logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
பெட்ரூமில் ஏதோ சத்தம் கேட்க தூக்கத்திலிருந்து கண்விழித்த சித்து லைட்டை ஆன் செய்து அறையை நோட்டமிட்டவன் அவன் காலுக்கு கீழே கட்டிலில் அமர்ந்திருந்த ரோஜாவை பார்த்து அதிர்ந்தான்.

போட்டிருந்த போர்வையின் நுனியை ஒரு பக்கம் கையில் பிடித்துக் கொண்டு உடலை குறுக்கே படி குத்து காலிட்டுவாறு அவன் காலுக்கு அடியில் அமர்ந்திருந்தால்

அவளை அங்கு அவன் சற்றும் எதிர்பாராத சித்து எழுந்து அமர்ந்தவன் “ஹே ரோஜா இந்த நேரத்துல இங்க உக்காந்து என்ன பண்ணிட்டு இருக்க தூங்கலையா நீ” என்றான்

“நான் படுத்து தூங்க தான் ட்ரை பண்ணு சின்னையா. நீங்க ஷாப்பிங் போலாம்னு சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாயிடுச்சு. அதனாலதான் தூக்கம் வரலன்னு நெனச்சேன். சரி எப்படியாவது கண்ண மூடி தூங்கலாம்னு லைட் டிவி எல்லாமே ஆஃப் பண்ணிட்டு சோபாவில் படுத்துட்டேன்”

“ ஒரு… ஒரு மணி நேரம் தூங்கிருப்பேன் திடீர்னு நான் படுத்து இருந்த இடத்துல ஏதோ சத்தம் கேட்டது. எனக்கு ரொம்ப பயமாயிடுச்சு அங்க தனியா படுக்கவே ஒரு மாதிரியா இருந்தது. என்ன சத்தம் வந்துச்சுன்னு எழுந்து சுத்தியும் பார்த்தேன். ஆனா எனக்கு எதுவுமே தெரியல அதுக்கு அப்புறம் அங்க படுத்தா தூக்கமே வரல…, அதான் நேரா எந்திரிச்சி இங்க நீங்க இருக்கீங்கன்னு வந்துட்டேன்.° என்றாள்.

“ இங்கதான் வந்தியே என்ன அப்பவே எழுப்பிவிட்டு இருக்கலாம் இல்ல நான் அது என்னன்னு பார்த்திருப்பேனே” என்றான் சித்து.

“ உள்ள வந்து லைட் போட்டு பார்த்தேன் நீங்க ரொம்ப அசந்து தூங்கிட்டு இருந்தீங்க நீங்க வேற அந்த பால்கனியில் இருந்து இந்த பால்கனிக்கு வேற தவி வந்தீங்களா அதுல உங்களுக்கு டயர்டா இருக்கணும்னு நினைச்சு. உங்களை எழுப்பவும் எனக்கு பாவமா இருந்துச்சு. உங்களை ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்னு அமைதியா உங்க கால்கிட்டயே உட்கார்ந்துட்டேன்” என்றாள் ரோஜா.

“ சரி என்ன டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்ச ஓகே தான்.. நீயும் பேசாம இங்க வந்து படுத்து தூங்கிருக்க வேண்டியதுதானே” என்றான்.

“என்ன சின்னையா இப்படி சொல்றீங்க.. உங்க பக்கத்துல நான் எப்படி படுக்க முடியும். அதுவும் நம்ம ரெண்டு பேரும் ஒரே ரூம்ல பக்கத்து பக்கத்தில ஒரே பெட்டில் எப்படி படுத்து தூங்க முடியும்” என்றாள் அவர்கள் இருவருக்கும் கல்யாணம் ஆனதையே மறந்து.

அவள் பேசியதை கேட்டதும் சித்துவிற்கு ரோஜா புரிந்துதான் பேசுகிறாளா என்பது போல இருந்தது அவளை ஒரு முறை அழுத்தமாக பார்த்தவன்.

“உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு அது ஞாபகம் இருக்கா? இல்லையா? பிராக்டிகலி ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ஒரே ரூம்ல தானே படுத்து தூங்குவாங்க. என் பக்கத்துல நீ தூங்கறதுல எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை” என்றான்.

அவன் அப்படி சொன்னதும் ரோஜா தனக்கும் சிந்துவிற்கும் கல்யாணம் ஆனதையே நினைவில் கொள்ளாமல் இவனிடம் இப்படி பேசி விட்டோமே என்று நினைத்து அவனைப் பார்த்தவள்.

