logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
ஹாலில் இருந்த இருவரையும் பார்த்து சந்தோசமாக "ஏய் உங்க ரெண்டு பேருக்கும் எப்படி என் வீட்டு அட்ரஸ் தெரிஞ்சுது" என ஆச்சரியமாக அவர்களிடம் கேட்ட படி மீனு அவர்களை நோக்கி சென்றாள்ன்


"இவங்க பெரிய எலிசபெத் மகாராணி. இவங்க வீட்டு அட்ரஸ் எங்களால் தேடி கண்டுபிடிக்க முடியாது பாரு" என கிண்டல் செய்த மைதிலி.


"காலேஜ் பர்ஸ்ட் டே வந்ததோடு சரி அதுக்கப்புறம் ஆளையே காணோமே? எங்ககிட்ட சொல்லாம கொள்ளாம யாரையாவது லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டியோனு ஒரு டவுட்டு வந்திருச்சு. அதனாலதான் நானும் இவளும் உன்னை பார்க்கலாம்னு ஆபீஸ்ல பியூனுக்கு லஞ்சம் கொடுத்து உன்னோட அட்ரஸ் வாங்கிட்டு இங்க வந்தோம்" என்றாள் மைதிலி .


அவர்கள். இருவரும் பேசிக்கொண்டு இருக்க விக்ரம் அமைதியாக இருப்பதை கவனித்த மீனு "ஏன் டா விக்ரம் வந்ததிலிருந்து அவளே பேசிட்டு இருக்கா. நீயேன் ஒண்ணுமே பேச மாட்டேங்குற" என கேட்டாள்.


அவள் பேசுவதையே விக்ரம் கவனிக்காதவன் போல நின்று இருந்தவன் திடீர் என்று " ஹலோ எப்படி இருக்கீங்க...நீங்க எங்க இங்க... நான் உங்களை இங்கே எதிர்பார்க்கவே இல்லையே" என கேட்டுக்கொண்டே மீனுவை நோக்கி விக்ரம் வந்தான்.


"என்ன இவன் இன்னைக்கு புதுசா பேசுறானே? மரியாதையை எல்லாம் கொடுக்கிறான். ஒன்னும் புரியலையே" என்பது போல மீனு அவனிடம் பதில் பேச வர..


ஆனால் விக்ரமோ மீனுவிடம் பேசாமல் அவளைத் தாண்டி அவள் பின்னால் வந்து கொண்டிருந்த ஜெய்யை நோக்கி சென்றான் .


ஜெய்யை பார்த்ததும் அவனை தெரிந்தவன் போல விக்ரம் பேசுவதைக் கண்ட மீனு புருவம் சுருங்க.. பார்த்தாள்.


"இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி அறிமுகம் ஆகி இருக்கும். இவனுக்கு ஜெய்யை முன்னயே தெரியுமா?"என அவர்களையே பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள்..


விக்ரமை முதலில் யோசனையாக பார்த்த ஜெய் பிறகு அவனை அடையாளம் கண்டு கொண்டவனாக "ஹே விக்ரம் நீ எங்கடா எங்க" என்று கேட்டான் .


தன் பின்னால் நின்றிருந்த மீனுவை பார்த்தவன் "மீனு,நான் இவங்க எல்லாம் ஒரே கிளாஸ் தான். ஃபர்ஸ்ட் டே கிளாஸுக்கு வந்ததோடு சரி அதுக்கு பிறகு ஆளையே காணோம்னு அவளை பார்க்கறதுக்காக நாங்க வந்தோம். நீங்க எப்படி சார் இங்கே? மீனுவை உங்களுக்கு சொந்தமா? " என கேட்டான் விக்ரம் .

"ஆமா அவ எனக்கு சொந்தமானவள் தான். எனக்கு மட்டுமே முழுசா சொந்தமாக போறவ தான்" என்று தன் மனதில் எழுந்த பதிலை கேட்டு அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது ஜெய்க்கு .


அதே ஆச்சரியத்தோடு மீனுவை பார்க்க அவன் பார்வையை சந்திக்க கூச்சப்பட்டுக் கொண்டு தலை தாழ்த்திக் கொண்டாள் மீனு .


