- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
மிருதுளா செல்வதை பார்த்த சூர்யாவும் " டேய் சந்தோஷ் அவங்க சொன்னதை கேட்டியா டா.. அவங்க சின்ன பிள்ளைங்கலாமா!! நமக்கும் தான் கல்யாணம் ஆகலை அப்போ நீயும் நானும் கூட சின்ன பிள்ளைங்க அதான் நமக்கு இங்கே என்ன வேலை வா.. நாமும் போய் சாப்பிடலாம் " என்று சந்தோஷை இழுத்துக்கொண்டு டைனிங் டேபிளிற்கு சென்றான் சூர்யா .
குருவும் ,கஜேந்திரனும் அங்கே நிற்க முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள.." என்ன ரெண்டு பெரும் நின்னுட்டு இருக்கீங்க சாப்பிட வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் " என்று ஜனனி சொன்னதும் இருவரும் சென்று சாப்பிட அமர்ந்து கொண்டனர்.
ஜனனி திரு திருவென முழித்துக்கொண்டு இருந்த தன் மகளை பார்த்து " ஏய் என்ன டி நின்னுட்டு இருக்க..உனக்கு காலேஜ் நேரம் ஆகலை " என்றார்.
"ஆ...ஆமா ..ம்மா..டைம் ஆச்சு " என்று மீனு சாப்பிட போக...அவள் கையை பிடித்து நிறுத்திய ஜனனி .
" எங்க டி போற போய் மாப்பிள்ளையை கூட்டிட்டு வா… உனக்கு கல்யாணம் ஆனது கொஞ்சமாச்சும் ஞாபகம் இருக்கா?இல்லையா? இனிமேல் அவர் கூப்பிடாம நீ சாப்பிட வராத சரியா" என்றவர் சாப்பாடு பரிமாற்ற சென்று விட.
" எல்லாம் இந்த மிருதுளாவால தான் வந்துச்சு எதையாவது சொல்லி என்னை இவங்க எல்லார்கிட்டயும் மாட்டி விடுறதே இவ வேலையா போயிருச்சு " என்று புலம்பிக்கொண்டே கோபமாக ஜெய்யை அழைக்க அவள் ரூமிற்கு சென்றாள் .
அவள் ரூமிற்குள் வந்ததும் கட்டிலில் அவனை பார்க்கா ஜெய் அங்கு இல்லை . அவன் வீல் சேர் மட்டும் இருந்தது . எங்கே போனாரு இவரு என்று யோசித்தவள் ஒரு வேலை குளிக்க போய் இருப்பாரோ...என்று சந்தேகமாக பாத்ரூம் அருகில் வந்து கதவில் தலை சாய்த்து உள்ளே ஜெய் இருக்கிறானா என்று கவனித்தாள் .
பாத்ரூமில் இருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டது . " அப்போ குளிச்சிட்டு தான் இருக்காரு , " என்று நினைத்தவள் .
வெளியே இருந்த படி பாத்ரூம் கதவை தட்டி " ஜெய் ..ஜெய்.. " என்று உள்ளிருந்தவனை அழைத்தாள் .
பாத்ரூமிற்குள் தண்ணீர் விழும் சத்தம் அதிகமாக இருந்ததால் குளித்துக்கொண்டு இருந்த ஜெய்க்கு மீனு அழைத்து கேட்கவில்லை. மீண்டும் வெளியே இருந்து கதவை வேகமாக தட்டிய மீனு " ஜெய் நான் பேசுறது கேட்குதா " என்று கத்தினாள்.
முகத்திற்கு சோப்பு போட்டுகொண்டு இருந்தவன் காதில் மீனு அழைக்கும் சத்தம் கேட்டதும் தண்ணீரை பிடித்து முகத்தை அவசரமாக கழுவியவன் அருகில் இருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டே " ம்ம்ம்...உள்ள தான் இருக்கேன் " என்றான் .
" ம்ம்...உள்ள தான் இருக்கேன் " என்று அவனை போலவே பேசி பழிப்பு காட்டிய மீனு.
"அதை கூட சாதாரணமா சொல்றானா பாரு இறுக்கமாவே எப்பவும் இருப்பான் போல.." என்று முணுமுணுத்தவள் .
"அம்மா சாப்பிட உங்களை வர சொன்னாங்க. நீங்க குளிச்சிட்டு எனக்கு கூப்பிடுங்க நான் வந்து உங்களை கூட்டிட்டு போறேன் " என்றாள்.
