- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
"ஏய் ரோஜா ! நில்லு ! அந்த போட்டோவை நான் இனொரு முறிய பாக்கணும் உன் போனை குடு " என்று சிரித்துக்கொண்டே அவள் பின்னால் ஓட..
"ம்ஹும்.. போங்க சின்னையா ஏற்கனவே என் உதட்டை கடிச்சு வெச்சது போதலையா உங்களுக்கு. இனி இந்த போட்டோவை வேற பாத்துட்டீங்க.. அதுக்கும் இந்த மாதிரி தான் ஏதாவது செய்விங்க.. நான் தரமாட்டேன் " என்று அவள் ஓடிவிட,..
"நீ தரலையினாலும் நான் மறுபடியும் வந்து உன் உதட்டை கடிப்பேன்" என்று ஓடினான்
அதற்குள் மடியில் இருந்து இறங்கிய ரோஜா பெல்லாவின் அருகில் போய் நின்றவள் சிவந்திருந்த முகத்தோடு தன் பின்னால் வந்த சித்துவை பார்த்தாள் .
அவளிடம் வர இருந்தவனை அங்கே இருந்த மைக் இடை மறித்து பிடித்துக்கொள்ள...
அவனிடம் நின்று விட்ட சித்து ரோஜாவை ஒரு வித சந்தோசத்தோடு காதலாக பார்த்தவன் "போனை குடு " என்று சைகை செய்ய..
கையில் இருந்த போனை மார்போடு அழுத்தி பிடித்தவள் "ம்ஹும்.. மாட்டேன் " என்று தலையை ஆடினாள்.
அவள் அப்படி சொல்லவும் "மைக் ஒன் மினிட் இப்போ வந்துடுறேன்" என்று நேராக ரோஜாவிடம் சென்றவன்.
"ரூமுக்கு வா.. அந்த போட்டோல இருக்க மாதிரியே என்கூட சேர்ந்து அதே போல ஒரு செல்பி ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்துப்போம் " என்றான்.
அதை கேட்டு ரோஜா சித்துவை விழி அகல பார்த்தாள்.
"உனக்கு என்னை பிடிக்கலையின்னு தான் நமக்கு கல்யாணம் ஆன நாள்ல இருந்து நினைச்சிட்டு இருந்தேன் . ஆனா இந்த ஒரு போட்டோவே எனக்கு புரிய வெச்சிருச்சு. இனி நீ எப்பவும் எனக்கு தான் " என்று சொல்லிவிட்டு "சீக்கிரம் ரூமுக்கு போகணும் " என்று கைகளை பரபரவென தேய்த்துவிட்டுக்கொண்டே அவளை கீழிருந்து மேலாக பார்த்தவன் .
"இன்னிக்கு செம்ம பிளாக் பஸ்டர் ஷோ எனக்காக ரெடியா இருக்கு... " என்று அவள் கன்னத்தை ஆசையாக கிள்ளிவிட்டு மைக்கிடம் பேச சென்றுவிட்டான் .
"கடவுளே! இப்படியா சின்னையாகிட்டே என்னை மாட்டி விடுவ.. இப்போ நான் என்ன செய்றது என்ன சொல்லி இவரை சமாளிக்கிறது.. இவர்கிட்டே இருந்து எப்படி நான் எஸ்கேபி ஆகுறது " என்று புலம்பிக்கொண்டு இருந்தவள் . தன் கையில் இருந்த போனை பிங்கர் பிரிண்ட் கொண்டு ஓபன் செய்ய போன் திரை ஆன் ஆனதும் எடுத்ததுமே சித்து சற்று முன் பார்த்த அந்த போட்டோ தான் இருந்தது.
அதில் சித்து வெகேஷன் சென்று இருந்த பொது எடுத்த போட்டோ இருந்தது.
அந்த போட்டோ பற்றிய நினைவுகளை நோக்கி ரோஜாவின் மனம் சென்றது.
