- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
மீனுவின் வீட்டிலிருந்து எங்கே கிளம்புகிறோம் என்று தெரியாமல் சூர்யா ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த ஜெய்யிடம் “ நாம இப்போ எங்க போறோம்" என்றான்
"ஏண்டா சூர்யா மீனு கூட ஃப்ரெண்ட் ஒரு பொண்ணு வந்தாலே அவ பேரு கூட" என ஜெய் யோசிக்க..
"அந்தப் பொண்ணு பேரு தானே அவ பேரு மிருதுளா ரொம்ப அழகா இருக்குல்ல” என்றவன்.
“அவ பேர் அழகா இருக்க மாதிரியே அந்த பெண்ணும் ரொம்ப அழகா இருக்கா" என்று சூர்யா வேகமாக கூறினான்.
சூர்யா பேசியதை கேட்டு திரும்பி அவனை முறைத்த ஜெய் "பேர் மட்டும் தான் என்னன்னு கேட்டேன். அவ அழகா இருக்காளா? இல்லையாங்கிறதெல்லாம் எனக்கு தேவையில்லை" என்றான் இறுக்கமாக.
"அது உனக்கு வேணா தேவையில்லாமல் இருக்கலாம். ஆனா எனக்கு ரொம்ப முக்கியமான விஷயம் இல்லையா, நான் எவ்வளவு நாளா அழகான ஒரு பொண்ணு கிடைச்சா லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு இருந்தேன். இத்தனை நாள் எனக்கு ஒரு பொண்ணு கூட செட் ஆகல ஆனா இன்னைக்கு பாத்தியா உன்னோட ஒய்ஃப்க்கு பிரண்டாவே எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணு வந்துட்டா" என்று சூர்யா சொல்ல.
"ஓஹோ! அந்த பொண்ணு என்ன அவ்வளவு அழகாக இருக்கா?" என்றான் ஜெய்.
"இல்லையா பின்ன நீ அந்த பொண்ணு கவனிச்சியா? இல்லையா?" சூர்யா.
"ம்ம்... ம்ம்ம்...பார்த்தேன். என் மீனுவிட அந்த பொண்ணு ஒன்னும் நீ சொல்ற அளவுக்கு எல்லாம் ரொம்ப அழகெல்லாம் கிடையாது" என்றான்.
"டேய் ஜெய் இப்போ நீ என்ன சொன்ன?"என ஆச்சரியமாக சூர்யா அவனை பார்க்க.
" சரி அதை விடு முதல்ல எனக்கு ஒரு டவுட். அது நீ கிளியர் பண்ணு" என்று ஜெய் சூர்யாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மலுப்பினான்.
"என்ன டவுட் சொல்லு" என்றான் சூர்யா.
மீனுவோட பிரண்டு மீனுகிட்ட “கடைசியில நீ இவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டியா? அப்படின்னு ஒரு வார்த்தை சொன்னாலே நீ அதை கவனிச்சியா?" என்றான் ஜெய்..
" அப்படியா? அந்த பொண்ணு அப்படியே சொல்லுச்சு? " என சூர்யா கேட்க.
"அப்போ நீ அந்த பொண்ணு பேசுனத கொஞ்சம் கூட காதுல வாங்காம அவளை சைட் அடிச்சிட்டு இருந்திருக்க அப்படித்தானே?" என்றான் ஜெய்.
"அப்படி இல்லடா முதல் முறையா எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணு அழகா பார்த்ததும் சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல. நீ வந்து வெளியே போலாம்னு கூப்பிட்ட அப்பதான் எனக்கு எதோ வேற உலகத்துக்குள்ள இருந்து இங்கே வந்த மாதிரி இருந்துச்சு" என்றான்.
"இவன் கிட்ட போய் டவுட் கேட்டேன் பாரு" என்பது போல ஜெய் அவனைப் பார்க்க.
" சரி சரி விடு, நீ என்னவோ சொன்னியே. என்ன அது? "என்றான்.
"ஒன்னும் இல்ல நீ முதல்ல காரை ஸ்டார்ட் பண்ணு " என்று கோபமாக கூறினான் ஜெய்.
"இப்ப எதுக்குடா தேவையில்லாம என் மேல கோவமா இருக்க நீங்க பேசுனத நான் கவனிக்கலன்னு தானே சொன்னேன்.சரி இப்போ நாம எங்க போறோம் நீ எதுவும் சொல்லலையே?" என்றான்.
