- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
ஜெய் வருவதற்குள்ளாக மீனு டைனிங் டேபிளுக்கு வந்து விட்டாள் .
அங்கு சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்களை எல்லாம் பார்த்து லேசாக புன்னகைத்த ஜெய் மீனுவின் சிவந்த முகத்தை ஓரக்கண்ணால் ரசித்தவரே அவள் அருகில் தன் வீல்சேரை கொண்டு வந்து நிறுத்தினான்.
"மீனு என்னம்மா அப்படியே உட்கார்ந்து இருக்க மாப்பிள்ளைக்கு சாப்பாடு எடுத்து வை" என்றார் ஜனனி மற்றவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டே.
"சரிமா" என்று தலையாட்டிய மீனு அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி டைனிங் டேபிள் இருந்த உணவுகளை எட்டி எடுத்து ஒவ்வொன்றாக அவன் தட்டில் வைத்தாள் . அவள் தட்டில் வைத்த உணவுகளை கவனிக்காமல் அவள் சாரிலிருந்து ஒவ்வொரு முறையும் எழுந்து இரு கைகளையும் நீட்டி உணவை பரிமாறிக் கொண்டு இருக்க அவள் கையை நீட்டும் போது சேலை விலகி அவளுடைய மென்மையும் வெற்று இடையும் அவன் கண்களுக்கு தெரிய அதை ஓரக்கண்ணால் ரசித்து வாரே அமர்ந்திருந்தான் ஜெய் .
அவனுக்கு பரிமாறி விட்டு தன் தட்டிலும் பேருக்கு கொஞ்சம் உணவை வைத்தவள் அவன் அருகாமையில் தன் உடல் தகிப்பதை மறைக்க முடியாமல் சிரமப்பட்டு கொண்டே மெல்ல உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் . அறைக்குள்ளே ஜெய் அவளுக்கு முத்தம் கொடுத்ததும். தன் இடையை அவன் விரல்களால் அழுத்தியதும் என ஒவ்வொன்றும் நினைவிற்கு வந்து அவள் உடல் மேலும் தவிக்க முகம் சிவந்து கொண்டே இருந்தது அவளுக்கு
அப்போது மைதிலியும் விக்ரமும் மீனு எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிடுவதை பார்க்க அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். பின்பு மைதிலி மீனுவிடம் "மீனு காலேஜுக்கு வருவியா? மாட்டியா?" என்றாள் .
அவள் கேள்வியில் அப்போதுதான் தான் சாப்பிடும் இது இடத்தில் எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவள் தன்னையே மனதிற்குள் கடிந்து கொண்டவள் "மைதிலியை பார்த்து இல்லடி நான் இனிமேல் காலேஜுக்கு வரதா இல்லை" என்றாள் .
மீனு இப்படி சொன்னதும் உடனே பூஜா "அக்கா என்ன சொல்ற உன்னோட ட்ரீம் அக்கா அது. நீ இதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த காலேஜ்ல சீட் கிடைக்கிறதுக்காக அலைஞ்ச... இப்படி சர்வ சாதாரணமாக காலேஜுக்கு போகலைன்னு சொல்ற.. ஏன் போக மாட்டேன்னு சொல்ற" என கேட்டாள் பூஜா .
மைதிலிக்கும் விக்ரமுக்கும் மற்றவர்களுக்கும் அதே சந்தேகம் தான் .
மீனு யாரிடமும் எந்த பதிலும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டு சாப்பிட்ட படியே "இல்ல நான் போகல" என்றாள் .
ஏன் அவளிடம் அளித்து கேட்க யாருக்கும் மனம் வரவில்லை அவள் தயங்கியபடியே தலை குனிந்து பேசுவதை பார்த்துவிட்டு யாரும் அதன் பிறகு மீனுவிடம் யாரும் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை .
வேகமாக சாப்பிட்டு முடித்த மீனு மைதிலி விக்ரம் இருவரையும் பார்த்து "நம்ம டைம் இருந்தா இடையில் சந்திக்கலாம் சாரி" என்று விட்டு எழுந்து வேகமாக அவள் அறைக்கு சென்று விட்டாள்.
இவளுக்கு என்ன ஆனது என யோசித்த மைதிலி விக்ரம் இருவரும் சாப்பிட்டுவிட்டு அவள் வீட்டில் இருந்தவர்களிடம் விடைபெற்று வெளியே செல்ல அவர்கள் பின்னால் தன் வீல்சேரை இயக்கிக் கொண்டு சென்ற ஜெய் "விக்ரம் ஒரு நிமிஷம்" என்று விக்ரமை அழைத்தான் .
"சொல்லுங்க சார்" என்று விக்ரம் ஜெய் அருகில் வர அவனோடு சேர்ந்து மைதிலி வந்தாள் .
