- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
ஜெய்யை சாப்பிட அழைத்து வரச் சொல்லி ஜனனி மீனுவை அவள் அறைக்கு அனுப்பி வைத்தார்.
ஜெய்யை அழைக்க வந்தவள் கதவை திறந்து கொண்டு உள்ளே வர அவள் அறை முழுவதும் இருட்டாக இருந்தது." இவ்வளவு நேரம் ஆச்சு லைட் கூட போடாம இருட்டுல உட்கார்ந்து என்ன பண்ணிட்டு இருக்காரு" என முனுமுனுத்தவள்
திரும்பிச் சுவிட்ச் பக்கம் நகர்ந்து லைட்டை ஆன் செய்யப் போக அப்போது அவள் கையைப் பிடித்துஜெய் தன் பக்கம் இழுத்தான் .
அவன் இழுத்த வேகத்தில் மீனு வீழ்ச்சாரில் அமர்ந்திருந்தவனின் மடியில் போய் பொத்தென்று விழுந்தவள் , விழுந்த வேகத்தில் தடுமாறி அவன் மடியில் இருந்து கீழே விழப்போக சட்டென அவள் இடையில் கை கொடுத்து அவளை தன் மடி மீது தூக்கி நன்றாக அமர வைத்த ஜெய் .
அந்த இருட்டில் ஜன்னல் வழியே வந்த நிலவொளியின் வெளிச்சத்தில் மீனுவின் பதட்டமான முகத்தை பார்த்தவன். "ஹேய் மீனு பதட்டப்படாத நான் தான்" என ஜெய் கூறவும் அவன் குரல் கேட்டு தான் மீனு சற்று நிம்மதி அடைந்தாள் .
"என்னங்க இப்படி திடீர்னு என் கையை பிடிச்சு இழுத்துட்டீங்க. நான் யாரோ என்னவொன்ன்னு பயந்துட்டேன் தெரியுமா!" என்றவள் அவன் மடியில் இருந்து எழுந்திருக்க போக .
அவளை எழுந்திருக்க விடாமல் இடையை இருக்க பிடித்து அமர வைத்தவன் . "உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே விக்ரம் கையை பிடித்து கூட்டிட்டு போவ" என்றான் .
சற்று முன்பு தான் பதட்டப்படவும் தன்னிடம் மென்மையாக பேசியவன் அடுத்த நொடியே இப்படி குரலை இறுக்கமாக வைத்துக் கொண்டு பேசுபவனை மீனு பார்த்தவள்.
ஜெய் இப்படி கேட்டதும் மீனுவிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது . தன்னை சந்தேகப்படுகிறானோ எனக் கூட அவளுக்கு தோன்றியது.
"இல்லங்க நான் ஏதோ அவங்க கிட்ட பேசுற அவசரத்துல கைபிடித்து கூட்டிட்டு போனேன். நான் எதுவும் தப்பா எதுவும் செய்யல" என்றாள் மீனு .
"நீ எதுவும் தப்பு செய்ய மாட்ட அவனும் அப்படிப்பட்ட ஆள் இல்லைனு எனக்கு நல்லா தெரியும். ஆனா என்னோட பொண்டாட்டி நீ இன்னொருத்தன் கையை அதுவும் என் முன்னாடி பிடித்து கூட்டிட்டு போறத பாத்துட்டு என்னால எப்படி சும்மா இருக்க முடியும்" என்றான் ஜெய் .
அவன் அப்படி சொன்னதும் தன்னைத் தவிர வேறு ஒரு ஆணின் கைப்பிடித்து விட்டாளே என அவனுடைய பொசசிவ்னஸ் தலை தூக்க அதை ரசித்த மீனு வேண்டுமென்றே "இப்போ இதுல என்ன தப்பு என்னோட பிரண்டு தானே விக்ரம் அவனை கை பிடிச்சு கூட்டிட்டு போகக் கூடாதா? என்ன ?" என்றாள் வேண்டுமென்றே.