" சரி " என்று மட்டும் ஒற்றை பதிலை உள்ளிருந்து அளித்தான் ஜெய்.
அவன் பதிலில் கோபம் வந்தது அவளுக்கு இருந்தும் அதை கட்டுப் படுத்திக் கொண்டு "கொஞ்சம் சீக்கிரமா ரெடி ஹிட்டு கூப்பிடுங்க நான் காலேஜ் போகணும் லேட்டா ஆகிட போகுது " என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பி கீழே சென்றாள் .
உள்ளிருந்து அவள் சொன்னதற்கு “சரி” என்று தான் மீண்டும் அவனிடம் இருந்து பதில் வந்தது.
ஆனால் வெளியில் இருந்து பதில் வராமலா போகவே சிறிது நேரம் அமைதியாக இருந்த ஜெய் "கீழ போய்ட்டா போல..." என்று சொல்லிக்கொண்டு மீண்டும் குளிக்க ஆரம்பித்தான்.
இங்கே கீழே வந்த மீனுவை பார்த்து "என்ன மீன்ஸ் நீ மட்டும் தனியா வர.. ஜெய் வரலையா " என்றாள் மிருதுளா.
" உன்னை யாரவது இப்போ கேட்டார்களா" என்று ஜாடையாக அவளை முறைத்தவள்
" அவர் ரெடி ஆகிட்டு கூபிட்றேன்னு சொன்னாரு " என்றவள் நேராக வந்து சாப்பிட அமர போக...அதற்குள் ஜனனி மீனுவை அழைத்து “மாப்பிள்ளை உன்னை கூப்பிட்றேன்னு சொன்னாரில்லை.. நீ சாப்பிட உக்காந்துட்டு அப்பறோம் பாதியில எழுந்து போவியா . கொஞ்ச நேரம் தானே அப்பறோம் அவர் வந்ததும் நீயும் அவரும் சேர்ந்து ஒண்ணா சாப்பிட்டுக்கோங்க " என்றார்.
வேறு வலி இல்லாமல் சாப்பிடாமல் டைனிங் டேபிலேயே அமர்ந்து இருந்தாள் மீனு அவள் முன்பு அனைவரும் சாப்பிடுவதை பார்த்து விட்டு இவளுக்கு பசி வயிற்றை கிள்ளியது " இன்னுமா இவன் ரெடியாகிட்டு இருக்கான் .எனக்கு பசி வேற தாங்க முடியலை" என்று ஜெய் எப்போது அழைப்பான் என்று காத்திருந்தாள் .
அவள் பசியில் அமர்ந்து இருப்பதாய் பார்த்த கஜேந்திரன் "அம்மா ஜனனி மீனு சாப்பிடட்டும் மா… அவளுக்கு காலேஜிற்கு நேரம் ஆகிருச்சு இல்ல… ஜெய் வீட்ல தானே இருக்க போறான் அவனுக்கு சூர்யா இருக்கான் அவன்கூட அழைச்சிட்டு கீழே வந்திடுவான்" என்றார் .
"ஆமா மீனு நீ சாப்பிடு நான் பொய் ஜெய்யை கூப்பிடுகிறேன் " என்றான் சூர்யா.
"அண்ணா நீங்க சும்மா இருங்க இவளுக்கு இதை எல்லாம் ஆரம்பத்துல இருந்து சொல்லி கொடுத்து பழக்கணும் . இல்லையின்னா மாப்பிள்ளைக்காக அதிக செய்யணும் இதை செய்யணும்னு அவ நினைக்காம அவ உண்டு அவ வேலை உண்டுன்னு இருப்பா.." என்று ஜனனி கஜேந்திரனிடம் கூறினார்
இப்படி தன்னை மாமியார் லாவுக்கு பழி வாங்கும் தன் அம்மாவை முறைத்துக்கொண்டு மீனு அமர்ந்து இருக்க..." என்னடி முறைக்குற . போ .. போய் மாப்பிள்ளையை கூட்டிட்டு வா… அவர் கூப்பிட்ற வரைக்கும் நீ வெயிட் பண்ணிட்டு இருப்பியா " என்று மீனுவை பார்த்து கூற…
" ஏய் ஜனனி !!!" என்று கோபமாக டைனிங் டேபிலில் இருந்து மீனு எழுந்திருக்க..
" என்ன டி " என்று ஜனனி கையில் குழம்பு கரண்டி எடுத்துக்கொண்டு அவளை அடிக்க போனார்.
