- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
"என்ன சொல்றிங்க... என்னோட பிரென்ட் என் கூட நைட் தங்கி இருந்தா அவளை காலையில் எழுந்து பார்த்தா காணோம். அவ எங்க இருக்கானே எனக்கு தெர்ல… அவளுக்கு கால் பண்ணி கேட்கலாம்னு பார்த்தா அவ போனும் இங்கே தான் இருக்கு . அவ எங்கே போனான்னு இதுவரை தெரியலை . சரி அவ என்ன ஆனான்னு தெரிஞ்சுக்க தான் உங்க கிட்டே சிசிடிவி ல போட்டு காட்ட சொல்றேன்… ஆனா உங்க ஸ்டாப் அதுவும் முடியாதுன்னு சொல்லறாரு . நீங்க இப்படியே நான் கேக்குறதுக்கு எந்த ரெஸ்பான்ஸும் சரியாய் பண்ணலையின்னா நான் போலீசுக்கு போக வேண்டி வரும்" என்று அந்த ஹோட்டலின் ஊழியர் ஒருவரிடம் தகராறு செய்து கொண்டு இருந்தாள் மிருதுளா .
" என்ன மேடம் இப்படி எல்லாம் பேசுறீங்க...போலீஸ் அது இதுன்னு. எங்க ஹோட்டல் ஒரு ரெப்புட்டேஷன் ஓட நடந்துட்டு வருது. இப்படி யாரோ ஒருத்தர் உங்க ரூமில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியே போனதுக்கு நீங்க எங்க ஹோட்டல் மேலயே காம்ப்லெயின்ட் பண்றேன்னு சொல்றது எந்த விதத்துல நியம " என்று அந்த ஊழியர் தான் சம்பளம் வாங்கும் ஹோட்டலுக்காக பரிந்து பேசிக்கொண்டு இருந்தார்.
"என்ன சொன்னிங்க...யாரோ ஒருத்தரா !! ஹலோ ! காணாம போனது என்னோட பிரென்ட் . அத தெரிஞ்சுக்கோங்க..." என்று மீண்டும் அந்த ஊழியரிடம் மிருதுளா வம்பிழுத்துக் கொண்டு இருக்க...
இங்கே மிருதுளாவின் அறைக்கு நேர் எதிர் அறையில் இரவு முழுவதும் விழித்திருந்த களைப்பில் மெய் மறந்து தூங்கி கொண்டு இருந்த… மீனு மிருதுளாவின் சத்தம் கேட்டு மெதுவாக தன் கண்களை தேய்த்துக்கொண்டே படுக்கையில் இருந்து எழுந்தாள்.
எழுந்தவள் உடல் எல்லாம் மிகவும் சோர்வாக அசதியாக இருக்கவும் எழுந்து சோம்பல் முறிக்கையில் தான் தன் உடலில் போட்டு துணி கூட இல்லை என்பதையே உணர்ந்தாள் .
சட்டென குனிந்து தன்னை பார்க்க...அப்போது தான் மெத்தையில் இடை வரை போர்வை போர்த்தி இருக்க... மேலே ஆடை இல்லாமல் இருப்பதை பார்த்ததும் அதிர்ந்த மீனு. சட்டென்று போர்த்தி இருந்த போர்வையை எடுத்து தன் மீது போர்த்திக் கொள்ள இழுக்க...அது அவள் கைக்கு வராமல் யாரோ பிடித்து இருப்பது போல உணர்ந்தாள் .
படுக்கையில் தன் அருகில் திரும்பி பார்த்த மீனுவிற்கு அவள் அருகில் திரண்ட தோல் கொண்ட… திடகாத்திரமாக ஒரு ஆண் படுத்து இருப்பதை பார்த்ததும் அதிர்ந்து போனாள் .
அவனை தன் அருகில் பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தவள். அவன் தூக்கத்தில் இருந்து அசைவதை உணர்ந்தவள் .
அவன் அசைந்த அடுத்த நொடி சட்டென்று கட்டிலில் இருந்து வேகமாக கீழே இறங்கியவள். அவன் மீது போர்த்தி இருந்த போர்வையை பலம் கொண்ட மட்டும் வேகமாக இழுக்க... அவள் அருகில் படுத்து இருந்தவனின் மேல் இருந்த போர்வை மொத்தமும் விலகி முது காட்டி படுத்து இருந்தவனின் மொத உடலும் அவள் பார்த்துவிட..." ஐயோ!!" என்று அதிர்ச்சியில் அலறிவிட்டாள்.
