logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
தான் இருந்த அறையில் இருந்து வெளியே சத்தம் கேட்டு வந்தவன் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல போன மீனுவை பார்த்துவன் " ஏய் யார் நீ ? அங்கேயே நில்லு " என்றபடி அவளை நோக்கி வந்தான் .

அவனை கண்டதும் அதிர்ந்த மீனு " ஹே ஹே...அங்கேயே நில்லுங்க.. என் கிட்டே வராதீங்க .." என்று அவனை அங்கேயே நிப்பாட்டினாள் மீனு .

அவளிடம் வர இருந்தவன் அப்படியே நின்றுவிட்டு அவளை பார்த்தான் . அதற்குள் மீனு தன் முகத்தை அந்த அறையில் இருந்தவன் பார்த்துவிடக் கூடாது என்று அவள் முடியையே வைத்து முடிந்த அளவுக்கு தன் முகத்தை மறைத்தவள். முடிகளுக்கு இடையில் தெரிந்து அவன் முகத்தை பார்த்தாள்.


அந்த இடைவெளியி்ளும் அவன் முகத்தை ரசித்தவள் அப்படியே நின்று இருக்க... அவளை பார்த்தவன் மீண்டும் அவளை நெருங்கி வர... அவன் வருவதை பார்த்தவள் சட்டென்று அறைக்கதவை திறந்து கொண்டே வெளியே சென்றாள்.


வெளியே வந்தவள் இன்னமும் மிருதுளா அந்த ஊழியரிடம் சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை பார்த்தவள் வேகமாக அவர்கள் இருவரும் இருந்த அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று விட... அந்த ஊழியர் அதிர்ச்சியாக தன் பின்னால் இருந்து மீனு அறைக்குள் செல்வதை பார்த்து விட்டு “மேடம் உங்க ரூமுக்குள்ள யாரோ போறாங்க …” என்றார் .


“ஆமா யா...நானும் பார்த்தேன்” என்று தமிழில் சொன்னவள் பின் திரும்பி தன் அறைக்கு செல்ல போனாள் . அவன் ஆங்கிலத்தில் “மேடம் அப்போ அவங்க தான் உங்க பிரெண்டா?” என்றான்.

“ஆமாம்” என்று வெறுமனே தலையை ஆட்டிவிட்டு திரும்பி அவள் அறைக்கு செல்ல போக… அப்போது மீனு வந்த அறைக்குள் இருந்து ஒரு அழகான ஆள் கதவை திறந்து கொண்டு வருவதை பார்த்தவள் ஆவென வாயை பிளந்தாள் அவனைப் பார்த்து.


வெளியே வந்தவன் அங்கே மீனுவை தேடினான் . ஆனால் வெளியே வந்து மிருதுளாவை மட்டுமே பார்த்தவன் அவள் தன்னை பார்க்கும் பார்வையை கண்டதும் “என்ன இப்படி பாக்குறா…” என்று தன்னை குனிந்து ஒருமுறை பார்த்தான்.
வெறும் டவலை கட்டிக்கொண்டு அப்டியே வந்திருக்க… இதை பார்த்து தான் இந்த பெண் வாயை பிளக்கிறாள் என்று நினைத்தவன் மிருதுளாவை ஒரு மாதிரி பார்த்துவிட்டு சட்டென தன் ரூமுக்குள் சென்று கதைவடைத்துக் கொண்டான் .

அவனையே ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டு இருந்த மிருதுளா அதே ஆச்சர்யத்தோடு அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள் .

அங்கே மீனு சோபாவில் அமர்ந்து தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து இருக்க... அவளிடம் வந்த மிருதுளா .

" ஏய் மீனு என்ன டி நடக்குது . நீ எப்படி அந்த எதிர் ரூமுக்கு போன… அங்கே ஹண்ட்ஷமா ஒருத்தன் வெளியே வந்தான் அதுவும் வெறும் டவலை மட்டும் கட்டிக்கிட்டு . அவன் 8 பேக் எப்படி இருக்கு தெறியுமா!!! அவன் ஆர்ம்ஸ் எப்படி இருக்கு தெறியுமா " என்று என்று எதிர் அறையில் இருந்தவனை பற்றி சிலாகித்துக்கொண்டு இருந்தாள் .


“ஏய் பூனை...இப்போ நீ கொஞ்சம் பேசாமா இருக்க போறியா? இல்லையா?” என்று அவளை அதட்டினாள் மீனு.


