logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
மெல்ல சூரியன் தன் சிறகுகளை படரவிட்டிருக்க... அந்த அறையின் கண்ணாடி சுவற்றை தாண்டி அறைக்குள் ஒளிக்கற்றைகளை படர விட...

தூங்கிக்கொண்டு இருந்த சித்து , ரோஜாவின் முகத்தில் சுள்ளென்று விழுந்தது.

அந்த குளிர் நிறைந்த லண்டன் மாநகரில் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறங்கிக்கொண்டு இருக்க...

சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சம் அவர்களை ஒன்றும் செய்ததாய் தெரியவில்லை,

சித்துவின் மார்பில் முகம் புதைத்திருந்தவள் வெகு நேரம் கழித்து தூக்கம் களைந்து கண்விழித்தாள்.

அதே நேரம் ரோஜா தூக்கத்தில் நெளியவும் சித்துவும் தூக்கம் கலைந்தவன் ரோஜாவை பார்த்தான், கண்விழித்து நிமிர்ந்து அவனை பார்த்தவள் அதிரிச்சியில் கண்களை அகல விரிக்க..

"குட் மார்னிங் கியூட்டி..." என்று அவளை பார்த்து கண்ணடித்தான்.

"சின்னையா! நீங்க... " என்று அதிர்ந்து கட்டிலில் இருந்து எழப்போனவளை இழுத்து மீண்டும் தன் கைவலைவிற்குள் படுக்க வைத்து அவள் மீது தன் கையை போட்டு வளைத்து பிடித்தவன்.

“நானே தான் கியூட்டி!” என்று அழகாக சிரித்தான்.

அவன் சிரிப்பை கண்டவலுக்கு அதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

அவளையும் அறியாமல் சித்துவின் சிரிப்பில் கலந்து ரோஜாவின் இதழும் புன்னகையை தடுத்துக்கொண்டது.

இருவரும் ஒருவர் விழிகளை ஒருவர் பார்த்தபடி சிரித்த முகமாக படுத்திருக்க…

அவன் கைவலைவில் தலை சாய்த்து படுத்திருக்க… ரோஜாவின் முடிகற்றைகள் அவள் முகத்தில் விழுந்தது. அதை தள்ளிவிட்டு காதோரம் முடியை ஒதுக்கி விட்ட சித்து.

“உனக்கு என்னை பிடிக்குமா?” என்றான்.

அவன் கண்களில் இருந்து தன் பார்வையை அகற்ற முடியாமல் தவித்தவள் சித்துவின் கேள்விக்கு “ம்ம்.. ரொம்ப பிடிக்கும் சின்னையா” என்று அவளையும் அறியாமல் தன் மனதில் இத்தனை நாளாய் சித்துவின் மீது வைத்திருந்த காதலை முதல் முறையாக அவனிடமே சொல்லிவிட்டாள்.

இப்படி தான் கேட்டதும் ஆமாம் என்று ரோஜாவிடம் இருந்து பதில் வரும் என சித்து நினைக்கவில்லை.

அவள் பதிலில் தனக்குள் இதுனால வரையில் எல்லாத உணர்வுகள் எல்லாம் எழுவது போல தோன்றியது சித்துவிற்கு.

கண்கள் மின்ன அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். ரோஜாவும் அதே நிலையில் தான் இருந்தாள்.

ரோஜாவை மேலும் தன் மார்போடு அணைத்துப் பிடித்தபடி நெருங்கி படுத்த சித்து குனிந்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.

அதில் ஒரு வித காதல் இருந்தது. அந்த காதல் முத்தத்தை ரோஜாவும் உணர்ந்தவள் கண்களை மூடி அவன் முத்தத்தை ஏற்றுக்கொண்டாள்.

அடுத்து நெற்றியில் இருந்து அவன் முத்தம் கீழே இறங்கி அவள் மூடி இருந்த கண்களுக்கு வந்தது.

அந்த முத்தம் ரோஜாவின் உடலை சிலிர்ப்படைய செய்ய.. அவளையும் அறியாமல் ரோஜாவின் கைகள் சித்துவின் இடையை தழுவ..

மெல்ல சிரித்தவன் கண்களில் இருந்து மூக்கு நுனியில் முத்தம் வைத்தான். அங்கிருந்து கன்னங்களுக்கு தன் முத்தங்களை பரிசாகியவன்.

குனிந்து லேசாக திறந்திருந்த அவள் இதழை பார்த்தான்.

