logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412

மைதிலி, விக்ரமிடம் மீனு நாளையிலிருந்து காலேஜிற்கு வருவாள் என்று உறுதி அளித்துவிட்டு யோசனையாக அவன் அறைக்கு வந்தான் ஜெய்.

கதவை திறந்து கொண்டு வீல்சேரை இயக்கிய படி உள்ளே நுழைய அங்கே மீனு ஜன்னல் வழியாக வெளியே நிலவை வெறித்தபடி நின்று இருந்தாள்.


அவளிடம் சென்று வீல்சேரை நிறுத்தியவன் மீனுவின் அருகில் நின்று அவனும் ஜன்னல் வழியே தெரிந்த நிலவை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

மீனவும் ஜெயிடம் எதுவும் பேசவில்லை ஜெய்யும் அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

பின்பு மீனுவே பேச்சை ஆரம்பித்தால் “ரொம்ப நேரம் ஆயிடுச்சு தூங்கலையா?” .

“அதேதான் நானும் கேட்கிறேன் நீயேன் தூங்காம அந்த நிலாவையே பார்த்துட்டு இருக்க” என்றான்.

மீனு அவன் கேட்டதற்கு பதில் பேசாமல் மீண்டும் ஜன்னல் வழியே தன் பார்வையை செலுத்தி அமைதியாக நின்று இருக்க மீண்டும் அங்கு அமைதி நிலவியது.

இப்போது ஜெய் அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த மௌனத்தை கலைத்தான் கைகட்டி ஜன்னலில் சாய்ந்தபடி வெளியே வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்த மீனுவின் கையை பிடித்து இழுத்தவன் அவளை தன் பக்கம் திருப்பினான்.

அவன் இவ்வளவு உரிமையாக கையைப் பிடித்து இழுக்கவும் மீனுவிற்கு ஆச்சரியமானது அவனை திரும்பி வியப்பாக பார்க்க.

“நீ ஏன் உன் பிரண்ட்ஸ் கிட்ட காலேஜுக்கு இனிமேல் போக மாட்டேன்னு சொன்ன... அவங்களும், பூஜாவும் சொல்றது எல்லாம் வெச்சு பாக்குறப்போ நீ விரும்பி தான் அந்த காலேஜ்ல ஜாயின் பண்ணி இருக்க. அதுவும் நீ எடுத்திருக்கிற டிபார்ட்மெண்ட் உனக்கு ரொம்ப பிடிச்சது எனக்கு புரியுது. அப்புறம் ஏன் நீ காலேஜுக்கு வரலைன்னு சொன்ன போய் படிக்க வேண்டியது தானே” என்றான் ஜெய்.

“இல்ல நான் போகல எனக்கு இப்போ படிக்கணும்னு தோணல” என்றால் மீனு அவன் முகத்தை பார்க்காமல்.

“பொய் சொல்ற உனக்கு உள்ளுக்குள்ள படிக்க முடியலையேன்னு ரொம்ப ஆதங்கம் இருக்கு. உன்னை யாரும் இங்கே காலேஜுக்கு போக வேண்டாம்னு தடுக்கலையே… ஏன் நீ காலேஜுக்கு போக மாட்டேங்குற ஒரு வேலை என்ன கல்யாணம் பண்ணினதுனால நீ காலேஜ் வரமாட்டேன்னு சொல்றியா? அப்படி மட்டும் நீ நினைச்சிருந்தா அது எனக்கு தான் கஷ்டமா இருக்கும். எப்பவுமே யாருடைய கனவுலயும் குறுக்கே நிற்க விரும்பாதவன் நான். அப்படி இருக்கும்போது என் மனைவி நீ… உனக்கு பிடிச்சதை செய்ய நான் தடையாய் இருப்பேன்னு மட்டும் நீ நினைச்சிடாத உனக்கு என்ன விருப்பமோ அதை செய்” என்றான்.

அவன் தனது விருப்பங்களுக்கு முட்டுக்கட்டையாக ஒருபோதும் இருக்க மாட்டான் என மீனுவிற்கு நன்றாகவே புரிந்தது. ஆனாலும் அவள் “ நான் காலேஜ் போகல நான் போகலைன்னு சொன்னா விடுங்களேன். ஏன் மறுபடியும் என்ன போக சொல்லி வற்புறுத்துறீங்க” என்று சற்று கோபமாக சொன்னவள் வேகமாக போய் மெத்தையில் படுத்து போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டாள்.