அவள் மொபைலில் நோட்டிபிகேஷன் வரவும் குளிக்க போனவள் அந்த நோட்டிபிகேஷனை எடுத்து பார்க்க
இன்ஸ்டாகிராமில் சித்து இன்று புதிதாக ஒரு போஸ்ட் போட்டிருப்பது அவளுக்கு வந்திருந்தது. அதை திறந்து பார்த்தவள்
கையில் மதுக்கோப்பையோடு வெறும் குட்டி ட்ராயர் மட்டும் அணிந்து இருக்க.. அவனுக்கு இரு பக்கமும் இரு பெண்கள் பிகினியில் நின்று அவனுடன் போட்டோ எடுத்து இருந்தனர் . அந்த புகைப்படத்தை வெளியிட்டு அந்த நாட்டில் இருப்பவர்களும் தனக்கு பேண்களாக இருப்பதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன் என்று கேப்சனோடு அந்த போட்டோவை பதிவிட்டு இருந்தான்.
அதை பார்த்தவளுக்கு வயிறு பற்றிக்கொண்டு வந்தது .
"சின்னையா இப்படி எல்லாமா போட்டோ எடுப்பிங்க... இங்க ஒருத்தி உன்னையே நினைச்சிட்டு இருக்கேன். நீங்க இப்படி ரெண்டு பொண்ணுங்களை சேர்த்து வெச்சு அதுவும் அவங்க தோள் மேல கையை போட்டு போஸ் குடுத்திருக்கிங்க.. எனக்கு இந்த போட்டோ பிடிக்கல... " என்று பேசிகொண்டு இருந்தவள் அடுத்த நொடி தொழில் இருந்த டவலை கீழே வைத்துவிட்டு கேன்வாஸை எடுத்து மாட்டியவள் கிட்டத்தட்ட 6 மணி நேரத்துக்கும் மேலாக வரைந்தவள் ஒரு திருப்தியோடு அந்த போட்டோவை பார்த்தாள் .
அந்த புகைப்படத்தை பெரிதாக வரைத்து இருந்தாள் . அதில் சித்து மட்டுமே இருக்க.. அவனுடன் இருந்த பெண்களை மட்டும் நீக்கி இருந்தாள் .
"ம்ம்..இப்போ பாருங்க எவ்ளோ அழகா இருக்குன்னு... " என்று அந்த போட்டோவிற்கு முத்தமிட்டவள் அதன் பின்னே குளிக்க சென்றாள்.
குளித்து விட்டு டவலை மார்போடு கட்டிக்கொண்டு வந்தவள் ஆளுயரத்திற்கு நின்று இருந்த சித்துவின் புகைப்படத்தை பார்த்தாள். பின் ஏதோ யோசித்தவளாக.. தன் மொபைலை எடுத்துக்கொண்டு சித்துவின் போட்டோவை அங்கிருந்த கண்ணாடியின் முன் நிற்க வைத்தவள் .
"அவளுங்க கூட எல்லாம் போட்டோ எடுத்தாங்க இல்ல.. என்கூடவும் ஒரு போட்டோ எடுத்துக்கோங்க " என்று கட்டியிருந்த துண்டோடு அவன் ட்ராயிங்கிற்கு அருகில் சென்று நின்றவள் கண்ணாடியில் தெரிந்த இருவரின் பிம்பத்தையும் பார்த்துவிட்டு
"இந்த ஜோடி பொருத்தம் எப்படி இருக்கு.. சூப்பரா இருக்குல்ல!" என்று தனக்கு தானே பேசியவள்.
அந்த புகைப்படத்திற்கு முன்னே வந்து நின்று சித்துவின் தோள் மீது சாய்ந்து கொண்டு கண்ணாடியில் தெரிந்த இருவரின் பிம்பத்தையும் MIRROR செல்பி எடுத்தாள்.