அவள் சத்தம் கேட்டதும் அரை தூக்கத்தில் இருந்தவனது தூக்கம் களைந்துவிட… படுத்து இருந்தவன் தலையை பிடித்துக்கொண்டு எழுந்து கட்டிலில் அமர்ந்தான். இரவு அவன் சாப்பிட்ட மதுவும் , அதனுள் கலந்து இருந்த போதை மருந்தின் வீரியமும் அவன் தலையில் யாரோ பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல இருந்தது.
மீண்டும் வலி தாங்காமல் குப்புற படுத்து கண் மூடி உறங்க ஆரம்பித்திருந்தான் .
அவன் திரும்ப படுத்ததும் அப்பாடா… என்று மூச்சு விட்டது மீனு அவன் தூங்கும் வரை தன் மீது போர்வையை முழுவதுமாக போர்த்திக்கொண்டு துணி மூட்டை போல தரையில் சுருண்டு கிடந்தவள் மெல்ல போர்வையை விளக்கி மெத்தையில் படுத்து இருந்தவனை தன் தலையை உயர்த்தி பார்த்தாள் .
அவன் நன்றாக உறங்கி இருக்க… அவன் களைந்த கேசமும், களைத்து போய் இருந்த முகமும் பார்த்தவள் “இப்படி இருக்கும்போதும் கூட பார்க்க அழகா தானே இருக்கான்” என்று தோன்றியது மீனுவின் மனதில் .
உடனே அடுத்த நிமிஷம் ..." ஏய் அறிவு கெட்டவளே ... உனக்கு என்ன ஆச்சு முன்ன பின்ன யாருன்னே தெரியாதவனை பார்த்து அதுவும் அவன் கூட ஒரு ராத்திரி முழுசும் ஒண்ணா இருந்துட்டு இப்படி வெட்கமே இல்லாம அவனையே சைட் அடிச்சுட்டு இருக்க ..." என்று தன்னையே திட்டிக் கொண்டவள் மெல்ல சுற்றிலும் எதுவும் ஆடை இருக்கிறதா தான் போட்டுக்கொள்ள என்று பார்த்தாள் .
அங்கே இரவு அவள் காட்டி இருந்த ஒற்றை டவல் மட்டும் தரையில் கிடந்தது ." ஐயோ இதை போட்டுட்டு நான் வெளியே போகணுமா!! " என்று கையில் எடுத்த அந்த டவலை வைத்த்துக் கொண்டு சுற்றிலும் நோட்டம் விட… அவள் இருந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு வெள்ளை நிற ஷர்ட் இருந்தது .
ஆபத்துக்கு பாவம் இல்லை என்று வேகமாக அந்த சட்டையை எடுத்து அணிந்து கொண்டவள் குனிந்து தன்னை பார்க்க… அது அவள் முழங்கால் வரை இருந்தது . மெத்தையில் படுத்து கட்டில் மொத்தமும் நீட்டி படுத்து இருந்தவனை பார்த்து " அவனோட ஷர்ட் எனக்கு முழங்கால் வரைக்கும் வந்திருக்குன்னா அவன் எவ்ளோ பெருசாக இருப்பான்" என்று நினைத்தவள்.
"அப்போ… என்று அவன் பீம்பாய் பற்றி அவள் மனம் தறிகெட்டு கண்டதை நினைத்து ஓட… பிறகு “ச்சீ..ச்சீ.. என்ன இப்படி எல்லாம் தோணுது” என்று தலையில் அடித்துக்கொண்டவள். முதலில் அவன் கண்விழித்து தன்னை பார்ப்பதற்குள் இங்கே இருந்து சென்றுவிட வேண்டும் என்று அந்த அறையை விட்டு வேகமாக வெளியே வந்தவள் சத்தம் இல்லாமல் அவன் இருந்த அறையை மெதுவாக சாற்றி விட்டு வந்தவள்.
அவர் இருந்த அறைக்கதவை திறந்து மெல்ல தலையை மட்டும் நீட்டி வெளியே பார்த்தாள். அங்கே இன்னமும் மிருதுளா ஹோட்டல் ஊழியரிடம் மீனுவை காணாமல் சண்டை போட்டுகொண்டு இருந்தாள்.
அவளை பார்த்த மீனு மெல்ல மிருதுளா தன்னை விதமாக தன் கையை மேலே தூக்கி ஆட்டி மிருதுளாவின் கவனத்தை தன்னை நோக்கி திருப்ப முயற்சித்தாள் மீனு.
ஆனால் அவள் சண்டை போடும் மும்முரத்தில் அதை கவனிக்க வில்லை பிரகு “பூனை குட்டி...ஏய் பூனை .. மிரு… “ என்று ஹஸ்கி வாய்ஸில் மீனு அழைக்க.....