அவளின் நடவடிக்கை ஜெய்க்கு ஒன்றுமே புரியவில்லை “இவ ஏன் இப்போ காலேஜ் போக மாட்டேனு சொல்ற ஒரு வேலை அங்க எதுவும் பிரச்சினை இருக்குமோ. யாரும் இவகிட்ட எதுவும் வம்பு பண்ணிட்டாங்களோ? “ என யோசித்தவன் வீல்சேரை நகர்த்தி வந்து கட்டிலில் ஓரமாக படுத்திருந்தவளின் காலுக்கு அருகில் வந்து நிப்பாட்டியவன்.

மீனுவை பார்க்க அவள் ஜெய் கட்டிலுக்கு அருகில் இருப்பது தெரிந்தும் அவனிடம் என்ன என்று கேட்காமல் முதுகு காட்டி படுத்திருந்தாள் .

மெல்ல தன் கையை பெட்டில் வைத்து அவள் பாதத்தை லேசாக பிடித்து விட அவன் செய்கையில் பதறிய மீனு அவசரமாக எழுந்தவள் “என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க எதுக்கு என் காலை பிடிச்சு இருக்கீங்க விடுங்க” என சொல்லி அவன் கையை வேகமாக தட்டிவிட்டால் .

“ஏன் நான் என் பொண்டாட்டி கால பிடிச்சு விட கூடாதா?” என்றவன் மீண்டும் அவள் காலை தொடப் போக...

“ஐயோ!! ஏன் இப்படி பண்றீங்க… நீங்க இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட நடந்துக்கலாமா? நீங்க போய் என் கால தொடலாமா?” என வேகமாக மெத்தையிலிருந்து இருந்து எழுந்து கொண்டாள்.

அவளைப் பார்த்து சிரித்தவாறு ₹ஏன் நான் உன்கிட்ட இப்படி எல்லாம் நடந்துக்க கூடாதா? நான் உன் கால தொடக்கூடாதா?” என கேட்டபடி அவள் அருகில் வந்தவன் அவள் கை பிடித்து வெடுக்கென இழுக்க அவன் இழுத்து வேகத்தில் ஜெய்யின் மடிமேல் கிடந்தாள் மீனு.

விழுந்த வேகத்தில் எழுந்திருக்கப் போனவளை நகரவிடாமல் இடையை வளைத்து பிடித்தவன். அவள் முகத்தை தன்னை பார்க்குமாறு திருப்பி “சொல்லு நீ ஏன் காலேஜ் போக மாட்டேன்னு சொல்ற. ஏன் நான் கேட்ட சரியா பதில் சொல்லாம என்கிட்ட முகம் கொடுத்து கூட பேசாம கோபமா வந்து படுத்துக்கிட்ட . ஏன் உன் காலேஜில் எதுவும் பிரச்சனையா? யாரும் எதுவும் உன்கிட்டே தப்பா நடந்துக்கிட்டாங்களா? சொல்லு எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் நான் இருக்கேன் நீ தைரியமா இரு. நான் நாளைக்கு உன் காலேஜுக்கு வரேன். யாரு உன் மனசு நோகும்படி நடந்துக்கிட்டாங்கன்னு சொல்லு அவங்கள நான் ஒரு கை பாத்துறேன்” என்றான் ஜெய் சற்று கோபமாக.

மீனு அவன் பேசுவது எல்லாம் கேட்டு “அய்யய்யோ! அப்படி எல்லாம் எதுவும் செஞ்சுறாதீங்க என் காலேஜ்ல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல சொல்லப்போனால் நான் ஒரே ஒரு நாள் தான் காலேஜ் போனேன். அதுக்கப்புறம் நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு எனக்கு விக்ரம் மைதிலி தவிர அவ்வளவா யாரையுமே அங்க தெரியாது” என்றால்.

“அப்பறோம் ஏன் நீ காலேஜ் போக மாட்டேன்னு இவ்வளவு பிடிவாதமா இருக்க.. உனக்கு என்ன தான் பிரச்சனை” என்றான் ஜெய்.

மீனு அமைதியாக தலையை குனிந்த படி அவன் மடியில் அமர்ந்திருக்க தன்னை பார்க்குமாறு அவள் முகத்தில் கைவைத்து நிமிர்த்தியவன். “ சொல்லு நீ இப்படி காலேஜ் போக மாட்டேன்னு சொல்றது எனக்கு தான் கில்டியா பீல் ஆகுது. என்னால தான் நீ காலேஜ் போக மாட்டேன்னு சொல்றியோன்னு என் மனசுக்குள்ள தோனிக்கிட்டே இருக்கு. தயவு செய்து ஏன் போக மாட்டேன்னு சொல்ற அதுக்கான காரணம் என்னன்னு என்கிட்ட சொல்லு” என்றான் ஜெய்.