" இங்க பாரு ஜனனி வாய் பேச்சு வாய் பேச்சாவே இருக்கனும் . இப்படி தேவை இல்லாம ஆயுதத்தை எடுத்துட்டு வரக் கூடாது " என்றவள் ஜனனியிடம் இருந்து அடிவாங்காமல் இங்கும் அங்கும் ஓட...
" பின்ன என்னை பேர் சொல்லி கூப்பிட்டா நான் பாத்துட்டு சும்மா இருப்பேனா டி..." அவளை துரத்திக்கொண்டு ஜனனி அவள் பின்னாள் சென்றார்.
"ஆமா பெரிய பெரு..இதை நாங்க சொல்லி கூப்பிடக் கூடாதோ.."என்றவள். “அப்படி தான் உன் பேரை சொல்லி கூப்பிடுவேன் ஜனனி" என்ற மீனு தன் அம்மாவை கோபப்படுத்தினாள் மீனு.
"இரு டி இன்னிக்கு உனக்கு சூடு வைக்கல நான் என் பேரை மதிக்குறேன்" என்று மீனுவை துரத்திக்கொண்டு ஜனனி ஓட அவர் கையில் சிக்காமல் இங்கும் அங்கும் ஓடினாள்.
அப்போது வேகமாக தன்னை துரத்தி வரும் அவள் அம்மாவை பார்த்து ஓடிக்கொண்டு திரும்பி பார்த்தவள் தனக்கு எதிரே வந்தவரை கவனிக்காம்ல அவர் மீது மோதிவிட்டால்.
மோதிய வேகத்தில் கீழே தரையில் மீனு பொத்தென விழா ..." என்ன மீனு இப்படி சின்ன பொண்ணு மாதிரி ஓடிக்கிட்டு இருக்க..." என்று அவள் முன் தன் கையை நீட்டிக்கொண்டிருந்த நபரை பார்த்து மீனுவும் அவளை துரத்தி வந்த ஜனனியும் அதிர்ந்தனர்.
அவர்கள் இருவரும் மட்டும் இல்லை டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்த மற்றவர்களும் அவர்களை போலவே அதிர்ந்து தான் பொய் இருந்தனர் .
தரையில் விழுந்திருந்த மீனு தனக்கு எதிரே நின்று இருந்தவரை பார்த்து " நீ… நீங்க..." என்று தனக்கு எதிரே இருந்தவரை பார்த்து கேட்டாள்.
" என்ன மீனு அபப்டி பாக்குற .. இதுக்கு முன்ன என்னை நீ பார்ததது இல்லையா என்ன...நல்லா பாரு நான் தான் நானே தான் " என்றார் அந்த நபர்.
குருவும் ,கஜேந்திரனும் அங்கே நிற்க முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள.." என்ன ரெண்டு பெரும் நின்னுட்டு இருக்கீங்க சாப்பிட வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் " என்று ஜனனி சொன்னதும் இருவரும் சென்று சாப்பிட அமர்ந்து கொண்டனர்.
ஜனனி திரு திருவென முழித்துக்கொண்டு இருந்த தன் மகளை பார்த்து " ஏய் என்ன டி நின்னுட்டு இருக்க..உனக்கு காலேஜ் நேரம் ஆகலை " என்றார்.
"ஆ...ஆமா ..ம்மா..டைம் ஆச்சு " என்று மீனு சாப்பிட போக...அவள் கையை பிடித்து நிறுத்திய ஜனனி .
" எங்க டி போற போய் மாப்பிள்ளையை கூட்டிட்டு வா… உனக்கு கல்யாணம் ஆனது கொஞ்சமாச்சும் ஞாபகம் இருக்கா?இல்லையா? இனிமேல் அவர் கூப்பிடாம நீ சாப்பிட வராத சரியா" என்றவர் சாப்பாடு பரிமாற்ற சென்று விட.
" எல்லாம் இந்த மிருதுளாவால தான் வந்துச்சு எதையாவது சொல்லி என்னை இவங்க எல்லார்கிட்டயும் மாட்டி விடுறதே இவ வேலையா போயிருச்சு " என்று புலம்பிக்கொண்டே கோபமாக ஜெய்யை அழைக்க அவள் ரூமிற்கு சென்றாள் .
அவள் ரூமிற்குள் வந்ததும் கட்டிலில் அவனை பார்க்கா ஜெய் அங்கு இல்லை . அவன் வீல் சேர் மட்டும் இருந்தது . எங்கே போனாரு இவரு என்று யோசித்தவள் ஒரு வேலை குளிக்க போய் இருப்பாரோ...என்று சந்தேகமாக பாத்ரூம் அருகில் வந்து கதவில் தலை சாய்த்து உள்ளே ஜெய் இருக்கிறானா என்று கவனித்தாள் .
