logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412



ஜெய்யை, மணமேடையில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர வைத்துவிட்டு, சூர்யாவை தான் இருந்த இடத்திற்கு நகரச் சொன்னவள்.அவன் பின்னால் நின்று இருந்த ரியாவிடம் மீனு சென்றாள்”.


ரியா தனக்கு எதிரே வந்து நிற்கும் மீனுவை பார்த்து, "இவ எதுக்கு இங்க வந்து நிற்கிறா ஏற்கனவே இவ அந்த ஜெய்யை கல்யாணம் பண்ணிக்கிறாளேன்னு பயங்கர கடுப்புல இருக்கேன். இந்த நேரத்துல இவ முகத்தை பார்த்தா இன்னும் ஆத்திரமா தான் வருது" என யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் முன்னாள் வந்து நின்ற மீனு பளார்!! என ரியாவின் கன்னத்தில் ஓங்கி அடித்தாள்.

இதை மேடையில் இருந்தவர்களும்’ மற்றவர்களும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை! ரியாவின் அருகில் நின்றிருந்த சாந்தா தன் மகள் அடி வாங்கியதும் அதிர்ச்சியானவர் ! ரியாவின் முன்னே கோபமாக நின்றிருந்த மீனுவை பார்த்து “ஏய் மீனு உனக்கு என்ன அறிவு எதுவும் கெட்டுப் போயிடுச்சா, இப்போ எதுக்கு தேவையே இல்லாம என் பொண்ணு வந்து அடிக்கிற அவ அப்படி என்ன பண்ணிட்டா? “ என்றார் கோபமாக.

“அவ என்ன பண்ணினான்னு நான் சொல்றத விட உங்க பொண்ணையே கேளுங்க” என்றாள் மீனு.

சாந்தாவிற்கு ஒன்றும் புரியாமல், தன் மகளை திருப்பி பார்த்தவர் “ரியா என்னடி ஆச்சு அவ எதுக்கு உன்ன அடிக்கிறா? அப்படி என்ன நீ பண்ணுன?” என்றார்.

தன் கன்னத்தை தேய்த்து விட்டுக் கொண்டே கண்களில் வலிந்த கண்ணீரோடு சாந்தாவை பார்த்து “அம்மா நான் எதுவுமே பண்ணல இவ தான் தேவையே இல்லாம என்ன வந்து அடிச்சிட்டா” என்று மீனுவை பார்த்து ரியா முறைத்தாள்..


ரியாவின் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்த மீனு
"உண்மைய சொல்லு நீ எதுவுமே பண்ணலையா?" என்றவள் .”

சோபாவில் அமர்ந்து மீனுவையே அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்த ஜெய்யை காட்டி "இவரை சந்தோஷ் சேர்ல இருந்து தூக்கி சோபாவில் உட்கார வைக்கும் போது நீதானே அவர் வேஷ்டியை கழட்டி விட பாத்த... இது யாருக்கும் தெரியாதுனு நினைச்சிட்டியா? நீ அவர் வேஷ்டியை கழட்டி விட்டத நான் என் ரெண்டு கண்ணாலையும் பார்த்தேன்" என்றால் மீனு.

அதைக் கேட்டதும் ஜெய் அதிர்ச்சியாக நிமிர்ந்து ரியாவை பார்த்தான்.

மற்றவர்களும் அதே அதிர்ச்சியோடு தான் ரியாவை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

யாருக்கும் தெரியாமல் தான் செய்த செயல் இப்படி அனைவரும் முன்னிலையிலும் அம்பலமாகி விட்டதே என அவமானத்தில் தலை குனிந்த படி அனைவரையும் பார்த்த ரியா ,எதுவும் பேசாமல் சட்டென்று தனக்கு எதிரே நின்றிருந்த மீனுவை தள்ளிவிட்டு மணமேடையை விட்டு இறங்கி வெளியே ஓடினாள். அவள் பின்னாலேயே சாந்தாவும் தன் மகளை சமாதானம் செய்ய ஓடினார்.