சித்து பேசியதற்கு எந்த பதிலும் கூறாமல் கட்டிலில் இருந்து இறங்கியவள் “அந்த சோபா இருக்கு இல்ல நான் அங்க போய் படுத்துகிறேன். நீங்க தூங்குங்க நான் வேணா லைட் ஆஃப் பண்ணிடவா” என்று எதுவுமே தெரியாதபோது போல சித்துவை பார்த்தாள்.

அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த சித்து “லைட்ட நான் ஆஃப் பண்ணிக்கிறேன். முதல்ல ஒரு நிமிஷம் நீங்க வா” என்று அவளை தன்னருகில் அழைத்தான்


“எதுக்கு சின்னையா கூப்பிடுறீங்க என்னன்னு சொல்லுங்க… நான் இங்கிருந்தே கேட்டுகிறேன்” என்று அவன் பக்கம் போகாமல் தள்ளி நின்றே பேசினாள் ரோஜா.

“சரியான உஷார் பார்ட்டியா தான் இருக்கா.. பக்கத்துல வர ஆள பாரு” என்று நினைத்தவன்.

“ கிட்ட வந்தா உன்ன நான் ஒன்னும் கடிச்சு சாப்பிட மாட்டேன் முதல்ல இங்க வா” என்று அவளை அதட்டலாக அழைத்தான்.

அதட்டலில் அவள் நின்றிருந்த இடத்திலிருந்து சில அடிகள் எடுத்து வைத்து சித்துவின் அருகில் வந்து நின்றவள் “சொல்லுங்க சின்னையா..” என்றாள்.

“ ரொம்ப தெளிவு தான் எவ்வளவு டிஸ்டன்ஸ் தள்ளி நிக்கிறா இவ..” என்று ரோஜாவை முறைத்தவன்.

“இரு ரோஜா உன்னை எப்படி என் பக்கத்துல வர வைக்கிறேன் பாரு.. உனக்கு இருட்டு பேயின்னா ரொம்ப பயம்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று யோசித்தவன்.


உன் அருகில் வராமல் தள்ளி நின்ற ரோஜாவை பார்த்து “இன்னும் கொஞ்சம் பக்கத்துல வந்தா நல்லா இருக்கும். உன் பின்னாடி ஏதோ கருப்பா ஒன்னு தலை இல்லாமல் முண்டமா அதோட தலைய கையில பிடிச்சுட்டு நிக்கிற மாதிரி எனக்கு தெரியுது” என்றான்.

“சின்னய்யா!!!.. என்ன சொல்றீங்க கருப்பா ஏதோ நிக்குதா அதுவும் தலையில்லாமையா” என்று ரோஜா பயத்தில் கண்கள் அகல விரித்து நடுக்கத்தோடு அவனிடம் கேட்டாள்.

“ ஆமா அது நீ இந்த ரூம்குள்ள வந்ததுல இருந்து இருக்கும் போல எனக்கு சரியா தெரியல இப்ப நான் லைட் போட்டு பார்க்கிறப்பவே அது உன் பின்னாடி தான் நின்னுட்டு இருந்துச்சு நீ வேற உனக்கு பயமா இருக்குன்னு சொன்னியா ஏன் எடுத்ததும் அதை சொல்லி உன்ன பயமுறுத்தணும்னு தான் நான் நீ பேசுற வரைக்கும் கேட்டுட்டு அமைதியா இருந்தேன்”

“ இப்ப கூட பாரு அது நீ ஒரு அடி தள்ளி வந்ததும் உன் பக்கத்துல மெதுவா நடந்து வந்துட்டு இருக்கு. அதனாலதான் உன்னை என் பக்கத்துல வர சொன்னேன். உனக்கு என்கிட்ட வர இஷ்டம் இல்லைன்னா நீ அப்படியே திரும்பி போய் அந்த சோபாவுல படுத்துக்கோ.. அந்த உருவம் மட்டும் உன்கிட்ட வராம நான் பார்த்துக்கிறேன்” என்று அவளை மேலும் பயமுறுத்தினான்.

சித்து அப்படி சொன்ன அடுத்த நொடி ஒரே பாய்ச்சலாக கட்டிலில் அமர்ந்திருந்தவன் மீது பாய்ந்து அவன் மடியில் குரங்கு போல தாவி அவன் கழுத்தை இரு கைகளாலும், அவன் இடுப்பை தன் கால்களாலும் கிடுக்கு பிடிப்போட்டு அவனை இருக்க அணைத்தவாறு அமர்ந்தாள்.