அந்த போட்டோவை தான் இப்பொது சித்து பார்த்துவிட்டு ரூமுக்கு போன பின்பு இதே போல இருவரும் போட்டோ எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு போனதை நினைத்துக்கொண்டே யோசனையில் இருந்து வெளியே வந்தவள் தனக்கு எதிரே இருந்த சித்துவை பார்த்தாள் .
ஆனால் அவன் அங்கு இல்லை.. அங்கே போனான் என்று சுற்றிலும் தேடி பார்த்தவள் சித்து எங்கும் இல்லாதது கண்டு குழப்பனால் . அதை கவனித்த பெல்லா.. சித்து ராபர்ட் அப்பறோம் சில டேக்னிஷியன்ஸ் எல்லாரும் எந்த ரூம்ல பேசிட்டு இருக்காங்க . நான் வேணும்னா யாரையாவது அனுப்பி சித்துவை வர சொல்லட்டுமா " என்றார்.
"இல்ல.. இல்ல பரவால்ல.. அவங்க ஒர்க் பாக்கட்டும் " என்றவள் பெல்லாவுடன் நேரத்தை செலவிட்டாள் .
பார்ட்டி எல்லாம் முடிந்து வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரவாக கிளம்பி இருக்க... மணி 6 ஐ கடந்து இருந்தது.
எல்லோரும் சென்ற பின் ரோஜாவை ஒரு அறையில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு பெல்லா வெளியே சென்று விட அசதியில் படுத்த ரோஜா அவளையும் அறியாமல் தூங்கி இருந்தாள் .
மீட்டிங் எல்லாம் முடித்துவிட்டு சித்து 8 மணிக்கு மேலே தான் வந்தான் . பெல்லா ரோஜா இருக்கும் அறையை காட்ட.. அங்கே சென்றவன் ரோஜா உறங்குவதை பார்த்துவிட்டு அவளிடம் வந்தவன் . அவள் மார்போடு அணைத்து பிடித்திருந்த போனை மெல்ல எடுத்தவன். லாக்கை எடுத்துவிட்டு கேலரிக்கு சென்றவன் அந்த போடோவை தேடி எடுத்து பார்த்தான்.
அதில் ஈரம் சொட்ட சொட்ட தன் சித்திரத்தின் மீது சாய்ந்து கொண்டு இந்த சித்திரம் செல்பி எடுத்திருக்கும் அழகை ரசித்தவன் ரோஜாவை பார்த்தான்.
அவள் அருகில் மெல்ல வந்து படுத்தவன் ரோஜாவின் முகத்தை குறுகுறுவென ஆசையோடு பார்த்தவன் போனில் இருந்த கேமெராவை ஆன் செய்து அவள் உதட்டில் தன் உதட்டை பதித்து அதை செல்பியாக எடுத்துவிட்டான்.
உறங்கியவளுக்கு இது தெரியவில்லை எடுத்த போட்டோவை அவள் மொபைலில் SCREEN SAVER ஆக வைத்துவிட்டு போனை அனைத்து பாக்கெட்டில் போட்டுகொண்டு ரோஜாவின் தூக்கம் கலையாத வாறு அவளை தன் கைகளில் ஏந்தி இருந்தவன் அந்த அறையை விட்டு வெளியே வர..
அவன் ரோஜாவை அழைத்து வருவதை பார்த்துவிட்டு ராபர்ட், பெல்லா, தங்களை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்தார்கள்.
அவர்களிடம் விடைபெற்றுவிட்டு காரிற்கு வர.. விஷ்ணுவிற்கு சித்து ரோஜாவோடு வந்ததை பார்த்து "என்ன டா நடக்குது இங்க... " என்று நினைத்த படி சித்துவிற்கு காரின் பின் சீட் கதவை திறந்து விட..