அதில் கவனம் பெற்றவள் அப்போது தான் அந்த பேரருக்கு பின்னால் இருந்த அறைக்குள் இருந்து மீனு தனக்கு சிக்னல் செய்து கொண்டு இருப்பதை கவனித்தாள் .
அவளை பார்த்ததும் "ஏய்...மீனு...நீ...எங்கே..." ஆர்வத்தில் மிருதுளா சத்தம் இட அவளை பார்த்து அவசரமாக தன் உதட்டில் ஒற்றை விரலை வைத்து ஷ்..ஷ்...சத்தம் போடாதே என்று ஜாடை செய்தாள் மீனு .
அதற்குள் மிருதுளா தன் பின்னால் யாரையோ பார்த்து பேசுவது போல உணர்ந்த பேரர் வேகமாக திரும்ப அதை பார்த்ததும் மீனு சட்டென்று கதவை சாற்றி விட்டாள் . இங்கே அவள் அறைக்கதவை வேகமாக சாற்றியதில் சத்தம் கேட்டு அறைக்குள் இருந்தவன் கண்விழித்துவிட்ட . என்ன சத்தம் இது என்று எழுந்தவன் படுக்கையை விட்டு வெளியே யார் என்று பார்ப்பதற்காக வந்தான்.
அப்போது தான் அவன் தன்னை கவனித்தான் அவன் உடலில் துணி இல்லாமல் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தவன் வலித்த தலையை பிடித்துக்கொண்டு சுற்றிலும் தேடியவன் அங்கே மீனு போட்டு விட்டு சென்ற துண்டு இருக்க அதை எடுத்து தன் இடையில் கட்டிக்கொண்டு இன்னமும் மயக்கம் தெளியாதவனாய் அவன் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் .
உள்ளே இருந்த அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் மீனு அதிர்ந்து போய் திரும்பிப் பார்க்க… சரியாக அந்த அறையை திறந்து கொண்டு உள்ளே இருந்த அந்த ஆணழகன் வெளியே வந்தான். மீனுவிற்கு என்ன செய்வது என்று தெறியாமல் அவனை பார்த்தவள் சட்டென்று திரும்பி அறைக் கதவை திறக்க போக..
அந்த அறையை விட்டு வெளியே வந்தவன் தன் ரூம் கதவிற்கு அருகில் ஒரு பெண் முதுகு காட்டிக்கொண்டு தன் சட்டையை அணிந்து நின்று இருப்பதை பார்த்தவன் அவள் வெளியே செல்ல முயற்சிப்பதை பார்த்த்ட்டுவிட்டு " ஏய் யார் நீ ? அங்கேயே நில்லு ? என்று அவளை நோக்கி வேகமாக வந்தான்.
அவன் அழைத்ததும் செய்வதறியாது அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டாள் மீனு.
" என்ன மேடம் இப்படி எல்லாம் பேசுறீங்க...போலீஸ் அது இதுன்னு. எங்க ஹோட்டல் ஒரு ரெப்புட்டேஷன் ஓட நடந்துட்டு வருது. இப்படி யாரோ ஒருத்தர் உங்க ரூமில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியே போனதுக்கு நீங்க எங்க ஹோட்டல் மேலயே காம்ப்லெயின்ட் பண்றேன்னு சொல்றது எந்த விதத்துல நியம " என்று அந்த ஊழியர் தான் சம்பளம் வாங்கும் ஹோட்டலுக்காக பரிந்து பேசிக்கொண்டு இருந்தார்.
"என்ன சொன்னிங்க...யாரோ ஒருத்தரா !! ஹலோ ! காணாம போனது என்னோட பிரென்ட் . அத தெரிஞ்சுக்கோங்க..." என்று மீண்டும் அந்த ஊழியரிடம் மிருதுளா வம்பிழுத்துக் கொண்டு இருக்க...
இங்கே மிருதுளாவின் அறைக்கு நேர் எதிர் அறையில் இரவு முழுவதும் விழித்திருந்த களைப்பில் மெய் மறந்து தூங்கி கொண்டு இருந்த… மீனு மிருதுளாவின் சத்தம் கேட்டு மெதுவாக தன் கண்களை தேய்த்துக்கொண்டே படுக்கையில் இருந்து எழுந்தாள்.
எழுந்தவள் உடல் எல்லாம் மிகவும் சோர்வாக அசதியாக இருக்கவும் எழுந்து சோம்பல் முறிக்கையில் தான் தன் உடலில் போட்டு துணி கூட இல்லை என்பதையே உணர்ந்தாள் .
