- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
"சின்னையா! சின்னையா! எனக்கு அந்த மிட்டாய் வேணும்.." என்று சித்துவை செவ்வ்ட் வாங்கி தர சொல்லி இம்சை செய்தபடி அவன் பின்னால் சென்றாள் ரோஜா.
"இங்க பாரு ரோஜா ஸ்வீட் எல்லாம் இவ்ளோ அதிகம் சாப்பிட கூடாது. நீ உன் இஷ்டத்துக்கு சுவீட்டை உள்ள தள்ளிக்கிட்டு இருக்க.. நம்ம வெளிய சுத்தி பார்க்க வந்தமா? இல்ல நீ ஸ்வீட் சாப்பிட வந்தியா" என்று இரண்டு கையிலும் இனிப்பலான தின்பண்டங்களை வைத்து சாப்பிட்டபடி நடந்து வரும் ரோஜாவை பார்த்து முறைத்தான்.
"ஏன் சின்னையா! என்னை இப்படி பாக்குறீங்க. உங்களுக்கு வேணும்னா எடுத்துக்கோங்க அதுக்குன்னு இப்படி குறு குறுன்னு நான் சாப்பிடறதை பார்த்தா எனக்கு வயிறு வலிக்காதா?" என்றாள். ஒரு லாலிபாப்பை பிரித்து வாயில் வைத்தபடி
"ஏய்! ஏய்! எதுக்கு டி இவ்ளோ சாப்பிடற நீ . இவ்ளோ ஸ்வீட் சாப்பிட்டா உடம்பு என்ன ஆகும்" என்று அவளிடம் வந்தவன் ரோஜா வாயில் வைத்திருந்த லாலிபாப்பை பிடுங்கி கீழே வீச போனான்.
"சின்னையா!" என்று தான் சாப்பிட்டதை பிடுங்கியவனை பார்த்து ரோஜா கத்த.
"எதுக்கு இவ்ளோ சவுண்ட்..." என்று சொல்லிக்கொண்டே வீச இருந்த லாலிபாப்பை அவன் வாய்க்குள் வைத்து சுவைத்தவன்.
"ம்ம்.. எவ்ளோ ஸ்வீட்டா இருக்கு.. நீ டேஸ்ட் பண்ணி கொடுத்ததனால தான் இது இவ்ளோ ஸ்வீட்டா இருக்கா?" என்று அவளை குறும்பாக பார்த்தான்.
"அடப்பாவி! வேணாம் வேணாம்னு நான் சொல்ல சொல்ல கேக்காம இருக்குற சுவீட்டை மொத்தத்தையும் வாங்கி என் கையில திணிச்சிட்டு . இப்போ எப்படி பேசுறார். இவனுக்கு வேணும்னா வாங்கி சாப்பிட வேண்டியது தானே . அதை விட்டுட்டு என்னை சாக்கா வெச்சிட்டு இவர் சுவீட்டை சாப்பிடறாரு " என்று புலம்பியவள் திரும்பி அவர்களுக்கு பின்னால் சற்று இடைவெளிவிட்டு வந்து கொண்டு இருந்த விஷ்ணுவையும், சித்துவின் பாடிகார்டுகளையும் பார்த்தாள்.
"ரோஜா! அவனுக்கு ஏன் சுவீட்டை கொடுத்த.. அவனோட dietician சித்து ஸ்வீட் சாப்பிட கூடாதுனு கண்டிஷன் போயிருக்காரு. அவன்கிட்டே இருந்து அந்த லாலிபாப்பை வாங்கு" என்றான் விஷ்ணு.
"இருங்க அண்ணா அவர் ஒன்னு தானே சாப்பிடறாரு சாப்பிட்டு போகட்டுமே.. பாவமா இருக்கு அவரை பார்க்க... பாருங்க எப்படி ரசிச்சு ரசிச்சு எந்த லாலிபாப்பை சாப்பிடறாருனு" என்று லாலிபாப்பை சுவடித்துக்கொண்டே லண்டன் வீதிகளில் ஜாலியாக சென்று கொண்டு இருந்தவனை பார்த்து கூறினாள்.
"சரி நீ சொல்றேண்ணேன்னு நான் அவனை சும்மா விடறேன். எல்லாம் நாம ஊருக்கு போற வரைக்கும் தான் . அப்பறோம் அங்க வந்துட்டு இந்த மாதிரி வேளை எல்லாம் அவன் செய்ய கூடாது . அதுக்கு நீ தான் பொறுப்பு" என்றான் விஷ்ணு.