அதை கவனித்த மைதிலி "ஏய் என்ன டி அவரை பார்த்து நீ இப்படி வெட்கப்படுற.. என்ன விஷயம்?" என்றாள்.


" ஏய் சும்மா இரு டி.. " என்று மைதிலியை அதட்டிய மீனு ஜெய்யை பார்த்தாள் .


"என்ன சார் நான் கேட்டுட்டே இருக்கேன் அங்க என்ன பாக்கறீங்க?" என்ற திரும்பி விக்ரம் பார்க்க மீனு அவனையே பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள் .


"அவங்க என்னோட மிஸ்ஸஸ்" என்றான் .


"என்ன!!! சார் புரியல நீங்க என்ன சொல்ல வரீங்க" என விக்ரம் புரியாமல் மீனுவையும் அவள் அருகில் நின்றிருந்த மைதிலையும் பார்க்க..


மைதிலியும் எனக்கும் புரியல என்று தோளை குளிக்கினாள் .


"ரெண்டு நாள் முன்ன தான் எனக்கும் உங்க பிரெண்ட் மீனுவுக்கும் கல்யாணம் நடந்தது" என்றான் ஜெய்.


அவன் சொல்வதை நம்ப முடியாமல் "வாட்!!!" என அதிர்ச்சியாக விக்ரமும் மைதிலி ஒரு சேர சொன்னவர்கள் திரும்பி மீனுவையும் ஜெய்யையும் மாறி மாறி பார்க்க...


ஆனால் மீனுவோ ஜெய் தன்னை அவனுடைய மிஸ்ஸஸ் என்று அறிமுகம் செய்திருந்தது பிடித்திருக்க அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.


மைதிலி மீனு "ஏய் நான் சொன்ன மாதிரியே என்கிட்ட சொல்லாம கொள்ளாம நீ கல்யாணம் பண்ணிக்கிட்டியா? சரியான ஆளுதான் டி நீ...என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா சாட்சி கையெழுத்து போட நான் ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்திருப்பேனே" என்றால் மைதிலி சிரித்தவாறு .


"ரெஜிஸ்டர் ஆபீஸ் எதுக்கு டி.." என்றாள் மீனு புரியாமல்.


"ஆமா நீயும் அவரும் திடீர்னு கல்யாணம் பண்ணி இருக்கீங்ங்கள்ள... அது கண்டிப்பா லவ் மேரேஜா தானே இருக்கும். அப்போ நீயும் அவரும் வீட்டில் சொல்லாம கொள்ளாம ஓடிப்போய் கல்யாணம் பண்ணி இருப்பீங்க. அதனால தான் நான் அப்படி சொன்னேன்" என்றாள் மைதிலி .

"இது ஆக்சுவலா லவ் மேரேஜ் தாண்டி. நான் தான் அவரை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா அவர் இல்லையே" என நினைத்தவள் ஜெய்யை பார்த்தாள்.


அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக தன் பார்வையை பிரித்தவள் "நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல எங்களோடது லவ் மேரேஜ் கிடையாது திடீர் கல்யாணம்" என்றால் மீனு .


"என்னடி சொல்ற திடீர் கல்யாணமா!!" என மைதிலி ஆச்சர்யமானாள்.


விக்ரமும் திரும்பி ஜெய்யிடம் "சார் என்ன சொல்றீங்க? நெஜமாவே நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா? அது என்ன திடீர் கல்யாணம் எனக்கு எதுவுமே புரியலையே" என்றான் விக்ரம் .


" ஆமா எனக்கும் இப்போ வரை என்னை எதுக்காக மீனு கல்யாணம் செய்துட்டான்னு புரியாம இருக்கு. உனக்கு எப்படி புரியும் " என்று நினைத்துக் கொண்டான் ஜெய்.


" இங்க ஒருத்தன் ஏற்கனவே அவர் நீ எப்படி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்ச என்னை எங்க பார்த்தன்னு கேள்வியா கேட்டு இருக்காரு . இந்த விக்ரம் வேற அவர்கிட்ட போய் கேள்வி கேட்டுட்டு இருக்கானே " என நினைத்தவள்.


