- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
வெளியே வந்தவள் நேராக அவன் அறைக்கு செல்ல போக… அப்போதுதான் எதிர் அறையில் அந்த ஹோட்டலில் வேலை செய்யும் ரூம் சேர்வன்ட்டுகள் அந்த அறையை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அதை பார்த்ததுமே இருவருக்கும் புரிந்துவிட்டது அவன் அந்த அறையை காலி செய்து சென்றுவிட்டான் என்று .
மீனு செய்வதறியாது மிருதுளாவை பார்க்க… “என்ன டி அந்த ஆள் மேட்டரை முடிச்சிட்டு எஸ் ஆகிட்டான் போல இருக்கு” என்று மீனுவை மேலும் டென்ஷன் ஏற்றி விட…
“ஏய் மிருதுளா எனக்கு இப்போ இருக்க டென்ஷனுக்கு உன்னை என்ன செய்வேன்னு தெரியாது . ஒழுங்கா அவங்ககிட்டே போய் அந்த ஏமாத்துக்காரன் எங்கே போனான்னு கேளு டி” என்று அவளை அந்த எதிர் அறைக்கு தள்ளி விட்டாள் .
“சரி டி இரு கேக்குறேன் தள்ளாதே” என்று அங்கே நின்று கதவை துடைத்துக்கொண்டு இருந்த ஊழியரிடம் வந்த மிருதுளா “இந்த ரூமில் இருந்தவர் ரூமை காலி செய்துட்டு போய்விட்டாரா? “ என்று ஆங்கிலத்தில் கேட்டாள் .
அந்த ஊழியரும் “ஆமா மேடம்” என்று விட்டு திரும்பி தன் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
மிருதுளா திரும்பி மீனுவை பார்த்து “இப்போ என்ன டி பண்ணலாம்” என்றாள்.
மீனுவிற்கு அவன் யார் என்ன என்று எதுவும் தெரிந்து கொள்வதற்கு முன் அவனை இப்படி கோட்டை விட்டுட்டோமே என்று இருந்தது.
மிருதுளா மீனுவிடம் வந்து “நாம கீழே ரிசெப்சனில் போய் அந்த ஆளை பத்தி விசாரிச்சு தெரிஞ்சுக்கலாம் வா…” என்று மீனு கையை பிடித்து இழுத்துக்கொண்டு லிப்ட்ட்டில் சென்றாள்.
ரிசெப்சனில் வந்து மிருதுளா அவர்கள் இருந்த அறைக்கு எதிர் அறையில் இருந்தவனை பற்றி விசாரிக்க... அவர்கள் தங்களுடைய கஷ்டமர்களின் விபரங்களை சொல்ல மருத்துவிட்டனர்.
இருவரும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அந்த ஊழியர் விபரம் சொல்ல மறுக்க... உடனே மீனு அந்த நபரிடம் “அவரை பற்றி எந்த விபரமும் எங்களுக்கு தெரிய வேண்டாம் அடலீஸ்ட் அவர் பேர் என்னனு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றாள் மிகவும் சோகமாக .
அவள் முகத்தை சோகமாக வைத்து இருப்பதை பார்த்த அந்த ஊழியர் மனம் இறங்கி வந்து “அவர் பேரை மட்டும் தான் சொல்லுவேன் மற்ற படி வேற எந்த விபரமும் என்னால சொல்ல முடியாது” என்றார்.
வந்ததற்கு தான் யாருடன் ஒரு முழு இரவை கழித்து இருந்தேன் என்றாவது தெரிந்து கொள்ளலாமே என்று அதற்கு சம்மதம் சொன்னவள். “நீங்க சொல்ற விஷயத்தை நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்” என்றாள் உண்மையாக.
“ஆமா வெறும் பேரை மட்டும் சொல்றதுக்கு இந்த ஆள் கொடுக்குற பில்டப் தாங்க முடியல இதுல இதை வெளியே வேற சொல்லக்கூடாதாமா” என்று மிருதுளா புலம்பினால்.
“ஏய் சும்மா இரு டி நீ பேசுறது எதுவும் அவங்க கேட்டுற போறாங்க” என்றாள் மீனு.
“ஆமா இந்த வெள்ளைகாரனுக்கு தமிழ் புரியும் பாரு போடி…” என்றாள் மிருதுளா.