"சரி சரி விடுங்க நான் பாத்துக்கிறேன்" என்று சித்துவின் பின்னால் வேகமாக நடந்தாள்.
இருவரும் அங்கிருந்த ஷாப்பிங் காம்ப்லெஸ், மால் என்று அந்த லண்டன் மாநகரில் சித்து இதற்கு முன்னால் சுற்று திரிந்த இடங்களை கெல்லாம் ரோஜாவை அழைத்துச் சென்று அவனை விரும்பியதை வாங்கி கொடுத்து அவள் சந்தோஷத்தை கண்டு மகிழ்ந்தான்.
ரோஜாவிற்கோ சொல்ல வேண்டுமா அவர் அந்த ஊர் அங்கிருக்கும் மக்கள் வந்து அவள் ஆசையாக வாங்கும் பொருட்கள் என ஒவ்வொன்றையும் பார்த்து வாங்கி சந்தோஷப்பட்டாள்.
சித்து , ரோஜா இருவரும் ஒரு ஷாப்பிங் மாலை சுற்றி வந்து கொண்டு இருந்தனர். கையில் ஜூஸை வைத்து குடித்துக்கொண்டு இருந்த ரோஜா திடீர் என்று "சின்னையா!.. அங்க பாருங்க.." என்று ஆச்சர்யமாக சொன்னவள் வேகமாக அங்கே வரும் வாடிக்கையாளர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்து போட்டோ பூத்திற்கு அருகில் நின்றவள்.
"சின்னையா! சின்னையா! நான் இதுல ஒரு போட்டோ எடுத்துக்கிறேனே..." என்று கெஞ்சினாள் அவனிடம்.
"போட்டோ தானே தாராளமா எடுத்துக்கோ.. ஆனா ஒரு கண்டிஷன் " என்றான்.
"என்ன?" என்று அவனை பார்த்தாள்.
"அது என்ன நீ மட்டும் தனியா போய் போட்டோ எடுக்கணும்னு சொல்ற, நான் இங்க ஒருத்தன் இருக்கிறது உனக்கு நியாபகம் இல்லையா?" என்றவன்.
"நீ அதுல போட்டோ எடுக்கணும்னா நானும் உன் கூட வருவேன் . நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கலாம்" என்றான்.
"ச்சே! என்ன இவரு இப்படி என்னை அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்காரு" என்று யோசித்தவள்.
"சின்னையா போட்டோ தானே எடுக்கலாம். ஆனா முதல்ல நான் ஒரு போட்டோ எடுத்துகிறேன். அப்பறோம் நீங்க தனியா ஒரு போட்டோ எடுத்துக்கோங்க. எனக்கு இதுல போட்டோ எடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை" என்றாள்.
"அவ்ளோ தானே எடுத்துக்கோ.. ஆனா என்கூட தான் நீ போட்டோ எடுக்கணும்" என்றான் விடாப்பிடியாக.
"ஏன் உங்க கூடையே போட்டோ எடுக்கணும்னு சொல்றிங்க.. என்னால அதெல்லாம் முடியாது" என்று தலையை வேகமாக முடியாது என்று ஆட்டினாள்.
"ஓஹோ! என்கூட போட்டோ எடுக்க உனக்கு விருப்பம் இல்ல அதானே.." என்றான் அவளை பார்த்து கோபமாக.
"விறுப்பம் இல்லேன்னு சொல்லல சின்னையா.. " என்று நெளிந்தவள்.
"ஒரு போட்டோ எடுக்கணும் அதுக்கு ஏன் இவ்ளோ அலப்பறை பண்றீங்க.."என்று சலித்துக்கொண்டாள்.
"யாரு நானா! நானா! அலப்பறை பண்றேன். என்னை பார்த்து எப்படி நீ சொல்லலாம்" என்று ரோஜாவை நெருங்கியவன். அவள் காதருகில் வந்து "என் கூட வெறும் டவலை மட்டும் கட்டிட்டு செல்பி எடுத்த தானே.. இப்போ என்ன மாட்டேன்னு சொல்ற.." என்று ரகசியமாக அவள் காதருகில் பேசினான்.