வேகமாக விக்ரம் அருகில் வந்தவள் ஜெய்யிடம் "நாங்க கொஞ்ச நேரம் வெளியே போய் பேசிட்டு வரோம்" என்றவள்.


விக்ரம் இடம் " அதெல்லாம் விளக்கமா நான் உன்கிட்ட சொல்றேன். நீ அவர்கிட்ட எதுவும் கேட்காத வா" எனச் சொல்லி அவனை கைப்பிடித்து இழுத்தவள் அவனோடு சேர்த்து மைதிலியையும் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டை வெளியே கார்டனுக்கு அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றாள் .


"என் முன்னால் விஷயத்தை சொல்லாம இவங்க ரெண்டு பேரையும் தனியா கூட்டிட்டு போய் பேசுற அளவிற்கு அப்படி என்ன நடந்திருக்கும். அவளுக்கு எப்படி என்னை முன்னமே தெரிஞ்சிருக்கும். இதற்கு முன்ன மீனுவை பார்த்தது போல ஞாபகம் இல்லையே" என யோசனையில் அவர்கள் மூவரையும் பார்த்துக் கொண்டிருந்தவன்.


மீனு விக்ரமின் கையை பிடித்து அழைத்துச் சென்றதை பார்த்ததும் அவனுக்கு ஏனோ உள்ளுக்குள் எரிமலை வெடிப்பது போல இருந்தது . விக்ரமும் அவளும் நண்பர்கள் என தெரிந்தும் கூட... விக்ரம் கையை மீனு பிடித்தது ஏனோ ஜெய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை .சற்று கோபமாகவே இருந்தவன் "என் முன்னாடி எதுவும் பேசினா ஆகாதம் தனியே கூட்டிட்டு போய் தான் அவங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசணுமா?" என்று நினைத்தவன்.

"என் முன்னாடியே இன்னொருத்தன் கைய பிடிச்சு கூட்டிட்டு போறா இவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்.வரட்டும் அவளுக்கு இன்னிக்கு இருக்கு" என உள்ளுக்குள்ளேயே புலம்பியவன் அதே கோபத்தோடு தன் அறைக்க சென்றான்.



இங்கே மீனுவோ அடுத்து ஜெய் அவளை என்ன செய்யப் போகிறான் என தெரியாமல் அவர்கள் இருவரையும் கார்டனுக்கு அழைத்து வந்தவள். " உங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சமாவது அறிவு இருக்கா? அவரே ஏற்கனவே நான் அவரை எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு குழப்பத்தில் இருக்காரு. இதுல நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி கேள்வி கேட்டா அவர் முன்னாடி நான் எப்படி பதில் சொல்வேன்" என மைதிலியை பார்த்துச் சொன்னாள் .


பிறகு விக்ரமிடமும் "ஆமா உனக்கு அவரை எப்படி தெரியும்? நீயும் அவரும் ரொம்ப பழக்கப்பட்டவங்க மாதிரி பேசிக்கிறீங்க" என கேட்டாள் .



"அதையெல்லாம் நான் அப்புறம் சொல்றேன். முதல்ல அவரும் நீயும் எப்படி கல்யாணம் பண்ணீங்க? சாரை உனக்கு எப்படி தெரியும்" என கேட்டான் விக்ரம் .

"ஆக்சுவலா என்னோட அக்காவோட கல்யாணத்துக்கு தான் நான் சென்னை போயிருந்தேன். இவரு என் அக்காவுக்காக பிக்ஸ் பண்ணி இருந்த மாப்பிள்ளை தான்" என ஆரம்பித்து இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது வரை அனைத்தையும் சொன்னாள்.


ஆனால் அவளுக்கு ஏற்கனவே ஜெய்யைத் தெரியும் என்றும் அவர்கள் இருவரும் ஏற்கனவே சந்தித்திருப்பதையும் இவர்கள் இருவரிடமும் சொல்லவில்லை.


ஏனென்றால் விக்ரம் ஜெய்யுடன் பேசுவதை பார்த்த அவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல பழக்கம் இருப்பதை உணர்ந்தவள் தனக்கு முன்பாகவே விக்ரம் எதுவும் ஜெய்யிடம் உளறி விடுவானோ என யோசித்து தான் அவள் எதுவும் சொல்லவில்லை .
 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 21
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top