அவளை முறைத்து விட்டு மீனு திரும்பி அந்த வேலையாளை பார்க்க... அவர் ஒரு துண்டு காகிதத்தில் பெயரை மட்டும் எழுதி அவர்களுக்கு கொடுக்க இருந்த பில் உடன் சேர்த்து அந்த காகிதத்தை மடித்து கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டு ஹோட்டளை விட்டு வெளியே வந்த இருவரும் சற்று தள்ளி நின்று அவசரமாக அந்த துண்டு சீட்டில் இருந்த பெயரை எடுத்து பிரித்து பார்த்துத்தனர். அதில் ஜெய் என்று எழுதி இருக்க...
அதை படித்த மிருதுளா “என்ன டி இது பேர் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே முடிஞ்சிருச்சு” என்றாள்.
“அவன் பேர் குட்டியா இருக்கலாம் மிரு.. ஆனா எனக்கு என்னவோ அவனோட இருக்க என் தொடர்புக்கு ஆயூஸுக்கும் இருக்கும்ன்னு நினைக்குறேன்” என்றாள் மீனு
அந்த சம்பவத்திற்கு பின் ஜெய் என்ற பெயரை அவர்கள் இருவருக்கும் தெரிந்த வகையியில் எங்கெல்லாமோ தேடிப் பார்த்தும் அவனை பற்றி எந்த ஒரு விபரமும் கிடைக்க வில்லை.
மீனு தனக்கு ஜெய்யை எப்படி தெரியும் என்று முழுவதுமாக சொல்லி முடித்து அவனை திரும்பிப் பார்க்க… மீனு நீ சொன்னதை எல்லாம் உண்மையா என்றான் நம்பாமல்.
“ஏன் ஜெய் நான் சொன்னதை கேட்டும் நீங்க நம்பலையா?” என்றாள் அவன் மடியில் இருந்து எழுந்து அவனை பார்த்து.
“இல்லை நீ சொல்றதை பார்த்தா உண்மையா இருக்கும் போல தான் தெரியுது. ஆனா எனக்கு என் வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாவே நியாபகம் இல்லையே” என்றான் ஜெய்.
அவனை கனத்த இதயத்தோடு பார்த்த மீனு. “என்ன ஜெய் இப்படி சொல்லிட்டீங்க... இது எவ்வளவு பெரிய விஷயம் ஆனா உங்களுக்கு கொஞ்சமும் இதை பத்தி நியாபகம் இல்லையினு சொல்றிங்க... நான் இதை உங்ககிட்டே இருந்து எதிர்பார்க்கல. உங்ககிட்டே நாம பஸ்ட் மீட் பண்ணினதை சொல்லும்போது உங்க முகத்துல எந்த மாதிரியான உணர்வு இருக்கும். என்னை பற்றி உங்க நியாபகம் எப்படி கொண்டு வரும்னு நினைச்சேன். ஆனா நீங்க மொத்தமா அப்படி ஒரு சம்பவம் நடந்ததாவே நியாபகம் இல்லையின்னு சொல்றிங்க..” என்றவள்.
“அப்போ ஒரு பொண்ணு பத்தின உங்க எண்ணம் அவ்வளவு தானா?? என்ன இருந்தாலும் நீங்க ஆம்பளை தானே உங்களுக்கு இந்த மாதிரியான ஒரு விஷயம் பெருசா தெரியாது. நான் தான் இந்த ரெண்டு வருசத்துல உங்களையே நினைச்சிட்டு வெறும் உங்க பேரை மட்டும் வெச்சிட்டு அதை என் நெஞ்சுல பச்சை குத்தி வெச்சுட்டு உங்களை நினைச்சு உருகிகிட்டு இருந்து இருக்கேன். ஆனா உங்களுக்கு என்னை பற்றிய எண்ணம் துளியும் இல்லை” என்றவள் அழுத்துகொண்டே அவனை பார்க்க...
“மீனு நீ நினைக்குற மாதிரியான ஆள் நான் இல்லை. நான் சொல்றதை நம்பு மீனு.. எனக்கு என் வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாவே தெரியலை என்னை நம்பு” என்று மீனுவிடம் நெருங்கி தன் சேரை இயக்கினான்.
ஆனால் அவன் அருகில் வந்ததும் மீனு ஜெய்யை விட்டு விலகி நின்றவள் “போதும் ஜெய் இதுக்கு மேலயும் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை” என்றவள் அழுது கொண்டே அவள் அறையில் இருந்து நேராக மிருதுளாவின் அறைக்கு ஓடிவிட்டாள்.