சித்துவின் ஹஸ்கி குரலும், அவன் சூடான மூச்சுக்காற்றும் அந்த லண்டன் குளிரில் அவள் ரத்தம் சூடேறியது. முகம் சிவந்து போனது. அவள் தோளில் கைவைத்து அழுத்தி நின்று இருந்தவன் உடல் அவள் மேல் உரசிக்கொண்டு இருக்க அவை எல்லாம் ரோஜாவிற்கு இன்ப வேதனையாக இருந்தது. அவன் நெருக்கம் ரோஜாவை ஏதோ செய்ய...
தன் மூச்சை பிடித்துக்கொண்டு சித்துவை விட்டு தள்ளி நின்றவள். "சின்னையா! அது .. நான் உங்க போட்டோவ வரைஞ்சு அதுகூட செல்பி எடுத்துக்கிட்டேன். நீங்க சொன்ன மாதிரி எல்லாம் நான் நினைச்சுக்கூட பார்க்கல" என்றாள் .
"நினைச்சு கூட பாக்கலையா! என் கூட அந்த பொண்ணுங்க எடுத்த மாதிரி உன்னால எடுக்க முடியலேன்னு தானே என் போட்டோவை வரைஞ்சு நீ செல்பி எடுத்துகிட்டே.." என்றான்.
"அது.. அது வந்து .. இல்... இல்ல.." என்று ஏதோ பேச வந்து மறந்தவளாக அவனை பார்த்தாள்.
"ம்ம்.. என்ன... சொல்லு.." என்று அவளை வம்பிழுத்த சித்து.
"இங்க பாரு நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி. உன்கூட நான் எப்படி வேணா போட்டோ எடுப்பேன்" என்றவன் "நீ வா.. "என்று ரோஜாவின் தோள்களில் கையை வைத்து அவளை பின் இருந்து தள்ளிக்கொண்டு போட்டோ பூத்திற்குள் நுழைந்தான்.
"சின்னையா! என்ன .. என்ன பண்றீங்க.. " என்று உள்ளே சென்றாள்.
பூத் திரைசீலையை இழுத்து மூடியவன் அங்கே இருந்த பணம் செலுத்தும் இடத்தில் பர்ஸை எடுத்து பணத்தை செலுத்தியவன் "ரெடியா!" என்றான்.
சித்துவின் இந்த அதீத உரிமையும், நெருக்கமும் ரோஜாவை திக்குமுக்காட செய்தது. அவள் என்ன நடக்கிறது என்பது போல சித்துவையே பார்க்க...
"ம்ம்ம் போஸ் குடு .. சிரி" என்று அவள் தோள் மேல் கையை போட்டு ரோஜாவை அணைத்தபடி நின்றான்.
ரோஜா அவனையே ஆச்சர்யத்தில் பார்க்க... சித்துவோ கேமெராவை பார்த்து போஸ் கொடுத்தான்.
வரிசையாக க்ளிக்!.. க்ளிக்!.. என்று சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க.. அடுத்தடுத்த போஸ்களை ரோஜாவை பிடித்துக்கொண்டு நின்றான் சித்து .
"சரி இப்போ ஒரு மெமோரபிள் போஸ் ஒன்னு கொடுக்கலாமா? இது நீயும் நானும் ஒருத்தருக்கு ஒருத்தர் நியாபகம் வெச்சுக்கிறதுக்கு" என்றவன் மீண்டும் அந்த மெஷினில் பணத்தை செலுத்திவிட்டு ரோஜாவை பார்த்தான்.
ரோஜாவும் அவனை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள் . இவ்வளவு நேரமும் அவனை மட்டும் தான் பார்த்துக்கொண்டு இருந்தாள் என்று சித்து கவனிக்கவில்லை,
இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் இருந்தது.
ரோஜாவின் கண்களில் ஏதோ ஒரு விஷயம் சித்துவிற்கு தெரிவதை அவனுக்கு தோன்றியது. அவள் இமைக்காமல் சித்துவையே பார்த்துக்கொண்டு இருக்க...
சித்துவிற்கு அவள் பார்வை உள்ளுக்குள் சென்று அவன் இதயத்தில் ரோஜாவை நிறைத்துக்கொண்டு இருந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு முன்னேறினர்.
ரோஜாவின் விழிகள் சித்துவின் கண்களை விட்டு நகரவில்லை. சித்துவுக்கும் இப்பொது அப்படி தான் தோன்றியது. அவளை மெல்ல நெருங்கியவன் ரோஜாவிற்கு இன்ப அதிர்ச்சியாக முத்தம் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தவன்.
