logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
"ஹலோ! கியூடிஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க.. வர வர என்னோட கல்யாண வாழ்க்கையை பத்தி என்னை விட மத்தவங்க தான் ரொம்ப அக்கறைப்படுறீங்க. இதை எல்லாம் பாக்குற அப்போ எனக்கு சந்தோசமா தான் இருக்கு. ஆனா என்னோட வாழ்க்கையில், என் மனைவியோட வாழ்க்கையில் ஒரு பிரைவசி வேணும்னு நினைக்குறேன். நீங்க அதுக்கான ஸ்பேஸ் கொடுப்பீங்கன்னு நம்புறேன்" என்று ஒரு பதிவை தன் வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்த சித்து அதன் கூடவே ஒரு புகைப்படத்தையும் பேதிவேற்றி இருந்தான்.

அந்த புகைப்படத்திற்கு கீழே... "இந்த போட்டோவை ரோஜாவுடைய போனில் அவங்க இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் போஸ்ட் பண்ணினதே நான் தான் . இதை நான் அவங்க போனில் இருந்து போஸ்ட் போட்டு சொல்லி இருந்தா யாரும் நம்ப மேடேங்கன்னு தான் இப்போ என் அக்கவுண்டில் அதே போட்டோவை போஸ்ட் பண்ணிருக்கேன். ரோஜாவுக்கு என்மேல எவ்ளோ லவ் இருக்குன்னு இந்த ஒரு புகைப்படமே உணர்த்தி இருக்கு.. இதுக்கு மேல இந்த போட்டோவை பத்தியோ.. என் மனைவியை பத்தியோ யாராவது மனசு நோகும்படி பேசினா அவங்க மேல சட்டபூர்வமா நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதிவிட்டிருந்தான்.

"இங்கே பேன்ஸ் குரூப்பில் சித்துவின் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் பேச முடியாமல் திணறியவள் .

"எல்லாம் இந்த சின்னையாவால வந்துச்சு...இவரை யாரு என் அக்கவுண்ட்ல என்கிட்டே சொல்லாம போட்டோவை போஸ்ட் பண்ண சொன்னது . அதுவும் எந்த போட்டோவை போய் போஸ்ட் பண்ணிருக்காரு" என்று புலம்பியவள்.

"அந்த போட்டோவை முதல்ல டெலீட் பண்ணனும் அது இருக்க நால தானே இவ்ளோ பிரச்னையும். என்னை ஆளுக்கு கேள்வி கேட்டு அதையும் இதையும் கமெண்ட் பண்ணி கடுப்பேத்திட்டு இருக்காங்க " என்று யோசித்தவள் அவள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ஓபன் செய்ய போக..

அந்த எல்லாம் சித்து போட்டிருந்த போஸ்ட் பற்றிய நோட்டிபிகேஷன் அவளுக்கு மேலே காட்டியது.

அதை அவசரமாக ஓபன் செய்து பார்த்தவள் சித்து போட்டிருந்த போட்டோவையும், அதன் கீழே இருந்த கேப்ஷனையும் படித்தவள் அப்படியே பிரமித்துப்போனாள்.

தன்னை வரிக்கு வரி என் மனைவி , என் மனைவி என்று எழுதி இருந்ததை படித்தவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

அந்த போஸ்டிற்கு கீழே கமெண்ட்டை ஓபன் செய்து பார்த்தவள் அதில் வந்திருந்த செய்திகளை பார்த்து சந்தோஷமானாள் .

இவ்வ்ளவு நேரம் எந்த போட்டோவை போஸ்ட் செய்ததற்காக அவளை ஏசியவர்கள் எல்லாம் மன்னிப்பு கேட்டும், இருவரையும் ஆதரித்தும் கமெண்ட்டை நிறைத்து இருந்தனர்.

அந்த போஸ்ட் வந்த பிறகு ரோஜாவின் பேன்ஸ் பேஜிலும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்திருப்பதை பார்த்து நிம்மதி அடைந்தவள் . தன் அக்கவுண்டில் இருந்த போஸ்ட்டை டெலிட் செய்யும் எண்ணத்தை கைவிட்டவளாக சித்துவை பார்பதற்க்காக எழுந்து ஹாலிற்கு வந்தாள்.

அங்கே சித்து டிவியில் ஸ்போர்ட்ஸ் சேனலை பார்த்துக்கொண்டு சாதாரணமாக அமர்ந்து இருந்தான்.

நடந்த எந்த ஒரு விஷயமும் அவனை பாதித்ததாக தெரியவில்லை அவனுக்கு. அதை யோசித்தபடியே அவன் அருகில் வந்தாள் ரோஜா.

