- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
மிருதுளாவை தன் வீட்டில் இருந்து கிளம்பச் சொல்லி மீனு மாடியில் இருந்து அவளை கீழே அழைத்து வர... " ஹேய் மீன்ஸ் இப்ப எதுக்குடி என்னை துரத்துறதுலயே குறியா இருக்க. நான் என் வீட்டுக்கு போவேன்னு நீ நெனச்சிட்டு இருக்கியா?" என கேட்டபடி படி இறங்கினாள் மிருதுளா.
"ஏன் போக மாட்ட... இல்ல ஏன் போக மாட்டேன்னு கேட்கிறேன். ஊர்ல இருந்து உன் அம்மா அப்பாவ கூட பாக்காம நேரா என் வீட்டுக்கு வந்திருக்க. நீ வருவேன்னு அவங்க உன்னை எதிர்பார்த்துட்டு இருப்பாங்க இல்ல. முதல்ல நீ உன் வீட்டுக்கு கிளம்பு, நம்ம இன்னொரு நாள் சாவகாசமா பேசிக்கலாம்" என்று அவள் கை பிடித்து ஹாளுக்கு இழுத்து வந்தாள் மீனு.
ஹாலில் இருந்த ஜனனி "ஏய் மீனு இப்போ எதுக்கு மிருதுளாவை இவ்வளவு அவசரமா கீழ கூட்டிட்டு வர.." என்றார்.
"அம்மா இவ ஏர்போர்ட்ல இருந்து நேரா என்ன பாக்க இங்க வந்துட்டா. அங்கிள், ஆன்ட்டி இவளை காணாம தேட மாட்டாங்களா? அதான் முதல்ல இவளை அவ வீட்டுக்கு கிளம்பச் சொன்னேன்" என்ற மீனு மிருதுளாவின் சூட்கேஸை எடுத்துக்கொண்டு வந்து அவள் கையில் கொடுத்து "இந்தா பப்பி நீ முதல்ல கிளம்பு" என்றாள்.
தன் கையில் கொண்டு வந்து சூட்கேசை திணித்த மீனுவை பார்த்த மிருதுளாவின் முகம் சுருங்கியது. அவள் சோகமாக மீனுவை பார்க்க... "இப்படி எல்லாம் முகத்தை வச்சிட்டு நின்னுட்டு இருந்தா நான் உன்ன இங்க இருக்க சொல்லுவேன்னு நினைச்சுட்டியா? அதான் இல்ல முதல்ல கிளம்பு. நீ இருந்தா அவ்வளவுதான்" என்று மீனு மீண்டும் அவளை துரத்த முற்பட...
இப்போது மிருதுளாவின் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. தன் தோழியை காண ஆசை ஆசையாக ஏர்போர்ட்டில் இருந்து நேராக அவள் வீட்டிற்கு வந்திருக்க. ஆனால் அவளோ தன்னை விரட்டியடிக்காத குறையாக இங்கிருந்து கிளம்பச் சொல்லுவதை பார்த்த மிருதுளாவின் மனம் உண்மையாகவே வருத்தப்பட்டது.
“ ஏய் மீனு உனக்கு அறிவு இருக்கா? இல்லையா? அவ ஆசையா நம்ம பார்க்க நம்ம வீட்டுக்கு வந்து இருக்கா வந்தவளை ஒரு வாய் சாப்பிட கூட விடாம கிளம்பு கிளம்புனு அவளை துரத்திக்கிட்டே இருக்க. என்னடி பிரிண்ட் நீ?” என்று ஜனனி மிருதுளாவிடம் வந்து “பப்பி அவ சொல்றது எல்லாம் நீ பெருசா எடுத்துக்காத. அவளுக்கு மர கலண்டுருச்சுன்னு நினைக்கிறேன்” என்றவர் “நீ வா உன் அம்மா நேத்து சாயங்காலமே எனக்கு போன் பண்ணிட்டாங்க. அவங்க வரவரைக்கும் நீ எங்கேயும் போக வேண்டாம் வந்து என் ரூம்ல தங்கிக்கோ இல்லன்னா பூஜா ரூம்ல கூட நீ இருந்துக்கோ₹ என்றார்.