இது சித்து எதிர்பாராதது ரோஜாவின் பின்னால் பேய் இருக்கிறது என்று பயம் காட்டினால் வேறு வழியில்லாமல் கட்டிலில் வந்து தன் பக்கம் படுத்து உறங்குவாள் என்று நினைத்து அவளை பயம் காட்டியவன் அவனை எதிர்பாராத இந்த இன்ப அதிர்ச்சியை ரோஜா அவனுக்கு தந்திருந்தாள்.

தன் மடியில் குரங்கு குட்டி போல தாவி பிடித்து அமர்ந்திருந்தவளை இரு கைகளாலும் தழுவ நினைத்தான் இருந்தும் தன் மேல் இருந்தவர்களின் ஸ்பரிசத்தை உணர்ந்தவன்.

அவன் முகத்திற்கு நேராக அவள் கழுத்தில் இருந்து வந்த ரோஜாவின் பிரத்தியேக வாசனை அவன் நாசியை நிறைத்திருக்க அதை அவனையும் அறியாமல் அனுபவித்தவன் அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தான்.
.

சித்துவின் மடியில் அமர்ந்திருந்த ரோஜா “சின்னையா அந்த தலை இல்லாத முண்டம் போயிடுச்சா? இன்னும் அங்கேயேதான் நிக்குதா?” என்றால்.
.


“அது நீ கட்டிலுக்கு மேல ஏறினதுமே திரும்பி போயிடுச்சு” என்று அவசரப்பட்டு சித்து கூறி விட…

அதைக் கேட்ட அடுத்த நொடி நிம்மதி பெருமூச்சு விட்ட ரோஜா “அப்பாடா… அந்த தலையில்லாத முண்டம் போயிடுச்சா..” என்று தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு சித்துவின் மடியில் இருந்து இறங்கப் போக…

“டேய் நீ எல்லாம் ரொமான்டிக் ஹீரோவா இருந்து என்னோட பிரயோஜனம். கரெக்டா ஒரு சீன ரொமான்டிக்கா டெவலப் பண்ண தெரியுதா உனக்கு” என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டான்.

சித்துவை விட்டு பிரிந்து கட்டிலில் இருந்து இறங்கியவள் அங்கிருந்த சோபாவில் படுக்கப் போக…

சற்று நிமிட ரோஜாவின் அந்த தீண்டல் சித்துவிற்கு உடல் எல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது அந்த மின்சாரம் இன்னும் துளியும் இறங்காமல் அவன் உடலில் பரவிக் கொண்டிருக்க அவள் சென்று சோபாவில் படுப்பதை சித்து விரும்பவில்லை எப்படியாவது ரோஜாவை தன் அருகில் கட்டிலிலாவது படுத்துக்க வைத்து விட வேண்டும் என்று அவன் மூளை தீவிரமாக யோசிக்க…

“இதுக்கு எதுக்குடா இவ்வளவு யோசிக்கிற மறுபடியும் அந்த தலையில்லாத முண்டம் அவ பக்கத்துல வந்துருச்சுன்னு சொன்னா தானா வந்து கட்டில் படுத்துக்க போறா” என்று அவன் மனது அவனுக்கு எடுத்துக் கொடுத்தது.

அது சொன்ன அடுத்த நொடி சோபாவில் அமர்ந்திருந்த ரோஜாவை பார்த்த சிந்து “ரோஜாஆ” என்று அவசரமாக அழைத்தான்.

சித்து அழைத்ததும் அவனைப் பார்த்து “என்ன சின்னையா” என்றால்.

“ அவ பாவம் டா சின்ன பொண்ணு அது இதுன்னு சொல்லி இந்த நேரத்தில் அவளை பயன்படுத்துற அமைதியா போய் தூங்கு. அவளும் தூங்கட்டும் காலைல வேலை இருக்கு இல்ல” என்று அவன் நல்ல மனசாட்சி சித்துவை நல்லவனாக முயற்சிக்க…

“ம்ஹும்… ஒன்னும் இல்ல ரோஜா சீக்கிரமா தூங்கு காலையில ஷாப்பிங் போகணும்னு சொன்னேன்ல” என்றான் சித்து .

“சின்னய்யா ஆமா ஆமா காலையில சீக்கிரமே கிளம்பனும் நான் தூங்குறேன் நீங்களும் தூங்குங்க” என்று சோபாவை தட்டிவிட்டு சாய்ந்து படுக்கப் போனால்.

