logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
410
சித்து, ரோஜா இருவரும் வந்த கார் ராபர்ட் சொன்ன ஹோட்டலில் வந்து நின்று இருக்க.. அவர்களுக்கு வந்து கார் கதவை திறந்துவிட்டார் ராபர்ட் .

குழப்பமான மனநிலையில் வந்திருந்த சித்து ராபர்ட்டை பார்த்ததும் இறங்கி வந்த சித்து "என்ன ஆச்சு ராபர்ட்? ஏன் திடீர்னு என்னை கிளம்பி வர சொல்லிருக்கீங்க? ஏதும் பிரச்சனையா?" என்றான்.

"நோ! நோ! சித்து மன்னிக்கணும் நான் விஷயத்தை சொல்லாம உங்களை வரவழைச்சத்துக்கு" என்றவர்.

"வாங்க நாம உள்ள போய் பேசலாம்" என்று சித்துவையும் அவனோடு ரோஜாவையும் உள்ளே அழைத்து சென்றார்.

இருவரையும் அந்த ஹோட்டலில் இருந்த ஒரு மீட்டிங் ஹாலுக்கு அழைத்து வந்த ராபர்ட் அந்த அறைக்குள் செல்வதற்கு முன்பு சித்துவை பார்த்து "என்னோட ப்ரொடக்ஷன் ஹவுசில் இன்னோரு பார்ட்னர் இருக்காருன்னு நான் சொன்னேனே நியாபகம் இருக்கா?" என்றார் .

"ம்ம்.. தெரியுமே, அவர் கூட உங்க வீட்ல நடந்த பார்ட்டிக்கு முடியலையின்னு சொன்னதா நீங்க என்கிட்டே சொன்னிங்களே" என்றவன்.

"அவர் பேர் கூட... " என்று சித்து யோசிக்க.

"ஹேரி! அவர் பேர் ஹேரி " என்றார் ராபர்ட்.

அவர் சொன்னதும் ஆமாம் என்று தலையாட்டிய சித்து . தான் இங்கு வந்ததை கணக்கு போட்டவன்.

"இப்போ ஹேரியை மீட் பண்ண தான் என்னை இங்கே வர சொன்னிங்களா?" என்றான்.

"ஆமா சித்து, ஹேரியை மீட் பண்ண தான் வர சொன்னேன். ஆனா... " என்று ராபர்ட் தயங்க..

"என்ன ராபர்ட் ? ஏன் தயங்குறீங்க. நம்ம படத்தோட ப்ரோடுக்ஷன்ல ஏதாவது பிரச்சனையா? அவர் இன்வெஸ்ட்மென்ட் எதுவும் செய்ய முடியாதுனு சொல்லிட்டாரா? இல்ல வேற ஏதாவது பிரச்சனையா?" என்றார் சித்து .

"இன்வெஸ்ட்மெண்ட்ல எந்த பிரச்னையும் இல்ல சித்து" என்று மீண்டும் தயங்கியவர்.

"முதல்ல உள்ள போகலாம் வாங்க . அங்க போனாலே எல்லாமே புரியும் உங்களுக்கு" என்று கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல...

என்னவாக இருக்கும் என்ற யோசனையில் "வா " என்று ரோஜாவின் கையை பிடித்து அழைத்தபடி உள்ளே சென்றான்.

"என்ன சித்து அந்த வேலைக்காரி பொண்ணை போய் இப்படி பிசினஸ் மீட்டிங்குக்கு கூப்டு வந்திருக்க..." என்று நக்கலான ஒரு குரல் அவனை நோக்கி வரவும்.

சட்டென்று நிமிர்ந்து பார்க்க அங்கே ராகுலுடன் , ரித்திகா அமர்ந்து இருந்தாள்.

"நீயா! நீ எதுக்காக இங்க வந்திருக்க.. உன்னை தான் இந்த படத்தை விட்டு தூக்கியச்சே. உனக்கு இங்க என்ன வேலை?" என்று கேட்டபடி அவளிடம் சென்றான்.

"யார் சொன்னது நான் இந்த படத்தில் இல்லேன்னு. நான் இந்த படத்தோட ஹீரோயின் அது உனக்கு தெரியும் தானே. நீதானே என்னை இந்த படத்துல உன்கூட ஜோடியாக்கின" என்று நக்கலாக சிரித்தாள்.

"அது முடிஞ்சு போன கதை உன்னை தான் இந்த படத்துல இருந்து நீக்கியாச்சே. அப்பறோம் உனக்கு இங்க என்ன வேலை" என்றான் காட்டமாக.