சட்டென குனிந்து தன்னை பார்க்க...அப்போது தான் மெத்தையில் இடை வரை போர்வை போர்த்தி இருக்க... மேலே ஆடை இல்லாமல் இருப்பதை பார்த்ததும் அதிர்ந்த மீனு. சட்டென்று போர்த்தி இருந்த போர்வையை எடுத்து தன் மீது போர்த்திக் கொள்ள இழுக்க...அது அவள் கைக்கு வராமல் யாரோ பிடித்து இருப்பது போல உணர்ந்தாள் .
படுக்கையில் தன் அருகில் திரும்பி பார்த்த மீனுவிற்கு அவள் அருகில் திரண்ட தோல் கொண்ட… திடகாத்திரமாக ஒரு ஆண் படுத்து இருப்பதை பார்த்ததும் அதிர்ந்து போனாள் .
அவனை தன் அருகில் பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தவள். அவன் தூக்கத்தில் இருந்து அசைவதை உணர்ந்தவள் .
அவன் அசைந்த அடுத்த நொடி சட்டென்று கட்டிலில் இருந்து வேகமாக கீழே இறங்கியவள். அவன் மீது போர்த்தி இருந்த போர்வையை பலம் கொண்ட மட்டும் வேகமாக இழுக்க... அவள் அருகில் படுத்து இருந்தவனின் மேல் இருந்த போர்வை மொத்தமும் விலகி முது காட்டி படுத்து இருந்தவனின் மொத உடலும் அவள் பார்த்துவிட..." ஐயோ!!" என்று அதிர்ச்சியில் அலறிவிட்டாள்.
அவள் சத்தம் கேட்டதும் அரை தூக்கத்தில் இருந்தவனது தூக்கம் களைந்துவிட… படுத்து இருந்தவன் தலையை பிடித்துக்கொண்டு எழுந்து கட்டிலில் அமர்ந்தான். இரவு அவன் சாப்பிட்ட மதுவும் , அதனுள் கலந்து இருந்த போதை மருந்தின் வீரியமும் அவன் தலையில் யாரோ பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல இருந்தது.
மீண்டும் வலி தாங்காமல் குப்புற படுத்து கண் மூடி உறங்க ஆரம்பித்திருந்தான் .
அவன் திரும்ப படுத்ததும் அப்பாடா… என்று மூச்சு விட்டது மீனு அவன் தூங்கும் வரை தன் மீது போர்வையை முழுவதுமாக போர்த்திக்கொண்டு துணி மூட்டை போல தரையில் சுருண்டு கிடந்தவள் மெல்ல போர்வையை விளக்கி மெத்தையில் படுத்து இருந்தவனை தன் தலையை உயர்த்தி பார்த்தாள் .
அவன் நன்றாக உறங்கி இருக்க… அவன் களைந்த கேசமும், களைத்து போய் இருந்த முகமும் பார்த்தவள் “இப்படி இருக்கும்போதும் கூட பார்க்க அழகா தானே இருக்கான்” என்று தோன்றியது மீனுவின் மனதில் .
உடனே அடுத்த நிமிஷம் ..." ஏய் அறிவு கெட்டவளே ... உனக்கு என்ன ஆச்சு முன்ன பின்ன யாருன்னே தெரியாதவனை பார்த்து அதுவும் அவன் கூட ஒரு ராத்திரி முழுசும் ஒண்ணா இருந்துட்டு இப்படி வெட்கமே இல்லாம அவனையே சைட் அடிச்சுட்டு இருக்க ..." என்று தன்னையே திட்டிக் கொண்டவள் மெல்ல சுற்றிலும் எதுவும் ஆடை இருக்கிறதா தான் போட்டுக்கொள்ள என்று பார்த்தாள் .
அங்கே இரவு அவள் காட்டி இருந்த ஒற்றை டவல் மட்டும் தரையில் கிடந்தது ." ஐயோ இதை போட்டுட்டு நான் வெளியே போகணுமா!! " என்று கையில் எடுத்த அந்த டவலை வைத்த்துக் கொண்டு சுற்றிலும் நோட்டம் விட… அவள் இருந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு வெள்ளை நிற ஷர்ட் இருந்தது .
ஆபத்துக்கு பாவம் இல்லை என்று வேகமாக அந்த சட்டையை எடுத்து அணிந்து கொண்டவள் குனிந்து தன்னை பார்க்க… அது அவள் முழங்கால் வரை இருந்தது . மெத்தையில் படுத்து கட்டில் மொத்தமும் நீட்டி படுத்து இருந்தவனை பார்த்து " அவனோட ஷர்ட் எனக்கு முழங்கால் வரைக்கும் வந்திருக்குன்னா அவன் எவ்ளோ பெருசாக இருப்பான்" என்று நினைத்தவள்.
