- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
மீனு,ஜெய் இருவரும் விழி இமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு இருக்க..அதை கவனித்த மிருதுளா சூர்யாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.
அவள் தன் கை பிடித்து இழுத்து செல்வதை தடுக்காமல் அவள் பின்னால் சென்றான் சூர்யா .
அவனை ஹாலில் இருந்து தள்ளி வந்து நிறுத்திய மிருதுளா " என்ன சார் கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாத ஆளா இருக்கீங்களே . உங்க பிரெண்ட்டும், என் பிரெண்ட்டும் அவங்களையே மறந்து பாத்துட்டு இருக்காங்க . அவங்களை தனியா விடாம இப்படி இடைஞ்சலா நின்னுட்டு இருக்கீங்க.." என்றாள் .
" நானும் மறந்து போய் உங்களை தான் பார்த்த்துட்டு இருந்தேன் " என்றான் சூர்யா .
அவன் சொன்னதை கேட்டதும் " என்ன !!" என்று அவனை புரியாமல் மிருதுளா பார்க்க
" அது..அது... வந்துங்க நானும் அவங்க என்ன பேசப்போறாங்கன்னு பாக்க என்னையே மறந்து நின்னுட்டு இருந்தேன்னு சொல்ல வந்தேன் " என்று கூறி சமாளித்தான்.
" ஓஹோ .." என்று அவனை சந்தேகமாக பார்த்தவள் திரும்பி தன் அறைக்குச் செல்ல போக ..
"ஏங்க.. எங்க போறீங்க.." என்றான் அவளை அங்கிருந்து செல்ல விடாமல் .
" ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுக்க போறேன் ,ஏன்?" என்றாள்.
" யார் ரூமுக்கு ? " என்றான் சூர்யா .
" என்னோட ரூமுக்கு " என்று அவனை ஒரு மார்க்கமாக பார்த்தவள்.
சூர்யா மிருதுளாவைக் கண்டு வழிந்து கொண்டு இருப்பதை பார்த்தவளுக்கு "சரியான ஜொள்ளு பார்ட்டியா இருப்பான் போல.." என அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அவள் சென்ற திசையையே ஏக்கமாக பார்த்துக்கொண்டு நின்று இருந்த சூர்யா " ஆமாங்க உங்களை பார்க்குற அப்போ எல்லாம் நான் இப்படி ஆகிடறேன் " என்று தன் வாயை துடைத்தான் .
பின் திரும்பி ஹாலில் ஜெய் , மீனு என்ன செய்கிறார்கள் என்று பார்க்க அவர்கள் இருவரும் அங்கு இல்லை. " அதுக்குள்ள எங்க போனாங்க ரெண்டு பெரும் " என்று நினைத்தவன் .
" ம்ஹும் அவனுக்கு கல்யாணம் ஆகிருச்சு அவன் பொண்டாட்டியோட சந்தோசமா என்ஜாய் பண்ணட்டும் . எனக்கு எப்போ இப்படி எல்லாம் நடக்குறது " என்று மிருதுளா சென்ற திசையை பார்த்தவன் அவனுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த ரூமிற்கு சென்றுவிட்டான்.
மீனு ஜெய்யை தன் அறைக்கு கூடி வந்தவள் " உங்களுக்கு… அழகா இருக்கு.. " என்றாள் வெடக்கபட்டுக் கொண்டே.
"என்ன அழகா இருக்கு ?" என்றான் மீனு எதை பற்றி சொன்னாள் என்று தெரிந்தும் அதை காட்டிக் கொள்ளாமல் ஜெய் வேண்டும் என்றே கேட்டான்.
தன் வலது கை ஆள் காட்டி விரலை அவன் முகத்திற்கு நேராக நீட்டி " இது.." என்று சொன்னாள் .
மீண்டும் அவளிடம் " எது ?" என்றான்.
" உங்க…உங்க முகம் " என்றாள் .