இங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ஹேரி "சித்து வாட் HAPPENED ?" என்று அவர்கள் இருவருக்கும் அருகில் வந்தார்.

காட்டத்தில் இருந்த சித்து பேசவர...

"சித்து டென்ஷன் வேண்டாம் . வாங்க உக்காந்து பேசலாம்" என்று ராபர்ட் அவனை அழைக்க..

சித்து அமைதியானவன் "ஹலோ மிஸ்டர் ஹேரி , சாரி நான் ஒரு தேவையில்லாத பிரச்னையால உங்களை சரியா கவனிக்கல.. " என்று அவர் முன் கை நீட்டி அவரிடம் நட்பாக புன்னகைத்தான்.

"இட்ஸ் ஓகே சித்து. வாங்க நாம உக்காந்து பேசலாம்" என்று அவனோடு சென்று அமர்ந்தவர்.

"ரித்திகாவை இந்த படத்துல நடிக்க கூடாதுனு நம்ம முடிவெடுத்தோம். ஆனா அவங்களை இந்த படத்துல நடிக்க வெக்க வேண்டிய நிர்பந்தத்துல நான் இப்போ இருக்கேன்" என்று ராபர்ட் கூற.

"ஏன் என்ன காரணம் . இந்த படத்துல இவளை தவிர ஹீரோயினா நடிக்க வைக்க முடியலையா? அப்படி உங்களால முடியாலையின்னா சொல்லுங்க . நான் ஒரு நல்ல நடிகையை ரித்திகாவை விட திறமையா இருக்க நடிகையை நடிக்க வைக்கிறேன்" என்றான் சித்து.

"இல்ல சித்து அதுக்கு அவசியம் இல்ல . இந்த படத்துக்கு வேற ஹீரோயின் புக் பண்ணியாச்சு. ஆனா இந்த படத்துல செகண்ட் ஹீரோயினா ரித்திகாவை நடிக்க வைக்கனும்னு ஹேரி ஆசைப்படறார்" என்றார் ராபர்ட்.

"மிஸ்டர் ராபர்ட் என்ன சொல்றிங்க!" என்றான் அதிர்ச்சியாக.

"இந்த படத்துல செகண்ட் ஹீரோயினா ரித்திகா நடிக்கணும்னு ஹேரி கண்டிப்பா சொல்லிட்டார். அவர்கிட்டே எங்களால மறுத்து பேச முடியல " என்றார்.

"ஏன் என்ன காரணம் " என்ற சித்து இதை ஹேரியை பார்த்து கேட்டிருந்தான்.

"காரணம் இருக்கு மிஸ்டர் சித்து . நான் இவங்களுக்கு ப்ரோமிஸ் பண்ணிருக்கேன். இந்த படத்துல ஒரு முக்கியமான ரோல் கொடுக்கிறேன்னு . என்னை கேக்காமலேயே நீங்க இவங்களை இந்த படத்துல இருந்து விலக்கிட்டீங்க. அதில் எனக்கு கொஞ்சம் வருத்தம் இருக்க தான் செய்யுது . இருந்தாலும் நீங்க இவங்களை வேண்டாம்னு சொல்ல காரணம்னு என்னனு என்னால நல்லாவே புரிஞ்சுக்க முடியுது. அதுக்கு மதிப்பு கொடுத்து தான் நான் ரித்திகா உங்ககூட ஹீரோயினா நடிக்க வைக்காம அவங்கள இந்த படத்தோட செகண்ட் ஹீரோயின் கேரக்டர்ல நடிக்க வைக்க ப்ரோமிஸ் பண்ணிருக்கேன்.”

“ எப்படி உங்க டெசிஷனுக்கு நான் மதிப்பு கொடுத்தேனோ. அதே போல என்னோட முடிவுக்கும் நீங்க சம்மதம் சொல்லுவீங்கன்னு நம்புறேன். அந்த நம்பிக்கையில் தான் இந்த மீட்டிங்கையும் நான் ஏற்பாடு செய்தேன்" என்று தான் நினைத்ததை நேரடியாக அதே சமயம் அதிகாரமாக இல்லாமல் பொறுமையாக சித்துவிடம் எடுத்து கூறினார்.

அவர் இவ்வளவு சொன்ன பிறகும் சித்துவாள் மறுக்க முடியுமா?

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் "சரி " என்று சம்மதம் சொல்லும்விதமாக தலையை ஆட்டினான்.

அதில் சந்தோசம் ஆன ஹேரி "தேங்க் யூ சித்து " என்று சந்தோசத்தோடு சொன்னவர்,

"ஆஹ்! உங்க மிஸ்செஸ்ஸை நீங்க எனக்கு இண்ட்ரோடியுஸ் செய்யவே இல்லை" என்றார்.