அதை பார்த்துக்கொண்டே மீனு அருகில் வந்த பரமன், மீனுவையும் ஜெய்யையும் பார்த்து கையெடுத்து அவர்கள் இருவரையும் பார்த்து கும்பிட்டு "என் பொண்ணு பண்ணின காரியத்துக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். மணமேடை வர வந்து இந்த கல்யாணத்தை நிப்பாட்டினதுக்கும் இப்போ உங்களை இத்தனை பேர் முன்னிலையில் அசிங்கப்படுத்த நினைச்சதுக்கும் அவளுக்கு பதிலா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்" என்று குரல் தழுத்தழுக்க அவர் பேசவும் சட்டென ஜெய், பரமன் கையைப் பிடித்துக் கொண்டு "ஐயோ மாமா என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க விடுங்க அவ அப்படித்தான் தெரிஞ்சுடுச்சு அவளுக்காக வருத்தப்பட்டு நாம என்ன பண்ண முடியும்" என்றான்.

"தம்பி இத்தனை நடந்ததுக்கு பிறகும் நீங்க என்ன மாமான்னு உரிமையா கூப்பிடுறீங்களே " என்றார் பரமன் குரல் தழுதழுக்க.

" நான் உங்கள ரியாவோட அப்பாவா நெனச்சு மாமான்னு கூப்பிடல, உங்க தம்பி பொண்ண தானே நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். அப்போ அந்த உரிமையிலும் நான் உங்களை மாமானு கூப்பிடலாம் தானே" என்றான் ஜெய்.

“ஒரு பக்கம் தன் மகள் செய்த காரியத்தை நினைத்து வருத்தப்பட்டாலும் ,மற்றொரு பக்கம் நின்ற கல்யாணம் அதே முகூர்த்தத்தில் அதே மேடையில் நடப்பதை நினைத்து சந்தோஷப்பட்ட பரமன், ஜெய் சொன்னது கேட்டு சிரித்துவிட்டு மீனுவை அவரே கைபிடித்து அழைத்து வந்து மணமேடையில் இருந்த சோபாவில் ஜெய்க்கு அருகில் அமர வைத்தவர்.” "ஐயரே தாலிய எடுத்து கொடுங்க முகூர்த்தம் முடியப் போகுது" என்றார்.

ஐயரும் தாலியை எடுத்து அனைவரிடமும் ஒரு முறை காட்டிவிட்டு ஜெய் கையில் கொடுத்து, "இந்தாங்க தம்பி பொண்ணு கழுத்துல கட்டுங்கோ" என்றார் குதூங்காலமாக.

ஜெய்யும், ஐயர் கொடுத்த தாலியை வாங்கி மீனுவின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சுட்டு தன் வாழ்க்கை துணைவியாக ஏற்றுக் கொண்டான்”.

“மேளதாளம் முழங்க மங்கள ஒலியுடன் அனைவரின் மனம் நிறைந்த ஆசீர்வாதத்தோடு மீனு, ஜெய் திருமணம் இனிதே நடந்தேறியது”.


ஜெய் ,மீனுவின் கழுத்தில் தாலி கட்டுவதை பார்த்து சந்தோஷம் அடைந்த சந்தோஷ் ,தன் அண்ணனுக்கு நல்ல புத்திசாலியான பெண் தான் மனைவியாக அமைந்திருக்கிறாள் என்று மீனுவை நினைத்து சந்தோஷமாக இருந்தது. அதே மனநிலையில் தான் கஜேந்திரனும் இருந்தார்.

பின்பு,” சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் முடித்துவிட்டு ஜெயையும் மீனுவையும் முதலில் மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து பாலும் பழமும் கொடுத்து வீட்டில் குத்து விளக்கு ஏற்றி பூஜை செய்தனர்”.

பின்பு ,”பெண் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதாள் காஞ்சிபுரத்திலிருந்து ஜெய்யுடன் காரில் சென்னைக்கு புறப்பட்டாள் மீனு. அவர்களுடனே கஜேந்திரன் சந்தோஷ் சூர்யா ஒரு காரிலும், குரு தன் குடும்பத்தோடு மற்றொரு காரிலும் அவர்களோடு சென்னை நோக்கி பயணம் ஆகினர்”.