ஜெய்க்கு இங்கே என்ன நடக்கிறது என்று துளியியும் விளங்கவில்லை. அவன் மீனு சொன்னதை எல்லாம் யோசித்து பார்த்தான். ஆனால் அவனுக்கு தன் வாழ்வில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே நினைவில் இல்லை.
மீனு செய்வதறியாது மிருதுளாவை பார்க்க… “என்ன டி அந்த ஆள் மேட்டரை முடிச்சிட்டு எஸ் ஆகிட்டான் போல இருக்கு” என்று மீனுவை மேலும் டென்ஷன் ஏற்றி விட…
“ஏய் மிருதுளா எனக்கு இப்போ இருக்க டென்ஷனுக்கு உன்னை என்ன செய்வேன்னு தெரியாது . ஒழுங்கா அவங்ககிட்டே போய் அந்த ஏமாத்துக்காரன் எங்கே போனான்னு கேளு டி” என்று அவளை அந்த எதிர் அறைக்கு தள்ளி விட்டாள் .
“சரி டி இரு கேக்குறேன் தள்ளாதே” என்று அங்கே நின்று கதவை துடைத்துக்கொண்டு இருந்த ஊழியரிடம் வந்த மிருதுளா “இந்த ரூமில் இருந்தவர் ரூமை காலி செய்துட்டு போய்விட்டாரா? “ என்று ஆங்கிலத்தில் கேட்டாள் .
அந்த ஊழியரும் “ஆமா மேடம்” என்று விட்டு திரும்பி தன் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
மிருதுளா திரும்பி மீனுவை பார்த்து “இப்போ என்ன டி பண்ணலாம்” என்றாள்.
மீனுவிற்கு அவன் யார் என்ன என்று எதுவும் தெரிந்து கொள்வதற்கு முன் அவனை இப்படி கோட்டை விட்டுட்டோமே என்று இருந்தது.
மிருதுளா மீனுவிடம் வந்து “நாம கீழே ரிசெப்சனில் போய் அந்த ஆளை பத்தி விசாரிச்சு தெரிஞ்சுக்கலாம் வா…” என்று மீனு கையை பிடித்து இழுத்துக்கொண்டு லிப்ட்ட்டில் சென்றாள்.
ரிசெப்சனில் வந்து மிருதுளா அவர்கள் இருந்த அறைக்கு எதிர் அறையில் இருந்தவனை பற்றி விசாரிக்க... அவர்கள் தங்களுடைய கஷ்டமர்களின் விபரங்களை சொல்ல மருத்துவிட்டனர்.
இருவரும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அந்த ஊழியர் விபரம் சொல்ல மறுக்க... உடனே மீனு அந்த நபரிடம் “அவரை பற்றி எந்த விபரமும் எங்களுக்கு தெரிய வேண்டாம் அடலீஸ்ட் அவர் பேர் என்னனு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றாள் மிகவும் சோகமாக .
அவள் முகத்தை சோகமாக வைத்து இருப்பதை பார்த்த அந்த ஊழியர் மனம் இறங்கி வந்து “அவர் பேரை மட்டும் தான் சொல்லுவேன் மற்ற படி வேற எந்த விபரமும் என்னால சொல்ல முடியாது” என்றார்.
வந்ததற்கு தான் யாருடன் ஒரு முழு இரவை கழித்து இருந்தேன் என்றாவது தெரிந்து கொள்ளலாமே என்று அதற்கு சம்மதம் சொன்னவள். “நீங்க சொல்ற விஷயத்தை நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்” என்றாள் உண்மையாக.
“ஆமா வெறும் பேரை மட்டும் சொல்றதுக்கு இந்த ஆள் கொடுக்குற பில்டப் தாங்க முடியல இதுல இதை வெளியே வேற சொல்லக்கூடாதாமா” என்று மிருதுளா புலம்பினால்.
“ஏய் சும்மா இரு டி நீ பேசுறது எதுவும் அவங்க கேட்டுற போறாங்க” என்றாள் மீனு.
“ஆமா இந்த வெள்ளைகாரனுக்கு தமிழ் புரியும் பாரு போடி…” என்றாள் மிருதுளா.
அவளை முறைத்து விட்டு மீனு திரும்பி அந்த வேலையாளை பார்க்க... அவர் ஒரு துண்டு காகிதத்தில் பெயரை மட்டும் எழுதி அவர்களுக்கு கொடுக்க இருந்த பில் உடன் சேர்த்து அந்த காகிதத்தை மடித்து கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டு ஹோட்டளை விட்டு வெளியே வந்த இருவரும் சற்று தள்ளி நின்று அவசரமாக அந்த துண்டு சீட்டில் இருந்த பெயரை எடுத்து பிரித்து பார்த்துத்தனர். அதில் ஜெய் என்று எழுதி இருக்க...