சித்துவும் ரோஜாவை உள்ளே படுக்க வைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்து கொண்டான்,
அவர்களோடு விஷ்ணுவும் அங்கிருந்து கிளம்பி இருந்தான்
TELEGRAM LINK FACEBOOK GROUP
PRATILIPI LINK WHATSAPP CHANNEL
"ம்ஹும்.. போங்க சின்னையா ஏற்கனவே என் உதட்டை கடிச்சு வெச்சது போதலையா உங்களுக்கு. இனி இந்த போட்டோவை வேற பாத்துட்டீங்க.. அதுக்கும் இந்த மாதிரி தான் ஏதாவது செய்விங்க.. நான் தரமாட்டேன் " என்று அவள் ஓடிவிட,..
"நீ தரலையினாலும் நான் மறுபடியும் வந்து உன் உதட்டை கடிப்பேன்" என்று ஓடினான்
அதற்குள் மடியில் இருந்து இறங்கிய ரோஜா பெல்லாவின் அருகில் போய் நின்றவள் சிவந்திருந்த முகத்தோடு தன் பின்னால் வந்த சித்துவை பார்த்தாள் .
அவளிடம் வர இருந்தவனை அங்கே இருந்த மைக் இடை மறித்து பிடித்துக்கொள்ள...
அவனிடம் நின்று விட்ட சித்து ரோஜாவை ஒரு வித சந்தோசத்தோடு காதலாக பார்த்தவன் "போனை குடு " என்று சைகை செய்ய..
கையில் இருந்த போனை மார்போடு அழுத்தி பிடித்தவள் "ம்ஹும்.. மாட்டேன் " என்று தலையை ஆடினாள்.
அவள் அப்படி சொல்லவும் "மைக் ஒன் மினிட் இப்போ வந்துடுறேன்" என்று நேராக ரோஜாவிடம் சென்றவன்.
"ரூமுக்கு வா.. அந்த போட்டோல இருக்க மாதிரியே என்கூட சேர்ந்து அதே போல ஒரு செல்பி ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்துப்போம் " என்றான்.
அதை கேட்டு ரோஜா சித்துவை விழி அகல பார்த்தாள்.
"உனக்கு என்னை பிடிக்கலையின்னு தான் நமக்கு கல்யாணம் ஆன நாள்ல இருந்து நினைச்சிட்டு இருந்தேன் . ஆனா இந்த ஒரு போட்டோவே எனக்கு புரிய வெச்சிருச்சு. இனி நீ எப்பவும் எனக்கு தான் " என்று சொல்லிவிட்டு "சீக்கிரம் ரூமுக்கு போகணும் " என்று கைகளை பரபரவென தேய்த்துவிட்டுக்கொண்டே அவளை கீழிருந்து மேலாக பார்த்தவன் .
"இன்னிக்கு செம்ம பிளாக் பஸ்டர் ஷோ எனக்காக ரெடியா இருக்கு... " என்று அவள் கன்னத்தை ஆசையாக கிள்ளிவிட்டு மைக்கிடம் பேச சென்றுவிட்டான் .
"கடவுளே! இப்படியா சின்னையாகிட்டே என்னை மாட்டி விடுவ.. இப்போ நான் என்ன செய்றது என்ன சொல்லி இவரை சமாளிக்கிறது.. இவர்கிட்டே இருந்து எப்படி நான் எஸ்கேபி ஆகுறது " என்று புலம்பிக்கொண்டு இருந்தவள் . தன் கையில் இருந்த போனை பிங்கர் பிரிண்ட் கொண்டு ஓபன் செய்ய போன் திரை ஆன் ஆனதும் எடுத்ததுமே சித்து சற்று முன் பார்த்த அந்த போட்டோ தான் இருந்தது.
அதில் சித்து வெகேஷன் சென்று இருந்த பொது எடுத்த போட்டோ இருந்தது.
அந்த போட்டோ பற்றிய நினைவுகளை நோக்கி ரோஜாவின் மனம் சென்றது.