அதுவரை அமைதியாக அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ரோஜா ஹேரியின் பேச்சை கேட்டதும் நெளிந்தபடி சித்துவை பார்த்தாள்.

இவ்வளவு நேரம் கடுகடுவென இருந்த சித்து ரோஜாவை பற்றி கேட்டதும் அவன் மனநிலை அப்படியே மாறிவிட்டது.

அப்போது அவன் மனநிலையை கெடுக்கும்விதமாக "சித்துவோட மனைவி இவங்க தான். இவங்க பேரு ரோஜா " என்ற ரித்திகா.

"இவ சித்துவோட வீட்டு வேலைக்காரி பொண்ணு " என்று அழுத்தமாக ஹேரிக்கு புரியும்விதமாக அவள் கூற.

ரித்திகா பேசியதை கேட்டதும் கோபம் கொண்ட சித்து அவளை முறைத்தவன் அவளிடம் பேச வாய் எடுக்க...

"சோ வாட்.. வேலைக்காரி பொண்ணை கல்யாணம் செய்துக்க கூடாதுனு எதுவும் ரூல்ஸ் இருக்கா? " என்று ஆங்கிலத்தில் பேசினாள் ரோஜா.

ரோஜா இப்படி பேசுவதை நம்ப முடியாத ரித்திகா "என்ன!" என்பது போல ரோஜாவை பார்க்க..

"என்ன ரித்திகா பதில் சொல்லு . வேலைக்காரியோட பொண்ணுக்கு கல்யாணம் ஆகாதா? " என்றாள்

"ஆகலாம் . ஆனா உன்னோட தகுதிக்கு சித்துவை நீ கல்யாணம் செய்திருக்கியே அது எப்படி சரி ஆகும். சித்துவோட வசதிக்கும் அந்தஸ்துக்கும் அவன் நினைச்ச சொடக்கு போடற நேரத்துல வசதி வாய்போட பொண்ணுங்க அவனை கல்யாணம் பண்ணிக்க வருவாங்க. ஆனா அதை எல்லாம் விட்டுட்டு அவன் உன்னை போய் கல்யாணம் பண்ணி இருக்கானே அதான் என்னால தாங்க முடியல" என்றாள்.

தன் வசதி வாய்ப்பை பற்றி பேசியதும் அதை தங்க முடியாத ரோஜா கூனி குறுகிப்போனாள். ரித்திகா சொன்னது போல சித்துவின் அந்தஸ்துக்கு தான் தகுதி ஆனவள் கிடையாது என்று தன்னை தானே நினைத்து வருந்தியள் அமைதியாகி விட..

ரோஜாவின் முகம் வாடியதை கண்டு கடுப்பான சித்து "ரித்திகா! நீ தேவை இல்லாம வார்த்தைகளை விடற .. முதல்ல வார்த்தையை அளந்து பேசு . ரோஜா என் வீட்ல வேலைபாக்குறவங்களோட பொண்ணாவே இருந்தாலும் அவளை கல்யாணம் செய்துகிடத்துல நான் பெருமை படறேன். உன்னை மாரி ஒருத்தியை காதலிச்சு உன் கூட லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல் இருந்து மணமேடை வரை என்னை கொண்டு வந்து நிறுத்து கடைசி நிமிசத்துல இந்த மாதிரி ஒரு கேடுகெட்டவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு போனவளை காட்டிலும் என் ரோஜா எனக்கு கிடைச்ச பொக்கிஷம்" என்றான் அவள் பேசியதில் கோபம் தாளாமல்.

சித்து தனக்கு பரிந்து பேசுவதை கண்டு ரோஜாவால் நம்பமுடியவில்லை . தான் கேட்டது நிஜம் தானா? என்று ஆச்சர்யமாக அவனையே பார்த்துக்கொண்டு நின்று இருந்தான்.

"டேய் யாரை டா கேடு கெட்டவன்னு சொல்ற.." என்று ராகுல் ரோஜாவை பார்க்க.

அவன் முன்னே வந்து நின்ற ரோஜா "உன்னை கேடுகெட்டவன்னு சின்னையா சொன்னது தப்பு. கூட்டி குடுக்கிறவன்னு சொல்லிருக்கணும்" சொல்ல..

அங்கு நடப்பதை பார்த்துக்கொண்டு இருந்த விஷ்ணு வாயடைத்து போனான். "அடிப்பாவி! என்ன இப்படி பேசுறா!" என்று ரோஜாவை ஆச்சர்யமாக பார்த்தான்.