அவள் அப்படி சொன்னதும் கோபம் வந்துவிட்டது ஜெய்யிக்கு ஏற்கனவே அவள் விக்ரம் கையை பிடித்ததில் கடுப்பில் இருந்தவன். இப்படி இவள் பேசியதும் மேலும் கடுப்பாக சட்டென அவள் முகத்தை பிடித்து தன் பக்கம் நெருக்கமாக திருப்பியவன்
"நீ எனக்கு மட்டும் தான் சொந்தமானவ அதை ஞாபகம் வச்சுக்கோ . நீ என்ன விரும்பி கல்யாணம் பண்ணிருக்கேன்னு சொன்னது உண்மைதானே . அப்போ என்ன தவிர வேற யார்கிட்டயும் நீ க்ளோசா பேசி பழக கூடாது. அது எனக்கு பிடிக்கல" என்றான் .
"என்னங்க பேசுறீங்க நீங்களும் அவனும் ஒண்ணா.. அவன் என்னோட பிரண்டு நீங்க என்னோட..." என ஜெய்யை பற்றி சொல்ல வந்தவள் அப்படியே பேசாமல் அமைதியாக..
"ம்ம்ம்...சொல்லு நான் யாரு உனக்கு. ஏன் பேச மாட்டேங்கற வாய் திறந்து சொல்லு" என்று அவள் ஆர்வமாக அவள் முகத்தை பார்த்தான் ஜெய் .
"அதான் நீங்க என்ன தொட்டு என் கழுத்துல தாலி கட்டி இருக்கீங்களே... அப்போ நீங்க யாருன்னு உங்களுக்கு தெரியாதா? இதை நான் வேற என் வாயால சொல்லனுமா?" என்றாள் மீனு வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற .
"ஓஹோ அத மேடம் உங்க வாயால சொல்ல மாட்டீங்களா? நாங்களா புரிஞ்சிக்கணுமா?" என்றான் ஜெய் .
"ஆமா சொல்ல மாட்டேன்" என்று தோளை குலுக்கியவள் அவன் மடியில் இருந்து எழுந்திருக்க போக..
மீண்டும் அவள் இடையில் கை கொடுத்து அழுத்தி தன் மீது அமர வைத்தவன் . அவள் முகத்தை பிடித்து இழுத்து அவள் இதழில் அழுத்த முத்தம் வைத்து அவள் இதழை விடுவித்தவன் "இப்போ சொல்லு நான் யாரு உனக்கு" என்றான் .
மீனு அவன் முத்தம் வைத்ததில் அதிர்ந்து போனவள். அவனை விழி விரிய பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் இடையில் தன் கையை மேலும் அழுத்தியவன் "ம்ம்ம்... சொல்லு... நான் யாரு உனக்கு" என்றான் சற்று அதிகாரமாக .
மீனு ஜெயை பார்த்ததிலிருந்து.. அவனுடன் இருந்த இந்த மூன்று நாட்களுமே அவனின் மென்மையை மட்டுமே பார்த்திருக்க. இப்போது அவன் சற்று தடாலடியாக அதிகாரமாக கேட்கவும் அவளுக்கு ஏதோ போல இருந்தது .
முதலில் அவளுக்கு அது சற்று சங்கடத்தை கொடுத்தது . ஆனால் அவன் அவளுடைய கணவன் என நிலைப்படுத்திக் கொள்ள அவள் வாயாலேயே சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் இப்படி அதிகாரமாக பேசுகிறான் என்பதை புரிந்து கொண்டவள். வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றும் விதமாக "இப்படி நீங்க முத்தம் கொடுத்து என்கிட்ட அதிகாரம் பண்ணி கேட்டா நான் சொல்லிடுவேன்னு நினைக்கிறீர்களா? சொல்ல மாட்டேன்" என்றாள் வீம்பாக .
அவள் பேசி முடித்த மறுகணமே மீண்டும் அவள் இதழை சிறை செய்து இருந்த ஜெய் அவளை விடுவித்து "இப்ப சொல்லு நான் யார் உனக்கு" என்றான் .