எந்த அவசரமும் இல்லாமல் மெல்ல நெருங்கி அவள் இதழை முதன் முறை காதலாக.. ஆசையாக.. மென்மையாக முத்தம் கொடுத்தான் .
மெல்ல அவள் இதழில் தன் இதழை ஒற்றி எடுத்துவிட்டு ரோஜாவின் கண்களை பார்க்க.. அவளோ இன்னமும் அதே உறைந்த நிலையில் தான் இருந்தாள்.
"என்ன டி இப்படி பாக்குற என்ன... நீ இப்படி பாக்குற அப்போ எனக்குள்ள என்ன என்னவோ செய்யுதே ரோஜா!. நானே அந்த போட்டோவை பார்த்ததில் இருந்து உன்கிட்டே நெருங்க நினைச்சும் என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன். இப்படி என்னை விடாம பார்த்து என்னை ஏன் டி டெம்ப்ட் ஏத்துற.." என்று உள்ளுக்குள் தவித்தவன்.
தன் உதட்டை ஈரம் செய்து அவள் கீழ் உதட்டை தன் இதழால் கவ்வி ஒட்டி இருந்த அவள் உதட்டை பிரித்து தன் உதட்டுக்குள் புதைத்துகொண்டு சுவைத்தான்.
அதுவரை உரை நிலையில் கண்கள் சிமிட்டாமல் இருந்தவள் அவன் முத்தம் அவளையும் அறியாமல் ரோஜாவை கண்கள் மூட வைத்திருந்தது.
அவள் கீழ் உதடு மேல் உதடு என்று மாறி மாறி சித்து முத்தம் கொடுத்துக்கொண்டே இருக்க..
அந்த அழகிய இருவரின் முதல் தருணத்தை ஒன்று விடாமல் வரிசையாக கிளிகித் தள்ளியது.
"சித்து!.. சித்து!!.. " என்று விஷ்ணு வெளியே இருந்து குரல் கொடுக்க..
அந்த சத்தத்தில் கண்விழித்த ரோஜா அவளுக்கு மெய் மறந்து முத்தம் கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியானவள். சட்டென்று அவனை தன் இடம் இருந்து தள்ளிவிட்டவள் . வேகமாக உதட்டை துடைத்துகொண்டே சித்துவை பார்த்தாள்.
இன்னமும் ரோஜாவை முத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கும் உணர்வு நீங்காமல் நின்று இருந்த சித்து .
"ஹே! கியூட்டி... ஏன் என்னை தள்ளிவிட்டே வா.." என்று அவள் கையை பிடித்து இழுக்க...
"சின்னையா! கையை விடுங்க" என்று உதறிவிட்டு
"விஷ்ணு அண்ணா கூப்பிட்றாங்க " என்றவள் வேகமாக வெளியே சென்றுவிட...
"ஹேய்!ஹேய்!.. " என்று சென்றவேளை நிறுத்த முடியாமல் தடுமாறியவன் "இந்த விஷ்ணுக்கு என்னவாம் "என்று அவன் மீது கோபமாக தலையை கோதியவன்.
அவர்கள் எடுத்த போட்டோ வரிசையாக வந்து விழுந்து இருக்க அதை பார்த்தவன் அந்த போட்டோக்களை எடுத்து அங்கிருந்த கவரில் போடு அதை தன் கோட் பேக்கெட்டில் வைத்துவிட்டு வெளியே வந்தவன்.
"டேய்! விஷ்ணு! இப்போ என்ன டா வந்துச்சு உனக்கு " என்று அவனை பார்த்தான்.
விஷ்ணுவோ கையில் போனை பிடித்துக்கொண்டு "சித்து! ராபர்ட் லைன்ல இருக்கார். ஏதோ முக்கியமா உன்கிட்டே பேசணுமா.." என்று போனை அவனிடம் நீட்டினான்.
யோசனையோடு போனை வாங்கி காதில் வைத்தவன் "ஹலோ!" என்றான்.
மறுமுனையில் ஏதோ ராபர்ட் கூட இருக்கிய முகத்தோடு "ம்ம்.. இப்பவே வரேன்" என்று போனை வைத்தவன் ரோஜாவை அழைத்துக்கொண்டு ராபர்ட்டை பார்க்க விரைந்தான்.