அவள் மொபைலில் நோட்டிபிகேஷன் வரவும் குளிக்க போனவள் அந்த நோட்டிபிகேஷனை எடுத்து பார்க்க
இன்ஸ்டாகிராமில் சித்து இன்று புதிதாக ஒரு போஸ்ட் போட்டிருப்பது அவளுக்கு வந்திருந்தது. அதை திறந்து பார்த்தவள்
கையில் மதுக்கோப்பையோடு வெறும் குட்டி ட்ராயர் மட்டும் அணிந்து இருக்க.. அவனுக்கு இரு பக்கமும் இரு பெண்கள் பிகினியில் நின்று அவனுடன் போட்டோ எடுத்து இருந்தனர் . அந்த புகைப்படத்தை வெளியிட்டு அந்த நாட்டில் இருப்பவர்களும் தனக்கு பேண்களாக இருப்பதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன் என்று கேப்சனோடு அந்த போட்டோவை பதிவிட்டு இருந்தான்.
அதை பார்த்தவளுக்கு வயிறு பற்றிக்கொண்டு வந்தது .
"சின்னையா இப்படி எல்லாமா போட்டோ எடுப்பிங்க... இங்க ஒருத்தி உன்னையே நினைச்சிட்டு இருக்கேன். நீங்க இப்படி ரெண்டு பொண்ணுங்களை சேர்த்து வெச்சு அதுவும் அவங்க தோள் மேல கையை போட்டு போஸ் குடுத்திருக்கிங்க.. எனக்கு இந்த போட்டோ பிடிக்கல... " என்று பேசிகொண்டு இருந்தவள் அடுத்த நொடி தொழில் இருந்த டவலை கீழே வைத்துவிட்டு கேன்வாஸை எடுத்து மாட்டியவள் கிட்டத்தட்ட 6 மணி நேரத்துக்கும் மேலாக வரைந்தவள் ஒரு திருப்தியோடு அந்த போட்டோவை பார்த்தாள் .
அந்த புகைப்படத்தை பெரிதாக வரைத்து இருந்தாள் . அதில் சித்து மட்டுமே இருக்க.. அவனுடன் இருந்த பெண்களை மட்டும் நீக்கி இருந்தாள் .
"ம்ம்..இப்போ பாருங்க எவ்ளோ அழகா இருக்குன்னு... " என்று அந்த போட்டோவிற்கு முத்தமிட்டவள் அதன் பின்னே குளிக்க சென்றாள்.
குளித்து விட்டு டவலை மார்போடு கட்டிக்கொண்டு வந்தவள் ஆளுயரத்திற்கு நின்று இருந்த சித்துவின் புகைப்படத்தை பார்த்தாள். பின் ஏதோ யோசித்தவளாக.. தன் மொபைலை எடுத்துக்கொண்டு சித்துவின் போட்டோவை அங்கிருந்த கண்ணாடியின் முன் நிற்க வைத்தவள் .
"அவளுங்க கூட எல்லாம் போட்டோ எடுத்தாங்க இல்ல.. என்கூடவும் ஒரு போட்டோ எடுத்துக்கோங்க " என்று கட்டியிருந்த துண்டோடு அவன் ட்ராயிங்கிற்கு அருகில் சென்று நின்றவள் கண்ணாடியில் தெரிந்த இருவரின் பிம்பத்தையும் பார்த்துவிட்டு
"இந்த ஜோடி பொருத்தம் எப்படி இருக்கு.. சூப்பரா இருக்குல்ல!" என்று தனக்கு தானே பேசியவள்.
அந்த புகைப்படத்திற்கு முன்னே வந்து நின்று சித்துவின் தோள் மீது சாய்ந்து கொண்டு கண்ணாடியில் தெரிந்த இருவரின் பிம்பத்தையும் MIRROR செல்பி எடுத்தாள்.
அந்த போட்டோவை தான் இப்பொது சித்து பார்த்துவிட்டு ரூமுக்கு போன பின்பு இதே போல இருவரும் போட்டோ எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு போனதை நினைத்துக்கொண்டே யோசனையில் இருந்து வெளியே வந்தவள் தனக்கு எதிரே இருந்த சித்துவை பார்த்தாள் .
