logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
மீனு சொன்ன அனைத்தையும் நம்ப முடியாமல் கேட்ட மைதிலி "எப்படி டி நாவல்ல, டிராமாவில் எல்லாம் பார்ப்போமே அதே மாதிரி உன்னோட கல்யாணம் நடந்திருக்கு. என்ன உன்னோட கதை கொஞ்சம் வித்தியாசமா இருக்கு" என்று சொன்ன மைதிலி.


"எனிவே கங்கிராட்ஸ் டி.. நான் உண்மையாவே ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என சொல்லி மைதிலி மீனுவை கட்டிக் கொண்டாள் .


விக்ரமும் அவன் பங்கிற்கு மீனுவின் கையைப் பிடித்து குலுக்கியவன் "யூ ஆர் ரியலி லக்கி பர்ஷன் ஏன்னு தெரியுமா? என்றான் விக்ரம் .


அவனைப் பார்த்து "ஏன்?"என்றாள் மீனு.

"ஏன்னா ஜெய் சார் இருக்காரே அவர் such a very good person அவரை மாதிரி ஒரு அருமையான ஆளை உன்னால தேடிப்பிடித்தாலும் கண்டுபிடிக்க முடியாது" என்ற விக்ரம் ஜெய்யை புகழ .


"இந்த அருமையான ஆளத் தான் நான் கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா தேடிட்டு இருந்தேன்" என நினைத்தவள் அதை காட்டிக் கொள்ளாமல் "அப்படியா!!" என்பது போல அவனைப் பார்த்தாள் .


பிறகு மூவரும் சிறிது நேரம் கார்டனில் பேசி இருந்துவிட்டு அவர்கள் இருவரையும் வீட்டிற்குள் அழைத்து வந்தாள் மீனு.


ஜனனியும் இரவு உணவை சமைத்து முடிக்கவும் இவர்கள் வரவும் சரியாக இருந்தது .


மைதிலியும் விக்ரமும் ஜனனிடம் சொல்லிக் கொண்டு "ஆண்ட்டி நாங்க கிளம்பறோம். ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு வீட்ல தேடுவாங்க" என்றான் விக்ரம் .


"ஆமா ஆண்டி இவன் சாயங்காலம் ஆறு மணிக்குள்ள வீட்டுக்குள்ள போகலைன்னா அவங்க வீட்ல இருந்து அவனுக்கு மணிக்கொரு தடவ கால் வந்துட்டே இருக்கும். ஏன்னா சின்ன பிள்ள பாருங்க எங்கேயாவது தொலைஞ்சு போய்விடுவான் இல்லன்னா யாராவது இவனை தூக்கிட்டு போயிடுவாங்கன்னு அவங்க வீட்ல ரொம்ப பயப்படுறாங்க" என்று சொல்லி மைதிலி விக்ரமை கிண்டல் செய்ய .


"என்னப்பா அதுக்குள்ள போறேன்னு சொல்றீங்க. நீங்க வரதுக்குள்ள உங்களுக்கு சாப்பாடு நான் ரெடி பண்ணி வச்சுட்டேன். மீனுவோட பிரெண்ட்ஸ் நீங்க முதல் முறையா வீட்டுக்கு வந்து இருக்கீங்க. இப்படி சாப்பிடாம போனா அம்மா கோவிச்சுக்குவேன்" என ஜனனி கோவமாக இருப்பது போல முகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் இருவரையும் பார்க்க.


"உடனே மைதிலி ஆண்ட்டி எனக்கு ரொம்ப பசிக்குது" என தன் வயிற்றை தடவிக் காட்டி "எனக்கு முதல்ல சாப்பாடு போடுங்க. அவன் சாப்பிட்டா என்ன சாப்பிடாட்டி என்ன. நான் சாப்பிடுற வரைக்கும் அவன் எப்படியும் வெயிட் பண்ணித்தான் ஆகணும். என்னை கொண்டு போய் எங்க வீட்ல விட்டுட்டு தான் அவன் வீட்டுக்கு போகணும். அதனால... நீங்க எனக்கு பஸ்ட் சாப்பாடு எடுத்து வைங்க" என்ரவள் " மீனு வா டி நம்ம சாப்பிடலாம்" என்று அவளை இழுத்துக்கொண்டு சென்றாள்.


ஜனனி மீனு "மாப்பிள்ளையை அப்படியே சாப்பிட கூட்டிட்டு வா . நான் இவங்களுக்கு சாப்பாடு பரிமாறுகிறேன்" என்று சொல்லி மைதிலியிடம் "வாம்மா நம்ம போகலாம்" என அவளை அழைத்துக்கொண்டு டைனிங் டேபிள் இருக்கு சென்றார்.

அவர்கள் பின்னாள் விக்ரம் மைதிலியை முறைத்துக் கொண்டே "சோறுன்னு சொல்லிட்டா போதும் இவளுக்கு எதையும் யோசிக்கிறது இல்லை" என நினைத்துக் கொண்டவன்.


"எவ்ளோ. பேசுறா இவ... அம்மாடி அம்மா முடியலை இவளை எப்படி நான் சமாளிக்க. போரேன்னு தெரியலையே....இவ்ளோ பேசுற வாயை ஒரு நாள் பிடிச்சு அடக்கி வெக்கணும் " என்று நினைத்தவன் தன் மனதில் எழுந்த எண்ணங்களை நினைத்து உடல் சிலிர்க்க.... தலையை வேகமாக குலுக்கியவன் அவளுடன் சாப்பிட டைனிங் டேபிளுக்கு சென்றான் .


அதற்குள் வெளியே சென்றிருந்தவர்கள் வந்துவிட அவர்களையும் சாப்பிட வர சொல்லி ஜனனி உணவு பரிமாற செல்ல அவர் மட்டும் தனியாக உணவு பரிமாறுவதை பார்த்துவிட்டு மைதிலி "ஆன்ட்டி நீங்க மட்டும் தனியா ஏன் கஷ்டப்படுறீங்க இருங்க நானும் வரேன்" என்று சொல்லி மைதிலி அனைவருக்கும் உணவு பரிமாற ஆரம்பித்தாள்.


பூஜாவிடம் மிருதுளாவை அழைத்து வரச் சொல்லிவிட்டு அனைவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருக்க .


இங்கே ஜெய்யை சாப்பிட அழைப்பதற்காக தன் ரூமிற்கு வந்தவள் கதவை திறந்து கொண்டு உள்ளே வர ரூம் முழுவதும் இருட்டாக இருந்தது.


"ஏன் இவரு லைட் கூட போடாம உள்ள இருக்காரு. இருட்டுல என்ன பண்ணிட்டு இருக்காரு?" என யோசனையோடு வந்தவள். சுவிட்சை ஆன் செய்யப் போக... அதற்குள் அவள் கையைப் பிடித்து மீனுவை தன் பக்கம் இழுத்திருந்தான் அந்த இருட்டில் அவளுக்காக காத்திருந்த ஜெய்..
 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 21.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top