WHATSAPP
PRATILIPI
FACEBOOK
TELEGRAM
"இங்க பாரு ரோஜா ஸ்வீட் எல்லாம் இவ்ளோ அதிகம் சாப்பிட கூடாது. நீ உன் இஷ்டத்துக்கு சுவீட்டை உள்ள தள்ளிக்கிட்டு இருக்க.. நம்ம வெளிய சுத்தி பார்க்க வந்தமா? இல்ல நீ ஸ்வீட் சாப்பிட வந்தியா" என்று இரண்டு கையிலும் இனிப்பலான தின்பண்டங்களை வைத்து சாப்பிட்டபடி நடந்து வரும் ரோஜாவை பார்த்து முறைத்தான்.
"ஏன் சின்னையா! என்னை இப்படி பாக்குறீங்க. உங்களுக்கு வேணும்னா எடுத்துக்கோங்க அதுக்குன்னு இப்படி குறு குறுன்னு நான் சாப்பிடறதை பார்த்தா எனக்கு வயிறு வலிக்காதா?" என்றாள். ஒரு லாலிபாப்பை பிரித்து வாயில் வைத்தபடி
"ஏய்! ஏய்! எதுக்கு டி இவ்ளோ சாப்பிடற நீ . இவ்ளோ ஸ்வீட் சாப்பிட்டா உடம்பு என்ன ஆகும்" என்று அவளிடம் வந்தவன் ரோஜா வாயில் வைத்திருந்த லாலிபாப்பை பிடுங்கி கீழே வீச போனான்.
"சின்னையா!" என்று தான் சாப்பிட்டதை பிடுங்கியவனை பார்த்து ரோஜா கத்த.
"எதுக்கு இவ்ளோ சவுண்ட்..." என்று சொல்லிக்கொண்டே வீச இருந்த லாலிபாப்பை அவன் வாய்க்குள் வைத்து சுவைத்தவன்.
"ம்ம்.. எவ்ளோ ஸ்வீட்டா இருக்கு.. நீ டேஸ்ட் பண்ணி கொடுத்ததனால தான் இது இவ்ளோ ஸ்வீட்டா இருக்கா?" என்று அவளை குறும்பாக பார்த்தான்.
"அடப்பாவி! வேணாம் வேணாம்னு நான் சொல்ல சொல்ல கேக்காம இருக்குற சுவீட்டை மொத்தத்தையும் வாங்கி என் கையில திணிச்சிட்டு . இப்போ எப்படி பேசுறார். இவனுக்கு வேணும்னா வாங்கி சாப்பிட வேண்டியது தானே . அதை விட்டுட்டு என்னை சாக்கா வெச்சிட்டு இவர் சுவீட்டை சாப்பிடறாரு " என்று புலம்பியவள் திரும்பி அவர்களுக்கு பின்னால் சற்று இடைவெளிவிட்டு வந்து கொண்டு இருந்த விஷ்ணுவையும், சித்துவின் பாடிகார்டுகளையும் பார்த்தாள்.
"ரோஜா! அவனுக்கு ஏன் சுவீட்டை கொடுத்த.. அவனோட dietician சித்து ஸ்வீட் சாப்பிட கூடாதுனு கண்டிஷன் போயிருக்காரு. அவன்கிட்டே இருந்து அந்த லாலிபாப்பை வாங்கு" என்றான் விஷ்ணு.
"இருங்க அண்ணா அவர் ஒன்னு தானே சாப்பிடறாரு சாப்பிட்டு போகட்டுமே.. பாவமா இருக்கு அவரை பார்க்க... பாருங்க எப்படி ரசிச்சு ரசிச்சு எந்த லாலிபாப்பை சாப்பிடறாருனு" என்று லாலிபாப்பை சுவடித்துக்கொண்டே லண்டன் வீதிகளில் ஜாலியாக சென்று கொண்டு இருந்தவனை பார்த்து கூறினாள்.
"சரி நீ சொல்றேண்ணேன்னு நான் அவனை சும்மா விடறேன். எல்லாம் நாம ஊருக்கு போற வரைக்கும் தான் . அப்பறோம் அங்க வந்துட்டு இந்த மாதிரி வேளை எல்லாம் அவன் செய்ய கூடாது . அதுக்கு நீ தான் பொறுப்பு" என்றான் விஷ்ணு.
