logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
தன் மடியில் இருந்து மீனு எழுந்ததும் அவள் கையைப் பிடித்து இழுத்து மீண்டும் தன் மடியில் அவளை அமர வைத்துக் கொண்டவன். “இவ்வளவு நேரம் என்ன ஒரு நொடி கூட விட்டு பிரிந்து இருக்க முடியாதுன்னு சொன்னதெல்லாம் பொய்யா? இந்த சின்ன விஷயத்துக்காக தான் காலேஜ் போக மாட்டேன்னு நீ முகத்தை தூக்கி வச்சிட்டு இருந்திருக்க. அப்போ என் மேல உண்மையாவே உனக்கு பிரியம் இல்லை அப்படித்தானே” என்றான் ஏமாற்றமாக அவள் முகத்தைப் பார்த்து.

“ம்ஹும்... அப்படி இல்ல நான் காலேஜ் போறேன்னு சொல்லிட்டா இங்க என்ன ஹாஸ்டல்ல தங்கி படிக்க சொல்லிடுவீங்கலோன்னு நினைச்சேன். அப்படி இல்லன்னா என் அம்மா வீட்ல இருந்து படிக்க சொல்லிடுவீங்க நான் இங்கேயும் நீங்க ஊர்ல உங்க வீட்டிலயும் இருப்பீங்கன்னு நினைச்சுட்டேன் நம்ம அடிக்கடி பார்க்க முடியாது… பேச முடியாது.. அப்படின்னு நினைச்சு தான் காலேஜ் போகலைன்னு சொன்னேன். ஏற்கனவே உங்கள தேடி நான் ஒரு வருஷ முழுக்க வேஸ்ட் பண்ணிட்டேன். இனிமேலும் உங்களை பிரிந்து என்னால இருக்க முடியாது அதனாலதான் நான் காலேஜ் போக மாட்டேன்னு சொன்னேன்” என்று உண்மையான காரணத்தை அவனிடம் கூறினால் மீனு.

“அப்படி வா வழிக்கு நீயே இப்போ உன் வாயாலயே சொல்லிட்டியே என்ன ஒரு வருஷமா தேடினேன்னு சொல்றியே. என்ன உனக்கு எப்படி தெரியும்? என்னை நீ எங்க முதன் முதலா பார்த்த? என்ன எதுக்காக நீ இந்த ஒரு வருஷமும் தேடிக்கிட்டு இருந்த? சொல்லு
..” என்றான் அவள் இடையே இறுக்கமாக கூட்டிக்கொண்டு.

அதில் நெளிந்த மீனு அவன் மடியில் இருந்து எழுந்திருக்க ...

“எங்கிட்ட இருந்து தப்பிச்சு போக பார்க்கிற என்ன விட்டு ஒரு நொடி கூட இருக்க முடியாதுன்னு சொல்ற ஆனா என் பக்கத்துலயும் வர மாட்டேங்குற இப்படி இருந்தா நான் என்ன செய்றது. இப்படி எல்லாம் என்னோட கேள்விக்கு பதில் சொல்லாம உன்ன நா இன்னிக்கு இங்கிருந்து போக விடப்போவதில்லை நீ எதுக்காக என்ன தேடுனேன்னு முழுசா சொல்லாம நான் உன்னை இன்னிக்கு விட்றதா இல்ல” என்று அவள் கை பிடித்துகொள்ள…

ஜெய்யை பார்த்தவள் “ உங்கள நான் எங்க? எப்போ? எப்படி மீட் பண்ணினேனு சொல்வேன். நமக்குள்ள நடந்த விஷயத்தை நான் எப்படி உங்ககிட்ட சொல்ல முடியும். அப்படி நான் சொன்னா அதை சொன்னதை நீங்க நம்புவீங்களா ஜெய். என்னை யாருன்னு இதுவரைக்கும் தெரியாத உங்ககிட்ட போய் நீங்களும் நானும் கல்யாணத்துக்கு முன்னாடியே ஒண்ணா இருந்தோம்னு எப்படி சொல்றது. நமக்குள்ள நடந்த விஷயத்தைனால நான் எவ்வளவு பாதிப்படைஞ்சேன்னு உங்ககிட்ட எப்படி சொல்ல முடியும் என்று தன் வயிற்றில் கை வைத்தபடி ஜெய்யிடம் எப்படி இது எல்லாம் சொல்வது” என்று யோசித்தபடி மீனு நின்று இருக்க…

என்ன மீனு நான் கேட்டுட்டே இருக்கேன் நீ எதுவும் பேசாம ஏதோ யோசனை இல்லையே நிக்கிற எவ்வளவு முறை நான் உன்கிட்ட கேட்கிறது இப்போ நடந்தது என்னன்னு ஒன்னும் மறக்காமல் சொல்ல போறியா இல்லையா என்று அவளை பார்க்க..

அப்போதும் மீனு எதுவும் பேசாமல் இருக்க தன் எவ்வளவு கேட்டும் வாயை திறந்து எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருந்த மீனுவை பார்த்து ஜெயிக்கு கோபம் தான் வந்தது பிடித்திருந்து அவள் கையை விட்டவன் உன்கிட்ட இருந்து எப்படி உண்மையை வாங்க போகணும்னு எனக்கு நல்லா தெரியும் என்றவன் அவளை மெத்தையில் தள்ள…

அதில் அதிர்ந்த மீனு “ ஜெய் என்ன பண்றீங்க… என்று மெத்தையில் இருந்து எழுந்திருக்க போக…

அப்போது ஜெய்யை பார்த்து அதிர்ச்சி அடைந்தால் மீனு. இவ்வளவு நேரம் வீல்ச்சேரில் அமர்ந்திருந்தவன் சேரை விட்டு எழுந்து மீனுவின் அருகில் நெருங்கி வர அவன் நடந்து வருவதை பார்த்து நம்ப முடியாமல் அப்படியே படுத்திருந்தாள்.

மீனு ஜெயுடன் திருமணத்திற்கு முன்பே உறவில் இருந்தாலா? அவர்களுக்கு இடையில் இருந்த உறவினால் அவளுக்கு குழந்தை பிறந்திருக்குமா?

ஜெயிக்கு ஆக்சிடென்டில் கால் உடையவில்லையா? அப்படி என்றால் அவன் ஏன் கால் உடைந்தவன் போல இத்தனை நாள் நடித்துக் கொண்டிருந்தான்.

மீனுக்கும் ஜெயிக்கும் இடையில் என்ன நடந்தது. என் மீனு ஜெய் இவ்வளவு கேட்டும் அவனிடம் உண்மையை கூறாமல் மறைக்கிறாள்.

அடுத்து இவர்கள் இருவரின் வாழ்க்கையில் நடக்க போகும் அடுத்தடுத்த அதிர்ச்சிகள் என்னென்ன.. அதை தெரிந்து கொள்ள வேண்டுமா காத்திருங்கள் என்னை மாயம் செய்யும் ராட்சசன் இரண்டாம் பாகத்திற்காக…



இதுவரை நம்ம layas tamil novel youtube சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க இப்பவே சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க… தொடர்ந்து கதைகளுடன் அப்டேட்ஸ் உங்களுக்கு வந்துட்டு இருக்கணும்னா என் ப்ரோபைலை follow பண்ணுங்க..

என்னோட வெப்சைட் ல new ஸ்டோரி என் பொண்டாட்டி நீ தான் டி பிரீ ஸ்டோரி போய்ட்டு இருக்கு படிக்க விருப்பம் உள்ளவர்கள் layas tamil novel வெப்சைட்டில் படிக்கலாம்.
 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 23.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top