பரமனோ,” தன் வீட்டில் அடுத்து நடக்க போகும் பூகம்பத்தை எதிர்கொள்வதற்காக இவர்களையெல்லாம் சந்தோசமாக வழி அனுப்பி வைத்துவிட்டு, கனத்த இதயத்தோடு தன் குடும்பத்தை எதிர்கொள்வதற்காக வீட்டிற்கு வந்தார்”.

அவர் வாசலில் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழையும் போது,” அங்கிருந்த பொருட்கள் எல்லாம் உடையும் சத்தம் கேட்டது . அதை கேட்டதுமே தன்மகள் ரியா பிரச்சனை செய்ய ஆரம்பித்து விட்டாள் என்பதை புரிந்து கொண்டார்.

“எதையும் கண்டுகொள்ளாமல் வீட்டிற்குள் வந்தவர் ,தன்னரை நோக்கி செல்ல, காலில் இருந்த பொருட்களை எல்லாம் கோபமாக அறிய தூக்கி வீசி உடைத்துக் கொண்டிருக்க அவளை தடுக்க சாந்தா படாத பாடு பட்டு கொண்டு இருந்தார்.” இதையெல்லாம் பார்த்துவிட்டு தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல பரமன் உள்ளே செல்ல ,அவரைப் பார்த்து ரியா தன் கையில் இருந்த கண்ணாடி பூஜாடியை தூக்கி அவர் செல்லும் வழியில் போட்டு உடைத்தாள்.

“தன் காலிற்கு கீழே கண்ணாடி சில்லுகள் உடைந்து சிதறி கிடக்க, அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் பரமன் அப்படியே நிற்க, அவர் முன்பு வேகமாக வந்து நின்ற ரியா "இப்போ உங்களுக்கு சந்தோசமா? அத்தனை பேரும் முன்னாடி அந்த மீனு என்ன அடிச்சு அவமானப்படுத்தினாலே இப்போ உங்களுக்கு திருப்தியா? என் வாழ்க்கையை கெடுக்குறதுக்குனே வந்திருக்கீங்களா நீங்க" என மீனு மேல் இருந்து ஆத்திரத்தில் பரமனிடம் பேச...

"மீனு உன்னை அறைஞ்சதோட விட்டாலேன்னு சந்தோஷப்படு. நானா இருந்தா உன்ன அந்த இடத்துல என்ன பண்ணி இருப்பேன்னு எனக்கே தெரியாது. உன்னை நம்பி வாக்கு கொடுத்ததுக்கு , அத்தனை பேர் முன்னாடி நான் அவமானப்பட்டு தலை குனிஞ்சு நின்னது தான் மிச்சம். ஏன்டா உன்ன பெத்தேன்னு இப்பதான் நான் வருத்தப்படுறேன்" என்று ரியாவின் மேல் பரமன் கோபப்பட...

"ஏன் சொல்ல மாட்டீங்க. என் பொண்ணு தான் ஆரம்பத்தில் இருந்து இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டு இருந்தாலே . அதையெல்லாம் மீறி அவ விருப்பத்துக்கு மாற அவளுக்கு பிடிக்காத ஒன்றை கல்யாணம் பண்ணி வச்சா அப்புறம் என்ன பண்ணுவா.. அவ அதனாலதான் சொல்லாம கொள்ளாம மண்டபத்தை விட்டு ஓடிப்போன அதையும் விடாம அந்த மாணிக்கம் இவள பிடிச்சு கூட்டிட்டு வந்து மண்டபத்துல நிப்பாட்டி வச்சுட்டான்" என்றார் சாந்தா கோவமாக.