ஆனால் அவன் அங்கு இல்லை.. அங்கே போனான் என்று சுற்றிலும் தேடி பார்த்தவள் சித்து எங்கும் இல்லாதது கண்டு குழப்பனால் . அதை கவனித்த பெல்லா.. சித்து ராபர்ட் அப்பறோம் சில டேக்னிஷியன்ஸ் எல்லாரும் எந்த ரூம்ல பேசிட்டு இருக்காங்க . நான் வேணும்னா யாரையாவது அனுப்பி சித்துவை வர சொல்லட்டுமா " என்றார்.
"இல்ல.. இல்ல பரவால்ல.. அவங்க ஒர்க் பாக்கட்டும் " என்றவள் பெல்லாவுடன் நேரத்தை செலவிட்டாள் .
பார்ட்டி எல்லாம் முடிந்து வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரவாக கிளம்பி இருக்க... மணி 6 ஐ கடந்து இருந்தது.
எல்லோரும் சென்ற பின் ரோஜாவை ஒரு அறையில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு பெல்லா வெளியே சென்று விட அசதியில் படுத்த ரோஜா அவளையும் அறியாமல் தூங்கி இருந்தாள் .
மீட்டிங் எல்லாம் முடித்துவிட்டு சித்து 8 மணிக்கு மேலே தான் வந்தான் . பெல்லா ரோஜா இருக்கும் அறையை காட்ட.. அங்கே சென்றவன் ரோஜா உறங்குவதை பார்த்துவிட்டு அவளிடம் வந்தவன் . அவள் மார்போடு அணைத்து பிடித்திருந்த போனை மெல்ல எடுத்தவன். லாக்கை எடுத்துவிட்டு கேலரிக்கு சென்றவன் அந்த போடோவை தேடி எடுத்து பார்த்தான்.
அதில் ஈரம் சொட்ட சொட்ட தன் சித்திரத்தின் மீது சாய்ந்து கொண்டு இந்த சித்திரம் செல்பி எடுத்திருக்கும் அழகை ரசித்தவன் ரோஜாவை பார்த்தான்.
அவள் அருகில் மெல்ல வந்து படுத்தவன் ரோஜாவின் முகத்தை குறுகுறுவென ஆசையோடு பார்த்தவன் போனில் இருந்த கேமெராவை ஆன் செய்து அவள் உதட்டில் தன் உதட்டை பதித்து அதை செல்பியாக எடுத்துவிட்டான்.
உறங்கியவளுக்கு இது தெரியவில்லை எடுத்த போட்டோவை அவள் மொபைலில் SCREEN SAVER ஆக வைத்துவிட்டு போனை அனைத்து பாக்கெட்டில் போட்டுகொண்டு ரோஜாவின் தூக்கம் கலையாத வாறு அவளை தன் கைகளில் ஏந்தி இருந்தவன் அந்த அறையை விட்டு வெளியே வர..
அவன் ரோஜாவை அழைத்து வருவதை பார்த்துவிட்டு ராபர்ட், பெல்லா, தங்களை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்தார்கள்.
அவர்களிடம் விடைபெற்றுவிட்டு காரிற்கு வர.. விஷ்ணுவிற்கு சித்து ரோஜாவோடு வந்ததை பார்த்து "என்ன டா நடக்குது இங்க... " என்று நினைத்த படி சித்துவிற்கு காரின் பின் சீட் கதவை திறந்து விட..
சித்துவும் ரோஜாவை உள்ளே படுக்க வைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்து கொண்டான்,
அவர்களோடு விஷ்ணுவும் அங்கிருந்து கிளம்பி இருந்தான்
TELEGRAM LINK FACEBOOK GROUP
PRATILIPI LINK WHATSAPP CHANNEL
Author: layastamilnovel
Article Title: யாரடி நீ 18
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: யாரடி நீ 18
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.