"என்ன கியூட்டி இப்போ ஓகேவா எல்லாம் . இனி யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க" என்றான்.

"சின்... சின்னையா.. நீங்க.. நீங்க போட்டோ.... " என்று வார்த்தைகளை கோர்வையாக பேச மறந்தவளாய் நின்று இருந்தவளை கையை பிடித்து இழுத்து தன் மடிமேல் அமர்த்திக்கொண்டவன் .

"நான் தான்.. உன் சின்னையா தான் ... அந்த போட்டோவை என் அக்கவுண்டில் போஸ்ட் பண்ணினேன். ஏன் போஸ்ட் பண்ண கூடாதா? எனக்கு அந்த உரிமை இல்லையா? " என்றான் அவள் விழிகளை பார்த்து.

அந்த பார்வையில் இருந்த ஈர்ப்பை அவளால் புறக்கணிக்க முடியவில்லை. அவள் விழிகளையே பார்த்துக்கொண்டு தன் மடியில் அமர்ந்து இருந்தவளை இடையோடு அழுத்தி பிடித்தவன்.

"என்ன? சொல்லு ஏன் எதுவும் பேசமாட்டேங்குற... " என்றான்.

"அஹ்!.. அது இருக்கு... " என்றாள் மந்திரித்து விட்டவள் போல..

"என்ன இருக்கு?.." என்றான்.

".... " மௌனமாக அவன் விழிகளில் சிக்குண்டு கிடந்தவளுக்கு அவன் பேசிய வார்த்தை காதில் ஏறவில்லை.

"என்ன இருக்கு.. உன் மனசுல அதை என்கிட்டே சொல்லாமே.." என்று அவளை உலுக்கினான்.

"எ .. என்ன இருக்கு என் மனசுல அதெல்லாம் ஒன்னும் இல்ல.. என்ன விடுங்க" என்று அவன் மடியில் இருந்து எழுந்தவள்.

"நீங்க எவ்ளோ பெரிய ஸ்டார் உங்க பேஜ்ல அந்த போட்டோவ போட்டிருக்கிங்க. இது உங்க பேன்ஸ்களை வெறுப்பேத்தாதா?" என்றாள்.

"அதுக்காக என்ன பண்ண சொல்ற... அவங்க புரிஞ்சுக்கணும்னு தான் அந்த போஸ்ட்டையே நான் போட்டேன்" என்றான்.

"வேற போட்டோவே இல்லையா உங்களுக்கு அந்த போட்டோவை போய் போஸ்ட் பண்ணிருக்கீங்க" என்றாள்.

"ஏன் அந்த போட்டோவுக்கு என்ன குறைச்சல்" என்றான்.

ரோஜா சித்துவையே பார்க்க...

"பேசாம ஒன்னு பண்ணலாமா?" என்றான்.

"என்ன?" என்பது போல ரோஜா பார்க்க..

"அந்த போட்டோ மாதிரியே திரும்பவும் நீயும் நானும் ரீகிரியேட் பண்ணி புது போஸ்ட்டா போட்டுடலாமா?" என்று எழுந்து அவள் அருகில் வந்தான்.

"என்ன!" என்று சித்துவை ரோஜா அதிர்ந்து பார்க்க..

"என்ன.. ஷாக்கு.. என்னை விட்டுட்டு நீ மட்டும் தனியா என் போட்டோ கூட போஸ் கொடுத்து செல்பி எடுத்தே இல்ல... இப்போ நான் நேரலையே இருக்கேனே " என்றவன்.

ரோஜாவை இடையோடு சேர்த்து தன்னிடம் இழுத்து கட்டிக்கொண்டவன் "அந்த போட்டோவுல இருக்குற மாதிரி இப்போ.. இங்க போட்டோ எடுக்கணும்" என்றான்.

"என்ன விளையாடுறிங்களா? அதெல்லாம் என்னால முடியாது " என்று அவனிடம் இருந்து விலகியவள் .

"ஆளை பாரு " என்று சித்துவை மேலும் கீழும் பார்த்தவள் திரும்பி பெடரூமிற்கு செல்ல...

"எங்க தனியா போற இரு நானும் வரேன்" என்று அவள் பின்னால் போனான்.

அவனை பெட் ரூம் வாசலிலேயே தடுத்து நிறுத்தியவள் "நீங்க எங்க வரிங்க" என்றாள் .

"பெட் ரூமுக்கு.. " என்றான்.

"அது தான் எதுக்குன்னு கேக்குறேன்" என்றாள் .

"எதுக்கு வருவாங்க.. " என்று வில்லனை போல முகபாவனை காட்டி..

"உன் கூட செல்பி எடுக்க தான் " என்றான்,.

"அதெல்லாம் கனவுலயும் நடக்காது" என்றவள்.