"நான் உன் மகளை வற்புறுத்துனது உண்மைதான். ஆனால் , அதுக்கு எல்லாம் முன்னாடி ரியா தானே அந்த தம்பியை கல்யாணம் பண்ணி ஆகணும் ஒத்த கால்ல நின்னு பிடிவாதம் பண்ணினா. இவ விருப்பப்படி தானே இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினேன். அப்புறம் ஏன் அந்த பையன இவன் வேண்டாம்னு சொன்னா? அந்த பையனுக்கு ஆக்சிடென்ட்ல கால் உடைஞ்சது ஒரு காரணமா காட்டி தானே வேணாம்னு சொன்னா...கொஞ்ச நாள் ட்ரீட்மென்ட் எடுத்தா சீக்கிரம் சரியாயிட போயிடு போகுது. அதுவரை இவளால கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி அந்த தம்பி கூட இருக்க முடியாதா?" என்றார்.

" இப்பவும் என் மேல தான தப்பு சொல்றீங்க ,vகால் உடைந்தவனை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும். என் வாழ்க்கை என்ன ஆகுதுன்னு கொஞ்சமாவது நீங்க யோசிச்சு பாத்தீங்களா? அவனுக்கு குணமாகும்னு எந்த தைரியத்துல நீங்க சொல்றீங்க.. டாக்டர் தான் சொன்னாரு அவனோட ரெண்டு முட்டியும் பயங்கரமா பிராக்சர் ஆயிடுச்சுன்னு..அத குணப்படுத்தவே முடியாதுன்னு அப்படி இருக்கிறப்போ நீங்க எப்படி அவனுக்கு குணமாகும் என்று சொல்றீங்க. உங்க பேச்சை நம்பி அவனை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் முழுக்க கால் இல்லாதவனுக்கு சேவை செஞ்சுக்கிட்டு இருக்கணுமா? " என்றால் எரிச்சலாக.

தன்மகள் பேசுவதையெல்லாம் கேட்டு வெறுத்துப் போன பரமன் "இப்போ என்ன.. நீ நினைச்ச மாதிரியே இந்த கல்யாணம் நின்னுடுச்சு தானே , அப்புறம் எதுக்கு இப்படி கோபமா எல்லா பொருளையும் போட்டு உடைச்சிட்டு இருக்க" என்றார் பரமன்.

"நான் வேண்டாம்னு சொன்னவன அந்த மீனு எப்படி கல்யாணம் பண்ணிக்கலாம். நான் வேண்டாம்னு சொன்னவன் எப்படி இன்னொருத்தியை என் கண்ணு முன்னாடியே சந்தோசமா கல்யாணம் பண்ணிக்க முடியும். எனக்கு அது பிடிக்கல அந்த மீனு ஜெய்ய கல்யாணம் பண்ணி இருக்கவே கூடாது. அவ நான் வேண்டான்னு தூக்கி போட்ட பொருளை எடுத்து வச்சுக்கிட்டு என்ன கோபப்படுத்திட்டா இனி அதுக்கான விளைவுகளை அவ சந்திச்சு தான் ஆகணும்" என்றால் ரியா மிகவும் ஆக்ரோஷமாக.

தன் மகள் பேசுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பரமன் , "உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருச்சு நீ வேண்டான்னு சொல்லிட்டா அவனுக்கு கல்யாணமே ஆகக்கூடாதா?" என்றவர் தன் மகளையும் மனைவியையும் பார்க்கப் பிடிக்காமல் அந்த இடத்தை விட்டு சென்றார்.

“கோபமாக இருந்த தன் மகள் ரியாவை சாந்தா சமாதானப்படுத்த முயல’ "மம்மி எனக்கு அந்த ஜெய்ய மீனு கல்யாணம் பண்ணிக்கிட்டது பிடிக்கல எப்படியாவது அவங்க ரெண்டு பேரையும் பிரிக்கணும்" என ரியாக் கூற..

"அவ்வளவு தானே கண்ணா , கொஞ்சம் பொறு நேரம் காலம் வரும்போது எல்லாம் நல்லபடியா நடத்திடலாம்" என்று தன் மகளை சமாதானம் செய்து அவள் அறைக்கு அழைத்துச் சென்றார் சாந்தா.

 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 10
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top