"மீனு நாளைல இருந்து காலேஜுக்கு வருவா அதுக்கு நான் பொறுப்பு நீங்க அவ வரலையேன்னு மனசு போட்டு குழப்பிக்க வேண்டாம். அவ ஏன் காலேஜுக்கு வரலைன்னு சொல்றாங்க காரணம் எனக்கு தெரியும் நான் அவகிட்ட பேசிட்டு நாளைக்கு காலையில நானே அவளை காலேஜ்ல டிராப் பண்றேன்" என்றான் ஜெய் .
அதைக்கேட்ட பூஜா அவள் அங்கு சென்றவள் நேராக ஜெய்யிடம் வந்து "மாம்ஸ் நெஜமாவே அக்காவ நீங்க காலேஜ் போக சம்மதிக்க வச்சிடுவீங்களா? ஏன்னா அவ ஒரு முடிவை எடுத்துட்டா அவ்வளவு சீக்கிரம் மாத்திக்க மாட்டா, அதனால தான் கேட்கிறேன்" என்றாள் பூஜா.
ஜெய் சிரித்துக்கொண்டே "நாளைக்கு உன் அக்கா கண்டிப்பா காலேஜ் போவா அதற்கு நான் பொறுப்பு" என்றவன் "விக்ரம் நீ இங்க ரெண்டு பேரும் பத்திரமா போய்டுவீங்களா? இல்ல என்னோட டிரைவர் கொண்டு வந்து உங்க ரெண்டு பேரையும் ட்ராப் பண்ண சொல்லட்டுமா ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு" என்றான். ஜெய் .
"இல்ல சார் நாங்க ரெண்டு பேரும் கார்ல தான் வந்தோம் வீட்டுக்கு வெளியே தான் நிக்குது நான் மைதிலி அவ வீட்ல டிரா பண்ணிட்டு என் வீட்டுக்கு கிளம்பிடுவேன் நீங்க நாளைக்கு மறக்காம மீனு வைகாலேஜுக்கு அனுப்பி வைத்து விடுங்கள் அவளை எப்படியாவது சம்மதிக்க வச்சிடுங்க"சரிப்பா என்றான் விக்ரம் .
"கண்டிப்பா" என்று சொல்லி அவர்கள் இருவரையும் வழி அனுப்பி வைத்தவன் யோசனையோடு தன்னரைக்கு சென்றான்
அங்கு சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்களை எல்லாம் பார்த்து லேசாக புன்னகைத்த ஜெய் மீனுவின் சிவந்த முகத்தை ஓரக்கண்ணால் ரசித்தவரே அவள் அருகில் தன் வீல்சேரை கொண்டு வந்து நிறுத்தினான்.
"மீனு என்னம்மா அப்படியே உட்கார்ந்து இருக்க மாப்பிள்ளைக்கு சாப்பாடு எடுத்து வை" என்றார் ஜனனி மற்றவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டே.
"சரிமா" என்று தலையாட்டிய மீனு அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி டைனிங் டேபிள் இருந்த உணவுகளை எட்டி எடுத்து ஒவ்வொன்றாக அவன் தட்டில் வைத்தாள் . அவள் தட்டில் வைத்த உணவுகளை கவனிக்காமல் அவள் சாரிலிருந்து ஒவ்வொரு முறையும் எழுந்து இரு கைகளையும் நீட்டி உணவை பரிமாறிக் கொண்டு இருக்க அவள் கையை நீட்டும் போது சேலை விலகி அவளுடைய மென்மையும் வெற்று இடையும் அவன் கண்களுக்கு தெரிய அதை ஓரக்கண்ணால் ரசித்து வாரே அமர்ந்திருந்தான் ஜெய் .
அவனுக்கு பரிமாறி விட்டு தன் தட்டிலும் பேருக்கு கொஞ்சம் உணவை வைத்தவள் அவன் அருகாமையில் தன் உடல் தகிப்பதை மறைக்க முடியாமல் சிரமப்பட்டு கொண்டே மெல்ல உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் . அறைக்குள்ளே ஜெய் அவளுக்கு முத்தம் கொடுத்ததும். தன் இடையை அவன் விரல்களால் அழுத்தியதும் என ஒவ்வொன்றும் நினைவிற்கு வந்து அவள் உடல் மேலும் தவிக்க முகம் சிவந்து கொண்டே இருந்தது அவளுக்கு
அப்போது மைதிலியும் விக்ரமும் மீனு எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிடுவதை பார்க்க அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். பின்பு மைதிலி மீனுவிடம் "மீனு காலேஜுக்கு வருவியா? மாட்டியா?" என்றாள் .