அவன் மடியில் அமர்ந்து இருந்த மீனு அவனை சட்டென கட்டிக்கொண்டு “எனக்கு உங்களை விட்டு எங்கேயும் போக பிடிக்கல... எனக்கு உங்க கூடவே இருக்கணும்னு ஆசையா இருக்கு. உங்கள மறுபடியும் நான் மிஸ் பண்ண விரும்பல உங்களை விட்டு பிரிந்து என்னால கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாது” என்றால் கண்களில் கண்ணீரோடு.

ஜெய்க்கு மீனுவின் இந்த வார்த்தைகள் அவன் இதயத்தின் அடிவாரம் ஆழம் வரை சென்று நங்கூரம் போட்டது போல இருந்தது.

தன்னைப் பார்த்து இரண்டு மூன்று நாட்கள் தான் ஆகியிருக்கும் அப்படி இருக்கும் போது எப்படி மீனுவால் தன் மேல் எவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருக்க முடியும் தன்னை பிரிந்து ஒரு நொடி கூட இருக்க முடியாது என்று சொல்லி வருத்தப்படுபவர்களை என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் அமைதியாக இருந்த ஜெய் மெல்ல அவளை தன்னிடம் இருந்து பிரித்து.

“ஏன் மீனு அப்படி சொல்ற நான் எங்கேயும் போகப் போறது இல்லையே. உன் கூட தானே இருக்கப் போறேன் அப்புறம் என்ன நீ காலேஜ் போயிட்டு வர வேண்டியதுதானே. நீதான் தினமும் காலேஜ் போயிட்டு வர போறியே அப்புறம் என்ன காலையில போயிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்துட போற சாயங்காலம் நீ வீட்டுக்கு வந்தா என் கூடவே தானே இருக்க போற” என்றான்.

அதை கேட்டதும் “அப்போ நம்ம ஊருக்கு போகப்போவதில்லையா இங்க சென்னையிலேயே தான் இருக்க போறோமா?” என்றாள்.

“ஆமா ஏன்?” என்றான் ஜெய் புரியாமல்.

“இல்ல நான் நினைச்சேன் நம்ம எப்படியும் இன்னும் ரெண்டு மூணு நாளில் காஞ்சிபுரம் போயிடுவோம்னு என்னால தினமும் அங்கிருந்து காலேஜுக்கு ட்ராவல் பண்ணி வர முடியாதுன்னு நீங்க என்ன ஹாஸ்டல்ல தங்க வச்சிடுவீங்களோனு பயந்தேன்” என்றால்.

“உன் காலேஜ் இங்க இருக்கும்போது உன்னை தினமும் காலையிலேயே சாயங்காலமும் அலைய விடுறதுக்கு நான் என்ன பைத்தியமா உன் காலேஜ் எங்க இருக்கோ அதுக்கு பக்கத்திலேயே நம்ம வீடு பாத்துக்கலாம். உன்னோட காலேஜ் முடியற வரைக்கும் நம்ம அங்கேயே இருக்கலாம். தவிர எனக்கும் ஆபீஸ் மெயின் ப்ரான்ச் சென்னையில தான் இருக்கு. நான் சென்னையில தான் இருக்க போறேன்” என்றான் ஜெய்.

அவன் அப்படிச் சொன்னதும் “அப்போ நான் காலேஜ் போகட்டுமா அதுவும் இங்கே இருந்து போகலாம் அப்படித்தானே! என்ன ஹாஸ்டல்ல எல்லாம் கொண்டு போய் சேர்த்து விட மாட்டீங்களே!!” என்றால் சிறு பிள்ளை போல அவனைப் பார்த்து.

“ஹாஸ்டல்ல உன்ன சேர்த்து விட்டுடுவேனு தான் காலேஜ் போக மாட்டேன்னு சொன்னியா?” என்றான் ஜெய்.

ஆமாம் என்பது போல மீனு தலையாட்ட...

அவள் இத்தனை நேரம் காலேஜ் போக மாட்டேன் என்று சோகமாக இருந்ததற்கான காரணம் இதுதானா இவ்வளவு சிறிய காரணத்திற்காகத்தான் இப்படி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இவ்வளவு நேரம் இருந்தால் என நினைத்ததும் ஜெய்க்கு மேலும் சிரிப்பு அதிகமாக வாய்விட்டு சத்தமாக அந்த சிரித்தான்.

மடியில் அமர்ந்திருந்தவள் அந்த நிலவொளியில் வெளிச்சத்தில் ஜெய்யின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தாள்.

சத்தமாக சிரித்துக்கொண்டே மீனுவை பார்க்க அவன் தன்னை பார்த்ததும் சட்டென தன் பார்வையை மாற்றிக்கொண்டு வேகமாக அவன் மடியில் இருந்து எழுந்தவள் “அப்போ நான் நாளையிலிருந்து காலேஜ் போறேன்” என்றால் சந்தோஷமாக.
 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 23
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top