"சரி சரி விடுங்க நான் பாத்துக்கிறேன்" என்று சித்துவின் பின்னால் வேகமாக நடந்தாள்.
இருவரும் அங்கிருந்த ஷாப்பிங் காம்ப்லெஸ், மால் என்று அந்த லண்டன் மாநகரில் சித்து இதற்கு முன்னால் சுற்று திரிந்த இடங்களை கெல்லாம் ரோஜாவை அழைத்துச் சென்று அவனை விரும்பியதை வாங்கி கொடுத்து அவள் சந்தோஷத்தை கண்டு மகிழ்ந்தான்.
ரோஜாவிற்கோ சொல்ல வேண்டுமா அவர் அந்த ஊர் அங்கிருக்கும் மக்கள் வந்து அவள் ஆசையாக வாங்கும் பொருட்கள் என ஒவ்வொன்றையும் பார்த்து வாங்கி சந்தோஷப்பட்டாள்.
சித்து , ரோஜா இருவரும் ஒரு ஷாப்பிங் மாலை சுற்றி வந்து கொண்டு இருந்தனர். கையில் ஜூஸை வைத்து குடித்துக்கொண்டு இருந்த ரோஜா திடீர் என்று "சின்னையா!.. அங்க பாருங்க.." என்று ஆச்சர்யமாக சொன்னவள் வேகமாக அங்கே வரும் வாடிக்கையாளர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்து போட்டோ பூத்திற்கு அருகில் நின்றவள்.
"சின்னையா! சின்னையா! நான் இதுல ஒரு போட்டோ எடுத்துக்கிறேனே..." என்று கெஞ்சினாள் அவனிடம்.
"போட்டோ தானே தாராளமா எடுத்துக்கோ.. ஆனா ஒரு கண்டிஷன் " என்றான்.
"என்ன?" என்று அவனை பார்த்தாள்.
"அது என்ன நீ மட்டும் தனியா போய் போட்டோ எடுக்கணும்னு சொல்ற, நான் இங்க ஒருத்தன் இருக்கிறது உனக்கு நியாபகம் இல்லையா?" என்றவன்.
"நீ அதுல போட்டோ எடுக்கணும்னா நானும் உன் கூட வருவேன் . நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கலாம்" என்றான்.
"ச்சே! என்ன இவரு இப்படி என்னை அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்காரு" என்று யோசித்தவள்.
"சின்னையா போட்டோ தானே எடுக்கலாம். ஆனா முதல்ல நான் ஒரு போட்டோ எடுத்துகிறேன். அப்பறோம் நீங்க தனியா ஒரு போட்டோ எடுத்துக்கோங்க. எனக்கு இதுல போட்டோ எடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை" என்றாள்.
"அவ்ளோ தானே எடுத்துக்கோ.. ஆனா என்கூட தான் நீ போட்டோ எடுக்கணும்" என்றான் விடாப்பிடியாக.
"ஏன் உங்க கூடையே போட்டோ எடுக்கணும்னு சொல்றிங்க.. என்னால அதெல்லாம் முடியாது" என்று தலையை வேகமாக முடியாது என்று ஆட்டினாள்.
"ஓஹோ! என்கூட போட்டோ எடுக்க உனக்கு விருப்பம் இல்ல அதானே.." என்றான் அவளை பார்த்து கோபமாக.
"விறுப்பம் இல்லேன்னு சொல்லல சின்னையா.. " என்று நெளிந்தவள்.
"ஒரு போட்டோ எடுக்கணும் அதுக்கு ஏன் இவ்ளோ அலப்பறை பண்றீங்க.."என்று சலித்துக்கொண்டாள்.
"யாரு நானா! நானா! அலப்பறை பண்றேன். என்னை பார்த்து எப்படி நீ சொல்லலாம்" என்று ரோஜாவை நெருங்கியவன். அவள் காதருகில் வந்து "என் கூட வெறும் டவலை மட்டும் கட்டிட்டு செல்பி எடுத்த தானே.. இப்போ என்ன மாட்டேன்னு சொல்ற.." என்று ரகசியமாக அவள் காதருகில் பேசினான்.