அதை படித்த மிருதுளா “என்ன டி இது பேர் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே முடிஞ்சிருச்சு” என்றாள்.
“அவன் பேர் குட்டியா இருக்கலாம் மிரு.. ஆனா எனக்கு என்னவோ அவனோட இருக்க என் தொடர்புக்கு ஆயூஸுக்கும் இருக்கும்ன்னு நினைக்குறேன்” என்றாள் மீனு
அந்த சம்பவத்திற்கு பின் ஜெய் என்ற பெயரை அவர்கள் இருவருக்கும் தெரிந்த வகையியில் எங்கெல்லாமோ தேடிப் பார்த்தும் அவனை பற்றி எந்த ஒரு விபரமும் கிடைக்க வில்லை.
மீனு தனக்கு ஜெய்யை எப்படி தெரியும் என்று முழுவதுமாக சொல்லி முடித்து அவனை திரும்பிப் பார்க்க… மீனு நீ சொன்னதை எல்லாம் உண்மையா என்றான் நம்பாமல்.
“ஏன் ஜெய் நான் சொன்னதை கேட்டும் நீங்க நம்பலையா?” என்றாள் அவன் மடியில் இருந்து எழுந்து அவனை பார்த்து.
“இல்லை நீ சொல்றதை பார்த்தா உண்மையா இருக்கும் போல தான் தெரியுது. ஆனா எனக்கு என் வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாவே நியாபகம் இல்லையே” என்றான் ஜெய்.
அவனை கனத்த இதயத்தோடு பார்த்த மீனு. “என்ன ஜெய் இப்படி சொல்லிட்டீங்க... இது எவ்வளவு பெரிய விஷயம் ஆனா உங்களுக்கு கொஞ்சமும் இதை பத்தி நியாபகம் இல்லையினு சொல்றிங்க... நான் இதை உங்ககிட்டே இருந்து எதிர்பார்க்கல. உங்ககிட்டே நாம பஸ்ட் மீட் பண்ணினதை சொல்லும்போது உங்க முகத்துல எந்த மாதிரியான உணர்வு இருக்கும். என்னை பற்றி உங்க நியாபகம் எப்படி கொண்டு வரும்னு நினைச்சேன். ஆனா நீங்க மொத்தமா அப்படி ஒரு சம்பவம் நடந்ததாவே நியாபகம் இல்லையின்னு சொல்றிங்க..” என்றவள்.
“அப்போ ஒரு பொண்ணு பத்தின உங்க எண்ணம் அவ்வளவு தானா?? என்ன இருந்தாலும் நீங்க ஆம்பளை தானே உங்களுக்கு இந்த மாதிரியான ஒரு விஷயம் பெருசா தெரியாது. நான் தான் இந்த ரெண்டு வருசத்துல உங்களையே நினைச்சிட்டு வெறும் உங்க பேரை மட்டும் வெச்சிட்டு அதை என் நெஞ்சுல பச்சை குத்தி வெச்சுட்டு உங்களை நினைச்சு உருகிகிட்டு இருந்து இருக்கேன். ஆனா உங்களுக்கு என்னை பற்றிய எண்ணம் துளியும் இல்லை” என்றவள் அழுத்துகொண்டே அவனை பார்க்க...
“மீனு நீ நினைக்குற மாதிரியான ஆள் நான் இல்லை. நான் சொல்றதை நம்பு மீனு.. எனக்கு என் வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாவே தெரியலை என்னை நம்பு” என்று மீனுவிடம் நெருங்கி தன் சேரை இயக்கினான்.
ஆனால் அவன் அருகில் வந்ததும் மீனு ஜெய்யை விட்டு விலகி நின்றவள் “போதும் ஜெய் இதுக்கு மேலயும் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை” என்றவள் அழுது கொண்டே அவள் அறையில் இருந்து நேராக மிருதுளாவின் அறைக்கு ஓடிவிட்டாள்.
ஜெய்க்கு இங்கே என்ன நடக்கிறது என்று துளியியும் விளங்கவில்லை. அவன் மீனு சொன்னதை எல்லாம் யோசித்து பார்த்தான். ஆனால் அவனுக்கு தன் வாழ்வில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே நினைவில் இல்லை.
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 28.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 28.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.