"எனக்கு தூக்கம் வருது. நான் தூங்கணும்" என்றாள்.

"நல்லதா போயிருச்சு .. எனக்கும் தான் தூக்கம் வருது" என்று சித்து உள்ளே செல்ல போக..

அவன் மார்பில் கை வைத்து தடுத்தவள் "நீங்க அங்க இருக்க சோபாவுல போய் தூங்குங்க... நான் உள்ளே தூங்குறேன்" என்றாள்.

"ஏய்! நான் ஏன் சோபாவுல தூங்கணும், இவ்ளோ பெரிய சூட் ரூம் புக் பண்ணிருக்கேன். எவ்ளோ பெரிய கட்டில் இருக்கு அங்க தூங்க கூடாதா? நான்" என்றான்.

"அதுவும் சரி தான். அப்போ நீங்க உள்ள தூங்குங்க சின்னையா நான் போய் சோபாவுல படுத்துகிறேன்" என்று அவனை தாண்டி வெளியே செல்லபோனாள்.

"ஓய்! இம்ச... உன்னை என்ன பண்றது" என்று உரிமையாக பேசியவனை ஆச்சரியமாக பார்த்தவள்.

"இவ்ளோ பெரிய ஹனிமூன் சூட்ல நீ தனியா.. நான் தனியா படுக்குறது சரியா வராது டி.. " என்றான்.

"என்னது டி யா! " என்று கேட்டவளை.

"ஆமா டி என் பொண்டாட்டி.. உன்ன தான் " என்றவன் அவள் கைபிடித்து இழுத்துக்கொண்டு கட்டிலுக்கு வந்தவன் ரோஜாவை மெத்தையில் தள்ளிவிட்டு அவள் அருகில் வந்து படுத்தவன் போர்வையை அவளுக்கு போர்த்திவிட்டு தானும் போர்த்திக்கொண்டு "தூங்கு ..." என்றான்.

இங்கே என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டு இருந்தவள் இதழில் தன் உதட்டை ஒற்றி எடுத்தவன் "தூங்கு டி இம்ச... எல்லாத்துக்கும் இப்படி கண்ணை உருட்டி உருட்டி பாக்காத... அப்பறோம் அந்த கண்ணை நொண்டிருவேன் பத்துக்கோ.." தன் விரல்களை அவள் கண்ணை குத்துவதை போல கொண்டு சென்றான்..

நிஜமாகவே சித்து கண்ணை குத்தப்போகிறான் என்று நினைத்து வேகமாக அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

அதை சிரித்துக்கொண்டே பார்த்தவன் மீண்டும் ரோஜாவின் இதழை முத்தமிட்டு தூக்கம் வருதுன்னு சொன்னியே.. தூங்கு .. இல்ல.. நீ என்னை பேசி பேசி இம்சை பண்ணுற மாதிரி நானும் உன்னை முத்தம் குடுத்து இம்சை பண்ணுவேன்" என்று அவள் இதழ் நோக்கி குனிந்தான் .

"ஐயோ ! வேணாம் நான் தூங்குறேன்" என்று சட்டென்று அவனுக்கு முதுகு காட்டி படுத்துகொண்டாள்.

"இப்படி திரும்பி படு டி இம்சை" என்றான்.

"என்னை இம்சைன்னு சொல்லாதீங்க.. " என்றவள்.

"எனக்கு இப்படி படுக்க தான் பிடிச்சிருக்கு. நீங்க பேசாம தூங்குங்க.. இல்ல நான் வெளிய போயிருவேன் " என்று அவனை போலவே ரோஜாவும் சித்துவை பிளாக் மெயில் செய்தாள்.

"சரி சரி ஏதும் பேசல தூங்கலாம் " என்றவன் ரிமோட்டை எடுத்து அந்த பிரமாண்ட கண்ணாடி சுவற்றை திரை சீலை கொண்டு ரிமோட் மூலம் மூடிவிட்டு லைட்டையும் அணைத்தான்.

அந்த நண்பர்களே இப்பொது இரவு போல காட்சி அளித்தது.

சித்து ரிமோட்டை வைத்துவிட்டு முதுகு காட்டி படுத்திருந்தவளை பின் இருந்து அணைத்துக்கொண்டு அவள் அருகில் வந்து படுத்தான்.

"சின்னையா! என்ன இது? நீங்க இப்படி எல்லாம் பண்ணினா நான் எழுந்த வெளிய போவேன்" என்று கட்டிலில் இருந்து எழுந்தாள்.

"நீ வெளிய போனாலும் நான் அங்கேயும் வந்து இப்படி தான் உன்னை கட்டிக்கிட்டு படுப்பேன்" என்றான்.