சித்துவின் ஹஸ்கி குரலும், அவன் சூடான மூச்சுக்காற்றும் அந்த லண்டன் குளிரில் அவள் ரத்தம் சூடேறியது. முகம் சிவந்து போனது. அவள் தோளில் கைவைத்து அழுத்தி நின்று இருந்தவன் உடல் அவள் மேல் உரசிக்கொண்டு இருக்க அவை எல்லாம் ரோஜாவிற்கு இன்ப வேதனையாக இருந்தது. அவன் நெருக்கம் ரோஜாவை ஏதோ செய்ய...
தன் மூச்சை பிடித்துக்கொண்டு சித்துவை விட்டு தள்ளி நின்றவள். "சின்னையா! அது .. நான் உங்க போட்டோவ வரைஞ்சு அதுகூட செல்பி எடுத்துக்கிட்டேன். நீங்க சொன்ன மாதிரி எல்லாம் நான் நினைச்சுக்கூட பார்க்கல" என்றாள் .
"நினைச்சு கூட பாக்கலையா! என் கூட அந்த பொண்ணுங்க எடுத்த மாதிரி உன்னால எடுக்க முடியலேன்னு தானே என் போட்டோவை வரைஞ்சு நீ செல்பி எடுத்துகிட்டே.." என்றான்.
"அது.. அது வந்து .. இல்... இல்ல.." என்று ஏதோ பேச வந்து மறந்தவளாக அவனை பார்த்தாள்.
"ம்ம்.. என்ன... சொல்லு.." என்று அவளை வம்பிழுத்த சித்து.
"இங்க பாரு நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி. உன்கூட நான் எப்படி வேணா போட்டோ எடுப்பேன்" என்றவன் "நீ வா.. "என்று ரோஜாவின் தோள்களில் கையை வைத்து அவளை பின் இருந்து தள்ளிக்கொண்டு போட்டோ பூத்திற்குள் நுழைந்தான்.
"சின்னையா! என்ன .. என்ன பண்றீங்க.. " என்று உள்ளே சென்றாள்.
பூத் திரைசீலையை இழுத்து மூடியவன் அங்கே இருந்த பணம் செலுத்தும் இடத்தில் பர்ஸை எடுத்து பணத்தை செலுத்தியவன் "ரெடியா!" என்றான்.
சித்துவின் இந்த அதீத உரிமையும், நெருக்கமும் ரோஜாவை திக்குமுக்காட செய்தது. அவள் என்ன நடக்கிறது என்பது போல சித்துவையே பார்க்க...
"ம்ம்ம் போஸ் குடு .. சிரி" என்று அவள் தோள் மேல் கையை போட்டு ரோஜாவை அணைத்தபடி நின்றான்.
ரோஜா அவனையே ஆச்சர்யத்தில் பார்க்க... சித்துவோ கேமெராவை பார்த்து போஸ் கொடுத்தான்.
வரிசையாக க்ளிக்!.. க்ளிக்!.. என்று சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க.. அடுத்தடுத்த போஸ்களை ரோஜாவை பிடித்துக்கொண்டு நின்றான் சித்து .
"சரி இப்போ ஒரு மெமோரபிள் போஸ் ஒன்னு கொடுக்கலாமா? இது நீயும் நானும் ஒருத்தருக்கு ஒருத்தர் நியாபகம் வெச்சுக்கிறதுக்கு" என்றவன் மீண்டும் அந்த மெஷினில் பணத்தை செலுத்திவிட்டு ரோஜாவை பார்த்தான்.
ரோஜாவும் அவனை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள் . இவ்வளவு நேரமும் அவனை மட்டும் தான் பார்த்துக்கொண்டு இருந்தாள் என்று சித்து கவனிக்கவில்லை,
இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் இருந்தது.
ரோஜாவின் கண்களில் ஏதோ ஒரு விஷயம் சித்துவிற்கு தெரிவதை அவனுக்கு தோன்றியது. அவள் இமைக்காமல் சித்துவையே பார்த்துக்கொண்டு இருக்க...
சித்துவிற்கு அவள் பார்வை உள்ளுக்குள் சென்று அவன் இதயத்தில் ரோஜாவை நிறைத்துக்கொண்டு இருந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு முன்னேறினர்.
ரோஜாவின் விழிகள் சித்துவின் கண்களை விட்டு நகரவில்லை. சித்துவுக்கும் இப்பொது அப்படி தான் தோன்றியது. அவளை மெல்ல நெருங்கியவன் ரோஜாவிற்கு இன்ப அதிர்ச்சியாக முத்தம் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தவன்.