ஜனனி பேசுவதை கவனித்த மீனு “என்னம்மா சொல்றீங்க ஆன்ட்டி உனக்கு போன் பண்ணாங்களா? எங்க போய் இருக்காங்க அவங்க இவள ஏன் நம்ம வீட்ல இருக்க சொல்லி இருக்காங்க” என்றாள் மீனு.
“அதுவா மிருதுளா திடீர்னு கிளம்பி இந்தியாவுக்கு வரேன்னு அவங்க அம்மா அப்பாவுக்கு போன் பண்ணி இருக்கா. ஆனா அவங்க பத்து நாள் ட்ரிப் ஏற்கனவே பிளான் பண்ணி இருக்கிறதுனால அதுக்கு ஏற்கனவே கிளம்பிட்டாங்க. மிருதுளாவ அவங்க வரவரைக்கும் நம்ம வீட்டில் தங்க வைக்க சொல்லி என்கிட்ட போன் பண்ணி கேட்டாங்க நானும் சரின்னு சொல்லிட்டேன் அதனாலதான் பப்பி ஏர்போர்ட்ல இருந்து நேரா இங்க வந்துட்டா நான் ஏற்கனவே நம்ம வீட்டுக்கு வரச் சொல்லி அவளுக்கு போன் பண்ணி சொல்லி இருந்தேன்” என்றார் ஜனனி.
இதைக் கேட்டதும் மீனுவிற்கு தர்ம சங்கடமாக போய்விட்டது. தன் வீட்டில் தங்க வந்த தன் தோழியை இப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக விரட்டி அடித்ததை நினைத்து தன்னையே நொந்து கொண்டாள்.
மிருதுளா மீனுவின் மீது கோபமாக இருந்தவள் “ஆன்ட்டி எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல நான் என் அம்மா அப்பா வர வரைக்கும் என் வீட்டிலேயே போய் தங்கிக்கிறேன் பக்கத்து வீட்ல தான் கீ கொடுத்துட்டு போயிருக்காங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நான் இங்க யாருக்கும் தொந்தரவா இருக்க விரும்பல” என மீனுவை பார்த்து முறைத்து விட்டு அங்கிருந்து செல்ல போக...
“ஏய் பப்பி அவ தான் சொல்றான்னு நீ என்ன இப்படி பேசிக்கிட்டு இருக்க அவ கிடைக்கிற நீ வா இது என்ன அவ வீடா அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. நாளைக்கே அவ புருஷன் வீட்டுக்கு போயிடப் போறா. நீ இங்கே எப்ப வேணா நம்ம வீட்டுக்கு வந்து இரு உன்னை யார் என்ன சொல்ல போறாங்க. அப்படி யாரோ சொன்னாங்கனா அவங்கள தான் முதலில் இந்த வீட்டை விட்டு துரத்தி விடுவேன்” என்று ஜனனி மீனுவை முறைத்துவிட்டு கையில் இருந்த சூட்கேஸை பிடுங்கி பூஜாவிடம் கொடுத்துட்டு போ என்று சொன்னார்.
“பப்பி அக்கா நீங்க வாங்க என் அக்கா பேசுறதெல்லாம் காதுலியே வாங்கிக்காதீங்க. அவ ஒரு லூசு” என்று மீனுவை பார்த்து பலிப்புக் காட்டிய பூஜா.
மிருதளாவின் கையைப் பிடித்து அவள் அறைக்கு இழுத்து செல்லப் போக… அவளுக்கு குறுக்கே வந்த மீனு “பப்பி சாரி டி எனக்கு உண்மையாவே நீ இங்க தங்க வந்திருக்கிற விஷயம் தெரியாது சாரி டி” என்று மீண்டும் அவளிடம் மன்னிப்பு கேட்க.