"என்னை ஏன் இப்படி படுத்துறீங்க.. ப்ளீஸ் என்னை இப்படி கட்டிபிடிக்காதிங்க.. " என்று ரோஜா நெளிய...

"ம்ஹும் முடியாது . நான் இப்படி தான் படுப்பேன்" என்று மேலும் அவளை நெருங்கி படுத்தான்.

"சின்னையா ப்ளீஸ்.. கொஞ்சம் தள்ளி படுங்களேன்" என்று கெஞ்சினாள் மீண்டும் நெளிந்துகொண்டே... அவனை விட்டு நகர்ந்து முன்னே படுத்தவாறு.

"ஏன் இப்போ தள்ளி போய் படுக்குற... இப்போ எதுக்கு நீ இப்படி நெளிஞ்சுட்டே இருக்க.. பேசாம படு டி.. " என்று தள்ளி படுத்தவளை இழுத்து தன் அருகில் படுக்க வைத்து கட்டிக்கொண்டான்.

"நான் பேசாம படுக்கலாம்னு தான் நினைக்குறேன். ஆனா.. " என்று ரோஜா மீண்டும் ரோஜா நெளிய.

"உனக்கு என்னை பிடிக்கும் தானே.. அப்பறோம் ஏன் நான் கிட்ட வந்தாலே இப்படி தள்ளி போற ரோஜா . நீ இப்படி பண்றது எனக்கு கஷ்டமா இருக்கு.. எனக்கு உன்கிட்டே உரிமை எடுத்துக்க தோணுது . நம்ம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணும். ஒண்ணா இருக்கணும்னு நான் தான் நினைக்குறேன் போல.. உனக்கு அதுல விருப்பம் இல்லை போல..." என்று சோர்ந்த குரலில் பேசியவன் ரோஜாவை கட்டிக்கொண்டு இருந்த தன் கையை விளக்க போக..

அப்போது விளக்கவிடாமல் சித்துவின் கையை இருக்க பிடித்துக்கொண்ட ரோஜா.

"எனக்கு விருப்பம் இருக்கு சின்னையா உங்க கூட இந்த மாதிரி உரிமையா இருக்க.. உங்க பக்கத்துலயே எப்பவும் இருக்க.." என்றவள்.

அவனை திரும்பி பார்க்காமலேயே "ஆனா.. எனக்கு... " என்று ரோஜா தயங்க,

"என்ன ரோஜா சொல்லு.. உனக்கு இதெல்லாம் பிடிச்சிருக்கு தானே.. அப்பறோம் ஏன் என்னை விட்டு தள்ளிபோற" என்றான்.

"அது வந்து.. " என்றவள் .

"உங்களுக்கு எப்படி புரிய வைப்பேன்" என்று எழுந்தவள் நைட் லேம்ப் வெளிச்சத்தில் அவனை பார்த்தவள் தன் பார்வையை சித்துவின் இடைக்கு கீழே கொண்டு சென்றவள்.

"நான் இல்ல உங்களை இம்சை பண்றது. இதோ ..." என்று பார்வையால் அவன் இடைக்கு கீழே சுட்டிக்காட்டியவள்.

திரும்பி அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டு ஒரு தலையணையை எடுத்து இருவரின் இடைக்கு இடையே வைத்தவள்.

"நான் ஒன்னும் வேணும்னு நெளியல... இந்த இம்சை இருக்கே அது தான் என்னை நெளிய வெக்குது" என்றவள் அவன் கையை இழுத்து தன் மேல் அணைக்கும்படி போட்டுகொண்டு கண்கள் மூடி படுத்துகொண்டாள்.

ரோஜா தங்கள் இருவருக்கும் இடையில் வைத்திருந்த தலையணையை நிமிர்ந்து பார்த்தவன் "இப்படி என் மானத்தை வாங்கிட்டியே டா இம்சை. ரோஜா சொன்னது சரி தான் நீதான் சரியான இம்சை நேரம் கேட்ட நேரத்துல வந்து என் மானத்தை வாங்கிட்ட..." என்று மற்றொரு கையால் அவன் இம்சையை அடக்கியவன் ரோஜாவை அணைத்துக்கொண்டு படுத்துகொண்டான்.

அவன் பேசியதை கேட்டு சிரித்துக்கொண்டே கண்கள் மூடி படுத்திருந்தாள் ரோஜா.

KEELA IRUKKA LINKKAI FOLLOW PANNI DAILY UPDATES THERINJUKONGA FRIENDS

TELEGRAM LINK FACEBOOK GROUP PRATILIPI LINK WHATSAPP CHANNEL
 

Author: layastamilnovel
Article Title: யாரடி நீ 20
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top