"இப்படி எல்லாம் நீங்க என்ன மிரட்டி அதிகாரம் பண்ணி கேட்டா நான் சொல்ல மாட்டேன். முதல்ல என்ன விடுங்க" என்று சொல்லி அவன் மடியில் இருந்து அவசரமாக எழுந்து அவனை விட்டு சில அடி தள்ளி நின்றவள் சென்று லைட்டை ஆன் செய்தாள் .
அவள் அவனிடம் சண்டை இடுவது போல பேசி இருந்தாலும் விளக்கின் வெளிச்சத்தில் அவள் முகம் சிவந்திருப்பதை கண்ட ஜெய்யிக்கு ஒரு வித பரவச உணர்வு தோன்றியது .
அதை ரசித்தவாரே தன் சேரை அவளை நோக்கி இயக்கியவன் "சொல்லு நான் யாரு உனக்கு" என்றான்.
"ம்ஹும்...சொல்ல மாட்டேன்" என்று தலையை இடவலமாக ஆட்டியவள். திரும்பி அந்த அறையை விட்டு வெளியே செல்ல போக ... வேகமாக தன் வீழ்ச்சாரை அதற்குள் இயக்கி அவள் அருகில் வந்தவன் அவள் சேலை தலைப்பை பிடித்து இழுத்தான். அவன் எழுத்த வேகத்தில் அவன் அருகில் மோதி மீனு நிற்க... சரியாக அவள் மென்மைகள் அவன் முகத்தில் மோதி விட்டது .
அவள் சேலையை தாண்டி அவன் முகத்தில் மோதிய அவள் மென்மையை முதன் முறையாக உணர்ந்த ஜெய்யின் முகம் சூடேறி சிவந்து விட அவளை பார்த்தான் .
"ம்ச் ... என்ன இது முதல்ல என் சேலையை விடுங்க" என அவன் முகத்தை பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை குனிந்தவாறு அவன் கையில் இருந்த தன் சேலையை பிரிக்க போக .. அதை இறுக்கமாக பிடித்துக் கொண்ட ஜெய் "நான் உனக்கு யாருன்னு சொல்லாம உன்னை இங்கிருந்து போக விடமாட்டேன்" என்றான் .
"ம்ச் ... அதை நான் சொன்னால் தான் நீங்க என்ன விடுவீங்களா?" என்றாள் .
அவன் பார்வை அவள் மென்மையில் பதிந்திருக்க அதை கவனிக்காதவள் தன் சேலையை பிரிப்பதில் மும்பரமாக இருக்க
"ம்ம்..நீ சொன்னா தான் விடுவேன்" என்றான் மென்மையாக .
அவன் குரலில் முன்பு இருந்த அதிகாரம் இப்போது இல்லாதது கண்டு அவன் முகத்தை பார்க்க அப்போதுதான் அவன் பார்வையில் பதிந்திருந்த இடத்தை கவனித்தாள் . சட்டென அவன் கையில் இருந்து சேலையை வேகமாக இழுத்தவள் அவனை விட்டு தள்ளி நின்றவள் வெட்கப்பட்டுக் கொண்டே "போடா பீம் பாய்" என்று அவன் கையில் சிக்காமல் அங்கிருந்து ஓடிவிட்டாள் .
"பீம் பாய்" என புருவம் சுருக்கி அவள் சொன்னதை திரும்ப சொன்னவன் . அப்போது தான் அவள் தன்னை அப்படித்தான் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது புரிய மெல்ல சிரித்தவன் சற்று முன்பு அவள் மென்மைகளை ஸ்பரிசித்தது நினைவில் வர அந்த உணர்வுகளுக்காக அவன் மனம் ஏனோ அவனையும் அறியாமல் எங்கு துவங்கியது
அவர்கள் அறையை விட்டு வெளியே சென்ற மீனு மீண்டும் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள் அவன் அருகில் வேகமாக வந்து கன்னம் கிள்ளி "டேய் பீம் பாய் சீக்கிரம் வாடா .. அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க" என்று விட்டு வேகமாக திரும்ப ஓடிவிட்டாள்.
மீனு பீம் பாய் என்று சொன்னது அவன் மனதிற்குள் ஏதோ உணர்வைத் தர இப்போது உரிமையாக வாடா என அழைத்துச் செல்பவளின் பின்னால் தன்னை அறியாமல் சென்றான் ஜெய் .