"அப்போ… என்று அவன் பீம்பாய் பற்றி அவள் மனம் தறிகெட்டு கண்டதை நினைத்து ஓட… பிறகு “ச்சீ..ச்சீ.. என்ன இப்படி எல்லாம் தோணுது” என்று தலையில் அடித்துக்கொண்டவள். முதலில் அவன் கண்விழித்து தன்னை பார்ப்பதற்குள் இங்கே இருந்து சென்றுவிட வேண்டும் என்று அந்த அறையை விட்டு வேகமாக வெளியே வந்தவள் சத்தம் இல்லாமல் அவன் இருந்த அறையை மெதுவாக சாற்றி விட்டு வந்தவள்.
அவர் இருந்த அறைக்கதவை திறந்து மெல்ல தலையை மட்டும் நீட்டி வெளியே பார்த்தாள். அங்கே இன்னமும் மிருதுளா ஹோட்டல் ஊழியரிடம் மீனுவை காணாமல் சண்டை போட்டுகொண்டு இருந்தாள்.
அவளை பார்த்த மீனு மெல்ல மிருதுளா தன்னை விதமாக தன் கையை மேலே தூக்கி ஆட்டி மிருதுளாவின் கவனத்தை தன்னை நோக்கி திருப்ப முயற்சித்தாள் மீனு.
ஆனால் அவள் சண்டை போடும் மும்முரத்தில் அதை கவனிக்க வில்லை பிரகு “பூனை குட்டி...ஏய் பூனை .. மிரு… “ என்று ஹஸ்கி வாய்ஸில் மீனு அழைக்க.....
அதில் கவனம் பெற்றவள் அப்போது தான் அந்த பேரருக்கு பின்னால் இருந்த அறைக்குள் இருந்து மீனு தனக்கு சிக்னல் செய்து கொண்டு இருப்பதை கவனித்தாள் .
அவளை பார்த்ததும் "ஏய்...மீனு...நீ...எங்கே..." ஆர்வத்தில் மிருதுளா சத்தம் இட அவளை பார்த்து அவசரமாக தன் உதட்டில் ஒற்றை விரலை வைத்து ஷ்..ஷ்...சத்தம் போடாதே என்று ஜாடை செய்தாள் மீனு .
அதற்குள் மிருதுளா தன் பின்னால் யாரையோ பார்த்து பேசுவது போல உணர்ந்த பேரர் வேகமாக திரும்ப அதை பார்த்ததும் மீனு சட்டென்று கதவை சாற்றி விட்டாள் . இங்கே அவள் அறைக்கதவை வேகமாக சாற்றியதில் சத்தம் கேட்டு அறைக்குள் இருந்தவன் கண்விழித்துவிட்ட . என்ன சத்தம் இது என்று எழுந்தவன் படுக்கையை விட்டு வெளியே யார் என்று பார்ப்பதற்காக வந்தான்.
அப்போது தான் அவன் தன்னை கவனித்தான் அவன் உடலில் துணி இல்லாமல் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தவன் வலித்த தலையை பிடித்துக்கொண்டு சுற்றிலும் தேடியவன் அங்கே மீனு போட்டு விட்டு சென்ற துண்டு இருக்க அதை எடுத்து தன் இடையில் கட்டிக்கொண்டு இன்னமும் மயக்கம் தெளியாதவனாய் அவன் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் .
உள்ளே இருந்த அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் மீனு அதிர்ந்து போய் திரும்பிப் பார்க்க… சரியாக அந்த அறையை திறந்து கொண்டு உள்ளே இருந்த அந்த ஆணழகன் வெளியே வந்தான். மீனுவிற்கு என்ன செய்வது என்று தெறியாமல் அவனை பார்த்தவள் சட்டென்று திரும்பி அறைக் கதவை திறக்க போக..
அந்த அறையை விட்டு வெளியே வந்தவன் தன் ரூம் கதவிற்கு அருகில் ஒரு பெண் முதுகு காட்டிக்கொண்டு தன் சட்டையை அணிந்து நின்று இருப்பதை பார்த்தவன் அவள் வெளியே செல்ல முயற்சிப்பதை பார்த்த்ட்டுவிட்டு " ஏய் யார் நீ ? அங்கேயே நில்லு ? என்று அவளை நோக்கி வேகமாக வந்தான்.
அவன் அழைத்ததும் செய்வதறியாது அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டாள் மீனு.
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 27
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 27
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.