பாத்ரூமில் இருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டது . " அப்போ குளிச்சிட்டு தான் இருக்காரு , " என்று நினைத்தவள் .
வெளியே இருந்த படி பாத்ரூம் கதவை தட்டி " ஜெய் ..ஜெய்.. " என்று உள்ளிருந்தவனை அழைத்தாள் .
பாத்ரூமிற்குள் தண்ணீர் விழும் சத்தம் அதிகமாக இருந்ததால் குளித்துக்கொண்டு இருந்த ஜெய்க்கு மீனு அழைத்து கேட்கவில்லை. மீண்டும் வெளியே இருந்து கதவை வேகமாக தட்டிய மீனு " ஜெய் நான் பேசுறது கேட்குதா " என்று கத்தினாள்.
முகத்திற்கு சோப்பு போட்டுகொண்டு இருந்தவன் காதில் மீனு அழைக்கும் சத்தம் கேட்டதும் தண்ணீரை பிடித்து முகத்தை அவசரமாக கழுவியவன் அருகில் இருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டே " ம்ம்ம்...உள்ள தான் இருக்கேன் " என்றான் .
" ம்ம்...உள்ள தான் இருக்கேன் " என்று அவனை போலவே பேசி பழிப்பு காட்டிய மீனு.
"அதை கூட சாதாரணமா சொல்றானா பாரு இறுக்கமாவே எப்பவும் இருப்பான் போல.." என்று முணுமுணுத்தவள் .
"அம்மா சாப்பிட உங்களை வர சொன்னாங்க. நீங்க குளிச்சிட்டு எனக்கு கூப்பிடுங்க நான் வந்து உங்களை கூட்டிட்டு போறேன் " என்றாள்.
" சரி " என்று மட்டும் ஒற்றை பதிலை உள்ளிருந்து அளித்தான் ஜெய்.
அவன் பதிலில் கோபம் வந்தது அவளுக்கு இருந்தும் அதை கட்டுப் படுத்திக் கொண்டு "கொஞ்சம் சீக்கிரமா ரெடி ஹிட்டு கூப்பிடுங்க நான் காலேஜ் போகணும் லேட்டா ஆகிட போகுது " என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பி கீழே சென்றாள் .
உள்ளிருந்து அவள் சொன்னதற்கு “சரி” என்று தான் மீண்டும் அவனிடம் இருந்து பதில் வந்தது.
ஆனால் வெளியில் இருந்து பதில் வராமலா போகவே சிறிது நேரம் அமைதியாக இருந்த ஜெய் "கீழ போய்ட்டா போல..." என்று சொல்லிக்கொண்டு மீண்டும் குளிக்க ஆரம்பித்தான்.
இங்கே கீழே வந்த மீனுவை பார்த்து "என்ன மீன்ஸ் நீ மட்டும் தனியா வர.. ஜெய் வரலையா " என்றாள் மிருதுளா.
" உன்னை யாரவது இப்போ கேட்டார்களா" என்று ஜாடையாக அவளை முறைத்தவள்
" அவர் ரெடி ஆகிட்டு கூபிட்றேன்னு சொன்னாரு " என்றவள் நேராக வந்து சாப்பிட அமர போக...அதற்குள் ஜனனி மீனுவை அழைத்து “மாப்பிள்ளை உன்னை கூப்பிட்றேன்னு சொன்னாரில்லை.. நீ சாப்பிட உக்காந்துட்டு அப்பறோம் பாதியில எழுந்து போவியா . கொஞ்ச நேரம் தானே அப்பறோம் அவர் வந்ததும் நீயும் அவரும் சேர்ந்து ஒண்ணா சாப்பிட்டுக்கோங்க " என்றார்.
வேறு வலி இல்லாமல் சாப்பிடாமல் டைனிங் டேபிலேயே அமர்ந்து இருந்தாள் மீனு அவள் முன்பு அனைவரும் சாப்பிடுவதை பார்த்து விட்டு இவளுக்கு பசி வயிற்றை கிள்ளியது " இன்னுமா இவன் ரெடியாகிட்டு இருக்கான் .எனக்கு பசி வேற தாங்க முடியலை" என்று ஜெய் எப்போது அழைப்பான் என்று காத்திருந்தாள் .