“ ஐயோ! ரோஜா! அங்க படுக்காத அந்த தலையில்லாத முண்டம் உன் பக்கத்துல உக்காந்துட்டு இருக்கு” என்று சித்துவின் வில்லங்கமான மனம் அவனை தூண்டிவிட அதன் உந்துதலில் சட்டென ரோஜாவை பயப்படுத்தும் விதமாக சித்து சத்தமாக கூறி விட..

அவ்வளவுதான் அடுத்த நொடி ஒரே பாய்ச்சலாக சோபாவில் இருந்து பெட்டிற்கு தாவிய ரோஜா சித்து போட்டு இருந்த பெரிய பெட்ஷீட்க்குள் நுழைந்து அவன் இடுப்பை கட்டிக்கொண்டு தன் முகம் வரை போர்த்தியவள் “சின்னையா எனக்கு ரொம்ப பயமா இருக்கு… என்ன காப்பாத்துங்க அந்த தலையில்லாத முண்டம் எதுக்கு என் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கு” என்று அழாத குறையாக ரோஜா பேசினாள்.

அவள் சித்துவின் எடையை கட்டி அணைத்து அடுத்த நொடி அவன் உடலில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் அனைத்தும் ஒன்று சேர்ந்து அவன் தலைமுடியை நட்டமாக நிற்க வைத்து விட்டது அந்த அளவிற்கு அவள் ஸ்பரிசம் சித்துவின் உடலை ஆட்டிப் படைத்தது.

அவள் மூச்சுக்காற்று சித்துவின் வெற்று உடலில் சூடாக பரவியது அது ஒரு வித குறுகுறுப்பையும் போதையையும் அவனுக்கு தந்தது.

அதன் இடையே கட்டிக் கொண்டிருந்தவள் கையை அவனையும் அறியாமல் தழுவி பிடித்தவன். போர்த்தி இருந்த போர்வையை ஒரு கையால் தூக்கி அவள் முகத்தை பார்க்க…
உதடுகள் நடுங்க கண்கள் இரண்டும் பயத்தில் படபடக்க உடல் எல்லாம் அந்த ஏசி குளிரில் வியர்த்து கொட்டி பார்க்கவே பாவமாக இருந்தால் ரோஜா.

இந்த சின்ன பெண்ணை இப்படி பயமுறுத்தி விட்டோமே என்று ஒரு பக்கம் அவனுக்கு கவலையாக இருந்தாலும் அப்படி செய்ததால் தான் அவள் தன் அருகில் வந்து படுத்திருக்கிறாள் என்று மறுபக்கம் தன்னையே சமாதானம் செய்து கொண்டவன்.

“அந்த தலையில்லாத முண்டம் இந்த கட்டிலுக்கு பக்கத்துல வரவே இல்ல அனேகமாக அதுக்கு இந்த இடம் பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.” என்று அவளைப் பார்த்தான்.

“ இப்ப நான் இங்கேயே தூங்குறேன் நீங்க அந்த முண்டை மட்டும் என் பக்கத்துல வராம பாத்து இருக்கீங்களா” என்றால் அப்பாவியாக.

அவளோடு போர்வைக்குள் புகுந்து கொண்ட சித்து.. ரோஜாவின் கண்களை ஏறிட்டவன்..

“ச்சே… இவளோட ஐஸ் என்ன இவ்ளோ அட்ராக்டிவா இருக்கு.. எத்தனை நாளா இதெல்லாம் எப்படி கவனிக்காமல் விட்டேன் இன்று நினைத்தவன் பின்பு தலையை குலுக்கிக் கொண்டு.

“சரி நீ தூங்கு நான் பாத்துக்குறேன்” என்று அவள் முதுகில் தட்டி கொடுத்தான் சித்து.

ரோஜா இருந்த பயத்திலும் படபடப்பிலும் சித்து அவள் கையை இருக்க அனைத்து பிடித்து அவள் முதுகை தட்டிக் கொடுத்ததை அவள் கவனிக்கவில்லை எங்கே அந்த தலை இல்லாத முண்டம் அவள் பக்கத்தில் வந்து விடுமோ என்று பயத்திலேயே அவனை இருக்க அணைத்துக் கொண்டே கண்மூடி உறங்கினாள்.

MY OTHER SOCIAL MEDIA LINKS

WHATSAPP LINK YOUTUBE LINK

TELEGRAM LINK PRATILIPI LINK

FACEBOOK GROUP
 

Author: layastamilnovel
Article Title: யாரடி நீ 14
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

mehala

Member
Joined
Mar 18, 2025
Messages
34
Super super super super siddhu nalla idea seithu rojava pakkathula Vara vachutta ❤️❤️❤️❤️❤️❤️
 
Top