"என்ன டி சொன்ன..." என்று ராகுல் ரோஜாவை அடிக்க கை ஓங்கிக்கொண்டு வர..

அதை பார்த்த சித்துவும், விஷ்ணுவும் பதறிக்கொண்டு அவர்களை நோக்கி வர...

அதற்குள்ளாக ராகுலின் கன்னத்தை ரோஜாவின் கைகள் பதம் பார்த்துவிட...

ராகுல் அதிர்ந்து கன்னத்தில் கைவைத்து அதிர்ந்து அவளை பார்க்க... அதே அதிர்ச்சியில் அங்கிருந்த மற்றவர்களும் ரோஜாவின் இந்த தைரியத்தையும், கோபத்தையும் பார்த்தவர்கள் வாயடைத்துப் போய்விட்டனர்.

"ஏய் எவ்ளோ தைரியம் இருந்தா ராகுலை கை நீட்டி அடிப்ப..." என்று எகிறிக்கொண்டு வந்த ரித்திகாவின் கன்னத்தையும் ரோஜா பதம் பார்த்து இருந்தாள்.

ராகுலும், ரித்திகாவும் ரோஜாவை அரண்டு போய் பார்த்துக்கொண்டு நின்று இருக்க..

"கூல்.. கூல்... மிச்செஸ் சித்து" என்று அவளை ஹேரி சமாதானம் செய்தவர்.

"இங்க பாருங்க ரித்திகா நீங்க இந்த மாதிரி தேவை இல்லாம பேசி பிரச்சனை பண்றதா இருந்தா நானே உங்களை இந்த படத்துல இருந்து நீக்கிடுவேன். உங்களுக்கு நான் கொடுத்த ப்ரோமிஸ்க்காக தான் இந்த மீட்டிங் அரேஞ்ச் பண்ணினேன். நான் கேட்டுக்கிட்டத்துக்கு சித்துவும் சம்மதம் சொல்லிட்டார். இதுக்கு மேல இந்த படத்துல இருக்குறதும், இல்லாதததும் உங்க கைல தான் இருக்கு " என்றார் ஒரே முடிவாக.

இதற்கு மேல் எதுவும் பேசினால் தான் நினைத்ததை நடத்த முடியாது, இந்த படம் தனக்கு எவ்வளவு முக்கியம் என்று யோசித்த ரித்திகா "சாரி ஹேரி தப்பு என்னோடது தான் . நான் இனிமேல் பார்த்து நடந்துக்கிறேன்" என்றவள் ராகுலை அழைத்துக்கொண்டு போய் அவள் இடத்தில அமர்ந்து கொண்டாள்.

பிறகு அனைவரும் ஓர் அளவுக்கு மனநிலை மாறி படம் சம்மந்தமான விஷயங்களை பேசிவிட்டு இன்னும் 1 மாதத்தில் படத்திற்கான வேலை துவங்குவதாக முடிவெடுத்தனர்.

சிந்துவும், ரோஜாவும் அங்கிருந்து கிளம்ப போக அவர்கள் இருவரையும் வற்புறுத்தி அங்கேயே இருக்க வாய்த்த ஹேரி "இன்னிக்கு உங்களுக்காக நான் ஒரு சின்ன பார்ட்டி அரேஞ் பண்ணிருக்கேன். நைட் பார்ட்டி முடிச்சிட்டு இந்த ஹோட்டெல்லையே உங்க ரெண்டு பேருக்கும் ஹனிமூன் சூட் புக் பண்ணிருக்கேன். கண்டிப்பா நீங்க இதுக்கு மறுப்பு சொல்லக்கூடாது " என்று அன்புக்கட்டளை இட வேறு வழி இல்லாமல் சித்துவும் அதற்கு சம்மதம் சொன்னான்.

இங்கே ரித்திகாவிற்கும், ராகுலுக்கு எள்ளும் கொள்ளும் வெடித்தது. இப்படி தங்கள் இருவரையும் கைநீட்டி அடித்துவிட ரோஜாவையும் , தங்கள் இருவரையும் அவமானப்படுத்திய சித்துவையும் ஏதாவது செய்தாக வேண்டும் என்று முடிவு எடுத்தவர்கள். இன்று நடக்கப்போகும் பார்ட்டியில் இருவரையும் பழி வாங்க திட்டம் தீட்ட துவங்கி இருந்தனர்.


PRATILIPI

TELEGRAM

WHATSAPP

FACEBOOK

 

Author: layastamilnovel
Article Title: யாரடி நீ 22
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

preethi

Member
Joined
Oct 6, 2024
Messages
60
Daily illa na 2 days ones ud podunga appo tha stry nayapagam erukum😁😁
 
Top