“எதுக்கு மேடம் நீங்க என்கிட்ட சாரி கேக்குறீங்க இது உங்க வீடு நீங்க இருக்க சொன்னா இருக்கேன் போக சொன்னா போறேன். நான் தான் என் பிரண்டு இங்கே ஒருத்தி இருக்கான்னு நினைப்புல வந்துட்டேன். ஆனா அவளுக்கு நான் இங்க இருக்கிறதே பிடிக்கல போல. ஒரு 10 டேஸ் பொறுத்துக்கோங்க என் அம்மா அப்பா வந்ததும் நான் போயிடுறேன். உங்கள நான் அதுவரைக்கும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” என்றாள் மிருதுளா .
“ஏ பப்பி என்னடி இப்படி எல்லாம் பேசுற. நீயும் நானும் அப்படியா பழகினோம். நான் உன்னை அப்படி எல்லாம் நினைக்கவே இல்ல நான் ஏதோ ஒரு அவசரத்துல உன்ன வீட்டுக்கு கிளம்ப சொல்லிட்டேன். என்ன மன்னிச்சிடுடி ப்ளீஸ்” என்று அவள் கையைப்பிடித்து மீண்டும் சிறுபிள்ளை போல கெஞ்ச...
அவளிடம் மிருதுளா வெடுக்குனு முகத்தை திருப்பிக்கொண்டு " பூஜா வா நம்ம ரூமுக்கு போகலாம். நான் இங்கே இருந்தா அப்பறோம் உங்க அக்கா என்னை எதும் சொல்லிருவா " என அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.
" ஹே பப்பி, ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாத நான் ஏன் உன்னை கிளம்ப சொன்னேன்னு உனக்கே தெரியும். காரணம் தெரிஞ்சும் நீ என் மேல கோவிச்சுக்கிற பாத்தியா ப்ளீஸ் பப்பி... " என கெஞ்சி கொண்டே மீனு மிருதுளாவின் பின்பு சென்றாள்.
ஜனனி மீனு கெஞ்சி கொண்டே செல்வதை பார்த்து "உனக்கு நல்லா வேணும்டி... வீட்டுக்கு வந்த புள்ளைய கிளம்பச் சொல்லி விரட்டி விட்ட இல்ல" என்றவர் "பப்பி கொஞ்ச நேரத்துக்கு இவள இப்படியே அலைய விடு அப்பத்தான் அவளுக்கு புத்தி வரும்" என்று விட்டு கிச்சனுக்குள் சென்று விட்டார்.
"ம்மா... நீ கொஞ்ச நேரம் பேசாம இருக்க மாட்டியா ஏற்கனவே அவ என் மேல கோவமா இருக்கா நீ வேற அவளுக்கு எடுத்துக் கொடுக்கிறியா?" என்றவரே மிருதுளாவின் பின்னால் சென்றாள்.
….
இங்கே சூர்யாவுடன் வீட்டிலிருந்து கிளம்பிய ஜெய் யோசனையில் அமர்ந்திருந்தான். நீண்ட நேரம் எங்கே செல்கிறோம் என்று தெரியாமலேயே சூர்யா காரை ஓட்டிக்கொண்டு இருக்க...." டேய் ஜெய் நாம இப்போ எங்க போறோம். நாம ரெண்டு பேரும் எங்க போரோன்னு நீயும் சொல்லல, நானும் எதுவும் கேட்டுக்கல. நாம இப்ப எங்க போயிட்டு இருக்கோம்னு எனக்கு தெரியலையே" என்று கூற.
ஆனால் ஜெய்யிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே அவனை திரும்பிப் பார்த்தான். ஜெய் ஏதோ யோசனையில் அமர்ந்து இருக்க… அதை பார்த்த சூர்யா காரை ஓரமாக நிறுத்திவிட்டு " டேய் உன்னத் தான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். நீ என்ன சீரியஸா எதையோ யோசிச்சிட்டு இருக்க" என்று ஜெய் தோளில் கையை வைத்து அவனை அழைத்தான்.
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 17
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 17
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.