான் சொன்னதை கேட்ட பிறகும் உனக்கு என் மேல நம்பிக்கை வரலைன்னா இப்பவே இந்த ரூம் விட்டு நீ வெளியே போகலாம்" என்றான் .



அவன் அப்படி என்னதான் சொல்கிறான் என்று கேட்டு தான் பார்ப்போமே என யோசித்த வென்மா ஆலோன் என்ன சொல்ல போகிறான் என்று அவன் முகத்தை பார்த்தவள் அவன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு ஆடை இல்லாமல் அவன் அவள் முன்பு நின்று இருக்க வேகமாக கட்டளை சுற்றி பார்க்க கட்டிலுக்கு கீழே பெட்ஷீட் இருக்க அதை தூக்கி அவன் மீது வீசிவள் "முதல்ல இத கட்டிக்கோ அதுக்கப்புறம் எதுவாயிருந்தாலும் சொல்லு" என்றவள் "பெரிய ஆணழகன் பாரு உடம்பை என் முன்னாடி காட்டிக்கிட்டு இருக்கான். sameless fellow" என்று முனுமுனுத்தாள்.



அது அவன் காதுகளிலும் விழுந்தது அதை கண்டுகொள்ளாதவன் கொடுத்து போர்வையை தன்னிடையில் சுற்றி ஒன்று இரண்டாக கட்டிக் கொண்டவன் வென்மாவின் அருகில் நெருக்கமாக கட்டிலில் அமர அவன் அமர்ந்ததும் சொல்லுங்க அவனை முறைத்தவள் லேசாக பின்னால் நகர்ந்து அமர்ந்தாள்.



"நேற்று நைட் என்னோட கிளப்புக்கு ஒரு கிளையன்ட் மீட் பண்ண அந்த ராஜேஷ் நீயும் இங்கே வந்தீங்க தானே" என்றான் .



"ஆமாம்" என்று தலையாட்டியவள் "இவனுக்கு எப்படி ராஜேஷ் பெயர் தெரியும்" என்று யோசித்துவாரு வென்மா அவனை புரியாமல் பார்த்தாள்
 

Author: sinamikawrites
Article Title: கோவக்காரா 11
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top