" ஏன் முகத்தை பார்த்து தானே என்னை கல்யாணமாக் செய்துகிட்டே ..அப்போ அழகா இல்லாததா இப்போ அழகா இருக்க போகுது " என்றான் .
" இல்ல...அப்போ..அப்போ..முகம் முழுக்க தாடி இருந்துச்சு . அதை எடுத்த பிறகு நீங்க இன்னும் அழகா இருக்கீங்கன்னு சொன்னேன் " என்றாள் அவனை பார்க்காமலேயே .
" ஓஹோ அப்போ எனக்கு தாடி இருந்தது நல்லா இல்ல அப்படி தானே . அதை எடுக்க தான் வேணும்னே . என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட காரணத்தை கேட்டா.. தாடியை எடுத்தா தான் சொல்லுவேன்னு சொல்லி என்னை அலைய விட்டே அப்போ நான் முன்ன இருந்தது உனக்கு பிடிக்கலை அப்படி தானே ?" என்றான் .
ஜெய் அப்படி சொன்னதும் அவனை அவசரமாக தடுத்தவள் " என்ன இப்படி சொல்லிட்டீங்க உங்கள பிடிச்சு போய் தான் நான் கல்யாணம் பண்ணினேன். நீங்க சொல்ற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை" என்றாள் மீனு.
"அப்படியா!! என்னை எப்படி உனக்கு பிடிக்கும்?" என்றான் ஜெய்.
"நான் தான் உங்களை ஏற்கனவே பார்த்திருக்கே…." என்று சொல்லிவிட்டு அவசரப்பட்டு உளறி விட்டோமோ என தன் நாக்கை கடித்த படி ஜெய்யைப் பார்க்க அவன் அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என தெரியாமல் மீனு விழித்துக் கொண்டு நின்றிருக்க .
" ஆமா என்னை நீ எங்க பார்த்த என்னை உனக்கு எப்படி தெரியும்" என்றான் ஜெய்.
ஐயையோ மீண்டும் அவசரப்பட்டு இவன்கிட்ட உளறி கொட்டிட்டோமே… இப்போ இவரை எங்க பார்த்தேன்னு கேக்குறாரு. நான் என்ன சொல்லி சமாளிப்பேன் என்று உள்ளுக்குள் புலம்பியவள்.
" அது… அது வந்து நான் உங்கள கல்யாணம் மண்டபத்துல தான் முதல்ல பார்த்தேன். என் அக்கா உங்கள வேண்டான்னு சொன்னப்போ. மத்தவங்க எல்லாம் உங்கள பத்தி ரொம்ப நல்ல விதமா சொன்னாங்க. அவங்க சொன்னதை எல்லாம் கேட்டதும் எனக்கு ரொம்ப ஆர்வம் ஆயிடுச்சு உங்கள பாக்கணும்னு. அப்படியே நான் நீங்க இருக்கிற ரூம் பக்கம் வந்து எட்டிப் பார்த்தேன். அப்பதான் நான் உங்களை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன்" என்று கூறி சமாளித்தால்.
“அப்போ நீ என்ன ஃபர்ஸ்ட் டைம் கல்யாண மண்டபத்தில் வைத்து தான் பார்த்தேன். அதுக்கு முன்னாடி என்ன பாக்கவே இல்ல அப்படித்தானே?” என்றான் ஜெய்.
“ஆமாம்” என்று மீனும் வேகமாக தலையை ஆட்ட.
"இல்லையே நீ உன் பிரண்டு கூட ரூம்குள்ள பேசிட்டு இருந்தத நான் கேட்டேனே " என்றான் ஜெய்.
“ஐயோ நானும் பப்பியும் பேசினத இவர் கேட்டுட்டாரு போல இருக்கே இப்ப என்ன சொல்லி சமாளிக்கிறது” என்று புரியாமல் மீனு ஜெய்யை பார்க்க..