அப்போது தான் மீனுவை நன்றாக கவனித்தாள் மிருதுளா “ஏய் என்ன டி இது டிரஸ்” என்று அவள் கையை பிடித்து நிற்க வைத்தவள் மீனு அணிந்து இருந்த சட்டையை பார்த்துவிட்டு “ மீனு எனக்கு தெரியாம நீ எப்போ டி DATE பண்ண ஆரம்பிச்ச... அவன் சட்டையை நீ போட்டுட்டு வந்து இருக்க… அங்க அங்க சிவப்பா தழும்பு இருக்கு…என்கிட்டே சொல்லவே இல்லை” என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்தாள் மிருதுளா

“ ஏன் டி நீ வேற... நானே எனக்கு யாருன்னே தெரியாதவன் கூட இப்படி ஒரு விஷயம் நடந்துருச்சேன்னு வருத்தப்பட்டுட்டு இருக்கேன் நீ வேற என்னை டென்ஷன் பண்ணாதே” என்றாள் மீனு.


“சரி சரி சொல்லு என்ன நடந்துச்சு அவன் ரூமுக்குள்ள நீ எப்போ போன… அவனோட சட்டையை நீ எதுக்கு போட்டுட்டு வந்த” என்றாள் மிருதுளா .

“அதை ஏன் டி கேக்குற எனக்கு நாம ரெண்ட்னு பெரும் ரூமுக்கு வந்தது மட்டும் தான் ஞாபகம் இருக்கு அதுக்கு அப்பறோம் என்ன நடந்துச்சுன்னு எதுவேயுமே தெரியலை டி.. காலையில் கண்ணு முழிச்சு பாக்குற அபோ அந்த ரூமுல இருந்த ஆளும் நானும் மட்டும் ஒண்ணா ஒரே பெட்ல....” என்று மீனு சொல்ல தயங்க.


“ம்ம்...ம்ம்.. சொல்லு சொல்லு ஒன்னா ஒரே பெட்ல… சொல்லு டி…” என்று மிருதுளா மீனுவை அவசர படுத்த ..

“அவனும் ,நானும் ஒண்ணா ஒரே பெட்டில் டிரஸ் இல்லாம படுத்துட்டு இருந்தோம்” என்று வெட்டப்பட்டுக் கொண்டே கூறிய மீனு தன் முகத்தை மூடிக்கொண்டாள்.

அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்த மிருதுளா “என்ன டி சொல்றே… அப்போ நீயும் அவனும்…” என்று முகத்தை மூடி இருந்த மீனுவின் கையிற் விலக்கிவிட்டு அவள் முன் மண்டி இட்டு மீனுவின் முகத்தை பார்த்தாள் மிருதுலா .


மீனு “ஆமாம்”என்று தலையை ஆட்ட…

“இப்போ என்ன டி பண்ண போற…” என்றாள் மிருதுளா .


“தெரியலை டி…” என்ற மீனு “முதல்ல அவன் கிட்டே பொய் என்னை ஏன் இப்படி செஞ்சான்னு கேட்டுட்டு வரணும் டி வா போகலாம்” என்று எழுந்து அவள் அறைக் கதவை நோக்கி செல்ல போன மீனுவின் கையை பிடித்து இழுத்து மீண்டும் சோபாவில் அமர வைத்த மிருதுளா .

“அவன் கிட்டே இப்படியேவா பொய் பேச போற..” என்று அவள் அணிந்து இருந்த சட்டையை காட்டி கேட்டள் .


தன்னை ஒருமுறை குனிந்து தன் கோலத்தை பார்த்த மீனு . “நான் பொய் சீக்கிரம் பிரெஷ் அப் ஆகிட்டு வந்துடறேன். அப்பறோம் அவனை என்னனு கேட்டுக்கலாம்” என்று பாத்ரூம் நோக்கி விரைந்தாள்.


இங்கே தன் அறையில் எப்படி அந்த பெண் வந்தாள். எப்போது இங்கே வந்தால் என்று யோசித்து எதுவும் ஞாபகம் இல்லாமல் தலையை போட்டு பிய்த்துக் கொண்டான் . பிறகு என்ன நடந்தது என்று அவனால் யூகிக்க முடிந்தது. தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாகிவிடக்கூடாது அதற்கு உண்டான முயற்சியை எடுத்து தன் தவறுக்கு பிராயச்சித்தம் தேட வேண்டும் என்று நினைத்தவன் வேகமாக குளித்து பிரஸ் அப் ஆனவன் தன் அறையை காலி செய்து விட்டு போனில் யாருடனோ பேசி மீனுவை பற்றிய விபரங்களை ஹோட்டலில் கேட்டு விசாரிக்க சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான் ஒரு முக்கியமான மீட்டிங்கிற்கு .

இங்கே அவன் வெளியே சென்றது தெரியாமல் தன் அறையில் அவசர அவசரமாக கிளம்பி வந்த மீனு மிருதுளாவை தன்னோடு அழைத்துக் கொண்டு அவன் சட்டையை எடுத்துக்கொண்டு எதிர் அறைக்கு கிளம்பினாள்
 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 28
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top