அவள் கேள்வியில் அப்போதுதான் தான் சாப்பிடும் இது இடத்தில் எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவள் தன்னையே மனதிற்குள் கடிந்து கொண்டவள் "மைதிலியை பார்த்து இல்லடி நான் இனிமேல் காலேஜுக்கு வரதா இல்லை" என்றாள் .
மீனு இப்படி சொன்னதும் உடனே பூஜா "அக்கா என்ன சொல்ற உன்னோட ட்ரீம் அக்கா அது. நீ இதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த காலேஜ்ல சீட் கிடைக்கிறதுக்காக அலைஞ்ச... இப்படி சர்வ சாதாரணமாக காலேஜுக்கு போகலைன்னு சொல்ற.. ஏன் போக மாட்டேன்னு சொல்ற" என கேட்டாள் பூஜா .
மைதிலிக்கும் விக்ரமுக்கும் மற்றவர்களுக்கும் அதே சந்தேகம் தான் .
மீனு யாரிடமும் எந்த பதிலும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டு சாப்பிட்ட படியே "இல்ல நான் போகல" என்றாள் .
ஏன் அவளிடம் அளித்து கேட்க யாருக்கும் மனம் வரவில்லை அவள் தயங்கியபடியே தலை குனிந்து பேசுவதை பார்த்துவிட்டு யாரும் அதன் பிறகு மீனுவிடம் யாரும் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை .
வேகமாக சாப்பிட்டு முடித்த மீனு மைதிலி விக்ரம் இருவரையும் பார்த்து "நம்ம டைம் இருந்தா இடையில் சந்திக்கலாம் சாரி" என்று விட்டு எழுந்து வேகமாக அவள் அறைக்கு சென்று விட்டாள்.
இவளுக்கு என்ன ஆனது என யோசித்த மைதிலி விக்ரம் இருவரும் சாப்பிட்டுவிட்டு அவள் வீட்டில் இருந்தவர்களிடம் விடைபெற்று வெளியே செல்ல அவர்கள் பின்னால் தன் வீல்சேரை இயக்கிக் கொண்டு சென்ற ஜெய் "விக்ரம் ஒரு நிமிஷம்" என்று விக்ரமை அழைத்தான் .
"சொல்லுங்க சார்" என்று விக்ரம் ஜெய் அருகில் வர அவனோடு சேர்ந்து மைதிலி வந்தாள் .
"மீனு நாளைல இருந்து காலேஜுக்கு வருவா அதுக்கு நான் பொறுப்பு நீங்க அவ வரலையேன்னு மனசு போட்டு குழப்பிக்க வேண்டாம். அவ ஏன் காலேஜுக்கு வரலைன்னு சொல்றாங்க காரணம் எனக்கு தெரியும் நான் அவகிட்ட பேசிட்டு நாளைக்கு காலையில நானே அவளை காலேஜ்ல டிராப் பண்றேன்" என்றான் ஜெய் .
அதைக்கேட்ட பூஜா அவள் அங்கு சென்றவள் நேராக ஜெய்யிடம் வந்து "மாம்ஸ் நெஜமாவே அக்காவ நீங்க காலேஜ் போக சம்மதிக்க வச்சிடுவீங்களா? ஏன்னா அவ ஒரு முடிவை எடுத்துட்டா அவ்வளவு சீக்கிரம் மாத்திக்க மாட்டா, அதனால தான் கேட்கிறேன்" என்றாள் பூஜா.
ஜெய் சிரித்துக்கொண்டே "நாளைக்கு உன் அக்கா கண்டிப்பா காலேஜ் போவா அதற்கு நான் பொறுப்பு" என்றவன் "விக்ரம் நீ இங்க ரெண்டு பேரும் பத்திரமா போய்டுவீங்களா? இல்ல என்னோட டிரைவர் கொண்டு வந்து உங்க ரெண்டு பேரையும் ட்ராப் பண்ண சொல்லட்டுமா ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு" என்றான். ஜெய் .
"இல்ல சார் நாங்க ரெண்டு பேரும் கார்ல தான் வந்தோம் வீட்டுக்கு வெளியே தான் நிக்குது நான் மைதிலி அவ வீட்ல டிரா பண்ணிட்டு என் வீட்டுக்கு கிளம்பிடுவேன் நீங்க நாளைக்கு மறக்காம மீனு வைகாலேஜுக்கு அனுப்பி வைத்து விடுங்கள் அவளை எப்படியாவது சம்மதிக்க வச்சிடுங்க"சரிப்பா என்றான் விக்ரம் .
"கண்டிப்பா" என்று சொல்லி அவர்கள் இருவரையும் வழி அனுப்பி வைத்தவன் யோசனையோடு தன்னரைக்கு சென்றான்
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 22.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 22.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.