ஜெய்யை அழைக்க வந்தவள் கதவை திறந்து கொண்டு உள்ளே வர அவள் அறை முழுவதும் இருட்டாக இருந்தது." இவ்வளவு நேரம் ஆச்சு லைட் கூட போடாம இருட்டுல உட்கார்ந்து என்ன பண்ணிட்டு இருக்காரு" என முனுமுனுத்தவள்
திரும்பிச் சுவிட்ச் பக்கம் நகர்ந்து லைட்டை ஆன் செய்யப் போக அப்போது அவள் கையைப் பிடித்துஜெய் தன் பக்கம் இழுத்தான் .
அவன் இழுத்த வேகத்தில் மீனு வீழ்ச்சாரில் அமர்ந்திருந்தவனின் மடியில் போய் பொத்தென்று விழுந்தவள் , விழுந்த வேகத்தில் தடுமாறி அவன் மடியில் இருந்து கீழே விழப்போக சட்டென அவள் இடையில் கை கொடுத்து அவளை தன் மடி மீது தூக்கி நன்றாக அமர வைத்த ஜெய் .
அந்த இருட்டில் ஜன்னல் வழியே வந்த நிலவொளியின் வெளிச்சத்தில் மீனுவின் பதட்டமான முகத்தை பார்த்தவன். "ஹேய் மீனு பதட்டப்படாத நான் தான்" என ஜெய் கூறவும் அவன் குரல் கேட்டு தான் மீனு சற்று நிம்மதி அடைந்தாள் .
"என்னங்க இப்படி திடீர்னு என் கையை பிடிச்சு இழுத்துட்டீங்க. நான் யாரோ என்னவொன்ன்னு பயந்துட்டேன் தெரியுமா!" என்றவள் அவன் மடியில் இருந்து எழுந்திருக்க போக .
அவளை எழுந்திருக்க விடாமல் இடையை இருக்க பிடித்து அமர வைத்தவன் . "உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே விக்ரம் கையை பிடித்து கூட்டிட்டு போவ" என்றான் .
சற்று முன்பு தான் பதட்டப்படவும் தன்னிடம் மென்மையாக பேசியவன் அடுத்த நொடியே இப்படி குரலை இறுக்கமாக வைத்துக் கொண்டு பேசுபவனை மீனு பார்த்தவள்.
ஜெய் இப்படி கேட்டதும் மீனுவிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது . தன்னை சந்தேகப்படுகிறானோ எனக் கூட அவளுக்கு தோன்றியது.
"இல்லங்க நான் ஏதோ அவங்க கிட்ட பேசுற அவசரத்துல கைபிடித்து கூட்டிட்டு போனேன். நான் எதுவும் தப்பா எதுவும் செய்யல" என்றாள் மீனு .
"நீ எதுவும் தப்பு செய்ய மாட்ட அவனும் அப்படிப்பட்ட ஆள் இல்லைனு எனக்கு நல்லா தெரியும். ஆனா என்னோட பொண்டாட்டி நீ இன்னொருத்தன் கையை அதுவும் என் முன்னாடி பிடித்து கூட்டிட்டு போறத பாத்துட்டு என்னால எப்படி சும்மா இருக்க முடியும்" என்றான் ஜெய் .
அவன் அப்படி சொன்னதும் தன்னைத் தவிர வேறு ஒரு ஆணின் கைப்பிடித்து விட்டாளே என அவனுடைய பொசசிவ்னஸ் தலை தூக்க அதை ரசித்த மீனு வேண்டுமென்றே "இப்போ இதுல என்ன தப்பு என்னோட பிரண்டு தானே விக்ரம் அவனை கை பிடிச்சு கூட்டிட்டு போகக் கூடாதா? என்ன ?" என்றாள் வேண்டுமென்றே.