எந்த அவசரமும் இல்லாமல் மெல்ல நெருங்கி அவள் இதழை முதன் முறை காதலாக.. ஆசையாக.. மென்மையாக முத்தம் கொடுத்தான் .
மெல்ல அவள் இதழில் தன் இதழை ஒற்றி எடுத்துவிட்டு ரோஜாவின் கண்களை பார்க்க.. அவளோ இன்னமும் அதே உறைந்த நிலையில் தான் இருந்தாள்.
"என்ன டி இப்படி பாக்குற என்ன... நீ இப்படி பாக்குற அப்போ எனக்குள்ள என்ன என்னவோ செய்யுதே ரோஜா!. நானே அந்த போட்டோவை பார்த்ததில் இருந்து உன்கிட்டே நெருங்க நினைச்சும் என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன். இப்படி என்னை விடாம பார்த்து என்னை ஏன் டி டெம்ப்ட் ஏத்துற.." என்று உள்ளுக்குள் தவித்தவன்.
தன் உதட்டை ஈரம் செய்து அவள் கீழ் உதட்டை தன் இதழால் கவ்வி ஒட்டி இருந்த அவள் உதட்டை பிரித்து தன் உதட்டுக்குள் புதைத்துகொண்டு சுவைத்தான்.
அதுவரை உரை நிலையில் கண்கள் சிமிட்டாமல் இருந்தவள் அவன் முத்தம் அவளையும் அறியாமல் ரோஜாவை கண்கள் மூட வைத்திருந்தது.
அவள் கீழ் உதடு மேல் உதடு என்று மாறி மாறி சித்து முத்தம் கொடுத்துக்கொண்டே இருக்க..
அந்த அழகிய இருவரின் முதல் தருணத்தை ஒன்று விடாமல் வரிசையாக கிளிகித் தள்ளியது.
"சித்து!.. சித்து!!.. " என்று விஷ்ணு வெளியே இருந்து குரல் கொடுக்க..
அந்த சத்தத்தில் கண்விழித்த ரோஜா அவளுக்கு மெய் மறந்து முத்தம் கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியானவள். சட்டென்று அவனை தன் இடம் இருந்து தள்ளிவிட்டவள் . வேகமாக உதட்டை துடைத்துகொண்டே சித்துவை பார்த்தாள்.
இன்னமும் ரோஜாவை முத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கும் உணர்வு நீங்காமல் நின்று இருந்த சித்து .
"ஹே! கியூட்டி... ஏன் என்னை தள்ளிவிட்டே வா.." என்று அவள் கையை பிடித்து இழுக்க...
"சின்னையா! கையை விடுங்க" என்று உதறிவிட்டு
"விஷ்ணு அண்ணா கூப்பிட்றாங்க " என்றவள் வேகமாக வெளியே சென்றுவிட...
"ஹேய்!ஹேய்!.. " என்று சென்றவேளை நிறுத்த முடியாமல் தடுமாறியவன் "இந்த விஷ்ணுக்கு என்னவாம் "என்று அவன் மீது கோபமாக தலையை கோதியவன்.
அவர்கள் எடுத்த போட்டோ வரிசையாக வந்து விழுந்து இருக்க அதை பார்த்தவன் அந்த போட்டோக்களை எடுத்து அங்கிருந்த கவரில் போடு அதை தன் கோட் பேக்கெட்டில் வைத்துவிட்டு வெளியே வந்தவன்.
"டேய்! விஷ்ணு! இப்போ என்ன டா வந்துச்சு உனக்கு " என்று அவனை பார்த்தான்.
விஷ்ணுவோ கையில் போனை பிடித்துக்கொண்டு "சித்து! ராபர்ட் லைன்ல இருக்கார். ஏதோ முக்கியமா உன்கிட்டே பேசணுமா.." என்று போனை அவனிடம் நீட்டினான்.
யோசனையோடு போனை வாங்கி காதில் வைத்தவன் "ஹலோ!" என்றான்.
மறுமுனையில் ஏதோ ராபர்ட் கூட இருக்கிய முகத்தோடு "ம்ம்.. இப்பவே வரேன்" என்று போனை வைத்தவன் ரோஜாவை அழைத்துக்கொண்டு ராபர்ட்டை பார்க்க விரைந்தான்.
PRATILIPI
TELEGRAM
Author: layastamilnovel
Article Title: யாரடி நீ 21
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: யாரடி நீ 21
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.