“என்ன முழிக்கிற நீ உன் பிரண்டுகிட்ட என்ன தேடுறதை கைவிட்டு ஒரு வருஷம் ஆச்சுன்னு சொன்ன. அப்படின்னா ஒரு வருஷத்துக்கு முன்னாடியே உனக்கு என்னை தெரியும் அப்படித்தானே” என்றான் ஜெய்.
“போச்சு… போச்சு.. நானே பார்த்து பக்குவமா இவர்கிட்ட சொல்லலாம்னு நினைச்சா. இவரு நாங்க பேசுனது எல்லாம் கேட்டுட்டாரு போல இருக்கே” என நினைத்தவள் ஜெய் கேட்ட கேள்விக்கு ஆமாம் என்று மெதுவாக தலையை ஆட்டினாள்.
“அப்போ சொல்லு நீ என்ன எங்க எப்போ பார்த்த என்னை நீ தேடிட்டு இருந்த” என கேட்டான் ஜெய்.
அது அது வந்து என மீனு ஜெய்யை தன் முதல் முதலில் எங்கே பார்த்தோம் என்று கூற வர..
அவள் தன்னை பற்றி கூறும் விபரங்களை கேட்க ஆவலாக ஜெய், மீனுவின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
“நான் உங்களை ஃபர்ஸ்ட் மீட் பண்ணது…” என மீனு ஜெய்யை சந்தித்த அந்த முதல் தருணத்தை சொல்ல வரும்போது.
அப்போது அவள் அறைக்கு முன்பாக வந்த ஜனனி வெளியே நின்றவாறு மீனு… மீனு.. என அழைத்தார்.
ஜனனியின் குரல் கேட்டதும் மீனு ஜெய் பார்த்து “ஒரு நிமிஷம் வந்துடுறேன்” என்று தன்னை விட்டால் போதும் என வெளியே ஓடிவிட்டாள்.
“என்ன பத்தி சொல்லும்போது தான் அத்தை வரணுமா இவ இதையே சாக்கா வச்சுட்டு என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆயிட்டாலே. இனி இவளை எப்படி மடக்கி பிடிச்சு கேட்கிறது” என யோசித்துவாரு அமர்ந்திருந்தான் ஜெய்.
இங்கே தன்னறைக்கு வெளியே வந்த மீனு ஜனனிடம் என்னமா எதுக்கு கூப்பிட்டீங்க என்றாள்.
“உன்ன பாக்க உன் காலேஜ்ல இருந்து ரெண்டு பேரு வந்து இருக்காங்க டி அவங்க ரெண்டு பேரும் ஹால்ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. அதான் உன்ன கூப்பிட வந்தேன்” என்றார் ஜனனி.
“காலேஜ்ல இருந்து என்னை பாக்கவா? யார் வந்திருக்காங்க? “ என்ற யோசனையோடு மீனு ஹாலிற்கு வர அங்கே ஹாலில் விக்ரமும் மைதிலியும் சோபாவில் அமர்ந்திருப்பதை பார்த்ததும் சந்தோஷமாக அவர்களை நோக்கி ஓடி வந்தாள் மீனு.
மீனுவின் பின்னால் வந்த ஜெய் ஹாலிற்க்கு வர... மீனுவை பார்த்ததும் சோபாவில் அமர்ந்து இருந்த மைதிலியும், விக்ரமும் எழுந்து நிற்க...
அப்போது அவள் பின்னால் வீல் சேரை இயக்கியப்படி வந்த ஜெய்யை பார்த்ததும் விக்ரம் "சார்... நீங்களா? நீங்க எங்க இங்கே?" என்று கேட்டப்படி ஜெய்யை நோக்கி சென்றான் விக்ரம்.
விக்ரம் ஜெய்யை பார்த்தது பேசியதும் அவனுக்கு ஜெய்யை எப்படி தெரியும் என ஆச்சர்யமானால் மீனு
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 20
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 20
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.