அவள் அப்படி சொன்னதும் கோபம் வந்துவிட்டது ஜெய்யிக்கு ஏற்கனவே அவள் விக்ரம் கையை பிடித்ததில் கடுப்பில் இருந்தவன். இப்படி இவள் பேசியதும் மேலும் கடுப்பாக சட்டென அவள் முகத்தை பிடித்து தன் பக்கம் நெருக்கமாக திருப்பியவன்
"நீ எனக்கு மட்டும் தான் சொந்தமானவ அதை ஞாபகம் வச்சுக்கோ . நீ என்ன விரும்பி கல்யாணம் பண்ணிருக்கேன்னு சொன்னது உண்மைதானே . அப்போ என்ன தவிர வேற யார்கிட்டயும் நீ க்ளோசா பேசி பழக கூடாது. அது எனக்கு பிடிக்கல" என்றான் .
"என்னங்க பேசுறீங்க நீங்களும் அவனும் ஒண்ணா.. அவன் என்னோட பிரண்டு நீங்க என்னோட..." என ஜெய்யை பற்றி சொல்ல வந்தவள் அப்படியே பேசாமல் அமைதியாக..
"ம்ம்ம்...சொல்லு நான் யாரு உனக்கு. ஏன் பேச மாட்டேங்கற வாய் திறந்து சொல்லு" என்று அவள் ஆர்வமாக அவள் முகத்தை பார்த்தான் ஜெய் .
"அதான் நீங்க என்ன தொட்டு என் கழுத்துல தாலி கட்டி இருக்கீங்களே... அப்போ நீங்க யாருன்னு உங்களுக்கு தெரியாதா? இதை நான் வேற என் வாயால சொல்லனுமா?" என்றாள் மீனு வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற .
"ஓஹோ அத மேடம் உங்க வாயால சொல்ல மாட்டீங்களா? நாங்களா புரிஞ்சிக்கணுமா?" என்றான் ஜெய் .
"ஆமா சொல்ல மாட்டேன்" என்று தோளை குலுக்கியவள் அவன் மடியில் இருந்து எழுந்திருக்க போக..
மீண்டும் அவள் இடையில் கை கொடுத்து அழுத்தி தன் மீது அமர வைத்தவன் . அவள் முகத்தை பிடித்து இழுத்து அவள் இதழில் அழுத்த முத்தம் வைத்து அவள் இதழை விடுவித்தவன் "இப்போ சொல்லு நான் யாரு உனக்கு" என்றான் .
மீனு அவன் முத்தம் வைத்ததில் அதிர்ந்து போனவள். அவனை விழி விரிய பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் இடையில் தன் கையை மேலும் அழுத்தியவன் "ம்ம்ம்... சொல்லு... நான் யாரு உனக்கு" என்றான் சற்று அதிகாரமாக .
மீனு ஜெயை பார்த்ததிலிருந்து.. அவனுடன் இருந்த இந்த மூன்று நாட்களுமே அவனின் மென்மையை மட்டுமே பார்த்திருக்க. இப்போது அவன் சற்று தடாலடியாக அதிகாரமாக கேட்கவும் அவளுக்கு ஏதோ போல இருந்தது .
முதலில் அவளுக்கு அது சற்று சங்கடத்தை கொடுத்தது . ஆனால் அவன் அவளுடைய கணவன் என நிலைப்படுத்திக் கொள்ள அவள் வாயாலேயே சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் இப்படி அதிகாரமாக பேசுகிறான் என்பதை புரிந்து கொண்டவள். வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றும் விதமாக "இப்படி நீங்க முத்தம் கொடுத்து என்கிட்ட அதிகாரம் பண்ணி கேட்டா நான் சொல்லிடுவேன்னு நினைக்கிறீர்களா? சொல்ல மாட்டேன்" என்றாள் வீம்பாக .
அவள் பேசி முடித்த மறுகணமே மீண்டும் அவள் இதழை சிறை செய்து இருந்த ஜெய் அவளை விடுவித்து "இப்ப சொல்லு நான் யார் உனக்கு" என்றான் .
"இப்படி எல்லாம் நீங்க என்ன மிரட்டி அதிகாரம் பண்ணி கேட்டா நான் சொல்ல மாட்டேன். முதல்ல என்ன விடுங்க" என்று சொல்லி அவன் மடியில் இருந்து அவசரமாக எழுந்து அவனை விட்டு சில அடி தள்ளி நின்றவள் சென்று லைட்டை ஆன் செய்தாள் .