"நான் சென்னையில இருக்கப்போ வழக்கமா ஹேர் கட் பண்ண எங்க போவேனோ அங்க போ" என்றான் ஜெய்.
ஜெய் சொன்னதே கேட்டு ஆச்சரியமாக பார்த்தவன். "என்னடா சொல்ற!! ஹேர் கட் பண்ண போறியா? உண்மையாவா? என்ன திடீர்னு நான், அப்பா,சந்தோஷ் எல்லாம் எத்தனை முறை உன் கிட்ட ஹேர் கட் பண்ண சொன்னோம். ஏன் உன் கல்யாணத்துக்கு முந்தின நாள் கூட மணமேடைல இப்படியே தாடியும் முடியுma போய் நிக்காதடா நல்லா இருக்காதுன்னு எவ்வளவோ சொன்னாரு அப்பா. அப்போ எல்லாம் ஹேர் கட் பண்ணாம இப்ப என்ன திடீர்னு "என கேட்டான் சூர்யா.
"அப்போ தோணல இப்போ எனக்கு ஹேர் கட் பண்ணனும்னு தோணுச்சு. இப்ப நீ கிளம்ப போறியா? இல்ல நான் எதுவும் கேப் புக் பண்ணி அதுல போகட்டுமா? " என்று கோபமாக கேட்க.
"ம்ம்க்கும்... ஆனா.. ஊனா இந்த கோபம் மட்டும் உனக்கு எங்க இருந்துதான் வருதுன்னு தெரியல. இந்த கோபம் நல்லதுக்கு இல்ல ஜெய். உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு ஞாபகம் வச்சுக்கோ நீ இப்படி கோபப்படுவதை பார்த்தால் அந்த பொண்ணு பயந்திறப் போகுது" என்ற சூர்யா ஜெய் வழக்கமாக செல்லும் சலூனிற்கு காரை கிளப்பினான்.
மிருதுளா மீனுவிடம் கேட்ட கேள்வியையே ஜெய் மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்க்க "கடைசியில் இவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டியா? அப்படின்னா என்ன அர்த்தம். அப்போ என்ன ஏற்கனவே இவங்க ரெண்டு பேருக்கும் தெரியுமா? எனக்கு எதுவுமே புரியலையே " என்று குழப்பமாக இருந்தது ஜெய்க்கு.
சேவ் செய்து வந்து விட்டால் தான் கேட்கும் கேள்விகளுக்கு மேலும் பதில் சொல்வதாக கூற முதலில் அதை செய்துவிட்டு போய் அவளிடம் தன்னைத் திருமணம் செய்து கொண்டதற்கான காரணத்தை கேட்க வேண்டும் என நினைத்தபடி சூர்யாவுடன் சென்றான்.
மீனுவின் கல்லூரியில் அவள் படிக்கும் டிபார்ட்மெண்டில் கிளாஸ் முடிந்து பிரேக் டைம் வந்தது. அதுவரை அமைதியாக இவ்வளவு நேரம் இருந்தவள் . விக்ரமிடம் " டேய் விக், மீனு காலேஜ் வந்து கிட்ட தட்ட 3 நாளைக்கு மேல ஆச்சுள்ள...? "என்றாள் மைதிலி.
"ஆமா திலி, நானும் நினைச்சேன் என்னை ஆச்சு அவளுக்கு ஏன் காலேஜ் வரலன்னு தெரிலையே?" என்றான்.
" காலேஜ் பஸ்ட் டே அன்னிக்கு அவளை பார்த்தது. ஆனா என்னவோ அவகூட ரொம்ப வருஷம் ATTATCH ஆன மாதிரி ஒரு பீலிங் என்னனு தெரியல " என்றான்.
"உனக்கு அப்டி தோணுச்சா எனக்கும் தாண்டா... விக். மீனுவை பார்த்ததில் இருந்து அவ கூட ரொம்ப CLOSE ஆன மாதிரி தோணிச்சு. அவளை பார்க்காத இந்த 3 நாள் ஏதோ ரொம்ப நாள் ஆன மாதிரி பீல் ஆகுது " என்றால் மைதிலி சோகமாக.
"பேசாம அவளுக்கு போன் பண்ணி கேட்டுரலாமா? ஏன் காலேஜ் வரலன்னு " என்றான் விக்ரம்.