அவள் பசியில் அமர்ந்து இருப்பதாய் பார்த்த கஜேந்திரன் "அம்மா ஜனனி மீனு சாப்பிடட்டும் மா… அவளுக்கு காலேஜிற்கு நேரம் ஆகிருச்சு இல்ல… ஜெய் வீட்ல தானே இருக்க போறான் அவனுக்கு சூர்யா இருக்கான் அவன்கூட அழைச்சிட்டு கீழே வந்திடுவான்" என்றார் .
"ஆமா மீனு நீ சாப்பிடு நான் பொய் ஜெய்யை கூப்பிடுகிறேன் " என்றான் சூர்யா.
"அண்ணா நீங்க சும்மா இருங்க இவளுக்கு இதை எல்லாம் ஆரம்பத்துல இருந்து சொல்லி கொடுத்து பழக்கணும் . இல்லையின்னா மாப்பிள்ளைக்காக அதிக செய்யணும் இதை செய்யணும்னு அவ நினைக்காம அவ உண்டு அவ வேலை உண்டுன்னு இருப்பா.." என்று ஜனனி கஜேந்திரனிடம் கூறினார்
இப்படி தன்னை மாமியார் லாவுக்கு பழி வாங்கும் தன் அம்மாவை முறைத்துக்கொண்டு மீனு அமர்ந்து இருக்க..." என்னடி முறைக்குற . போ .. போய் மாப்பிள்ளையை கூட்டிட்டு வா… அவர் கூப்பிட்ற வரைக்கும் நீ வெயிட் பண்ணிட்டு இருப்பியா " என்று மீனுவை பார்த்து கூற…
" ஏய் ஜனனி !!!" என்று கோபமாக டைனிங் டேபிலில் இருந்து மீனு எழுந்திருக்க..
" என்ன டி " என்று ஜனனி கையில் குழம்பு கரண்டி எடுத்துக்கொண்டு அவளை அடிக்க போனார்.
" இங்க பாரு ஜனனி வாய் பேச்சு வாய் பேச்சாவே இருக்கனும் . இப்படி தேவை இல்லாம ஆயுதத்தை எடுத்துட்டு வரக் கூடாது " என்றவள் ஜனனியிடம் இருந்து அடிவாங்காமல் இங்கும் அங்கும் ஓட...
" பின்ன என்னை பேர் சொல்லி கூப்பிட்டா நான் பாத்துட்டு சும்மா இருப்பேனா டி..." அவளை துரத்திக்கொண்டு ஜனனி அவள் பின்னாள் சென்றார்.
"ஆமா பெரிய பெரு..இதை நாங்க சொல்லி கூப்பிடக் கூடாதோ.."என்றவள். “அப்படி தான் உன் பேரை சொல்லி கூப்பிடுவேன் ஜனனி" என்ற மீனு தன் அம்மாவை கோபப்படுத்தினாள் மீனு.
"இரு டி இன்னிக்கு உனக்கு சூடு வைக்கல நான் என் பேரை மதிக்குறேன்" என்று மீனுவை துரத்திக்கொண்டு ஜனனி ஓட அவர் கையில் சிக்காமல் இங்கும் அங்கும் ஓடினாள்.
அப்போது வேகமாக தன்னை துரத்தி வரும் அவள் அம்மாவை பார்த்து ஓடிக்கொண்டு திரும்பி பார்த்தவள் தனக்கு எதிரே வந்தவரை கவனிக்காம்ல அவர் மீது மோதிவிட்டால்.
மோதிய வேகத்தில் கீழே தரையில் மீனு பொத்தென விழா ..." என்ன மீனு இப்படி சின்ன பொண்ணு மாதிரி ஓடிக்கிட்டு இருக்க..." என்று அவள் முன் தன் கையை நீட்டிக்கொண்டிருந்த நபரை பார்த்து மீனுவும் அவளை துரத்தி வந்த ஜனனியும் அதிர்ந்தனர்.
அவர்கள் இருவரும் மட்டும் இல்லை டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்த மற்றவர்களும் அவர்களை போலவே அதிர்ந்து தான் பொய் இருந்தனர் .
தரையில் விழுந்திருந்த மீனு தனக்கு எதிரே நின்று இருந்தவரை பார்த்து " நீ… நீங்க..." என்று தனக்கு எதிரே இருந்தவரை பார்த்து கேட்டாள்.
" என்ன மீனு அபப்டி பாக்குற .. இதுக்கு முன்ன என்னை நீ பார்ததது இல்லையா என்ன...நல்லா பாரு நான் தான் நானே தான் " என்றார் அந்த நபர்.
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 29.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 29.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.