அவள் அவனிடம் சண்டை இடுவது போல பேசி இருந்தாலும் விளக்கின் வெளிச்சத்தில் அவள் முகம் சிவந்திருப்பதை கண்ட ஜெய்யிக்கு ஒரு வித பரவச உணர்வு தோன்றியது .
அதை ரசித்தவாரே தன் சேரை அவளை நோக்கி இயக்கியவன் "சொல்லு நான் யாரு உனக்கு" என்றான்.
"ம்ஹும்...சொல்ல மாட்டேன்" என்று தலையை இடவலமாக ஆட்டியவள். திரும்பி அந்த அறையை விட்டு வெளியே செல்ல போக ... வேகமாக தன் வீழ்ச்சாரை அதற்குள் இயக்கி அவள் அருகில் வந்தவன் அவள் சேலை தலைப்பை பிடித்து இழுத்தான். அவன் எழுத்த வேகத்தில் அவன் அருகில் மோதி மீனு நிற்க... சரியாக அவள் மென்மைகள் அவன் முகத்தில் மோதி விட்டது .
அவள் சேலையை தாண்டி அவன் முகத்தில் மோதிய அவள் மென்மையை முதன் முறையாக உணர்ந்த ஜெய்யின் முகம் சூடேறி சிவந்து விட அவளை பார்த்தான் .
"ம்ச் ... என்ன இது முதல்ல என் சேலையை விடுங்க" என அவன் முகத்தை பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை குனிந்தவாறு அவன் கையில் இருந்த தன் சேலையை பிரிக்க போக .. அதை இறுக்கமாக பிடித்துக் கொண்ட ஜெய் "நான் உனக்கு யாருன்னு சொல்லாம உன்னை இங்கிருந்து போக விடமாட்டேன்" என்றான் .
"ம்ச் ... அதை நான் சொன்னால் தான் நீங்க என்ன விடுவீங்களா?" என்றாள் .
அவன் பார்வை அவள் மென்மையில் பதிந்திருக்க அதை கவனிக்காதவள் தன் சேலையை பிரிப்பதில் மும்பரமாக இருக்க
"ம்ம்..நீ சொன்னா தான் விடுவேன்" என்றான் மென்மையாக .
அவன் குரலில் முன்பு இருந்த அதிகாரம் இப்போது இல்லாதது கண்டு அவன் முகத்தை பார்க்க அப்போதுதான் அவன் பார்வையில் பதிந்திருந்த இடத்தை கவனித்தாள் . சட்டென அவன் கையில் இருந்து சேலையை வேகமாக இழுத்தவள் அவனை விட்டு தள்ளி நின்றவள் வெட்கப்பட்டுக் கொண்டே "போடா பீம் பாய்" என்று அவன் கையில் சிக்காமல் அங்கிருந்து ஓடிவிட்டாள் .
"பீம் பாய்" என புருவம் சுருக்கி அவள் சொன்னதை திரும்ப சொன்னவன் . அப்போது தான் அவள் தன்னை அப்படித்தான் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது புரிய மெல்ல சிரித்தவன் சற்று முன்பு அவள் மென்மைகளை ஸ்பரிசித்தது நினைவில் வர அந்த உணர்வுகளுக்காக அவன் மனம் ஏனோ அவனையும் அறியாமல் எங்கு துவங்கியது
அவர்கள் அறையை விட்டு வெளியே சென்ற மீனு மீண்டும் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள் அவன் அருகில் வேகமாக வந்து கன்னம் கிள்ளி "டேய் பீம் பாய் சீக்கிரம் வாடா .. அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க" என்று விட்டு வேகமாக திரும்ப ஓடிவிட்டாள்.
மீனு பீம் பாய் என்று சொன்னது அவன் மனதிற்குள் ஏதோ உணர்வைத் தர இப்போது உரிமையாக வாடா என அழைத்துச் செல்பவளின் பின்னால் தன்னை அறியாமல் சென்றான் ஜெய் .
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 22
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 22
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.