"ம்க்கும்.. அதுக்கு அவ போன் NUMBER இருந்தா தானே... FIRST டே எப்படி NUMBER கேக்குறதுனு நான் விட்டுட்டேன். உன்கிட்டே இருக்கா மீனு NUMBER " என்றாள் ஆர்வமாக.
" நீயே அவகிட்டே NUMBER கேட்க யோசிக்கும்போது நான் எப்படி டி வந்த முதல் நாளே மீனு நம்பரை கேக்குறது. உனக்கு எதும் அறிவு இருக்கா? என்ன?" என்றான்.
" சரி.. சரி பேசாம ஆபீஸ் ரூம்ல மீனுவோட வீட்டு அட்ரஸ் கேட்டுட்டு அவளை நேராவே போய் பார்த்துட்டு வந்துரலாமா? " என்றாள் மைதிலி.
" ஆபீஸ் ரூம்ல போய் நீ மீனு அட்ரஸ் கேட்டா உடனே உனக்கு ஏன்? எதுக்குன்னு கேட்காம கொடுத்திருவாங்க பாரு " என்றான் விக்ரம்.
" அதை பத்தி எல்லாம் நீ ஏன் கவலை படுற... நான் மீனு அட்ரசை வாங்கிட்டு வரேன். நீ என்கூட மீனுவீட்டுக்கு வரியா? இல்லையா? அதை மட்டும் சொல்லு போதும் " என்றாள்.
" ஓகே போலாம் " என்றவன்.
" மீனு வீட்டுக்கு போய்ட்டு உங்க வீட்டுக்கு போக லேட் ஆகுமே நீ உங்க வீட்ல இன்போர்ம் பண்ணிரு " என்றான் விக்ரம் அவள் எல்லாம் அக்கறையாக.
" ம்ம்.. ம்ம்... நான் சொல்லிக்குறேன். நீயும் உன் வீட்ல சொல்லிட்டு வந்திரு. என்னை கூட லேட்டா போனா எங்க வீட்டுல எதுவும் கேட்க மாட்டாங்க. ஆனா உன் வீட்டுல தான் நீ என்னவோ இன்னிக்கு சமைஞ்ச பொண்ணு மாதிரி காலேஜ் டைம் முடிச்ச அடுத்த செகண்ட் உன் அம்மா உனக்கு போன் பண்ண ஆம்பிச்சிருவாங்க " என்று சொல்லி சிரித்தாள்.
அவளை முறைத்தவன் " என் அம்மாவுக்கு என் மேல அவ்ளோ பாசம் அதான் அடிக்கடி போன் பண்ணி கேக்குறாங்க " என்றான்.
" ம்ம்ஹும் ஒரு நாளைக்கு நான் வீட்டுக்கு வரேன் உன் மேல அவ்ளோ பாசம் வெச்சிருக்க உன் அம்மாவை நான் பார்க்கணும் " என்றாள் மைதிலி.
"இன்னிக்கே நாள் நல்லா தான் இருக்கு நீ என்கூட வரேன்னு மட்டும் சொல்லு போதும். நான் உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்" என்றான் ஒருவித எதிர்பார்போடு.
" என்ன? நாள் நல்லா இருக்கா? எதுக்கு ? " என்றாள் புரியாமல்.
" அது.. அது... இல்லை மீனுவிட்டுக்கு போறோமே அப்டியே என் வீட்டுக்கும் போகலாம்னு சொன்னேன். நேரமே போய்ட்டு வரலாம்னு சொன்னேன். நான் எங்கே நாள் நல்லா இருக்குனு சொன்னேன். உனக்கு காதுல தப்பா விந்திருக்கும் " என்றவன். " அப்பாடா... நல்ல வேலை எதுவும் சொல்லி அவ கிட்டே மாட்டி இருப்பேன் இன்னேரம் ' என்று நினைத்துக் கொண்டவன் அங்கிருந்து எழுந்து வெளியே செல்ல...
அவனை புரியாமல் பார்த்தவள் " எனக்கு நாள் நல்லா இருக்குன்னு தானே கேட்டுச்சு. இவன் என்ன வேற என்னவோ சொல்லிட்டு போறான். இவன் பேசுறது மட்டும் எனக்கு எப்படி தப்பு தப்பா காதுல விழும் . அதுவும் அடிக்கடி " என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 18
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 18
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.