மூடி இருந்த அவள் விழிகளையும், உணர்ச்சி மிகுந்த அவள் முகத்தையும் பார்த்துக்கொண்டே அவள் இதழை நோக்கி குனிந்தான் சித்து.

அந்த நேரம் ரோஜாவின் போனில் இருந்து நோட்டிபிகேஷன் சத்தம் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்க…

அதில் இருவரும் சட்டென ஒருவரை விட்டு விலகி கட்டிலின் இருபக்கமும் திரும்பிக்கொண்டனர்.

கட்டிலில் இருந்து அவசரமாக எழுந்த ரோஜா அவள் போனை தேடினாள் .

"எங்க போனை காணோம் " என்று அருகில் இருந்த டேபிளில் , சோபாவில் தேடிக்கொண்டு இருக்க..

"என்ன உன் போன் டைம் பாம் மாதிரி அலரிட்டு இருக்கு" என்று ரோஜாவின் போனை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறுகையை தலைக்கு குடுத்த படுத்தபடி அவளிடம் கேட்டான்.

அவன் கையில் இருந்த தன் மொபைலை பார்த்தவள் "சின்னையா ! என் போனை நீங்க ஏன் எடுத்தீங்க, குடுங்க இங்க.. " என்று அவனிடம் வந்தவள் சித்து கையில் இருந்த போனை வாங்க போக..

கட்டிலில் படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்து ரோஜாவின் கையை பிடித்து இழுத்தவன் அவளை தன் மேல் போட்டுகொண்டு ..

"போன் தானே வேணும் பிடி " என்று அவள் கையில் போனை கொடுத்தான்.

அதை வாங்கியவுடன் அவன் மடியில் இருந்து எழுந்திருக்க போனாள் ரோஜா.

"கியூட்டி அதான் போனை குடுத்துட்டேனே இப்படியே என்ன இருக்குன்னு நீ பாரு.. " என்று அவள் இடையில் கைகொடுத்து மேலே தூக்கியவன் அவளை தன் மார்பில் சாய்த்த வாரு தனக்கு அருகில் அமரவைத்தவன் .

"ம்ம்.. சீக்கிரம் ஓபன் பண்ணு என்ன மெசேஜ் வந்திருக்குன்னு நான் பார்க்கணும்" என்றான்.

"சின்னையாவை வெச்சிட்டு போனை ஓபன் பண்ணினா அப்றம் பேன் குரூப் என்னோடது தான்னு கண்டு பிடிச்சிருவாரே.. " என்று ரோஜா விழிக்க...

"இப்போ நீ ஓபன் பண்ண போறியா? இல்ல நான் ஓபன் பண்ணட்டுமா?" என்றான்.

"உங்களுக்கு தான் பாஸ் வேர்ட் தெரியாதே.. அப்பறோம் எப்படி என் போனை ஓபன் பண்ணுவீங்க.. என் போன் பாஸ் வெர்ட் உங்களுக்கு தெரிஞ்சாருச்சா.. " என்று தன் பின்னால் இருந்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து இம்சை செய்பவனை ஓரக்கண்ணால் பார்த்து.

அதை கேட்டதும் "பாஸ் வெர்ட் தெரிஞ்சிருச்சுனு சொன்னா உடனே வேற பாஸ் வெர்ட் மாத்திருவாளே..." என்று யோசித்தான்.

" நான் வேற இவ போனை ஓபன் பண்ணி செய்த வேலையை எல்லாம் பாத்து எப்படியும் என்னை தான் கேக்க போறா... அப்பறோம் என்ன... சொல்லிட்டா போகுது" என்று நினைத்தவன் .

"பாஸ் வேர்ட் தானே அது நேத்து நீ டைப் பண்ணின அப்போவே நான் பார்த்துட்டேன் " என்றான்.

அதை கேட்டு முறைத்தவள் "இப்படி அடுத்தவங்க போனை திருட்டுத்தனமா எதுக்கு பாக்குறீங்க.. " என்று புலம்பிக்கொன்டே தன் மொபைலை unlock செய்தவள் திரையில் இருந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியானவள் அதை சித்து பார்த்துவிடக்கூடாது என்று சட்டென்று போனை தன் மார்போடு சேர்த்து அணைத்து அவன் பாத்துவிடாதவாறு மறைந்தாள்.

"அந்த போட்டோவை வெச்சதே நான் தான் . இப்போ மறைச்சு என்ன பிரயோஜனம் . நீ போனை குடு.. " என்று அவள் கையில் இருந்த போனை பிடுங்கி வந்திருந்த நோட்டிபிகேஷனை பார்த்தான்.

"நீயும், சித்துவும் இப்போ நினைச்சாலும் இந்த போட்டோவை recreate பண்ணலாமே... "

"இவளுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா எங்க சித்து கூட சேர்ந்து போட்டோ எடுத்திருப்பா.."

"ஏய் அது உண்மையான சித்து கிடையாது . சித்து மாதிரியே ஒரு படத்தை வரைஞ்சு இப்படி அறையும் குறையுமா போட்டோ எடுத்து அதை வெட்கமே இல்லாம போஸ்ட் பண்ணிருக்கா.. "

"இது இப்போ எடுத்த போட்டோவா இருந்தா கூட போன போகட்டும்னு விட்ரலாம் . ஆனா இந்த போட்டோ ஒரு வருசத்துக்கு முன்ன எடுத்திருக்கா.. சித்து இன்ஸ்டாகிராம் பேஜ்ல போய் பார்த்தா அவர் எந்த தேதில இந்த போட்டோவை upload பண்ணிருக்காருனு உங்களுக்கு புரியும்"

இப்படி சித்துவின் ரசிகைகள் மாறி மாறி ரோஜாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுன்டில் அவளுக்கு தெரியாமல் நேற்று இரவு சித்து upload செய்திருந்த போட்டோவிற்கு தான் இதனை கமெண்டுகள் வந்துகொண்டு இருந்தது. இதை விட மோசமாக இன்னும் நிறைய கமெண்ட் வந்தது.

அவனோடு சேர்ந்து அதை பார்த்துக்கொண்டு இருந்த ரோஜா "நீங்க தான் இந்த் போட்டோவை போஸ்ட் பண்ணிங்களா?" என்றாள் கலங்கிய விழிகளில் .

"ஏய்!.. ஆமா அது சும்மா ஒரு funna பண்ணினது. பட் இப்படி எல்லாம் ரியாக்ட் பண்ணுவாங்கனு நான் எதிர்பாக்கல சாரி " என்றான்.

"ஏன் சின்னையா இப்படி பண்ணுணிங்க .. பாருங்க எப்படி எல்லாம் கமெண்ட் பண்ணி இருக்காங்க " என்று அழுதாள்.

"ரோஜா அழாத.. " என்று அவளை சமாதானம் செய்ய முயன்றவன் போனை பார்த்தான்.

அப்போது இன்னோரு நோட்டிபிகேஷன் வந்தது அதை பார்த்தவன் "சித்துவை ரோஜாவுக்கு பிடிக்கலன்னு சொன்னிங்க .. ஆனா பாருங்க அந்த ரோஜா சித்துவை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே எப்படி போட்டோ எடுத்து இன்ஸ்டாக்ராம்ல போட்டோ எடுத்திருக்கா பாருங்க" என்று வந்திருந்தது.

அதை பார்த்தவன் ரோஜாவின் மொபைலை அவளிடம் கொடுத்துவிட்டு எழுந்து தன் மொபைலை எடுத்துக் கொண்டு வெளியே போனான்.

தன் மொபைலில் இருந்த நோட்டிபிகேஷனை பார்த்தாள் . அதை பார்த்ததும் "நல்ல வேல அந்த குரூப்பை நான் லாக் பண்ணி வெச்சிருக்கேன். வெறும் நோட்டிபிகேஷன் மட்டும் படிச்சிட்டு போய்ட்டார் "என்று நினைத்தவள் தன் இன்ஸ்டாகிராமில் இருந்த போட்டோவை டெலீட் செய்ய போனாள் ,

பின் ஏதோ நினைத்தவளாக அந்த போட்டோவை டெலீட் செய்யாமல் விட்டவள் அந்த பேன் குரூப்பை பார்த்தவள். அதை ஓபன் செய்து டைப் செய்ய துவங்கினாள்.

இங்கே போனை எடுத்துக்கொண்டு வந்த சித்து தன் மொபைலில் ஏதோ டைப் செய்ய துவங்கினான்.

TELEGRAM

PRATILIPI LINK WHATSAPP CHANNEL

YOU TUBE FACEBOOK

 

Author: layastamilnovel
Article Title: யாரடி நீ 19
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top